எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3760 topics in this forum
-
வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படி…
-
- 8 replies
- 2k views
-
-
இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர…
-
- 8 replies
- 6.8k views
-
-
வணக்கம் உறவுகளே 2009 இறுதி யுத்தத்தில் சிங்கள இரணுவத்தினருடன் நடந்த சண்டையின் போது தனது தந்தைய இழந்த சிறுவன்.............எல்லாரும் கை விட்ட நிலையில் உப்பு வித்து தாயை கவணிக்கும் மகன் , தாய் நோயால் அவதி படுகிறா , எமக்காக போராடி உயிர் நீத்த போராளியின் மகன்...........வயது 15 ஜந்து..........சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டி தாயும் மகனும் சாப்பிடாம பட்டினியா இருப்பதாக கனத்த மனதுடன் தாயார் சொல்லுறா...........நேற்று சமைக்க கூட பக்கத்து வீட்டில் தான் கடனுக்கு அரிசி வேண்டி சோறு சாப்பிட்டவையாம்.........காணொளி எடுத்த பெடியன் அக்கம் பக்கத்தில் விசாரிச்சு போட்டுத் தான் 50ஆயிரம் ரூபாய் உதவி செய்து இருந்தார் அந்த உதவிய ச…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்' எல்லா(hello)... வணக்கம் …/\… தோழர்களே! இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள். நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
இது கடைசி யுத்தத்தின் என்னை மட்டுமல்ல எல்லோர் மனதையும் ஈர்த்துக்கொண்டிருகும் பாடல். யூரூப்பில் இருந்து எடுத்து எம்பி3க்கு மாத்தியிருக்கிறேன். இந்தப்பாட்டு இதோ http://www.mediafire.com/?sharekey=3d3dc66...72bd4aad1cf74be
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
கரும்புலிகளை பற்றிய ஆக்கங்கள், பாடல்கள், காணொளிகள், கட்டுரைகள் மற்றும் உங்களது சுய ஆக்கங்களை இப்பகுதியில் இணைக்கவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது.. ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா சென்றது தமிழனின் சாதனை எத்தகையது. அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமய…
-
- 8 replies
- 4k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன். அவர்களின…
-
- 8 replies
- 858 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்… ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம் ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்! காலத் தலைவன் காத்தெமைப் புரந்த கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்! ஞாலத் தெவரும் நாடினா ரில்லை நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்! மூலத் தாயக முள்ளி வாய்க்காலில் முடைநாற் றத்திலே கிடந்தோம்! https://www.ilakku.org/?p=49372
-
- 8 replies
- 789 views
-
-
இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்…
-
- 8 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் எறிகணைத் தாக்குதலில் இன்று 44 பேர் பலி, 178 பேர் காயம் [வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, சங்கதி] இன்று மாணிக்கபுரம், சுதந்திரபுரம், இருட்டுமடு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டும் 178 பேர் காயமடைந்தும் உள்ளனர். சுதந்திரபும் 100 வீட்டுத்திட்டப் பகுதியில் 8 பேர் கொல்லப்பட்டும் சுதந்திரபுரம் அந்தோணியார் கோவில் பகுதியில் 5 பேர் கொல்லபட்டும் வீதியோரங்களில் 13 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர். மற்றும் 18 பேரின் சடலங்கள் மூங்கிலாறு மற்றும் இருட்டுமடு பகுதிகளில் உள்ளன. சங்கதி, http://www.sankathi.com/index.php?mact= … eturnid=51
-
- 8 replies
- 3.7k views
-
-
முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்.. உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?.. உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ... உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்... கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் …
-
- 8 replies
- 868 views
-
-
கருணாவின் அரசியற் கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் கடந்த 20 ஆம் திகதி முற்பகல் திருகோணமலை நகரில் துறைமுக வீதியில் (றேகு வீதி) அமைந்துள்ள 56 ஆவது இலக்க நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மேற்படி த.ம.வி.பு. கட்சியின் திருகோணமலை மாவட்ட அரசியற் பிரிவுத் தலைவர் பிரதீப் மாஸ்ரர் தெரிவிக்கையில், தமது அரசியற் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவிருப்பதாகவும் அவ்வாறு போட்டியிட்டு கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காகப் பாடுபடுவர்…
