ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர். கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்து…
-
- 10 replies
- 1.8k views
-
-
அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் உருவசிலைகளை எரித்தும், கண்டித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தும் டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழின துரோகிகளால் மக்களை ஏமாற்றி, கபடத்தனமான முறையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இராணுவத்தினரின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக த…
-
- 10 replies
- 1.6k views
-
-
விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்க…
-
- 10 replies
- 1.8k views
-
-
இலங்கை கடற்படையால் குமுதினிப் படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 1985ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும இடையில் குமுதினிப் படகில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது இலங்கை கடற்படையினரால் காட்டுமிராட்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 பேர் கடற்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நினைவு தொடர்பாக நெடுந்தீவு மாவிலி துறைமுகப்பகுதியில் குமுதினி படுகொலை நினைவுத் தூபியும் மண்டமும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு…
-
- 10 replies
- 996 views
-
-
தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று. இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம். கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆச…
-
- 10 replies
- 1.2k views
-
-
கோத்தா முகாம், திருமலையில் நடைபெற்ற முன்னைய படுகொலைகள் தெஹிவளையிலிருந்து கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள மாணவர் விவகாரம் ஆகியவற்றின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டுமாயின் புதிய அரசாங்கமானது இவற்றை மீள் பரிசீலனை செய்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். திருகோணமலை இரகசிய கடற்படை முகாம் சம்பந்தமாகவும் முன்னைய படுகொலைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “திருகோணமலை கடற்படைத்தளத்தில் இயங்கி வந்ததாகக் க…
-
- 10 replies
- 979 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய நிதி சேகரித்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அமெரிக்கா தடை செய்து விட்டது என்று பெருமை பேசுவதில் எந்தப்பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அமெரிக்காவைப் போன்று இங்கும் புலிகள் இயக்கத்தையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என ஜே.வி.பி உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை கூடிய போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் அதனோடு தொடர்புடைய குழுகளின் செயற்பாடுகள் என்பனவற்றை ஐக்கிய அமெரிக்கா தடை செய்து முடக்கி வைத்ததுள்ளது. அதற்காக …
-
- 10 replies
- 2.9k views
-
-
மன்னார், மனிப்புள்ளிக் குளம பகுதியின் மீது படையினரால் நேற்று முன்தினம் காலை 'ஆர்.சி.எல்' தாக்குதலோன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர்கள் மறைந்திருந்த முகாம்கள் இரண்டை இலக்கு வைத்தே மேற்கோள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது மேலும் : குறித்த தாக்குதல்களின் போது படையினரால் இலக்கு வைக்கபட்ட இரு முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் ஆறு பிரதேச தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கு குறித்த இரு முகாம்களும் பாரிய தடையாக விளங்கி வ…
-
- 10 replies
- 2.8k views
-
-
கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற போரில் மட்டும் 200 வரையான சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளனர். புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள படையினர் அதற்காக கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்ற மோதல்களிலர் படையினர் 200 பேர் இழக்கப்பட்டதாக சிறிலங்காவின் இணையத் தளங்களில் ஒன்றான 'டிபென்ஸ்வயர்' தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (14, 15ம் திகதிகளில்) இடம்பெற்ற மோதல்களில் 400ற்கும் மேற்பட்ட படையினரின் உடலங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் …
-
- 10 replies
- 2.5k views
-
-
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் என்னிடம் கேட்கவில்லை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முதல்வரிடம் கேட்டதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டு விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 10 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2023 | 01:01 PM மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று பொழுதை கழித்துள்ளனர். அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கட…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
பாரளுமன்றில் இப்போது இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். தன்னை நீக்காது, இன்னொருவரை நியமித்தது சபாநாயகரின் தவறான நடவடிக்கை. புதிதாக நியமனமான மகிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. பாரளுமன்ற அங்கத்தவராக இல்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு முரணானது. மகிந்தவும் மேலும் 45 பேரும், SLFP யில் இருந்து விலகி, SLPP என்னும் கட்சியில் சேர்ந்த படியால், அவர்கள் தமது பாரளுமன்ற உறுப்புரிமையினை இழந்து விட்டனர். சபாநாயகரே , உங்கள் முடிவு, பாராளுமன்ற சம்பிரதாயங்களை கணக்கில் எடுக்காது, அவசரமாக எடுக்கப் பட்டதாக தெரிவதுடன், அது அரசியல் அமைப்பினை மீறுவதாகவும் உள்ளது என்று சம்பந்தர் பாராளுமன்றில் அறிவித்தார். பா…
-
- 10 replies
- 1.7k views
- 1 follower
-
-
கொங்கிரஸ் - தி.மு.கவிற்கு எதிராக தமிழகம் பேரெழுச்சி - சோனியாவுடன் தயாநிதி மாறன் அவசர சந்திப்பு திகதி: 01.02.2009 // தமிழீழம் // [சோழன்] இலங்கைத் தமிழினப் படுகொலையில் கொங்கிரஸ் சோனியா காந்தியின் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக இந்திய இராணுவத்தை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், கொங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே தமிழக மக்களின் கோபம் கிளர்ந்தெழுந்திருக்கின்றது. இந்தநிலையில், தற்போது அந்த கோபம் இந்தப் படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் கருணாநிதியின் தி.மு.க. பக்கமும் அதிகரித்து வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் தமிழனப் படுகொலைக்கு ஆதரவாக தமிழக தி.மு.க அரசு …
