Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 26 MAY, 2024 | 03:13 PM வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk…

  2. கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.4k views
  3. பதவி விலகுகிறார் ஆளுநர் பளிகக்கார! : வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் குரே! வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிகக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிகக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார் எனக் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை வடக்கின் புதிய ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. h…

    • 6 replies
    • 711 views
  4. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் இழந்ததற்கு அரசாங்கம் இன்று கவலை வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு ஒரு சொத்து என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஏனைய நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எனினும், ஒரு முக்கியமான துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க கடந்த அரசு எ…

  5. போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது. அளவுக்கு அதிகமாக மதுபாணம் அருந்தி விட்டு மனைவியை தாக்கியதனை அவதானித்த மகன் இடையில் சென்று தந்தையை தடுக்க முட்பட்டுள்ளார். தடுக்க வந்தது மகன் தான் என்பதுகூட தெரியாதளவுக்கு போதையில் நின்ற தந்தை மகனை பலமாக கடித்துக்குதறியுள்ளார். குறித்த சம்பவத்தால் பலத்த கடிகாயங்களுக்குள்ளான கஜன்சன் (வயது 13) யாழ் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாhருக்கு வழங்கிய தகவலைஅடுத்து கடித்துக்குதறிய தந்தையை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிஸாரிடம் குறித்த தந்தை,…

  6. உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர். அதன்படி வீடுகள், ஆலயங்கள்,வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. இதேவேளை, ஆலயங்களிலும் விசேடவழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன. மேலும் வழமைக்கு மாறாக இம்முறை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. …

  7. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவூதி அரேபியாவுக்கு அழைப்பு இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்குமாறு சவூதி அரேபியாவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கும் சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த அழைப்பை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், விடுத்துள்ளார். முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் போதுமான எண்ணெய் சேமிப்பு வசதிகளை இலங்கை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சவூ…

  8. விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்! ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது. இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம். ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு. அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு …

  9. ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்படவுள்ளார்? Sri Lanka recalls diplomat accused of war crimes The Sri Lankan government has recalled its second most senior diplomat to Switzerland and Germany in response to accusations he was involved in war crimes. Former general Jaghat Dias led the 57th division of the Sri Lankan army. He is accused of ordering his troops to fire upon civilian and hospital targets during the army’s final offensive against the rebel Tamil Tigers in 2009. A report by the European Centre for Constitutional and Human Rights also accuses Dias of participating in acts of torture and the execution of rebel fighters. Last month, the Swi…

    • 6 replies
    • 1.9k views
  10. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடையாது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரணடையாது தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்…

  11. யுத்தத்தின் போது அமெரிக்கா உதவியது: டிலான் By J.Stephan 2012-11-30 16:03:37 யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா எமக்கு உதவியது அதேவேளை சில பிரச்சினைகளையும் கிளப்பினர். இதனால் எந்தப் பிரச்சினையையும் கிடையாது என பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இந்தியா இன்று பெரிய அண்ணாவாக அன்றி பெரிய அக்காவாக மாறியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில். யுத்தத்தின் போது இந்தியா சீனா பாகிஸ்தான் என பல…

    • 6 replies
    • 426 views
  12. கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். …

  13. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் ஜெனரல் சரத் பொன்சேகா ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடவில்லை என நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து விலகுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். குரக்கன் மாவுடன், வேட்டை இறைச்சி சாப்பிடுவதாக தெரிவிக்கும் இந்த இராணுவ தளபதி ஆட்சிப்பீடம் ஏறினால் முழு நாட்டு மக்களது இறைச்சியையும் சாப்பிட்டு விடுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேட்டையாடப் பட்ட மிருகங்களின் இறைச்சி சாப்பிடுவதாக ஜெனரல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்தமை ஓர் பாரதூரமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகள் சித்திரவதை சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறான ஒரு நபரை தேர்தலில் களமி…

  14. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஸ்ரீபவன்? வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, அடுத்த தேர்தலில் ஸ்ரீபவனை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 6 replies
    • 853 views
  15. ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர். பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர். 54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/44380/64//d,fullart.aspx

  16. இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் உணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள். தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அவர்களின் உணர்வுகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் உணர்ச்சியற்றிருக்க முடியாது என இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார். . இலங்கை, மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்றை புதுடில்லியில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார். . இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும் அவ்வப்போது கரிசனைகளை வெளிப்படுத்துவதாக நிருபமா ராவ் கூறினார். அங்கு தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கும் ஏதேன…

  17. [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 01:03 GMT ] [ கார்வண்ணன் ] சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான இந்தக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளையும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் இந்தச் சந்திப்…

    • 6 replies
    • 959 views
  18. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்து…

    • 6 replies
    • 796 views
  19. வல்­வெட்­டித்­துறையில் களைகட்டும் இந்­திர விழா­!! பதிவேற்றிய காலம்: Apr 18, 2019 யாழ்ப்­பா­ணம், வல்­வெட்­டித்­துறை இந்­திர விழா நாளை கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில், அதற்­கான ஏற்­பா­டு­கள் அனைத்­தும் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன. இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு தொடக்­கம் வல்­வெட்­டித்­துறை பொலி­கண்டி வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ­மீற்­றர் தூத­ரத்­துக்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­கு­மிழ் அலங்­கா­ரங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. சுமார் 300க்கும் மேற்­பட்ட வாழை­கள் இந்த விழா­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­துக் கட­வு­ளர்­க­ளின் திரு­வு­ரு­வங்­கள் பொருத்­தப்­பட்ட 10 கட்­அ­வு…

    • 6 replies
    • 1.2k views
  20. பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல் எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளைத் தைத்து மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாடசாலை சீருடைகளை தைப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகளை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் மற்றும் விரயத்தைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  21. சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை வீச்சைத் தொடர்ந்து மடுத்திருத்தலத்திலிருந்து மாதா சிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு தேவாலய பங்குத்தந்தை மற்றும் பணியாளர்களிற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மன்னார் ஆயரே தான்தான் மாதா சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக டெய்லி மிரர் மற்றும் தமிழ்நெட் ஆகியவற்றிற்குத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புலிப்பயங்கரவாதிகளின் தேவாலய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் மன்னாரில் உள்ள செல்வாக்குமிக்க பயங்கரவாதிகளின் ஆதரவாளர் ஒருவரின் முழுமையான ஒத்துழைப்பு இதற்குக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு இணையத் தளத…

  22. தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை முன்னாள் சட்ட மா அதிபரும், அரசியல் சாசன சட்ட வல்லுனருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அரசியல் சாசனத் திருத்தங்கள் குறித்த குழுவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் சிவா பசுபதி, கடந்த வாரம் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். தொலைபேசி மூலம் விக்னேஸ்வரன் இந்த அழைப்பினை விடுத்திருந்தார் எனவும், தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பு ஒன்றியம் அவசியம் கிடையாது என சிவா பசுபதி தெரிவ…

  23. ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின! முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் மாதம…

  24. 04 APR, 2025 | 09:26 AM யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது. இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.