Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரு விதவையின் வெறி ஒரு அழகான கிராமம். நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள், மான்கள். இயற்கையின் அழகை இரசித்தவாறே, சுதந்திரமாக, மிக்க வளத்துடன் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கிராமத்துக்கும் அயல் கிராமத்துக்கும் இடையே உள்ள நீரோடை சம்பந்தமாக, இரண்டு கிராம மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இத் தகராற்றைத் தீர்த்;;து வைப்பதாக, வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவன் முன் வந்தான். ஏதோ பிரச்சினை தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தில், ஒப்புக்காக இரண்டு கிராம மக்களும் உடன்பட்டனர். ஒரு நாள் அதிகாரி, தன் உதவியாளர்கள் சகிதம் நீரோடைப் பக்கம் வந்தான். அங்கே, அந்த அழகான கிராமம் கண்ணுக்குத் தெரிய, அதற்குள் …

    • 3 replies
    • 24.5k views
  2. ஊஞ்சல் தேநீர் யுகபாரதி புதிய தொடர் ஆரம்பம் - 1 ‘தயாராயிருங்கள் காம்ரேட். நாளையோ, நாளை மறுநாளோ புரட்சி வந்துவிடும். கவலைகள் மடியப் போகின்றன. இழிவுகளும் கேடுகளும் தங்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு கிளம்பக் காத்திருக்கின்றன. காலம் நம்மை நோக்கி வருகிறது. கவனமாயிருங்கள்’ என யாரோ சில பேர், லட்சிய விதைகளை நமக்குள் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் தான், ஓரளவாவது உயிர்ப்போடு இருக்கும் இன்றைய வாழ்வை சூனியம் கவ்வாதிருக்கிறது. சொந்த நலனை விட்டொழித்து தம்முடைய அந்திமக் காலம் வரை உழைக்கும் அந்த ஒரு சிலரே வரலாறுகளையும் உருவாக்குகிறார்கள். ஆனாலும், உலக வரலாறுகள் முழுக்க தவறாகவே எழுதப்படு…

      • Thanks
    • 75 replies
    • 23.1k views
  3. முன்னுரை ....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல. ..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை. சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு) இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெர…

    • 72 replies
    • 22.9k views
  4. இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:- முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். முன்னுரை நான் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் 2006ம் ஆண்டு காயமடைந்து இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளி. எனது வயது25. 2009யுத்தம் முடிந்து நான் சரணடைந்து பல இன்னல்கள் நடுவில் இன்று உயிர்வாழ்கிறேன். தடுப்பிலிருந்து வெளி வந்த பின்னர் நான் தனிமைக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது பல நிஐங்களின் நினைவுகள் என்னுள் நிழலாடி என்னைத் துயரங்களால் சுற்றிக் கொண்டது. என்னை நான் அழிக்கும் நிலையிலும் இருந்தேன். எனக்காக அக்கறைப்பட்டு எனது சோகங்களைக் கேட்க யாருமில்லாத அந்த நாட்க…

  5. வணக்கம் அனைவருக்கும் மீண்டும் ஒரு தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நெடுக அவலம் எழுதி அடிவாங்கிய காயத்தை இடைக்கிடை இப்படியும் ஏதாவது எழுதிஆற்றி கொள்ளுறன். இதுவும் எனது வழைமைபோல உண்மை சம்பவமே. எனது நண்பனாகிய கதையின் நாயகனும் யாழின் ஒரு உறுப்பினரே எனவே அவனது சம்மதத்துடன் எனது வழைமையான கற்பனை கலந்து ஊத்துறன் எல்லாரும் வாங்கி பருகுங்கோ அதோடை உங்கள் கருத்துக்களையும் கட்டாயம் வையுங்கோ . இந்த கதையை கதையின் நாயகனே சொல்வது போல நகர்த்தி செல்கிறென். இதில் வருகின்ற பெயர்கள் யாவும் கற்பனையே . சரி கதைக்கு போகலாம். ஒரு மணம் பலமனம் அனைவருக்கும் வணக்கம் நான்தான் இந்த கதையின் நாயகன். எனது கதையை கவனமாக கேளுங்கள் கேட்டு விட்டு நான் செய்தவை நான் எடுத்த முடி…

    • 151 replies
    • 22.7k views
  6. அன்பார்ந்த யாழ்கள உறவுகளே! ஒரு பேப்பரில் தொடராக வெளிவரத் தொடங்கியிருக்கின்ற எனது இந்த பதிவை (ஒரு வகையில் இதுவும் ஒரு வித அனுபவப் பதிவுதான்) யாழ்கள நண்பர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுமாறும் வேண்டிக்கொள்கிறேன். சாய்ந்த கோபுரங்கள் சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்த…

