கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வானை தொட்டு விடத் துடிக்கும் தென்னை மரங்கள் தென்னையுடன் போட்டியாக பனைமரங்கள் குச்சொழுங்கையை எட்டிப் பார்க்கும் வேப்ப மரங்கள் குச்சொழுங்கையின் இரு மருங்கும் கோலம் இடும் அறுகம் புற்கள் மெல்லத் தடவி வரும் இளம் தென்றலுக்கு நாணி அசைந்தாடும் கோரைப் புற்கள் மொத்ததில் பச்சை சேலை உடுத்த அழகு தேவதை எமது ஈழம் இன்று மெல்ல மெல்ல வனப்பு.. இழந்து சுடுகாடு ஆகிறது! துளசி
-
- 12 replies
- 2.1k views
-
-
”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…
-
- 2 replies
- 2.3k views
-
-
நினைவு இருக்கிறதா ? உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால் பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது , பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது , உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில் ,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு ,மறுநாள் நீ தேடிய போது ,இரு நாள் தேட விட்டு ,மறு நாள் நான் தந்தது . ன் லேடி பைக் காற்று போனதும் ,அதை நான் உருட்ட கூடாதென்ற…
-
- 6 replies
- 1.6k views
-
-
நினைவில் உருவாகி கனவில் கவிபாடி காதல் வழர்த்தேனடி... கனவை நினைவாக்க நினைவை நிஜமாக்க நீயே- வருவா யாடி....? உயிரில் உனதாகி உறவில் உனை வேண்டி மனதைக் கொடுத்தேனடி... உயிரில் உயிராகி உணர்வில் உனதாகி உலகை இழந்தேனடி... உலகில் நாம் வாழ உரிமை நீ யாக உனை நீ தருவாயா...டி........??
-
- 12 replies
- 2.2k views
-
-
நினைவுகளின் எச்சங்கள்...... கவிதை..... வானத்தை பார்த்தவண்ணம் மறைவுக்காய் இடம்தேடி கால்வலிக்க ஓடுகிறேன்..... என் தலைமேலாய் விமானங்கள் பறந்து குண்டுமழை பொழிகிறது..... உயிர்காக்கும் பந்தயத்தில் ஒலிம்பிக்போட்டி வைத்தால் தங்கப்பதக்கம் வெல்லும்; முதல் தமிழீழத் தமிழன் நான்; ஆனாலும் ஈழத்தின் கொடியின்னும் ஒலிம்பிக்கில் பறக்கவில்லை இளவயதுக் காரணத்தால்; அங்கே அனுமதியும் எனக்கில்லை..... கல்லுத் தெருக்களிலே நான் ஓடும் வேகத்தால் காலில் குருதிவந்து வெள்ளைமண் கூட செம்மண்ணாய் மாறிவிட.... நெருஞ்சி முள்ளெல்லாம்; கால் நிகங்களிலே வேல் பாய்ச்சி விட முடிவில்லாத் தூரத்துக்கு முடிந்தவரை ஓட்டம்.... எ…
-
- 2 replies
- 826 views
-
-
நந்திக் கடலும், கிளாலி நீரேரியும், வற்றிப் போகாமல், வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர், வடிந்தோடி நிறைத்திருக்க, வடக்கிலும், கிழக்கிலும். வசந்தம் தேடியவர்களின், வாடிப் போன முகங்களில், கோடுகள் மட்டும் விழுகின்றன! அரேபியாவின் பாலைவனங்களை, அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக'; அரைக் காசுக்கும் பயனில்லாத, அபிவிருத்தித் திட்டங்கள் ஆயிரமாய் அரங்கேறுகின்றன! அந்தக் காலத்து வாழ்வில், ஆடம்பரங்கள் இல்லை! அரை வயிற்றுக் கஞ்சியும், ஆனையிறவின் அசைவில்! ஆனாலும் வாழ்வில், அர்த்தம் இருந்தது! வளவைச் சுற்றி வர, வேலிகள் இருந்தன! விடி வெள்ளி கூட. அருகில் நெருங்கியது! யாருக்குத் தெரியும்? விட்டில் பூச்சிகளுக்கு, விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று! …
