Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  3. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5417
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/05/24 in all areas

  1. இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
  2. செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்). யாழ் = மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்). 😂
  3. இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள் தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும் செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
  4. என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ••••••• தொடரும் ♻️
  5. இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.
  6. நீங்கள், நூல் விட்டுப் பார்க்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும். இந்த ஊடகங்கள்தான்... கள்ள மாடும், கள்ளக் காணியையும் பிடிப்பவர்களை காட்டிக் கொடுக்கின்றார்களில்லை.
  7. மிக்க நன்றி.. எனக்கு ஊரில் ஒரு கடமை உள்ளது, சகோதரியின் மேல் முழுப் பொறுப்பையும் போட மனம் வரவில்லை, அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே போகிறேன். அப்படி போகும் பொழுதெல்லாம் நான் பார்க்க நினைப்பதை பார்க்க முயற்சிக்கிறேன்.
  8. கனடா மிரர் தவறாக மொழி திரித்துள்ளது. இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். இனி, இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ஆதாரங்களை சமர்பித்து வழக்கு தொடங்கி முடிக்க சில வருடங்கள் செல்லும். அதன் பின் தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனாவா இல்லையா என முடிவு தெரியும்.
  9. யாழில் காணொளி பார்த்தால் விளம்பரத்தைத் தவிர்க்கலாம்.
  10. பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்? பௌத்தம் 2. பௌத்தம் என்றால் என்ன? புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது. 3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா? இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர். 4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா? நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிரியர் என்றும், அவர் போதித்த போதனைகளின் மீதும், அர்ஹத்தர்களின் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய போதனைகளை பின்பற்றுபவரே பௌத்தர். 5. ஆண் ‘பௌத்தர்களை’ எவ்வாறு அழைப்பது? உபாசகர் 6. பெண்களை? உபாசகி 7. புத்தரின் போதனைகள் முதன்முதலில் எப்போது உரைக்கப்பட்டன? அந்த நாளை சரியாக குறிப்பிடுவதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்த நூல்களின் படி அது கலியுகத்தின் (தற்போதைய யுகம்) 2513-ஆம் ஆண்டு ஆகும். 8. புத்தரின் கடைசி பிறவியில் முக்கியமான தினங்களை பற்றி சொல்லுங்கள். புத்தர் கலியுகம் 2478-ஆம் ஆண்டு விசாகா நக்ஷத்திரத்தில் வைகாச பௌர்ணமியும் செவ்வாய்கிழமையும் கூடிய நாளில் பிறந்தார். 2506-ஆம் ஆண்டு அரசை துறந்து காடேகினார், 2513-ல் ‘புத்தர்’ ஆனார். பிறகு 2558-ஆம் ஆண்டு தன்னுடைய எண்பதாவது வயதில் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு பரிநிர்வானத்தில் நுழைந்தார். இந்த ஒவ்வொரு நிகழ்வுமே வைகாசி பௌர்ணமியில் நடந்ததால் பௌத்தர்கள் வைகாச பௌர்ணமியை பெரும் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 9. புத்தர் கடவுளா? இல்லை, புத்த தர்மம் எந்த ”தெய்வீக” அவதாரத்தையும் போதிப்பதில்லை. 10. புத்தர் மனிதரா? ஆம். ஆனால் ஞானி, மேன்மையானவர், உன்னதமானவர். பிற எந்த உயிர்களை விடவும் எவற்றை விடவும் எண்ணற்ற பிறவிகள் வழியாக தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டவர், அவருக்கு முந்தைய புத்தர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 11. கௌதம புத்தருக்கு முன்பு வேறு புத்தர்கள் இருந்தனரா? ஆம், ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். 12.‘புத்தர்’ என்பது தான் இவரின் பெயரா? இல்லை, இது ஞானத்தின் உச்சத்தை அடைந்த பிறகு உள்ள நிலை அல்லது அந்த ஞான நிலையின் பெயர். 13. அப்படி என்றால்? ஞானம் அடைந்தவர், அல்லது முழுமையான ஞானம் கொண்டவர் என்று பொருள். பாலி மொழியில் ‘சப்பாண்ணு’, எல்லையில்லா அறிவுடையவன் என்று பொருள். சமஸ்கிருதத்தில் ஸர்வக்ஞன். 14. அப்போது புத்தரின் இயற்பெயர் என்ன? சித்தார்த்தன் என்பது அவரது இயற்பெயர், கௌதமர் அல்லது கோதமர் என்பது அவரது அரசகுடும்பப் பெயர். அவர் கபிலவஸ்துவின் இளவரசர் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஒக்கக்காவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். 15. அவருடைய தாய், தந்தையர்? தந்தை அரசர் சுத்தோதனர். அன்னை மாயா, மஹாமாயா என்றும் அழைப்பார்கள். 16. சுத்தோதனர் எந்ந நாட்டின் அரசர்? அரசர் சுத்தோதனர் க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களின் கபிலவஸ்துவிற்கு அரசராக இருந்தார். 17. கபிலவஸ்து எங்கிருந்தது? கபிலவஸ்து இந்தியாவின் நேபாள் பகுதியில் அமைந்திருந்தது. வாரணாசிக்கு வடகிழக்கே நூறு மைல் தொலைவிலும், இமயத்திலிருந்து நாற்பது மைல் தொலைவிலும் இருந்தது. இப்போது கபிலவஸ்துவின் எச்சங்கள் கூட அழிந்துவிட்டன. 18. கபிலவஸ்து எந்த நதிப்படுகையில் அமைந்திருந்தது? ரோஹினி நதி, இப்போது அதை கோஹனா என்று அழைக்கிறார்கள். 19. இளவரசர் சித்தார்த்தர் எப்போது பிறந்தார் என்பதை எனக்கு மீண்டும் ஒருமுறை சொல்லமுடியுமா? கிருஸ்து பிறப்பதற்கு 633 ஆண்டுகள் முன்பு சித்தார்த்தர் பிறந்தார். 20. புத்தர் சரியாக எந்த இடத்தில் பிறந்தார் என்று தெரியுமா? ஆம், அது இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேபாளத்தின் காட்டில், புத்தரை பின்பற்றிய புகழ்பெற்ற சக்ரவர்த்தி அசோகரின் ஸ்தூபி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் புத்தர் பிறந்த இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அந்த இடம் லும்பினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 21. சித்தார்த்தரும் அனைத்து இளவரசர்கள் மாதிரி ஆடம்பரமான ராஜபோக வாழ்க்கையில் தான் இருந்தாரா? ஆமாம், அவருக்கு அவர் தந்தையான அரசர் சுத்தோதனர், இந்தியாவின் மூன்று பருவகாலத்திலும் தங்குவதற்கு உகந்த அற்புதமான மூன்று மாளிகைகள் கட்டிக்கொடுத்திருந்தார். குளிர்கால மாளிகை ஒன்பது அடுக்குகளுடனும், வேனிற்கால மாளிகை ஐந்து அடுக்குகளும், மழைகால மாளிகை மூன்று அடுக்குகளும் கொண்டவையாக அவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. 