Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பனிக்குளிரில் இதம் சேர்க்க ஓர் இழுத்தணைப்பு..! மெல்லத் தொட்டு மேனி தடவி இதழோடு இதழ் வைத்து வெப்பமூட்டி அவள் மூச்சில்.. என் சுகம்..! சுவாசம் எங்கும் அவள் வாசனை தரிக்க உடலோடு ஐக்கியமாகி சொர்க்கத்தின் வாசல் திறந்தாள் எனக்காய் மட்டும்..! நான் தொட்டுத் சுகித்து இன்புற்று பின்.. தூக்கி எறிந்தேன் அடுத்தவன் உறவானாலும் எனக்கென்ன என்ற நினைவில்..! பார்த்திருக்க வீதியால் சென்றவன் எடுத்தணைத்தான் அவளும் ஒட்டி உரசி அவனோடும்.. சீ சீ.. என்ன அசிங்கம் இதுவும் ஒரு வாழ்வா..??! விபச்சாரி.. பட்டம் வழங்கி நான் புனிதனானேன்..! கண்டவன் போனவன் சிரித்தவன் எடுத்தவன் அடுத்தவன் எல்லாம் சுகித்த பின் தூக்கி எ…

  2. மரண வீடு எல்லா செத்த வீடுகளிலும் என் மனம் என் சாவுக்காக அழுகின்றது, தான் செத்த பின் தனக்காக அழ முடியாத் துயரம் அதுக்கு, பாவம். வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி வேவு பார்க்கின்றது கள்ள மனசு ஒவ்வொரு சாவு வீடும் தனக்கான ஒரு ஒத்திகை பார்க்கும் இடம் என்று சொல்லுது மனம் எல்லாச் சாவுகளின் செய்திகளின் போதும் எல்லா மரணம் பற்றிய தகவல்களின் போதும் விக்கித்து தன் சாவை நினைத்து ஒரு கணம் தடுமாறுகின்றது எல்லா வீதி விபத்துகளும் என்னை அச்சுறுத்துவன போன்றுதான் எல்லாச் சாவுகளும் என்னை அச்சுறுத்துகின்றன செத்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில் பல எனக்காக அழுவன என கண்க…

  3. யூலை 83 உன்னை மறப்பேனோ ?? காலம் என்ற காலச்சுவட்டில் என் நினைவுத்தடங்கள் பல ஆழப்புதையுண்டு அழிந்தாலும் , இந்தமாதமும் இந்த நாளும் என்மனதின் ஓரத்தில் ஆழமாய்க்கீறி ஆறாவடுவாய் போனது….. மாம்பழத்தீவை இனவாத வண்டுகள் அரித்து , அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் , உக்கிர இரத்தமழை பொழிந்ததும் இந்த மாதமே………. சிங்கத்தின் வம்சங்கள் தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய் வேட்டையாடி கொக்கரித்ததும் இந்த மாதேமே !!!!!!!! அட பனங்கொட்டைத்தமிழா நீ எங்கள் அடிமையடா என்று சொன்னதும் இந்த மாதமே !!!! அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் ) ஊரிலே பொங்காது , உயிரை மட்டு காப்பாற்ற உலகெங்கும் பொங்கச் சென்றதும் , புலிபிடிக்குது சிங்கம்…

  4. நந்திக் கடலும், கிளாலி நீரேரியும், வற்றிப் போகாமல், வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர், வடிந்தோடி நிறைத்திருக்க, வடக்கிலும், கிழக்கிலும். வசந்தம் தேடியவர்களின், வாடிப் போன முகங்களில், கோடுகள் மட்டும் விழுகின்றன! அரேபியாவின் பாலைவனங்களை, அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக'; அரைக் காசுக்கும் பயனில்லாத, அபிவிருத்தித் திட்டங்கள் ஆயிரமாய் அரங்கேறுகின்றன! அந்தக் காலத்து வாழ்வில், ஆடம்பரங்கள் இல்லை! அரை வயிற்றுக் கஞ்சியும், ஆனையிறவின் அசைவில்! ஆனாலும் வாழ்வில், அர்த்தம் இருந்தது! வளவைச் சுற்றி வர, வேலிகள் இருந்தன! விடி வெள்ளி கூட. அருகில் நெருங்கியது! யாருக்குத் தெரியும்? விட்டில் பூச்சிகளுக்கு, விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று! …

