Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது - ஆய்வாளர் கேணல் சுசந்த செனவிரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காப் படையினரின் வடக்கு நோக்கிய யுத்த முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தடைப்படலாம் என அரசியல் ஆய்வாளரான முன்னாள் இராணுவத் தளபதியுமான சுசந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஏபி செய்திச் சேவை நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் தம்வசம் இன்னமும் ஆட்டிலறிகள் மற்றும் கனரக ஆயுதங்களை வைத்துள்ளனர். ஆகவே விடுதலைப் புலிகளால் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தக்கூடும். புலிகளின் இந்த மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது.

யுத்த முன்னகர்வுகளால் விடுதலைப் புலிகள் பலவீனமடைந்தாலும், யுத்த முன்னெடுப்புகள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. உடனடியாகவே அல்லது ஆறுதலாகவே நாங்கள் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/?p=2992

  • கருத்துக்கள உறவுகள்

அடிபட்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று பழ மொழி உண்டல்லோ

இவரின் அனுபவம் மகிந்த அன் கோவிற்கு பாடமாக அமையும் போது விளங்கும் விடுதலைப் புலிகளைப்பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது

அது மட்டும் நிச்சயம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது

அது மட்டும் நிச்சயம்

ஆனால் இங்கே கருத்தெழுதும் பலருக்கு மிக நன்றாக அமைந்துள்ளதே???

எம்மினம் எப்போதும் தோற்காது என நம்பி கூட நிற்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை!

புலிகளின் மெளனம் படையினருக்கு நல்லதாக அமையாது

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவும் இளைப்பாரிய பின்பு இப்படித்தான் அறிக்கை விடுவார், வெளிநாட்டு பத்திரிகைக்கு

"சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது"

முன்னேற்றம் தடைப்படும் போதெல்லாம் இந்த நிலக் கண்ணிகளின் மேல்தான் படையினரும், படைப்புலனாய்வாளர்களும் பழியைப் போட்டுவிடுகிறார்கள். இனி முன்னேற்றம் அவ்வளவு எழிதல்ல என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சுசந்த செனவிரட்ன வின் நினைவு கூரல் மகிந்தவுக்கு ஒரு பாடப்புத்தமாகலாம்.ஆனால் எங்கடை பிரபா அண்ணாவின் பாடத்திட்டமெல்லோ நேரத்துக்கு நேரம் மாறுகிறது அல்லது மாறும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

உந்த P.O.S ஐ பார்க்க முடியவில்லை. :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த P.O.S ஐ பார்க்க முடியவில்லை. :rolleyes::rolleyes:

இதில போய்பாருங்கோ ஆனா நேக்கு விளங்கள http://www.youtube.com/watch?v=KRtBiNPlL08

  • கருத்துக்கள உறவுகள்

வாற ஞாயிற்றுக்கிழமை சீனாவில் ஒலிம்பிக் முடிவடையும் ,

பிறகு வாற புலிகளின் எழும்பிக் விளையாட்டை பாருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாற ஞாயிற்றுக்கிழமை சீனாவில் ஒலிம்பிக் முடிவடையும் ,

பிறகு வாற புலிகளின் எழும்பிக் விளையாட்டை பாருங்கள் .

சிறி அண்ணா

சரியா சொன்னிங்க

  • கருத்துக்கள உறவுகள்

வாற ஞாயிற்றுக்கிழமை சீனாவில் ஒலிம்பிக் முடிவடையும் ,

பிறகு வாற புலிகளின் எழும்பிக் விளையாட்டை பாருங்கள் .

புலிகள் ஒலிம்பிக் பார்ப்பதில் பிஸியாக இருப்பதால்தான் சிங்கள இராணுவம் துணுக்காய், வன்னேரிக்குளம், நாச்சிக்குடா வரை வந்ததைக் கவனிக்கவில்லை என்ற மாதிரி இருக்கு!

இல்லாவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் ஒலிம்பிக் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போது அகோரச் சண்டை தொடங்கினால் எதைப் பார்ப்பது என்று குழம்பிவிடுவர் என்று பொறுத்திருக்கிறார்கள் போலுள்ளது என்று எடுத்துக் கொள்ளலமா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஒலிம்பிக் பார்ப்பதில் பிஸியாக இருப்பதால்தான் சிங்கள இராணுவம் துணுக்காய், வன்னேரிக்குளம், நாச்சிக்குடா வரை வந்ததைக் கவனிக்கவில்லை என்ற மாதிரி இருக்கு!

இல்லாவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் ஒலிம்பிக் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போது அகோரச் சண்டை தொடங்கினால் எதைப் பார்ப்பது என்று குழம்பிவிடுவர் என்று பொறுத்திருக்கிறார்கள் போலுள்ளது என்று எடுத்துக் கொள்ளலமா?

கிருபன் , உங்களுக்கு என்ன மாதிரி எடுத்து கொள்ள விருப்பமோ .........

உங்களுக்கு விருப்பமான அந்த மாதிரியே ................ எடுத்துக்கொள்ளுங்கோ .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன் ஐயா,

இனி முன்னேற்றம் அவ்வளவு எழிதல்ல என்ற உண்மையை மகிந்த அன்ட் கொ

ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்று தான் எந்த உண்மையை அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றார்க

அண்ணை சத்தியமாய் எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. அந்த ஆடு என்னத்தைப் போட்டு மெல்லுது? ஏதாச்சும் வித்தியாசமான சாமனோ?

அண்ணை சத்தியமாய் எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. அந்த ஆடு என்னத்தைப் போட்டு மெல்லுது? ஏதாச்சும் வித்தியாசமான சாமனோ?

அந்த மந்தை திரும்பத் திரும்ப அதையே மென்று கொண்டிருக்கிறது என்கிறார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மந்தை திரும்பத் திரும்ப அதையே மென்று கொண்டிருக்கிறது என்கிறார். :rolleyes:

சாப்பிட்டுட்டு பொழுது போக்காக இரை மீட்கிறத சொல்றார் போல. :rolleyes: வேலை மினைக்கெட்டு இந்த கிளிப்புகளை தேடி எடுக்கிறார் தானே.... :(

சாப்பிட்டுட்டு பொழுது போக்காக இரை மீட்கிறத சொல்றார் போல. :rolleyes: வேலை மினைக்கெட்டு இந்த கிளிப்புகளை தேடி எடுக்கிறார் தானே.... :rolleyes:

எப்பிடி குறுக்கரால் மட்டும் இப்படி? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.