22. அந்த மாளிகைகள் எவ்வாறெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தது? ஒவ்வொரு மாளிகைகளிலும் பலவிதங்களில் அழகழகான வண்ணங்கள் நிறைந்த வாசனை பூந்தோட்டங்கள் நீர்வீழ்ச்சியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு உள்ள மரங்கள் அனைத்திலும் பறவைகள் பாடிக்கொண்டும் மயில்கள் நடனமிட்டுக்கொண்டும் இருந்தன. 23. அங்கு அவர் தனியாகவா வசித்தார்? இல்லை இல்லை. சித்தார்த்தர் தனது பதினாறாம் வயதில் அரசர் சுப்ரபுத்தாவின் மகள் யசோதரையை மணந்து அவருடன் வாழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் நடனத்திலும் இசையிலும் தேர்ச்சிபெற்ற பல அழகிய ஆடல்பெண்கள் அவரை மகிழ்விப்பதற்காவே மாளிகைக்கு வந்துகொண்டும் இருந்தனர். 24. எவ்வாறு அவர் யசோதரையை மணம்புரிந்தார்? யசோதரையின் தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பல நாட்டின் இளவரசர்கள் தங்களின் வீரத்தையும் திறமைகளையும் காட்டவந்திருந்தனர். தொன்மையான க்ஷத்ரியமுறைப்படி அவர்களை வென்று சித்தார்த்தன் யசோதரையை மணம்புரிந்தார். 25. எப்படி, இத்தனை சுகபோகங்களுக்கு நடுவில் இருந்த ஒரு இளவரசன் ஞானியாக முடியும்? குழந்தைப் பருவத்திலேயே எல்லாக் கலைகளையும் சாஸ்திரங்களையும் விரைவாக புரிந்துகொள்ளும் ஞானம் சித்தார்த்தனுக்கு இயல்பாக அமைந்திருந்தது. மிகச் சிறந்த ஆசிரியர்கள் அவருக்கு அமைந்தார்கள், ஆனாலும் அவரால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை அந்த ஆசிரியர்களால் அவருக்கு கற்றுக்கொடுக்கமுடியவில்லை. 26. அவர் தனது பிரம்மாண்டமான அழகிய மாளிகைகளில் இருந்துகொண்டே புத்த நிலையை அடைந்துவிட்டாரா? இல்லை. அவர் எல்லாவற்றையும் துறந்து, தனிமையில் காடேகினார். 27. அவர் ஏன் அவ்வாறு செய்தார்? நம் துயரங்களின் காரணங்களை கண்டறியவும், அவற்றிலிருந்து விடுதலை அடையவும். 28. இவ்வாறு அவரை செய்யவைத்தது அவருடைய சுயநலம் அல்லவா? இல்லை, உயிர்களின்மேல் கொண்ட எல்லையில்லா அன்பினால் அவற்றின் நன்மைக்காக தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக்கொண்டார். 29. ஆனால் எவ்வாறு அவர் எல்லையில்லா அன்பை உணர்ந்துகொண்டார்? எண்ணற்ற பிறவிகள் பிறந்தும் பற்பல நூற்றாண்டுகளாகவும் அவர் இந்த அன்பை உணர்ந்து வந்திருக்கிறார், புத்தராகும் ஒரே லட்சியத்தோடு. 30. அவர் எதைத் துறந்து விலகிசென்றார்? அவருடைய அழகிய மாளிகைகள், செல்வம், ஆடம்பரம், சிற்றின்பம், மென்மெத்தைகள், நல்லாடைகள், உயர்தர உணவு அவரது அரசுரிமை ஆகியவற்றையும். தன்னுடைய காதல் மனைவி யசோதரை, அன்பு மகன் ராகுலாவையும் கூட அவர் விட்டுவிலகி சென்றார். 31. மனித குலத்தின் நன்மைக்காக வேறெவரேனும் இத்தகைய தியாகம் செய்திருக்கிறார்களா? இன்றுள்ள காலகட்டத்தில் யாருமில்லை. இதனால்தான் பௌத்தர்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர், பௌத்தர்களில் சிறந்தவர்கள் அவரைப் போல வாழ முயற்சிக்கின்றனர். 32. ஆனால் பலர் இவரை போலவே உலக இன்பங்களையும், ஏன் தங்கள் உயிரையே கூட சக மக்களின் நன்மைக்காக துறந்திருக்கிறார்களே? உண்மைதான். எனினும் இவர் மனிதர்கள் மேல் கொண்ட சுயநலமற்ற பேரன்பினால் அவர்களுக்காக யுகயுகங்களுக்கு முன்பு தீபங்கர-புத்தரின் காலத்தில் தான் அடையவிருந்த அரிய நிர்வாண முக்தி நிலையை துறந்தார். அப்போது அவர் பிராமண சுமேதராக பிறந்தார். நிர்வாணத்தில் நுழைவதற்கான நிலையை அடைந்திருந்தார். மனிதர்கள் மீது அன்பில்லாமல் தன்னை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால் அவர் நிர்வாணத்தில் நுழைந்திருப்பார் அல்லவா. விடுதலைக்கும் உலக அமைதிக்குமான வழியையும் அனைத்து உயிர்களுக்கும் பொதிப்பதற்காக நிர்வாணத்தை துறந்து, இப்பிறவியை எடுத்து, வலுகட்டாயமாக தன்னை உலக துயர்களில் ஆழ்த்திக்கொண்டார், புத்தனாக ஆகும்வரை. 33. அவர் கானகம் புகந்த போது அவருக்கு என்ன வயது? அப்போது அவருக்கு 29வது வயது. 34. எது அவரை தீர்க்கமாக மனிதர்கள் விரும்பும் அனைத்தையும் துறந்து கானகம் புக வைத்தது? அவர் தன் பல்லக்கில் வலம் சென்றபோது தேவன் ஒருவன் நான்கு வெவ்வேறு தருணங்களில் நான்கு விதமான ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் வடிவங்களில் காட்சி தந்தார். 35. அந்த வடிவங்கள் என்னென்ன? மிகவும் வயதாகி தளர்ந்த கிழவராக, நோய்வாய்பட்ட ஒருவராக, அழுகும் ஒரு பிணமாக, எல்லாம் துறந்த துறவியாக. 36. அவர் மட்டுமா அதை பார்த்தார்? இல்லை, அவர் சேவகன் சன்னாவும் அவைகளை பார்த்தான். 37. ஏன் சாதாரணமாக எல்லோரும் காணும் காட்சிகள் அவரை மட்டும் கானகம் செல்ல தூண்டியது? நாம் அடிக்கடி அத்தகைய காட்சிகளை காண்போம், ஆனால் அவர் கண்டதில்லை. ஆகையால் அவை அவர் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தின. 38. ஏன் அவர் அவற்றை இதற்கு முன்பு பார்க்கவில்லை? அவர் பிறந்த போது பிராமண நிமித்திகர்கள் அவர் ஒரு நாள் தன் அரசை துறப்பார் என்றும் பிறகு புத்தனாவார் என்று கணித்து கூறினார்கள். ஆகவே அரசர் அதாவது அவரது தந்தை தன் அரசை வழிநடத்தபோகும் ஒரே வாரிசு மனித துயர்களையும் இறப்புகளையும் காணும் சந்தர்பங்களை மிகவும் கவனத்துடன் தவிர்த்து வந்தார். இளவரசரிடம் அதை பற்றி பேசவும் யாருக்கும் அனுமதியில்லை. அவர் தனது அழகிய பெரிய மாளிகைகளிலும் பூந்தோட்டங்களிலும் ஒரு கைதிபோல வாழ்ந்துவந்தார். அவை பெரும் மதில்களால் சூழப்படிருந்தன, எத்தனை அழகு சாத்தியமோ அத்தனை அழகுடன் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆகவே இளவரசர் வெளியேயுள்ள துன்பங்களையும் வேதனைகளையும் சென்று பார்க்க விரும்பமாட்டார் என்று அவரது தந்தை நினைத்தார். 39. அவரின் தந்தை தன் மகன் உலக நன்மைக்காக எல்லாவற்றையும் துறந்து செல்வார் என எண்ணும் அளவிற்கு இளவரசர் அத்தனை அன்பு-உள்ளம் கொண்டவரா? ஆமாம். அவர் எல்லா உயிர்களிடமும் மிகுந்த அன்பும் கருணையும் கொண்டிருந்தார். 40. அவர் எங்ஙனம் துயரங்களுக்கான காரணத்தை கானகத்தில் அறியமுடியும் என எண்ணினார்? அனைத்திலிருந்தும் விலகி தொலைதூரத்திற்கு செல்வதனால் துயரங்களின் காரணத்தின் மீதும் மனித இயல்பு மீதும் ஆழ்ந்த சிந்தனையை செலுத்த இயலும். 41. எவ்வாறு அவர் மாளிகையிலிருந்து தப்பிசென்றார்? ஒருநாள் இரவில் அனைவரும் உறங்கியபின் அவர் விழித்துக்கொண்டார். தன் மனைவியையும் சிறு குழந்தையையும் ஒருமுறை பார்த்தார். பிறகு தனது சேவகன் சன்னாவை அழைத்தார். தன்னுடைய விருப்பமான வெள்ளை குதிரையான காந்தகாவில் சேணம் ஏற்றி மாளிகையின் வாயில்கதவருகே சென்றார். வாயில் காப்பாளர்கள் ஆழ்ந்த துயிலும்படி செய்தனர் தேவர்கள். ஆகையால் குதிரையின் குளம்பொலியைக்கூட அவர்கள் கேட்கவில்லை. சித்தார்த்தனின் புறப்பாடு - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 42. ஆனால் கதவு பூட்டித்தானே இருந்திருக்கும்? ஆம், ஆனால் தேவர்கள் சிறு ஒலிகூட எழாமல் கதவை திறக்கச்செய்தனர். பிறகு அவர் குதிரையில் இருட்டில் பாய்ந்து சென்றுவிட்டார். 