ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால்தான் அமைதிப் பேச்சுக்கள் மீளத் தொடங்கவில்லை என்று நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் குற்றம்சாட்டியுள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து அவர் அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு கடுமையடைந்துதான் உள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது போதுமானது அல்ல என்றார் ஹன்சன் பௌயர். http://www.eelampage.com/?cn=28331
-
- 22 replies
- 3.4k views
-
-
பெருமையாக இருக்கிறது….. எதை நினைத்து…. ? தமிழகத்தின் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை நினைத்து. தமிழ்ச் சமூகம் ஜெயலலிதாவிடத்தில், ஈழத் தமிழரின் நலனுக்காக எதையுமே எதிர்ப்பார்த்ததில்லை. ஏனென்றால், கடந்த காலங்களின் அவரது நிலைபாடு அப்படி. புலிகளுக்கு நேரெதிரான நிலைபாடு எடுத்ததோடு, ஈழத் தமிழர் விவகாரத்திலும், தெளிவான நிலைபாடு எதையும் எடுத்ததில்லை. ஈழத்தில் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் போர் நிறுத்தத்திற்கான போராட்டங்கள் பேஷனாகிப் போன சூழலில் ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதம் கூட, அவநம்பிக்கையோடுதான் பார்க்கப் பட்டது. 2009 பாராளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளைக் கொடுங்கள், இந்திய ராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, தனி ஈழம் அமைத்துத் தருகிறேன் என்று ஜெயல…
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
பிளேக்கை சந்தித்தார் சுப்பிரமணியம் சுவாமி – ஜெனிவா தீர்மானத்தை பலவீனப்படுத்த முயற்சி [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 12:07 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைப் பலவீனப்படுத்துவதற்கும், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சிறிலங்கா அரசாங்கம் தரகராக களமிறக்கியுள்ளது. கடந்தவாரம், சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற சுப்பிரமணியம் சுவாமி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்தார். இதையடுத்து, அமெரிக்கா சென்ற சுப்பிரமணியம் சுவாமி, தெற்கு மத்திய ஆசிய பிராந்திய …
-
- 22 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது . புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன . தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி கராத்தே வகுப்புகள…
-
- 22 replies
- 1.9k views
-
-
மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகளை இங்கே இணையுங்கள். இவ் இணைப்புக்களை அனைத்துலகம் நோக்கி அனுப்பி அவர்களின் கவனத்தினை எம் பக்கம் திருப்ப எம்மாலானதைச் செய்வோம்.
-
- 22 replies
- 15.2k views
-
-
மகேஸ்வரனை கொலை செய்தவர் அரச புலனாய்வு துறையோடு சம்பந்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மகேஸ்வரனை கொலை செய்ததாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வசந்தன் அரச புலனாய்வு துறையோடு தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கொழும்புக்கு வந்து தங்கிய இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபீடீபியின் உறுப்பினராக இருந்ததாகவும் பின்னர் அக் கட்சியில் இருந்து விலகி அரச புலனாய்வு துறையோடு இணைந்து 5 வருடங்கள் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மகேஸ்வரின் கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் வசந்தன் கொலையுண்ட மகேஸ்வரனின் மெய்பாதுவலாராக இருந்தவர் என சிவம் கோவிலில் வைத்து வசந்தனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரியா…
-
- 22 replies
- 8.4k views
-
-
யார் வராவிட்டாலும் வரைபில் கையொப்பமிட்டு இந்திய பிரதமருக்கு அனுப்புவோம்- வினோ எம்பி January 5, 2022 இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும் – பேராயர் மல்கம் ரஞ்சித் இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், துன்பங்களுக்கு உள்ளான எம்மக்களை அதிலிருந்து மீட்க, அனைத்து மக்களு…
-
- 22 replies
- 1.6k views
-
-
தமிழீழ மக்களுக்கு கரும்புலி வீரர் மடல். அன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்! எங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே! உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன். அன்பான எமது மக்களே! நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா? எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்…
-
- 22 replies
- 2.6k views
-
-
யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1309907
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044/5349417278429695
-
- 22 replies
- 999 views
- 1 follower
-
-
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 22 replies
- 4.2k views
-
-
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கபுரம் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே விசனத்தை உருவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் வாழும் மாணிக்கபுரம் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று அம்பாறையிலிருந்து பெருமளவான வாகனத்தில் வந்தவர்கள் புத்தபிக்குகளுடன் இணைந்து இம்மலையில் புத்தர் சிலையை வைத்தனர். இதற்கு, மாணிக்கபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தமக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலை வைக்க அதிகாரம் உள்ளதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எல்லைக் க…
