Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20014
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/01/24 in all areas

  1. அதே… வாயள்ளி தின்றதும் தமிழே என் வாசலில் வந்ததும் தமிழே நோயள்ளும் போதிலும் தமிழே நான் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே தமிழே தமிழே… இது என் மண்.. இதை யாருக்கும் எதற்காகவும் விட்டு போகமுடியாது… பிள்ளைகள் முடிவு அவர்களது.. ஆனால் எனது முடிவு தெளிவானது.. குழப்பமற்றது.. ஆழ சிந்தித்து எடுத்தது.. அது மாறாது..
  2. 1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
  3. @வாதவூரான் என்னை போட்டு தள்ளிய போது (முதலாவது வீடியோ)
  4. நான் இன்னுமும் துனிசியா போகவில்லை. ஆனால் போய் வந்தோர் பலர் ஆகா..ஓகோ எண்டுதான் புகழ்கிறார்கள். உங்கள் படங்களை பார்க்க போகும் ஆசை வருகிறது. வடையை பற்றி கவலை வேண்டாம் அண்ணை, உங்கள் வீட்டில் இருந்து அருகில்தானே அம்மாச்சி - மலிவு என்றால் மலிவு, தரம் என்றால் தரம். அதையும் தாண்டி புனிதமானது. ——- எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந்நாடே மங்கையராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித் தழுவியதிந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே -
  5. 🤣 அது சரி சகோ ஆனால் இவர் போடப் போறவர் இரண்டு மடங்கு மொக்காச்சே🤣. அது தான் யோசிக்கிறன் (இப்ப மொக்கு என்றதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து நம்மை தான் போடுவது சுலபமாக இருக்கப் போகுது 🤣)
  6. நன்றி Goshan . வரகுணனும் நானும் ஒரே நாளில் பிறந்தவர்கள். குடும்ப நண்பர்கள். சுமந்திரனுடன் தாயார் இறந்தபோது கதைத்தேன்.
  7. இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் நான் போனது இலங்கையைத் தவிர்த்து இந்தியாவும் இங்கிலாந்தும் தான் ஆனால் இரண்டுமே பிடிக்கவில்லை. யாழ்ப்பாணம்/திருகோணமலை/வன்னிக்குப் போவது என்னை recharge செய்து மீள இயங்குவதாக உணர்வதால் அங்கே போகிறேன் அவ்வளவுதான். ஆனால் வாழ்நாளில் ஒரு தரமாவது Greeceற்கும் Egyptற்கு போகவேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
  8. எனக்கு உப்பிடி ஆரும் சொன்னால் காணும்.உச்சிமுடி நட்டுக்கிட்டு நிக்கும்....விசயத்தை ஒப்பேத்தாமல் நித்திரையே கொள்ள மாட்டன். 😂
  9. எண்ணுறோ இரண்டாயிரமோ நமக்கு அது பிரச்னையில்லை இனவாத சிங்களத்துக்குமுன்னால் கூனி குறுகி நம்மால் நிக்க முடியாது தமிழரை மட்டம் தட்டும் இனவாதம் இல்லாமல் போனால் சிலவேளை நான் அங்கு போகக்கூடும் .
  10. இதையே போடமுடியல? 😅 நீங்க அவரை போட போறீங்க?? 🤣
  11. வரும் தேர்தலில் சொல்லுங்கோ என மக்களுக்கு இவர் சொல்கிறார். ————- சொல்கேயிம் உடன் யாராவது தமிழர் தரப்பு தொடர்பில் உள்ளதா? நல்லவர், கெட்டவர், நம்பமுடியாதவர், ஏஜெண்ட், சுயநலவாதி என்பவை சகலதுக்கும் அப்பால் - எமது கோரிக்கைகளின் நியாயம் இவருக்கு பாலா அண்ணையால் நன்கு உணர்த்தப்பட்டது என நினைக்கிறேன். இப்போ எமக்கு இவர் பரிந்துரைப்பது என்ன? யாருக்காவது தெரியுமா?
  12. இந்தக் கேள்விகள் என் மனதிலும் வருவதுண்டு. நீங்கள் எழுத்திலே கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி அண்ணை. அற்புதமான சிந்தனை வெளிப்பாடு. என் மனதிற்கு ஆறுதலான எழுத்தாக உணர்கிறேன்.