43. அவர் எங்கு சென்றார்? ஆனோமா ஆற்றங்கரைக்கு. கபிலவஸ்துவிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பது. 44. பிறகு என்ன செய்தார்? குதிரையிலிருந்து கீழ் குதித்தார். அழகிய தலை முடியை வாளால் மழித்துக்கொண்டார். காவியுடை தரித்துகொண்டார். குதிரையையும் ஆபரணங்களையும் சன்னாவிடம் கொடுத்து தன் தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். 45. பிறகு? நடைப்பயணமாக ராஜகிரஹம் சென்றார். அது மகத அரசன் பிம்பிசாராவின் தலைநகரம். 46. அங்கு அவரை யார் சந்தித்தார்கள்? அரசன் தன் அமைச்சர்கள் அனைவருடனும் சென்று அவரை சந்தித்தார். 46a. அங்கிருந்து எங்கே சென்றார்? உருவெல்லா, தற்போது மஹாபோதி ஆலயமுள்ள புத்த கயாவிற்கு அருகில். 47. அவர் ஏன் அங்கே சென்றார்? அங்கிருந்த கானகத்தில் துறவிகளும் ஞானிகளும் இருந்தனர். தன்னுடைய தேடலுக்கான அறிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் அவர்களிடம் சீடனாக சேர்ந்துகொண்டார். 48. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? இந்து மதம். அங்கிருந்தவர்கள் பிராமணர்கள். 49. அவர்கள் என்ன கற்றுக்கொடுத்தனர்? கடுமையான தவத்தின்மூலமும் உடலை வருத்திக்கொள்வதன் மூலமும் மனிதனால் சரியான ஞானத்தை அடையமுடியும் என்று. 50. இளவரசன் இதை சரியென்று உணர்ந்தாரா? இல்லை, அவர்களின் நியதிகளை கற்றுகொண்டார், கடும் தவங்களை பயிற்சிசெய்தார். ஆனால் அவரால் மனித துயரின் காரணங்களை, முழுமையான விடுதலைக்கான வழியை அறியமுடியவில்லை. 51. பிறகு என்ன செய்தார்? உருவெல்லா அருகேயுள்ள கானகத்துள் சென்றுவிட்டார். அங்கே அவர் ஆறு ஆண்டுகள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அழியக்கூடிய தன் உடலின் மீது தீவிரமான ஒழுக்க விதிகளை ஏற்றிக்கொண்டார். 52. அவர் தனியாக இருந்தாரா? இல்லை, ஐந்து பிராமணர்கள் உடனிருந்தனர். 53. அவர்கள் பெயரென்ன? கொண்டன்னா, பட்டியா, வப்பா, மஹானாம, அஸாஜி. 54. தனது மனதை திறந்து வைத்து முழு உண்மையை அறிய எந்த விதமான திட்ட விதிகளை அவர் கடைபிடித்தார்? அவர் ஓரிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். வாழ்வின் அதிஉச்ச சிக்கல்களில் மட்டும் தன் மனதை நிலைக்கச்செய்தார். தனது தியானத்தை குலைக்கும் எந்த காட்சிக்கும் ஒலிகளுக்கும் தன் கவனம் செல்லாது அடைத்துக்கொண்டார். 55. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டாரா? ஆமாம், அந்த தியான காலம் முழுவதும் அவர் மேலும் மேலும் மிக சிறு அளவே உணவும் நீரும் உட்கொண்டார். அதன் உச்சமாக தினமும் ஒரு பருக்கை அரிசி அல்லது எள்ளு மட்டுமே உட்கொண்டார் என்று கூறப்படுகிறது. 56. இந்த கடும் தவம் அவர் தேடிய ஞானத்தை கொடுத்ததா? இல்லை. அவர் உடலளவில் மெலிந்துகொண்டே சென்றார். பலவீனமடைந்து கொண்டே இருந்தார். அப்போது ஒருநாள், மெல்ல நடந்து தியானம் செய்துகொண்டிருக்கும்போதே அவர் ஜீவ சக்தி சட்டென்று விலகி சுயநினைவிழந்து மண்ணில் விழுந்தார். 57. இதைப்பற்றி அவருடன் இருந்தவர்கள் என்ன நினைத்தனர்? அவர் இறந்துவிட்டார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து அவர் மீண்டும் விழித்துக்கொண்டார். 58. பிறகு என்ன ஆயிற்று? வெறும் உண்ணாவிரதத்தாலோ உடலை வருத்திக்கொள்வதாலோ அறிவு கிடைக்கப்போவதில்லை, திறந்த மனதுடன் இருப்பதாலேயே அது சாத்தியப்படும் என்னும் புரிதலை அடைந்தார். தன்னை வருத்திக்கொண்டதால் நூலிழையில் மரணம் வரை சென்று உயிர் திரும்பினார். எனினும் ஞானம் பெறவில்லை. ஆகவே ஞானம் அடையும் வரை வாழ்ந்தாக உணவு உட்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். 59. அவருக்கு உணவளித்தவர் யார்? சுஜாதா எனும் பெண்தான் அவருக்கு உணவளித்தாள். ஊர் தலைவரின் மகளான அவள் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவரை கண்டு உணவளித்தாள். அவர் எழுந்து உணவை பெற்றுக்கொண்ட பிட்சை பாத்திரத்துடன் நெரஞ்சரா ஆற்றங்கரைக்குச் சென்றார். ஆற்றில் குளித்துமுடித்து, உணவு உட்கொண்டு, கானகத்திற்குள் சென்றுவிட்டார். 60. அங்கு அவர் என்ன செய்தார்? நடந்த நிகழ்வுகளில் இருந்து உறுதியான முடிவை எடுத்துக்கொண்டு அந்திப்பொழுதில் ஒரு போதி (அஸ்வத்த) மரத்திற்கு சென்று சேர்ந்தார். அது தற்போதய மஹாபோதி ஆலயம் இருக்குமிடம். 61. அங்கு என்ன செய்தார்? சரியான ஞானம் கிடைக்கும்வரை அந்த இடத்தைவிட்டு விலகுவதில்லை என உறுதிகொண்டார். 62. மரத்தின் எந்த திசையில் அவர் அமர்ந்திருந்தார்? கிழக்குநோக்கி 63. அன்றிரவு அவர் அடைந்தது என்ன? அவரின் முற்பிறப்புகள், மறுபிறப்பிற்கான காரணங்கள், ஆசைகளை அழிப்பதற்கான வழிகள் ஆகியவற்றைப் பற்றிய ஞானத்தை அடைந்தார். விடியலுக்கு சற்று முன்பு அவரது மனம் முழுதும் மலர்ந்து விரிந்த தாமரை போல முழுமையாக திறந்துகொண்டது. உயர்நிலை அறிவொளி அல்லது நான்கு பெரும் உண்மைகள் அவர்மீது பொழிந்தன. அவர் புத்தரானார். எல்லாம் அறிந்த சர்வஞ்ஞர் ஆனார். 64. இறுதியாக அவர் மனித துன்பங்களின் காரணங்களை கண்டுகொண்டாரா? ஆம், இறுதியில் அவர் கண்டுகொண்டார். சூரியனின் காலைஒளி இருளை அகற்றி மரம், நிலம், பாறை, கடல், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பிற அனைத்தையும் காட்டுவதுபோல, அவர் உள்ளத்தில் உதித்த அறிவின் முழு வெளிச்சத்தால் ஒரே பார்வையில் மனித துன்பங்களுக்கான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் கண்டுகொண்டார். 65. இந்த சரியான ஞானத்தை அடைய அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டாரா? ஆமாம். மிக பிரம்மாண்டமான கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார். நாம் உண்மையை நோக்க தடைகளாக இருக்கும் இன்பங்களையும் ஆசைகளையும், உடலில் இயற்கையாக உள்ள குறைகளையும் அவர் தன் உடலால் வெல்லவேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் பாவ உலகின் தீய தாக்கங்கள் அனைத்தையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்தின் பல எதிரிகளை எதிர்த்து தீவிரமாக போரிடுவது போல அவர் போராடினார். போரில் வென்ற நாயகன் போல தன் இலக்கை அவர் அடைந்தார், மனித துன்பங்களின் ரகசியத்தை கண்டறிந்தார். புத்தரின் வெற்றி - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 66. இவ்வாறு அடைந்த ஞானத்தை கொண்டு அவர் என்ன செய்தார்? முதலில் பெரும் மக்கள் திரளுக்கு அந்த ஞானத்தை அளிப்பதில் தயக்கம் கொண்டிருந்தார். 67. ஏன்? அதன் அதிமுக்கியத்துவமும் உன்னதமுமே அதற்கு காரணம். மிக சிலரே அதை உணர்ந்துகொள்வர் என அஞ்சினார். 