Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்7Points3057Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points15791Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்4Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/28/24 in all areas
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
3 pointsஇன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 Australia 3 2 0 5 2 Republic of Korea 2 2 1 5 3 United States 1 2 2 5 4 Italy 0 2 3 5 5 China 3 0 1 4 6 France 1 2 1 4 7 Belgium 1 0 1 2 7 Japan 1 0 1 2 7 Kazakhstan 1 0 1 2 10 Great Britain 0 1 1 2 11 Germany 1 0 0 1 11 Hong Kong 1 0 0 1 13 Canada 0 1 0 1 13 Fiji 0 1 0 1 13 Mongolia 0 1 0 1 13 Tunisia 0 1 0 1 17 Hungary 0 0 1 1 17 India 0 0 1 1 17 South Africa 0 0 1 1 17 Spain 0 0 1 1 17 Sweden 0 0 1 13 points
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
2 pointsமுதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 12 points
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வன்முறையும் புலிகளால் பதிவாகாத நிலையில்.. ஐரோப்பிய ஒன்றிய சாணக்கியவான்கள் இன்னும் தடை போடினம் என்றால்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைந்தெடுத்த காடைத்தனம் அப்பட்டமாகவே தெரிகிறது. இதில் புலிகளின் சொத்து முடக்கமே முக்கிய குறிக்கோள். அதையும் பறிச்சு உக்ரைனுக்கு படைப்பாங்கள் ஆக்கும். கவனிக்கவும் ரஷ்சியாவில் ரஷ்சிய பிராந்தியங்களில் புலிகளுக்கு தடை இல்லை. புலிகள் தப்பானவர்களை நண்பர்கள் என்று நம்பியதன் விளைவும் தான் 2009 மே பேரழிவு கூட்டு இன அழிப்புக்கு முக்கிய காரணம். ஏலவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என்ற சிவில் தொண்டு அமைப்பு மீதான தடையும் தொடருது. ஆக மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம்.. ஒரு கொஞ்சம் கூட சனநாயகத்தன்மை அற்று.. தமிழ் மக்கள் மீதான எந்தக் கருசணையும் அன்று தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இதில தமிழர்கள் சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடாவடித்தனமான உக்ரைன் போர் ஆதரவுக்கு ஒத்தூதுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியாவை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம்.. எனி அமெரிக்கா.. பிரிட்டனுன்னு தடை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இவங்கள் எல்லாம் கள்ள மெளனம் காக்கிறாங்கள். இணைத்தலைமை என்று வந்து புலிகளை உளவு பார்த்தவை எல்லாம் இப்ப கப் சிப்.2 points
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
தாதா விசுகு.. உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம். அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள் நாங்க வடலி வளர்த்து கள்ளு குடிக்கிறம்.2 points
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
2 points"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை] "உன்னை நினைத்து என் இதயம் எரிகிறது! உன் இன்றைய காதலன் பொறாமை வாசனையை எனக்கு வீசுகிறான்!" "எதற்காக இப்படி செய்தாய்? கேட்டிருந்தால் எல்லாமே தந்திருப்பேனே 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'! " "எனக்கு நீ மட்டுமே வேண்டும் எடுத்திடு என் பணம் எல்லாவற்றையும் என் இதயம் எரிகிறது!" "உனக்கு 'நான் விரும்புகிறேன்' சொல்ல, நீயோ மறுபக்கம் திரும்பி என்னை விட்டுவிடு என்கிறாய் என் இதயம் எரிகிறது!" "என்னை பார்த்து அன்று சொன்னாய் விரும்புகிறேன், மணம் முடிப்பேன் என்று கனவுகள் ஆயிரம் கண்டேன்! கோட்டைகள் பலநூறு கட்டினேன்! என் இதயம் எரிகிறது!" "நான் முட்டாள் உன்னை நம்பினேன் கண் மூடி உன்னை நம்பினேன்! என்னை நீயே கொன்றுவிடு மலையில் இருந்து உருட்டி விடு என் இதயத்தை குத்தி உன்னை வெளியே எடுத்துவிடு என் இதயம் எரிகிறது!" "என் இதயம் துடிக்கிறது போதை கொண்டு அனல் கக்கி புகைக்கிறது! என் நண்பர்கள் இப்ப அந்நியர்கள் என்னைச் சுற்றி இப்ப எதிரிகள் உன்னை மறக்க முடியாமல் என் இதயம் எரிகிறது!" "உன்னை மறக்க காற்றாகிறேன் தேவலோகம் பரவி போகிறேன் வேலன் வெறியாட்டம் எனக்கில்லை மூடிய கண்ணில் ஊர்வசி நடனம் காண்கிறேன் என் இதயம் எரிகிறது!" "காதல் போதை எனக்கு ஊட்டுகிறாள் நானும் இந்திரன் சபையில் ஆடுகிறேன்! நான் என்னும் உணர்வை இழந்துவிட்டேன் பைத்தியம் என்று மக்கள் விலகுகின்றனர் என் இதயம் எரிகிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உக்ரேன் போரில் மேலைதேய சார்பானவர்கள் என்று யாராவது எடுத்து சொல்லுங்கப்பா....😎2 points