  5. உறவுகளே... ஒரு கவிதைக்கு அதைப் படைத்தவனால்தான் பூரணமான உயிர்ப்பினையும் உணர்வினையும் பூரணமாகக் கொடுக்க முடியும் என எண்ணுகின்றேன். அத்தகைய என் முயற்சியில்.... பரீட்சார்த்தமாக இன்று முயற்சிசெய்ததன் விளைவே இந்த ஒளிப்படத் தொகுப்புடனான கவிதை. இதனை என் சொந்தக் குரலில் படைத்திருக்கின்றேன். தயவுசெய்து சகித்துக் கொள்ளுங்கள் !!!

  6. கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)

  7. பூட்டி வைத்த பைங்கிளிக்கும் பறந்து பார்க்க ஆசை வரும் பருவம் கண்ட பாவைக்கும் வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..! ஆசைகள் கோடி இதய அறைகள் எங்கும் பறந்தடிக்க.. சமுதாயக் கேடிகள் பூட்டிவிடுவர் அவளை கோட்பாட்டுக் கோட்டைக்குள்..! நாளும் அவள் அடக்கி வைத்த ஆசைகள் வேட்கைகளாகி வெறுமையில் கழிய ஆசைகள் அலுத்து மனதும் பாளடைந்து ஆகிறாள் பைத்தியம்..! இறுதியில் அருவமும் உருவரும் அற்ற பேய்களாய் அவள் ஆசைகள் ஆடுகின்றன. கூடி இருக்கும் மனிதரோ வேப்பிலையால் போக்குகின்றனராம் பேய்களை..!! யார் தான் புரிந்திடுவர் சமுதாயக் கோட்டைக்குள் சிறகடிக்க நினைக்கும் பேதையவள்.. உள்ளுணர்வை..??!

  8. என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என…

  9. காதல் கடவுள் போல அன்பு கடல் போல நெஞ்சில்.. கருணை அள்ள அள்ள இருந்தும் என்ன பயன்.. கடனட்டையில் டொலரும் களுசான் பையில் பவுன்ஸும் பாண்டு பொக்கட்டில் ரூபாயும் மாடிமனையொடு நல்ல காரும் இல்லையேல்... இல்லானை இல்லாளும் வேண்டாள் இதுதான் மானுட உலகம் இன்று..! நோயென்று பசியென்று புசித்தலுக்கு உணவின்றி ஒரு பாதி உலகில்... மானுடர் பதை பதைக்கையில் மறுபாதி உலகில்.. பகட்டுக்கு செய்யும் செலவில் பாதி என்ன.. பருப்பளவு போதும் உண்டி சுருங்கிய வயிறுகள் கொஞ்சம் நிரம்ப...! இருந்தும் இல்லை என்று சொல்லும் உலகில்.. இல்லானை இல்லாளும் வேண்டாள்..! இதுதான் மானுட உலகம் இன்று. கத்தர் என்றும் அல்லா என்றும் சிவன் என்றும் விஷ்னு என்றும் சிலைக்கும் சிலுவைக்கும் பிறைக…

  10. போர்த்திட்டாண்டா.. தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..! காலம் காலமாய் வரலாறாய் எழுதி வைத்து.. தமிழினத்தை.. அழித்து துன்புறுத்தியவனுக்கே சொந்த இனத்தை.. ஊரை விட்டே துரத்தி அடித்தவனுக்கே.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா.. பாரடா பார்.. உலக மைந்தா. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! மானம் கெட்டதுகள் வாழ்ந்தென்ன வீழ்ந்தே தொலையட்டும் என்றே அன்னை சோனியாவின் எடுபிடிகளாய் வடக்கிருந்து வந்து.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா சிங்களத் தானைத் தளபதிக்கு பொன்னாடை போர்த்திட்டாண்டா..! வாழ்க தமிழ் வீரம் எழுக தமிழக புதிய வரலாறு.. காட்டிக் கொடுப்பதில் காக்கவன்னியன…

  11. காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? அன்புக்கு ஏங்கும் இதயங்களாக நாம் உறங்கிட முற்றமில்லை பசித்திடின் புசிக்கவில்லை மானம்காகாக்க உடைகூட இல்லை பசி எமக்கு நண்பன் தரை எமக்கு மெத்தை மழை எமக்கு குளியல் எம் இருள் களைந்து ஒளியேற்ற உதவிக…

