Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் - அரசாங்கம் இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம் இருந்துள்ளன. அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்களை புலிகளிடம் இருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரத…

  2. ‘எனது தந்தைக்கோ, எனக்கோ... நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை’ – நாமல் அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார்” என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281629

  3. பிரான்சில் செஞ்சோலைச் சிறுவர்களின் படுகொலை நினைவு நாள்

  4. சென்னை: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலை தொடர்பாக, இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர் நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் டக்ளசுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், டக்ளஸ் தேவானந்தா சார்பில் சென்னை…

  5. உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு நேற்று வந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கட்டடத்தைக் கொளுத்தப் போவதாக ஊழியர்களை மிரட்டினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். பணியில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டார். அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த செட்டி என்று அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்கிற பொலிஸ் கொன்ஸ்டபிளே கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2 மணியளவில் உதயன் அலுவலகத்துக்கு வந்த பிரதீபன், கையில் ஒரு "லைற்றரை" வைத்துக் கொண்டு அலுவலகத்தைக் கொளுத்தப்போகிறேன் என்று ஊழியர்களை மிரட்டினார். கடந்த 5ஆம் திகதிய உதயனில் வெளியான "பார்த்தீர்களா கேட்டீர்களா" என்ற பத்தியில், மாணவர் ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்த கைச்சங்கிலியை பாடசாலை அதிபர் த…

  6. மயில்களைக் கொல்ல இலங்கை உத்தரவிட்டது ஏன்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர். செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணி…

  7. அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? வெளியானது அதிரடித் தகவல்! Gokulan சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. இலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக க…

  8. ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் ஆகியோரை யுத்தக் குற்றவாளிகளாக அறிவித்தது மலேசிய நீதிமன்றம்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஈராக் யுத்த விடயத்திலேயே இவர்கள் குற்றவாளிகள் என மலேசியாவின் நீதிபதி‍கள் குழு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றில் ஆரம்பமான விசாரணைகளில் ஜோர்ஜ் புஷ் மற்றும் டொனி பிளேயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை மலேசிய ஓய்வுபெற்ற பிராந்திய நீதிமன்ற நீதிபதி அப்துல் காதிர் சுலைமான் அடங்கிய 7 நீதிபதிகள் முன்னெடு…

    • 4 replies
    • 1.2k views
  9. எம்.எப்.எம்.பஸீர்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை ந…

  10. அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக இம்மாத இறுதியில் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா, சிறிலங்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்காக, அமெரிக்க இராஜ…

    • 4 replies
    • 976 views
  11. ஈஸ்டர் அறிக்கை விவகாரம்;ஜனாதிபதி அதிரடி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் முறையான விசாரணையை ஆரம்பித்த பின்னர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் இரகசியமானவை அல்ல எனவும் அவர் கூறினார். கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அ…

  12. சிறிலங்காவின் போர்குற்றங்களை செய்திப்படமாக்கிய நிருபருக்கு விருது! By naatham On 29 Mar, 2012 At 12:54 PM | இலங்கைக்குச் சென்று சிறிலங்காவின் போர்குற்றங்களை பதிவு செய்து செய்திப்படமாக்கிய இந்தியாவின் headline today தொலைக்காட்சி நிருபர் பிரியம்வதா பஞ்சாபிகேசன் அவர்களுக்கு விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை;கு சென்று இரகசியாகச் சென்று கள நிலைவரங்களை பதிவு செய்து செய்திப்படமாக வெளியிட்டிருந்தவர். குறித்த இந்தச் செய்திப்படம் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படியொரு துணிச்சலான செய்திப்படத்தை எடுத்த பிரியம்வதாவிற்கு டெல்லியில் சிறந்த புலனாய்வு பெண் நிருபர் என்ற மதிப்பு மிக்க தேசிய விருதை செய்தி தொலைக்க…

    • 4 replies
    • 922 views
  13. கடற்புலிகளின் படகு தாக்குதலுக்கு உள்ளானது 3/25/2008 12:48:21 PM வீரகேசரி இணையம் - கடற்புலிகளுக்கும்,கடற்படையி

