Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    39344
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    88820
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    8975
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/16/24 in Posts

  1. 33வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த கனடிய அணிக்கும் இந்திய அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு: முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! ------ 34வது போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வேகமாக அடித்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெறமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி DLS முறையில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 34வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 54 2 ரசோதரன் 54 3 கோஷான் சே 54 4 ஈழப்பிரியன் 52 5 சுவி 52 6 நந்தன் 52 7 தமிழ் சிறி 48 8 ஏராளன் 48 9 கிருபன் 48 10 கந்தப்பு 48 11 வாத்தியார் 48 12 எப்போதும் தமிழன் 48 13 நீர்வேலியான் 48 14 வீரப் பையன்26 46 15 நிலாமதி 46 16 குமாரசாமி 46 17 தியா 46 18 வாதவூரான் 46 19 அஹஸ்தியன் 46 20 கல்யாணி 46 21 புலவர் 44 22 P.S.பிரபா 44 23 நுணாவிலான் 44
  2. 36வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்களைப் பெறமுடியவில்லை. இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவிற்கு புள்ளிகள் கிடையாது. 36வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 58 2 ரசோதரன் 58 3 கோஷான் சே 58 4 ஈழப்பிரியன் 56 5 நந்தன் 56 6 சுவி 54 7 தமிழ் சிறி 52 8 ஏராளன் 52 9 கிருபன் 52 10 கந்தப்பு 52 11 வாத்தியார் 52 12 எப்போதும் தமிழன் 52 13 நீர்வேலியான் 52 14 வீரப் பையன்26 50 15 நிலாமதி 50 16 குமாரசாமி 50 17 தியா 50 18 வாதவூரான் 50 19 அஹஸ்தியன் 50 20 கல்யாணி 50 21 புலவர் 48 22 P.S.பிரபா 48 23 நுணாவிலான் 46
  3. இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளை மூட்டையாக அள்ளிக்கொண்டுபோய் ரணிலின் காலடியிலோ, சரத் பொன்சேக்காவின் காலடியிலோ, சஜித்தின் காலடியிலோ, சந்திரிக்காவின் காலடியிலோ கொட்டி இதுவரையில் தமிழரசுக் கட்சியோ, தமிழ்க் கூட்டமைப்போ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ கண்ட பலன் என்ன, தமிழர்களுக்கு இவற்றால் ஆன பயன் என்ன? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டுபோய் அரசியல் வியாபாரம் செய்வதாக உத்தேசம்? தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏன் நிறுத்தவேண்டும் என்பதற்கான எனது நிலைப்பாடு இதுதான். 1. சிங்கள பெளத்த ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் முற்றாக‌ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதைச் சொல்வதற்கு. 2. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்திலிருந்து தமிழினம் பட்டுவரும் அவலங்களும், அவர்கள் மீதான அடக்குமுறைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றது என்பதைச் சொல்வதற்கு (தேர்தல்ப் பிரச்சாரங்களில் இவை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதும், தேர்தலுக்கான சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் இச்செய்தியும் சொல்லப்படுவது அவசியம்). 3. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமைய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை மீளவும் சிங்கள தேசத்திற்கும், சிங்கள அரசியல்த் தலைமைக்கும் நினைவுபடுத்துவதற்கு ( யுத்தம் முடிவடைந்துவிட்டதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டன என்று சர்வதேசத்தில் செய்யப்பட்டு வரும் சிங்களத்தின் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டியது அவசியம்). 4. 2009 இற்குப் பின்னர் தமிழ் அரசியலில் மிகவும் சூட்சுமமான முறையில் செய்யப்பட்டுவரும் தேசிய நீக்கம் என்பதனை முறியடித்து, தமிழ் மக்கள் இன்னமும் தேசியத்தின்பால் நிற்கிறார்கள் என்பதனை சிங்களத் தலைமைகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு (தேசிய நீக்கம் என்பதும் புலிநீக்கம் என்பதும் சுமந்திரன் தலைமையில் மிகவும் இலாவகமாக தற்போது செய்யப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இவரது உள்ளடக்கமே இதனைச் செய்யத்தான் என்பது எனது கணிப்பு). 