68. அவரின் இந்த நிலைப்பாடு மாறியதற்கு எது காரணம்? தான் அறிந்ததை தெளிவாகவும் எளிதாகவும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பது தன் கடமை என உணர்ந்துகொண்டார். தனிநபரின் கர்மத்திற்கு ஏற்ப மெய்மையின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என நம்பினார். விடுதலைக்கான ஒரே வழி இது ஒன்றே. அதை தன்னிடம் கோரும் எல்லா உயிர்களுக்கும் உரிமையுண்டு என்றும் நம்பினார். அகவே அவர் கடும்பயிற்சிகள் எதுவும் உதவாது என்று விரதத்தை நிறுத்திக்கொண்ட போது அவரைவிட்டு விலகிய ஐந்து நண்பர்களிடமிருந்து இந்த ஞானப் பகிர்வை தொடங்கலாம் என தீர்மானித்தார். (பிரம்ம தேவன் புத்தரிடம் அவரின் ஞானத்தை உயிர்கள் அனைத்திற்கும் பகிருமாறு வேண்டிக்கொண்டதாக புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன). 69. அவர்களை எங்கே கண்டுகொண்டார்? பனாரஸ் அருகே மான்கள் நிறைந்த இசிபட்டானா என்னும் சோலையில். 70. அந்த இடத்தை இப்போது கண்டுகொள்ளமுடியுமா? முடியும். சிறிது சிதிலமடைந்த ஸ்தூபம் அல்லது டகோபா இன்னமும் அங்கே நிற்கிறது. 71. அந்த ஐந்து நண்பர்களும் அவர் சொல்வதைக் கேட்க தயாராக இருந்தார்களா? இல்லை, முதலில் தயங்கினார்கள். ஆனால் அவரின் வசீகரிக்கும் ஆன்மீக தோற்றமும், மிக இனிமையான உறுதியான போதனையும் அவர்களின் முழு கவனத்தையும் அவருக்கு கொடுக்கசெய்தது. 72. இந்த சொற்பொழிவு எவ்வகையான தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது? வயதில் முதிர்ந்த ’கொண்டன்னா’ என்று அறியப்படுபவர்தான் முதலாவதாக தன் முன்முடிவுகளை விளக்கி புத்தரின் போதனைகளை ஏற்றுகொண்டார். அவரே முதல் சீடனும் ஆகி அர்ஹதரின் வழி சேரும் பாதையில் பயணிக்க முடிவுசெய்தார். மற்ற நால்வரும் விரைவிலேயே அவரை பின்தொடர்ந்தனர். 73. அடுத்து யார் அவரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டனர்? இளம் செல்வந்தனாகிய யாசாவும் அவனின் பணக்கார வணிகராகிய தந்தையும். மூன்றாம் மாத இறுதியில் சீடர்களின் எண்ணிக்கை அறுபதாக இருந்தது. 74. முதல் பெண் சீடர்கள் யாவர்? யாசாவின் தாயும் , துணைவியும். 75. அச்சமயம் புத்தர் என்ன செய்துகொண்டிருந்தார்? தன் சீடர்களை ஒன்றாக அழைத்து அவர்களுக்கு வழிமுறைகளை கூறி, தன் கொள்கையை போதிக்க எல்லா திசைகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்தார். 76. அந்த கொள்கையின் சாராம்சம் என்ன? விடுதலைக்கான வழி தூயவாழ்வை வாழ்வதிலும் நெறிகளை பின்பற்றுவதிலும் அடங்கியுள்ளது. அவற்றை பிறகு விளக்குகிறேன். 77. இவ்வகையான வாழ்க்கை முறைக்கு அவர் என்ன பெயர் சூட்டினார்? அஷ்டாங்க மார்க்கம் (உன்னத எண்வகை மார்கங்கள்) 78. பாலி மொழியில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரியோ அட்தங்கிகோ மக்கோ 79. பிறகு புத்தர் எங்கே சென்றார்? உருவெல்லா-விற்கு 80. அங்கு என்ன நடந்தது? ஜதிலர்களின் ஆசிரியரும் கல்விக்கு பெயர் பெற்றவருமான காஷ்யபரை தன் நெறிக்குள் உட்புகுதினார். அக்னியை வழிபடும் பெரும் குலமான ஜதிலர்கள் இதன் பிறகு புத்தரை பின்தொடர துவங்கினர். 81. இவரால் மாறுதலுக்கு உண்டான அடுத்த பெரும் நபர் யார்? மகத அரசன் பிம்பிசாரன். 82. அச்சமயத்தில் புத்தரால் மிகவும் விரும்பப்பட்ட நன்கு கற்ற எந்த இரண்டு சீடர்கள் அவரின் நெறிக்கு மாறினர்? சாரிபுத்திரர் மற்றும் மொகல்லானா. இதற்குமுன் இவர்கள் துறவி சஞ்சய்யாவின் தலைமை சீடர்களாக இருந்தனர். 83. எதனால் இவர்கள் இருவரும் மிகவும் அறியப்படுகிறார்கள்? சாரிபுத்திரர் அவருடைய ஆழ்ந்த கற்றலுக்காகவும் (பிரஜ்னா), மொகல்லான அவருடைய தனித்துவமான ஆன்மீக சித்திக்கும் அறியப்படுகின்றனர். 84. இத்தகைய அதிசய-சக்திகள் மாயஜாலவித்தைகளா? இல்லை. அனைவருக்கும் இயல்பாக கிடைக்கக்கூடியவைதான். முறையான பயிற்சியின்மூலம் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல்கள் இவை. 85. புத்தர் தனது குடும்பத்தை விட்டு நீங்கியபின்பு அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததா? ஆம். ஏழு வருடம் கழிந்து அவர் ராஜக்ரஹத்தில் வசிக்கும்போது அவரது தந்தை சுத்தோதன மன்னனிடமிருந்து வந்தது. தந்தை தன் மரணத்திற்கு முன் தன் மகனை மீண்டும் ஒருமுறை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 86. புத்தர் சென்றாரா? ஆம். அவருடைய தந்தை தனது எல்லா சுற்றத்துடனும், அமைச்சர்களுடனும் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். 87. மீண்டும் இளவரசராக அவர் சம்மதம் தெரிவித்தாரா? இல்லை. அவர் மிக இனிமையாக தன் தந்தையிடம் சித்தார்த்தன் என்ற இளவரசன் தற்போது இல்லையென்றும், அவன் 'புத்தனாகி' அந்நிலையில் எல்லா உயிர்களையும் சமமாக அன்பாக பார்க்கிறார் என்றும் விளக்கினார். மண்ணுலக அரசனாக குறிப்பிட்டவொரு மக்களையோ நாட்டையோ ஆள்வதைவிட தன்னுடைய 'தம்மத்தால்' மக்கள் அனைவரின் மனதையும் வென்று அவர்களை தன் வழியே வரச்செய்வதே தன் விருப்பம் என்று கூறினார். 88. அவர் யசோதரையும் அவரது மகன் ராகுலாவையும் சந்தித்தாரா? ஆம். அவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருந்த அவரின் மனைவி அவரைகண்டதும் வேதனையில் அழுதாள். மேலும் இளவரசனின் மகன் என்னும் உரிமையில் ராகுலனை அவரிடம் சென்று தன் அரசஉரிமைகளை கேட்க செய்தார். 89. என்ன நடந்தது? அனைவருக்கும் தம்மத்தின் வழியே எல்லா துயர்களையும் களைவதற்கான பாதையை போதித்தார். அவரது தந்தை, மகன், மனைவி, ஆனந்தன் (சகோதரன்), தேவதத்தன் என அனைவரும் அவரின் சீடராயினர். இவர்களில் அனுருத்தன் மற்றும் உபாலி ஆகியோர் பின்னாலில் புகழ்பெற்றனர். அனுருத்தன் பெரும் தத்துவவாதி ஆனார். அரண்மனை நாவீதரான உபாலி வினய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்றார். 90. முதல் பிக்குணி யார்? மஹாபஜபதி(மஹாபிரஜாபதி) கோதமி. இவர் இளவரசர் சித்தார்த்தரின் அன்னையான மாயாதேவியின் இளைய சகோதரி, சித்தார்த்தரின் வளர்ப்பு அன்னையும் ஆவர். இவருடன் யசோதரை மற்றும் நிறைய பெண்கள் பிக்குணிகளாக ஆனார்கள். 91. தன் இரண்டு மகன்கள் சித்தார்த்தனும் ஆனந்தனும், சகோதரனின் மகன் தேவதத்தன், மருமகள் யசோதரை, பேரன் ராகுலா என அனைவரும் ஆன்மீக பாதையை தேர்வுசெய்த போது வயோதிக மன்னர் சுத்தோதனரின் மனதில் அவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? இது அவரை மிகவும் வருத்தமடைய செய்தது. புத்தரிடம் புகார் கூறினார். மேலும், பெற்றோர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஒப்புதலின்றி இனி யாரும் துறவறம் ஏற்கக்கூடாது என்னும் ஆணையும் பிறப்பித்தார். 92. தேவதத்தனின் விதியை பற்றி கூறமுடியுமா? அவர் மிகுந்த அறிவுத்திறன் உடையவர். தம்மத்தின் ஞானத்தை மிக விரைவாக அறிந்துகொண்டார். ஆனால் அவரிடம் தீவிரமாக புகழுக்கான வேட்கையும் இருந்தது. அதுவே தேவதத்தனை புத்தரிடம் விரோதம் கொள்ளவும் அவரை வெறுக்கவும் தூண்டியது. கடைசியில் அவரை கொல்லவும் முயற்சிசெய்தார். மேலும், தேவதத்தன் மகத மன்னன் பிம்பிசாரரின் புதல்வன் அஜாதசத்ருவை தன் வசம் ஈர்த்து மன்னனை கொல்லத் தூண்டினார், அவனை தனது சீடனாக ஆக்கினார். 