    • 4 replies
    • 3.9k views
  14. [size=4]அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]ரொபேட் ஓ பிளேக்குடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இந்த உயர்மட்டக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலேயே இந்த அவசரப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]இலங்கைக்கு வருகை தரவுள்ள இக்குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட பலர…

    • 4 replies
    • 892 views
  15. மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:40 மு.ப ஈழம்] [பி.கெளரி] மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 11 படையினர் கொல்லப்பட்டும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இம…

    • 4 replies
    • 2.1k views
  16. அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன் அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்காற்றப்படும் சேவை துரிதமாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் நிலவி வருகின்ற தேசிய பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண முடியும் என இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார். இன்று சம்பூரில் இடம்பெற்ற கிழக்கு மாகாண விவசாய கண்காட்சி மற்றும் பொருட்கள் விற்பனை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இக்கருத்தினைக் கூறினார். Share T…

  17. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அ…

  18. சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாது­காப்புச் செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தார். இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள பாதுகாப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­த…

    • 4 replies
    • 445 views
  19.  ‘இலங்கைக்கு உதவ மோடி யார்?’ “சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது மாநிலமாக நினைத்துக்கொண்டே நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்” என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிற்றக்கோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். “மேல் மற்றும் தெற்கு மகாணங்களில் மாத்திரம் நடைமுறையில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்…

  20. ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்! இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே …

  21. இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம்: சிறீலங்கா திகதி: 04.01.2010 // தமிழீழம் யுத்த காலததில் இந்தியாவுடனான உறவுகளை தந்திரோபாயமான முறையில் முன்னெடுத்த காரணத்தினால் அழுத்தங்களிலிருந்து மீள முடிந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தங்களை விடவும், இந்தியாவினால் யுத்தம் தொடர்பாக பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மிகவும் அதிகம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், சூட்சுசமான முறையில் முறையில் இந்தியாவுடனான உறவுகளை இராஜதந்திர ரீதியில் அணுகியதனால் சிக்கல்கள் இன்றி யுத்தத்தை முன்னெடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பதக்கம் அணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்…

  22. த.தே.கூ இனை தடை செய்தால் நாம் எதிர்ப்போம்: ஜே வீ பி உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய பாதுகாப்புச் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அதனையும் மீறிச் செய்தால் மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும் இவ்வாறு எச்சரித்திருக்கிறார் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அப்படியான ஒருநிலை ஏற்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராகப் போராடும். இனி நாடு பிளவுபடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட எமக்கு எவ்வித தடைகளும் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு அதில் தலையி…

  23. யாழ்ப்பாண மாநகரில் ஐ.பி.சி தமிழின் அறப்பணி! தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழால் மாதந்தோறும் முன்னெடுக்கப்படும் சமூக சேவைச் செயற்றிட்டமான உயிர்ச்சுவடு அறப்பணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்ச்சுவடின் இம்மாதத்திற்கான அறப்பணியாக யாழ் மாநகரத்தைச் சுத்தமாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரான கந்தையா பாஸ்கரன் குடும்பத்தினர் உட்பட தாயக கலையகப் பணியாளர்கள், யாழ் மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பணியாளர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள், யாழ்ப்பாணம் ரொட்றிக் தாய்க் கழகத்தின் ஐந்து ரொட்ரக் க…

  24. மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு! Posted by: Mathi Updated: Friday, January 9, 2015, 12:00 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பத…

  25. ஏட்டிக்குப் போட்டியான இராணுவ அணுகுமுறை கவலை தருகிறது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளது ஏட்டிக்குப்போட்டியான இராணுவ ரீதியான அணுகுமுறை பெரும் கவலையளிக்கின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ ரீதியான வெற்றிகள் ஒரு போதும் உதவப் போவதில்லையென இணைத்தலைமை நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் பலாலி இராணுவ தளம்மீது மேற்கொண்ட விமானத்தாக்குதல். வடபகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கைக்கு இராணுவம் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கருத்துத்தெரிவித்த இணைத்தலமை நாடொன்றின் தூதரக உயர் அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.