-
- 10 replies
- 2.7k views
-
-
இலங்கையில் ஆண்களை விடவும் 18 லட்சம் பெண்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் ஆண்களை விடவும் 1817000 அதிகமான பெண்கள் வாழ்ந்து வருவதாகவும் இது ஓர் பாரிய சமூகப் பிரச்சினை எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின மானுட வள அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 46 வீதமானவர்கள் ஆண்களாகும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1,04,45,000 ஆண்களும், 1,22,62,000 பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளமை பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்தல், தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ளல், குடும்ப பிணக்குகள், உளவியல் அழுத்தங்கள் என பல்வ…
-
- 10 replies
- 1.9k views
-
-
மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு திமுக வரவேற்பு, உண்ணாவிரதம் ரத்து: கருணாநிதி இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி தான்மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தையும் கைவிடத் தீர்மானித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த திமுக உயர்மட்டக் கூட்டத்தையும் மன்மோகன் சிங்கின் அறிவிப்பையடுத்து கருணாநிதி ரத்துச்செய்துள்ளார். அதேவேளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக தான்ஒருபோதும் எச்சரிக்கவில்லை எனவும் கருணாநிதி இன்று கூறினார். அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காவிட்டால் ஐ…
-
- 10 replies
- 1.5k views
-
-
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவிற்கு அழைத்திருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்க இராஜங்க செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பினை ஏற்று வெளிவிவகார அமைச்சர் மே மாதம் இரண்டாம் வாரத்தில் அங்கு பயணமாகவிருக்கின்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அவர் அழைப்பு விடு…
-
- 10 replies
- 973 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 03:13 PM கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கா…
-
-
- 10 replies
- 931 views
-
-
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7 17 MAY, 2024 | 11:15 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு…
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
கூட்டமைப்புடன் ஒன்றரை மணிநேரம் பேச்சு நடத்தினார் நிஷா பிஸ்வால்AUG 26, 2015by கார்வண்ணன்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேவேளை, நிஷா பிஸ்வாலுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகா…
-
- 10 replies
- 1.5k views
-
-
இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி FEB 11, 2015 | 1:50by கார்வண்ணன்in செய்திகள் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தை அளவிடுவதற்கு முன்னரே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த இனப்படுகொலைத் தீர்மானம் ஜெனிவா கூட்டத்தொடரில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று அதிகாரிகள் கவனமாக ஆராய…
-
- 10 replies
- 656 views
-
-
மட்டக்களப்பு நகரில் உள்ள மங்களராம விகாரதிபதி வண.அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு போலி உறுதிகள் கொண்டு தயாரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டு அம்மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுக்க கோரி வலியுறுத்தியே அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை என்பதால் அங்குள்ள சிங்கள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேரரின் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்ட…
-
- 10 replies
- 1.4k views
-
-
எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள். தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்.. தொடர்ந்து உழைப்போம்.. http://www.ontarioen...a/OEB/Consumers தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்
-
- 10 replies
- 2.1k views
- 1 follower
-
-
பின்வருவனவற்றை உங்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்களிலும் வெளியிடுவதுடன் ஏனைய இணையத் தளங்களுக்கும் அனுப்பி வையுங்கள். படங்களும் அதற்கான இணைப்புக்களும் http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-100x100.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.png http://irtag.yarl.com/wp-content/upload/st...…
-
- 10 replies
- 2.6k views
-
-
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பேண புதிய நடைமுறை ஆரம்பம்! நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று (சனிக்கிழமை) ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்பட…
-
- 10 replies
- 621 views
-
-
உலகத்தமிழர்களே சிங்கள அரச படைகளின் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளுங்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ மௌலானா ஸ உலகம் எங்கும் வாழும் ஈழத்தமிழர்களே கிளர்ந்தெளுங்கள் எங்கள் ஈழத்தமிழர்களின் உறவுகள் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் என்று கூறிக்கொண்டு இலங்கை இராணுவம் இனப்படுகொலைகளை தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்;துவிடுவதற்கு பாரிய முயற்சியை செய்து கொண்டு இருக்கிறது. இதன் முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் கைத் தொலைபேசிகளை செயலிழக்க செய்துள்ளது. மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. மக்களை வீடுகளுக்கு வெளியே வரவிடாமல் தடுக்கின்றது. தமது படையினரின் பாதுகாப்பு அரணாக யாழ் குடாநாட்டு மக்களை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. தற்போது முகமாலையில் இருந்த படையினர் தப்பி ஓடி…
-
- 10 replies
- 2.6k views
-