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
இதன் தாக்கங்கள் இப்பொது சொல்ல முடியாது. ஐரோப்பிய ஒன்றியம் எப்படி செய்தது - ருசியா முதலில் வட்டியை பிணையாக பாவித்து கடனை கொடுக்கிறதா அல்லது நேரடியாக வட்டி, முதலை எடுத்து கொடுக்கிறதா எனறு. ருசியா பணத்தில் கைவைப்போம் என்ற போது சவூதி எச்சரித்ததாக, அதாவது யூரோ பினைமுறிகளை விற்கவேண்டி வரும், அதனால் யூரோ சரியும் என்றும் ஓர் கதை இருக்கிறது. இனி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியார் முதலீட்டை கொண்டுவர மிகவும் பின்னிற்றப்பார்கள், அதேபோல யூரோ முதலீட்டையும் நீண்ட கோலினால் (wouldn't touch with long barge pole) தொட்டு பார்ககவும் விருமமில்லாத நிலை உருவாகும். மத்திம, நீண்ட காலத்தில் என்ன விளைவுகள் என்பதை பொருட்டு இருந்து தன பார்க்க வேண்டும்.2 points
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி.2 points
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதமிழ் நாட்டை ஆட்கொண்ட ஈழத் தமிழர் ஆதரவு உணர்வு 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்கள் போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் என்கிற நிலைப்பாட்டிலிருந்து போராட்டத்தின் பங்காளிகள் என்கிற நிலைக்கு மாறியிருந்தார்கள். இராணுவ முகாம்களுக்கு வெளியே அவர்களின் நடமாட்டத்தை அவதானிப்பதில் சிறுவர்கள் பங்கெடுத்தார்கள். மரங்கள் மீது ஏறி மறைந்திருந்த அவர்கள் இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வர எத்தனிக்கும்போது அதுகுறித்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனுக்குடன் அறியத் தந்தார்கள். இதனையடுத்துச் செயலில் இறங்கிய பொதுமக்கள் வீதிகளுக்குக் குறுக்கே சீமேந்துத் தூண்களையும் மரக்குற்றிகளையும் இழுத்துப் போட்டு, பழைய டயர்களுக்குத் தீமூட்டீனார்கள். போராளிகள், முன்னேறி வரும் இராணுவம் மீது கிர்ணேட்டுக்கள், கண்ணிவெடிகள், மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தொடங்குவார்கள்.பொதுமக்கள் கூடும் இடங்கள், மற்றும் முக்கிய சந்திகளில் பாடசாலை மாணவர்கள் அறிவித்தற் பலகைகளை நிறுவி போராளிகளிடமிருந்து வரும் தகவல்களை மக்கள் படிக்கும்படி அவற்றில் எழுதினார்கள். சமூகத்தின் அனைத்து நிலை மக்களும் போராட்டத்தில் ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுத்திருந்தார்கள். இலங்கையில் தமிழ் மக்களிடையே எழுந்துவந்த தமிழ்த் தேசிய உணர்வு சிறுகச் சிறுகத் தமிழ்நாட்டையும் பற்றத் தொடங்கியிருந்தது. கருநாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், அக்கட்சியின் ஆதரவுக் கட்சிகளும் இதில் முன்னிலை வகித்தன. பாலசிங்கத்திற்கும், ஏனையவர்களுக்கும் நாடுகடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் தமிழகக் கட்சிகள் வீதியில் இறங்கின. ஜெயவர்த்தனவும், ரஜீவ் காந்தியும் தமிழ் மக்களைக் கொல்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையின் முக்கிய வீதிகளூடாக பெரும் பேரணியொன்றினை கருநாநிதி நடத்தினார். "ரஜீவ் காந்தி ஒழிக, ஜெயவர்த்தன ஒழிக, அவர்களுக்கு ஆதரவு தருவோர் ஒழிக" என்று பேரணியின் முன்னால் அவர் ஆவேசமாகப் பேசியபடி சென்றார். ரஜீவ் காந்தி ஒழிக எனும் சுவரொட்டிகள் தமிழ்நாடெங்கிலும் பரவலாக ஒட்டப்பட்டது. கே.வீரமணி 2004 தமிழ்ப் போராளிகளின் தலைவர்கள் நாடுகடத்தியதில் எம் ஜி ஆரின் கட்சியும் பங்களித்திருக்கிறது என்று திராவிடர் கழகத்தின் வீரமணி பேசியபோது பலத்தச் கரகோஷம் மக்களால் எழுப்பப்பட்டது. "போராளித் தலைவர்களை நாடுகடத்தும் உத்தரவினை ரஜீவ் காந்தி விலக்கிக் கொள்ளாவிட்டால் பஞ்சாப், அசாம் போன்ற நிலை இங்கும் உருவாகும், ஒரு வட இந்தியனையும் எமது மண்ணில் கால்ப்பதிக்க நாம் விடமாட்டோம்" என்று வீரமணி சூளுரைத்தபோது கூட்டத்திற்கு வந்திருந்தோர் எழுந்துநின்று பலத்த கரகோஷம் செய்தார்கள். தமிழ் நாட்டில் மக்கள அனைவரையும் ஒருங்கிணைத்து உருவாகி வந்த ஈழத்தமிழர் அனுதாப அலையில் இருந்து விலகியிருக்க எம் ஜி ஆர் இனால் முடியவில்லை. தமிழ்நாட்டில் இயங்கிவந்த காங்கிரஸ் கட்சியினாலும் அது இயலவில்லை. அவர்களும் அதற்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பேரணியோ, மக்கள் கூட்டமோ நடந்துகொண்டுதான் இருந்தது. புரட்டாதி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஆர்ப்பாட்டங்கள் உச்சம் பெற்றன. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் (டெசோ அமைப்பு) அமைப்பினால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியால் முழுத் தமிழ்நாடுமே முற்றான ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட எம்.ஜி.ஆர் புரட்டாதி 24 ஆம் திகதி ஈழத்தமிழருக்கு ஆதரவான செயற்பாட்டில் தானே இறங்கினார். மரீனா கடற்கரையில் 12 மணிநேர மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்து வைத்தார். கலை 6 மணிக்கு மரீனாவிலும், தமிழ் நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் இச்சத்தியாக்கிரகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மரீனாவில் இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் உம் ஈடுபட்டிருந்தார். செங்கல்ப்பட்டில் இடம்பெற்ற சத்தியாக் கிரகப் போராட்டத்தை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா முன்னின்று நடத்தினார். தமிழ்நாடு செயலகத்தில் முதலமைச்சர் நன்கொடை நிதியம் என்கிற பெயரில் ஈழத்தமிழருக்கான நிதிச் சேகரிப்பு செயற்பாட்டினையும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்து வைத்தார். அந்த நிதியத்தில் தனது நன்கொடையாக 2000 ரூபாய்களை இட்டு அதனை அவர் ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் தமது பத்து இலட்சம் உறுப்பினர்கள் தமது ஒருநாளைய சம்பளத்தினை முதலமைச்சர் நிதியத்திற்குக் கொடுப்பதாக அறிவித்தபோது எம்.ஜி. ஆர் நெகிழ்ந்துபோனார். உடனடியாக ஒலிவாங்கிய கையில் எடுத்த எம்.ஜி.ஆர், "தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க, ஈழத் தமிழர் வெல்க" என்று உணர்ச்சிவசப்பட்டு முழங்கினார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் கோயில்கள் மற்றும் தேவாலய முன்றல்களில் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியதுடன், யாழ்ப்பாணச் செயலகம் நோக்கி பாரிய பேரணியொன்றையும் நடத்தினார்கள். செயலகத்தில் ஜனாதிபதிக்கு அரச அதிபரூடாக மகஜர் ஒன்றினைக் கையளித்தார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அம்மகஜர் கோரியது. போராட்டக்காரர்களிடமிருந்து அரச அதிபர் மகஜரைப் பெற்றுக்கொள்ளும்போது, செயலகத்தில் கூரையில் ஏறிய சில போராட்டக்காரர்கள் அதன்மீது புலிகளின் கொடியினை ஏற்றினார்கள். கே.பத்மநாபா இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், தமிழ்நாட்டிலும் உருவாகி வந்த தமிழ்த் தேசிய உண்ர்வு உலகெங்கிலும் வாழ்ந்துவந்த தமிழர்களையும் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழ்ச் சமூகம் உடனடியாகச் செயலில் இறங்கியது. ஈழத்தமிழ்ரின் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளும், கூட்டங்களும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. கூட்டங்கள், கலந்துரையாடல்கள், தீர்மானங்கள், பேரணிகள், பெட்டிசன்கள், நன்கொடைகள் என்று பல வழிகளில் போராட்டத்திற்கான பங்களிப்புக்களை புலம்பெயர்ந்த தமிழச் சமூகம் வழங்கத் தொடங்கியது. உலகம் முழுவதிலும் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் ஈழப்போராட்டத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்த நிலையில், ரஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனவும் தமது அரசிய சதுரங்கப் போட்டியில் மூழ்கிப்போயிருந்தனர். தில்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜீவ் ஈடுபடலானார். அதன்படி, திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளி அமைப்புக்களின் தலைவர்களையும் தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரினார். புளொட் மற்றும் கூட்டணியுடன் தொடர்புகொண்ட ரோ அதிகாரிகள் ரஜீவுடனான சந்திப்பிற்கு அவர்களை அழைத்தார்கள். ஆனால், பிரபாகரனையும், சிறீ சபாரட்ணத்தையும் அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. போராளி அமைப்புக்களில் பலமானவை என்று அப்போது கருதப்பட்ட புலிகள் மற்றும் டெலோ அமைப்புக்களின் தலைவர்கள் இன்றி தம்மால் ரஜீவுடன் பேச முடியாது என்று பாலகுமாரும், பத்மநாபாவும் ரோ அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.2 points -
