Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. island

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1747
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38756
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/16/24 in Posts

  1. அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல. மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர். ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது. காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான். அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும். சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.
  2. @Kapithan அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள் பயன்படுத்திய உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில் தமிழரின் அரசியல் பலம் உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது. மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும் அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது அந்த விவாதம்தே நடைபெறும் போது அந்த தேசிய செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை அண்ணை நீங்கள் இப்ப முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும் இந்த நேரம் நான் உதவி செய்யாமல் விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன தகுதி இருக்கு, எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன் இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார். இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே திட்டமிட்ட நாடக உரையாடல் என்பதை அறியாத அந்த வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின் தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன் கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன. இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து அது தொடர்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது.
  3. கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)
  4. எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தைகளைக் காணாமலேயே போய்விடும் என்றார்.
  5. கடைசி ஆறு மாதங்களும் இன்னும் சிறிது காலங்கள் தான் உள்ளது அதற்குள் சுருட்டுவதை சுருட்டிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தான் நிதி திரட்டல் வேகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு திட்டமிட்டு உணர்சசி உருவேற்றி பல நாடகங்களை நடத்தி மின்னல் வேகத்தில் பணதிரட்டல் நடந்தது. கடைசி நேரத்தில் பணம் திரட்டிய முக்கியமான நபர்கள் பலருக்கு இனி அங்கு எல்லாம் முடியபோகிறது என்பது தெளிவாக தெரிந்தே இருந்தது. அதனால் ஏற்பட்ட மனஸ்தாபங்களே இன்றைய குழப்பத்திற்கு அத்திவாரம்.
  6. ஆரம்பிப்பதை சங்கு ஊதி ஆரம்பிப்பார்கள், முடிவையும் சங்கை ஊதி முடிப்பார்கள், அத்தனை சிறப்பு சங்கிற்கு. தமிழ் வேட்பாளரை சங்கு ஊதி வரவேற்போம்!🙌 அட சங்குகளில் உயர்வான, சிறப்பான சங்கு என்பெயரிலேயே உள்ளது. 😁 பாஞ்ச சன்யம்.😌
  7. என்னது உங்களை போன்றவர்களுக்கு பம்ம வேண்டுமா. மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்கள் இங்கு எழுத தொடங்கிய காலம் முதலே பலர் ர்ழுதியுள்ளார்கள். இப்போ புரிகிறதா உங்கள் பிரச்சனை? மக்கிராக்கர் உங்களை விட படித்தவர். அவர் சொல்பவற்றை கேட்பதில் என்ன தவறு? ஓ நீங்கள் வாசிக்கும் செய்திகளை நானும் வாசிக்க வேண்டுமா?
  8. இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது! வந்தமா… விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா.. என்று வெளியே வந்துவிட்டேன்!