  13. "நன்றியுள்ள நண்பன்" [நாய்] பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும் அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம்பி, எப்படி சுகம் என்று விசாரிப்பது வழக்கம். அப்பொழுது அந்த அவர்களின் நாய் என்னைச் சுற்றி துள்ளி குதிக்கும். நான் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 'நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா' நான் பக்கத்து வீட்டை கடந்து போகும் போதும் வரும் போதும் , அந்த அவர்களின் நாய், வால் ஆட்டிக்கொண்டு என் காலடிக்கு வரும். ஆனால் நான் கெதியாக நடந்து அதை கடந்து போய்விடுவேன், ஆனால், பக்கத்து வீட்டு அம்மா அதை பார்த்து சிரிப்பார். ஏ தம்பி, ‘யாவரினுங் கடையனாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு’ என்று மக்களைக் காட்டிலும் விலங்கு இழிபிறப்புடையது; விலங்கில் மிக இழிந்தது நாய். நாய் போன்ற இழி பிறப்புடையவன் யான் என்று மாணிக்கவாசகர் ஆண்டவனிடம் கூறியது தெரியாதோ என்று கேட்டார். நான் அதற்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ தானே? ஒருவேளை அவருக்கு நாற்பது வயதோ ? என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன் எம் வீடு மலை நாட்டில் இருந்ததால், எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு சிற்றோடை ஒன்று இருந்தது. இது ஒரு சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இது ஆற்றை விடச் சிறியது என்றாலும், தாராளமாக அதில் நீந்தக் கூடிய அளவு நீர் ஓடிக் கொண்டு இருக்கும். எனவே நான் தினம் அதில் நீந்துவது வழமை. இந்த சிற்றோடை அருகில் இருக்கும் ஆற்றிலிருந்து பிரிந்து வருகிறது. நீர் பெரிய தாழம் இல்லை, ஆனால் விரைவாக ஓடுகிறது. அது எமது வீட்டை தாண்டி, கீழ்நோக்கி ஓடி, ஒரு முக்கால் மைல் தூரத்தின் பின் ஒரு நீர்வீழ்ச்சி மீது விழுகிறது. நான் அப்படி தினம் நீந்தும் பொழுது, எனோ, அந்த பக்கத்து வீட்டு நாயும் வந்துவிடும். நான் கல் எறிந்து துரத்தினாலும், அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் என்னை பார்த்த படியே இருக்கும். நானும் அதை பின் கவனிக்காமல் விட்டு விட்டேன் ஒரு கோடை காலத்தில், அன்று நான் அரை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியதால், வழமைக்கு முதலே நான் நீந்த ஓடைக்கு போனேன். கையில் ஒரு கல்லுடன். நீருக்குள் போகுமுன் சுற்றிப்பார்த்தேன், அந்த பக்கத்து வீட்டு நாயை காணவில்லை. ஒருவேளை நான் இன்று முந்தி வந்ததால், கவனிக்கவில்லையோ என்று சிந்தித்தபடி, கல்லை எறிந்துவிட்டு , நீரில் குதித்தேன். அன்று தண்ணீர் மிகவும் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் வழமையை விட அதி வேகத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆகவே என்னை கீழே போகும் நீர் இழுத்து போக கொஞ்ச நேரம் விட்டுவிட்டு, பின், மேல் நோக்கி, ஓடைக்கு எதிராக நீந்தி பொழுதைக் கழித்தேன். அது மிகவும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால், நேரம் போகப் போக திரும்பி, ஓடைக்கு எதிராக நீந்துவது கடினம் கடினமாக களைப்பினால் வரத் தொடங்கியது. இனி இப்படி நான் நீந்துவதை நிறுத்தவேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் , நான் உணர்ந்தேன் , நான் ஏற்கனவே கீழ் நோக்கி பலதூரம் போய்விட்டேன் என்று. என்னால் நீர் அருவியின் மீது, நீர் பாயும் சத்தமும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. நான் உடனடியாக மேல்நோக்கி நீந்த முற்சித்தேன். ஆனால் என் உடல் அதற்கு இடம் அளிக்கவில்லை. அப்பத்தான் என் தனிமை, வரப்போகும் பயங்கரம் எல்லாம் என் கண்முன் நிழலாக வந்தன. அந்த