கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
சரியா எட்டு மணிக்கு ஸ்கூல் கேற்றில் நின்றேன். கேற் பூட்டி இருந்தது. கொஞ்ச நேரம் கேற்றுக்கு வெளியே வெயிட் பண்ணினேன். வோர்ச்மன் வந்தான்.. ஏன் லேட்.... இன்றைக்கு அசம்பிளி எல்லோ. வெள்ளன வர வேணும் என்று தெரியாதா என்றான். கடவுளே இன்றைக்கு அசம்பிளியா. வழமையா அது வெள்ளிக்கிழமையில தானே வரும்... இன்றைக்கு என்ன திங்கட்கிழமை வைக்கிறாங்க. கந்தசாமி வாத்தி பிரம்போட அலையப் போகுதே. தொலைஞ்சேண்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. எனக்கு இன்றைக்கு அசம்பிளி என்று தெரியாது.. போன வெள்ளி நான் ஸ்கூலுக்கு வரல்ல என்று ஒரு பொய்யைப் போட.. சரி கெதியா போ.. அசம்பிளி தொடங்கிட்டு என்றான். கேற்றை வெற்றிகரமாக தாண்டி அசம்பிளி கோலுக்குள் நுழைய முற்பட்ட எனக்கு.. மாணவ முதல்வர்கள் இருவர் …
-
- 10 replies
- 2k views
-
-
ஒரு நிமிடக் கதை: மன்னிப்பு “இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன். ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவற…
-
- 0 replies
- 2k views
-
-
ரெயில் நிலையம் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த தருணத்தில் இருந்து மற்றவர்கள் எல்லாம் இறந்தவர்களாகவே அவனிற்குப் பட்டனர். பிரேதப் பெட்டிகளில் இருந்து மக்கள் வெளிக்கிளம்பி நடந்து திரிவதாக அவனிற்குத் தோன்றியது. தன்னைப் பற்றிய சிந்தனைகள் அறவே அவன் மனதில் இறந்துபோயிருந்தன. எவரது அங்கீகாரமும் எந்த விதத்திலும் அவனிற்குத் தேவைப்படவில்லை. கடிகாரம் நேரம் முதலிய கோட்பாடுகள் அவனுள் மறக்கப்பட்டிருந்தன. அவனது மனம் திட்டமிடுவதை அறவே கை விட்டிருந்தது. வேலை, வருமானம், செலவுகள் போன்ற சின்ன விடயங்கள் மிகச் சின்ன விடயங்களாகிப் பின் அறவே தொலைந்து போயிருந்தன. புகையிர நிலையத்திற்குள் பேய்களாகத் தெரிந்தவர்களோடு முட்டிமோதி விலகி தண்டவாளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். …
-
- 14 replies
- 2k views
-
-
இனிய நினைவுகளின் வாசம். நன்றி - தமிழமுதம் - http://tamilamutham.net/amutham/index.php?...id=245&Itemid=1
-
- 5 replies
- 2k views
-
-
இது கதை போல் நிஜம்.....(1) ---------------------------------------------- (எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்) "அண்ணே.. மாமா நாளைக்கு எயாப்போட்டுக்கு வாறார் என்ர நிலமை தெரியும்தானே போய்க் கூப்பிட ஏலாது ஒருக்கா நீங்கள் போய் கூட்டிக் கொண்டு வாறீங்களா டீசல் காசு தாறன்" என்று கேட்ட எங்கள் பக்கத்து வீட்டுக்காற சகோதரியிடம். "இல்லையம்மா நீங்கள் காசு தரவேண்டாம் உங்கட நிலமை எனக்குத் தெரியும் தானே.. போய்க் கூட்டிக்கொண்டு வாறன் விபரங்கள மட்டும் தாங்கோ" என்றேன். ஒரு தாளில எல்லா விபரத்தையும் எழுதித் தந்த அவரிடம்... "மாமாவின்ர படம் ஒண்டு தந்தா ஆளக் கண்டுபிடிக்க சுகமாக இருக்கும்" என்றேன். "அவற்ர போட்டோ ஒண்டும் இல்ல அண்ணே... ஆள் சரியான கறுப்பு…
-
- 9 replies
- 2k views
-
-
தலைக்கடன் - இமையம் ஓவியங்கள் : மணிவண்ணன் மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா. “புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள். காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை மறைப்பதற்காக அங்குமிங்கும் பார்த்தாள். அப்போதும் அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. …
-
- 1 reply
- 2k views
-
-
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ….. ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் பு…
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனா…
-
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
என்றும் உன் அன்புக்காய்.... சிறு கதை.... படுக்கையில் இருந்து விழித்த பார்வதிக்கு இன்றும் பொழுது வழமைபோல் விடிந்தது. ஜன்னல் திரையை திறக்க வெளியே ஒரே பனிமூட்டமாய் தெரிய அந்தப் பனிப்புகாரில் தெரு விளக்குகள் மங்கலாகத்தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளின் அறையோ யாழ்ப்பாண வெய்யில் போல் தக தகவென கொதித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஞாபகம் வரவே, இரண்டாம் கட்ட ஈழப்போரில் சிக்கி கணவரை இழந்த பின் தனது மூத்த மகள் மாலதியையும் கடைக்குட்டி கணேசையும் தூக்கிக்கொண்டு விமானக் குண்டுவீச்சுக்கும் செல் அடிக்குமாக பயந்து இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து குண்டுவீச்சில் தானும் தன் மகனுமாய் காயமும் பட்டதை நினைத்துக்கொண்டாள். தன் காயத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் மகன் கணேஸ் காயம் பட்டு…
