Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
island
கருத்துக்கள உறவுகள்7Points1747Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்7Points46783Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்5Points2951Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/17/24 in all areas
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
3 pointsகண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்களே ஒண்ணுமே புரியல உலகத்துல3 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
கந்தையர் நீங்கள் நீட்டி முழக்கி பல பந்திகளில் சொன்ன விடயத்தை , அந்த பணத்தை அபகரித்த கொள்ளையர்கள் பல வருடங்களுக்கு முதலே ஒரே வசனத்தில் கூறிவிட்டார்கள். “தலைவர் வந்தால் கணக்கு காட்டுவொம்” என்று. அவர்கள் கில்லாடிகள் அல்லவா…. 😂3 points
-
விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
இரண்டுமேதான், இலங்கைக்குள் இன்னொருநாட்டை உருவாக்குவதை சர்வதேசங்களில் எந்தநாடும் இப்போதும் சரி அப்போதும் சரி ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனால் தனிநாடு எமக்கு விருப்பில்லை என்றில்லை, சாத்தியப்பாடான அணுகுமுறைகளையே முதலில் ஆராய வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் கொடிகளையும் எமது தாயகத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளின் புகைப்படங்களையும், மஞ்சள் சிவப்பு கொடிகளாய் எமது அடையாளத்தையும் தாங்கி நிற்கலாம் என்பதே மனசில் தோன்றுவது, மஞ்சள் சிவப்பு கொடிகளை தமிழர் பகுதிகளிலேயே எமது மக்கள் அடையாளமாய் தாங்கி நிற்கிறார்கள், சிங்களவனும் அதற்கு தடை விதித்ததாய் தெரியவில்லை. ஆகவே அது எம் பொது அடையாளமாய் இருக்கலாம். ஓரிரு தினங்களின் முன்னர் பிரம்டன் நகரபிதா எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராய் போராட்டம் நடத்திய சிங்களவர்களுக்கெதிராய் காட்டமான பதிலையும் வழங்கி உறுதியாய் குரல் கொடுத்ததெல்லாம் மிக பெரும் விஷயங்கள் அதை கனடாவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களை பின் தொடர்வதே சாணக்கியம். கனடாவின் வரைமுறைகளை மீறி அவரைபோன்றவர்கள் எமக்காக செயல்படபோவதில்லை, போனால் அவர்கள் மீதும் சட்டம் பாயும் அவ்வாறான நிலமை உருவாக எமது அணுகுமுறைகள் இருக்க கூடாது என்பதே அவா. மீறி வெறும் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி எழுந்தமானமாய் போனால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கேஸ்தான். எமக்கான வாய்ப்புகளை சரியான பயன்படுத்துவதும் தவறாகிபோவதும் வலிமையுள்ள எம்மவர்களின் அமைப்புக்களின் கைகளிலேயே உள்ளது. எம்மை போன்ற சாமானியர்களால் எழுத்தில் மட்டுமே கவலைகளை முடியும் .3 points
-
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி! 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள பாராலிம்பியன்களுக்கும் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396027 @Kapithan, @பாலபத்ர ஓணாண்டி, @வீரப் பையன்26 😂2 points
-
குறுங்கதை 32 -- அச்சம் தவிர்
2 pointsஅச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல. மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது. சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர். ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது. காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான். அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும். சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.2 points
-
நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
இதுவும் டிக்டொக்கில் வாசித்ததா ? பொருளாதார நெருக்கடியில் உள்ள ஜேர்மனி அதன் அடுத்த வருட பட்ஜெட்டில் செலவுகளைக் குறைக்க முயல்கிறது. இந்த வருட உக்ரெயின் உதவி 8 பில்லியன் ஈரோ. அடுத்த வருடம் இதனை 4 பில்லியனாகக் குறைக்கிறது. மீதி 4 பில்லியன்கள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து வரும் வருமானத்திலிருந்து ஈடு செய்யப்படும். இதுவும் இறுதி முடிவு கிடையாது, பாராளுமன்றத்தில் பட்ஜெட் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.2 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான். பூனைக்கு மணி கட்டுவது யார்?2 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
2 points@யாயினி உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதத்திற்கும் மனமார்ந்த நன்றிகள். 💟2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
