Jump to content

17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்!

17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகி இருப்பதாக நம்பப்படுகின்ற இந்த பாடசாலை மாணவியின் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்மையில் கொழும்பில் வைத்தியசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படைச்சிப்பாயின் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர் எச்ஐவி தொற்றலுக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பாடசாலைச் சிறுமியுடன் தான் தொடர்பு கொண்டிருந்ததை அவர் ஒத்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து கொழும்பிலிருந்து வைத்திய நிபுணர்களால் உள்ளுர் வைத்திய அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக தகவல் வழங்கப்பட்டதனையடுத்து குறித்த சிறுமி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேளையிலேயே 76 பேர்களின் பெயர்ப்பட்டியலை அவர் முதல்கட்டமாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 14 வயது முதல் 17 வயது வரையான 3 வருட காலப்பகுதியிலேயே இவ்வாறான பாலியல் ரீரியாக தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த 76 பேரினது பெயர்களை இவர் விபரித்திருப்பதாக தெரிய வருகின்றது.

இதனிடையே இந்த 76 பேர் தொடர்பாக வைத்திய பரிசோதனைகளை மெற்கொள்ள வைத்திய வட்டாரங்கள் தயாராகி வருகின்றன.

இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யாழ்க்குடாநாட்டில் வேகமாகப் பரவி வருகின்ற வரம்பு மீறிய புரள்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் கருக் கலைப்பதற்காக வருகின்றவர்கள் 18 முதல் 20 வயதிற்கும் குறைவான வயதினை உடைய இளம் பெண்களே அதிகளவில் இருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னணிப் பாடசாலைகள் பல இலக்கு வைக்கப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 20 வயதிற்கும் குறைவான பாடசாலை மாணவர்களிடையே ஆபாச பட இறுவட்டுக்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கூற்படுகின்றது.

குறிப்பாக விளையாட்டு மைதானங்களிலும் பாடசாலைகளிலும் இவை சரளமாகப் புழங்குகின்றன. இவை எவ்வாறு வந்து சேர்கின்றன என்பது தொடர்பான மர்மங்கள் தொடர்கின்றன. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இத்தகைய சம்பவங்களள் கட்டுப்பாட்டுள் இருந்த தாகவும் இப்போது மீண்டும் இந்த பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரள்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக இந்த 17 வயதுடைய பாடசாலைச் சிறுமியின் தந்தை ஒரு உள்ளுர் கிராம அதிகாரி எனக் கூறப்படுகின்றது.

ஏற்கனவே சாவக்சசேரிப்பகுதியைச் சேர்ந்த இதேபோன்ற ஒரு சிறுமி பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாலியல் நோக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை முன்னரங்கப் பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்ற வேளை தான் பல தடவைகள் பலாலிக்கு போய் வந்துள்ளதாக அவர் திடுக்கிடும் தகவல்களை வழங்கியிருந்தார். நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அவர் பெண் சிறார்களுக்கான விசேட தடுப்பு மையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும் தற்போது எச்ஐவி தொற்றலுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற மாணவி தொடர்பில் வைத்தியர்கள் தமது கண்காணிப்பினை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பூரண விசாரணை ஒன்று மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு சிறுவர் நலன்களுடன் தொடர்புடைய நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதித் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை காவற்துறையினர் தகவல்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

http://thaynilam.com/tamil/?p=1011

Link to comment
Share on other sites

கிருபண்ணாவுமா இந்த வலையில்....?? :icon_idea:

சிங்களவனுக்கு எதிராக பௌதீக ஆயுதம் ஏந்திய அந்த தமிழச்சியை நினைக்க மனது சிலிர்க்குது... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணாவுமா இந்த வலையில்....?? :icon_idea:

சிங்களவனுக்கு எதிராக பௌதீக ஆயுதம் ஏந்திய அந்த தமிழச்சியை நினைக்க மனது சிலிர்க்குது... :unsure:

பெளதீக ஆயுதம் என்பதிலும் உயிரியல் ஆயுதம் என்பது நல்லா பொருந்தும் தயாண்ணா.