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், கேள்விகளுடன் தான், அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படை த்தான் .... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதி என்றோதுவான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான். ஆமாம், என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக் கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருதுகிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்தார்கள். கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாகக் கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது. மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொருவனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப்படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்ததாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால், அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால், எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ...... குலமு மொன்றே குடியுமொன்றே, இறப்புமொன்றே பிறப்பு மொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட்கிறார். ஆண்டவனோ அல்லது சமயமோ , எதற்க்காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை. ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து, அதன் மூலம் எம்மை, எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும். "உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்... தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால் , இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை, எம்மை பிரிக்கிறது. சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல, அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன. சமயம் பழைமை நெறிவாதத்தையும் சகிப்பு தன்மையின்மையையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிகப் பெரிய பிரச்சனை கொடுக்கிறது. இதனால், மத வெறியர்களை உண்டாக்கி , எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது. ஆகவே, எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும், வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும். எல்லா சமயங்களும் மனிதாபிமானத்தையே அறிவுறுத்தின. ஆகவே அதை அப்படியே பின்பற்றலாமே? அமைதி எமக்குள்ளே தான் உண்டு. அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு. ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு. எனவே கடவுளே அன்பு, அன்பே கடவுள், இதை அறிந்தால், எமக்கு அது உள் அமைதி தரும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே. வெறுப்பு, பொறாமை, பேராசை, ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது? அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே. அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது. ஆனால் சமயம் அப்படி அல்ல. இதை நாம் அறிய வேண்டும். ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும் Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறி யுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கை யில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டே னென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்] It is a fact,God or Religions today no longer serve the purpose for which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:02 Will follow1 point
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
1 pointஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார். மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார். சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார். நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள். அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும். மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.1 point
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
1 pointஅ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......! 👍1 point
-
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை !
சிங்கள இனவாதம் இலங்கையில் இல்லாதிருந்தால் உலகின் சுற்றுலாவிற்கான முதலிடத்தில் இலங்கை இருந்திருக்கும்.1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஒலிம்பிக்கில் ரஷ்யாவும் விளையாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உலக தர்மமும் அதுதான்.1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஇரண்டாவது சீனா, மூன்றாவது அவுஸ்திரேலியா, நான்காவது பிரித்தானியா, ஐந்தாவது பிரான்ஸ், ஆறாவது ஜேர்மனி, ஏழாவது கனடா, எட்டாவது ஜப்பான், ஓன்பதாவது கொரியா பத்தாவது இத்தாலி…. வரும் என்பது எனது கணிப்பு. 😁1 point