-
- 21 replies
- 2.4k views
-
-
நினைவுகளை மட்டும் விட்டுச் சென்ற நினைவழியாப் போராளி பிரகாஸ் ! 2ம் ஆண்டு நினைவுநாள்10.07.02013 எழிலெனும் எழிமையான விடுதலை புலியே எங்கள் எண்ணங்களில் நிலைபெற்ற இனியவனே திருமலை மண்ணிலிருந்து புறப்பட்ட எரிமலையே தியாகப் பயணத்தின் வழியெல்லாம் தோழொடு தோழாய் வந்த அன்புத் தோழனே ! விடுதலையின் வேர் நாட்டி உலகின் திசையெங்கும் விழுதெறிந்து சென்றவனே நீயாற்றிய பணிகள் கண்டு நிமிர்ந்தோமே அன்று நாங்கள். அடிமை விலங்குடைய அன்னை மண் விடுதலையடைய உனை வருத்தி நீ சாதித்தவைகள் ஏராளம். சாவின் விளிம்பில் நின்றாலும் சாதுரியமாய் வென்று வரும் சாதனையாளன் நீ. உன் சாவைக் கூட அறிவிக்காமல் சத்தமில்லாமல் போனாயே ! பறந்து திரிந்த புலியுன்னைப் புற்றுநோய் தின்று நீ பாடையிலே போய் முடியு…
-
- 2 replies
- 681 views
-
-
நீண்ட நெடு மரங்களிநூடு நிதானமாய் நடக்கிறேன் நான் மழைத்தூறல் முகம் நனைக்க மகிழ்வாக மழையில் நனைந்த நாள் மனதில் வருகிறது. மனதின் ஓரங்களில் என்றும் ஒட்டிக்கொண்டே இருக்கும் காய்ந்துபோன சிலதும் பழுப்பாகிக் கொண்டிருக்கும் சில நினைவுகளுடனும் கவலையும் மகிழ்வுமாய் மனம் பயணிக்கிறது காததூரம் வந்துவிட்டோம் மீண்டும் வர முடியாத அந்த நாட்களின் நினைவுகளுடன் மட்டுமாய் என்பது மனம் கனக்க மாற்ற முடியாததான நாட்களின் வலுவிழந்த இறந்த காலத்தின் வரிகள் மட்டுமே நினைவில் எல்லாமும் எப்போதும் என் நினைவில் இல்லை சிறுபராயத்து சிதிலமடைந்த நினைவுகளில் சில மட்டும் செருக்கடையா மனதின் சிலும்பல்களாய் வந்துபோக மீட்டல் செய்ய முடியாத மறந்து போனவைகளுக்காக வருந்த மட்டுமே முடிகிறது
-
- 6 replies
- 719 views
-
-
-
-
நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …
-
- 14 replies
- 2.3k views
-
-
நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்
-
- 3 replies
- 967 views
-
-
நினைவுகள் சுமந்த வாழ்க்கை -------------------------- தென்னங் கீத்தின் ராகம் கேட்டு பன்னைப் பாயில் படுத்துக் கிடந்து முத்தத்து மணலில் கைகள் அளைந்து முழுவதும் முழுவதும் மூழ்கிக் கிடந்தோம் வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம் வண்டில் வகிரும் பாதை பார்த்து மாடுகள் இசைக்கும் சலங்கை கேட்டு ஓரமாய் ஒதுங்கும் ஒத்தைக் காகம் ஒவ்வொரு பொழுதும் பார்த்துக் கிடந்தோம் மாமரக் குயிலின் மதுரம் கேட்டு மணக்கும் மண்ணின் வாசம் நுகர்ந்து மனிதர் முகங்கள் பார்த்துச் சிரித்து மனதில் நிறைவை சுமந்து இருந்தோம் குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள் கோயில் கட்டித் தேர…
-
- 11 replies
- 5.3k views
-
-
பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூறுவதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் உரிமை உனக்கில்லை. All human beings are born free and equal in dignity and rights
-
- 2 replies
