Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கு…

  2. இன்று தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது. தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது. பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக…

  3. 35 வருடங்கள்... இனிய, இல்லற வாழ்க்கை வாழ்ந்த சுவி... தம்பதியினரை வாழ்த்துகின்றோம். 💐

  4. யாழெனும் இந்த இணையப் பூங்காவில் யாம் மகிழ வந்த வண்ண மலர்களாய் வண்ணச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளாய்.. என் மிருதுவான அன்பினை.. சிதறடிக்கா.. சிறகடிக்கும் குருவிகளாய்.. களங்கமற்ற உள்ளங்களாய் வாழும்.. யாழின் நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும்.. நட்பின் நாள் வாழ்த்துக்கள்..! (எல்லோருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்து உரித்தாகட்டும்.) என்றும் எல்லோரோடும் நட்புடன்... நெடுக்ஸ்..!

  5. காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் றோயல் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். முக்கியாமாக றோயல் பமிலி மெம்பேர்ஸ் சாஸ்த்- முனிஸ் சின்னப்பு - சின்னாச்சி கந்தப்பர் - குஞ்சாச்சி தூயவன் - சா இந்த வருசமாவது வாழ்த்து சொல்லாலாம் எண்டு பார்த்தால் மிஸ்ஸாயிடிச்சே... உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  6. திருமண வாழ்த்துக்கள்!! எல்லாருக்கும் வணக்கம்..(என்னடா உந்த பக்கம் வாறானே என்று பார்க்கிறது விளங்குது )...எல்லாம் நல்ல விசயமா தான் பாருங்கோ...(நம்ம யாழ்கள மெம்பர்ஸ் மரி பண்ண போகீனமாம் பாருங்கோ )..அவைக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தனான் பாருங்கோ.. ம்ம்..யாரவை என்று நீங்க யோசிக்கிறது விளங்குது ஆனா நான் சொல்லமாட்டேன் பாருங்கோ..(நீங்களா கண்டுபிடியுங்கோ அது உங்க கெட்டிதனம்).. ம்ம்..அவர்களின் திருமணம் வரும் மாதம் 5 திகதி நிச்சயிக்கபட்டுள்ளது அவர்களுக்கு ஜம்மு பேபியின் வாழ்த்துக்கள்..(பதினாறும் பெறாமல் கொஞ்சத்தோட நிற்பாட்டி பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கிறேன் )... ம்ம்..நீங்க யோசிக்கிறது விளங்குது சரி சின்ன குளு தாரேன் என்ன..(அவை இரண்டு …

    • 37 replies
    • 7.2k views
  7. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

  8. கள உறவு உடையாரின் மகன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்தக் குழந்தையை நேசக்கரம் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உடையாரின் மகனின் பிறந்தநாளை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் தனது மகனின் பிறந்தநாளில் ஒரு குடும்பத்திற்கு சுயதொழிலொன்றிற்கு விளக்கேற்றி தங்கள் உதவியை வழங்கியிருக்கிறார்கள். உடையாரின் உதவியைப் பெற்றுள்ள குடும்பம் ஒரு ஊனமுற்ற முன்னாள் போராளியும் அவனது நோயுற்ற மனைவியும் 3 குழந்தைகளும். சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வா…

  9. இது வெறும் கொண்டாட்டமல்ல. எங்கள் தலைவர் எம்முடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.அதற்கு எல்லோரது வாழ்த்துக்களும் அவசியம் தமிழீழத் தேசியத்தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை புலிகளின் குரலுக்கு அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் முகவரி info@pulikalinkural.com

  10. தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!

  11. கலாநிதி பட்டம் பெற்ற டாகடர் யாழ்கவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....மேலும்மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்

  12. இன்று தந்தையர் தினம் கொண்டாடும் அனைத்து தந்தையர்களுக்கும் ஜம்மு பேபியின் தந்தையர் தின வாழ்த்துகள்..................ஜம்மு பேபியின் தந்தைக்கும் பேபி நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது..................... அத்தோடு யாழ்களத்தில் தந்தையர் தினத்தை கொண்டாடும்............. *சின்னா தாத்தா *கு.சா தாத்தா *தயா அண்ணா *ஈழபிரியன் பெரியப்பா *சுவி பெரியப்பா *கந்தப்பு தாத்தா *புத்து மாமா *கெளரிபாலன் அண்ணா :P *சகிவன் தாத்தா *டங்கு அண்ணா ;) *சுண்டல் அண்ணா :P *மோகண் அண்ணா *நாரதர் அங்கிள் *சாத்திரி மாமா *மதனராசாமாமா :P மற்றும் பெயர் குறிப்பிடாத (பிறகு அவை கோவிகிறதில்லை பேபிக்கு கை நோகுது அது தான் எழுதவில்லை) யாழ்கள தந்தையர்களுக்கும் அத்துடன் எ…