5. இன்று தமிழர்கள் சார்பாக அரசியலில் ஈடுபடுவோர் தமிழரின் நலன்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், தமிழரின் வாக்குகள் அவர்களைப்பொறுத்தவரை தமது சொந்த நலன்களை, பாராளுமன்றச் சலுகைகளை அடைந்துகொள்வதற்காக மட்டும்தான், ஆகவே அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லை, அவர்கள் கைகாட்டும் சிங்கள ஜனாதிபதியொருவருக்கு நாம் வாக்களிக்கப்போவதில்லை என்பதைக் காட்டுவதற்கு. 6. இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போகும் சிங்களவர் ஒருவரைத் தெரிவுசெய்வதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை தமிழர்கள் சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் உரத்துச் சொல்வதற்கு. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலினை தமிழரசுக் கட்சி எவ்வாறு தனிநாட்டிற்கான தமிழ் மக்களின் ஆணையாகப் பாவித்து அமோக வெற்றியிட்டீயதோ, அதுபோன்றே தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதித் தேர்தலை அதே தமிழ் மக்களின் ஆணையினைப் புதிப்பிக்க, தமிழ் மக்கள் இன்னும் அதே அபிலாஷைகளுடன் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்க, சிங்கள தேசத்தின் ஜனாதிபதிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்க, அவர்களுக்கு கூஜா தூக்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளில் எமக்கு நம்பிக்கையில்லை என்பதைக் காட்டப் பாவிக்க வேண்டும். இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சுமந்திரன் வகையறாக்களின் கூச்சல்களை அப்படியே குப்பையில் தூரக் கொட்டிவிட்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரின் அவசியம் குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தத் தொடர்ந்து செயற்படுவதுதான். இறுதியாக சுமந்திரனிடம் ஒரு கேள்வி : உங்களைத் தமிழர்களோ, அல்லது அவர்களில் ஒரு பகுதியினரோ துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று என்று கூறியிருந்தீர்கள். நீங்கள் அப்படிக் கூறியதன் காரணம் என்ன? (தமிழரின் நலன்களைக் காத்துக்கொள்ள நீங்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் உங்களைத் துரோகியாக்கப்போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே). அப்படியானால் எதற்காக இந்தத் துரோகிப் பட்டம் தொடர்பான அச்சம் உங்களுக்கு வருகிறது (இதை நமட்டுச் சிரிப்புடன், "என‌க்கு உதுக்கெல்லாம் பயமில்லை. எத்தினை பாத்தாச்சு" என்று சவடால் விட்டாலும்)?
  4. உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.
  5. தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே இன்று கனடாவில் தந்தையர் தினம் கொண்டாடும் ஒரு நாள்
  6. இன்று சூப்பர் 8 க்கு வங்காளதேசம் தெரிவு செய்யப்பட்டால் 2026 இல் நடைபெறவுள்ள T20 உலககிண்ணபோட்டிக்கு அயர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா) ,இப்பொழுது நடைபெறும் போடியில் சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள்( தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , அமெரிக்கா, மேற்கிந்தியாதீவுகள், வங்காளதேசம்ஆப்கானிஸ்தான்) ஐசிசி தரவரிசையில் உள்ள மிகுதி 3 நாடுகள் ( பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து) தேர்வு செய்யப்படும். ஆனால் இன்றைய போட்டியில் வங்காளதேசம் தோற்று , இலங்கையை நெதர்லாந்து வென்றால் சூப்பர் 8 க்கு நெதர்லாந்து தெரிவாகும். இதனால் 2026 போட்டியில் நெதர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும். வங்காளதேசம் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்தினை விட முன்னுக்கு நிற்பதினால் அயர்லாந்துக்கு பதிலாக வங்காளதேசம் 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்யபடும் மற்றய நாடுகள் அமெரிக்கா , பசுபிக் , ஆசியா, ஆபிரிக்கா , ஐரோப்பா போட்டிகளின் படி தெரிவாகும். இதில் அமெரிக்கா போட்டிகளில் ஒரு நாடே தெரிவாகும். ஏற்கனவே அமெரிக்கா 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவானதினால் கனடாவுக்கு 2026 இல் தெரிவு செயப்பட வாய்ப்பு இருக்கிறது அமெரிக்கா குழுவில் பெர்முடாவும் சிறந்த அணி. கனடாவா பெர்முடாவா என்பது இனி வரும் போட்டிகளில் தெரியும். ஆபிரிக்கா கண்டப்போட்டியில் 2 நாடுகள்உகண்டா , நபிபியா போன்ற நாடுகள் மறுபடியும் தெரிவு செய்யப்படுமா அல்லது சிம்பாவே , கென்யா போன்ற நாடுகளும் 2 நாடுகளுக்குள் வருமா? எனக்கு சிம்பாவே வரவேண்டும் என்பது விருப்பம்