-
- 22 replies
- 1.8k views
-
-
தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது. திருச்சி அருகே பேரூரில் இந்தப்…
-
- 22 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 22 replies
- 1.2k views
-
-
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு! by : Jeyachandran Vithushan பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவ…
-
- 22 replies
- 1.6k views
-
-
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீறும், புலி ஆடும் கொடி நிலம் ஆறும். பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப் பைகளும் ஆயுதம் ஏந்தும். மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த சிங்கள கூட்டங்கள் ஓடும். -இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்த…
-
- 22 replies
- 5.2k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் 2கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவுக்கு முன் ராஜீவுக்குப் பின் என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டு விட்டது. ராஜீவ் மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்தால் இந்த இலங்கைப் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். 1989ல் ராஜீவ் மரியாதை நிமித்தம் டில்லியில் தமிழக முதல்வர் டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ், தாங்கள் இரு நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசோலி மாறனும் உடன் இருந்தார். இலங்கைப் பிரச்சனையில் தீர்வு காண முடியுமானால் அது கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ், மறுநாள் காலை வெளியுறவுத் துறை செயலாளர் நட்வர் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார…
-
- 22 replies
- 2.7k views
-
-
அவர்களுக்கு தெரியுமா ?! "எப்பிடி போகுது... என்ன உங்கள் ஆட்சிதானே?!" பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால், நல்லவர். "ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அ…
-
- 22 replies
- 1.5k views
-
-
செந்தூரனை மருத்துவமனைக்கு எடுத்த செல்ல நோயாளி அவசர ஊர்தி வந்துள்ளது. செந்தூரனின் நிலையை பார்த்தும் அலட்சியம் காட்டும் காவல் துறையை பாருங்கள். சக முகாம் வாசிகள் அவரை தூக்கிக் கொண்டு செல்வதையும் பாருங்கள். from facebook தற்போது செந்தூரனின் நிலை மிகவும் மோசம் அடைத்துள்ளது. கடுமையான வயிற்று வழியால் அவர் பாதிக்கப்பட்டு ஆசன வாயிலில் ரத்தமும் வெளியேறி வருகிறது. இன்று மாலை திடீரென்று செந்தூரன் மயக்கம் அடைந்தார் . அவரை உடனே முகாமில் உள்ள காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தனர் சக முகாம் வாசிகள். ஆனால் காவல் துறை அதிகாரிகள் வழமை போல அலட்சியம் காட்டுவதாக தெரிகிறது. இனிமேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டால் அவர் உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது
-
- 22 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு வயல் பிரதேசத்தில் பொதுமக்கள் சிலருக்கு சொந்தமான வயல் நிலங்களை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அத்துமீறி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேற்படி பிரதேசத்தில் வயல் செய்கை நடவடிக்கையில் மேற்கொண்ட விவசாயிகள்வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து சாட்சியங்களை பதிவு செய்யும் முகமாக பொலிசார் குறித்த பிரதேசத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சகிதம் நேரடியாக சென்று சாட்சியங்களை பதிவு செய்தனர். இதன்போது அங்கு 2 ஜேசிபி இயந்திரங்கள் வயல் நிலங்களை துப்பரவு செய்யு…
-
- 22 replies
- 911 views
-
-
இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார். மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார். அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர். …
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
13 MAY, 2024 | 09:50 AM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்ற…
-
-
- 22 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் 1 ரெலோ 1 வன்னி தமிழரசுக்கட்சி – 3 ரெலோ 3 ஈபிஆர்எல்எவ் - 2 புளொட் - 1 மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி –5 ஈபிஆர்எல்எவ் - 1 புளொட் 1 ரெலோ 1 அம்பாறை தமிழரசுக்கட்சி – 6 ஈபிஆர்எல்எவ் - 2 ரெலோ 1 புளொட் 1 திருகோணமலை அதிக ஆசனம் தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனம்.. தமிழரசுக் கட்சி - 3 ஈபிஆர்எல்எவ் - 1 ரெலோ 1
-
- 22 replies
- 1.2k views
-
-
யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த சகலரும் நாடு திரும்ப வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) சபையில் பிரதமர் ரணில் அழைப்பு யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றோம். நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்…
-
- 22 replies
- 1.8k views
-