ஒரு சிங்களச் சிப்பாய்க்கு எச் ஐ வி வந்தா.. எல்லாருக்கும் வந்தது மாதிரித்தான். இப்போ தெரிய வேண்டும்.. சிங்களம் எப்படி பெருகிக்கிட்டு இருக்குதென்று.

தமிழர்களின் வாழ்வியலை சீரழிச்சவனே அதற்கு பலியாவதுதான் வேடிக்கை.

எதுஎப்படி இருந்தாலும்.. வளர்க்க டக்கிளஸ் தேவானந்தாவின் கூட்டிக் கொடுப்பு குடிசைக் கைத்தொழில்..! :D:lol:

Link to comment
Share on other sites

அண்மையில் வெளிவந்த விக்கிலீக்ஸ் செய்தியின்படி 14 வயது தமிழ் சிறுமிகளை கூடமுகாம்களில் இருந்து பாலியல் வல்லுறவுக்கு கொண்டு சென்றது சிங்களம். இப்படியான சிறுமிகளுக்கு / பெண்களுக்கு நீதி கேட்கவும் நீதி சொல்லவும் ஒருவரும் இல்லை. இந்த நிலையில், பொதுவாக தற்கொலை இல்லை நடை பிணமாக வாழ்பவர்களே எல்லோரும்.

இந்த செய்தியில் ஏன் அதிர்ச்சி? யாருக்கு அதிர்ச்சி? பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் படையினர் என்பதாலா? இல்லை ஒரு பெண்ணை, சிறுமியை அவளின் வாழ்க்கையை இந்த சிங்கள "இராணுவ வீரர்கள்" இப்படியும் செய்வார்கள் என்பதை எண்ணியா?

இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள பெண் மட்டும் நவீன கண்ணகி போல உள்ளாள். அவள் தனக்கு துன்பத்தை தந்தவர்களுக்கு, அவலத்தை திணித்தவர்களுக்கு அதை திருப்பி கொடுத்துள்ளாள். இதுவும் ஒரு நீதியே, தமிழருக்கு நீதி மறுக்கப்பட்ட சிங்கள தேசத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணாவுமா இந்த வலையில்....?? :unsure:

நான் வலைக்குள் அகப்படுகின்ற மீனின் ரகம் இல்லை!

சிங்களவனுக்கு எதிராக பௌதீக ஆயுதம் ஏந்திய அந்த தமிழச்சியை நினைக்க மனது சிலிர்க்குது... :lol:

இதை வாசிச்சவுடன் எனக்கு உடம்பே காய்ச்சல்மாதிரிச் சிலிர்க்குது.. :icon_idea:

இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள பெண் மட்டும் நவீன கண்ணகி போல உள்ளாள். அவள் தனக்கு துன்பத்தை தந்தவர்களுக்கு, அவலத்தை திணித்தவர்களுக்கு அதை திருப்பி கொடுத்துள்ளாள். இதுவும் ஒரு நீதியே, தமிழருக்கு நீதி மறுக்கப்பட்ட சிங்கள தேசத்தில்.

உண்மையிலேயே சிலிர்த்துப் போனேன்!

Link to comment
Share on other sites

நான் வலைக்குள் அகப்படுகின்ற மீனின் ரகம் இல்லை!

இதை வாசிச்சவுடன் எனக்கு உடம்பே காய்ச்சல்மாதிரிச் சிலிர்க்குது.. :icon_idea:

உண்மையிலேயே சிலிர்த்துப் போனேன்!

