Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்16Points3057Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்16Points20018Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/08/24 in all areas
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
8 pointsநான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்8 points
-
இலை என்றால் உதிரும்
6 pointsஇலையுதிர் காலம் எங்கும் உள்ளது தான். நாட்டுக்கு நாடு இது எந்த மாதங்கள் என்பதில் தான் ஒரு மாறுதல் இருக்கும். கொட்டோ கொட்டென்று கொட்டும், அள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கொட்டுவதும், பின்னர் துளிர்ப்பதுமாக மரங்கள் இருக்கும். உயிர்களும் போவதும், பின்னர் புதியன வருவதுமாக தெருக்களும் இருக்கின்றன. ** இலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்று தினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும் விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும் என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாய மனமும் சாய இனி இன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.6 points
-
ஜோசுவா மர தேசிய பூங்கா.
4 pointsபாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.4 points
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
4 pointsஎம்மவர்கள் முகம் பார்த்து புன்னகைக்காமல், ஒருவரை முறைப்பது போன்று பார்ப்பதை நான் வேறு பல நாடுகளிலும் பார்த்திருக்கின்றேன். இந்தியர்களும், பல ஆசிய நாட்டவர்களும் கூட இங்கும் தினமும் அப்படி நடந்து கொள்கின்றனர். நேற்றும் இங்கு நடைபாதையில் கொஞ்சம் வயதான ஒரு தம்பதியினரை பார்த்தேன். இந்தியர்கள் போன்றிருந்தனர், இந்த இடத்திற்கு புதியவர்கள். 'ஹலோ...' என்று சொல்லி புன்னகைத்தேன். அவர்கள் முகங்களை திருப்பிக்கொண்டு போய்விட்டனர். என்ன ஆனாலும், நாங்கள் ஹலோ என்று சொல்லி புன்னகைக்க வேண்டுமாம். அது எங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லதாம்............. என்ன, 'இப்படியே எந்த நேரமும் எல்லாரையும் பார்த்து ஈ என்று சிரித்தால் உங்களை பைத்தியம் என்று நினைக்க போயினம்' என்ற ஒரு குறிப்பு பக்கத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கும்.......🤣🤣4 points
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிச்சயமாக புத்தன், அதுவும் தாயகத்திலிருக்கும் மக்களின் தேசிய உணர்வை நான் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை, துளிகூட சினப்பட்டதில்லை. அவர்கள் யுத்தகாலத்தின் பின்னரான சிங்கள அரசியலால் சிறிதளவாயினும் கிடைத்த வசதிகள் வாய்ப்பை கண்டு மயங்கியிருந்தால் சிங்கள அரசியலுக்கு சோரம்போயிருந்தால் டக்ளஸ் தேவானந்தா என்றைக்கோ வடக்கின் முதல்வராகியிருப்பார். இங்கே புலத்தில் வீதி ஒழுங்கை மீறும்போது சாதாரண காவல்துறை துரத்தி வந்தால் நடுங்குகிறவர்கள் எம்மில் எத்தனைபேருண்டு, அங்கிருப்பவர்கள் நிலை கழுத்தை சுற்றிய கருநாகம்போல் அத்தனை சிங்கள ஆயுத படைகள் புலனாய்வாளர்கள், ஆ ஊ என்றால் கொழும்பு நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் நிலை இருந்தாலும், தாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூர சிங்கள படைகளுக்கு நடுவே நுழைந்து அணி அணியாக உந்துருளிகளில் முள்ளிவாய்க்கால் நோக்கி போயிருக்கிறார்கள், இத்தனைக்கும் அவர்களில் பெரும்பான்மையினர் யுத்தம் நடந்த காலத்தில் பத்து வயசுக்குபட்ட பாலகர்களாயிருந்தவர்கள். நல்லூரில் திலீபனையும் , யாழ் கிளிநொச்சி முல்லை என்று எங்கும் நினைவேந்தலையும் நடத்தியிருக்கிறார்கள். நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அதற்கு முன்னரான காலத்தில் எந்தநேரமும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற போர்காலத்தில்கூட பொங்குதமிழை நெஞ்சுரத்துடன் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒருசிலர் தலைவரின் பிறந்தநாளுக்கு சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்துகொண்டே சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து கொழும்புவரை கொண்டு செல்லப்பட்டு அடி உதையென்று உள்ளே போயிருக்கிறார்கள். இங்கே சமூக ஊடகங்களில் கொந்தளிக்கும் எம்மில் எத்தனைபேர் தாயகம் போனால் முகத்தை காட்டி சிங்களம்முன் தம்மை அடையாளப்படுத்த தயாராயிருக்கிறார்கள்? ஆனால் அவர்கள் முற்றுமுழுதாக சிங்களத்தின் நடுவில் நின்றே குரலெழுப்புகிறார்கள். நிகழ்காலத்தில் ஓரிரு சிங்களத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் எம் தேசிய உணர்வை அடகு வைத்துவிட்டார்கள் என்றோ அல்லது சிங்களவனுடன் சேர்ந்துவிட்டார்கள் என்ற தொனிபடவோ கருத்துக்கொண்டால் அது அவர்கள் தன்மான உணர்வை கொச்சைபடுத்தும் செயலாகவே கருதுகிறேன். அவர்கள் எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை மறந்தவர்கள் என்றிருந்தால் சிங்கள அமைச்சர்கள் பலர் வடக்கிலிருந்தே உருவாகியிருப்பார்கள். இது யாரையும் தாக்கி பேசும் நோக்கமல்ல, தாயகத்திலிருக்கும் எம் மக்களை எந்த விதத்திலும் தேசிய உணர்வில் தரம் தாழ்ந்தவர்களாக கருதகூடாது விட்டுகொடுக்க கூடாது என்ற அங்கலாய்ப்பு மட்டுமே.4 points
-
எச்சரிக்கை
3 pointsஎச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக ஒரு பில் கொடுத்தார் இனிமேலும் பொறுக்க முடியாது நேற்றிரவு கூரைக்குள் உங்களின் இரு குரல்கள் ஒன்று கொஞ்சம் சிணுங்கியது ம்ம் ......... குடும்ப வாழ்க்கை ஆரம்பிக்கிறீர்கள் போலிருக்கு ஒரு பூனையைக் கொண்டு வந்தால் உங்கள் கதை முடியும் பின்னர் பூனையை என்ன செய்வது? பகலிலும் பிராண்டுமே பூனை ஒரே வழி பொறி தான் உள்ளே வா உட்கார்ந்து சாப்பிடு என்று கூப்பிட்டு போட்டுத் தள்ளலாம் என்றிருக்கின்றேன் இப்பவும் நீங்கள் தப்பி வாழ ஒரு வழியிருக்குது அம்மணியின் கண்ணில் விழாதே அவவின் பொருட்களை தொடாதே சத்தமில்லாமல் ஓரமாக இருந்து விட்டு போங்கள் நான் பொறியை திருப்பிக் கொடுக்கின்றேன்.3 points
-
சிந்தனைக்கு சில படங்கள்...
3 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
அது... போன மாசம், இது... இந்த மாசம்.3 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!3 points
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
சிங்கள இடங்களுக்கு போனால் கடை தெருவில் சிங்களத்தில் முதலிருக்கும் தமிழ் இடங்களுக்கு போனால் முதலில் தமிழிருக்கும். இது ஒரு தமிழனின் வியாபாரம் தமிழ்நாட்டில் விற்கும் பொருளை முதலில் தமிழில் போடு மற்ற மொழிகளை பின்னால் போடு என்கிறார். அவர் சொல்வது சரியாகவே படுகிறது. அவர் மற்ற மொழிகளில் போடாதே என்று சொல்லவில்லையே.3 points
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
மொழி எங்கு தாழ்த்தப்படுகின்றதோ அங்கு கவனமும் கண்ணும் செலுத்தப்பட வேண்டியது அவசியம். யாழ்களத்தில் கூட தமிழ் மொழி தான் முதலிடம். நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன் என்றாலும் ஏன் யாழ்களத்தில் மூழ்கியிருக்கின்றேன் என்றால் புரிந்தவர்களுக்கு புரியும். தமிழை விற்கும் வியாபாரிகளுக்குபுரியாது. மற்றும் படி சீமான் அரசியல் அவர்/ அவர் கொள்கை சம்பந்தப்பட்டது. அதை விமர்ச்சிக்க யாருக்கும் உரிமை உண்டு.3 points
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
கஞ்சாவை மேற்கு நாடுகள் சட்ட பூர்வமாக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன: 1. கஞ்சாவில் இருக்கும் பதார்த்தங்கள் (THC etc.) அடிமைப் படுத்தும் வீரியம் (addiction) ஏனைய போதை வஸ்துக்களை விட மிகக் குறைவு. 2. கஞ்சாவினால் ஏற்படும் நீண்டகால உடலாரோக்கியப் பாதிப்பும் ஏனைய போதைகளோடு ஒப்பிடும் போது குறைவு. 3. சட்டங்களை மீறி இலகுவாக கஞ்சா விளைவிக்கப் பட்டு, தாராளமாகப் புளங்குகின்றது street drug வடிவில். இது கறுப்புச் சந்தை, வயது குறைந்தோர் கூட இதனால் நுகர வாய்ப்பிருக்கிறது. 4. இதையே அரச கட்டுப் பாட்டில் கொண்டு வந்து நுகர அனுமதித்தால், வயது குறைந்தோர் நுகராமல் கட்டுப் படுத்துவது இலகுவாக இருக்கும் (கறுப்புச் சந்தையின் மவுசு குறைந்தால்) 5. இவ்வளவு உப்புச் சப்பற்ற கஞ்சாவைக் கட்டுப் படுத்தும் முயற்சி, நிதி என்பன ஏனைய போதை வஸ்துக்களைக் கட்டுப் படுத்தப் பயன்படுத்தலாம்! overdose மரணங்களைத் தடுக்கலாம்!3 points
