ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
செவ்வாய், ஏப்ரல் 15, 2014 - 13:49 மணி தமிழீழம் | சக்திவேல், தமிழ்நாடு வன்னி யுத்தத்தில் இந்திய இராணுவமும் போரிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு ஈழத்தில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவின் இராணுவத்தினரும் போரிட்டதாக தெரிவித்து, இந்திய உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியோ, அல்லது இந்திய ஜனாதிபதியின் அனுமதியோ இன்றி, இலங்கைக்கு எதிராக திறந்த யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்யாமல், எவ்வாறு இந்திய இராணுவத்தை அங்கு அனுப்ப முடியும் என்று இந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டெல்கி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்…
-
- 12 replies
- 1.3k views
-
-
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன? Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna [TamilNet, April 19, 2006 03:11 GMT] Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldie…
-
- 12 replies
- 1.6k views
-
-
இலங்கையில் ஒட்டுக்குழுக்களை மஹிந்த அரசாங்கம் பூரண அனுமதி கொடுத்து செயற்படுத்தி வந்துள்ளதாக ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மே மாதம் 17 ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு பிளேக் அனுப்பிய கேபிள் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. கருணா குழு ஆட்களை கடத்தவும், சிறார்களை சேர்க்கவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யவும் அரசாங்கம் அனுமதித்து இருந்தது. மேலும் கருணா அணியினர் முகாம்களில் இருந்து இளைஞர் யுவதிகளை வலுக்கட்டாயமாக பிடித்து சென்று சித்திரவதை செய்துள்ளனர். கப்பம் கோரியும் உள்ளனர். இடம்பெயர்ந்த முகாம்களுக்கு வழங்கப்பட்ட உணவு நிவார்ணங்களை கொள்ளையிட்டு விற்றும் உள்ளனர். கப்பலில் அனுப்பபட்ட உணவுப்பொருட்களையும் கடத்தி விற்றுள்ளனர். இவை அனைத்திற…
-
- 12 replies
- 956 views
-
-
[size=4]தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்![/size] [size=4]தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம்.[/size] [size=4]கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது என்றே கொள்ள…
-
- 12 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e
-
- 12 replies
- 3.3k views
-
-
6 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம் ! கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றதோடு ஏராளமான இளைஞர் யுவதிகள் குறித்த …
-
- 12 replies
- 999 views
-
-
றிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும். சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய …
-
- 12 replies
- 991 views
-
-
கூட்டமைப்பை விமர்சிப்பவர்களுக்கு விரைவில் உரிய பதிலை வழங்குவோம் வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதில் வழங்குவோம் எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊரைப்பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா. விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். நீங்களும் அவ்வாறு செயற்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 12 replies
- 734 views
-
-
தினமணி இப்பிடி - சொல்லுதாம்... வேற எங்கையும் வாசிசவங்க - சொல்லுங்க ! ஏற்கனவே - இது இணைக்கப்படாதிருந்தால்! http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0
-
- 12 replies
- 3.5k views
-
-
நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த! Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக…
-
- 12 replies
- 2.8k views
- 1 follower
-
-
மகிந்தவிடம் ‘றோ‘ பணிப்பாளர் அலோக் ஜோசி பரிமாறிய இந்திய அரசின் ‘முக்கியசெய்தி‘ [ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 11:17 GMT ] [ கார்வண்ணன் ] திருப்பதி சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி இந்திய அரசாங்கத்தின் ‘முக்கியமான செய்தி‘ ஒன்றைப் பரிமாறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் நோக்கம் குறித்து, அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது, இந்தியாவின் தேசிய நாளேடு செய்தி ஒ…
-
- 12 replies
- 1.4k views
-
-
ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. 11 பெப்ரவரி 2011 Bookmark and Share 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டிருந்த 24 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த 66 காவற்துறையினரின் பாதுகாப்பு 24 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது பாதுகாப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், இம்முறை உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்…
-
- 12 replies
- 1.2k views
-
-
மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் ! சிங்களத்தின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த மேற்குலக ஆவணப்படங்களைத் தோற்கடிக்கவும், சிங்களத்துடன் தான் வன்னியில் அரங்கேற்றிய இனப்படுகொலைய முற்றாக மறைக்கவுமென இந்திய வெளியுறவுத்துறை தனது பாணியில் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதுக்கென இந்தியாவின் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தியா,மிந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவின் நீண்ட பேட்டியொன்றைப் பதிவுசெய்யவிருப்பதோடு, வன்னியில் இன்னும் நடைபெற்றுவருவதாகச் சிங்களம் கூறும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்…
-
- 12 replies
- 1.9k views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை எனத் தெரிவித்தமை குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்கள சமரவீரவை அவரது கருத்துக் குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதை மங்கள உறுதிப்படுத்தினார். மங்கள சமரவீர வாக்கு மூலம் வழங்குவதற்காகச் சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றனர். ஒரு நோக்கத்துக்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை இதுவே தல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் மங்க…
-
- 12 replies
- 955 views
-
-
சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி! சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (விாயழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் …
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அ…
-
- 12 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்து வேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள் புலம்பெயர் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் பெரும்நாய…
-
- 12 replies
- 4.6k views
-
-
மன்னார் கடலில் சண்டை மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.