93. தேவதத்தன் புத்தருக்கு எதாவது காயம் ஏற்படுத்தினாரா? அது மட்டும் நிகழவில்லை. ஆனால் புத்தருக்கு எதிராக அவர் வகுத்த தீய செயல்கள் இறுதியாக அவரையே சூழ்ந்துகொண்டு துர்மரணம் அடைய செய்தது. 94. எத்தனை ஆண்டுகள் புத்தர் போதனையில் ஈடுபட்டுவந்தார்? நாற்பது ஆண்டுகள். இச்சமயத்தில் அவர் ஏராளமான பிரசங்கங்களும், வாதங்களும் நிகழ்த்தினார். புத்தரும் அவரது சீடர்களும் ஆண்டின் மழையில்லாத எட்டு மாதங்கள் முழக்க பயணித்து போதனை செய்வர். மழை காலங்களில் புத்த தர்மத்திற்கு மாறிய மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் அவருக்காக ஏற்படுத்திய பர்ணசாலைகளிலும் விகாரங்களிலும் தங்கிக்கொள்வர். 95. இவற்றில் புகழ் பெற்ற கட்டிடங்கள் யாவை? ஜெத்தாவனாரமா, வேலுவனரமா, புப்பரமா, நிக்ரோதரமா, இசிபட்டனரமா.(ஜேதவனமும் புப்பராமாவும் உத்தர பிரதேசத்தின் சிராவஸ்தியில் இருக்கும் புத்த மடங்கள். வேனுவனம் ராஜகிரஹத்தில் இருக்கிறது. இசிபத்தானா என்பது இன்றைய சாரநாத், நிக்ரோதராமா கபிலவஸ்துவில் உள்ளது) 96. எந்த வகையான மக்கள் அவராலும் அவரது சீடர்களாலும் புத்த தர்மத்திற்கு மாற்றப்பட்டனர்? எல்லா தரப்பினரும், எல்லா தேசத்து மக்களும், செல்வந்தர்கள் ஏழைகள், கூலிகள், மன்னர்கள், வலியவர் எளியவர், கல்லாதவர்கள், கற்றவர்கள் என அனைவரும். அவரது கொள்கை அனைவருக்குமானது 97. புத்தரின் இறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? தனது புத்த தன்மையை அடைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த வைகாச மாதத்தின் முழு நிலவு நாளன்று தன் இறுதி அணுகுவதை உணர்ந்தார். ஒரு மாலை பொழுதில் வாரனாஸிலிருந்து 120 மைல்கள் தொலைவிலுள்ள குசிநகரம் என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே மல்லர்களின் சால மரதோப்பில் இரண்டு சால மரத்திற்கு இடையே தொல்வழக்கப்படி வடக்கில் தலை வைக்குமாறு படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதில் படுத்துக்கொண்டு முழு அமைதியான மனதுடன் தன் சீடர்களுக்கு கடைசி அறிவுரைகள் வழங்கி, இறுதியாக விடைபெற்றும் கொண்டார். 98. அவர் தனது இறுதி யாத்திரைகளிலும் மக்களை புத்த தர்மத்திற்குள் புகசெய்தாரா? ஆம், மிக முக்கியமான நபர் ஒருவர் தர்மத்திற்குள் நுழைந்தார். புகழ்பெற்ற பிராமண பண்டிதர் சுபத்ரா. மேலும் மல்யா இளவரசர்கள் மற்றும் அவர்களை பின்பற்றும் அனைவருக்கும் தம்மத்தை போதித்தார். 99. வைகறை பொழுதில் என்ன நடந்தது? அவர் சமாதி நிலையில் உள்ளடங்கி, பின் நிர்வாணத்தை அடைந்தார். நிர்வாணத்தை அடைதல் - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 100. தன்னுடைய சீடர்களுக்கு அவர் அருளிய இறுதி சொற்கள் என்ன? “பிக்குகளே! நான் உங்களிடம் அழுத்தமாக கூறுவது இதுதான், மனிதர்களின் அதிகாரத்திற்கான விழைவு களையப்படவேண்டும். உங்கள் மீட்சிக்கான முயற்சியில் பெரும் கவனத்துடன் இருக்கவேண்டும்.” என்று கூறினார். 101. புத்தர், அதற்குமுன் இளவரசர் சித்தார்த்தன் என வாழ்ந்த இவரின் இருப்புக்கான வரலாற்று ஆதாரம் உள்ளதா? அவரின் இருப்பு வேறெந்த வரலாற்று மனிதபாத்திரத்தை விடவும் மிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 102. சில ஆதாரங்களை கூறுங்கள்? அவரை நெருக்கமாக அறிந்தவர்களின் எழுத்துபூர்வ ஆதாரங்கள் உள்ளன. அவரது காலகட்டம் சார்ந்த கதைகளில் குறிப்பிடப்படும் ஊர்கள் மற்றும் எஞ்சிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவரது காலத்திற்கு நெருக்கமாக வாழ்ந்த மன்னர்கள் அவரின் நினைவாக பாறைகளின் செதுக்கிய கல்வெட்டுகள், நிறுவிய ஸ்தம்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகியவற்றைக் கொண்டு இவரின் வாழ்க்கை பற்றிய கதையை உறுதிசெய்ய முடிகிறது. அவர் நிறுவிய சங்கத்தின் அறுபடாத தொடர்ச்சி. மற்றும் அங்கிருந்தவர்கள் அவரது வாழ்க்கை பற்றிய நிஜ தகவல்களை தொடக்கம்முதல் தலைமுறை தலைமுறையாக பேணி வந்துள்ளனர். அவர் இறந்த அதே ஆண்டில் பல இடங்களில் சங்கத்தின் மகாசபைகளும் கூடுகைகளும் நிகழ்ந்துள்ளன. அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை அதன் நிறுவனரின் உண்மையான போதனைகளை உறுதிசெய்வதற்காக நிகழ்ந்தன. உறுதிசெய்யப்பட்ட போதனைகளை ஆசிரியரிடம் இருந்து மாணவருக்கு கடத்தப்படுகிறது. இது இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அவரின் எரியூட்டத்திற்கு பிறகு எஞ்சிய அவரது உடல் பாகங்கள் எட்டு அரசர்களால் பங்கிடப்பட்டு ஒவ்வொன்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அரசன் அஜாத சத்ரு தனக்கு கொடுக்கப்பட பாகத்தை ராஜகீரில் அடக்கம் செய்து அதன்மீது ஸ்தூபம் நிறுவியுள்ளார். இரண்டு நூற்றாண்டுகள் முடிவதற்குள் அப்பாகம் பேரரசர் அசோகரால் மீண்டும் எடுக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முழுதும் பகிரப்பட்டது. தொடக்கம் முதலே அது பாடலிபுத்திர அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே அந்த உடல்பாகம் புத்தருடையதா இல்லையா என அறிந்துகொள்வதற்கான எல்லா வழிகளும் அசோகரிடம் இருந்தது. புத்தரின் பல சீடர்கள் அர்ஹத்தர்கள் ஆயினர். இதன்வழியாக அவர்கள் தங்கள் உயிர் ஆற்றலை கட்டுக்குள் வைத்திருந்தனர், ஆகவே அவர்கள் நீண்ட வயது வாழ்ந்திருக்க வேண்டும். எனவே புத்தரின் இறப்பிற்கு பிறகு அசோகரின் காலத்தில் புத்தரின் நேரடி சீடர் மரபு இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை மட்டுமே நீண்டிருக்கும். ஆகவே அசோகர் புத்தரின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நேரடியாக அந்த சீடர்களிடமிருந்து அறிந்திருக்க முடியும். (இரண்டாம் மகாசபை கூட்டத்தில் ஆனந்தரின் இரு சீடர்கள் இருந்தனர், அவர்களுக்கு நூறுவயது இருந்திருக்கலாம். அசோகரின் சபையில் அவர்களின் மாணவர்கள் இருந்தனர்.) மஹாவம்சம் சிங்களர்களின் பழம்பெரும் வரலாற்று பதிவு நூல். நன்கு ஏற்கப்பட்ட நூல். இது அரசன் வினயாவின் ஆட்சிகாலம் வரை சிங்கள வரலாற்றை பதிவுசெய்துள்ளது - (பொ.மு 543), இது கிட்டத்தட்ட புத்தரின் காலம். இதில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறிப்புகள், பேரரசர் அசோகர் பற்றிய குறிப்புகள் மற்றும் பௌத்த வரலாற்றில் அறியப்பட்ட அணைந்து ஆட்சியாளர்களின் குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. 