ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
பிரதமர் பதவிக்கு என் பெயர் வராவிட்டால் பிறகு தெரியும்; மிரட்டுகிறார் மகிந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னுடைய பெயரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முன்மொழியாவிட்டால் அது குறித்து தான் அன்றைய தினம் பார்த்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலமா மாளிகையில் இன்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அதன்பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். அதன்போது மகிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிரு…
-
- 5 replies
- 419 views
-
-
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்ப்பு வெளியானது இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன மொன்றினை ஆரம்பிக்க ஓமான் நாடு $3.85 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது என்ற செய்தி நேற்று முன்தினம் வெளியாகி, கொழும்பு பரபரப்பாகியது. ஆனால் அது தவறான செய்தி, ஓமானுக்கும் அந்த விசயத்துக்கும் தொடர்பு இல்லை என்று, ஓமான் மறுத்தது. இன்று இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்து அனுமதிக்கும் board of investment இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ரகசியமாக இருக்கும் இந்த விபரங்களை ஓமான் தொடர்பான விடயங்கள் தவறாக பொது வெளியில் சொல்லப் பட்டுள்ளதால், இதனை வெளியிட்டு உள்ளது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கபூரினை சேர்ந்த Silver …
-
- 5 replies
- 1.1k views
-
-
நயினாதீவை நாகதீப எனப் பெயர் மாற்றி வரலாற்றை திரிபுடுத்தும் செயற்பாடு இடம்பெறுகின்றது. இந்த செயல் கண்டனத்துக்கும் கவலைக்கும் உரியதாகும். எனவே நாகதீப என மாற்றப்பட்ட பெயரை மீணடும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். - இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியிருக்கின்றது. வட மாகாண சபையின் நேற்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீப வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீப தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமான…
-
- 5 replies
- 803 views
-
-
மக்கள் தொடர்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளருமான மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் களனி பிரேசத்தின் பழைய கண்டி வீதியில் அந்தக் கட்சியின் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. ஜிமல்கா, ஆன் ஆகியோருக்குச் சொந்தமான வீடே தற்போது ஶ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமாக உருமாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் செயற்பட்டு வந்தனர். இவர்களது தந்தை 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய இளைஞர், யுவதிகள் பலரை களனி பிரதேசத்தில் கொலை செய்த சம்பவத்துடனும் தொடர்புபட்டிருந்தார். ''ஜிமல்கா மற்றும் ஆன்'' ஆகிய இருவரும் கடந்த காலத்தில் குறித்த வீட்டை விலைமாதர் விடுதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.…
-
- 5 replies
- 1.6k views
-
-
[size=4]இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் நோக்கம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் வாயை இறுக மூடிக் கொண்டு மௌனம் காப்பதாக பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பு சென்றடைந்த சிவ்சங்கர் மேனன் இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது இளைய சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்திக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.[/size] [si…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் வீட்டு பங்கருக்குள் வீழ்ந்த சிங்களப் பெண் சாவு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை குறித்த பெண் பார்வையிடச் சென்றுள்ளார். இதன் போது அவரது வீட்டைப் பார்வையிடும்போது அங்கிருந்த பங்கர் ஒன்றினுள் தவறி விழுந்துள்ளார். இதன் காரணமாகத் தலையில் கடுமையான க…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதா? போர்க்கொடி தூக்கும் ‘சிங்ஹலே’ அமைப்பு Bharati கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு மற்றும் உபாய மார்க்க ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று ‘சிங்ஹலே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார். “சிங்ஹலே” அமைப்பால் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் …
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்த போர் இடை நிறுத்தம் என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டுதான் இருகிறார்கள். இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதிலும் இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மக்களை கொண்டுபோய் ராணுவ முகாம்களில் அடிப்பதற்காகவே இதை சொல்கிறார்கள் http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார். மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் …
-
- 5 replies
- 1k views
-
-
17/04/2009, 21:34 [] ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது. ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் …
-
- 5 replies
- 1.4k views
-
-
நேசக்கரம் மீது மீண்டும் சைபர் தாக்குதல். -------------------------------------------------------------------------------------------------------- இவ்வருடம் தைமாதம் நேசக்கரம் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. மீளவும் தளத்தினை ஒழுங்கமைத்து மீள் வடிவமைக்க ஒருவாரத்திற்கு மேலாகியது. 11.06.2013 அன்று மீண்டும் நேசக்கரம் இணையம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. நேசக்கரத்தோடு இணைந்திருக்கும் கருணாயாளர்கள், ஆதரவாளர்கள் , வாசகர்கள் அனைவருக்குமாக இச்செய்தியை அறியத்தருகிறோம். மீளவும் எமது தளம் ஒழுங்கமைக்கும் வரை பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம். Shanthy - Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh ஓரடி முன்னேறினால…
-
- 5 replies
- 812 views
-
-
"செய்ட் அல் ஹுசைன் இராஜதந்திர விபச்சாரி" விமல் (ஆர்.யசி) இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செ யிட் அல் ஹுசைனுக்கு எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவை திருப்திப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் அமர்த்தப்பட்டுள்ள இராஜதந்திர விபச்சாரியே அவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். காணமால் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியல் அமைப்பும் தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள். சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டார். …
-
- 5 replies
- 558 views
-
-
தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம் நாராயணன் ‘டில்லி மூவர் அணி’ புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் கயல்விழி சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்கு…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ இலங்கை அரசிற்கு 2ஆவது எதிரியாகவும் உலகநாடுகளின் உளவுப் பிரிவுகளின் பார்வையில் முக்கியமானவராகவும் உலாவிவந்த கேபி தற்போது வடகிழக்கு மக்களுக்கு சேவையாற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரமுகராக முகம் காட்டத் தொடங்கியுள்ளார் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கண்டறிந்துள்ளார். தற்போது அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்னும் புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றார். இலங்கை அரசாங்கத்திடம் அது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் யாழ்ப்பாணத்தில் வங்கிக்கணக்கை கொண்ட அமைப்பாக…
-
- 5 replies
- 1.3k views
-
-
செம்மணி பகுதியில் 5 நாட்களில் 6 தமிழர்களை காணவில்லை யாழ். செம்மணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை முதல் 5 நாட்களில் 6 பேரை காணவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையே நுழைவு வாயிலாக செம்மணி உள்ளது. கந்தர்மடத்தைச் சேர்ந்த சகோதரர்களான மோகனதாஸ் கண்ணதாஸ் (வயது 29) மற்றும் ராஜாஜி தவராஜ் (வயது 28) ஆகியோர் தென்மராட்சி செல்லும் வழியில் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்மணியின் மேற்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் 51-4 ஆம் படையணி உள்ளது. அரியாலை தெற்கு மற்றும் கிளாலிப் பிரதேசங்களில் முன்னரங்க நிலைகளில் சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆம் படையணி இயங்கி வர…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல இணப்பிரச்சினை தற்போது இதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன . ஆயுத மோதல்களில் தமிழர்களோ சிங்களர்களோ ஈடுபடவில்லை எனவே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவுகின்றது என்பது தவறான கருத்தாகும் எனவே இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் முடிவு காண எத்தனிக்கின்றது . எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண எத்தனிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச தெரிவித்துள்ளார் . தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய விஜயம் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த்தார். இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை தமிழ் மக்கள் கோரி வருவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறையில் அதனை அடைவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வருவதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில்…
-
- 5 replies
- 615 views
-
-
புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்! (2ஆம் இணைப்பு) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த! புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை த…
-
- 5 replies
- 886 views
-
-
நல்லூரில் இன்று மீன் மழை! [Thursday 2015-05-14 19:00] நல்லூர் பகுதியில் இன்று காலை பெய்த மழையுடன் மீன்கள் பல விழுந்துள்ளன. கடந்த சில நாள்களாக குடாநாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இன்று காலை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதி - பருத்தித்துறை வீதியில் பெய்த மழையுடன் பல மீன்களும் விழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மழையுடன் விழுந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றனர். கடந்த பருவமழை காலத்தின் போது வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=132079&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 2.5k views
-
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவத் தலைவிகளை பாடசாலை நேரத்தில் அழைத்தெடுத்த வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மிரட்டியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதன் பின்னணியை அறியவே அவர் மாணவத் தலைவிகளை மிரட்டியதாகவும் ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றங்களை வழங்கியதோடு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளான நல்லூர் கோட்டக் கல்வி அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தியதுடன் இந்துக் கல்லூரியில் இயங்கிய கோட்டக் கல்வி அலுவலகத்தையும் அகற்றச் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து …
-
- 5 replies
- 763 views
-
-
சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்துள. அவர் இறப்பதற்கு முன்னர் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம் என, அவரது மகள் குறிப்பிட்டுள்ளார். 2018ஆம…
-
-
- 5 replies
- 820 views
-
-
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199138
-
-
- 5 replies
- 292 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் காணாமல் போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த வருடம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தைச் சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கை தொடர்பான கடிதம் ஜெனீவாவிலுள்ள சிறிலங்கா பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்தாக தெரிகிறது. சிறிலங்காவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த விடயம் குறித்து சிறில…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் 'கொலைக்களங்களில்' கட்டப்படும் 'மனதிற்கு மகிழ்வைத் தராத' சுற்றுலா விடுதி தொடர்பில் மனித உரிமைக் குழு ஒன்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சிறிலங்காவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் நீரேரியில் 2009ல் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படைகள் தமது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா கருதும் அதே இடத்தில் தற்போது சிறிலங்க இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் விடுமுறை விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு விடுதி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலராலும் திறந்து வைக்கப்பட்டது. "உங்களது விடுமுறையை மனதிற்கு இதமாக களியுங்கள். நந்திக்க…
-
- 5 replies
- 528 views
-
-
நீரில் மூழ்கி காணால்போன 2 வயது குழந்தை உட்பட மூவர் பலி! முல்லைத்தீவு - வவுனிக்குள குளக்கட்டில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குள குளக்கட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்து மூழ்கியுள்ளது. இதன்போது கெப் வாகனத்தின் சாரதியான 38 வயதுடைய நபரும் , இரண்டு வயதுடைய பெண்பிள்ளை ஒன்றும் 12 வயதுடைய ஆண்பிள்ளை ஒன்றும் நீரிழல் மூழ்கி காணால்போயிருந்தனர். முன்னதாக சிறுவன் மீட்கப்பட்ட நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தான். அதன் பின்னர் சாரதியையும், …
-
- 5 replies
- 960 views
- 1 follower
-
-
கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும். குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்! விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை …
-
- 5 replies
- 949 views
-