  7. . யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3 கிரீங்..... கிரீங்...... கிரீங்....... வேலைக்கு செல்ல வைத்த அலார்ம் அடித்ததில்...... சினத்துடன் போர்வையை விலத்திக் கொண்டு வெளியே..... வந்தார் விசைக்கலைஞன். நேரே.... குளிர் சாதனப் பெட்டிக்கு சென்று பாலை ஒரு கப்பில் ஊத்தி...... மிக்ரோ ஓவனுக்குள் வைத்து விட்டு.... பல்லு விளக்கவில்லையே...... என்று யோசித்தவருக்கு..... பாலை குடிச்சிட்டு பல்லை விளக்கினாலும், பல்லை விளக்கி விட்டு பாலை குடிச்சாலும்...... ஒன்று தானே.... என்னும் தத்துவம் ஞாபகம் வந்து கை கொடுத்தது. பழையராஜாவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு, பல்லு விளக்கிவிட்டு.... நேரத்தை பார்த்த விசை..... பத்து நிமிசம் யாழ் களத்தை பார்ப்போ…

  8. பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை சிறுகதை: சுகா, ஓவியங்கள்: செந்தில் பரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது. `‘யார் வீ…

    • 1 reply
    • 20.3k views
  9. காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் புதிய தொடர் -யுவகிருஷ்ணா அடியென்றால் அடி. சரியான அடி. தன்னை ஏன் அந்த போலீஸ்காரன் அப்படி அறைந்தான் என்று அடிவாங்கியவனுக்குத் தெரியவில்லை. ‘என்ன சார், திடீர்னு தெரு முழுக்க போலீஸ்?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டிருந்தான். அதற்கு இப்படியா அடிப்பது? வாசலில் நின்று தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கண்கள் இருள கன்னத்தை தடவிக்கொண்டு, அவசரமாக வீட்டுக்குள் போய் கதவைத் தாழிட்டான். மெதிலின் நகருடைய முக்கியமான சாலை அது. தனித்தனி பங்களாக்களாக பெரிய வீடுகள். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரம். நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் என்பதால் மரபும், நவீனமும் கலந்த கவர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது மெதிலின். சுற்றிலும் ஒன்பது…

  10. இது முற்று முழுதாக ஒரு அரசியல் தொடர் அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்-1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந…

  11. நீராலானது உலகு! கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி…

    • 52 replies
    • 19.7k views
  12. Started by jkpadalai,

    ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்று…

  13. மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலை…

  14. பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு க்ருஷாங்கினி நூல் வரலாறு உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது. இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது கி.பி. முன்றாவது நூற்றாண்டில் நூல் வடிவத்தில் இந்தியாவில் இருந்தது என்கிறார். என்றாலும்…

  15. பாம்பின் கை பாம்பறியும்! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்) இளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள். கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன. அனுபவங்களின் ஆரம்பப் படிகளில் நின்று கொண்டு, எதையும் எப்படியாவது செய்து விடத் துடிக்கும் துறுதுறுப்பு நிறைந்த அந்தக் காலம்தான் மனித வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை முதல் அத்தியாயமாக நம் ஒவ்வொருவரினதும் சரித்திர நூலில் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றது. எத்தனையோ விதமான அனுபவங்கள், இன்பங்கள், துன்பங்கள், மன உளைச்சல்கள், சந்திப்புக்கள், இனிமைகள், கவலைகள்! கொஞ்சக் காலமே இருக்கும் அந்தப் பருவம் மாறி, இல் வாழ்க்கை என்…

  16. காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது. ”சாமி கைரேகை பார்க்கறீங்க?” கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம். “அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை” “சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி” “ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்” “என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி” “ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி …

    • 2 replies
    • 18.8k views
  17. வணக்கம் வாசகர்களே!!!!! கள உறவுகளே !!!! மீண்டும் " தென்கிழக்குச் சீமையிலே " என்ற ஒரு வரலாற்று தொடர் கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . அண்மையில் நீண்ட காலங்களின் பின்பு பிரான்ஸ்சின் தென் கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மறைற்ரும் மானிலத்தின் தலைநகராம் நீஸ் மாநகரிற்கு குடும்பமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன் . அங்கு நான் கண்ட கேட்ட வரலாற்றுக் கதைகளையும் , நகைச்சுவையான சந்திப்புகளையும் இருவேறு பாணிகளில் பதிகின்றேன் . உங்கள் ஆதரவை நாடும் ................ நேசமுடன் கோமகன் *************************************************************************** நீசில் இருந்து கடந்த பலமாதங்களாக வந்த பலத்த நெருக்குவாரங்களினால் நானும் மனைவியும் நீஸ் புறப்படத் தேவ…

  18. வணக்கம் உறவுகளே! "விழுதல் என்பது" என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை நாளை பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப்படும். திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாகிறது. நாளை பகுதி ஒன்று இங்கு பிரசுரிக்கப்படும். யாழ் இணையமும் இதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒளி,ஒலிப் பேழையை என்னால் இங்கு போடா முடியவில்லை. யாராவது விடயம் தெரிந்தவர்கள் உதவ முன்வந்தால் அதனை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.