-
கொஞ்சம் ரசிக்க
1 point1 point
- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
ஆண்கள் அணி சோபை இழந்துள்ளது. பெண்கள் அணி களை கட்டி உள்ளது. வாழ்த்துக்கள்!1 point- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
1 point- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
இலங்கை மகளிர் அணி கோப்பையை வென்று விட்டினம் இலங்கை மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்..........................1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
பெரியவரே இது ஊரில் வசிக்கும் என்ர மச்சாள் எனக்கு சொன்னது . அவான்ட தோழிகள் உந்த கூத்துகள் போடுகினம் போல் தெரியுது..........................1 point- "◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
❤️ காதலிப்பவர்கள் எல்லோருக்கும் கவிதை எழுதும் திறமை உள்ளதை பல இடங்களில் அவதானித்து உள்ளேன். 💗 நல்ல ஒரு கவிதைக்கு நன்றி. 👍🏽1 point- "◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
கையில் கிடைக்காதவரை மலையளவு, கிடைத்துவிட்டால் கடுகளவு. எண்ணிப் பார்த்தால்.. இதயம் எரியாது தணிந்துவிடும். க தி வி அவர்களே!😌1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அது சரி... அதே காதலியைத்தான் கைப்பிடிச்சீங்களா? அல்லது உங்களின் வீர சாகசத்தை கண்டு அவாவே விலகி விட்டாவா? ஏன் கேக்கிறேன் என்றால்; எனது காதலி என்று எழுதியிருக்கிறீர்கள், அவரே மனைவியானார் என்பதை குறிப்பிட வில்லை, அந்தக்காதல் என்னவானது என்றும் முடிக்கவில்லை, அதனாற்தான் கேட்டேன். காதற்கதை என்றால் மிகவும் சுவாரசியம் நிறைந்ததல்லவா?1 point- காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர்
ட்ரம்ப் மீது... துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருக்குது என்று, CNN செய்தித்தளம் ஒரு செய்தியை கசிய விட்டுப் பார்த்தது. அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன்... தனது சுருதியை மாற்றி விட்டது. 😂 நடு நிலையான செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஊடகங்கள் மிக அரிது. எல்லாம்... பணத்தை வாங்கிக் கொண்டு "ஜால்ரா" போடும் கூட்டங்கள்.1 point- காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர்
இவர்கள் பேசுவது ஒன்று பத்திரிகை மூலம் வெளியீடும் கருத்துகள் பேசியதற்க்கு நேர் எதிராக இருக்கும் பலே ஏமாற்று பேர்வழிகள் 🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர்
செய்தியை... இணைக்கும் அவசரத்தில், நான் இதனை உற்றுக் கவனிக்கவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்தையா அண்ணை. 🙂 ஆதவன் செய்தி இணையம் விட்ட பிழையை... @Kapithan, @பெருமாள், @ரசோதரன் ஆகியோரின் காதில் போட்டு விட வேண்டும். அவர்களும்... ஆதவனில் பிழை பிடித்து, சந்தோசம் அடைகின்ற ஆட்கள். 🤣1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம். அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள். 🥰1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
எங்கள் காலத்திலேயே… காதலிப்பது என்றால் “தில்” வேண்டும். அந்தக் காலத்தில்… பெரும்பாலான காதல்களை பெற்றோர் அங்கீகரிப்பதில்லை. ஒருவர் காதலிப்பது ஊருக்குத் தெரிந்தால் அது பேசு பொருளாக பலராலும் குசுகுசுப்பாக கதைக்கப் படும். சில இடங்களில் பொறாமை பிடித்தவர்கள் காதலர்கள் இருக்கும் தெருவில் உள்ள மதில்களில்… கரிகட்டியால் காதலர்களின் பெயரை எழுதி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு. 😂 கரிக்கட்டியால்…. கருகிய காதல்கள் ஏராளம். 🤣 இப்போ… அது சாதாரண விடயமாக மாறியதும், எங்கள் கண் முன்னால் நடந்த ஒரு பெரிய மாற்றம்தான். 😁1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இளவரசர்கள் ஆயுதங்களை தொடுவதில்லை...😂1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அப்பவே உங்கடை பவர்...அந்தக்கால அதிஉச்ச ஆயுதங்களுடன்....சும்மா பகிடிதான் விசுகர்1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அப்ப தடி பொல்லு சைக்கிள் செயின் தெரிஞ்ச ஆள் என்றால் சாக்கு.. இவை தான் அதி உச்ச பவர் ஆயுதங்கள் 🤣1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ஆமாம் தெரியும் எனது சித்தப்பா. முறையான ஒருவர் இருபாலையில். திருமணம் செய்தவர் 1975 ஆண்டில் இருக்கலாம் சரியாக தெரியாது அவர் வேலை அற்றவர் காப்பீடு நிறுவனத்தின் முகவர். அவரின் மனைவி பதவி உயர்வுகள். பெற்று கடைசியா கோப்பாய் அரசாங்க அதிபர் ஆக இருந்தவர் இப்போது இருவரும் உயிருடன் இல்லை1 point- சமையல் செய்முறைகள் சில