  9. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வரும் தங்கலான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார். இன்னொருபுறம் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் அபகரிக்கப்பட்ட நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை. தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து பவுத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்கு பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்து பிடுங்கியது, தாய் வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் கதையின் ஓர் அங்கமாய் தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன. முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சினை இரண்டாம் பாதியில் இருந்துதான் தொடங்குகிறது. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து தங்க வேட்டைக்கு புறப்படுவது வரை சுவாரஸ்யமாக செல்லும் படம், அதன் பிறகு தங்கலானின் பயணம் தொடங்கிய பிறகு ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதைப் போல திரும்ப திரும்ப திரும்ப, எத்தனை முறை என்றே கணிக்க முடியாத அளவுக்கு, காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கின்றன. நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. முரட்டுத்தனம் கொண்ட தங்கலானையே மிரட்டும் கங்கம்மா தமிழின் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமாக பேசப்படும். பசுபதி, மாளவிகா மோகனன் என அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது சந்தேகமே இன்றி ஜி.வி.பிரகாஷ்தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தை காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, தங்க வயல், பூர்வக்குடிகளின் வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். கலை இயக்கம், ஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களில் படக்குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் - மாளவிகா மோகனன் மோதும் காட்சி சிலிர்ப்பனுபவம். இரண்டாம் பாதியில் தங்கத்தை எடுக்க முயற்சிப்பது, அதனை மாளவிகா மோகனன் தடுக்க முயல்வது, இவை ஏன் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை. காட்சிகள் ஒரு முடிவே இல்லாமல் இலக்கின்றி நகர்வது கடும் சலிப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் இப்போது வரும், இதோ வந்துவிட்டது, இதுதான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சியிலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டே சென்றிருக்க தேவையில்லை. க்ளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்கள் அபாரமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முந்தையக் காட்சிகள் ஏற்படுத்திய சலிப்பால் அது முற்றிலுமாக எடுபடாமல் போவதை தவிர்க்க முடியவில்லை. யாரும் இதுவரை பேசத் துணியாத ஒரு வரலாற்றை எடுத்துக் கொண்டு, அதில் தொன்மம், வாய்வழிக் கதைகள் அடிப்படையிலே ஃபேன்டசியாக கொடுக்க முயன்றிருக்கிறது படக்குழு. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு கிளாசிக் படைப்பாக ஆகியிருக்கும் இந்த ‘தங்கலான்’. தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன? | Thangalaan Movie review - hindutamil.in
  10. தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளையும் விகாரங்களையும் கட்டுவதுதான் நல்லிணக்கம் என்று சிங்களவரும், சிங்களக் காடைத்தன அரசும் நினைக்கிறதுபோலும்.குறைந்தபட்சம் முதலில் தமிழர் பகுதிகளில் உள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்றுவதோடு, மாவீரர் துயிலகங்களையும் விடுவித்துவிட்டுத் தமிழினத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுடிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பையும் நிறுத்திவிட்டுக் கனடாவுக்குக் கடிதம் எழுதமுன்வரலாமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது. அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. இங்கே கவனிக்கப்படவேண்டியது கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது. புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன? ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது. இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும். அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை. புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை, புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான். கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்: Currently listed entities in XML format Abdallah Azzam Brigades (AAB) Abu Nidal Organization (ANO) Abu Sayyaf Group (ASG) Al-Aqsa Martyrs' Brigade (AAMB) Al-Ashtar Brigades (AAB) Al-Murabitoun Al-Muwaqi'un Bil Dima Al Qaida Al Qaida in the Arabian Peninsula (AQAP) Al Qaida in the Indian Subcontinent (AQIS) Al Qaida in the Islamic Maghreb (AQIM) Al Shabaab Al-Gama'a al-Islamiyya (AGAI) Ansar al-Islam (AI) Ansar Dine Aryan Strikeforce Asbat Al-Ansar (AAA) (The League of Partisans) Atomwaffen Division Aum Shinrikyo Babbar Khalsa International (BKI) Blood & Honour (B&H) Boko Haram Caucasus Emirate Combat 18 (C18) Ejército de Liberación Nacional (ELN) Euskadi Ta Askatasuna (ETA) Fatemiyoun Division (FD) Front de Libération du Macina Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) Gulbuddin Hekmatyar Gulbuddin Hekmatyar's Faction of the Hezb-e Islami, Hezb-e Islami Gulbuddin (HIG) Hamas (Harakat Al-Muqawama Al-Islamiya) (Islamic Resistance Movement) Haqqani Network Harakat al-Sabireen (HaS) Harakat ul-Mudjahidin (HuM) HASAM (Harakat Sawa'd Misr) Hay'at Tahrir al-Sham Hizballah Hizbul Mujahideen Indian Mujahideen (IM) International Relief Fund for the Afflicted and Needy - Canada (IRFAN – CANADA) International Sikh Youth Federation (ISYF) Islamic Movement of Uzbekistan (IMU) Islamic Revolutionary Guard Corps Islamic Revolutionary Guard Corps' Qods Force Islamic State Islamic State – Bangladesh Islamic State – Democratic Republic of the Congo Islamic State East Asia Islamic State in the Greater Sahara Islamic State – Khorasan Province (ISKP) Islamic State in Libya Islamic State – Sinai Province (ISSP) Islamic State West Africa Province Jaish-e-Mohammed (JeM) Jama’at Nusrat Al-Islam Wal-Muslimin James Mason Jaysh Al-Muhajirin Wal-Ansar (JMA) Jemaah Islamiyyah (JI) Kahane Chai (Kach) Kurdistan Workers Party (PKK) Lashkar-e-Jhangvi (LJ) Lashkar-e-Tayyiba (LeT) Liberation Tigers of Tamil Eelam (LTTE) Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) Palestine Liberation Front (PLF) Palestinian Islamic Jihad (PIJ) Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP-GC) Popular Front for the Liberation of Palestine (PFLP) Proud Boys Russian Imperial Movement Sendero Luminoso (SL) Taliban Tehrik-e-Taliban Pakistan (TTP) The Base Three Percenters World Tamil Movement (WTM) https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx
  12. எனது முகநூல் பதிவினைப் படியெடுத்துக் கீழே மீள்பதிவு செய்துள்ளேன். அங்கு நான் ஏற்றிய நிழற்படங்களைக் காண இறுதியில் உள்ள முகநூல் இணைப்பைச் சொடுக்கவும். இனி அந்தப் பதிவு : சங்கே முழங்கு ! -சுப.சோமசுந்தரம் Suddenly I felt, "Today why don't I blow my own trumpet ?". சுய தம்பட்டத்தில் அப்படியென்ன அலாதி இன்பம் ? எதையும் அனுபவித்தால்தானே தெரியும் ? எனவே இக்கட்டுரைத் தலைப்பும் அங்ஙனமே அமையப்பெற்றது. எத்துணைச் சிறிய பெருமையானாலும் (முரண் தொடை - oxymoron !), அந்த என் பெருமையைச் சங்கே முழங்கு ! நான் சார்ந்த கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான MUTA பேரியக்கத்தில் ஒரு மரபு உண்டு. சங்க உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது அந்தந்தக் கல்லூரிக் கிளையின் மூலமாக மட்டுமே பணி நிறைவு விழா நிகழ்த்தப் பெறும். நான் ஒரு கணிதப் பேராசிரியராக ஜூன் 2020ல் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஓய்வு பெற்றேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு யாருக்கும் பெரிய அளவில் பணி நிறைவு விழா நடைபெறவில்லை (நடத்தியே ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை !). கணிதம் மற்றும் MUTA பேரியக்கத்தின் மூலமாக என்னுடன் நெருக்கமான பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதப் பேராசிரியர் முனைவர் கை. அண்ணாதுரையும், பல்கலைக்கழகத்தில் எனது துறை நண்பரான முனைவர் சங்கர்ராஜூம் என்னைக் கௌரவிக்கும் வகையில் இளம் கணிதப் பேராசிரியர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியே தீருவது என்று முடிவெடுத்து, அதற்கான முயற்சியில் இறங்கியது ஆசிரியர் என்ற முறையில் எனது பெருமை. நடத்தியே காட்டினர். வெகு தொலைவில் உள்ள இளம் ஆசிரியப் பெருமக்களையும் நிகழ்ச்சி கவர்ந்திருந்தது தனிச்சிறப்பு; நனி சிறப்பு. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எல். ரவிசங்கர் அவர்களும், கல்லூரி பேராசிரியர்கள் சார்பில் (MUTA வின் சார்பில் எனச் சொல்வது நடைமுறையில் பொருத்தமான ஒன்று) பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரான தோழர் பேரா. ராஜ ஜெயசேகரன் அவர்களும் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். பயிற்சிப் பட்டறையில் சொற்பொழிவாளராய்ப் பல்வேறு ஐஐடி நிறுவனங்களில் இருந்தும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் வந்திருந்த எனது நண்பர்களான பேராசிரியர் பெருமக்கள் நிகழ்விற்கு மெருகேற்றினர். அன்னாருக்கு அடியேன் வாழும் நாள் வரை நன்றிக் கடப்பாடுடையவன். பங்கேற்பாளர்கள் பயனுறும் வகையில் அவர்களின் திட்டமிடல் அமைந்தமை அந்நிகழ்ச்சிக்கான வலிமை. இரண்டாவது நாள் மாலையில் நடைபெற்ற வாழ்த்தரங்கில் மேடையில் என்னையும் எனது துணைவியாரையும் அமர வைத்துச் சிறப்பித்தது எனக்கான அரும்பெறல். நெடுந்தூரப் பயணத்தையும் பொருட்படுத்தாது நண்பர்கள் வந்து வாழ்த்தினர். கணிதத்தில் எனது கற்பித்தல் திறனையும், ஆசிரியர் இயக்கம் சார்ந்தும் மற்றபடியும் சமூகப் போராட்டக் களங்களில் எனது பங்களிப்பையும், எழுத்துலகில் எனது சிறிய (அவர்கள் கூற்றின்படி சீரிய) பணியினையும் வெகுவாக அவர்கள் பாராட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டினர். ஏதோ ஒரு வகையில் என்னுள் ஒரு பன்முகத்தன்மை இருக்குமோ என்று என்னையே எண்ண வைத்தனர். ஐந்து நாட்களும் கழிந்ததே தெரியவில்லை என்பது பங்கேற்பாளர்கள் பொத்தாம் பொதுவாக இறுதியில் தந்த பின்னூட்டம். ஒவ்வொரு சொற்பொழிவையும் நுணுக்கமாக அணுகி, தாம் பெற்ற பயன்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டது நிகழ்வின் வெற்றிக்குக் கட்டியங் கூறியது. சமீப காலங்களில் நான் பங்கேற்ற கணித நிகழ்வுகளில் இது மகுடமாய்த் திகழ்வதாய் உணர்கிறேன். இவ்வுணர்வே எனக்கான மிகப்பெரிய கௌரவம். கணிதப் பகுப்பாய்வு ((Mathematical) Analysis) என்ற தலைப்பில் நிகழ்வை அமைத்தபோதும் இத்துணைப் பேரைப் பங்கேற்க வைத்து மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்தோர் பேரா.அண்ணாதுரை, அவருக்கு உறுதுணையாய் நின்ற பேரா. சங்கர்ராஜ், திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் மாணாக்கரே ! சிறு வயதிலிருந்தே அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட நான், அறிவுலகில் எனக்கு ஒளி ஏற்றியவர் அவரே என உணர்பவன். இந்தப் பயிற்சிப் பட்டறை அனுபவத்தின் மூலம் எனது நண்பர்கள் யார் யாரென்றும், இன்ன பிற உலகியலையும் எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் எனது தோழர் பேரா.அண்ணாதுரை என்பது மிகையில்லை. https://www.facebook.com/share/p/29V5kSEYXwbVtrZJ/?mibextid=oFDknk
  13. மடியில் கத்தி. மனதில் பயம். ஏன் எதற்கு என்று விளக்கம் சொல்லாமலே முன்னவர்கள் சில விடயங்களை எங்களுக்குள்ளும் புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியானதொன்றாகவே சீக்கியர் கத்தி, மீசை,தாடி, தலைப்பாகை எல்லாவற்றையும் பார்க்கிறேன். இப்பொழுது கத்திகளுடன் சீக்கியர்கள் வருவதில்லை என்பதில் ஆறுதல். ஆனாலும் சிரியனும்,ஆப்கானிஸ்தானும் எப்பொழுது கத்தியை எடுப்பார்கள் என்ற பயம் யேர்மனியில் இருக்கிறது. முந்தநாள் வந்த யேர்மனியச் செய்தி இப்படி இருக்கிறது, கத்திகளைப் பாவிக்கும் வன்முறை ஜேர்மனியில் தற்போது அதிகரித்திருக்கிறது. வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக எடுத்துக் கொள்ளும் ஆயுதம் கத்தியாகத்தான் இருக்கின்றது. ஜேர்மனியில் கடந்த ஆண்டு 13,844 தாக்குதல்கள்கள் நடைபெற்றதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த மாதம் 10,11,12ம் திகதிகளில் அதாவது 72 மணித்தியாலங்களில் மட்டும், கத்திகளைப் பாவித்த 13 வன்முறைகள் பதியப்பட்டிருக்கின்றன.