-
- 9 replies
- 2k views
-
-
வணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே! எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி! நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்ப…
-
- 5 replies
- 2k views
-
-
அட்வைஸ் நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது.நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை... அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே, பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண…
-
- 4 replies
- 2k views
-
-
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார். என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்? "ஓ...அது வந்தண்ணை, இன்னைக்கும் வழமையான நேரத்திற்கு தான் எழும்பினேன். திடீரென என்ர அம்மாவின் நின…
-
- 9 replies
- 2k views
-
-
கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ... யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் ! அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்ப…
-
- 0 replies
- 2k views
-
-
அனிதாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 10.30 மணி "ஏண்டா டல்லா இருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டான். மத்தியானம் போன் பண்ணலைன்னு கோவமான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லேன்னு விரக்தியா சொன்னான். "வண்டியில வர்றப்ப கூட எப்பவும் அவன் தோள் மேல கைய போட்டுக்கிட்டு வருவேன். தோள்ல கைய போடலைன்னா வண்டியை நிறுத்திட்டு, என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டா தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்னு அடம் புடிப்பான். இன்னைக்கு என்னவோ 'தேமே'ன்னு இருந்தான். நான் தோள்ல கையைப் போடலைங்கிறதையே ஒரு பொருட்டா அவன் நெனைக்கலை. "வர.. வர... அவன் போக்கே புரிய மாட்டேங்குது. கல்யாணம் ஆனப்ப இருந்தமாதிரி அவன் இப்ப இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு நான் கண்டிஷன் போடறதால அவன் என் மேல க…
-
- 8 replies
- 2k views
-
-
பாம்பு படம் காட்டியக் கதை கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்தகுடிகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு வளமான தேசத்தின் குடிமக்கள் வர்க்க, இன, மொழி, சாதி, மத ஒடுக்குமுறைகளாலும், சுரண்டல்களாலும் பெரும்துயரில் சிக்குண்டு அவதிப்பட்டுக் கிடந்தனர். அவ்வேளையில் ஒரு நச்சுப் பாம்பு குட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு படம் காட்டிக் கொண்டிருந்தது. சோசலிசம்… சுதந்திரம்… விடுதலை…என்று விதவிதமாய் படங்கள் காட்டியது. அந்தப் பாம்பு குட்டியை போனால் போகட்டும் என்று மக்கள் காப்பாற்றினார்கள். ஆனாலும் அந்த பாம்பு குட்டி விடாமல் படம் காட்டிக் கொண்டிருந்தது. வேடிக்கைக் காட்டிலால் கூட்டம் கூடத்தானே செய்யும். அந்த பாம்பு குட்டியை வேடிக்கைப் பார்க்க பெரும்கூட்டம் கூடியது. கும…
-
- 3 replies
- 2k views
-
-
ஜோக் மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள். கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள். மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பா…
-
- 0 replies
- 2k views
-
-
புரிந்தது ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே! அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