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
நீங்கள் எழுதினதில் உடன் பாடு இல்லை நீங்கள் அறியாததை எழுதுகிறேன் மூத்தவரே............போன வருடம் தமிழ் நாடு மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட போது...........அண்ணன் சீமான் தொட்டு கட்சி பிள்ளைகள் மக்கள் சேவ்வை செய்தார்கள் அவர்களின் நேரம் அதோடையே போச்சு சென்னைய தாண்டி பல ஊர்களில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்தார்கள்...................கட்சி விடையத்தில் தேர்தல் ஆனையம் தான் பெரும் பிழை அல்லது தவறு செய்து இருக்கினம்...............கர்நாடாகவில் ஏதோ ஒரு தேர்தலில் போட்டியிட்டு அவர் வாங்கின ஓட்டு 100க்கும் குறைவு..............அவர் 7அல்லது 8மானிலத்தில் பாராளமன்ற தேர்தலில் நிக்கிறார் இந்த முறை ஹா ஹா .............தமிழ் நாட்டில் அவருக்கு என்று கட்சி அலுவலகமும் கிடையாது 40 தொகுதியில் வேட்பாளர்களும் இல்லை😁😁😁😁😁...........இது தான் அந்த கட்சியின் நிலை😜............அப்படி பட்ட கட்சிக்கு 30லச்சம் ஓட்டு வாங்கி தமிழ் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியின் சின்னத்தை அவர்களுக்கு கொடுப்பது முறைகேடு😡.................உந்த சங்கி மங்கியல் திட்டம் போட்டு கட்சி சின்னத்தை பறித்ததால் அண்ணன் சீமானுக்கு முன்பை விட ஆதரவு கூடிட்டு போகுது🙏🙏🙏..................நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வைப்பதே இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் தான்............குடும்பம் குடும்பமாய் இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர் உறவினருக்கு சொல்லி அப்படியே காட்டுத் தீ போல் பரவுது தமிழகம் எங்கும்................ விஜேப்பி , திமுக்கா இவர்களின் ஜடிம் காசுக்காக வேலை செய்கினம்..........நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இனத்துக்கா இணையத்தில் இணைந்து இருக்கினம்................முன்னேர்கள் இரட்டை இழைக்கும் உதய சூரியனுக்கும் ஓட்டு போட்ட காலம் மாறும்..............இனி வளந்து வரும் பிள்ளைகளிடம் சில்லறை காசு எடுபடாது.................இன்னும் 10வருடம் கழித்து பார்த்தால் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பது முக நூல் ரிவிட்டர் யூடுப்...................இப்பவே எங்கட ஜரிம் மிக பலமாய் இருக்கு............கால போக்கில் நாம் தமிழர் ஜரிம்ம அடிக்க யாராலும் முடியாது................. படையை பெருக்கு தடையை நொறுக்கு............. வாழ்க பிரபாகரன் நாமம் 🙏🥰 வாழ்க சீமான் 🙏💪 நன்றி 🙏2 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருந்தா எப்படி? இரண்டு தட்டுதட்டி இது தாண்டா இந்தியா என்று காட்ட வேண்டாமோ? யே யே,...யே நீங்க இருவரும். ஒற்றுமையா சிரிக்கிறதைப் பார்க்க எங்களுக்கும் சிரிப்பு வருது.2 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
Election வருகிறது அல்லவா, தென்நாடு எங்கேனும் குண்டு வெடிக்கலாம், பாகிஸ்தான் ஊடுருவலாம், கல்வான் பள்ளத்தாக்கு போன்று வேறேனும் பள்ளத்தாக்கு ஒன்றில் இந்தியா அடிவாங்கலாம், காஸ்மீரில் குண்டு வெடிக்கலாம் அல்லது சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கலாம், அதன் தொடர்ச்சியாக, அப்படியே மோடி நெஞ்சைப் பிளந்து இராமனைக் காட்டும் அனுமானாக நோஞ்சான் இந்தியாவிற்கு காட்டப்படுவார். தேர்தலிலும் வெல்ல வைக்கப்படுவார் 😁2 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