2002 சமாதான ஒப்பந்தம் வந்தவுடன் புலிகள் யாழிற்கு சென்ற வேளை மூன்று இவ்வாறான பெண்களை மீட்டு வன்னிக்கு கொண்டுவந்தனர். இதே வியாதி இதே தொழில்.. தலைவர் பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக முதன் முதலாக வன்னியில் இப்படியான வியாதி உடையோர்க்கு என ஓர் பராமரிப்பு வாட் மற்றும் ஒரு மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு எதிராக பௌதீக ஆயுதம் ஏந்திய அந்த தமிழச்சியை நினைக்க மனது சிலிர்க்குது... :icon_idea:

பெளதீக ஆயுதம் என்பதிலும் உயிரியல் ஆயுதம் என்பது நல்லா பொருந்தும் தயாண்ணா.

ஒரு சிங்களச் சிப்பாய்க்கு எச் ஐ வி வந்தா.. எல்லாருக்கும் வந்தது மாதிரித்தான். இப்போ தெரிய வேண்டும்.. சிங்களம் எப்படி பெருகிக்கிட்டு இருக்குதென்று.

தமிழர்களின் வாழ்வியலை சீரழிச்சவனே அதற்கு பலியாவதுதான் வேடிக்கை.

எதுஎப்படி இருந்தாலும்.. வளர்க்க டக்கிளஸ் தேவானந்தாவின் கூட்டிக் கொடுப்பு குடிசைக் கைத்தொழில்..! :D:unsure:

உண்மையில் நேற்று இதை வாசித்ததும் இப்படித்தான் எழுதினேன்

அனுப்ப மனம் வராததால் அழித்துவிட்டேன்.

காரணம் அவள் என் தங்கையல்லவா....

இந்த நிலைக்கு அவளை விட்டவர்களில் நானும் ஒருவனல்லவா....?

நான்கு விரல்கள் என்னைக்காட்டியதால் எழுதமுடியவில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நேற்று இதை வாசித்ததும் இப்படித்தான் எழுதினேன்

அனுப்ப மனம் வராததால் அழித்துவிட்டேன்.

காரணம் அவள் என் தங்கையல்லவா....

இந்த நிலைக்கு அவளை விட்டவர்களில் நானும் ஒருவனல்லவா....?

நான்கு விரல்கள் என்னைக்காட்டியதால் எழுதமுடியவில்லை. :icon_idea:

விசுகு, இதனை வாசித்தவுடன் உங்களது மனநிலையில் தான்.... நானும் இருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எவ்வளவு பெண்கள் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டு இருக்கிறார்கள்[அதை தடுத்து நிறுத்தவாவது புலி வேண்டும்.]...ஆனால் இங்கே சில பேருக்கு அது சிரிப்பாக இருக்கிறது என்று நினைக்கும் போது கவலையாய் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எவ்வளவு பெண்கள் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டு இருக்கிறார்கள்[அதை தடுத்து நிறுத்தவாவது புலி வேண்டும்.]...ஆனால் இங்கே சில பேருக்கு அது சிரிப்பாக இருக்கிறது என்று நினைக்கும் போது கவலையாய் இருக்கிறது.

அக்கா இந்தப் பெண்களுக்காக என்னால் இரக்கப்பட முடியவில்லை.

இந்தியப் படைகள் காலத்திலும் சரி இப்போதும் சரி யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்குக் கிழக்கு பெண்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனர். இந்தியப் படைகள் காலத்தில் யாழ் மூன்று சந்திப் பகுதியில் ஈ என் டி எல் எப் அமைப்பால் இந்தியப் படைகளுக்கான விபச்சார மையமே நடத்தப்பட்டு வந்தது. அங்கு தமிழ் பெண்களை கூலிகள் இந்திய இராணுவத்திற்கு கூலிக்கு விட்டு பிழைப்பை ஓட்டினர்.

அது கொஞ்சக் காலம் ஓடி இருக்கும். அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் பிஸ்ரல் குழுவினரின் வருகையோடு அது குறையத் தொடங்கியது. சில பெண்கள் மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டனர். அதன் பின்னர் அடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இருந்தும் கூலிக்குழுக்களோடு நெருங்கியவர்கள் தொழிலைச் செய்து பிழைத்தனர்.

