ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன் சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். த…
-
- 8 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தின…
-
- 8 replies
- 1.3k views
-
-
சாள்ஸ் அன்டனியா? இது உண்மையில்லேயே.... வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சாள்ஸ் அன்டனிதானா?
-
- 8 replies
- 2.5k views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 31, 2011 http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D வடமராட்சி கிழகு சுண்டிகுளத்தில் நான்கு கடற்படையினர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் முலைத்தீவில் இருந்து வினியோக நடவடிக்கைக்காக சுண்டுக்குளம் கடற்படை முகாமிற்கு சென்று கொண்டிருந்த வேளை காணாமல் போயுள்ளனராம். இவர்கள் சென்ற படகு, ஆயுதங்கள் உட்பட எவையும் காண…
-
- 8 replies
- 2.2k views
-
-
தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா போரம் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின்போது இங் கிருந்து சென்று கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து அவசரமாக அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன. “தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத் தினரின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அடியோடு விரும்பவில்லை. சிவில் நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் கீழ் அமைதியான முறையில் வாழவே மக்கள் விரும்புகிறார் கள். இதனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்து விளக்கி…
-
- 8 replies
- 614 views
-
-
முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது Bharati May 13, 2020 முள்ளிவாய்க்கால் நிகழ்வு தடைகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது2020-05-13T14:02:31+00:00உள்ளூர் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் நினைவுகூரல் நிகழ்வுகள் செம்மணி படுகொலை நினைவிடத்த…
-
- 8 replies
- 947 views
-
-
இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்பு செல்லும் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன், அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ேமலும்வாசிக்க: http://tamil.webdunia.com/newsworld/news/n...090114002_1.htm
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு யாழ்.சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த விடுதியானது நேற்று (சனிக்கிழமை) இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ‘யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் எனவும் …
-
- 8 replies
- 789 views
-
-
வன்னிப் பெண் சமூக செயற்பாட்டாளருக்கு ஆசிய சமாதான விருது [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:31 GMT ] [ தா.அருணாசலம் ] வன்னியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாடாளருக்கு ஆசியாவில் மதிப்பு மிக்க அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய மட்ட சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக பணியாற்றியுள்ளதற்காகவே தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணம் என்ற பெண் ‘என் சமாதான விருது‘க்கு (N Peace Award) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், கிழக்கு திமோர், இந்தானேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேலும் ஐந்து பெண்கள் இந்த ஆண்டுக்கான சமாதான விருதைப் பெறுகின்றனர். பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தவச்சி…
-
- 8 replies
- 559 views
-
-
திஸ்ஸமஹாராமவில்... பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை, சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்! திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது. எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்…
-
- 8 replies
- 936 views
-
-
செவ்வாய்க்கிழமை, 8, ஜூன் 2010 (11:27 IST) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே உருவமொம்பை எரிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், தா.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டனப்பேரணியுடன் சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட உள்ளார்கள். இதனால் இலங்கை தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் மதிமுகவின கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்த சிவசேனாவினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் சமத்து மக்கள் கட்ச…
-
- 8 replies
- 1.3k views
-
-
ராமேசுவரம், நவ. 6- இலங்கையில் ராணுவத் திற்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியை சுற்றி வளைத்து கைப்பற்றும் நோக்கத்தில் வான்வழியாகவும், தரை வழியாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போரில் காயம் அடையும் விடுதலைப் புலிகள் ராமேசுவரத்துக்கு அகதிகள் போர்வையில் ஊடுருவலாம் என்று கருதப் படுகிறது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் தமிழக மீனவர் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க இந்திய…
-
- 8 replies
- 3.5k views
-
-
மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன், சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும்…
-
- 8 replies
- 2.4k views
-
-
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டி…
-
- 8 replies
- 2.4k views
-
-