ம் ..... பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டது என நினைப்பது பூனையின் கற்பனையே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சுகாதார வசதிகளை தடுத்தது, வலிந்து இடம்பெயரச்செய்தது, பாதுகாப்பு இடங்களையும் சுகாதார நிலையங்களையும் உணவு களஞ்சியங்களையும் தாக்கி அழித்தது, மக்களை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து கொன்றது, சரணடைந்த பாலகர் தொடங்கி பெரியவர் வரை கொன்றது, காணாமல் ஆக்கியது, பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைத்தது, மரணப்புதைகுழிகளை சர்வதேச நாடுகள் விசாரணை செய்ய மறுப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்வளவையும் செய்து விட்டு போலிக்கு ஒவ்வொரு காரியாலயம் திறந்தீர்களே இது ஆதாரமில்லையா? வெறித்தனமான வெற்றி விழா கொண்டாடினீர்களே அது ஆதாரமில்லையா? சர்வதேசத்துக்கு உறுதிமொழி கொடுத்து கால அவகாசம் என இழுத்தடிப்பது ஆதரமில்லையா? எங்களுக்கு பண உதவி செய்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று உதவி வேண்டி விகாரைகளை கட்டியெழுப்பி பாதிப்பட்ட மக்களின் இருப்பிடத்தை இல்லாமல் செய்வது ஆதாரமில்லையா? தெருக்களில் நின்று பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் வீரவரலாறுகளை கூவி அந்த மக்களை அச்சுறுத்துவத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்களே அது ஆதாரமில்லையா? சிறையில் அடைத்து வைத்து அப்பாவி இளைஞர்களை கொன்கிறீர்களே அது ஆதாரமல்லையா? வரலாற்று நிலையங்களை அழித்து வரலாற்றை திரிக்கிறீர்களே அது ஆதாரமில்லையா? பருவத்துக்கு பருவம் எதற்காக பொய் அறிக்கைகளை தூக்கிக்கண்டு ஐ. நா. வுக்கு காவடி எடுக்கிறீர்கள்? உங்களோடு உறவு வைப்பதால் கனடாவிற்கு என்ன லாபம்? நீங்கள் உறவு வைத்தாலென்ன,. முறித்தாலென்ன அவர்களுக்கு எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் பாஷையிலே உங்களுக்கு விளங்கும்படியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சமாவது வெக்கம் இருந்தால்; அந்த நாட்டு இறையாண்மையில் தலையிடாமல் மூடிக்கொண்டு இருங்கள். இல்லையேல் உங்கள் வாய் வீரர்களை அழைத்து உங்கள் தேர்தல் வாக்குகளை நிரப்புங்கள். தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி, பின் ஒரு செயல் செய்யும் உங்களது கலாச்சாரம்போல் மற்றவர்களை எடை போடாதீர்கள். இதற்கு மேலும் மல்லுக்கு நிண்டால்; கனடாவைத்தொடர்ந்து எல்லா நாடுகளும் உங்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம். சொந்த குடிமக்களை அகதிகளாக்கி இருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டு அந்த நாட்டில் போய் நின்று ஜனநாயகம், உறவு பற்றி வெட்கமில்லாமல் வகுப்பெடுக்கிறார்கள். இறுதியாக! கனடா தமிழ் மக்கள், அந்த நாட்டுக்கு உண்மை உள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள். தாய் நாடு என்று நம்பிய எம்மை, முதுகில் குத்தி அழகு பார்த்ததுமல்லாமல் நாம் எழுந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, எமது சுதந்திரத்தை அழித்து அதன்மேல் நின்று எம்மண்ணில் தன் நாட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் இந்தியாவுக்கு காவடி எடுத்து என்ன பயன் கண்டனர் நம்மவர்? ஆகவே உண்மையோடு நம் இழப்புகளை உணர்ந்து ஆதரவும் ஆறுதலும் தரும் அந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து மற்றைய நாடுகளும் இந்த முற்சியை எடுக்க அந்தந்த நாட்டிலுள்ளவர்களும் உழைக்க வேண்டும்.2 points- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
@Kapithan அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள் பயன்படுத்திய உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில் தமிழரின் அரசியல் பலம் உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது. மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும் அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது அந்த விவாதம்தே நடைபெறும் போது அந்த தேசிய செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை அண்ணை நீங்கள் இப்ப முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும் இந்த நேரம் நான் உதவி செய்யாமல் விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன தகுதி இருக்கு, எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன் இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார். இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே திட்டமிட்ட நாடக உரையாடல் என்பதை அறியாத அந்த வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின் தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன் கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன. இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து அது தொடர்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது.2 points- நாளைய மாற்றம் திரைப்பட பாடல் பதிவு