நேரம் என் கண்ணின் ஒரு கோணத்தில், அந்த பக்கத்து வீட்டு நாய் ஓடையின் கரையில் மிகவும் வேகமாக கீழ் நோக்கி ஓடுவதைக் கண்டேன். அது என்னை கடந்து போனபின், நீரில் குதித்து, நடுப்பகுதியில் தன்னை மிதக்க வைத்துக்கொண்டு என்னையே விடாமல் பார்த்துக் கொண்டு காத்து நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை . ஒரு வேளை நான் கல்லால் எறிவானோ என்று அப்படி நிற்கிறதோ என்று எண்ணினேன். என் உடலில் பலம் இப்ப இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை, ஓடை நீர் என்னை வாரி அள்ளிக் கொண்டு போக தொடங்கி விட்டது. நான் அந்த பக்கத்து வீட்டு நாயை கடந்ததும் , அந்த ஆழமான நீர் வீழ்ச்சியில் விழப் போகிறேன். அது என் முடிவு என்று எண்ணி கண்ணை இருக்க மூடிவிடடேன், என்றாலும் சற்று நேரத்தின் பின் கண் திறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் ! நான் நீர் ஓட்டத்துடன் நாய்க்கு கிட்ட கிட்ட வர, அந்த நாயும் தன்னை என்னைத் தடுக்கக் கூடியதாக சரிப்படுத்திக் கொண்டு இருந்தது . அப்ப தான் அந்த நாயின் திட் டம் எனக்குப் புரிந்தது. நான் அதற்கு கிட்ட போனதும் அதன் நீண்ட உரோமத்தை இருக்க பிடித்துக் கொண்டேன் அது உடனடியாக குறுக்கே நீந்தி கரையை அடைந்தது. நானும் பக்கத்து வீட்டு நாயும் கரையை அடைந்ததும், ஓடையில் இருந்து வெளியே வந்து, அந்த கரையிலேயே களைப்பினால் படுத்துவிட்டேன். ஆனால் அந்த நாயோ , அப்படியே என்னை விட்டுவிட்டு ஒரே பாச்சலில் பாய்ந்து எங்கள் வீட்டு பக்கத்தை நோக்கி, மலையில் ஏறி ஓடத்தொடங்கி விட்டது. நான் தனிய அந்த களைப்புடன், படுத்து இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. அதை கூப்பிடுவோம் என்றால், அதன் பெயர் கூட எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டு அம்மா தன் மகளின் செல்லப் பிராணி என்றும் , அதை அவள் எதோ ஒன்று சொல்லி கூப்பிடுவதாக சொன்ன ஞாபகம். அந்த பெயர் என் மனதில் வரவே இல்லை. ஆகவே நான் மீண்டும் மணலில் படுத்தேவிட்டேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கண் விழிக்கும் பொழுது முதல் உதவியாளர்கள், அந்த பக்கத்து வீட்டு நாய், அந்த அம்மாவின் மகள் எல்லோரும் என்னை சுற்றி தேவையான உதவிகள் செய்து கொண்டு நிற்பதைக் கண்டேன். எனக்கும் ஓரளவு தெம்பு வந்துவிட்டது. அந்த நாய் நான் முழித்ததை கண்டதும் வாலை ஆடிக்கொண்டு பக்கத்தில் வந்து காலை நக்கியது. நான் இப்ப அருவருப்பு அடையவில்லை, கல்லால் எறியவும் இல்லை, அதை அணைத்தபடி, பக்கத்து வீட்டு அம்மாவின் மகளை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை கொள்ளை அழகு. அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி, நான் எழும்ப கை நீட்டினாள்! அன்று அவளின் கை பிடித்தவன் தான், இன்று அதை நிரந்தரமாகி விட்டேன் . இப்ப என் தனிக் குடும்பத்தில், நானும், அவளும் அந்த நாயும் தான்! ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அந்த நாயின் பெயர் பப்பு , அவளின் பெயர் ஜெயா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. வணக்கம் அப்பன்! அருமை,பெருமை எல்லாவற்றையும் எம்முடனே நிற்கட்டும். ஏனென்றால் இங்குள்ள சமூக நலன்வாதிகளுக்கு சீமான் என்றால் ஆமைக்கறியும் ஆமை ஓடும் தானே ஞாபகத்திற்கு வரும்.😛 கேட்டால் நாங்கள் சாதியொழிப்பிற்கு வெட்டுறம் புடுங்கிறம் என்பார்கள். ஆனால் தங்கள் குடும்ப விடயங்கள் என்றால் சாதி குலம் கோத்திரம் பார்ப்பார்கள். தங்கள் பிள்ளைகளை வெள்ளைக்காரனுக்கோ வெள்ளைக்காரிக்கோ கலியாணம் சீரும் சிறப்புமாக செய்து வைப்பார்கள். ஆனால் சாதி குறைந்த என அடையாளப்படுத்தப்படும் ஒரு தமிழ் இனத்தவருக்கு மறந்தும் தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொடுக்க மாட்டார்கள். 😎 இப்படிப்பட்டவர்கள் தான் சீமானையும் சீமான் கொள்கையையும் வெறுப்பவர்கள். 👈🏽
