ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை தமக்கு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில், கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது நல்லதென்றும் இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இராணுவத் த…
-
- 5 replies
- 1.1k views
-
-
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை பயணம் ஏப்ரல் 27 அன்று சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஒரு மாத காலமாக நாம் தமிழர் கட்சியானது பல பகுதிகளிலும் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறது. இப்பரப்புரை பயணத்தில் தமிழர் ஒற்றுமை, ஈழ விடுதலை, தமிழக உரிமை, தமிழ் நாட்டை தமிழர்களே அள வேண்டியதன் தேவை, உள்ளூர் பிரச்சினைகள் முதல் ஐ.நா. தீர்மானம் வரை பல விடுதலைக் கருத்துக்கள் பேச்சாளர்கள் மூலமும், துண்டறிக்கை, குறுவட்டு மூலமும் பரப்புரை செய்யப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று புதுவையில் மாலை 5 மணிக்கு தலைமை அஞ்சல் நிலையம் அருகிலிருந்து பரப்புரை பயணம் புறப்பட்டது. நிகழ்வுத் துக்கத்தில் கட்சித் தோழர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டவுடன் தோழர் தாஸ் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்த, தலைமை நிலையப்…
-
- 5 replies
- 703 views
-
-
யாழ்தேவி ரயில் தடம் புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் விரைவில் குறித்த ரயில் தடங்களில் சேவை இடம்பெறும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/யாழ்தேவி-ரயில்-தடம்-புரள/
-
- 5 replies
- 1.5k views
-
-
இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார். ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து தனது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் உரிய சட்டங்களை பயன்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிற்கும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். உடல்நிலை கா…
-
- 5 replies
- 648 views
-
-
இன்றுமுதல் தொலைக்காட்சியை நேரடியாக பார்க்கலாம் windowsmedia player அல்லது VLC Media player ல் பார்வையிடலாம் பார்ப்பதற்கு http://tamilntt.com/
-
- 5 replies
- 3.3k views
- 1 follower
-
-
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜாங்க சமுதாயத்துக்கு இலங்கை அரசாங்கம் இன்று விளக்கமளித்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் தற்போது நிலவும் பரந்துபட்ட பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் அமைச்சின் செயலாளர் திலக் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55052-2012-12-18-16-09-19.html
-
- 5 replies
- 740 views
-
-
வாக்குறுதிகளை மீறும் வகையில் இலங்கை தொடர்ந்து செயற்பட்டு வருவதால், அந்நாட்டிற்கு சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=16982
-
- 5 replies
- 924 views
-
-
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் "பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களுக்கு பேரிழப்பு" என புலிகளின் அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது குற்றஞ் சுமத்திய சர்வதேசம், தற்போது வைத்தியர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் என்ன கூறப் போகின்றது? என்று... இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு யுத்தத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின்போது பொது மக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது என பாதுகாப்பு வலயத்தில் இருந்த வைத்தியர்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதனால் பல அசெளகரியங்கள் ஏற்பட்டன.…
-
- 5 replies
- 776 views
-
-
பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! - ஆனந்தசங்கரி கூறுகிறார் [Friday 2017-04-28 19:00] தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி சிவராமின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இனிவரும் தேர்தல்களின் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடும். தமிழர்களின் ஒற்றுமைக்காக செயற்பட வே…
-
- 5 replies
- 527 views
-
-
இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதேவேளை மருந்து உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசியப்பொருட்களிற்கு மோசமான பற்றாக்குறை நிலவுவதை முடிவ…
-
- 5 replies
- 470 views
-
-
மேய்ச்சல் தரையை மீட்க போராடும் தமிழ் பண்ணையாளர்கள்: தொடரும் போராட்டங்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்…
-
- 5 replies
- 544 views
- 1 follower
-
-
இன்று காலை கெப்படிகொல்லாவையில் அமுக்க வெடியிற் சிக்கி இராணுவத்தினர் பயணித்த பாரவூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் இரு இராணுவத்தினன் பலியானதுடன் மேலும் மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானா
-
- 5 replies
- 2.4k views
-
-
தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது வாழ்த்து தெரிவித்து இக் கருத்தினை முன்வைத்தார். மேலும் தெரிவிக்கையில்.. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலே வெற்றிபெற்ற அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாகவும் ,வடகிழக்கு வா…
-
- 5 replies
- 753 views
-
-
வரலாற்றில் வடக்கு எதிர்கொள்ளாத பேரவலத்தை எதிர்கொள்ளும் வன்னி மக்கள்: மணலாறில் நிலைகொண்டுள்ள படையினர் மேற்கொண்டு வரும் தொடர் எறிகணை வீச்சினால் குமுழமுனை கிராம மக்கள் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயரும் அப்பகுதி மக்கள் தற்போது முள்ளியவளை, முல்லைத்தீவு சிலாவத்தை, வற்றாப்பளைப், பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குமுழமுனை மகாவித்தியாலயம் தற்போது நீராவிப்பிட்டி கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரம், விசுவமடு, கண்டாவளை, புளியம்பொக்கணை, உடையார்கட்டு முதலான பகுதிகள் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் வீதியோரங்களிலும், வயல்வெளிகளிலும், மரங்களின் கீழு…