ராஜ்நாத் சிங் அவர்கள் இந்இராணுவத்தின் மேல் ஏதோ கோபம் இருக்கு. அதுதான் சீனனிடம் போட்டுக் கொடுக்கிறார். 🤣2 points
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
போதைப்பொருள் மருத்துவத்திற்காக பாவிப்பதை தவிர்த்து வேறு எதற்கும் உபயோகிக்கக்கூடாது என்பதே என் கருத்து. எங்கை ஒருக்கால் இழுத்து பாப்பம் எண்டு போட்டு ஒரு இழுவை இழுக்க வெளிக்கிட்டால்.....தொடர்ந்து இழுக்க வேண்டி வரும் கந்தையர்.😂2 points
-
வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
நிச்சயமாக இதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை....எங்களின் தேசிய செயல்பாடு அவர்களின் கால் தூசுக்கு சமன் ....சில வருடங்களுக்கு முன் யாழ் இந்து மாணவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினர் எங்கயோ பார்த்த ஞாபகம்...சிங்கள பொலிசாரிடம் தமிழில் சொல்லுங்கோ என்று கேட்கும் துணிவு இருக்கின்றது அந்த இளைஞர்களுக்கு ....2 points
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.2 points
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
ஆயுதங்களோடு இருந்த ராணுவ வீரர்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை? எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்தியா-சீனா துருப்புகளுக்கு இடையே நடத்த கைகலப்பு சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் "இந்திய துருப்புக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை" என்று தெரிவித்தார். ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில், " உண்மைகளை நேராகப் பெறுவோம். எல்லைப் பணியில் உள்ள வீரர்கள் ஆயுதங்களை எப்போதும் ஏந்தி செல்கின்றன. குறிப்பாக இந்திய நிலையில் இருந்து வெளியேறும்போது. ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இருந்த வீரர்களும் ஆயுதங்கள் வைத்திருந்தனர். எல்லை மோதல்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நீண்டகால நடைமுறை (1996 & 2005 ஒப்பந்தங்களின்படி) உள்ளது" என்று பதிவு செய்தார். 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த நெறிமுறைகளை ஜெய்சங்கர் குறிப்பிடுகிறார். 1996 வருட ஒப்பந்தம் இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைதியை உறுதி செய்வதற்கான நல்லெண்ண நடவடிக்கைகள் பற்றியது. 1996 வருட ஒப்பந்தத்தின் பிரிவு VI (1)ன் கீழ், "இந்தியா-சீனா எல்லைகட்டுப்பாட்டு கோட்டின் இரண்டு கிலோமீட்டர் வரம்புக்குள் ... இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு , உயிரியல் சீரழிவு, அபாயகரமான இரசாயனம், குண்டு வெடிப்பு போன்ற ஆபத்து விளைவிக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஈடுபட கூடாது. இருப்பினும், வழக்கமான எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்கு தேவைப்படும் சிறியரக துப்பாக்கிகளுக்கு இந்த தடை பொருந்தாது ”என்று 1996 ஒப்பந்தத்தின் பிரிவு VI (1) கூறுகிறது. எவ்வாறாயினும், ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளா பிரிவு VI (4) தற்போதைய சூழலில் மிகவும் பொருந்த கூடியாதாக உள்ளது: பிரிவு VI (4)ல் “ எல்லைக் கோட்டு கட்டுப்பாட்டு பகுதி நிர்ணயிப்பது தொடர்பான வேறுபாடுகள் காரணமாக இரு நாட்டு வீரர்கள் நேருக்கு நேர்ந்தாலும், அவர்கள் கட்டாயம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல் நிலைமை அதிகரிப்பதைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும். பதட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் இராஜதந்திர பிரிவு மூலம் உடனடி ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிரிவு X (1) ல், “ இந்தியா- சீனா கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் ஏற்படும் பொதுவான புரிதல் சார்ந்து, தற்போதைய ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தப்படும். இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் செயல்முறையை ஒப்புக்கொள்கின்றன ” என்று தெரிவிக்கப்பட்டது. 