-
- 8 replies
- 2.3k views
-
-
7 civilians killed, 27 wounded, SLA continues artillery attack on 'saftey zone' [TamilNet, Saturday, 24 January 2009, 14:00 GMT] Sri Lanka Army (SLA) continued artillery shelling on Udaiyaarkaddu on Saturday killing at least 7 civilians. More than 27 civilians have been wounded in the indiscriminate shelling upto 5:25 p.m., according to initial reports. Medical authorities said the hospitals were struggling to cope with a high number of civilian casualties. Further details were not available at the moment. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28133
-
- 8 replies
- 7.7k views
-
-
-
இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இந்துக் கல்லூரியில் சிங்கள பக்க பாடசாலைகளில் இருந்து (பாடசாலைகள் சரியாக நினைவில் இல்லை)துடுப்பாட வருவார்கள்.அதே மாதிரி யாழ் இந்துவும் அவர்களது இடங்களுக்குப் போய் விளையாடுவார்கள்.பலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம்.ஆனால் உண்மை.அந்த நேரம் விளையாட்டுக்களில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். சிங்கள பாடசாலை விளையாட்டு வீரர்களை குமாரசாமி மண்டபத்தில் உள்ள வகுப்பறைகளில் விடுதியில் உள்ள கட்டில்களை போட்டு அங்கே தான் தங்க வைப்பார்கள். அந்த நேரம் குமாரசாமி மண்டப கட்டடம் முழுமையாக நிறைவேறவில்லை.ஒரு சில வகுப்புறைகளும் மேல் மாடி பரீட்சை மண்பமுமாக இருந்தது.அந்த விளையாட்டு வீரர்கள் ஒரு கட்டிலில் இருவராக படுப்பார்கள்.சிலர் ஒ…
-
- 8 replies
- 1.4k views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, அல்லது வீர விளையாட்டு என்று பார்க்கப்படுகின்ற மாட்டுவண்டி சவாரிக்கு மாடுகளை தெரிவு செய்து கொள்வதிலும் யாழ்ப்பாணத்து சமுகத்தினர் கைதேந்தவர்கள். ஒரு காளைமாட்டுக் கன்று பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி சவாரிக்காக தயார் செய்வார்கள் நம்மவர்கள். சாஸ்திர முறைப்படி அந்த கன்றினை வாங்கி தங்கள் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். யாழ்ப்பாணத்தில் சவாரிக்காக விடப்படுகின்ற காளைகளை இனம், நிறம், சுழி என்பவற்றை அடிப்படையாக வைத்து சவாரிக்காரர்கள் பாகுபடுத்துவார்கள். நாட்டான் இனக் காளை, கேப்பை, ஜேசி, சிந்திக்கலப்பை, வடக்கன் எனும் இனக்காளைகள் யாழ்ப்பாண தரவைகளில் இன்று வரைக்கும் ஓடுகின்ற மாடுகள் ஆகும். நாட்டான் இனக் காளைகள் – யாழ்ப்பாணத்…
-
- 8 replies
- 3.8k views
-
-
இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. தமிழாக்கம் ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர், ஏற்பாட்டுக்குழு எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை யாழ்ப்பாணம் 11.01.2012 யாழ்ப்பாணத்திற்கான ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனை…
-
- 8 replies
- 4.8k views
-
-
பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தது. கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம். ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்ந…
-
- 8 replies
- 1.3k views
-
-
PLEASE CLICK OPEN http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth SIGN THE PETITION AND SEND IT ASAP. ALSO PLEASE FORWARD TO ALL YOUR CONTACTS. "IT IS IMPORTANT" WE NEED ONLY 10000 SIGNATURES OUT OF 80 - 90 million thamizhs..
-
- 8 replies
- 818 views
-
-
-
திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம். வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும…
-
- 7 replies
- 1.7k views
-
-
பொழுதுபோகமலிருந்த போது சோபா சக்தி என்பவரின் வலைப்பதிவை பார்த்தேன. அதில யாழ்ப்பாண சமூகத்தியல் நிலவிய சாதி ஒடுக்கு முறைகளைக் கிளறி சாதியடிப்படையில் பிரிவினையை தோற்றுவிக்க முனைவது தெரிகிறது. அது சரி தலித் என்றால் என்ன? யாழ்பாணத்தில் நான் வாழந்த 27வருட காலத்தில் அப்;படியொரு சொலலையே நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் பின்னர் தமிழக மற்றும் இந்திய பத்திரிகைகள் மூலம் இந்தச்சொல்லை அறிந்தேன். சோபா சக்தி என்பவர் எனது அயற்கிராமம் ஒன்றை தலித் கிராமம் என குறிப்பிட்டிருக்கிறார். சாதியால் தாழ்த்தப்பட்ட கிராமம் என அதனை நான் அரத்தங்கொள்ளலாமா? அல்லது தலித் என்ற சொல்லுக்கு வேறு பிரத்தியேகமான அர்த்தம் உள்ளதா?
-
- 7 replies
- 9.1k views
-