  14. கூடுத‌ல் ச‌த்து உள்ள‌ உண‌வு சாப்பிடுத‌ல் ம‌ற்றும் விளையாட்டில் திற‌மைய‌ நிருபித்தால் அணியில் நிர‌ந்த‌ இட‌ம் கிடைக்கும்.....................இவ‌ர‌ அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டி ப‌ல‌ மாத‌ங்க‌ள் அல்ல‌து சில‌ வ‌ருட‌ங்க‌ள் ஆச்சு இவ‌ர் கிருஸ்துவ‌ ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்.....................பிக்குக‌ள் வாழும் நாட்டில் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ள் க‌ச‌க்கும்.................................. கிடைக்கும் வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தினால் ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் போல் இவ‌ருக்கும் நிர‌ந்த‌ர‌ இட‌ம் கிடைச்சு இருக்கும்.....................ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லாக‌ விளையாடி விட்டு ப‌ல‌ விளையாட்டை சுத‌ப்பினால் அணியில் இட‌ம் பிடிப்ப‌து சிர‌ம‌ம் தான்................................
  15. முதல் தடவை கோர்ட்டு போயிருந்தேன் மேலே இருந்தவர் .."ஆடர் ஆடர் " என்று சொன்னார். நான் எழுந்து இரண்டு சிக்கன் பிறை, நண்டு சூப், பிரைட் ரைஸ் என்று சொன்னேன்....இரண்டு போலீஸ்கரர் என்னை வெளியே கூடிப்போகிறார்கள் எந்த ரெஸ்டாரண்ட் என்றுசொல்லவில்லை.😄😄
  16. 34 வருடங்களின் பின் வழிபட அனுமதி நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட வௌ்ளிக்கிழமை (16) அனுமதி வழங்கப்பட்டது. அங்கு பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்ததன் பின்னர் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/34-வருடங்களின்-பின்-வழிபட-அனுமதி/46-342288
  17. கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.
  18. சிறீலங்காவில் தமிழீழத் தமிழர்கள் விடுதலை அடைவதற்கு கனடாநாடு அளித்துவந்த பாரிய உதவிகளை எப்போ நிறுத்தியது??
  19. சகல நாடுகளிலும் குடும்ப வாரிசுளா? இருந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது. அப்பன் மகன் பேரன் பூட்டன் என்று போய்க் கொண்டே இருக்கும்.
  20. இந்திய தூதுவராக இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இதற்கு புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.
  21. ஏன் விசுகர் உங்களுக்கு தேவையில்லாத வேலை? இப்பத்தையான் பெடியளைப்பற்றி தெரியும் தானே. 😂
  22. போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும்? தெரியாமல் போவதற்கு நியாயம் இல்லையே?
  23. அண்மையில் இங்கே ஒரு திருமணம் நடந்தது. அதன் மாப்பிள்ளை மணவறையில் தாடியை ஒழுங்கு செய்யாது நின்றார். நான் கேட்டேன் கொஞ்சம் ஒழுங்கு செய்து இருக்கலாமே என்று. அதற்கு அவர் சொன்னார் மணவறைக்கு தான் வரும் போது தாடியை ஏதாவது செய்திருந்தால் அப்படியே திரும்பி போய் விடுவேன் என்று மணமகள் சொல்லி இருந்ததாக .. இப்ப புரியுதா அண்ணா.🤣 ஆண் பாவம் அண்ணா 😆 பாவம் பொடியள் பம்மிக்கொண்டு திரிகிறார்கள் 🤪
