ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்.. - இந்திய பிரதமர் நரேந்திர மோடி February 8, 2020 இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (08) புது டெல்லியில் அமைந்துள்ள ராஸ்டிரபதிபவனில் பாரத பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே இந்திய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கரு…
-
- 19 replies
- 1.4k views
-
-
வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வு ஆரம்பம்! வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என்ற அவைத் தலைவரின் அறிவிப்புடன் சபை அமர்வு ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ்“கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் ச…
-
- 19 replies
- 668 views
-
-
வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தைத்திருநாளையொட்டி, வினோத விசித்திர பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றிருக்கின்றது. வல்வெட்டித்துறையில் பறந்த காற்றாடிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பட்டத் திருவிழா வடக்கிற்குச் சென்ற உல்லாசப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து ரசிக்கச் செய்திருக்கின்றது. பத்து, பதினைந்து, பதினெட்டு அடிகள் என நீளத்திலும் அகலத்திலும் அமைக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட இந்த பட்டங்கள் சுமார் 60 அடி உயரத்தில் வானத்தில் பறக்கவிடப்பட்டு, பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வெட்டித்துறை உதயசூரிய…
-
- 19 replies
- 2.5k views
-
-
புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம். [sunday, 2014-02-09 07:39:16] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரதிநிதியான, ஸ்டீபன் ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது இலங்கை அரசாங்கத்துக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாத முற்பகுதியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனத்தில்(ஐஓஎம்) , விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புக்கு…
-
- 19 replies
- 1.4k views
-
-
தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார். த…
-
- 19 replies
- 1.5k views
-
-
எழிலன். யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது…
-
- 19 replies
- 1.4k views
-
-
சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே…
-
- 19 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினையடுத்தே இந்த பணிகளை சம்மேளனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சுமார் 60 பேர் இந்த மதிப்பீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை முதற்கட்டமாக பஸார் வீதி, செம்மாதெரு, பொம்வெளி பகுதிகளிலும் சனிக்கிழமை ஹாதி அபூபக்கர் வீதி, கலீபா அபூபக்கர் வீதி அத்தோடு இதற்கிடைப்பட்ட குறுக்கு வீதிகள், முஸ்லிம் கல்லூரி வீதி வரையும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணிப்பாய் வீதி, ஜின்னா வீதி, ஆஸாத் வீதி மற்றும், இவற்றுக்கிடையே…
-
- 19 replies
- 1.5k views
-
-
வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன
-
- 19 replies
- 5.5k views
-
-
ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி ஒட்டுக்குவைக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்வின் எ…
-
- 19 replies
- 3.4k views
-
-
தென்மராச்சி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ். இராணுவத்தின் 2 விமானங்கள் சுட்டு விழுத்தப்பட்டன. செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்பத்தமிழ் வானொலியில் மூலம் அறிந்தேன்
-
- 19 replies
- 5.6k views
-
-
[size=4]ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார். போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரிமாறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். ஆனால், அவரது உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். போரி…
-
- 19 replies
- 1.7k views
-
-
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணமல் போனதற்கு பொறுப்பாகவிருந்த முதன்மை போர்க்குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கத்துருசிங்காவுடன் கைகோர்த்த விக்னேஸ்வரன் வட மாகாண சபைக்காக கைதடியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை இன்று திறந்த வைத்தார். அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காப் படைகளை ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்பு படையில் இணைந்த சிங்கள இன அழிப்பு படைகள் கெயிட்டி உட்பட்ட சில நாடுகளில் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பு அகல வேண்டும் எனத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூ…
-
- 19 replies
- 1.4k views
-
-