  15. முதலில் இதை பற்றிய விவாதங்களை சமூக ஊடகங்களில் விவாதிப்பதை தடை பண்ணனும் குறிப்பிட்ட ஊசியை போட்டு நன்றாக இருப்பவனும் பயத்திலே மேலே போய் சேரப்போகிறார்கள். ஊரில் இருக்கும்வரை முணுக் என்றால் சாதாரண காய்ச்சலுக்கும் போடும் பென்சிலின் ஊசி யில் இருந்து போலியோ ஊசி வரை கண்ட கண்ட ஊசிகளை போட்டது உண்டு அவற்றுக்கும் பத்தில் ஒன்றுக்கு அல்லது ஆயிரத்தில் நாலுக்கு பக்க விளைவுகள் இருந்திருக்கலாம் இருந்தது .சிலருக்கு பென்சிலின் ஒவ்வாமை காரணத்தினால் மேலே போனவர்களும் உண்டு பெரிதாக செய்தி எடுபடாது என்ன அப்போ டிஃடொக் வாட்சப் முகநூல் கிடையாது அபோது வாழ்ந்த மனுஷர்களும் நிம்மதியாய் வாழ்ந்து நிம்மதியாய் போய் சேர்ந்தனர் .
  16. அருமை அருமை👍....................................
  17. "ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் மஞ்சள் கிழங்கென தோற்றத்தை கண்டு இஞ்சிபிடுங்கி தின்ற குரங்கு கதையாகும் !" "வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் கள்ளம் கபடமற்ற ஞானப் பார்வையில் உள்ளம் நிறைவு கொண்ட இளைஞர்கள் கேள்விஞானம் பெற்று சிக்கலையும் நீக்குவார்கள் !" "ஆழமற்ற குறுகிய மேலோட்ட பார்வைகள் பலமரம் கண்டதச்சன் ஒருமரமும் வெட்டானாகிறது ஆழமான தெளிவான எமது அறிவியல் குழப்பம்நீக்கி அறிவியல் எல்லைகளைத் திறக்கிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope, 1688-1744) 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில அறிஞராவர். இவர் தனது திறனாய்வுக் கட்டுரைகள் ['essay on criticism'] என்பதில், அற்ப அறிவோடு எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும் என சில எடுத்துக் காட்டுகளுடன் கவிதையாக குறிப்பிட்டு இருந்தார். அதை வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், ஆனால் அவரின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன். அத்துடன் கிரேக்க புராணங்களில் கலை அல்லது அறிவியலின் பாதுகாவலரான 'மூஸ்' அல்லது 'மியூஸ்' [Muse] தெய்வம் 'சரஸ்வதி'யால் பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கிரேக்க புராணத்தின் படி, பியரியன் ஊற்று [Pierian spring] என்பது பண்டைய கிரேக்கத்தில் இருந்த மாசிடோனியா ( Macedonia] என்ற ஒரு இராச்சியத்தில் காணப்படட தெய்வீக ஞான ஊற்று ஆகும். படிப்பு என்பதற்கு குறியீடாக, அந்த பியரியன் ஊற்றை போப் பயன்படுத்துகிறார். Alexander Pope, a translator, poet, was born in London in 1688. He wrote “An Essay on Criticism” when he was 23. In Part II of this Essay on Criticism includes a famous couplet: 'A little Learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian Spring ' . Translation of this in Tamil is given here. Here's the line in its original habitat from Alexander Pope's An Essay on Criticism (1709): "A little learning is a dangerous thing; drink deep, or taste not the Pierian spring: there shallow draughts intoxicate the brain, and drinking largely sobers us again. Fired at first sight with what the Muse imparts, In fearless youth we tempt the heights of Arts Short views we take, nor see the lengths behind, But, more advanced, behold with strange surprise New distant scenes of endless science rise !" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  18. உங்களின் கருத்துக்கு நன்றிகள்.