  12. போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…

    • 20 replies
    • 5.5k views
  13. இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது.... சபிக்கப்பட்ட சந்ததி... தன்னைக் கடந்து போன தலைமுறைகளின் இளமைகள் தொலைந்து போன கதைகளை சுமந்தபடி தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்... என் பாட்டி தன் பருவ காலங்களை என் பாட்டன் தன் இளமைகளை என் தந்தை தன் பால்யகாலங்களை தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்.. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அது சிறுவயதுகளில் …

  14. பாரத மாதா வின் கவட்டுக்குள் ஒரு சாக்கடை அங்கோர் அழுக்கு தின்னிக் கெழுத்தி.. அதன் பெயர் ஜனநாயகம்..! கெழுத்தியின் உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி அதன் பெயர் சுப்பிரமணியம் சுவாமி. அந்த ஆசாமிக்கு ஒரு கட்சி அது தேர்தலில் நின்றதில்லை ஆனால் வெற்றி முழக்கத்திற்கு குறைவில்லை..! மக்களோ அந்த ஐயனின் குசும்பில் தினமும் சொல்லாமல் செல்கின்றார் கீழ்ப்பாக்கம்..! சுவாமிக்கு அடிக்கடி நெஞ்சில் ஓர் வலி உள்ளூரில் ஓய்வின்றிய புறணிக்கு அப்படி வருவது விசேடம் அல்ல..! இருந்தாலும் ஓய்வுக்கு ஊளையிட.. அப்பப்ப எட்டிப் பார்ப்பது அண்டை அயலில் ஈழத்தை..! கூவிற கூச்சலுக்கு றோ போடும் பிச்சையில் மருத்துவம்..! புலி என்றால் ஐயாவுக்கு…

  15. இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்.... என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன். மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்... http://k…

  16. வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்.. இனியேனும் தணியாதோ யுத்தந்தான்... இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்.. மழலை சிரிக்க... மான்கள் குதிக்க... மண்ணெல்லாம் மலரோடு ஜொலிக்க...முற்றங்களெல்லாம்.. மங்கையர்.. கரங்கள்.. வளையல் குலுங்க.. மாக்கோலம்..போட்டிருக்க... இமயங்கள் காண.. இளைஞர்கள் யாவரும்.. ஞானஒளி ஏற்றிவைக்க.. ஏழ்மையில்லை..இனி ஒரு பயமுமில்லை.. நள்ளிரவில்.. மின்விளக்கு சிரிக்க... வரும்... தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க.. மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...

  17. பேனாவோடு நான்... என்னவளே... என்ன யோசிக்கிறாய்.. உனக்காய் நான் எழுதுவதை இன்னும் என் பேனா நிறுத்தவில்லையென்றா..? ஆமாம்.. அதைத்தான் நானும் யோசிக்கிறேன் உனக்கு தெரியுமோ தெரியாது ஏன் என் கவிதைகளில் எழுத்து பிழைகள் அதிகமென்று ஏன் தெரியுமா... என் கவிதைகளை நான் வாசிப்பதில்லை வாசித்தால் ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன் என்பதை படித்துக் கவலைப்படுவேன் என்பதால்தான். பேனா எடுத்தவர் யாரும் பேனாவால் இறந்ததில்லை நான் மட்டும்தான் உனக்காய் எழுதி எழுதி இறந்து கொண்டிருக்கிறேன் இந்த உலகம் கவலைப்படுகிறது உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்று உண்மைதான் அதற்காக நான் அதிகம் வருத்தப்படுவதுண்டு ஆனால் அவர்களுக்கு எப்ப…

    • 20 replies
    • 3.1k views
  18. தினமும் என் இராப்பொழுதுகள் விட்டுச்செல்லும் கனவுகளில், ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் அடிக்கடி கனவில் வரும்! நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்! சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும் சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும் என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின் இதமான தேகச்சூடும், என் தோளில் பரவிநின்ற அழகான அவள் கூந்தலும், அதனினிய வாசமும், எம் புன்சிரிப்பும்... எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை பொறாமைப்பட வைத்திருக்கும்! உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை மனதோடு ரசித்துக்கொண்டிருந்த... என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள், கழிந்துபோன நாளிகைகளில்... விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல் உணர்த்துகின்றன... அனைத்தும் கனவ…

