Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ்ப்பாண முறையில் செய்யும் மென்மையான கோதுமை மா றொட்டி செய்முறை யாராவது தருவீர்களா??

    • 29 replies
    • 11.6k views
  2. Started by Mathan,

    தேவையான பொருட்கள் சிவப்பு பச்சை அரிசி 400g பாசிப்பருப்பு 100g சக்கரை 500g நெய் 100g திராட்சை 15g முந்திரி 15g ஏலக்காய் 10g செய்முறை தீட்டிய சிவப்பு பச்சை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து நன்று வேக வைக்க வேண்டும். தூள் செய்த சக்கரையை பாதி டம்ளர் தண்ணீர் வைத்து பாகு எடுக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய பாகை வேக வைத்த அரிசியில் ஊற்றி கிளறி விடவும். முந்திரி திராட்சையை நெய்யில் நன்று வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி விடவும். நிரு பொங்கல் புதினத்தில் இருந்த செய்முறை விளக்கம்

  3. இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்வி கேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும். பொன்னாங்காணி என பெயர் வர காரணம் என்ன? "பொன் ஆம் காண் நீ" என்பது மருவி தான் பொன்னாங்காணி ஆகிவிட்டதாம். இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் வருமாம். அது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் சுவை அதிகம் தான். இந்த கீரைல சுவையை தவிர என்ன பயன்கள் என பார்த்தால்: கண்ணிற்கு நல்லது, பசியை தூண்டும், மலச்சிக்கலை போக்கு…

    • 29 replies
    • 8.4k views
  4. சுடச்சுட சுட்டது இது ஒருவகை சுவை ஆச்சியின் கைப்பக்குவம் கையிலே தெரிகிறது எச்சில் ஊறி செல்கிறது

  5. [size=5]தேவையான பொருட்கள்:[/size] [size=5]நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று சிறிய வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி - சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் - சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு மிளகு - சிறிதளவு வெந்தயம் - சிதளவு தேங்காய் - பாதி எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:[/size] [size=5]1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். அவற்றை சிறிது மஞ்சள் த…

    • 29 replies
    • 5.1k views
  6. நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போ…

    • 29 replies
    • 4.6k views
  7. பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்) என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர் தீபக் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். சமையலில் என் ஆர்வம் பார்த்து, கேரள சமையல் குறிப்புகள் பலவற்றை தந்துள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை முயற்சித்து பார்த்து வருகின்றேன். (இந்த மாதம், கேரளா உணவு மாதம்) அதில் முதல் முயற்சி தான் இந்த கேரள மீன் குழம்பு. எங்களுடைய மீன் குழம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சுவை கொ…

    • 28 replies
    • 8.8k views
  8. ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com] என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல் களத்தில் முன்பு சமையல் குறிப்புகள் கொடுப்பதற்கு ரசிகை ,தூயா இருந்தார்கள் ஆனால் ஆட்களை காணவில்லை அதனால் நான் இணைத்துள்ளேன் எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ கு.சா ஆமை வடையை கொண்டு வந்து போட்டுத்து போயிட்டார் அது முட்டையா விட்டு கொண்டு இருக்கிறது வெ‌ண்டை‌க்கா‌ய் பகோடா செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது. ஆனா‌ல் ஒரு முறை ரு‌சி‌த்து‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்‌வீ‌ர்க‌ள். அத‌ற்கான கு‌றி‌ப்பு இதோ. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்…

  9. இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை…

  10. மட்டன் ரசம். தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்ட…

  11. மொருமொரு வாழைப்பழம் மொருமொரு வாழைப்பழம் தேவையான பொருட்கள் :- வாழைப்பழம் 6 முட்டை 1 உலர்ந்த ரொட்டித் தூள் 1 கப் நெய் 1/2 கப் சர்க்கரைத் தூள் 1 மேஜைக் கரண்டி செய்முறை 1. வாழைப்பழத்தை நான்காக வெட்டிக் கொள்ளவும். 2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும். 3. அடித்த முட்டையில் வாழைப்பழத்தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும். 4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 5. சூடாக பரிமாறவும்.

    • 28 replies
    • 5.2k views
  12. கத்தரிக்காய் வெங்காய சம்பல்.

  13. யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

    • 27 replies
    • 3.5k views
  14. வித்தியாசமான மீன் பொரியல் நேற்று மனிசிக்கு சுகமில்லை, வேலைக்கும் ஆள் போகவில்லை. நான் அலுவலகத்தால வந்து பார்த்தா பூனை மாதிரி சுருண்டு படுத்திருந்தாள். எனக்கு வேற நல்ல பசி. இண்டைக்கு கிச்சன் டிபாட்மன்ட் என்ட கையில தான் எண்ட வெறியுடன் பிரிஜை கிண்டினேன். இலகுவாக அம்பிட்டது கீழே உள்ள விஷயம். Dori மீன் fillets உடனேயே மீன் பொரியல் செய்வது என முடிவு செய்தேன். தேவையான பொருட்கள் டோரி மீன் fillets - 1kg முட்டை - 3 தேசிக்காய் - 2 உப்பு, மிளகு, தூள், மஞ்சள் தூள், bread crumbs (இதுக்கு என்ன தான் தமிழ்) , கோதுமை மா, பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை சுடு நீரில் மீனை நன்கு கழுவவும். (மீன் fillets என்பதால் முள்ளு, தோல் ஒன்றுமே இருக்காது இலக…

  15. பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது: 3 முட்டை 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தே.க மிளகுத்தூள் 1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது உப்பு தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை] செய்ய வேண்டியது: 1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே ச…