'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்' “நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால ப…
-
- 8 replies
- 721 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. கேள்வி: "பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?" பதில் :- "இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட…
-
- 8 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது! கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது. குறித்த நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் யாழ்.இந்திய துணை தூதுவர் ராம ராஜேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிதிகள் விழா இடம்பெறம் மண்டபத்த…
-
- 8 replies
- 1k views
-
-
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை! யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இவ்வாறு ஏலத்தில் விறபனை செய்யப்படவுள்ளது. அன்மைக்காலமாக இந்திய மீனர்வர்களின் அத்து மீறல்கள் அதிகரிப்பதனை கண்டித்து மீனவர்கள் தொடர் போர்டாட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த ஏல விற்பனை இன்று ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1265812
-
- 8 replies
- 585 views
-
-
கடுமையான செய்தியுடன் கொழும்பு செல்கிறார் ரிச்சர்ட் பெளச்சர். சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கான அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கொழும்பிற்கு செல்லவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08.05.07) செல்லும் இவர், இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தை பேச்சு மேசைக்கு திரும்பும் படியாக கடுமையான ஒரு செய்தியை அவர் எடுத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளை ரிச்சர்ட் பெளச்சர் சந்திப்பதுடன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள்…
-
- 8 replies
- 2.8k views
-
-
ஐயோ இந்தத் தீபக்காரரின் தொல்லை தாங்க முடியலைடா! இன்று மாலை தீபம் தொ(ல்)லைகாட்சியில் யாழ்ப்பாணச் சாதிமுறைமை தொடர்பாக நிர்மலா, கொண்ஸ்ரைன்,பரிஸ்ரர் ஜோசப் ஆகியோர் உரையாடலில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியமானது தன்னை அர்ப்பணித்து ஒரு இனத்துவ அடையாளத்தோடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்குமிவ் வேளையில் மேலும் பிரிவினைகளைத் தூண்டும் விதமான தலைப்புகளுடனான விவாதங்கள் தேவையா? தமிழத்தேசியமானது அனைத்தையும் கடந்து அண்மையில் வாக்குச் சீட்டுக்கள் மூலம் செய்தியைச் சொல்லிவிட்டு அமைதியாக இருக்குமிவ் வேளையில் இது தேவையா? தமிழ்மொழி பேசுகின்றவர் என்ற வகையிலே திரு அணஸ் அவர்களே உங்களது நோக்கம் என்ன?
-
- 8 replies
- 2.4k views
-
-
வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நே…
-
- 8 replies
- 1.2k views
-
-
தம்புள்ளை சர்ச்சைக்குரிய மதவழிபாட்டுத் தளங்களை அப்புறப்படுத்த அந்தப் பிரதேச பௌத்த பிக்குகள் முயற்சித்து வருகின்ற நிலையில், பிரதேசத்திலுள்ள காளிகோயிலுக்கு முழுப் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். தம்புள்ளை புனித பூமிப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றும், இந்துக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தம்புள்ளை விகாரையின் பௌத்த பிக்கு தலைமையில் கும்பலொன்று அடாவடித்தனம் செய்து வருகிறது. எனினும், இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் காளி கோயிலை சேர்த்துக்கொள்ள வேண்டாம் எனவும், அந்தக் கோயிலுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு மகிந்தர் உத்தரவி…
-
- 8 replies
- 2k views
-
-
படையினரின் எறிகணைத்தாக்கதலில் கைகளை இழந்த தமிழ்பெண் கால்களால் கணணிகற்றுக்கொடுக்கம் ஆசானாக திகழ்கின்றார் சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையின் போது தனது இரண்டு கைகளையும் இழந்த செபஸ்ரியான் செல்வநாயகி என்ற பெண் கால்களால் கணணியினை இயக்கி பலருக்க ஆசானாக திகழ்கின்றார்! வெற்றிலைக்கேணி முள்ளியானை சொந்த இடமாக கொண்ட இவர் சிறீலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் எனது இரு கைகளையும் இழந்துள்ளேன். 14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன். பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான் இன்றும் அவர்கள் மூலம்…
-
- 8 replies
- 887 views
-
-
சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஷ் Posted by: on Oct 23, 2010 தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது. 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். இந்திய இராணுவத்தின் துணையுடன் தான் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசு அதனை நிறைவேற்றியிருந்தது. அன்று இந்தியர்களை பகைவர்களாக தமது மனதில் பதித்துக் கொண்ட சிங்கள இனம் …
-
- 8 replies
- 2.4k views
-
-
மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேகாராசா காலமானார்! (படம்) Published on September 18, 2011-5:40 am வவுனியா ஊடகவியலாளர் தம்பு விவேகராசா சனிக்கிழமை நள்ளிரவு அளவில் காலமானார். தினகரன் பத்திரிகையில் நீண்டகாலமாக வவுனியா பிரதேச நிருபராக இவர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 55. இரத்த அழுத்த நோய் காரணமாக திடீரென சுகவீனமடைந்து, கடந்த ஒரு வார காலமாக வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். ஏஎவ்பி, சண்டே டைம்ஸ், தமிழ் மிரர், தினக்குரல் உள்ளிட்ட பலஊடகங்களுக்கும் இவர் இறக்கும் வரையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=34794
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-