1 point- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ம்ம், ரொம்பத்தான் அனுபவம் பேசுது! அடி வாங்கினீர்களோ, கொடுத்தீர்களோ? என்றதையும் விலாவாரியா எடுத்து விடுறது...... ரசிப்போமேல்ல. ஒருவேளை முகநூலில் வந்த காதலாக இருந்தால், அந்தப்பக்கம் பெண்போல யாராவது இந்த தாக்குதலாரி ஒருவன் ஏமாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் அல்லது அந்தப்பெண் கதைக்கும்போது உறவினரிடம் மாட்டுப்பட்டோ, தெரிவித்தோ இருக்கலாம் இல்லையெனில் பெண்ணே ஏமாற்றியிருக்கலாம். அப்பாவிப்பையன் மாட்டுப்படுள்ளான். விசாரணை நேர்மையாக நடந்தால் விபரம் வெளிவரும்!1 point- உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே. உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி 1990 வரை. சோவியத் உடைவின் போது தனிநாடானது. இப்போ சோவியத்தில் இருந்து உடைத்த அத்தனை நாடுகளையும் நேட்டோவில் இணைச்சாச்சு. உக்ரைன் தான் பாக்கி. நேட்டோ விரிவாக்கமே தான் ரஷ்சிய- உக்ரைன் போருக்கான முக்கிய மறைமுகக் காரணம். நேரடிக்காரனம்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்து உக்ரைனின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முனைந்தது. இதில்.. ரஷ்சியாவினது உக்ரைன் மீதான போர் எப்படி ஆக்கிரமிப்பாகும். மேற்கு ஐரோப்பாவிற்கும் நேட்டோவுக்கும் நன்மையில்லாமலா இவ்வளவு கோடிகளை ஐரோப்பிய ஒன்றியமும்.. பிரிட்டனும்.. அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்கினம்..??! எதுஎப்படியோ.. நீங்கள் பிரஞ்சு எஜமானர்கள் வாய்வழி வருவதே சத்தியம் என்று நம்பும் மட்டும் நீதி எதுவென்று விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மேற்குலகின் சொத்துக்களும் ரஷ்சியாவில் உள்ளன. ஆனால் ரஷ்சியா இவர்கள் அளவுக்கு மட்டமான காரியம் செய்யவில்லை. இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் இருந்து சுருட்டிய காசையும் ஐரோப்பிய ஒன்றியம் விடுவிக்கவில்லை.. தமிழர்களின் பேரழிவின் போது கூட ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்காவோ உதவி அளிக்கவில்லை. ஆனால்.. சொறீலங்காவுக்கு வாரி வழங்கினதும் இல்லாமல்.. இப்போ வரிச்சலுகளையும் அளிக்கினம்.. சொறீலங்காவை பொருண்மிய நெருக்கடியில் இருந்து மீட்க. இப்படியாப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம்.. நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. தமக்கான அடிமைக் கூலிகளை கூட அமர்த்தி வைக்க.. அகதி அந்தஸ்தை பாவிக்கினம்.1 point- குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
1 pointஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார். பின்னர் அந்தப் படத்தை தேடி பார்த்தேன். 2011ம் ஆண்டு வந்த படம். அதற்கு இரண்டு வருடங்கள் முன்னரே வந்திருக்க வேண்டும், தணிக்கை பிரச்சனையால் வரவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து விட்டே வெளியே விட்டிருந்தார்கள். ஆனாலும் மிஞ்சிய படமே அருமையாக வந்திருந்தது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜவின் முதல் படம். ஆண் தாதாக்களின் மத்தியில் ஒரு சில அப்பாவிகளும், ஒரு அபலைப் பெண்ணும் என்று கதை போகும். முடிவில் 'ஆண்கள் எல்லாமே சப்பை.........' என்று படம் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் முடியும், அந்த அதிர்ச்சியில் உடனேயே படத்தை திருப்பி இன்னொரு தரம் பார்க்க வேண்டி இருந்தது. சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டு பெண் தாதாக்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் மலர்க்கொடி என்னும் பெண் தாதாவின் வாழ்க்கை எந்த சினிமாவிலும் கூட இதுவரை சொல்லப்படாத ஒரு ஆரண்ய காண்டக் கதை. ஊரில் இயக்கங்கள் முளை விட்டுக் கொண்டிருந்த காலம். அப்பொழுது சரிக்கு சரியாக சில சண்டியன்களும் அங்கே இருந்தார்கள். அப்பொழுது இயங்கங்கள் அவர்களை அடக்க ஆரம்பித்திருக்கவில்லை. சண்டியன்கள் பெரும்பாலும் நல்ல கட்டுமஸ்தாகவே இருந்தார்கள். அப்போது நான் ஒரு குட்டிப் பையன், ஆதலால் இவர்கள் என்ன சண்டித்தனம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு எல்லோரையும் போலவே தான் அவர்களும் தெரிந்தார்கள், ஆனால் நல்ல கட்டான உடம்புடன். ஒரு நாள் இந்த தாதாக்களில் ஒருவர் ஒரு கிணற்றுக்குள் இறந்து மிதந்தார். யாரோ அவரைக் கொன்று போட்டு விட்டார்கள் என்றே எல்லோரும் இரகசியமாக பேசிக்கொண்டனர். ஊரிலும், சென்னையிலும், இராமாயணத்திலும் இந்த தாதாக்கள் பொதுமக்களுடன் அநேகமாக உரசவும் இல்லை, உறவாடவும் இல்லை. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்ந்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. எப்போதாவது இந்த வட்டத்தை மீறி வந்து, அப்பாவிகளுடன் உரசியவர்கள் பின்னர் அநியாயமாகவே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இங்கு பல வருடங்கள் வேலைக்கு இப்படியான நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் ஒரு இடத்தை தாண்டியே போய் வந்து கொண்டிருந்தேன். அந்த இடத்தை, அங்கு நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீர்கள். உதாரணம், டென்சில் வாஷிங்டனின் 'Training Day' படம். இந்த ஊர்களினூடு போகும் பெரும் தெருக்களால் காரை ஓடிக் கொண்டு போவதில் எந்த சிக்கலும் இல்லை. காரின் கண்ணாடிகள் மூடி இருக்கும், சில நிமிடங்களில் இந்த ஊர்களைக் கடந்து விடலாம். ஆயிரக் கணக்கில் கார்களும், வாகனங்களும் போய்க் கொண்டிருக்கும். ஒரு நாள் என்னுடைய கார் அந்த ஊர் ஒன்றில், பெருந்தெருவில் நின்றுவிட்டது. யூடியூப்பை பார்த்து நானே காரில் ஒரு திருத்த வேலை செய்திருந்தேன். எனக்கு இது நல்லாகவே வேணும். சுத்தியலால் ஒரு ஆணியைக் கூட ஒழுங்காக அடிக்கத் தெரியாத எனக்கு யூடியூப் ஒரு அசட்டுத் துணிவைக் கொடுத்திருந்தது. பின்னால் வந்த சிலர் உதவி செய்து, என்னையும் காரையும் பெருந்தெருவில் இருந்து அந்த ஊருக்குள் இறக்கி விட்டிருந்தனர். முதல் தடவையாக அந்த ஊரில் கால் அன்று தான் வைத்தேன். அங்கிருந்து காப்புறுதி நிறுவனத்தை கூப்பிட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒருவர் வந்தார். என்னை விட ஒன்றரை மடங்கு உயரமும், இரண்டு மடங்கு அகலமும் இருப்பார். அவர்களுக்கே உரிய கடும் குரலில் என்ன நடந்து விட்டது என்றார். அவர்கள் கடுமையாகக் கேட்பதில்லை, ஆனால் அவர்களின் சாதாரணமே எங்களுக்கு கடுமையாகத் தான் தெரியும். என்னிடமிருந்து கார்ச் சாவியை வாங்கினார். காருக்குள் போய், காரைத் திறந்து ஏதேதோ செய்தார். என்னுடைய யூடியூப் வேலை இயந்திரப் பகுதியில் நன்றாக உள்ளுக்குள் இருந்தது, இலேசில் எவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. பின்னர் எனக்கு அருகிலேயே அந்தப் பெரிய மனிதன் நின்று கொண்டிருந்தார். காப்புறுதி நிறுவனம் காரைத் தூக்கிக் கொண்டும், என்னை ஏற்றிக் கொண்டு போகவும் ஒருவரை அனுப்பினது. வந்த வாகனத்தில் ஏறி விட்டு அவரை திரும்பிப் பார்த்தேன், 'பார்த்துக் கொள்...' என்றார் அந்தப் பெரிய மனிதன். எங்களை இங்கே எவரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் ஒரு பகிடியாகவே சொல்லிக் கொள்வோம். நாங்கள் அவர்களுக்கு எந்த விதத்திலும் ஒரு பொருட்படுத்தக் கூடிய 'எதிராளி' இல்லை என்று சொல்லியும் சிரிப்போம். கிட்டத்தட்ட அந்த தமிழ் படத்தில் வந்த 'சப்பை' என்ற பாத்திரம் போல நாங்கள். இங்கு பெண்களும் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதையும் நான் இங்கே சொல்லவேண்டும்.1 point- உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
நாங்க உக்ரேனுக்கு எவ்வளவும் கொடுப்போம். ஆனால் ரசியாவுக்கு ஒருவரும் கொடுக்க் கூடாது.1 point- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointவிளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.1 point- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
ஒரு பந்து மீதமிருக்க பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இலங்கை தகுதிபெற்றது Published By: VISHNU 26 JUL, 2024 | 11:00 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் ரி20 ஆசிய கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது. இந்த வெற்றியை அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (28) இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. விஷ்மி குணரட்ன (0), ஹர்ஷிதா சமரவிக்ரம (19) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (19 - 2 விக்.) எனினும் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் கவிஷா