2005 வருட ஒப்பந்தத்தின் பிரிவு 1 இல்,“இரு தரப்பினரும் எல்லைத் தொடர்பான கேள்வியை அமைதியான மற்றும் நட்புரீதியான ஆலோசனைகள் மூலம் தீர்ப்பார்கள். எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 2013 ஒப்பந்தத்தில் எந்தவொரு தரப்பும் அதன் இராணுவ திறனை மற்றொன்றுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று தெரிவித்தது. இருப்பினும், மேற்கூறிய ஒப்பந்த விதிகள், கடந்த திங்களன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலுக்கு நேரடியாக பொருந்தாது. கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் பேசிய இராணுவ அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் மோதிய பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் வெடிமருந்து உட்பட ஆயுதங்களுடன் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தினர். துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தாலும், தற்செயலான துப்பாக்கிச் சூடு (அ) தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காக ஆயுதத்தின் முனைகள் தரையை நோக்கி இருக்கும்" என்று தெரிவித்தனர். இந்த நடைமுறைகள் குறிப்பிட்ட காலத்தில் உருவானது. உதாரணமாக,1962 வருடத்திற்குப் பிறகு லடாக்கில் உள்ள சீன-இந்தியா எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதில்லை. இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டு தீர்வின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தகைய சூழலில், துப்பாக்கிச் சூடு அல்லாத பிற ஆயுதங்கலைப் பயன்படுத்த ராணுவப் படையினர் பழகிவிட்டனர். முந்தைய காலங்களில் பாறை கற்கள், மட்டைகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திருந்தாலும் யாரும் இறக்கவில்லை. எவ்வாறாயினும், இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மூர்க்கத்தனம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த மே 5/6 அன்று பாங்காங் த்சோ ஏரிக்கரையில் நடந்த மோதலின் போது 70 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் காயமடைந்தனர். சமீபத்தில், இந்திய இராணுவம் கூட லடாக் எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள தனது வீரர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கூட்டத்தை கலைக்கும் பாதுகாப்பு கருவிகள் வழங்க கட்டளையிட்டதாக சில தகவல்கள் தெரிவிகின்றன. மணிநேரங்களாக நீடித்த ஒரு மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து ஏன் எந்த அதிகாரியும் நினைக்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட பல பகுதிகளில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பீரங்கித் தாக்குதல்கள் கூட நியாயப்படுத்தப்பட்டிருக்கும் என்று சில இராணுவ வீரர்கள் வாதிட்டனர். இருப்பினும், இந்திய மற்றும் சீன வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் ஆட்களில் ஒருவரைத் தாக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் கடினம் ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது https://tamil.indianexpress.com/india/why-not-open-fire-even-soldiers-on-lac-were-carrying-arms-200727/1 point
-
இலை என்றால் உதிரும்
1 pointபெருமான் என்று புத்த பெருமானையே சொல்லியிருந்தேன்.......... இலைகளை அள்ளுவது மிகவும் சுலபம். அதுவும் அந்த இழுத்து அள்ளும் இயந்திரம் இருந்தால் இது ஒரு வேலையே இல்லை. இதுவே உடலுக்கும் ஒரு பயிற்சி ஆகட்டும் என்று குப்பை வாரி போல ஒன்றை தூக்கினால், அப்படியே சில நேரங்களில் அதிக வேலையாகி விடும்.....😀 அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் எவர் வெளியே வருவார்கள், இரண்டு கதை கதைப்போம் என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படியே நேரம் ஓடிவிடும்.1 point
-
மயிலம்மா.
