ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
யுத்த ஆய்வாளர் நிலவன் எழுதியது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான சிறிலங்கா விமானப்படையினரின் வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களை புதியதொரு அச்சமும், கவலையும் பிடித்துக்கொண்டுள்ளது. வெளியே பேசிக்கொள்ளவும் விரும்பாமல், அதேவேளை அதனை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாமல் புலம் பெயர் நாடுகளிலுள்ள பல தேசியப்பற்றாளர்கள் தடுமாறிக்கொண்டு இருக்கின்றார்கள். என்னுடன் உரையாடுகின்ற பல அன்பர்கள் தமது இந்தப் புதிய கவலையை பல வடிவங்களிலும் வெளியிட்டும் வருகின்றார்கள். அவர்களது அந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பது போன்று, மேலும் பல செய்திகளும் அறிக்கைகளும் பல்வேறு தளங்களில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. …
-
- 45 replies
- 6.3k views
-
-
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
-
- 35 replies
- 6.3k views
-
-
தமிழீழகளத்தில் நடப்பதை ஏதோ செஸ் விளையாடுவது போல் புலம் பெயர் மக்களும் , யார் அடிப்பார் , யார் தோற்பார் என்று ஒவ்வொரு நாட்டு புலனாய்வாளர்களும் , உலக செய்தியாளர்களும் காத்திருக்கும் ஒரு திசையாகவும் எம் தாயகம் மாறி இருக்கும் இவ் வேளையில் , உண்மையில் எம் தாயக களத்தில் நடப்பது என்ன என்பதை நோக்கப்போனால் தமிழர் நிலம் கொஞ்சம், கொஞ்சமாக இனவெறி அரசு ஆக்கிரமித்து என்றுமில்லாத ஒரு வகையில் தாயக மக்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்களின் தலமைத்துவம் 2002ம் ஆண்டு ஒரு இராணுவச்சமநிலையில் இருந்து ஒரு சமாதன பேச்சுவார்த்தைக்கு சிங்கள அரசை வரவைக்க முடிந்தது ஆனால் ஏன் அந்த இராணுவச்சமநிலை தொடர்ச்சியாக பேணமுடியாது போனது என்பதற்கு சமாதான காலத்தில் சிங்களம் நடத்திய ச…
-
- 31 replies
- 6.3k views
-
-
மே 30, 2012 உலகளாவிய தமிழ் இளையோர் அவை வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையேர் அவை பெருமை அடைகிறது. சர்வதேச அரங்கில் இடம்பெறும் ஒரு காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி யூன் 2012, எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது. FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி Nouvelle Fédération-Board (N.F. Board) ஆல் நடாத்தப்படுகிறது. காற்பந்தாட்டதில் தங்கள் திறமைகளை தமிழீழ விளையாட்டுவீரர்கள் புலம்பெயர் நாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 73 replies
- 6.3k views
-
-
ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளத…
-
- 67 replies
- 6.3k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்] தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான…
-
- 28 replies
- 6.3k views
-
-
- Abu Zainab - ஜேர்மன் நாட்டின் University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும். குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரண…
-
- 54 replies
- 6.3k views
-
-
சிவாஜிலிங்கத்தை தீண்டியது பாம்பு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்றிரவு (20.11.2020) மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் வாயிற்கதவிலிருந்த பாம்பு ஒன்று, அவரின் கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டதையடுத்து, அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் சிகிச்சையளிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/94876
-
- 52 replies
- 6.3k views
-
-
[size=4]இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.[/size] [size=4]இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[…
-
- 39 replies
- 6.3k views
-
-
மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு! மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து குறித்த நாணயக் கு…
-
- 64 replies
- 6.3k views
-
-
Published By: VISHNU 04 JUL, 2024 | 02:03 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு ஆளுநர் , நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர…
-
-
- 76 replies
- 6.3k views
- 1 follower
-
-
பாகம் 1 http://yarl.com/articles/files/100601_vithyatharan_part1.mp3 பாகம் 2 http://www.yarl.com/forum3/index.php?showtopic=72439 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 48 replies
- 6.2k views
-
-
கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. _________________ மூலம்: புதினம்
-
- 20 replies
- 6.2k views
-
-
Published By: NANTHINI 22 APR, 2023 | 01:45 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் ய…
-
- 98 replies
- 6.2k views
- 2 followers
-
-
நன்றி: நக்கீரன் - புரட்டாதி 24, 2009 முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது. "2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. நான் மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லா தமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும் இவர் கூர்த்த …
-
- 35 replies
- 6.2k views
-
-