இன்று சிங்களப் படைகளுக்கு கூட்டிக் கொடுப்பை செய்பவர்கள்.. வடக்கில் டக்கிளசின் ஆட்களும் கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையானின் ஆட்களும் மற்றும் பிறரும்.

இந்தக் கூலிகள் எப்போதுமே இதை தான் செய்து வருகின்றனர். இவர்களிடம் தெளிவான அரசியல் சமூக கொள்கைகள் கிடையாது. எதிரிக்கு கூட்டிக் கொடுத்து பிழைப்பதே இவர்களின் மாற்றுக் கருத்து..!

இந்தப் பெண்களுக்கு சுய புத்தி இல்லையா. ஏலவே யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவிகள்.. சிலர் கண்ணி வெடி அகற்ற வந்த கறுப்பர்களோடு தொடர்பு வைச்சு.. எயிட்ஸ் வாங்கினது பற்றி இந்தப் பெண்கள் அறியாமலா இருக்கினம்.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் ஏற்பாட்டின் கீழேயே எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. காரணம் வெளிநாட்டில் இருந்து வரும் எம்மவர்களால் எயிட்ஸ் தொற்றுக்கள் யாழ்ப்பாணத்தில் அன்றைய காலத்தில் அதிகரித்துக் கொண்டிருந்தன.

வெளிநாட்டில் இருந்து மற்றும் தென்பகுதியியில் இருந்து சென்ற எம்மவர்கள் தான் முதலில் எயிட்ஸை யாழ்ப்பாணத்துக்குள் எடுத்து வந்திருந்தார்கள். இப்போ சிங்களப் படைகளோடு எல்லோரும் எடுத்து வந்துவிட்டார்கள். இந்தப் பெண்கள் இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்தும்.. இப்படியாக நடந்து கொள்கிறார்கள் என்றால் இவர்களை பிஸ்ரலுக்கு பதில் எயிட்ஸ் தான் தண்டிக்க முடியும். பிஸ்ரல் ஒருவரை தான் தண்டிக்கும். எயிட்ஸ் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிக்கும். அந்த வகையில் இந்த விடயத்தில் எயிட்ஸ் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

இராணுவ ஆக்கிரமிப்பு என்பது வெறும் நிலம் விழுங்கும் நிகழ்வல்ல. ஒரு இனத்தின் இருப்பையே அழிக்கக் கூடிய ஆபத்து நிறைந்தது என்பதை உணராத தமிழர்கள் வாழ்ந்தென்ன இருந்தென்ன..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்கடை கதையைப் பார்த்தால்.......

இங்கு 17 வயது பாடசாலை மாணவி தானாக விரும்பி 76 பேருடன் தொடர்பு கொண்ட மாதிரியிருக்குது.

வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்கடை கதையைப் பார்த்தால்.......

இங்கு 17 வயது பாடசாலை மாணவி தானாக விரும்பி 76 பேருடன் தொடர்பு கொண்ட மாதிரியிருக்குது.

வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்.

அந்த மாணவி ஒரு கிராம அதிகாரியின் மகள். ஆக ஓரளவு கல்வி அறிவுள்ள குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கும் அவர்.. தவறு நடந்த போதே ஆரம்பத்திலேயே.. தவறை திருத்திக் கொண்டிருக்கலாம்.

எயிட்ஸ் ஒருவரையும் தேடிப்போய் தொத்துவதில்லை. நீங்களா தவறான பாலியல் நடத்தைக்கு உங்களை உட்படுத்தினால்.. அல்லது தொற்றுள்ள தவறானவர்களோடு உறவு கொண்டால் மட்டுமே அது தொற்றும்.