1 pointமயிலாடட்டும் நாங்கள் வாசிக்கிறோம் ( ரசிக்கிறோம்) சுவி ஐயாவின் கதைகளில் ஒரு "சுவை " இருக்கும். தொடருங்கள் . இதனை நானும் வழிமொழிகின்றேன் அய்யனே1 point
-
இலை என்றால் உதிரும்
1 pointபுத்தரும், யேசுவும் சொன்னார்கள் சரி. பெருமானும் இப்பொழுது சொல்ல ஆரம்பித்துவிட்டாரா?1 point
-
இலை என்றால் உதிரும்
1 pointHome Depot வுக்கு போய் ஒரு புளோவர் (Blower)வாங்குங்க. உங்க குறையை அவர் தீர்ப்பார். எமது வீட்டிலும் இதே பிரச்சனை.1 point
-
இலை என்றால் உதிரும்
1 pointஇலை என்றால் உதிரும் -------------------------------------- என்ன அழகு என்றுதினம் மாறும் வர்ணங்கள் பார்த்து நிற்க இலைகள் கொட்ட ஆரம்பித்தன வாசல்களும் தெருக்களும்விழுந்த இலைகளால் நிரம்பி வழிந்தன என்றாலும் என் வீட்டில் அதிகம் என்றே தோன்றியது அயல் வீட்டு சருகுகளும்என் வாசலிலேயே ஒதுங்குவது போன்றும் இருந்தது நின்று கூட்டியால் நின்று நின்று கூட்டி அள்ளி அள்ளி குவிக்க அன்றைய பொழுது முடிந்து கொண்டிருந்தது அக்கம் பக்க வீடெல்லாம் குப்பையாக தெருவெல்லாம் சருகாக கிடக்க என் வீடு மட்டும் பளிச்சென்று இருந்தது 'அப்பாடா, முடிந்தது' என்று அண்ணாந்து வானம் பார்த்து நிற்க மெல்லிய காற்று ஒன்று முகம் வருடிச் சென்றது காற்று வந்து கொண்டேயிருந்தது இலைகள் புதிதாக விழுந்து கொண்டேயிருந்தன பொழுது சாயமனமும் சாய இனிஇன்னொரு நாள் கூட்டி அள்ளுவோம் என்று சலிப்புடன் அன்று முடிந்தது கனவில் ஒருவர் வந்தார் அரைக்கண் மூடி நீண்ட காது தொங்க இருந்தார் இதுவரை இலையே விழாத பெருமரம் ஒன்றிலிருந்து ஒரு இலை எடுத்து வா என்றார் எடுத்து வந்தால் என் மரத்திலிருந்து இலை விழாமல் இனிமேல் பார்க்கின்றேன் என்றார் நீங்கள் ஓடித் தப்பி விட்டு அதைக் கொண்டு வா இதைக் கொண்டு வா என்கின்றீர்கள், பெருமானே.1 point
-
இலை என்றால் உதிரும்
1 pointஅன்றாட நிகழ்வை , கால மாற்றத்தை கவி வரியாக சொல்ல முயன்று இருக்கிறீர்கள் .இடை வெளியை சற்று கவனியுங்கள். முயற்சிக்கு பாராட்டு .1 point
-
சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
சின்னம் பறி போனதோட பலரின் பொய் குற்ற சாட்டுக்கு முற்றுபுள்ளி வைச்சாச்சு.................1 point
-
என்ன பார்ட்டி இது??
1 pointவீடு வேலை வேலை வீடு இது தானே அண்ணா குடும்ப தலைவன் என்று இதுவரை.... இனியாவது போகமுதல் என்றாலும்...? கேள்வி கொஞ்சம் ஆரம்பித்ததும். 🤣 அதே... 😅1 point
-
எச்சரிக்கை
1 point
-
நான் கண்ட யாழ்ப்பாணம்!!