103. எந்தெந்த பெயர்களில் புத்தர் அழைக்கப்படுகிறார்? சாக்யமுனி (சாக்கிய முனிவர்), சாக்யசிம்ஹம் (சாக்கிய சிம்மம்), சுகதர் (ஆனந்தமானவர்), சத்த்தர் (ஆசிரியர்), ஜினர் (வென்றவர்), பகவத் (புனிதமானவர்), லோகநாதர் (உலகத்தின் அரசர்), சர்வஞ்யர் (சர்வமும் ஆன ஒருவர்), தர்மராஜர் (தர்மத்தின் அரசர்), ததாகதர் (மகத்தானவார்) போன்று, இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அடிக்குறிப்பு: மதம் (religion) என்ற சொல்லை பௌத்தத்திற்கு பொருத்துவது சரியானது அல்ல. ஏனென்றால் அது மதம் அல்ல. அறதத்துவம், இதை நாம் பிறகு பார்க்கவிருக்கிறோம். பொதுவான பயன்பாட்டில், ஒரு குறிப்பிட்ட அற கொள்கையை பின்பற்றும் மக்களைக் கொண்ட குழுக்களுக்கு அச்சொல் பொருத்தப்படும். ஆனால் லத்தீன் வேரைக்கொண்ட ’religion’ என்ற சொல்லை ஐரோப்பியர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி சிங்கள பௌத்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சிங்கள பௌத்தர்களிடம் கிறிஸ்துவத்தில் இருக்கும் ‘பந்தம்’ (binding) போன்ற எந்த கருத்துக்களும் இல்லை. பந்தம் என்றால் ’இறைவனிடத்தில் தான் சரணடைவது’, அல்லது ’இறைவனிடம் சேர்வது’. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கும் பௌத்தம் மற்றும் புத்தருக்குமான தங்களது உறவை ’ஆகமா’ என குறிப்பிடுகின்றனர். இது சம்ஸ்க்ருத சொல், ‘அணுகுதல்’ அல்லது ’வருதல்’ என்று பொருள். ’புத்தர்’ என்பதற்கு ஞானம் அடைந்தவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களின் கூட்டுச்சொல் புத்தாகமா, இந்த சொல்லால்தான் அவர்கள் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றனர். இது ‘ஞானத்தை அணுகுதல்’ அல்லது ‘ஞானத்தை நோக்கி வருதல்’ என்ற அர்த்தத்தை கொண்டிருக்கலாம், அல்லது ‘சாக்கியமுனி’ என்ற கோட்பாட்டில் இருந்து வந்திருக்கலாம். கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் ஏற்கனவே இருந்த சொல் ‘ஆகமா’-வை ‘religion’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக கையாண்டனர். கிறிஸ்துவத்தை ’கிறிஸ்டியனாகமா’ என எழுதினர். இது கிறிஸ்டியனிபந்தனா என ஆகியது. பந்தனா என்ற சம்ஸ்கிருத சொல் சொற்பிறப்பியலின் (etymology) படி religion என்ற சொல்லுக்கு இணையானது. பௌத்தர்களுக்கு ’விபாஜவாதி’ என்ற பெயருண்டு, இதற்கு பகுத்து-அறிபவன் என்று பொருள். அவர்களுக்கு ’அத்வயவாதி’ என்ற பெயரும் உண்டு. இந்த விளக்கம் பொதுவாசகர்களுக்காக அன்றாடதளத்தில் பயன்படுத்தப்படும் ‘மதம்’ (religion) என்ற சொல்லை பௌத்த தத்துவம் பற்றி பேசும் போதும் பயன்படுத்துவதற்கு எதிராகவே அளிக்கிறேன். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/04/buddhist catechism-tamil.html
  11. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார். எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார். தமிழ் இனப்படுகொலை புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம். காசாவில் இடம்பெறும் மோதல் இந்த திரைப்படம், இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம் இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ray-of-hope-documentary-by-radhika-chitsabesan-1714862461?itm_source=parsely-api
  12. யாழ்களத்து மேற்குலக நன்றிக்கடன் விசுவாசிகளே! இப்போதாவது தெரிகின்றதா நாம் தேர்ந்தெடுத்த வாழ் நில அரசியல் நிலவரங்களை....? நான் மேற்குலக எதிரியல்ல. நான் சார்ந்த கட்சி நிலைப்பாட்டையே இங்கு எழுதுகின்றேன்.
  13. பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣
  14. சவுக்கு சங்கரை ஒரு மனிசனெண்டு நினைச்சு பெரிய ஜாம்பவான்கள் கருத்து எழுதுவதை என்னவென்பது? நிரந்தரமாக உள்ளுக்குள் இருக்க வேண்டிய நபர்.
  15. நல்ல பெண்....எம்.பி பதவியின் கடைசிக் காலத்தில் அரச அடிவருடிகளின் சேர்க்கையால் ..வழிதவறி பதவியிழந்தார்.....இது என் கருத்து மட்டுமே....😎
  16. தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு தத்தை மேல் வைத்த காருணியம். தவித்தே போகிறது அவன் மனம் தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!
  17. கூழுக்கு தேங்காய் சொட்டு என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........! 😂
  18. உத்தரவாதம் இல்லைத்தான். ஆனால் இந்த பணம் நேரடியாக போதை பாவிப்பவர்களுக்கு இன்றி, அவர்களை மீட்கும், போதை பழகாமல் தடுக்கும் செயற்திட்டங்களில் பயன்படுத்த படும். ஆகவே கொஞ்சப் பலனாவது வரும் என நினைக்கிறேன்.
  19. ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️ 😁
  20. ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️
  21. இதுவரை ஒரு பட்டமும் வாங்கவில்லை. இனி இருக்கிற கொஞ்ச காலத்திலாவது ஏதாவதொரு பட்டத்தை வாங்குவம். உங்க கையாலேயே வாங்கினால் ரொம்ப சந்தோசம்.
  22. இதை ச‌வுக்கு சொல்லி இர‌ண்டு மாத‌த்துக்கு மேல் இருக்கும் ச‌வுக்கு ஒரு கோமாளி சீமான் ச‌வுக்கு விடைய‌த்தில் த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம் த‌லைவ‌ர் மீதான‌ போலி குற்ற‌ சாட்டுக்கு அப்போது த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் வாய் திற‌க்க‌ வில்லை அது திருமாள‌வ‌னாய் இருந்தாலும் ச‌ரி சீமானாய் இருந்தாலும் ச‌ரி அந்த‌ விடைய‌த்தில் மாமா ப‌ய‌ல் ச‌வுக்கு மீது என‌க்கு க‌டும் கோப‌ம் வ‌ந்த‌து......................இந்த‌ எளிய‌ பிள்ளையால் என்ன‌ செய்ய‌ முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து ச‌வுக்கு எதிராக‌ போட‌த் தான் முடியும்...................... ச‌வுக்கு பொய்யையும் உண்மை போல் சொல்லும் ந‌ப‌ர் கைபேசிய‌ ச‌வுக்கு நிப்பாட்டினால் ச‌வுக்கு ப‌ற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.............................. த‌னி க‌ட்சி தொட‌ங்கி உத‌ய‌நிதி போட்டியிடும் தொகுதியில் நிக்க‌ போகிறேன் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா ச‌வுக்கு ஒரு காமெடி பீஸ் என்று ஹா ஹா....................................
  23. மொக்கன் கடை சாப்பாடும் வேணும், மாடும் வெட்டக்கூடாது. இனி vegan மாட்டு சூப்தான் அறிமுக படுத்த வேணும்🤣.
  24. அப்பிடியே மற்றைய நாடுகளிலும் கொள்ளையடித்ததையும் கொடுக்கலாமே. மிக முக்கியமாக பல உலக நாடுகளிடம் கப்பம் வாங்குவதையும் நிறுத்த வேண்டும்.
  25. சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை. இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂 மலர்பனி சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂
  26. வசிட்டரின் வாயால் கேட்கவேண்டும் என்றுதான்...ஒரு சின்ன கல்லை தூக்கி எறிந்தனான்....சரி யாப்போச்சு.. யாழில் கண்டுபிடிக்கப்பட்ட கொல்களம் : 21 மாடுகள், 4 ஆடுகள் உயிருடன் மீட்பு, ஒரு தொகை இறைச்சியும் கைப்பற்றல் இனி கொத்துரொட்டி 3000 ரூவாவுக்குத்தான் விற்கப்படும்....பாவம் வெளிநாட்டுக்காரர்..
  27. நீங்க இலங்கை போகும்போது சொன்னால் போட்டுக்குடுக்கலாம்.