    • 27 replies
    • 5.6k views
  16. சிக்கன் - 65 தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் இஞ்சி - 25 கிராம் பூண்டு -4 பல் மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்- தேவையான அளவு. மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி மசாலா பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு (மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்). செய்முறை: 1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும். 3. மிளகுத்தூள், மிளகாய்த்…

  17. Started by இலக்கியன்,

    1- சுண்டு சோளம் மா 2- சுண்டு தண்ணீர் 1 or (3/4)- சுண்டு சீனி 6- மேசைக்கரண்டி நெய் தேவையான அளவு மஞ்சள் கலர்ப்பொடி தேவையான அளவு ஏலக்காய்ப்பொடி தேவையான அளவு மஞ்சள் முந்திரிகைவத்தல் தேவையான அளவு சிறிதாக்கப்பட்ட கசு நெய்யில் பொரித்தது ஒரு சுண்டு சோளன் மாவை இரண்டு சுண்டு தண்ணீரில் நன்றாகக்கலக்கி ஒரு மணித்தியாலம் ஊறவிடவும் பின் ஒரு சுண்டு சீனியை நெய்யினில் இட்டு பொன்நிறமாகும் வரை வறுக்கவும் அதன் பின் மாவில் இட்ட தண்ணீரை முதலில் வறுக்கப்படும் சீனியுள் ஊற்றி நன்றாக கரையும்வரை கலக்கவும். பின் சோளன் மாவை கரைத்து அதனுள் உற்றி நன்றாக கிண்டவும் உறுண்டு திரண்டு வரும்வரை கிண்டவும் பின் கசு, முந்திரிகை வத்தல் எலக்காய்ப் பொடி போடவும். நன்றாக கிண்டியபின் தட்டில் கொ…

  18. :P :P :P :P :P :P :P பனங்கிழங்கு சாப்பிடும் முறை எப்படி என்று தெரியவில்லை சொல்லங்கோ பாப்பம் தம்பி டே எங்கயப்பு நிக்கிறாய் கொக்காள் தேடுறாள் காலமை புல்லா பனங்கிழங்கை அவிச்சு வைச்சிட்டு எப்பிடி சாப்பிடுறது எண்டு தெரியாமல் அலையிறாள் வந்து சொல்லிக்குடப்பு :P :P :P :P :P :P

  19. Started by P.S.பிரபா,

    Salmon and broccolini சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு. தேவையான பொருட்கள் Salmon மீன் - ஒரு சிறிய துண்டு Broccolini - ஒரு கட்டு Thickened cream - 300ml மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்.. பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் …

  20. வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம், அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும் நீங்க இதுல சொல்ல முடியும், வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்

    • 26 replies
    • 3.4k views
  21. Started by ரதி,

    இங்கு யாழில் அநேகமானோர் மரக்கறி சாப்பிடும் சைவக்காராக உள்ளீர்கள்...ஏன் அசைவத்தை தவித்தீர்கள் எனத் தெரியவில்லை சில நேரம் கோழிக் கடையில வேலை செய்து அசைவத்தின் மீது வெறுப்பு வந்து விட்டதோ தெரியவில்லை...இந்த சாதம் நான் மரக்கறி சாப்பிடும் நாட்களில் செய்கிறனான்...தனிய இருப்பவர்கள் அல்லது அவசரமாக சமையல் செய்ய இருப்பவர்கள் விரும்பினால் செய்து பார்க்கலாம் சத்தானதும்,சுவையானதும் ஆகும் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். செய்யத் தேவையான பொருட்கள்; பாசுமதி அரிசி கொஞ்சம்[அதிக அரிசி போட்டால் அதிக சாதம் வந்து விடும் ஆகவே அளவாகப் போடுங்கள் மைசூர் பருப்பு அரிசிக்கு ஏற்றளவு புரோசின் மரக்கறி கோளி புளவர்,புரோக்களி,ஸ்பினாச் விரும்பினால் கரட் மஞ்சள் சிறிதளவு உப்பு தேவையான அளவு …

    • 26 replies
    • 6.4k views
  22. ஹக்கா மஸ்ரூம் எப்போதும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் காளானைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து சுவையுங்கள். இந்த டிஷ்ஷின் பெயர் ஹக்கா மஸ்ரூம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் (நறுக்கியது) வெங்காயத்தாள் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 2 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந…

  23. நேற்று மார்க்கம் & டெனிசன் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் ஆட்டுக்குடலை பார்த்தவுடன் ஆசையில் வாங்கி கொண்டு வந்து விட்டேன். இப்ப அதை எப்படி கழுவுவது, சமைப்பது என்று தெரியவில்லை. ஆருக்கும் தெரிந்தால் உடனடியாக சொல்லவும்..

  24. இது எங்கள் அண்டை நாடான இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம். மஞ்சள் சாதமும், அசைவ கறி என்றால் நிச்சயம் இது இருக்கும் என்றே சொல்லலாம் என நினைக்கின்றேன். காரணம் இதன் சுவை தான். பல தடவை இதை சாப்பிட்ட அனுபவத்தில் தான் சொல்கின்றேன். சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை அமைத்துள்ளேன். விருந்தாளிகளுக்கு சமைக்கும் போது இது நிச்சயம் ஒரு சுவையான பதார்த்தமாக இருக்கும். தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் வினிகர் 2 மே.க அரைத்த கடுகு 2 தே.க அரைத்த மிளகு 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிப்பதற்கு எண்ணெய் செய்முறை: 1. கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 2. சட்டியில் எண…

    • 25 replies
    • 8.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.