1 pointயாயினி & அல்வாயன் இது நான் எழுதிய பதிவு அல்ல. “உண்மை உரைகல்” என்பவர் முகநூலில் பதிந்த பதிவை இங்கே இணைத்துள்ளேன். கட்டுரையின் அடியில் அவரின் பெயரையும் இணைத்துள்ளேன். தவறான புரிதல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்.1 point
-
கொஞ்சம் ரசிக்க
1 point1 point
- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
ஈழ பற்று மொழி பற்று இதனால் தான் யாழில் நாம் இணைந்தோம்..............ஈழம் பற்றி இனி யாழில் எழுத பெரிதாக ஒன்றும் இல்லை.............இடை சுகம் பழகின உறவுகளுக்காக யாழை எட்டி பார்ப்பேன் உங்களின் எழுத்தை விரும்பி வாசிப்பவர்களில் நானும் ஒருவர் கள்ளுக் கொட்டில் தாத்தா.............. அடிப்படை புரிதல் இல்லாம அண்ணன் சீமானை விமர்சிப்பது தவறு.............சின்னத்தை தக்க வைக்காதவர் எப்படி அதை செய்வார் இதை செய்வார் என்று எழுதுவது முட்டாள் தனம் சின்ன விடையத்தில் நடந்தது சதி என்று தெரிந்த பிறக்கும் அநீதி இழைக்கப்பட்டவர் பக்கம் நிக்காம தேவை இல்லாம 200ரூபாய் கொத்தடிமைகள் போல் நக்கல் பானியில் எழுதுவது சரியே இல்லை யுவர் ஆனர்.................1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointமுழு அட்டவனைய வெளியிடாததுக்கு காரணம் பாராள மன்ற தேர்தல்...........பாராள மன்ற தேர்தல் வந்தால் ஜபிஎல்ல தென் ஆபிரிக்காவில் அல்லது டுபாயில் நடத்துவினம்............ ஜபிஎல்ல விடுங்கோ இன்னும் 4 மாதத்தில் 20அணிகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஜபிஎல்ல விட சூடு பிடிக்கிம்.................இப்ப இருக்கிற சின்ன அணிகள் பெரிய அணிய வெல்ல சாத்தியம் அதிகம்.................வெஸ்சீன்டிஸ் . அமெரிக்கா . கனடாவில் இந்த உலக கோப்பை நடப்பதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெரும்🙏🥰................1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........ 08. மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள். அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன் யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான். பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள். சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள். கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே. அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம். இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும். மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு பின்னால் போகிறார்கள். அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........! 🦚 மயில் ஆடட்டும்........ 08.1 point- ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
ஜேர்மனி செய்தது சரியானது காரணம் ஐரோப்பா ஒன்றியம் ஒரு நாடு போன்றது பக்கத்து நாடு அங்கீகாரம்…………………… வழங்கி இருக்கும் போது ஜேர்மன் தடை செய்து எந்தவொரு பிரயோஜனமுமில்லை மற்றும் கோப்பி தேனீர் கூட போதை உண்டு ...அளவுடன் பாவிக்கலாம் தடை செய்த நாடுகளில் களவாக பாவிக்கிறார்கள் தடை செய்ய உடன். பாவிக்கவில்லை என்று கருத்து இல்லை 1, விசா இல்லாமல் ஒரு நாட்டில் வாசிக்ககூடாது,......வாசிக்கிறார்கள் 2. ..வேலை அனுமதிப்பத்திரமின்றி வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 3,... பதிவு இல்லாமல் வேலை செய்ய கூடாது,.....செய்கிறார்கள் 4, வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும் ........பிழையான. கணக்கு காட்டி குறைந்த வரி காட்டுகிறார்கள் 5,....நான் பாவிப்பது இல்லை சட்டம் வந்து விட்டது பாவிக்கலாம். பாவிக்க போகிறேனா. ? இல்லையே?? 6, களவாக. செய்வதில் ஒரு சுகம் மகிழ்ச்சி உண்டு ......தடைகளை மீற. ஒரு ஆர்வம் இருக்கும் அனுமதி அலுப்பை தரலாம்,...எனவே… ..கஞ்சா பாவனையாளர்கள் குறையலாம்🤣🙏1 point- ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