-
- 12 replies
- 2.7k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி August 03, 201511:27 am தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தாமே வழிநடத்தவிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றதா அன்றேல் அரசுடன் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வழிநடத்தும் அன்றேல் தலைமை தாங்கும் கட்சியாக ஜனநாயக போராளிகள் கட்சி உருவாகவிருப்பதாக வித்தியாதரன் நம்பிக்கை தெரிவித்தார். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் எவ்வாறு…
-
- 12 replies
- 1.2k views
-
-
சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போரா அல்லது இன அழிப்பா? காட்சி ஒன்று: சிறீ லங்கா இனவாத அரசு வெளிநாட்டு கடனிலும், வெளிநாடுகளின் அன்பளிப்பு பணத்திலும் வாங்கிய விதம் விதமான விமானங்களினை வெளிநாட்டுவிமான ஓட்டிகள் ஓட்டி, தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி குண்டுகளை கொட்டி, அப்பாவித் தமிழர்களை கொன்றும், அங்கவீனம் அடையச்செய்தும், மனநோயாளிகள் ஆக்கிக்கொண்டும் இருக்கின்றார்கள். காட்சி இரண்டு: இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பங்களாதேசம் என்று வெவ்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு செய்யும் பேரினவாதிகளின் இராணுவத்திற்கு ஆலோசனைகள் கூறுவதோடு, இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு நே…
-
- 12 replies
- 4k views
-
-
இங்கிலாந்திற்கு... விளையாட சென்ற, இரண்டு இலங்கையர்கள் மாயம்! 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1293382
-
- 12 replies
- 1.2k views
-
-
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை 10 வருடங்கள் விசாரணை இன்றி சிறையில்.. வைத்திருந்துவிட்டு.. 2005 இல் மைத்திரியை கொல்ல வந்ததாக.. கடந்த ஆண்டில்.. தான்.. 10 வருட சிறைத்தண்டனை விதித்த விநோதத்தை மறைக்க அவருக்கு சொறீலங்கா சிங்கள சனாதிபதி இன்று பகிரங்க மன்னிப்பு வழங்கி அந்த தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்தார் என்ற செய்தியோடு.. Jenivan, now aged 36, was taken into custody in April 2006, accused of being part of an attempt a year earlier to kill Mr Sirisena, who was then a senior cabinet minister. He was sentenced by the Polonnaruwa High Court only in July last year. In pardoning him, Jenivan's lawyer said the president had taken into account the…
-
- 12 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி பூநகரி இரணைமாதாநகரில் அமைந்துள்ள நண்டு பதனிடும் நிலையத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி, செவ்வாய்க்கிழமை (07) பார்வையிட்டார்;. அவுஸ்திரேலிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உதவியுடன் இந்த நண்டு பதனிடும் நிலையம் இயங்கி வருகின்றது. உயர்ஸ்தானிகருடன் கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலர் சந்திரன் கிருஸ்ணேந்திரன் ஆகியோரும் சென்றனர். http://www.tamilmirror.lk/143720#sthash.eQG39C4M.dpuf
-
- 12 replies
- 697 views
-
-
குமுதம் இவ்வார இதழிற்கு, நடேசன் அண்ணா வழங்கிய பேட்டி ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம். இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்? "எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம…
-
- 12 replies
- 2.2k views
-
-
இலங்கை மத்திய வங்கி இன்று புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது இந் நாணயத்தாள்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மட்டும் இலங்கை நடனக்காரர் என்று தொனிபொருளுடன் வெளியிடப்பட்டுள்ளன . புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000 பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது . வீரகேசரியிலிருந்து........
-
- 12 replies
- 4.6k views
-