76 பேரோடு அறியாமல் தொடர்பு வைச்சிருந்தார் என்பதுதான் ஏற்க முடியாததாக இருக்கிறது. மேற்கு நாடுகளில் 13 வயதில் கூட பெண்கள் உதுகளை செய்யினம். சட்ட விரோதம் என்று அறிந்தும் கூட. ஏன் மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்கள்.. உதுகளைச் செய்வதில்லையா.. மேற்கு நாடுகளில்.. இவர்களைக் கேட்க அடையாளம் காட்ட ஆக்களில்லை. அதனால் பல விடயங்கள் தெரிய வருவதில்லை. இவர்களே ஊருக்குப் போய் பரப்பினாப் பிறகுதான் செய்தி வரும்.

ஊரில ஆக்கள் இருக்கினம். அதுதான் கொஞ்சம் ஆறுதலான விடயம். இந்த பெண்கள் தங்களையும் சமூகத்தையும் ஆபத்துக்குள் தள்ளுவதை இட்டு சிந்திக்க வேண்டுமே தவிர நாங்கள் இவர்களுக்காக இரக்கப்பட்டோ.. பரிதாபப்பட்டோ.. எயிட்ஸை இவர்களுக்காக இரங்கச் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

கிருபண்ணாவுமா இந்த வலையில்....?? :icon_idea:

சிங்களவனுக்கு எதிராக பௌதீக ஆயுதம் ஏந்திய அந்த தமிழச்சியை நினைக்க மனது சிலிர்க்குது... :unsure:

உங்களுக்கு கூடப்பிறந்த சகோதரி யாரும் இருக்கினமா.!!!?

Link to comment
Share on other sites

வர வர யாழில் வரும் கருத்துக்களை பார்த்தால் யாழின் பெயரை "யாழ் அறிவுக்கொழுந்துக்கள் களம்" என பெயர் மாற்றினால் நல்லாக இருக்கும் போலிருக்கு.

"பிஸ்டல் குழுவால் குற்றங்கள் குறைக்கபட்டது,தேடகம் காட்டிக்கொடுக்கும் அமைப்பு.பௌதிக ஆயுதம்"

புல்லரிக்குது கருத்துக்களை வாசிக்க.

Link to comment
Share on other sites

பெளதீக ஆயுதம் என்பதிலும் உயிரியல் ஆயுதம் என்பது நல்லா பொருந்தும் தயாண்ணா.

ஒரு சிங்களச் சிப்பாய்க்கு எச் ஐ வி வந்தா.. எல்லாருக்கும் வந்தது மாதிரித்தான். இப்போ தெரிய வேண்டும்.. சிங்களம் எப்படி பெருகிக்கிட்டு இருக்குதென்று.

தமிழர்களின் வாழ்வியலை சீரழிச்சவனே அதற்கு பலியாவதுதான் வேடிக்கை.

எதுஎப்படி இருந்தாலும்.. வளர்க்க டக்கிளஸ் தேவானந்தாவின் கூட்டிக் கொடுப்பு குடிசைக் கைத்தொழில்..! :unsure::icon_idea:

நெடுக்கு, போராட்டத்தை வேறு வடிவத்துக்கு கொண்டு செல்வோம் என்கிறீங்க.!!!!

Link to comment
Share on other sites

வர வர யாழில் வரும் கருத்துக்களை பார்த்தால் யாழின் பெயரை "யாழ் அறிவுக்கொழுந்துக்கள் களம்" என பெயர் மாற்றினால் நல்லாக இருக்கும் போலிருக்கு.

"பிஸ்டல் குழுவால் குற்றங்கள் குறைக்கபட்டது,தேடகம் காட்டிக்கொடுக்கும் அமைப்பு.பௌதிக ஆயுதம்"

புல்லரிக்குது கருத்துக்களை வாசிக்க.