  19. ரொம்பவும் குற்ற உணர்ச்சியாக இருந்திருக்குமே? பப்பு இல்லா விட்டால் தில்லையே இல்லை. எத்தனை தடவை நாய்கள் எத்தனையோ பேரின் உயிர்களை அதுவும் குழந்தைகளை காப்பாற்றுவதை காணொளிகளில் கண்டுள்ளேன். ஆனாலும் நீங்க பலே கில்லாடி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
  20. நீங்கள் சொன்னது மூன்று வகையில் சரி. 1. இலங்கையில் சிங்கள இனவாதம் தீராது. இது மிக சரி. அதே போல் 2. இனவாதம் தீரும் மட்டும் (அதாவது ஒரு போதும் இல்லை) எல்லாராலும் காத்திருக்க முடியாது. 3. அதே போல் மிக மோசமான இனவாதம், இன ஒதுக்கல் இருக்கிறது ஆனால்….. @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.
  21. என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
  22. அதாவது நீங்கள் பார்க்க வேண்டிய நெருக்கமான அனைத்து உறவுகளும்,நண்பர்களும் வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள் போல...? ஆனால் எம் / என் நிலை அப்படி இல்லையே. என் சகோதரி தொட்டு, எல்லா நெருக்கமான உறவுகளும் பல நல்ல நண்பர்களும் அங்குதான் உள்ளனர். எனவே அங்கு போவது தவிர்க்க முடியாதது.
  23. எப்படி இந்த எழுத்துக்கள் பெரிதாக வந்தன?
  24. ஏனையோருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் - கொப்பேகடுவ சந்தி/மன்னம்பிட்டியை தாண்டும் போது என் பீலிங் “சின்ராசுவை இனி கையில் பிடிக்க முடியாது” என்பதே😎.
  25. நோ ...... இது விங் பரீட்சை.......! 😂
  26. நான் மொக்கு மாதிரி K அல்லோ போட்டுப்பாத்தனான் தலை ஸ்ரைலா G அல்லோ போட்டது @goshan_che
  27. அண்ணை இது விசப்பரீட்சை என்று தோன்றுகிறது.
  28. "ஏஜெண்ட்_எரிக்_சொல்ஹெய்ம்" வாங்கின காசுக்கு நல்லாய் வேல பாக்குது. எங்கே அந்த "யசூஷி_அகாஷி"யையும் கூட்டி வாங்கோவேன். அன்றே எங்கள் தத்துவ ஆசிரியர் இவர்களைப் பற்றித் தன் "போரும் சமாதானமும்" நூலில் சொல்லியுள்ளார்.
  29. மக்கள் எங்கையா வீழ்த்தினார்கள்? இதை இலங்கை மக்களல்லவா சொல்ல வேண்டும்.
  30. மாவீரரான மதிமகள் (பி.ம. துவாரகா) அவர்களின் பிறப்புச் சான்றிதழ் அன்னார் தமிழ்நாட்டில் பிறந்துள்ளார்.