-
- 5 replies
- 1.6k views
-
-
அபிவிருத்திக் குழுவினை கூட்டுவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும்- இரா.துரைரெட்னம் 38 Views மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டுவதன் மூலமே தீர்க்கமுடியும் என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம், “கொரேனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு சுகாதார திணைக்…
-
- 5 replies
- 583 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்- யாழ்ப்பாணத்தின்;. வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் முதல் கட்டமாக ஏழு கிராமசேவகர் பிரிவுகளில் இன்று காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் சுவரொட்டிகள் கிராம சேவையாளர்களினால் ஒட்டப்பட்டது. முன்னதாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்ட பாதுகாப்பு தரப்பு வெளியார் எவரையும் உட்…
-
- 5 replies
- 599 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் கலாநிதி பட்டங்களை வழங்க கொழும்பு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்ததற்காக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது. மகிந்தவுக்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டமும் கோத்தபாயவுக்கு கல்வியலில் சார்ந்த கலாநிதி பட்டமும் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உயர்கல்விமான்களுக்கான பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. புதினம்
-
- 5 replies
- 899 views
-
-
இலங்கையில்... அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு, தமிழ் மக்களின் சம்மதமும் வேண்டும்- உருத்திரகுமாரன் இலங்கையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் சம்மதமும் பெறப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்லாது நிலத்தை அண்டிய கடலிலும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்ற கருத்தமர்வுகளில் “இலங்கை தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’ தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்” என்ற தொனிப்பொருளில் கருத்தாய்வு இடம்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கெடுத்திருந்த இந்தக் கருத்த…
-
- 5 replies
- 508 views
-
-
”இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது” - ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையை இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (21) மாலை கையளித்திருந்தனர். மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையானக குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்…
-
- 5 replies
- 368 views
- 1 follower
-
-
காணாமற்போனோர் செயலகம் வன்னியிலும் அமையவேண்டும் சபையில் நேற்று சம்பந்தன் கோரிக்கை காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் காலதாமதமாக அமைக்கப்பட்டாலும் அதன் செயற்பாடுகளை அரசு துரி தப்படுத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். அத்துடன், காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட்டாலும் வடக்கிலுள்ளவர்கள் முறைப்பாடுகளைச் செய்ய வன்னியிலும் ஓர் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் ந…
-
- 5 replies
- 674 views
-
-
சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம்: - கமலேஷ் சர்மா [Monday, 2013-11-04 22:26:53] மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா கூறுயுள்ளார். அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்றும் கூறியுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்றும் பி பி சிக்கு வழங்கிங செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். நன்றி - செய்தியிணையம்
-
- 5 replies
- 1k views
-
-
திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் http://www.newstamilnet.c…
-
- 5 replies
- 2.3k views
-
-
இன்றைய முடியடிப்புச் சமரில் 5 போராளிகள் வீரச்சாவு 12 போராளிகள் காயம். இன்று மாவிலாற்றைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் 12 போராளிகள் காயமடைதுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 16வது அமர்வில் சிறிலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (28.02.11) உரையாற்றியுள்ளார். ஜெனீவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றது. இந் நிலையில், இலங்கையின் தற்போதைய மனிதவுரிமை நிலைமைகள், வடக்குக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் தென்னிலங்கையின் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் இவ்வமர்வில் உரையாற்றியுள்ளார். 186 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த அமர்வில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனும் கலந்துக் கொண்டிருப்பமதக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 5 replies
- 962 views
-
-
புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் - 25 மே 2011 பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்:- புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் என பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பாகத் தொடர்ந்தும் கூறுகையில், யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்ஸிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டம் நடைபெறு முன்பாக டக்ளஸினால் ஒரு கவுன்ஸில் கூட்டம் நடாத்தப்படு…
-
- 5 replies
- 990 views
-