உங்களை யாழ்களத்தில் கட்டாயமாக கருத்து எழுதவேனும் என்று யாரும் சொல்லவில்லையே.! பிடிக்காட்டி கருத்தெழுதுவதை தவிருமேன்.:icon_idea:

Link to comment
Share on other sites

உலகில் எச்.ஐ.வி. என்னும் வைரஸ் அமெரிக்க சி.ஐ.ஏ. இன் ஒரு "உயிரியல் ஆயுதம்" (Biological weapons) என சொல்லும் வல்லுனர்களும் உலகில் உள்ளனர். "உயிரியல் (அரச) பயங்கரவாதங்கள்" (Bio Terrorism) உலகில் நாடுகளும் தீவிரவாத(?) குழுக்களும் பயன்படுத்தும், பயப்படும் ஆயுதங்கள். குர்திஸ் மக்களுக்கு எதிராக சதாம் பாவித்தது உலகிற்கு தெரிந்தது.

http://www.pbs.org/wgbh/nova/bioterror/

Link to comment
Share on other sites

கடந்த சில மாதங்களில் என்னை மிகவும் வேதனைப்படுத்திய செய்தி இது.

இத்திரியில் வேடிக்கையாக சிலர் எழுதிய கருத்தும், தடம்புரண்டு விதண்டா விவாதம் செய்வதும் வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதாக அமைகிறது. எமது பின்னடைவுகளுக்கு கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எம்மவர்களின் இப் போக்குகளும் காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதுவும் வேதனை தான்.

அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள் தெரியாவிட்டாலும், அவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிக்கி தன்னை இழந்திருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு அவரை மட்டும் குறை கூறுவதால் விடிவு கிட்டப்பவதில்லை. பெருமளவு பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும் உண்டு. இதில் ஆசிரியர்களின், சமயத் தலைவர்களின் ஒழுக்க நெறிகள் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகிறது.

வட கிழக்கில் நிலை கொண்டிருக்கும் சிங்கள காட்டுமிராண்டிகளால் இவர் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூற முடியாது.

எமது பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், ஏன் இளம் ஆண்களும் தான்,

* பெற்றோர்களிடம், சகோதர சகோதரிகளிடம் தேவையான அன்பு கிடைக்காமை,

* பெற்றோர்கள் / வீட்டில் / சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி சண்டை போடுதல்,

* சூழ்நிலை, முரண்பாடு காரணமாக பெற்றோர் பிரிந்திருத்தல்,

* தற்கால காதல் என்ற போர்வையில் வரும் விரச சினிமா காட்சிகள், தொலைக்காட்சி, FM வானொலி நிகழ்ச்சிகள்,

* தொலைக்காட்சி, FM வானொலி நிகழ்சிகளை வழங்கும் சினிமா பைத்திய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,

* இளம் பருவத்தினரை அடையும் தற்கால ரசனையற்ற விரச சினிமா பாடல்கள்,

* பெருமளவு வெளிநாட்டு பணப் புழக்கமும், பொருட்கள் மேல் அதிகரிக்கும் மோகங்களும்,

* தொடர்ச்சியான பிரத்தியேக வகுப்புக்கள் - வெளியில் பெருமளவு நேரத்தை செலவிடுதல்,

* மனப்பக்குவம் பெறுவதற்கு முன்னர் பாலுணர்வுகளை தூண்டும் விடயங்களை அறியும், பார்க்கும் வசதி வாய்ப்புக்கள்,

* நாட்டை விட்டு ஓடிப்போகும் மனநிலை, மேலை நாடுகளில் இவை சகஜம் என்ற எண்ணம்,

* இவற்றுடன் முக்கியமாக தீய நட்பு,

போன்ற பல காரணிகளால் மிகவும் பலவீனமான, பயந்த மனநிலையைப் பெறுகின்றனர். இதனால் தவறான நடத்தைக்கு தம்மை உட்படுத்த முயலும் படுபாதகர்களை அறிந்துகொள்ளும் - விலத்தும் - எதிர்கொள்ளும் - விரட்டியடிக்கும் - தப்பிக்கும் தைரியத்தை, ஆற்றலை, மனோபலத்தை அவர்கள் இழக்கிறார்கள்.

