நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் ம…
-
- 7 replies
- 1.5k views
-
-
பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்! கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன. 'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை. இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன. அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெ…
-
- 3 replies
- 1.5k views
-
-
அன்பான யாழ் இணயத்தள நண்பர்களே ஐ நா வின் அறிக்கையை யாராவது தமிழில் மொழி பெயர்த்து இத்தளத்தில் இணைப்பீர்களா. ஏனெனில் ஒவ்வொரு தமிழரும் இதனை ஆழமாக வாசித்து செயல் வடிவம் கொடுக்கும் காலம் இது என்பதை அன்புறவுகள் யாவரும் அறிவீர்கள்.என்னிடம் இல்லாத ஆனால் உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் நிச்சயம் பயன் படுத்தி செயல் வடிவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன. உங்கள் கருத்த சொல்லுங்கோ...
-
- 2 replies
- 1.5k views
-
-
இன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாக படங்கள் ஆதாரங்களுடன் உணர்த்துகிறது இந்த வீடியோ. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்! vinavu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.5k views
-
-
விடைகாணமுடியாத மரணச்சான்றிதழ் பிரபாகரன் தான் என்று காட்டிய உடல் முன்னுக்குப்பின் முரண்பட்டு மக்களுக்கே சந்தேகத்தைக் கிளப்பியது சிங்களம் தான். முதல்முறை கண்கள் மூடி இருந்தன. பின்னர் யாரும் சாகும்போது அப்படி முளித்துக்கொண்டு சாவானா? சீனாவில் தயாரிக்கப்பட்ட முகமூடி. உக்கிரமான சண்டை நடக்கும்போது நந்திக்கடலருகே பிரபா சவரம் செய்து கொண்டிருந்தாரா? அப்படி உடல் கிடைத்திருந்தால் சிங்களம் உடலைக் கொழும்பிற்கு கொண்டுவந்து மக்களைப் பார்வைக்கு விட்டு காகத்தைப்போல் கொண்டாடியிருப்பார்கள். இருக்கின்றார் என்று சொல்லும் ஒரு சாரார். இல்லாவிட்டாலும் உடம்பு கிடைக்கவில்லை என்பது உறுதி. டிஎன்ஏ சோதனைகூட செய்யவில்லை. ஏன்? எப்படிக் கொடுப்பது மரணசான்றிதழ்? நாளை பிரபா உயிருடன் வந்தால…
-
- 7 replies
- 1.5k views
-
-
எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள். அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன். என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொ…
-
- 11 replies
- 1.5k views
-
-
கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன? வ. திவாகரன் ஒரு சமூகத்தின் இருப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். இழந்தவற்றை வென்றெடுப்பதற்கும், போட்டி இட்டு முன்னேறுவதற்குமான ஊடகம் கல்வியே! இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியால் அனைத்துத் தரப்பினரும் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவ்வாறான இலவசக் கல்விமுறைமையின் கீழ், மாணவர்களுக்கு தேசிய ரீதியில் பொதுப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை போன்றவை முக்கியமான பரீட்சைகளாகும். இவற்றுள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொடுப்பனவு மற்றும் தேசிய பாடசாலைகளில் கற்…
-
- 10 replies
- 1.5k views
-
-
கலைஞர் தொலைக்காட்சியில் பாசமிகு தலைவனுக்கு பாராட்டுவிழா நடாத்துகின்றார்கள். 50 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்படும்போது மெளனமாக இருந்த அந்த பாசமிகு தலைவனுக்கு நாங்களும் பாராட்டுவிழா நடாத்துவோம்
-
- 9 replies
- 1.5k views
-
-
கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன். வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன. அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வர…
-
- 18 replies
- 1.5k views
-
-
-
கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்! இலங்கைத் தீவில் இரு வெவ்வேறு தனித்தேசியங்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஜனநாயக வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக அம்பலப் படுத்தும் முதல் நிகழ்வு 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில்தான் இடம்பெற்றது. இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாகத் திகழ்வதற்கான ஆணையைத் தமிழ்த் தேசத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பெற்ற அமைப்பாகத் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி ஒருபுறத்திலும் ஈழத் தமிழர்களின் தனி இறையாண்மை மற்றும் சுய நிர்ணய உரிமை அபிலாஷைகளை அடியோடு நிராகரித்து, சுதந்திரமாக வாழவிரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழர் தேசம் மீது மேலாண்மை செலுத்துவதற்கான முற்று முழுதான அரச அதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறு புறத்திலுமாக பின…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 20 replies