  7. 16 JUN, 2024 | 01:25 PM திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார். கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார். இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கிறார். மேலும், கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார். இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா இலங்கையின் விளை­யாட்டுத்துறை வர­லாற்­றில் தனது பெயரை பதிந்துகொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடையும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார். அது­மட்­டு­மன்றி, திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகியிருக்கிறார். பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத்துறைக்கு அப்பால் சென்று, தனது அர்ப்பணிப்புணர்வோடு நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/186188
  8. எல்லோர் தெரிவுகளையும் ஆராய்ந்து பார்த்தேன். சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் சுப்பர்8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுந்ததாக உள்ளது. சில பதில்கள் போட்டிகளின்படி சரியாக இல்லாவிடினும் புள்ளிகளை வெல்ல சாதகமாக உள்ளது. சிலரது பதில்கள் நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராது. எனவே, நடக்கவிருக்கும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் பதில்கள் சரியாக இருந்தால், போட்டிகளை சரியாகக் கணிக்காவிட்டாலும், 2 புள்ளிகள் கொடுக்கலாம் என்று உள்ளேன். அதேவேளை போட்டிகளை சரியாகக் கணித்த்திருந்தும், வெல்லும் அணியைச் சரியாகக் கணிக்காவிட்டால் புள்ளிகள் கிடையாது. நடக்கவிருக்கும் போட்டிகளுடன் ஒத்துவராத பதில்களுக்கு இரண்டு புள்ளி கொடுக்கவா, ஒரு புள்ளி கொடுக்கவா என்று யோசிக்கின்றேன். எனினும் இன்னும் தீர்மானிக்கவில்லை!
  9. 🤣.... கவனித்தேன், ஏராளன். ஆனாலும் நமக்கு பையன் சாரை எதிலாவது இழுக்காமல் பொழுது விடியாதே.......
  10. அனந்தி… சும்… விக்கி…. கஜேஸ்… எல்லாரும் ஆளாளுக்கு இதில் கருத்து சொல்கிறார்கள்…அரசியல் செய்கிறார்கள். ஆனால் தமிழரின் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழரசு கட்சி தலைவர் கப்சிப். இன்னும் டீல் படியவில்லையோ? ”சடலம்” சிறிதரனை கண்டா வரச்சொல்லுங்க🤣
  11. புள்ளிகளை இழப்பத்தோன்றும் நமக்குத் புதிதல்லவே பையா, ஆகட்டும் பார்க்கலாம் ..........! 💪
  12. இவங்கள்தான் தமிழரையும் கடத்திக் காணாமலாக்கியவர்களின் அணி என்பது இந்தப் பசுச்சேனாக்களுக்குத் தெரியாதா?
  13. துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும் பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது. வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில், நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன் இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி தரையில் கிடந்த விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன் இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், "குருடாகப் பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award 12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது. Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில், நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார். நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது. Stern சஞ்சிகை இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின் 26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில் நான் எழுதியிருந்தேன். -கவி அருணாசலம்
  14. எது எப்படியோ முதல் மூன்றும் அமெரிக்காகாரர் வரக் கூடிய மாதிரி செய்யுங்கோ. அப்ப தான் அமெரிக்காவில் கிரிக்கட்டை பிரமோட் பண்ணலாம். @goshan_che க்கு ஒரு சக்கை வைத்து ஆளை அனுப்பணும். நந்தி போல இடையில் நிற்கிறாரே.
  15. 🤣......... இந்த ஒரு சொல்லுக்காக அமெரிக்காவில் அரைவாசியை உங்களுக்கு எழுதி வைக்கின்றேன்......அமெரிக்கா சந்திரனை பிடித்தால் அதிலும் அரைவாசி உங்களுக்கே........ ஒரு சின்ன சந்தேகம்........ ஜாம்பவான் என்பதை 'ஜம்பவான்' என்று எழுதியதில் ஏதும் உட்குத்து உள்ளதோ, பையன் புலவரே......🤣
  16. முந்தியும் கட்டையால் பிளக்கப்பட்டிருக்கினம்..........கட்டை வெடிச்சிருக்கு..........