நான் அறிந்த சமூக நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை வாசித்தவன் என்ற வகையிலும், சமூகப் பணிகளிலும் நீண்ட காலமாக இருப்பதாலும் நினைவுக்கு வந்த மேலுள்ள காரணிகளை நிரல் படுத்தியுள்ளேன்.

இங்கே இனப்பற்றுடன் பொறுப்பாகவும், இனப்பற்றுடன் பொழுது போக்குக்காகவும் எழுதும் ஒவ்வொருவரும் இவற்றை கவனமாக சிந்தியுங்கள். நீங்கள் புலம் பெயர்ந்து இருந்தாலும், பலவீனமான மனநிலையுடன் உருவாகிவரும் இளம் சமுதாயத்தை, உங்கள் ஒவ்வொருவரது அர்த்தமுள்ள பங்களிப்புடன் மாற்றியமைக்கலாம். உங்கள் ஒவ்வொருவருக்கும் தாய் மண்ணில் உறவுகள் உண்டு. சிறு துளி பெரு வெள்ளம்.

இளம் சமுதாயத்தினரிடம், அவர்களை தவறான நடத்தைக்கு உட்படுத்த முயலும் படுபாதகர்களை அறிந்துகொள்ளும் - விலத்தும் - எதிர்கொள்ளும் - விரட்டியடிக்கும் - தப்பிக்கும் தைரியத்தை, ஆற்றலை, மனோபலத்தை வளர்க்க இன்று முதல் உழையுங்கள். உண்மையான பலனைப் பெற நீங்களும் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

தமிழினத்தின் விடுதலைக்கு இதுவும் அத்தியாவசியமானது.

அதே நேரம், பிரபலமான பாடசாலைகளில் மாணவிகள் கர்ப்பம் என்று வரும் செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. ஒரு சில சம்பவங்களை வைத்து ஊதிப் பெருப்பிக்கிறார்கள். சமூக, கலாச்சார சீர்கேடுகள் அதிகரிக்கின்றன - உண்மைதான். ஆனால் செய்திகளில் வருமளவுக்கு மோசமாக இல்லை.

எது எப்படியோ, சுதந்திரத்தை நாடி நிற்கும் ஓரினம் ஒருசில சம்பவங்களையும் புறக்கணிப்பது நல்லதல்ல.

பலமுள்ள சமுதாயத்தின் முதுகெலும்பு நல்ல கலாச்சார பேணலும், ஒழுக்கமான சமூக வாழ்வும், ஒற்றுமையும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபச்சாரம் என்பது மிக எளிதானது போல் இங்கு எழுதப்படுகிறது. ஒருவரின் எச்சில் படும்போதும் அந்த மனது என்ன பாடுபட்டிருக்கும் என்பதை இதயம் உள்ளவர்கள் உணர்வர்.

நான் என்னை வைத்துத்தான் எதையும் மதிப்பிடுவேன். சின்னவயதிலிருந்து எனக்கு பிடிக்காத ஒரு பெண் கிட்டவந்தாலோ எனது கையைப்பிடித்தாலோ தூரப்போய்விடுவேன். எனக்கு சுத்தம் மிகமுக்கியம்.

அதையே ஒரு பெண். தன்னுள் எச்சிலை வாங்குபவள்..................???

இதைக்கடந்தவர்கள் எவரும் இருக்கமுடியாது என்பது எனது கருத்து. ஒரு சிலர் வயிற்றுப்பாட்டுக்காக செய்தாலும் உள்ளே அழுதபடியே................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான செய்தி! :lol:

Link to comment
Share on other sites

விபச்சாரம் என்பது மிக எளிதானது போல் இங்கு எழுதப்படுகிறது. ஒருவரின் எச்சில் படும்போதும் அந்த மனது என்ன பாடுபட்டிருக்கும் என்பதை இதயம் உள்ளவர்கள் உணர்வர்.