கடந்த வாரங்களில் சிங்கள தேசத்தின் ஊடகங்களிலும், சிங்களத்திற்கு சார்பான தமிழ் ஊடகங்களிலும் வன்னி குறித்து இரண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டது என்பது ஒன்று, தேசியத் தலைவர் விமானக் குண்டுவீச்சில் காயமடைந்து விட்டார் என்பது மற்றொன்று. இந்த இரண்டு செய்திகளும் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் சிலரிடம் குழப்பங்களை ஏற்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தச் செய்திகள் மிகவும் திட்டமிட்டு திறமையான முறையில் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கடந்த வாரங்களில் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் பணியகங்களின் தொலைபேசிகள் செயலிழந்து போயிருந்தன. சில பணியகங்களில் தொலைபேசி மணி அடித்தும் யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஒரு சில நாட்…
-
- 19 replies
- 4.6k views
-
-
இந்த கேள்வியை உங்கள் முன் எழுப்புதற்காக வெட்கப்படுகின்றேன். இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் இந்த கேள்வியை கேட்பதற்காக வெட்கப்படுகின்றேன். ஆனாலும் கேட்கவேண்டியுள்ளதே? :o :o அவசியம் என்கின்ற எல்லோருடைய (?)பதிலும் காதில் ஒலிப்பதனால் சில கருத்துக்களை வைக்கின்றேன். சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை ஆலோசனைகளை தெரிவியுங்கள். போராட்டத்துக்கான சரியான ஒரு பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும். போராட்டத்துக்கான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துதல். மாற்றுக்கருத்தாளர்களையும்(?) போராட்டத்தில் இணைத்தல் நாம் எமது போராட்டத்தை எடுத்த உடனேயே உயர்மட்டத்துக்கு எடுது்துச்செல்ல முயன்றோம் அதில் நாம் …
-
- 19 replies
- 3k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று படையினரும் காவல்துறையினரும் இன்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பிரார்த்தனை இன்று நல்லூர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ் நகரத்தைச் செர்ந்த படையினரும் காவல்துறையினரும் அடங்கிய குழு ஒன்று இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் இடுபட்டார்கள். வழிபாடுகளை முடித்துக் கொண்டு அவர்கள் குழுவாக நிற்பதைப் படத்தில் காணலாம். இவர்கள் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துள்ளார்கள். globaltamilnews
-
- 19 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.
-
- 19 replies
- 3.6k views
- 1 follower
-
-
ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் -- மனோ கணேசன் எம்பி : புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்துக்கொள்ளப்படவேண்டும
-
- 19 replies
- 3.4k views
-
-
குடாநாட்டிலுள்ள 179 இடங்களை படைக்கு தாரைவார்க்கும் டக்ளஸ்; இரகசியமாக நடந்தது நேற்றுக் கூட்டம் யாழ்.குடாநாட்டில் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலுமாக 179 இடங்களைத் தமக்குத் தருமாறு இராணுவத்தினர் கோரியுள்ளது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நேற்றுக் கூட்டமொன்றை நல்லூர் பிரதேச செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளின் தவிசாளர்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. யாழ்.அரச அதிபர், மேலதிக அரச அதிபர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஈ.பி.டி.பி. வசமுள்ள சபைகளின் தவிசாளர்களுக்கும், ஏனைய சபைகளின் எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. க…
-
- 19 replies
- 870 views
-
-
யாழ்ப்பாணம்: 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பலரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்து வருகிறது. இலங்கை அரசும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை எனக் கூறி வருகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளும் தலைவர்களும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் சரணடைந்ததை நேரில் பார்த்த பல நூறு சாட்சிகள் இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட இந்த சாட்சிகள் வீடு திரும்பிய நிலையில் இந்த உண்மைகளை தற்போது வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் போராளிகள் முன்னிலையில் சரணடைந்த விடுத…
-
- 19 replies
- 4k views
-
-
"இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது' வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ""இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!''. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை. "யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது' என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக…
-
- 19 replies
- 5.3k views
-
-
பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன், பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்…
-
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2009) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்…
-
- 19 replies
- 2.7k views
-
-
-
- 19 replies
- 3.6k views
-
-
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்: தமிழ் படைப்பாளிகள் கழகம் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில…
-
- 19 replies
- 2.2k views
-