  17. எப்படி ....எப்படி .......நாங்கள் சும்மா போன கோஷானை வில்லங்கமாய் இழுத்து உள்ளே விட்டது போல கூப்பிடுகிறார்கள் போல.......! 😂 அது அயர்லாந்து தான் வெல்லும் பையா 22 பேருக்கு முழுசா அவிந்து கருகிய முட்டைதான் ........! 😂
  18. குமாரசாமி ஐயா நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெற்றியடைய முடியாது என்பதே உண்மை. ஆனால் ஒரு சில டமிழ் அரசியல்வாதிகள் எங்கே தமிழ்ப் பொதுவேட்பாளர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்ன செய்வது என்றல்லவா ஏலவே அரங்கமைத்து அச்சுறுத்தல் பாணியில் அறைகூவல் விடுகிறார்கள். 1.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதே தப்பு. 2.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டவே கூடாது. 3.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளருக்கு எதிராக முழுமூச்சோடு செயற்படுவேன். 4.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் அரைஞாண்கொடியையும் கழற்றிவிடுவர். 5.தமிழர் சார்பிற் பொதுவேட்பாளரை நிற்பாட்டுவதால் சஸ்டிக்கு ஆபத்து. இப்படியான தமிழர் தரப்புகளின் கோதாவில் இவரது நகர்வை எப்படியாவது ஒழித்துக்கட்டவே முயற்சிப்பர். அதனை சிங்களவரோ அல்லது சிங்கள அரசோ செய்யத்தேவையுமில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கணவனையும் பறிகொடுத்துவிட்டு இனத்துக்காக் குரல்கொடுப்பவரை வரவேற்காதுவிடினும் வசைபாடாதாவது இருக்கலாம்.ஆனால், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு. ஐநாவுக்கும் அனந்தி சசிதரன் அவர்கள் சேலையணிந்துதானே வருகிறவர் என்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌 ‘நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன. தன் குடும்பத்திற்கு மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀
  20. பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (17 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 22 பேர் பங்களாதேஷ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் கல்யாணி இப்போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது நேபாளம் முதலாவது வெற்றியை சுவைக்குமா? 38) முதல் சுற்று குழு D : திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED அனைவரும் சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் சிறிலங்கா அணி இரண்டு புள்ளிகள் பெற்று அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா? 39) முதல் சுற்று குழு C : திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெல்லுமா அல்லது அனைவருக்கும் முட்டையா?
  21. போர் இல்லாத காலங்களிலையே சிக்கனமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இனம் தமிழினம். அக்காலங்களிலும் தமிழ் மண்ணில் பசியால் இறந்த என்றொரு சரித்திரம் இன்னும் இல்லை.
  22. @கிருபன் ந‌ட‌ந்து முடிந்த‌ இர‌ண்டு போட்டிக‌ளுக்கு இன்னும் புள்ளிய‌ போட‌ வில்லை பெரிய‌ப்பு இர‌வு ந‌ட‌க்கும் போட்டியில் உற‌வுக‌ளின் தெரிவையும் இணையுங்கோ நாச‌ம் அறுத்த‌ இல‌ங்கை இர‌வுக்கு ஆப்பு வைச்சு அந்த‌ குருப்பில் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்☹️..........................
  23. பதில் சரியாக இருக்குமானால் முதலில் நீங்கள் எழுதியபடியே 2புள்ளிகளை வழங்கலாம் என்பதே எனது கருத்து. சரியான சோடி அணிகளை எல்லோருமே கணித்திருக்க வாய்ப்பில்லை தரவு மாறியிருப்பதும் அதற்கான ஒரு காரணம்
  24. எதையோ செய்து என்னை நிரந்தர முதல்வர் ஆக்கினால் - பொதுப்பணித்துறை ஒப்பந்தம் முழுவதும் நீங்கள் கைகாட்டும் ஆளுக்குத்தான்🤣.