  19. தேவதைகளின் தீட்டுத்துணி காணிக்கை மலரின்ர புருசன்காரன் விட்டுட்டு போய் மூன்றாவது வருசம் பிறந்தவனான றொக்கட் அல்லது போர்ப்புலி என அழைக்கப்படுகின்ற கிறிஸ்துதாசன் ஒரு சிகப்பு கலர் லேலன்ட் பஸ்சில வந்து செட்டிகுளம் முகாமில இறங்கி வரிசையில போய் ஒரு சோத்துப்பாசல் வாங்கி ஒதுக்குப்புறமாக மர நிழலொன்று பார்த்துக் குந்தி சோத்துப் பாசலை விரிச்சு கழுவாத கையை வைக்கிறதோட இந்தக் கதைக்குள்ள என்ரராகிறான். நாலைந்து நாளாக அன்னந் தண்ணியை கண்டிராத பொடியன் அவக் அவக்கென்டு குனிந்த தலை நிமிராமல் பூசணிக்காயயும் சோத்தயும் திண்டு முடிச்சிட்டு அரை வயிறு கால்வயிற்றோட நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சத் தூரம் தள்ளி ஒரு வாகனத்தைச் சுற்றி சனம் நின்று முண்டியடிக்குது. இவன்ர மூளைக்குள்ள மின்னல் வெட்டி மறையு…

  20. Started by nedukkalapoovan,

    வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…

  21. ........................................................................ குறுந்தொடர். முற்குறிப்பு. ...இந்தத் தொடரின் தலைப்பை படிக்கிறவர்களிற்கும். அதன் சம்பவங்களை படிக்கிறவர்களிற்கும்.அவரவர் மனதில் பலவித உணர்ச்சிகள் தோன்றலாம். தொடரின் தலைப்பை படித்தவர்களிற்கு நான் எழுத்துப் பிழை விட்தைப்போல தோன்றலாம். அல்லது வேண்டுமென்றே நக்கலாக எழுதியது போல தோன்றலாம்.அல்லது ஏதாவது அர்த்தம் இருக்குமென்றும் தோன்றலாம்.. தொடரும் சம்பவங்கள் பலரும் சந்தித்த அனுபவித்து வாழ்ந்த அனுபவங்களே. கதையில் நான் சொல்லும் அனுபவங்களை அனுபவித்தவர்கள். நினைவுளை மீட்டிப்பார்பார்கள். அதனை பகிர்ந்தும் கொள்வார்கள்.சிலர் எரிச்சலடைந்து திட்டுவார்கள்.சிலர் கேள்விகள் கேட்பார்கள்.சிலர் எங்கே பிழ…

  22. சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ? இனிய வணக்கங்கள், வாழ்க்கையில நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது, ஒவ்வொருவிதமான அவலங்களை சந்திக்கவேண்டி இருக்கிது. நீங்கள் உங்கட தனிப்பட்ட வாழ்க்கையிலபட்ட ஒரு பெரும் அவலத்தை நான் சிலவேளைகளில அனுபவிச்சு இருக்கமாட்டன். இதைமாதிரி நான் சந்திச்ச ஒருபெரும் அவலத்தை நீங்கள் சந்திச்சு இருக்கமாட்டீங்கள். நான் இஞ்ச உண்மைக்கதையாக சொல்லப்போறது எனது தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட ஓர் நெருக்கடிபற்றிய சில எண்ணப்பகிர்வுகள். பலவிதமான பயனுள்ள தகவல்களை மற்ற ஆக்களுக்கு சொல்லலாம் எண்டுற காரணத்தாலையும், தாயக மக்கள் படுகின்ற சில கஸ்டங்களை இந்தக்கதைமூலம் சிறிது கற்பனை செய…

  23. இலவ(ஈழ)ம் காத்தவர்கள் சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என…

  24. மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர். அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர். அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிர…

    • 25 replies
    • 17k views
  25. வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை. பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம். இங்கே ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.