  28. 52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁
  29. கைப்புண்ணுக்கு... கண்ணாடி வேண்டுமா. 😂 ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் எனும் போதே... உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். 😁 இல்லை என்றால்... உங்களுக்கு பூகோள அரசியல் அறிவு காணாது என்று நினைக்கின்றேன். 🤣
  30. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். இதிலை எந்த இனம் ..ஊர் பேர் இல்லை...இதை யாரு செய்திருப்பினம்...கன்பியூசா இருக்கே...
  31. சிங்களம் ஒருபோதும் நேர்மையாக சிந்தித்ததில்லை. தந்திரமாகத்தான் சிந்தித்தது. நாங்களும் தந்திரமாக நடந்துகொண்டிருக்கவில்லை. இலங்கைத் தரைவழித் தொடர்பை எப்போது இந்தியா ஏற்படுத்துகிறதோ அப்போதிருந்து இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிடும். இந்தியக் கழிவுகள் இலங்கையை நிரப்பத் தொடங்கும். இது ஒட்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியானகதைதான். அப்போது பிரபாகரனின் அருமையை சிங்களம் புரிந்துகொள்ளும்.
  32. உங்கள் இயற்கை காட்சி/ படங்களுடன் கூடிய பயண நிகழ்வுகள் மிக பிரமாதம். எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பங்கள்கிடைப்பதில்லை. நன்றி தெரிவிப்போடு உங்கள் பயணத்தை தொடருங்கள். 👍🏼
  33. இன்றைய ஸ்பெசல் ஒடியல் கூழ்.
  34. உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம். மகிழ்ச்சி
  35. இரண்டும் குற்றம் தான். தமிழன் என தன்னை உணர்ந்த விஜயகாந் மீதான விரோதமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு.. அவர் இறந்த பின்பு வேறு பேச்சு
  36. https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page இலங்கை போக இருப்பவர்கள் மேலே உள்ள சுட்டியை அழுத்தி Embarkation Card நிரப்பினால் அங்கே போய் மினக்கெட தேவையில்லை. ஆனால் போவதற்கு 4-5 நாட்கள் இருக்கும் போதே நிரப்ப அனுமதித்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.
  37. நீங்கள் ஆற்றில் மூழ்கப்போவது மட்டுமன்றி எதிர்காலத்தில் தனது எஜமானன் ஆகப்போகின்றீர்கள் என்பதும் அந்த ஜீவனுக்குத் தெரிந்ததுதான் விந்தை......! 😂
  38. அங்கு வெக்கை இங்கு இன்னமும் விண்டர் ஜக்கட் ஓய்வுக்கு போக வில்லை இன்று காலையில் ஓரளவுக்கு வெப்பம் பின்னேரம் இருந்ததும் போச்சு .
  39. பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.
  40. தேசியத் தலைவரை கொன்றதற்காக வருந்தும் நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு வரும்.
  41. படங்களும் பார்வைகளும் சிறப்பு. சில இடங்கள் நான் சென்ற இடங்களாகவும் உள்ளன. காட்சிக்குள் நானும் இணைவதுபோன்றதொரு உணர்வு. சிறுகுறிப்புப்போல் இருந்ததாலும் அவை கனதியான செய்திகளைச் சொல்லி நிற்கிறது. படங்களைப் பேசவைத்துள்ளீரகள். வலைஞனைத்தொலைத்தவிட்டு நினைவுகளோடு அலையும் இனமாகத் தமிழினம். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!
  42. பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மையினைக் கேள்விகேட்ட சிறிலங்கா அரசு தரப்பும், வெளிநடப்புச் செய்த போராளிகளும் 1985 ஆம் ஆண்டு ஆடி 8 ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகின. பத்து உறுப்பினர்கள் அடங்கிய இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு ஜெயாரின் சகோதரன் ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமை தாங்கினார். 13 உறுப்பினர்கள் அடங்கிய தமிழர்களின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் திம்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். திம்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூட்டானின் தலைநகரான திம்புவிற்கு அந்நாட்களில் உல்லாசப் பயணிகளோ, பத்திரிக்கையாளர்களோ வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரு இந்தியச் செய்தியாளர்களான இந்திய டுடேயின் சென்னைப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியும் அவரது புகைப்பிடிப்பாளரும் உல்லாசப் பயணிகள் என்கிற போர்வையில் திம்புவில் தங்கியிருந்த‌வேளை, நடுச்சாமத்தில் அவர்களைத் தட்டி எழுப்பிய அதிகாரிகள் மரியாதையுடன் காலைவிடியுமுன் நகரிலிருந்து அனுப்பி வைத்தார்கள். விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழ்ப் பேச்சுவார்த்தைக் குழுவினரை ஏறக்குறைய பணயக் கைதிகள் போலவே இந்தியா நடத்தியது. வெளியாரைச் சந்திப்பது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால், சென்னையின் கோடாம்பக்கத்தில் இருக்கும் ஒரு இரகசிய இடத்திற்கான நேரடித் தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னைக்குத் திரும்பியிருந்த தமது தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் பேசும் விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொள்ளவே இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனும் ஏனைய ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தினர். சந்திரசேகரன் போராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளின்போது உதவிபுரிய ஏனைய அதிகாரிகள் இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உதவினர். பேச்சுவார்த்தைகளுக்கான தூதுக்குழுவினரை திம்புவிற்கு அனுப்பியபின்னர் போராளித் தலைவர்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பாலசிங்கத்தை சென்னையில் இருக்குமாறு கூறிவிட்டு, புலிகளின் சேலம் முகாமிற்குச் சென்றார் பிரபாகரன். பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் ஆகிய ஏனைய தலைவர்கள் சென்னையிலேயே தங்கியிருந்தனர். திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்பதனை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். இந்தியப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியின் கூற்றுப்படி, தமிழர்களின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பது தெளிவாகும்போது, வடக்குக் கிழக்கிற்குச் சென்று மீண்டும் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்வதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் செய்ய பிரபாகரன் உறுதிபூண்டிருந்தார். சேலம் முகாமிற்குச் சென்ற பிரபாகரன் தனது அடுத்த இராணுவத் திட்டத்தினைச் செயற்படுத்த போராளிகளைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடலானார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்தது போல, இராணுவ முகாம்களையும், பொலீஸ் நிலையங்களையும் சுற்றி தனது போராளிகளை நிலைவைக்க அவர் முடிவெடுத்தார். கிட்டுவுடன் பேசிய பிரபாகரன், தனது அடுத்த நகர்வு இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதுதான் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சென்னையிலிருந்த தமது தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் குழுவினர் அறியத் தந்ததுடன், அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர்.திம்புவிலும் சென்னையிலும் ஓரணியாக செயற்பட்ட போராளிகளின் தலைவர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். சென்னையில் பொராளிகளின் ஒருமித்த அணியின் பேச்சாளராக பாலசிங்கமே செயற்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் இப்பணியை திலகர் செய்தார். மேலும், திம்புவில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புளொட் அமைப்புடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் சேர்ந்து செயற்பட்டனர். தற்போதைய (2005) புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் திம்புப் பேச்சுவார்த்தை குறித்து என்னுடன் பேசுகையில் தமிழத் தரப்பினர் ஓரணியாகச் சேர்ந்து இயங்கியது இதுவே முதற்தடவை என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிங்கள தூதுக்குழுவே இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது என்றும் கூறினார். "நாம் எமக்கிடையே தர்க்கிப்போம் என்றும், ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செய்தோம். ஒவ்வொருவரும் எந்தவிடயம் குறித்துப் பேசுவதென்றும், அவரே அப்பிரச்சினைகுறித்து தனது பேச்சில் பதிலளிப்பார் என்றும் முடிவெடுத்துச் செயற்பட்டோம்" என்றும் சித்தார்த்தன் கூறினார். பேச்சுக்களுக்கான போராளிகளின் பிரதிநிதிகளை வழிநடத்தும் பொறுப்பில் பாலசிங்கம் இருந்தார். தாம் நடத்தும் கலந்துரையாடல்கள் அனைத்தையும் ரோ வினர் செவிமடுத்து வருகின்றனர் என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆகவே, போராளிகளின் பிரதிநிதிகளுடன் வேண்டுமென்றே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் அவர் பேசினார். இக்கலந்துரையாடல்களை இன்னொரு பக்கத்திலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ரோ வின் தமிழ் அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் சட்டத்தரணிகளான எச் எல் டி சில்வா, எல்.சி.செனிவிரட்ண‌, மாக் பெர்ணான்டோ மற்றும் எச்.எல்.