அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
மஹிந்த - இந்தியா உறவு: காதலா, வியாபாரமா? எம்.எஸ்.எம். ஐயூப் / இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய அரசாங்கத்துக்கு ஏதாவது பிரச்சினை இருந்திருந்தால், தரகராகப் பாவிக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமியே ஆவார். எனவே, இப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்திய அரசாங்கத்துக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் நட்புத் தேவையாக இருந்தால், மீண்டும் உறவை ஏற்படுத்திக் கொள்ள, சுப்ரமணியன்சுவாமியையே தரகராகப் பாவிப்பதற்கு, பிரதமர் மோடி ஆர்வமாயிருப்பார். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்து, மஹிந்தவுடன் நெர…
-
- 4 replies
- 758 views
-
-
தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்” சி.அ.யோதிலிங்கம் காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களு…
-
- 4 replies
- 613 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்த…
-
-
- 3 replies
- 596 views
-
-
ஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம் 13 Views ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தை மோசமானதொரு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ள நாட்டின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இந்தத் தீர்மானம் அடிகோலியிருப்பதே இதற்கு முக்கிய காரணம். நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜனநாயகம் மற்றும் சர்வதேச மனித உரிமை, அதனுடன் சார்ந்த மனிதாபிமான நியமங்களுக்கு முரணானது. அது மோசமான சர்வாதிகாரப் போக்கைக் கொண்டது என்ற காரணத்தினால், அந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண…
-
- 3 replies
- 638 views
-
-
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி! *** *** *** *மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்... *ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு... ** *** ****** மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது. ”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது. இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதி…
-
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
-
- 3 replies
- 589 views
-
-
கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன் 22 பெப்ரவரி 2014 ராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவரகள் விவகாரம் உலக அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கின்றது. பாரதப் பிரதமராக இருந்து, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தபோது, வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றிருந்த வேளை, தமிழ் நாட்டில் வைத்து ராஜிவ் காந்தி மிகவும் துணிகரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இது ஓர் அரசியல் கொலை. பிராந்திய வல்லரசாகிய இந்தியப் பெருநாட்டின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட இவருடைய கொலை, பிராந்திய சர்வதேச அரசியல் கொலையாகக் கணிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருந்தன…
-
- 3 replies
- 834 views
-
-
Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல, “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”. இதில் இலங்கைதீவில் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size] [size=2][size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர…
-
- 3 replies
- 788 views
-
-
காட்டுமிராண்டிகளின் உலகை தன் மரணத்தால் உணர்த்திய கடாபி.. கேணல் கடாபி 42 வருட சர்வாதிகார ஆட்சியின் வடிவம்.. உலகத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெரும் பணக்கார சர்வாதிகாரி.. உலகத் தலைவர்கள் எல்லாம் மண்டியிட்டு அவருடைய வாசலில் நின்றதை கண்ணாரக் கண்டு மமதை கொண்ட மனித வடிவம்.. பிறந்தநாள் பரிசாக பலர்ஸ்கோனியிடமிருந்து ஐ.சி ரயில்வண்டியையே பரிசாகப் பெற்ற உலகின் ஒரே சர்வாதிகாரி.. இப்படியெல்லாம் இருந்தாலும் அவரின் மறுபக்கமோ கொடுங்கோன்மை நிறைந்தது.. அவர் செய்த அநீதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.. ஆனால் இப்படி ஒரு தண்டனை வழங்கப்படலாமா..? அவர் பிறந்த நகரான சிற்றாவில் அவர் மரணிக்க வைக்கப்பட்ட முறை கடாபியின் தவறுகளை மூடி மறைத்துவிட்டத…
-
- 3 replies
- 1.1k views
-
-
21 JUL, 2024 | 02:09 PM டி.பி.எஸ். ஜெயராஜ் 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன. இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன் என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது. அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அ…
-
-
- 3 replies
- 734 views
- 1 follower
-
-
கசக்கத் தொடங்கியுள்ள காதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் எதுவரை நீடிக்கப் போகின்றன? அரசாங்கத்தின் மீது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் கூறத் தொடங்கியுள்ளது தான் இந்தக் கேள்வி எழுந்துள்ளமைக்கு முக்கியமான காரணம். தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற வகையிலும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளின் அடிப்படையிலும், கூட்டமைப்புக்கு ஏமாற்றமும் கோபமும் இருப்பது நியாயமானது. நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது வெளிப்படையான கோபத்தை அதிகளவில் வெளிப்படுத்…
-
- 3 replies
- 1k views
-
-
http://tamilworldtoday.com/archives/5034 சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடமிருந்து வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கக்கூடும். ஆனால் இரண்டு விடயங்களில் இந்த வாழ்த்துச் செய்தி அசாதாரண நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது. ஒன்று, கொரிய வளைகுடாவின் அதியுச்சப் பதற்றம் காரணமாக தென்கொரியாவுக்கான அவசரப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலும்கூட இலங்கைக்கான செய்தியை ஜோன் கெரி முன்னகர்த்தியமை! இரண்டு, இலங்கைத் தீவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கு இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதான செய்தியும் இலங்கையருக்கான புத்தாண்டு செய்தியுடன் இணைந்தமை! ஆக மொத்தம், இந்து சமூத்தி…
-
- 3 replies
- 871 views
-
-
கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 27 நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. ஜனாதிபதியிடம் இருந்து நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட உத்தரவை அடுத்து, சுனில் ரத்நாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று (26) விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா பீதிக்கு மத்தியில், நாடு கலங்கிப் போயிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்திருக்கிறா…
-
- 3 replies
- 1k views
-
-