  24. எப்போதும் சிங்களத்துக்குச் சாமரம் வீசும் விசுவாசியின் ரணில் ஆதரவுப் பரப்புரைக் கட்டுரை. நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. ஆகக் குறைந்தது ''சஜித் ராஜபக்ச'' என்ற தலைப்பின்கீழ் வரும் பத்தியில் நான்காவது வரியைக் கட்டாயம் திருத்த வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. பின்னை இலங்கை தமிழர்கள் மாதிரியே?? கழுவமும். மாட்டார்கள் மற்றவர்கள் கழுவமும். கழுவதையம். தடுப்பார்கள். கலாசாரம் என்று சொல்லி தழுவும் மாட்டார்கள் குலாவவும். மாட்டார்கள் சொந்த நாட்டை ஆளவும். மாட்டார்கள் பத்து பிள்ளைகள் பெற்றவர்கள் குறைத்து குறைத்து 3. 2. 1. 0. ஆகி விட்டது நான் இலங்கையில் இருந்த போது தமிழர்கள் தொகை 35. லட்சம் இப்போது 20 லட்சம் இன்னொரு இனத்தின் ஆட்சியின் கீழே அடிமையாக இருக்கிறார்கள்
  26. தாத்தா வணக்கம்..இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தாத்தா.ஆங்கிலத்தில் வரும் வாழ்த்து எல்லாம் சிறியயண்ணாவிடம் கொள்ளை அடிச்சது.🤭
  27. புரிந்தவன் பிஸ்தா .......! 😂
  28. ஒரு பையன் தான் வயசுக்கு வந்து விட்டேன், எனக்கு கலியாணம் கட்டி வை என்று நேரடியாகவா கேட்க முடியும் . ......இப்படித்தான் ஏதாவது மாயாஜாலம் செய்ய வேண்டும் . ........! 😂
  29. இந்திய புலிகள் மோதலின்போது ஆயுதம் உணவு மருந்துகள் என்று அனைத்தும் தடைப்படுத்தப்பட்டு முற்றுகைக்குள் புலிகள் சிக்கியபோது, லொறி லொறியாக துப்பாக்கிகள், பல்லாயிரம் ஜேஆர் வகை இஸ்ரேலிய கைகுண்டுகள், ஆர்பிஜி க்கள், லட்சக்கணக்கான ரவைகள், மருந்துகள் உணவு என்று அனைத்தும் இலங்கை ராணுவத்தினூடாக பிரேமதாசவினால் புலிகளுக்கு வழங்கப்பட்டு புலிகளை வேட்டையாட சென்ற இந்திய ராணுவத்தை புலிகள் வேட்டையாடியதே வரலாறு. பலநூறு இந்திய ராணுவம் கொல்லப்பட மறைமுக காரணமாயிருந்த இலங்கை ராணுவமும் சேர்ந்து கொல்லப்பட்ட இந்திய ராணுவத்தினரை நினைவு கூர்ந்ததை வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னா
  30. அட இப்பதான் எனக்குப் புத்தியில் உறைத்தது. தலைக்குப் போட்டதுதான் தவறி அவர் கால்களில் விழுந்ததா.??😳
  31. யாருடைய மண்ணில்… யாருக்கு, அஞ்சலி செலுத்துவது. 😡 இவர்களால் அந்த மண்ணில் வாழ்ந்த பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, இந்திய அரசு ஒரு கண்டனம், ஒரு அஞ்சலியாவது செலுத்தியதா? 😡 வந்திட்டாங்கள்… தாங்கள் ஒரு ஆட்கள் என்று… 😡
  32. நல்லகாலம் திரும்பி வந்தது. இல்லையென்றால் கத்தியுடன் குடிவரவு அலுவலகக்காரன் பிடித்திருந்தால் ஆளை உள்ளுக்கு போட்டு சிலவேளை திருப்பியும் அனுப்பியிருப்பார்கள்.
  33. சிறியர் தலைக்கு 25 லட்சம் டாலர் போடப்போறாங்கள்...
  34. உங்களுடைய நிறம். தான் எல்லோரும் என நினைக்கக்கூடாது
  35. இப்புடியே போய்க்கிட்டிருந்துதென்டா அவங்கள் ரெண்டு பேருக்குமே எதுக்கு சண்டை புடிக்கிறோம் எண்டது மறந்துபோயிடும்... 🤣
  36. வணக்கம்! சும்மா கிழிந்த ரெக்கோர்ட் தட்டு ஒரே இடத்தில் நின்று சுற்றுவது போல் அவரவர் தனிப்பட்ட வாழ்விடத்தை வைத்து ஒரே கருத்தை பகிராமல் நியாயபூர்வமாக வேறு ஏதாவது கருத்தை கூறுங்கள். எதெற்கெடுத்தாலும் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுபவர்களை மறுத்து எழுதுபவர்களுக்கு ஆமா,தாளங்கள் போடுகின்றீர்களே தவிர...... வேறேதும் ?????????? ஆதாரங்கள் தகவல்கள்??????