வருத்தம் தான் ...இப்ப அதிகம் இங்கு எழுதுவது இல்லை என்றாலும் ..பலர் தமிழில் இணையத்தில் எழுதுவதை அண்ணாந்து பார்த்திருக்கிறேன் ,,பார்த்த என்னை தமிழ் எழுத பழக்கியது இந்த யாழ் தான்.. எங்கோ மூலையில் மூணு பெக் அடித்து விட்டு குப்பனெ கிடந்த என்னை எல்லாம் கூட இணையத்தில் தெரிய உதவியது இந்த யாழ் தான் ... மூட படப்போகுது என்ற சிவப்பு விளக்கை பார்க்க கவலையாக தான் இருக்கிறது ,,நடத்துபவர்களுக்கு என்ன என்ன கஸ்டமோ தெரியாது ..இதை கேட்டவுடன் பார்த்தவுடன் மிகவும் கஸ்டமாகவும் இருக்கிறது. இதில் சண்டை பிடித்து இருப்போம் தமாசாக கதைத்து இருப்போம் இது எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக பதிந்து இருக்கின்றன...நாங்கள் கும்மியடித்த பொற்காலத்தில் இருந்த யாழ் கள நண்பர்களை நினைத்து பார்க்கிறேன் புனை பெய…
-
- 13 replies
- 2k views
-
-
கடுகு கதை - மருமகள் ராசாத்தியம்மா ...... வச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் . தொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் "மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் " . கண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....!!! ராசாத்தி ...ராசாத்தி ....!!! கூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் . கடும் வெய்யில் நடுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....!!! அந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ... உரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்…
-
- 0 replies
- 2k views
-
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12) உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சியங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்…
-
- 6 replies
- 2k views
-
-
ஏ எல் பரீட்சை முடிந்த சந்தோசத்தில்.. இடுப்பில் சுத்திய பட்டு வேட்டியும்.. தோளைச் சுற்றிய பட்டுச் சால்வையுமாக.. நல்லூர் முருக தரிசனம் காண.. ச்சா.. அதுக்கெல்லாமா அங்க போவாங்க.. வண்ண வண்ண காவ் சாறி உடுத்து வரும் இளம் தேவிகள் தரிசனம் காணும் பக்திப் பரவசத்தோடு.. நித்தியன் மயூரனின் வீட்டு வாசலில்.. சைக்கிளில் வந்து பெல்லை அடுத்துக் கொண்டு நின்றான். ஆனால்.. மயூரனோ வருவதாக இல்லை. டேய் மயூரன்.. கெதியா வாடா. ரைம் போகுது. நித்தியா போகப் போறாடா.. என்று கத்தினான். நித்தியாவின் பெயரைக் கேட்டதுமே மயூரன்.. எப்படி வாசலுக்கு வந்தான் என்று தெரியவில்லை ராக்கெட் வேகத்தில் வந்து நின்றான். ஏ எல் பரீட்சைக் காலத்தில் தான்.. நல்லூர் முருகன் திருவிழாவும் வருவதால்.. எப்படா பரீட்சை முடியும்..…
-
- 11 replies
- 2k views
-
-
யார் சொந்தம்? மாசிமாதப் பனிக்குளிரின் பிடியில் சிக்கி ஊரே நடுங்கிக் கொண்டிருக்கிறது. உடம்பை உதற வைக்கின்ற, மூக்கில் நீர் சிந்த வைக்கின்ற, பற்களை ரைப் அடிக்க வைக்கின்ற அந்தக் குளிருக்குள்ளும் எங்கோ ஒரு கோடியிலிருந்து தன்னுடைய 'கடமையைச்' செய்துகொண்டிருந்த சேவலொன்று நான்கு தடவைகள் கூவி ஓய்கின்றது. அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்த தர்சன் பாயிலே ஆங்காங்கே தலைகாட்டியிருக்கின்ற சிலும்பல்கள் மேலும் பெரிதாகிவிடாதவாறு அவதானமாகச் சுருட்டி அசவிலே வைத்துவிட்டு கொல்லைப் புறத்தை நோக்கி நடக்கிறான். முற்றத்திலே தெருநாயொன்று தன்னுடைய உடம்பை வளைத்து கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறது. இந்தப் பனிக்குளிருக்கு நன்றாகக் கம்பளியால் போர்த்துக் கொண்…
-
- 7 replies
- 2k views
-
-
ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன் அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்க…
-
- 11 replies
- 2k views
-
-
அம்மாவின் சின்ன கோபம் ......... அந்த புலம் பெயர் நாட்டின் பாடசாலைகளும் கலாசாலைகளும் ஆரம்பமாக போகும் முதல் வார இறுதி . அன்று ஜமுனன் முதல் தடவையாக கலாசாலை போக போகிறான் ,அவர்களது வீடிலிருந்து மூன்று மணி நேர கார் சவாரியில் செல்ல வேண்டும் ,படுக்கைக்கான ஆயத்தங்கள் ,உடுப்புகள் ,தேவைப்படும் கொப்பி பேனா வகைகள் யாவும் பார்சல் செய்ய பட்டு ,செல்ல்வத்ர்கான வாகனமும் வந்து விட்டது . சென்ற வாரம் முழுக்க அம்மாவின் ,ஆயத்தங்கள் .தங்கை நீலுவும் இனி அண்ணாவின் சண்டை சச்சரவு இல்லை என்றாலும் முதல் தடவையாக தன்னை விட்டு போகிறான் என்ற ஏக்கம் . ஜமுனன் ,நீலு அப்பா அம்மா வான் கார சுப்பண்ணா எல்லோரும் ஏறிக்கொண்டார்கள் / கடவுள் வேண்டுதலுடன் அவர்கள் பயணம் .ஆரம்பமாகியது .ஜமுனன…
-
- 8 replies
- 2k views
-