  25. . இந்த இணக்கப்பாட்டை ஏற்கனவே செய்திருக்கலாம் தானே . உலகமே பார்த்துச் சிரிக்குமளவிற்கு உள்வீட்டுப்பிரச்சனையை உலகமயமாக்கி, நீதிமன்றம் போய் இப்போது இணக்கப்பாடு. பறவாயில்லை இப்போவாவது வந்ததே அறிவு. படித்தவர் என்று சொல்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல.
  26. மழையைப் பற்றி ஒரு அழகான சிறு கவிதை .......! 😂
  27. பையன், பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், கொஞ்சம் பிசி ஆகிவிட்டேன்,
  28. நாங்களும் இந்தக் கொடுமையைத்தான் அனுபவித்தோம்......! 😢
  29. 25 MAR, 2024 | 05:16 PM இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179685
  30. நாளையுட‌ன் கோஷான் புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ போக‌க் கூடும் அமெரிக்கா பிர‌பா அண்ணா அமெரிக்கா கிரிக்கேட் ஜ‌ம்ப‌வான் ச‌சோத‌ர‌ன் இவ‌ரும் மேல‌ போக‌க் கூடும்.......................... பாக்கிஸ்தான் வென்றால் இர‌ண்டு புள்ளிய‌ நீங்க‌ள் இழ‌க்க‌ கூடும் த‌லைவ‌ரே............... பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் மீது அன் நாட்டு தேர்வுக்குழுவில் இருந்து ர‌சிக‌ர்க‌ள் வ‌ரை க‌டும் அதிர்ப்பிதியில் இருக்கின‌ம் இன்றும் தோத்தா பாக்கிஸ்தான் விமான‌ நிலைய‌ம் க‌ராச்சியில் வைச்சு பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கு க‌டும் எதிர்ப்பு கில‌ம்பும் ஆன‌ ப‌டியால் வெல்ல‌ பாப்பின‌ம்.............................
  31. இந்தியா தமிழீழம் என்பதற்கு மிகவும் எதிரானது. இன்னும் சொல்லப்போனால் சமஷ்ட்டி, ஒன்றுபட்ட நாட்டிற்குள் அதிகாரம் மிக்க பிராந்தியங்கள் ஆகியவற்றிற்கும் கூட இந்தியா எதிரானது. ஆகவே, மதுரை ஆதீனம் தன் பங்கிற்கு இதனைச் சொல்லிவிட்டுப் போகலாம், மோடிக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்பது. அண்மையில்க் கூட இலங்கை அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த இல்லாத புலிகள் மீதான தடையினை மேலும் 5 வருடங்களுக்கு நீட்டித்துக் காட்டியிருக்கிறார் அவர். தமிழர்களுக்கு ஈழத்தை எடுத்துக் கொடுப்பதில் உண்மையான அக்கறையுடன் செயற்ப்பட்டவர்கள் புலிகள் மட்டும்தான். வேறு எவரிடமும் நாம் வைக்கும் கோரிக்கைகள் செவிடன் காதில் பேசுவதற்கு ஒப்பானது.
  32. எதிர்பார்த்தது தான். இந்தஅல்லது இதை போன்ற ஆய்வு நான் அறிந்தது தான். இது சந்தகி சந்ததி ஆக போனால் தான் இதன் விளைவு தெரியும். எனவே இந்த ஆய்வு இப்படியான முடிவுகளுக்குத் தான் வரும் (அப்படியான பரிசோதனைக்கு ஏன் மற்றவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும்?) சும்மா, குறுகிய கால பிள்ளை வளர்ப்பை வைத்து முடிவுக்கு வருவது, இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிப்போரம், அந்த அஜெண்டாவை பரப்ப விரும்போக்குவோரும் செய்வது. இவ்வளவு பாலின தாராளவாதம் கதைக்கும் மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர் , ஏன் மேற்கு அரசு அமைப்பு சிறுபான்மை, பெரும்பான்மை என்று வைத்து உள்ளது என்பதை கதைக்க ஆயத்தம் இல்லை, சிறுபான்மைக்கு அநேகமாக குழுமிய, நிறுவன உரிமைகள் ,விடயங்களில் இடம் இல்லை. உங்களின் ( மேற்கு பாலின தாராளவாதம் திணிப்போர) லிபரல் வாதத்தை முற்றுப்புள்ளி வைக்கும் மேற்கு அரசுகளும், சமூகமும். அனால், சிறுபான்மை , பெரும்பான்மை என்று வைத்து இருக்கா விட்டால், சிறுபான்மை மிகவும் ஒடுக்கப்படும். எனவே, ஒருபாலினத்தவர் (ஒரு சிறுபான்மையாக) இருக்கலாம், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனால், அதற்காக, எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம், பரந்த சிறுபான்மை, பெரும்பான்மை என்ற கட்டமைப்புக்கு உள்லேயே இருக்க வேண்டும், குறிப்பாக இதை பொறுத்தவரை.