  37. பேசாமல் பாலஸ்தீனர்கள் அப்பாவி இஸ்ரேலிய நகரங்களின் மீதோ அல்லது உக்கிரேனியர்கள் அப்பாவி ரஷ்யர்களின் நகரங்களின் மீதோ அல்லது ரஷ்யர்கள் போர் முனையில் இருந்து தொலைவில் இருக்கும் அப்பாவி உக்கிரேனியர்கள் நகரங்களின் மீதோ அணுகுண்டை போட்டுவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.. ஏனெனில் மேலே அமெரிக்கா அணுகுண்டை வீச ஜப்பானியர்கள் மீது நீங்கள் குறிய காரணங்கள் போல் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் மேலே நான் கூறியவர்களின் பக்கங்களில் இருந்து அவரவர்க்கு இருக்கு.. பேசாமல் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு மற்றவர்மீது அணுகுண்டை போட்டுவிட்டால் எல்லாம் சுபவம்.. பின்னர் மேலே நீங்கள் யப்பானியர்கள் மீது கூறியது போல் காரணங்களை எழுதலாம்.. இது உங்கள் கருத்து இல்லாவிட்டால் எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே.. நான் முன்னுக்கு எல்லாம் வாசிக்கவில்லை.. குறிப்பிட்ட உங்கள் பதிவை வாசித்து விட்டு எழுதியதே அது.. அந்த பதில் அந்த பதிவிற்கு என் மனதில் பட்டதே.. உங்களுக்கானது அல்ல..
  38. ஜட்டியில்... ஒரு பட்டம். 😂 பெடியனுக்கு... என்ன, பிரச்சினையோ... யாரறிவார். 🤣
  39. இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன? நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுகின்றேன். அதற்கு பதில் கருத்து எழுத விரும்பினால் எழுதுங்கள். கருத்து எழுதுகின்றோம் எனும் பெயரில் மட்டம் தட்டுவதை நிறுத்துங்கள். கருத்து பற்றாக்குறையா கேளுங்கள் தரப்படும். 🤣 எல்லாம் தெரிந்தவர் என்ற மமதை இனியும் வேண்டாம்.
  40. ரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களை வாசிக்கும் என் உழைப்பு (ஓம், புத்தங்கள் இன்னும் பிரிண்ட் செய்கிறார்கள், நூலகத்திலும் அவை இருக்கின்றன-News flash for you!) உங்களுடையது யார் மீதான விசுவாசம்? தம் மக்களையே பலிக்கடாக்காளாக்கும் சர்வாதிகாரிகள் மீதான ஒரு வினோதமான ஈர்ப்பு! கிருபன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார்: Macho பலவான்களை நோக்கி ஒரு இனம்புரியாத கவர்ச்சி யாழ் களத்தில் சிலருக்கு இருப்பதாக! எல்லோரிடமும் "விளக்கம்" கேட்பீர்கள், உங்கள் விளக்கம் என்ன? ஏன் macho பலவான்கள் மீதான இந்த "கவர்ச்சி"😂? ஆட் களுக்கு பேர் வைப்பதில் வல்லவர் என நானறிவேன். மற்றது வாசித்து அறிவதுக்கும் போர் முனையில் மிகபெரிய பதவி வகித்தவரும் கல்வியில் வைத்திருக்கும் ஒருவர் சொல்வதை கேட்டறிவ்து அவ்வளவு குறைவாக உங்களுக்கு படுகிறதா? உலக அமைதிக்கு யார் குந்தம் விலைவிக்கிறார் என பார்த்து அவர்களை எதிர்ப்பவன் நான்.
  41. இவர் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும்போது இனிவரும் காலங்களில் செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளதுபோல தெரிகின்றது!
  42. தகும். தமக்கு சவாலாக வருபவர்கள் , வர இருப்பவர்கள் அனைவரையும் மிரட்டும் வகையில் தான் மேற்படி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மேற்படி நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டுவன. இது மட்டும் மிரட்டல் அல்ல. பல பயங்கரவாத குழுக்களை உருவாக்கி அவற்றை மேற்படி நாடுகளில் பயந்தரவாத தாக்குதல்களை நடாத்துபவஎகளும் இவர்களே. அ து மட்டுமில்லாமல் தமது சொற்படி நடக்காத நாடுகளின் அரசுகளை கவிழ்த்து தமது பொம்மை அரசுகளை நிறுவுபவர்களும் இவர்களே. கடைசியாக இணைத்த காணொளியை பாருங்கள். உங்களின் அமெரிக்க விசுவாசம் புரிந்து விடும்.
  43. தேர்தல் ஆணையகம் இவருக்கு சின்னமாக ஆணுறையைக் கொடுப்பார்கள் என நம்பியிருந்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.