  31. போட்டுத்தள்ளுவது ஓகே, ஒரு @ போட்டு போட்டுதள்ளுங்கப்பு🤣
  32. முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில விஷயங்களை சொன்னார். பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்க்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம். நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதானமளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.) குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்❓ குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான். இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள். போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.) ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.) ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது... ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு. ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்ட பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று பல வகைப்படும். ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு வெளியெற முடியாமல் அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை. நாம் செய்யும் உதவி மற்றவருக்கு பயனுள்ளதாக அமையட்டும் கோபாலகிருஷ்ணன். Mantras and Miracles
  33. பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ…. நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். ———- @nilmini அக்கா, 1982 ரோயல் தமிழ் பெடியள் (!!!) எல்லாரும் இலங்கையில் ரியூனியன் வைத்த வீடியோ வாட்சப்பில் பார்த்தேன். வரகுணன், சுமந்திரன், சஞ்சய் இராஜரட்ணம் இன்னும் உங்களுக்கு தெரிந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.
  34. ஓட்டு மெஷின் வழக்கு ஒரு முடிவோடு இறங்கிய உச்ச நீதிமன்றம் உத்தரவால் அதிரும் தேர்தல் உறவே, இந்த மெசின் வழக்கு முடிந்து விட்டதாம் தாங்கள் இந்த மெசினை முழுமையாக நம்புவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனராம்.
  35. பழையன கழிதலும் புதியன புகுதலும் கவிதை அழகு .......! 👍 நன்றி கோபி ......!
  36. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை காண்கிறேன் ! அதாவது புதுமைக்கு இடமளித்துப் பழமை மாறுகிறது என்னும் பொருளுடைய “The old order changeth, yielding Place to new” என்னும் லார்டு டென்னிசன் (Lord Tennyson) அவர்களின் பாடல் பகுதியையும் காண்கிறேன். எனினும் சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களை கவனத்தில் எடுத்து, பழையன எல்லாமே கழிந்து விடவேண்டும் - புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை? என்று நம்புகிறேன்
  37. ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்
  38. நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது......! 😍
  39. சீமான் அவர்களின் அருமையான காட்சி.
  40. படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..
  41. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
  42. "மனு தர்மம் / வினைப் பயன்கள்" மனு தர்ம சாத்திரம் அல்லது மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய ஆரிய சமூக அமைப்பில் எழுதப்பட்ட அரசியல் சட்டம். ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல. ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, தொன்று தொட்டுப் பரம்பரை பரம்பரையாக காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்து பிறர்க்கு கூறப்பட்டது அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என நம்பப்படுகிறது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து, அவர்களின் அறிவு, நம்பிக்கையைப் பொறுத்து எழுதப்பட்டது. அவ்வளவுதான். அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி. அது மட்டும் அல்ல சிந்து வெளி பழங்குடிகள் எதோ பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்து தெற்கு நோக்கி போனபின்பும், சிலர் அங்கேயே தங்கி ஆரியருடன் இணைந்த பின்பும் எழுதப்பட்டது. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம். "தவறு விடும் பலர், சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்து கொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம். ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது. அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி அல்லது மனு தர்மம் என்ற பெயரில்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் .... துன்பப்படுபவர்களைப் பார்த்து, இவர்கள் தம் ஊழ்வினையால் இன்று துன்பம் அடைகிறார்கள், ஆகவே அவர்களே தேடிக்கொண்ட இந்த துன்பத்திற்கு நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும், தம்மை அந்த துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில் [ஒரு கதைக்காக] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன் வரமாட்டார்கள் என்று நினைத்தால், கட்டாயம் அவர்கள் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் அவர்கள் உதவுவார்கள் என்பதுதான். இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்து விட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை. இப்படித்தான் நான் நம்புகிறேன். நீங்கள் எப்படியோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  43. மனுதர்ம சாஸ்திரத்தை மொழிப்பெயர்த்த பாரதியின் சிஷ்யன் - ஏன்? - ரவி சுப்பிரமணியம் https://www.facebook.com/FullyNewsy/videos/மனுதர்ம-சாஸ்திரத்தை-மொழிப்பெயர்த்த-பாரதியின்-சிஷ்யன்-ஏன்/1475185023400388/?mibextid=xfxF2i&rdid=V2LVdpydMFzzNfzB

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.