யார் யார் இந்த தேர்தலில் வெல்ல வேண்டும்? -தமிழ்க் குரலின் தெரிவு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் யாரை வெல்ல வைக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரையாடல் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் கணிப்புக்களை நிகழ்த்தி வருகின்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களும் வெகுசன மக்களும்கூட தமது விருப்பங்களையும் காணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வெல்ல வைக்கும் போராட்டத்தில் தமிழரின் உரிமைக்குரலாக இயங்கி வரும் தமிழ் குரல், அரசியல்வாதிகளின் அராஜகங்களை இடித்துரைப்பதுடன், அவர்களின் சிறந்த விடயங்களைப் பாராட்டியும் வந்திருக்…
-
- 3 replies
- 790 views
- 1 follower
-
-
[size=6]ரோமாக்கள் - அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு[/size] [size=5]நந்தின் அரங்கன் [/size] அண்மையில் வந்த ஒரு சொல்வனம் இதழில் அ.முத்துலிங்கம் குறித்து வெங்கட் சாமிநாதன் கட்டுரையொன்று எழுதியிருந்தார், “ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்”. அதில் வெங்கட் சாமிநாதன், “தமிழும் அழிந்துதான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ், (மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெல்லாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும்” என்று சொல்லும் இராக்கியை மேற்கோள் காட்டுகிறார் (’சுவருடன் பேசும் மனிதர்’ என்ற அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதை). அ.முத்துலிங்கமோ, வெங்கட் சாமிநாதனோ ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நிலப்பரப்பு இருப்பதென்பது ச…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை - இந்தியா இடையே தரைவழி பாலம் அமைக்கப்பட்டால், இந்திய இராணுவம் ஒரு மணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிக்கும் என அரசியல் ஆய்வாளரும், புலனாய்வு செய்தியாளருமான எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை மீதான சீனாவின் தவிர்க்கமுடியாத காலூன்றலை சமப்படுத்தும் நோக்குடனேயே இந்திய - இலங்கை பால விவகாரம் மோடியினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானதொரு தரைவழி பாலம் அமைக்கப்பட்டால் இந்திய இராணுவம் ஒருமணி நேரத்துக்குள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்யும். எதிர்காலத்தில் சீனா - இந்தியாவுடன் போர்தொடுக்கு…
-
- 3 replies
- 643 views
- 1 follower
-
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் - நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்? - செ.கார்கி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள். இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்க…
-
- 3 replies
- 512 views
-
-
பல்கலைக்கழக மாணவர் புரட்சி: விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும் - பிரம்மாதவன் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத் தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது. ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்கவல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் க…
-
- 3 replies
- 724 views
-
-
-
- 3 replies
- 900 views
-
-
கோட்டாவை விரட்டியது சதியா? விதியா? எம்.எஸ்.எம்.ஐயூப் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. “ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்பதே அதன் பெயராகும். வெளிநாட்டு சதியொன்றின் மூலமே தாம் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டதாக அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சதிக்குத் தலைமை தாங்கிய அந்த வெளிநாட்டுச் சக்தி எது என்பதை அவர் அதில் குறிப்பிடவில்லை. அதேவேளை, தம்மையும் தமது அரசாங்கத்தையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அவர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல…
-
-
- 3 replies
- 761 views
-
-
தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியை கூட்டமைப்பு இழக்கிறதா..? ஜெனீவா போயிருக்கும் வன்னி எம்.பி கனகரத்தினமா ஈழத் தமிழினத்தின் குரல்… தமிழர் கூட்டமைப்பை இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நம்புவதாக தெரியவில்லை என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம். யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சில தினங்களுக்கு முன்பு சம்மந்தரை சந்தித்து கேட்டிருந்தனர். சுய நிர்ணய உரிமையை விடக்கூடாது என்று கூட்டமைப்பு மற்றவர்களை வலியுறுத்தினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பை மற்றவர்கள் வலியுறுத்தினால் அது ஆபத்தானது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை யாழ். ஆயர் போடவில்லை. நேற்று முன்தினம் சம…
-
- 3 replies
- 668 views
-
-
[size=4]சீனாவின் ஆதரவு போன்ற சவால்களின் மத்தியிலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சிறிலங்காவில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவதில் உறுதியாக உள்ளன.” இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளேட்டில் Simon Denyer எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மூன்று பத்தாண்டுகளாக தொடர ப்பட்ட உள்நாட்டுப் போரில், உலகின் மிகப் பெரிய, ஆபத்துமிக்க பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்று தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து சமுத்திரத் தீவான சிறிலங்காவில் புதிய, பிரகாசமான விடிவொன்று பிறந்திருக்க வேண்டும். சிறிலங்காத் தீவின் தற்போதைய பொருளாதாரம் மிகத் துரித வளர்ச்சியடைந்து வருவதுடன…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால் புதிய ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு பல சவால்கள் உள்ளன. விசேடமாக தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் பல சவால்களை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படப்போகின்றவர் எதிர்கொள்ளவேண்டும். அவை இலகுவாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல. பல வழிகளிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு சரியான தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்து சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான தீர்வுகளை எட்டுவது அவசியமாகும். அவை சவாலான பணிகள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஜனாதிபதி…
-
- 3 replies
- 777 views
-
-
SAVE THE PARTY AND TNA - AN APPEAL TO SAMPANTHAN கட்சியையும் கூட்டமைப்பையும் காப்பாற்றுங்கள். சமபந்தருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச. ஜெயபாலன் . தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள். . சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். 1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை வலுவிளக்க செய்தார்கள். இது இளைஞர்களின் விரக்திக்கு வழிவகுத்தது. . வரலாறு தெரிந்த நீங்களே அத்தகைய ஒரு சூழலுக்கு வழிவகுக்கலா…
-
- 3 replies
- 867 views
-