வன்னியில் இரு களமுனையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படையினர் 90 பேர் கொல்லப்பட்டு, 12 உடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. நேற்று புதன்கிழமை காலை 9:00 மணிக்கு கிளிநொச்சிக்கு மேற்கே ஓட்டுப்புலத்தில் இருந்து புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினருக்கு எதிரான தாக்குதலில் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதுடன், 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த மோதலில் 120 வரையிலான படையினர் காயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர். புதுமுறிப்பில் ஏகேஎல்எம்ஜி – 04, பிகே எல்எம்ஜி – 02, ஆர்பிஜி – 02, ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 11, இரவு பார்வை காட்டி – 01, லோ - 01 உள்ளிட்ட படையப்பொருள்களும் கைப்பற…
-
- 16 replies
- 6.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் "எல்லாளன் நடவடிக்கை"யில் அநுராதபுர சிறிலங்கா வான் படைத்தளத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிப்படம் இன்று காண்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 6.2k views
-
-
ஸ்ரீலங்கா விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று செவ்வாய் காலை 09:15 மணியளவில் மன்னார் இலுப்பைகடவையில் படகுத்துறை கிராமத்தின் மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இதில் 15 பொதுமக்கள் வரை பலியானதுடன் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மன்னாரில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதியான கிராமத்தின் மீது விமானப்படையின் 4 கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.எனினும் இத் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு இது வரை எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடட்தக்கது. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 32 replies
- 6.2k views
-
-
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார் வடமாகாண தலைமை சங்கநாயக்கர் மற்றும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் நேற்று (19) காலமானார். அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வான்படை மற்றும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் அவரது பூதவுடல் வான் வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்…
-
- 56 replies
- 6.2k views
- 1 follower
-
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன் வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்…
-
- 47 replies
- 6.2k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு புதன்கிழமை 9.30 மணியளவில் கருணா குழுவினர் இளம் குடும்பத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டத்தில் ஒண்டரை வயது சிறுவன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இராணுவ கட்டுப்பாட்டியில் உள்ள மாவடிவேம்பு 1ல் அமைந்துள்ள வீட்டியில் இருந்த போது வீட்டினுள் புகுந்து இந்த மிருகத்தனமான படுகொலைகளை மேற்கொண்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.ஒண்டரை வயதுடைய குழந்தை நிமலன் நிலுக்ஜன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றும் அவரின் தாய் நிமலன் ஜெயமலர் வயது 19 தந்தை கந்தையா நிமலன் வயது 22 ஆகிய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் …
-
- 8 replies
- 6.2k views
-
-
முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ? கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைவதற்கு முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானதாக கருதப்படும் முஸ்லீம்களுக்கான தனியான மாவட்டம் தொடர்பான கோரிக்கையை சிறீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கல்முனை பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இந்த மாவட்டம் அமைக்கப்படவுள்ளது சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெறும் போது முஸ்லீம் காங்கிரசும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது -Path…
-
- 30 replies
- 6.2k views
-
-
பிரபாகரன் வார்த்தையில் இறந்திருக்கலாம் - வாழ்க்கையில் மரணம் அடைய மாட்டார்: சீமான் சென்னை: பிரபாகரன் செத்து விட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம்?. வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம். வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடைய மாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக, அற்புத மனிதனாக இருந்ததுதான் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை யில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பெருமளவிலானோர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் சீமான் அனல் பறக்க பேசினார். அவர் பேசுகையில், இயக்குனர் பாரதிராஜா ஒரு மா…
-
- 57 replies
- 6.2k views
-
-
-
பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்த நீர் நவாலியில் சம்பவம் பீதியால் மக்கள் ஓட்டம் [13 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 7:25 மு.ப இலங்கை] நவாலி, டிசெ. 13 வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார். நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்…
-
- 4 replies
- 6.2k views
-