    • 25 replies
    • 7k views
  13. காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்... காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு.. நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம். கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிக…

  14. பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர்களுக்கு Society of Biology தனது புத்தாண்டு வாழ்த்து மடலை... அனுப்பி வருகிறது. அந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர் என்ற வகையில் எனக்கும் அது வந்தது. அதில் எனக்குப் பிடித்த விடயம்.. வாழ்த்து மடலோடு வந்த செய்தி தான்.. புத்தாண்டில் நீங்களும் அந்தச் செய்தியை செயற்படுத்தினால்.. உங்களுக்கும்.. உங்களின் எதிர்கால சந்ததிக்கும்.. இந்தப் பூமிக்கும் நற்பயன் விளையும். அனைவருக்கும்.. இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..! ****

  15. ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

  16. மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள். பசுவின் பயன் என்ன? பால் தரும். பாலிலிருந்து நெய் தரும். உழவனுக்கு உரம் தரும். .

  17. 15.000 பதிவுகளைத் தாண்டும் விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் யாழ் களத்திற்கு இருக்கும் பண்பும் சிறப்பும் நோக்கமும் போல விசுகு அண்ணாவிற்கும் இலட்சியமும் கொள்கைப்பிடிப்பும் ஈழப்பற்றும் இருப்பது என்றும் அவர் எழுதும் கருத்துக்களில் தெரியும். களத்திற்கு நாள்தோரும் வருகை தந்து உறவுகளைத் தட்டிக் கொடுத்தும் தட்டிக் கேட்டும் களத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கும் உறவுகளில் விசுகு அண்ணாவும் ஒருவர். மேலும் பல ஆயிரம் பதிவுகளை இட்டுக் களத்தில் சிறப்புடன் வலம் வர வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

  18. யாழ்கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் வாழ்த்துக்கள்.

  19. முப்பது ஆண்டுகள் திருமண வாழ்வை நிறைவுடன் கடந்துவந்த நீலப்பறவையையும் அவரது மனைவியையும் இன்னும் பல ஆண்டுகள் இனிதாய் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்.

    • 35 replies
    • 6.2k views
  20. அது ஒரு தனி உலகம், அங்கு வேறு யாருக்கும் இடமில்லை, ஒருவரை தவிர, அவர் ஜீவ நதி பிரவாகமாய் ஆழ் மனதில் ஊற்றெடுப்பவர், உயிரின் மொழிக்கு ஒலி கொடுப்பவர், பிரபஞ்ச வெளியில் இருப்பை இல்லதொழிப்பவர், உதட்டோரம் சிறு புன்னகை பூக்க செய்பவர், சில பொழுதில் சிலிர்ப்பை கொடுப்பவர், உள்ளங்களில் அமைதியை தருபவர், தியானங்களின் சக்தியை கொடுப்பவர், அந்த உலகம் அவ்வளது பிரம்மியங்கள் நிறைந்தது, எல்லா உணர்வுகளையும் கொடுக்க கூடியது. வாழ்தலை வளப்படுத்துவது... அந்த உலகம் இயங்கி கொண்டே இருக்கும், உங்களுக்கும், எனக்கும் பின்னால்.... அது ஒரு போதும் அதன் ரம்மியத்தை இழப்பதில்லை பிரசாத் ஸ்டுடியோ உலகின் உன்னத ஆலயம் உயிர்களை அங்கிருந்து தான் வசியப்படுத்த தொடங்குகிறான் இசை கடவுள் வாழ்க தேவனே நீ பல்லாண்டு …

    • 16 replies
    • 5.9k views
  21. என்னுடன் ஒருமாத இடைவெளியில் இணைந்த இருவரில் ஒருவரான எனது அருமை நண்பர் புங்கையூரான் ஐயாயிரம் பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றார் . பல சுயபடைப்புகளைக் காத்திரமான கவிதைகளாலும் , கதைகளாலும் கருத்துக்களத்தை அலங்கரித்த இவரை வாழ்த்தி ஊக்கிவிப்பதில் தப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . புங்கையூரான் தொடர்ந்தும் பல சுயபடைப்புகளை வெளியிட்டு மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகின்றேன் . நேசமுடன் கோமகன்

    • 93 replies
    • 5.8k views
  22. தாயகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் எம் தேசியத் தொலைக்காட்சி 3வது அகவையில் எதிர்வரும் 29ம் திகதி காலடி எடுத்து வைக்கின்றது. மிகவும் சொற்ப வசதிகளைக் கொண்டு, பல்வேறு தடைகள், சிரமங்கள் மத்தியிலும் தாயகத்து செய்திகளை பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் எடுத்துச் சொல்லி எம் விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் தேசியத் தொலைக்காட்சியினை வாழ்த்துகின்றோம்

  23. கள சகோதர சகோதரிகளுக்கும் தாத்தாமார் பாட்டிமார் எல்லோருக்கும் எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.