- 1.5k views
-
-
ஆதி தமிழரின் சோழர் கால புலி பதித்த தற்போதைய தமிழீழ தேசிய கொடியை நாம் பின்பற்றுவோம். இதையே தமிழ் நாட்டு தமிழரும் தங்கள் தேசிய சின்னமாய் பயன்டுத்தலாம். விடுதலை புலிகளின் உத்தியோக கொடியில் எழுத்துகள் உள்ளன.தேசியக்கொடியில் அப்பிடி இல்லை. ஆகவே இதையே உலகத்தில் உள்ள அனைவரும் தமது பேதம் கடந்து ஏற்றுகொள்ள வேண்டும். உதாரணம் இந்திய தேசிய கொடிக்கும் இந்திய காங்கிரஸ் கொடிக்கும் அதில் உள்ள சக்கரம் மட்டுமே வித்தியாசம்.அதற்காக பாரதிய ஜனதா கடிசியோ இல்ல காகிரசை பிடிக்காத கட்சிகளோ இந்திய மூவர்ண கொடிய தமது கொடி இல்லை என்று கூறவில்லை. அதே போல் நானும் எமது பிளவுகளை கைவிட்டு ஒரே கொடியின் பின் அனைத்து தமிழரும் இணைவதே எம்மை உலகில் நிலை நிறுத்தும். எமது அணைத்து நிகழ்வுகளிலும் மரியாதை செய்வோம் என்ற…
-
- 2 replies
- 1.5k views
-
-
சென்னையில், அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தில் அமுலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை. பாமக கட்சி எம்எல்ஏ ஜிகே மணியின் மகன் தமிழரசன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். சமீப காலமாக பெரு வியாபார ஈழத்தமிழர்கள் பலரது பெயர்கள், தமிழக அரசியல் வாதிகளுடன் சேர்த்து பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆங்கிலத்தில் சொல்வார்கள்: damn you do and damn you don't. If you do whatever it is you are going to do then you are in trouble, if you don't act out what you were going to do then you are in trouble another way. நீங்கள் ஒரு விடயத்தினை செய்ய முனைந்தாலும் பிரச்னை, அந்த விடயத்தினை செய்யாமல் விட்டாலும் பிரச்னை தான். இது கூட்டமைப்புக்கு சரியாக பொருந்தும். அதற்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. மகிந்தவுக்கு ஆதரவு, ரணிலுக்கு ஆதரவு, நடுநிலை. இதில் மகிந்தவுக்கு ஆதரவு தந்தாலும் பிரச்சனை, நடுநிலைமை வகித்தாலும், அதுவே மகிந்தவுக்கு சார்பாகி பிரச்சனை. ஆகவே மூன்றாவது தெரிவே அவர்கள் முன் இருந்த தவிர்க்க முடியாத தெரிவு ஆக இருந்தது. மறுபுறம்... சர்வத…
-
- 11 replies
- 1.5k views
-
-
கடும் நெருக்கடியில் கருணாநிதி கடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர். 18.06.2006 நாளிட்ட “ஆனந்த விகடன்“ இதழுக்காக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை பற்றி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவ…
-
- 4 replies
- 1.5k views
-
-
Lions attacking Baby Buffalo, then group of Buffalo attacking the lions back!! P1
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=3]பிரபாகரனின் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அவர் சிலோன் அரசாங்கத்தில் மாவட்ட காணி அதிகாரியாக ([/size]DISTRICT LAND OFFICER[size=3]) பல ஆண்டுகள் கடமையாற்றினார்.[/size] [size=3]சராசரி நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்திற்கே உரித்தான அனைத்து அம்சங்களும் அந்தக் குடும்பத்துக்கு இருந்தன. நிலையான வேலை, நிம்மதியான வாழ்க்கை ஆகியவற்றை வாழ்க்கையின் ஆதாரத் தேவையாகக் கருதிய வேலுப்பிள்ளை தனது குழந்தைகள் நல்ல கல்வி கற்பதன் வாயிலாக மட்டுமே அந்த நிலையை எட்ட முடியும் என்று வெகுவாக நம்பினார்.[/size] [size=3]பிரபாகரனின் அண்ணன் மனோகரன் அரசாங்க வேலையில் சேர்ந்தார். பிரபாகரனின் இரு தமக்கைகளும் அரசு ஊழியர்களை மணம் புரிந்தனர். (அதன் பிறகுதான் இனக் கலவரங…
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் காலசம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை…
-
- 11 replies
- 1.5k views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது புலிக்காச்சல் புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள். சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது. கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொ…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில் வரையப்படவில்லை. அனைத்துமே அறிவுறுத்தல்களின் பிரகாரம் வரையப்படுகிறது. இங்கு தரப்படுகின்ற ஓவியத்தின் விகாரமான சிந்தனையை பாருங்கள். இன்னும் தீராத வெறி எஞ்சி இருப்பதை இது உணர்த்துகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த தீய சிந்தனை விதைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படுகிறார்கள். இதற்கு நாம் எப்படி பதிலளிக்கப்போகிறோம்? நம்மிடம் அதற்கான தயார்படுத்தல்கள் இருக்கின்றனவா? நமது சமூக நிறுவனங்கள் அதற்கு தயாரா? நம்மிடையே ஒற்றுமை இருக்கிறதா? …
-
- 3 replies
- 1.5k views
-