- 966 views
-
-
தடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்னை நிசப்தமாக்கிக்கிடக்கிறது. மு…
-
- 0 replies
- 824 views
-
-
கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…
-
- 1 reply
- 985 views
-
-
1 நினைவை விட்டழியா நெருப்பு நாட்கள் இனவெறித்தீ பரவி எமை அழித்த-அந்த நெருப்பு நாட்கள்-எம் இதயம் சுமக்கும் எரிதணல்கள். நீறாகிய எம் உறவுகள் நினைவுகள் நாளும் நாளும் கனன்று-இன்று பெருநெருப்பாகி வியாபித்து எரிகின்றது. இரத்தப்பெருவௌ;ளத்துள் திக்கித்திணறி தத்தளித்து எங்கள் தமிழினம் தவித்த-அந்த கொடியநாட்கள்-எங்கள் நினைவைவிட்டழியா நெருப்பு நாட்கள் தமிழினத்து வேரை தகர;த்தெறிவோமென்று தறிகெட்ட மிருகங்கள் எம்மினத்து குருத்துக்களை குதறிக்கிழித்து குதுhகலித்த-அந்தநாட்கள் எங்கள் நினைவைவிட்டகலா கறுப்புநாட்கள் தமிழினத்தை தலைகுனியவைக்க தமிழ்ப்பெண்களை வன்கொடுமைக்குள்ளாக்கி குதறிக்குற்றுயிராக்கி கொடுஞ்செயல்புரிந்த அந்த கோரநாட்கள் எங்கள் வாழ்வின் இருண்டநாட்கள் பச்சிளம் குருத்துக்கள் …
-
- 10 replies
- 1.1k views
-
-
நிமலரூபன் சிறைச்சாலையில் கொலை... இது பலருக்கு செய்தி.... சிலருக்கு ஆறாத்துயர்... நிமலா.... நாம் சொல்கிறோம்... உனக்கு இது விடுதலை! உண்மையிலேயே நீ விடுதலை அடைந்துவிட்டாய்..... நாம் இன்னும் விடுதலைக்காக காத்திருக்கிறோம்.... உடலிலும் உள்ளத்திலும் வலிகளை சுமந்தபடி..... விடுதலைக்காய் காத்திருக்கிறோம்...... உள்ளேயும்........... வெளியேயும்...... காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாம் கதைகளும், கவிதைகளும் ஆகிவிட்டோம். நிஜம்களாய் இருந்த நாம்... இப்போது நிழல்களாய் மாறிவிட்டோம். விடுதலைக்காய் காத்திருக்கிறோம்.... விடுதலை கிடைக்கும்போது நிழல்களும் அழிந்துவிடும்.
-
- 1 reply
- 759 views
-
-
-
-
- 13 replies
- 5.8k views
-
-
பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
ஆலாபனையொன்றின் சிதைவுகளிலிருந்து எழுகின்றது சீரான முனகல் ஒலியொன்று இன்றைய பொழுதுகளில், கரிய இருளூடு அந்தரித்தலையும் மெல்லிய வெண்மையொன்றை போல, நீண்ட அமைதிகளை ஊடறுத்து ஒலித்தோயும் தெருநாயொன்றின் ஊளையைப்போல, வைகறையொன்றை நோக்கி தவமிருக்கும் ஒரு பறவையின் பசியைப்போல, நிகழ்த்திப்போகிறது உணர்த்தமுடியாத எதோ ஒன்றை, மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில் எழும் அச்சங்களை தொலைக்கும் அபயகரமொன்றின் ஓங்கார ஒலியை தடுக்கமுடியாத ஊனங்களை கடக்கும் யாதார்த்த கணங்களில் தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை, எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள். இருந்தபோதும்.................... ஆலாபனைகளூடான நீடிக்கும் அந்த ஒலிமட்டும் ஒலித்துக்கொண்டே …
-
- 7 replies
- 663 views
-
-
-
"நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!
-
- 7 replies
- 1.6k views
-
-
அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …
-
- 7 replies
- 771 views
-