குணசேகர ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஏனையவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள். தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும், புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகருடன் சிவகுமாரனும் (அன்டன்), ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வரதராஜப்பெருமாளுடன் கேதீஸ்வரனும், டெலோ சார்பில் சார்ள்ஸ் அன்டனிதாஸுடன் மோகனும், ஈரோஸ் சார்பில் சங்க ராஜியுடன் இ. இரத்திணசபாபதியும், புளொட் சார்பாக வாசுதேவாவுடன் சித்தார்த்தனும் பங்குகொண்டிருந்தனர். பூட்டான் நாடே பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தமையினையடுத்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் லியொபொனோ தாவா செரிங் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைத்தார். மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தஅரச மாளிகையின் விருந்தினர் மண்டபத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடந்தன. அங்கு பேசிய தாவா, ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதுடன், இப்பேச்சுவார்தைககள் வெற்றியடைய தனது நாட்டின் வாழ்த்துக்களையும் அவர் பேச்சுவார்த்தைப் பிரதிநிகளுக்குத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்தமைக்காக இந்தியாவுக்கும், நடத்த அணுசரணை வழ‌ங்கிய பூட்டானுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஹெக்டர் ஜெயவர்த்தன நன்றி தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் நன்றியுரையினை டெலோ உறுப்பினர் சார்ள்ஸ் வழங்கியது அன்று போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினைக் காட்டியது. சரித்திர முக்கியத்துவாம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் முதலாவது நாள் நிகழ்வுகள் முடிவிற்கு வந்தபோது, பூட்டான் வெளிநாட்டமைச்சரின் விருந்தோம்பல் குறித்தே பலரும் பேசிக்கொண்டனர். பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் நாளான ஆடி 9 ஆம் திகதி, இரு குழுக்களும் ஒருவரையொருவர் நேராகப் பார்த்துகொள்ளும் வகையில் நீண்ட மேசையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. தமிழர் பிரதிநிதிகள் சார்பில் அமிர்தலிங்கமே பேச்சுக்களை ஆரம்பித்தார். தமிழர் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கிடையே அன்றுகாலை கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமையவும், தாம் ஏற்கனவே தீர்மானித்திருந்த திட்டத்திற்கு அமைவாகவும் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தமது கரிசணையினைத் தமிழ்த் தரப்பு எழுப்பியது. முதலாவது, பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் உண்மையான நோக்கமும், உறுதிப்பாடும். முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்டிருக்காத சில சட்டத்தரணைகளையும், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் தாம் உணர்ந்துகொள்வது என்னவெனில், இப்பேச்சுவார்த்தைகளை தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்காகவே ஜெயவர்த்தன பாவிக்கிறார் என்று தாம் சந்தேகிப்பதாக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமிர்தலிங்கம் ஜெயாரின் இத்திட்டம் குறித்து மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். "அவர்களின் திட்டம் எம்மைப்பொறுத்தவரை புதியதல்ல. கடந்த வருடம் முழுவதும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலம் கடத்திய அரசாங்கம் இவ்வருடமும் அதனையே செய்ய எத்தனிக்கிறது" என்று அவர் கூறினார். தமிழர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த விமர்சனத்திற்கு ஹெக்டர் ஜயவர்த்தன பதிலளித்தார். இனப்பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வினை முடிவுசெய்யும் சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே இப்பேச்சுக்களில் தானும் தனது அணியினரும் கலந்துகொள்வதாக அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன தானே திம்புவிற்கு நேரடியாக வருவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஹெக்டர் கூறினார். அடுத்ததாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவில் இலங்கைப் புலநாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்திருப்பது குறித்த தமது அதிருப்தியினை தமிழர்தரப்பு எழுப்பியது. உடனேயே குறுக்கிட்ட ஹெக்டர், தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தைக் குழுவில் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பதற்கான தகமை குறித்தும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் கோருவது குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். போராளி அமைப்புக்கள் தம்மை மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களையோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களையோ போராளிகள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் முஸ்லீம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், இலங்கையரசாங்கம் தமிழர்கள் சார்பாகவுமே பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஹெக்டரின் இந்த விசமத்தனமான பேச்சு இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வித்திட்டது. இலங்கையரசாங்கம் தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்வதானால், அது தமிழர்களுடன் பேசவேண்டிய தேவையென்ன என்று தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பினர். "தமிழர்களையும் சேர்த்தே நீங்கள் பிரதிநித்துவம் செய்வீர்களாகவிருந்தால், நீங்களுக்கு உங்களுக்குள்ளேயே பேசி, தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தமிழர்களின் பிரதிநிதியொருவர் கிண்டலாகக் கூறினார். இதனையடுத்து, தம்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழர் தரப்பு கூறியது. ஆகவே, பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவேளை ஒன்றினைக் கோரிய தமிழர் தரப்பு, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுகொண்டால் அன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தது. இடைவேளையின்போது தனித்தனியாக தமக்குள் கலந்தாலோசித்த தமிழர் பிரதிநிதிகள் தமக்கான திட்டத்தினை வகுத்துக்கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், போராளிகளுக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தவே இலங்கையரசாங்கம் முயல்வதை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். ஆகவே, இதனை எப்படியாவது முறையடித்து விட அவர்கள் உறுதிபூண்டனர். அதன்படி, தமது எழுத்துமூல அறிவிப்புக்கள் அனைத்தையும் "தமிழ்மக்களின் பிரதிநிதிகள்" என்கிற தலைப்புடனேயே வெளியிடுவது என்று தீர்மானித்தனர். இடைவேளையின் பின்னர், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கையொன்றினை ஹெக்டர் ஜயவர்த்தன வெளியிட்டார். இரு தரப்பினரும் பிரச்சினைக்கான தீர்வொன்றினை உண்மையாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும், பேச்சுக்களில் ஈடுபடுவதென்பதே தேவையானளவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழர் தரப்பினை தாம் ஏற்றுக்கொண்டதனால்த்தான் என்றும் கூறினார். அதன்பின்னர், தமது இரண்டாவது கரிசணையான யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழர் தரப்பு கேள்வியெழுப்பியது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துவருவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த செயற்பாடுகளில் ஒரு பகுதியினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக ஊரடங்குச் சட்டத்தினை நீக்குதல், தமிழர் பகுதிகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றை அரசு செய்யத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும், கைதுகளும் தற்போதும் இலங்கை இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், தமது போராளிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவம் , பொலீஸார், சிங்கள மக்கள் ஆகிய அனைவர் மீதான தமது தாக்குதல்களையும் முற்றாக நிறுத்திவைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினர்.
  43. இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது. முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும். சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும். இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்) இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)
  44. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் ..
  45. "ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் மஞ்சள் கிழங்கென தோற்றத்தை கண்டு இஞ்சிபிடுங்கி தின்ற குரங்கு கதையாகும் !" "வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் கள்ளம் கபடமற்ற ஞானப் பார்வையில் உள்ளம் நிறைவு கொண்ட இளைஞர்கள் கேள்விஞானம் பெற்று சிக்கலையும் நீக்குவார்கள் !" "ஆழமற்ற குறுகிய மேலோட்ட பார்வைகள் பலமரம் கண்டதச்சன் ஒருமரமும் வெட்டானாகிறது ஆழமான தெளிவான எமது அறிவியல் குழப்பம்நீக்கி அறிவியல் எல்லைகளைத் திறக்கிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope, 1688-1744) 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில அறிஞராவர். இவர் தனது திறனாய்வுக் கட்டுரைகள் ['essay on criticism'] என்பதில், அற்ப அறிவோடு எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும் என சில எடுத்துக் காட்டுகளுடன் கவிதையாக குறிப்பிட்டு இருந்தார். அதை வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், ஆனால் அவரின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன். அத்துடன் கிரேக்க புராணங்களில் கலை அல்லது அறிவியலின் பாதுகாவலரான 'மூஸ்' அல்லது 'மியூஸ்' [Muse] தெய்வம் 'சரஸ்வதி'யால் பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கிரேக்க புராணத்தின் படி, பியரியன் ஊற்று [Pierian spring] என்பது பண்டைய கிரேக்கத்தில் இருந்த மாசிடோனியா ( Macedonia] என்ற ஒரு இராச்சியத்தில் காணப்படட தெய்வீக ஞான ஊற்று ஆகும். படிப்பு என்பதற்கு குறியீடாக, அந்த பியரியன் ஊற்றை போப் பயன்படுத்துகிறார். Alexander Pope, a translator, poet, was born in London in 1688. He wrote “An Essay on Criticism” when he was 23. In Part II of this Essay on Criticism includes a famous couplet: 'A little Learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian Spring ' . Translation of this in Tamil is given here. Here's the line in its original habitat from Alexander Pope's An Essay on Criticism (1709): "A little learning is a dangerous thing; drink deep, or taste not the Pierian spring: there shallow draughts intoxicate the brain, and drinking largely sobers us again. Fired at first sight with what the Muse imparts, In fearless youth we tempt the heights of Arts Short views we take, nor see the lengths behind, But, more advanced, behold with strange surprise New distant scenes of endless science rise !" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  46. கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது? 2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்? Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.