Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுவயதில் இருந்து தாயகத்தை காதலித்து வந்த ஹம்சாயினி அவர்கள் தாயகப்பாடலை பாடுவதிலும் தாயகப்பாடலுக்கு நடனம் ஆடுவதிலும் தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார். அத்தோடு அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்மொழியை கற்றுவந்த இவர் தாயகம் சமூகம் சார்ந்த கவிதைகளையும் எழுதிவந்தார் இத்தோடு தமிழ் இளையோர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து தமிழ் இனத்திற்காக பணியாற்றி வந்தார்.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=3ls-QOxP2vo 2006 ஆம் ஆண்டு ஒஸ்லோ மாநகரத்தேர்தலுக்காக தொழிவாளர் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு நேர்ர்வே தமிழர் ஒருங்கிணைப்புப் குழுவின் ஆதரவோடு ஒஸ்லோ தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு 2200 வாக்குகளோடு நாற்பத்தி நா…

    • 5 replies
    • 557 views
  2. சிறிலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் 5 மூதூர் பொதுமக்கள் பலி திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியுள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த குண்டுவீச்சில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். -புதினம்

  3. கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வெலி ஓயாவிற்கு இடையில் இயக்கப்படும் பயணிகள் பேரூந்துகளை கிளேமோர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.7k views
  4. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப…

  5. பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை குற்றம் சாட்ட முடியாது.! முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளை அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22) மதியம் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் , உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பந்தம…

    • 5 replies
    • 1.2k views
  6. "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது. சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் …

  7. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளார் - சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். எனினும், குறித்த கோரிக்கையை அமிதாப் பச்சன் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், எதிர்வரும் 20ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பல தமிழக புலி ஆதரவாளர்கள் அமிதாப் பச்சனிடம் கோரிக்கை…

  8. சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக…

  9. படுகாயமடைந்த முன்னாள் எம்.பியான பியசேன சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பொதுமயானத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலநறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்துடன் மோதுண்டதனாலேயே இந்த இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடை…

  10. In April 2009, we travelled together as foreign ministers to Sri Lanka, as 25 years of fighting between the Sri Lankan government and the Tamil Tigers neared its end. The remaining fighters were trapped in the northern most part of the country — along with large numbers of civilians. U.N. estimates put the numbers of civilians there in the last few months of the war at over 300,000. http://www.nytimes.com/2011/06/21/opinion/21iht-edmiliband21.html?_r=2&ref=global

    • 5 replies
    • 1.1k views
  11. இந்து ஆலயங்களில் சேர்த்துவைக்கப்படும் பணத்தின் ஒருபகுதியை அந்தந்தப் பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று -1 கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (19) தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் இந்து விவகார அலுவல்களுக்கு பொறுப்பானவரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது பற்றி எம்.பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கையில், கடந்த …

  12. சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா? என்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. அரசியலமைப்பு சபையில் சம்பந்தன், சுமந்திரன் – ராதிகாவுக்கும் வாய்ப்பு?SEP 10, 2015 | 1:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு…

  14. வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப்போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும்இ கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்; அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று 57 -1 வது படைப்பிரிவைச்சேர்ந்த ; நான்காவது சிங்கப் படையணி வன்னேரிக்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளைத் தாக்கியது. சிறியரக ஆயுதங்களைக் கொண்டே இந்ததாக்குதல் நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 600 மீற்றர் பிரதேசத்துக்குள் படையினர் முன்னேறினர். லெப்டினன்ட்கள் மங்கல ராஜித மற்றும் சமந்த திராணகம ஆகியோர் படையினரின…

    • 5 replies
    • 3.2k views
  15. ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது வீரகேசரி நாளேடு 10/16/2008 8:46:16 AM - ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு …

  16. சிறுவர்களை படையில் சேர்க்கும் அரசுகளுக்கான அமெரிக்க இராணுவ உதவிகளை நிறுத்துவதற்கான சட்டமூலத்தினை அமெரிக்க காங்கிரஸ் நடைமுறைப்படுத்தவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  17. இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள். இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ”தேச எல்லைகள் என்பவை சர்வதேசப்…

  18. ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்- பிரிட்டனின் சன் November 11, 2020 ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும் நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது ,சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது. மொ…

  19. 'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் : 9 வருடங்களின் பின் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள் எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்…

  20. கைது வேட்டை தொடர்ந்தால்... பெரும் போராட்டம், வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழ…

  21. கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின்…

  22. அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு AUG 25, 2019 | 3:47by கி.தவசீலன்in செய்திகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம். தேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்க…

    • 5 replies
    • 683 views
  23. கொழும்பில் உகண்டா ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012 10:01 0 COMMENTS உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார். நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர். உகண்டா ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். htt…

  24. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாரிய பிரச்சினைகள் உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்து விடலாம் என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளமொன்றில் இயங்கி வரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால், அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ள…

  25. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நவநீதம்பிள்ளையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக சந்திக்க மாட்டாரென்றும் தொலைபேசியிலேயே உரையாடுவார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்நிலையிர் இவ்விருவருக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/local.php?vid=6766

    • 5 replies
    • 610 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.