இன்றும் கசிப்புக்கு வரவேற்பு இருக்கும் இடங்களில் இதை சொல்லி அடி வாங்கமுடியுமா?1 point- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம். நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப் சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂 (குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂1 point- எச்சரிக்கை
1 pointநீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். என் கண்ணுக்கு தெரிந்த உருவங்களை வைத்தே நான் அப்படி வகை பிரித்திருந்தேன். இதை தெளிவுபடுத்த சரியான ஒரு ஆள் இருக்கின்றார். என் நண்பன் தான். மிக நீண்ட நாட்களின் முன் இங்கு மிருக வைத்தியதுறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நூறு நூறு வெள்ளெலிகளாக நண்பனும், நண்பனின் பேராசிரியரும் வாங்குவார்கள். ஏதோ செய்வார்கள். ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. அப்பவே நண்பனுக்கும், அவனின் பேராசிரியருக்கும் தகராறாகி, அவன் வேறு எங்கோ போய் விட்டான். இப்ப எங்கிருக்கின்றான் என்று தெரியவில்லை. அவனுக்கு நியூ யோர்க் தோதான இடமாக இருக்கும் போல............. 😀😀1 point- ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
ஜேர்மனியின் இந்த கஞ்சா அரசியலை பல கட்சிகள் எதிர்க்கின்றன. அந்த எதிர்க்கும் கட்சிகளின் ஒரு கட்சியின் அங்கத்தவர்களில் நானும் ஒருவன். இப்படியான போதைவஸ்து கொள்கைகள் வருங்கால சமுதாயத்தை இன்னும் பாதிக்கும். கோக்கோ கோலா சிப்ஸ் சிகரெட் உடம்பிற்கு கேடு என ஒருபக்கம் போதித்துக்கொண்டு.....கஞ்சா பிரயோகத்திற்கு அனுமதியளிப்பது அரசுகளின் கையாலாகத்தனங்களில் ஒன்று.1 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
https://www.facebook.com/share/r/aA8mvyrs9jhGsXrd/?mibextid=xCPwDs தமிழனுக்கு தமிழனின் பணம் வேண்டும். ஆனால் தமிழ் வேண்டாம்.1 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
1 point- சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
நாங்க சின்னப் பிள்ளையா.. நேரா.. சீமான் அண்ணாவை கேட்டுக்கிறம். உங்க கருத்தைக் கேட்கனுன்ன அவசியமில்லை தானே.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07.1 point- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
உலங்கு வானுர்தி பயணம் செய்தவர்களில் பலர் யுத்தம் நிறைவடைந்தபின் பிறந்தவர்களாகவே இருப்பார்கள் இதிலிருந்து புலப்படுவது யாதெனில் எது பற்றியும் கவலைப்படாத அவர்கள் அவர்களுக்கான வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள், நாம் கண் முன்னே அனைத்தையும் ரத்தமும் சதையுமாக பார்த்துவிட்டு வந்தும் எது பற்றியும் கவலைப்படாது வானுர்த்தியில் சென்று இலங்கை அரசுக்கு அந்நிய செலவாணி அதிகரிக்க செய்யும்போது, இலங்கை அரசுக்கு எந்த அந்நிய செலாவணி வருமானமும் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்வது எந்த வகையிலும் தப்பில்லை இன துரோகமும் இல்லை வாழ்த்துக்கள் மாணவர்களே1 point- என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
முன்பக்கத்தில்.. கோவணத்துடன் ஓடிய கோத்தாவை போட்டிருந்தால்.. நூல் இன்னும் அமோகமாக ஓட வாய்ப்பிருக்கு. மேலும்.. வெளிநாட்டு சக்திகள் மட்டுமல்ல.. அனுராதபுரம் போய் சத்தியப்பிரமானம் எடுத்ததே பிழை. அது தமிழர் தலைநகரம். புத்தருக்கே பிடிக்கல்ல. அதுபோக.. நாம ஓடுவது முதல் தடவை அல்லவே. மண்டைதீவில் வைச்சும் ஓடினது தானே. அந்த வகையில் விற்பனையும் வருமானமும் தான் முக்கியம்.1 point- ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இன்று உலகை ஆள்வது அமெரிக்கா என்பது உலகறிந்த விடயம்.ஆகையால் டரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நான்கு வருடங்களுக்குள் மாற்றுக்கருத்து சரித்திரங்கள் எழுதப்படலாம் என பலர் ஊகிக்கின்றனர். 😄1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசிறிய வயதிலிருந்தே எம் ஜி ஆரை ரொம்பவும் பிடிக்கும். புலிகளுக்கு உதவிகள் செய்தார் எனும்போது ஏறத்தாள கடவுள் மாதிரியே தெரிந்தார்.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!1 point - சீமான் குடும்பத்தினர் பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.