  33. "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!" கவிதையிலே எழுதி இன்பம் கொள்ளலாம் ...இது பகற்கனவு . இன்னும் நில ஆக்கிரமிப்பு, புத்தரின் சிலைகளை நாட்டி விகாரைகள் உருவாக்கமும் புது புது குடியேற்றமும் .. .கிடைக்குமா ஒற்றுமை சமாதானம் ?
  34. இந்த வானவில் கூட்டத்தின் தொல்லை வர வர அதிகரித்துக் கொண்டே போகுது. வீகன் போல இதுவும் தூண்டப்படுதலே அதிகம். இயற்கைக்கு மாறான வானவில் கூட்டத்தின் செயற்பாடு மீது பாப்பரசரின் விசனம் மட்டும் போதாது. வானவில் கூட்டத்தினரின் இருப்பு.. பெருக்கத்தை.. கிறிஸ்தவ மிசனரிகளில்.. முற்றாக தடை செய்ய வேண்டும். இனங்காணப்படும் வானவில் குற்றவாளிகளை மிசனரிகளில் இருந்து விரட்டி விடுவது நல்லது.
  35. மீண்டும் சினைப்பரை தூக்கப் பண்ண போறீங்க.
  36. "உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்" "சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!" "சோர்வாக இருக்கே என்று பின்போடாமல் சோதனை வருகுதென மனம் தளராமல் சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!" "கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!" "உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும் உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும் உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும் உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!" "போகும் பாதையை தெளிவாக அறிந்து போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல் போவார் வருவார் சொற்களை கேட்காமல் போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!" "வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள் வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல் வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது வெளிச்சம் காட்டி உன்னைக் கூப்பிடாது!" "நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள் நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள் நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!" "சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும் சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும் சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!" "எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி எங்கு விடாமுயற்சியோ அங்கு வளர்ச்சி எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!" "திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால் தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும் திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [1] Don’t make excuses, make improvements 2] Don’t stop when you’re tired, stop when you’re done 3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people 4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise 5] Don’t get side-tracked by people who are not on track 6]Behind every successful person are a lot of unsuccessful years 7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it 8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs 9]Just because you are struggling does not mean you are failing 10] The hardest thing to open is a closed mind]
  37. எழுத்தாளர் துமிலனுக்கும், பெருமைக்குரிய அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்! ஆசியப் பெற்றோர் வெளிநாடுகளில் "மருத்துவர், பொறியியலாளர், முதலீட்டு வங்கியாளர்" என்ற தடங்களில் மட்டும் தங்கள் குழந்தைகளைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகைத் துறையில் பிள்ளையை அனுமதித்து, பிரகாசிக்க விட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் முத்துலிங்கத்தின் மகன், ஒரு National Geographic ஒளிப் படக்கலைஞராக ஒளிர்கிறார் என்று அவரது தந்தையின் ஒரு கட்டுரையில் அறிந்தேன். எல்லாத் துறைகளிலும் எங்கள் ஆட்கள் கொடி நாட்ட வேண்டும்.
  38. மூனா அண்ணாவின் மகன் துமிலனுக்கு Stern Award விருது கிடைத்ததில் நாங்களும் பெருமைப்படுகின்றோம்🙌 துணிச்சல் மிக்க துமிலனுக்கு பாராட்டுக்கள்👏👏👏
  39. பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் போகக்கூடாது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் தம்மை மீள்கட்டமைக்க முயல்கின்றார்கள். பாலஸ்தீன பயங்கரவாதம் துடைத்தழிக்கப்படவேண்டும் இஸ்ரேல் அதைச் செய்யும்!
  40. நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என... மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள். இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... அந்த சாமியார் ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.