டில்ஹாரியும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். டில்ஹாரி 17 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே அத்தபத்துவின் பின்னங்கால் அந்தரத்தில் இருந்தபோது விக்கெட் காப்பாளர் முனீபா ஸ்டம்ப் செய்தார். என்னே விசித்திரம், முனீபா கேள்வி எழுப்பாததால் அத்தபத்து தப்பித்துக்கொண்டார். முனீபாவின் கவனக்குறைவான அந்த செயல் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலக்ஷிகா சில்வா வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (78 - 4 விக்.) எனினும் சமரி அத்தபத்துவும் அனுஷ்கா சஞ்சீவனியும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமரி அத்தபத்து அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து விக்கெட்டைத் தாரை வார்த்தார். அவர் 48 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஹசினி பெரேரா (3), சுகந்திகா குமாரி (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அனுபவசாலி அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தார். பந்துவீச்சில் சாடியா இக்பால் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். குல் பேரோஸா 25 ஓட்டங்களையும் முனீபா அலி 37 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து சித்ரா ஆமின் (10), அணித் தலைவி நிதா தார் (23) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (99 - 4 விக்.) எனினும் ஆலியா ரியாஸ் (16 ஆ.இ.), பாத்திமா சானா (23 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 140 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: சமரி அத்தபத்து. https://www.virakesari.lk/article/1894841 point- தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointபடித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
திருநெல்வேலிக்கே அல்வாவா சாத்தான் அவர்களே!!🤪1 point- சம்பந்தர் காலமானார்
1 pointஈழப்பிரியன்… இந்தப் பதிவு போட்டு பத்து மணித்தியாலம் ஆகியும் @Kandiah57 அண்ணையை இந்தப் பக்கம் காணவில்லை. சிலவேளை அவரின் மனைவியின் கண்ணில் இந்தப் பதிவு பட்டுவிட்டது போல் இருக்கு. 🤣 பென்சன் எடுத்த வயசிலை… பாவம், நல்ல சாத்துப்படி நடந்திருக்கு. 😂1 point- சமையல் செய்முறைகள் சில
1 pointதிருமதி இல்லத்தில் இல்லாத சமயங்களில் நீங்கள் விரைவாகவும் சுவையாகவும் செய்து சாப்பிட ( ரெண்டு கருவாட்டு துண்டு சேர்த்துவிட சைட் டிஷ்சுக்கும் அந்தமாதிரி ) மணியான மசாலா......! 😂1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எதை மறப்பது எதை விடுவது நெஞ்சமெல்லாம் புண் முதுகெல்லாம் நயவஞ்சகர்களின் கத்திகள் இதுக்கு மேலும் இவர்கள் மறப்பது எனும் போர்வையில் உன்னதமான புலிகளின் அமைப்பை யாழில் தரம் தாழ்த்துவதே அவர்களின் வேலை. கொஞ்சம் விட்டால் புலிகள் தான் தமிழரை அழித்தார்கள் என்று யாழில் நிறுவினாலும் நிறுவுவார்கள் . பம்பல் வேணுமென்றால் தினமும் உலகில் நடக்கும் சுவாரசியமான விடையங்கள் நிறைய இருக்கு நன்னி.1 point- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
என்கிறீர்கள் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்???? இது உங்களுக்கே கேலிக்குரியதாகத் தெரியவில்லையா? 🤔 இரவின்றிப் பகல் இல்லை, பகலின்றி இரவில்லை இது இயற்கை, இதற்குள்தான் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் வாழ்வார்கள். சேற்றை மிதிக்காது நாற்றை நட்டு நெல் எடுக்க முடியாது.🙏0 points- உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
நீங்களும் நானும் எங்கே ஐயா போராடினோம் ? போரடினவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். வேண்டுமானால் ஆதரவளித்தோம் என்று கூறுங்கள். அது பொருத்தமாக இருக்கும். ஈராக்கில் இருக்கும், சிரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைகளும் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிற வட்டத்திற்குள் வருமா? அல்லது இஸ்ரேலை என்னவென்று சொல்வது,. ......... 😁0 points- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
கிளிநொச்சிக்கு கயிட்ட காலமுங்க...இங்கை வாழ்வெட்டு..பரிசிலை ...புரோக்கர்மூலம் ...மலையக யுவதியை பேசி..இவரே ஒரு கோடி 40 லட்சம் அவவுக்கு சீதனமும் கொடுத்து..கடைசியில் போன் கதைக்கையில் வந்த பிரச்சினையில் ..கிளிநொச்சித் தம்பி தற்கொலை செய்து விட்டாராம்.... இன அழிவு எப்படிப்போகுது..0 points - மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.