நான் என்னை வைத்துத்தான் எதையும் மதிப்பிடுவேன். சின்னவயதிலிருந்து எனக்கு பிடிக்காத ஒரு பெண் கிட்டவந்தாலோ எனது கையைப்பிடித்தாலோ தூரப்போய்விடுவேன். எனக்கு சுத்தம் மிகமுக்கியம்.

அதையே ஒரு பெண். தன்னுள் எச்சிலை வாங்குபவள்..................???

இதைக்கடந்தவர்கள் எவரும் இருக்கமுடியாது என்பது எனது கருத்து. ஒரு சிலர் வயிற்றுப்பாட்டுக்காக செய்தாலும் உள்ளே அழுதபடியே................

விசுகு, உங்கள் ஆதங்கம்தான் எனது ஆதங்கமும் ... இப்போ ஏதோ பெண்கள் மட்டுமே தவறு செய்வதாகவும் ஆண்கள் எல்லோரும் நியாயவாதிகளாகவும் இங்கு பலர் எடுத்துரைக்க முயல்கின்றனர்... இந்தப்பெண் ஒரு கிராம அதிகாரியின் மகள் அப்படியாயின் அந்தபெண் வீட்டில் வைத்தா விபச்சாரம் செய்தாள்!?

மனமுகர்ந்து எந்தபெண்ணும் இப்படியான காரியத்தில் ஈடுபடுவாரா.!? [அதுவும் பதினேளு வயது பெண் ]

அந்த பெண் கட்டாய வல்லுறவுக்கே இப்படி ஆகி உள்ளார்..

எதுக்கு எடுத்தாலும் பெண்களை குறை சொல்வோர்க்கு உங்களிடம் எனது கேள்விகள்!?

1) நீங்கள் ஒழுக்கமானவராய் இருந்தால் ஏன் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடனும்... நீங்கள் போவதால் தானே அவர்களால் இதை முன்னெடுத்து செல்ல முடிகிறது.!?

2)நீங்கள் அந்த பெண்ணுக்கு தந்தையோ சகோதரனோ... நீங்கள் யோக்கியமானவரா இருந்தால் ஒரு பெண் தனது சதையை வித்து பிளைக்கும் இந்த ஈன தொழிலுக்கு வந்திருக்கவே மாட்டாளே.!?

3) இன்னும் இருக்கு தொடர்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்அப்படித்தான் தெரிகிறது

அவர்வெருட்டப்பட்டிருக்கலாம்

அல்லது

ஒரு முறை செய்த தவறுக்காக பழி வாங்கப்பட்டிருக்கலாம் :lol:

Link to comment
Share on other sites

ராணவத்தில் உள்ள ஒருவனுடன் கதைத்துப் பழகி இருக்கலாம். (பாடசாலையில் படிக்கும் பெண்கள் பொதுவாக எல்லோருடனும் கதைத்துப் பழகுவது ஒன்றும் புதிது இல்லை. அதனை அவங்கள் ஒரு advantage ஆக எடுத்து அந்தப் பெண்ணை சீரழித்து இருக்கலாம்.

அல்லது தகப்பனை/ குடுபத்தாரை blackmail பண்ணி அந்தப் பெண்ணை அவங்கள் அடைந்து இருக்கலாம்.

பதினேழு வயது பிள்ளை (தமிழ் பிள்ளை) தனது வாழ்கையை விபசாரத்திற்கு பயன்படுத்த முழு மனதாக நினைத்திருக்கும் என்பது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாதது!!!

எவ்வளவு அடிமைத்தனமாக நடத்தப் படுகிறார்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

இப்படி எங்களுக்குள்ளேயே மாறி, மாறி கருத்துகளால் பிடுங்குப்படுவதால் என்ன பிரயோசனம் என்று தெரியவில்லை? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.