    • 20 replies
    • 1.4k views
  19. இழப்புக்கள் பிறந்தது அவைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றது காலத்தால் தேற்றமுடியாத காயங்களில் குருதி வழிந்துகொண்டே இருக்கின்றது அன்றும் அசுரர்களை அழிக்க கடவுள்தான் வேண்டும் இன்றும் எம்மை அழிப்பவனை யாரோ ஒருவன் அழிக்கவேண்டும் அப்படி நடந்தால் கொண்டாடுவோம் எமது பெருவிருப்பங்களுக்காக சிலுவை சுமந்தவர்கள் கல்வாரிக்குள் இருந்து எழவே இல்லை இலக்கை அடையமுடியாதவர்களின் மோட்சத்தை நாமே பிரகடனப்படுத்திவிட்டு இலக்கை நோக்கி போரை மீண்டும் தொடர்கின்றோம் போரின் முடிவு இம்முறை நிறைவாக இருக்கவேண்டும் சூரனின் வயிற்றுக்குள் சேவலை மட்டுமே விடுவது வழக்கம் இம்முறை மயில்க்குஞ்சையும் சேர்த்து விடவேண்டும் கடசியாக முருகன் வேலெறிந்து சூரன் பாட்ட…

    • 20 replies
    • 2.3k views
  20. கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …

  21. புலம் பெயர் சிட்னி தமிழனே புண்ணியம் தேடி அழைகிறாய் ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய் ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x மெழுகாய் உருகிய எம்மவருக்கு மெழுகுவர்த்தி ஏற்ற ஏன் மறந்தாய் அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த, ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் :evil: . சூரசம்சாரத்துக்கு விடுமுறை எடுத்து குடும்பத்துடன் செல்லுகிறாய் தமிழ் தெய்வமான முருகனுக்கு நன்றி சொல்லுகிறாய் அசுரர்களால் அழிக்கபட்ட தமிழனை நினைவு கூற ஏன் மறந்தாய் :?: உலக சமாதானம் வேண்டி யாகம் செய்கிறாய் உன் ஊரே சுடுகாடாய் கிடக்குதே உறவுகள் சமாதான போர்வையில் அழிக்கபடுகிறார்கள் உலக சமாதானம் செய்யதான் முடியுமா உன்னால் :?: புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில் புளுகுக…

    • 20 replies
    • 3.4k views
  22. சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள…

  23. கண்மணி சுகமா.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... விதி வரைந்த இடைவெளி விடியல்தேடும் நினைவடி... நிலவில்லாத நீலவானம்.. அழகில்லையே... நீயில்லாமல் இங்கு ஏதும் சுகமில்லையே... என்னுயிரை அங்கு வைத்து உன்னுயிரை இங்கு வைத்து இறைவன் நடத்தும் கூத்து இளமை கருகும் காத்து.. கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் சொல்லவே.. அருகினில் இல்லையே... தொட்டுஇட்ட முதல்முத்தம்.. நெஞ்சை தொடும் இளரத்தம்.. உன் கடிதம் விழிநீரில் கரைகிறதே.. என்னுயிரை எண்ணி உயிர் கரைகிறதே.. ஆறுகடல் தாண்டி ஒன்று ஆசைகொண்ட ஜோடி இன்று காதல் என்னும் காடு மாட்டிப் படும் பாடு கண்மணி சுகமா..மனக் காயங்கள் குணமா... ஆறுதல் …

  24. பாலை நிலமாகி வரண்டுபோன என் வாழ்வில் ஒற்றைப் பூவாய் வந்து சோலையாகிப் போனவள் நீ விடியாத அந்த இரவுகளில் என் விசும்பல்களின் வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து மலர்மாலை தொடுத்தவள் நீ

  25. சிறு பருவத்தில் பார்த்து வியக்க வைத்தது - உன் நட்பு வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க வைத்தது - உன் நட்பு துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தது - உன் நட்பு மகிழ்ந்த போது மனம் மகிழ வைத்தது - உன் நட்பு முதிர்ந்த பின்னும் என்றும் தொடருமடி - நம் நட்பு நட்புடன் இனியவள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.