பொப் இசைப் பாடகர் பரமேஸ்வரனின் மகள் பிரபாலினி பிரபாகரனின் இசையில்.1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
மாதாந்த பங்களிப்புகள் பற்றி ஒருவரும் இங்கே கதைக்கவில்லை என நினைக்கின்றேன். புலம் பெயர்நாடுகளில் இறுதிகட்ட நிதி சேகரிப்பு என இரு தடவைகள் நடந்தது. அப்போது எல்லோரும்/ஒவ்வொரு குடும்பமும் 2000 ஈரோக்களுக்கு மேல் கொடுத்தார்கள். இது இறுதி போர் என சொல்லியே பணம் சேகரித்தார்கள். இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த இறுதி கட்ட நிதி சேகரிப்பில் புலி எதிப்பாளர்கள் அநேகமானோரும் நிதியுதவி அளித்தார்கள். இந்த நிதிகள் தாயகத்தை சேரவில்லை. எனவே அதற்குரியவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இடையில் நின்று நிதி சேர்த்த அப்பாவிகள் வறுமையில் நிற்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு சேகரிக்கும் பணம் எல்லாம் எங்கு போய் சேர்கின்றது என்பது பூச்சியமே. ஏனென்றால் அவர்களுக்கு தலைவர் மீதிருந்த நம்பிக்கை மட்டுமே. புரியுதா?1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரையும் சாகடிக்காத துப்பாக்கிக்கு எதுக்கய்யா லைசென்ஸ் .........! 😂1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
மாட்டு மூத்திரம் குடிக்கிற போட்டியும் இருக்குமா..?1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இனி தமிழ் மக்களைக் குறிவைத்து முன்பு போல இலகுவாக ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவே முடியாது என்று கொள்ளையர்கள் வருகின்ற நிலைக்கு தமிழர்கள் விழிப்படைய வேண்டும் [ இலங்கை தமிழருக்குக்காக பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம் ] இங்கே கந்தையா அண்ணா சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 எடுத்த மாதிரி கொள்ளையர்களையும் பகுதி 2 ஆரம்பியுங்கள் என்று திட்டம் போட்டு கொடுப்பது போன்று உள்ளது.1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் பொய்தான். 2000´மாவது ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இப்ப... 2024´ம் ஆண்டும் வந்து விட்டது. ம்ஹும்... இன்னும்... அதே தண்டவாளத்தில்தான், கக்கூஸ் இருக்கின்றார்கள். இவங்கள்... சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர்... என்று சினிமாவையே செக்கு மாடுமாதிரி சுழன்று கொண்டு இருக்கத்தான் லாயக்கு. போதாக் குறைக்கு... சின்னஞ் சிறுவர்களை, சிறுமிகளை கூட... பெற்றோர் அதற்குள் கொண்டு சேர்த்து பாழாக்குகின்றார்கள். சீனா மாதிரி... இளம் வயதிலேயே விளையாட்டுக்கு ஊக்கம் கொடுத்தால்தானே பத்து வருடத்திலாவது சில தங்கப் பதக்கங்களை எடுக்கலாம். அதற்கான அறிகுறியே இல்லை.1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
நான் ஏதோ நினைப்பில் எழுதி விட்டேன் ஒரு நாட்டில் ஒரு இடத்தில் தான் கடந்த கால ஒலிம்பிக் நடந்து இருக்கு....................ஜபிஎல் என்று வேறு மானிலத்தில் நடத்த வில்லையா என்று கேட்டது பிழை............................. 2012 London 2016 Rio de Janeiro, Brazil 2021 Tokyo Japan கொரோனா காரனமாய் 2020 நடக்க இருந்த ஒலிம்பிக்கை 2021டில் நடத்தினவை 🙏.................................1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
பையன்... ஒலிம்பிக் போட்டிகளுக்கு, ஒலிம்பிக் கிராமம் ஒன்றை உருவாக்கி... அதனை அண்மித்த பகுதிகளிலேயே போட்டிகள் நடக்கும். உதைபந்தாட்டம், கிரிக்கெட் மாதிரி... இந்தப் போட்டிகள் எல்லா மாநிலத்திலும் நடத்தப் படுவதில்லை. ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு, ஒலிம்பிக் கமிட்டியும் பெருந்தொகையான பணத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்தியாவில்... எங்கும், எதிலும் ஊழல் என்ற படியால்... இவர்களால் தரமான கட்டிடங்களையும், சீரான ஒழுங்கமைப்பையும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதுகும் வட மாநிலங்களில்... இவர்களை மேய்ப்பது கடினம் பையன்.1 point- 70வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள்
பொன்னியின் செல்வன்-1: தேசிய விருது வென்ற நடிகர், நடிகைகளுக்கு பரிசுத்தொகை விவரங்கள் பட மூலாதாரம்,MADRAS TALKIES படக்குறிப்பு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் 1 பெற்றது. 17 ஆகஸ்ட் 2024, 05:21 GMT கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை கார்த்திகேயா-2 பெற்றது. சிறந்த நடிகைக்கான விருது இந்த முறை இரண்டு நடிகைகளுக்குக் கிடைத்தது. தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றனர். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். பட மூலாதாரம்,TWITTER/RISHABSHETTY படக்குறிப்பு,'காந்தாரா' திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் சிறந்த படம் விருதை வென்றது. சிறந்த இந்தி படத்திற்கான விருதை மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிளா தாகூர் நடித்த குல்மோகர் வென்றது. பிரம்மாஸ்திரா பாகம் 1 படத்திற்காக இசையமைப்பாளர் ப்ரீதம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்றனர். பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் கேசரியா பாடலுக்காக அர்ஜித் சிங் சிறந்த ஆண் பாடகர் விருது பெற்றார். இந்தி படமான நகாய் படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குருக்கான விருதை வென்றார். சிறந்த படத்துக்கான தேசிய விருதை மலையாள திரைப்படமான ‘ஆட்டம்’ பெற்றது. பரிசுத்தொகை எவ்வளவு? சிறந்த தமிழ்த் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோருக்கு வெள்ளி தாமரை விருதுடன் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட ஆட்டம் திரைப்படத்தின் தயரிப்பு நிறுவனமான ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி ஆகியோருக்கு பொற்தாமரை விருதுடன் (கோல்டன் லோட்டஸ்) தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். சிறந்த நடிகை பிரிவில் நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருது மற்றும் 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ரிஷப் ஷெட்டிக்கு வெள்ளி தாமரை விருது மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்த விருது குழுவினர் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற சூரஜ் பர்ஜாத்யாவுக்கு பொற்தாமரை விருதும் ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படும். சிறந்த தெலுங்கு திரைப்படமான கார்த்திகேயா பாகம் இரண்டின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருதுடன், தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். கன்னடத்தில் சிறந்த படமான கே.ஜி.எஃப் பாகம் 2, வெள்ளித் தாமரை விருதையும், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் தலா ரூ.2 லட்சம் பரிசு பெறுவார்கள். சிறந்த ஹிந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குல்மோகருக்கு வெள்ளித் தாமரை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர் ராகுல் வி சித்தேலா ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். பொன்னியின் செல்வன் பாகம் 1 மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப் புனைகதை. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி (1899-1954) எழுதியது. இந்த நாவலை 1950 முதல் மூன்று ஆண்டுகள் தொடர் வடிவில் தனது ‘கல்கி’ இதழுக்காக அவர் வெளியிட்டார். ராஜராஜ சோழன் காலத்து சில வரலாற்று நிகழ்வுகளை வைத்து கல்கி இந்த நாவலை எழுதினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இயக்குநர் மணிரத்னம் கல்கி எழுதிய இந்த நாவலில் வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கற்பனைக் கதாபாத்திரங்களும் உள்ளன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘தி சோழாஸ்’ ('The Cholas') புத்தகம், டி.வி. சதாசிவ பண்டாரத்தரின் 'பிற்காலச் சோழர்களின் வரலாறு', ஆர். கோபாலன் எழுதிய 'காஞ்சியின் பல்லவர்கள்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி இந்நாவலை எழுதினார். இந்த நாவலுக்காக சோழர்கள் ஆண்ட பல பகுதிகளுக்கு கல்கி பயணம் செய்தார். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் இலங்கைக்கு பயணித்தார். அவருடன் மணியன் என்ற ஓவியரும் சென்றார். கல்கி இதழில் வெளியான அனைத்து சித்திரங்களையும் பொன்னியன் செல்வனின் நாவலுக்காக வரைந்தவர் மணியன். இந்நாவல் 2,400 பக்கங்கள் கொண்டது. இது 5 பகுதிகளாக எழுதப்பட்டது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலை உலுக்கி, பாலிவுட்டில் புயலைக் கிளப்பிய படம் கேஜிஎஃப். இதன் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 படத்தை பிரஷாந்த் நீல் தயாரித்து வெளியிட்டார். பட மூலாதாரம்,FACEBOOK/KGFMOVIE படக்குறிப்பு,கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் யஷ் தங்கச் சுரங்கப் பேரரசான நாராச்சியை மும்பை நகரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண சிறுவன் எப்படிக் கைப்பற்றினான் என்பதை கே.ஜி.எஃப் 1-இல் பார்த்தோம். சாம்ராஜ்ஜியத்தை வென்ற பிறகு என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாகத்தில் இயக்குநர் காட்டினார். கார்த்திகேயா 2 இந்து புராணங்களில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. எண்ணற்ற ஆச்சரியங்கள் அக்கதாபாத்திரங்களைச் சுற்றித் தோன்றும். அவர்களைப் பற்றிப் பல கேள்விகளும் கதைகளும் உள்ளன. பல இயக்குநர்கள் இதிகாசங்களை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளனர். பட மூலாதாரம்,FACEBOOK/KGFMOVIE படக்குறிப்பு,கலியுகத்தைச் சுற்றி நடைபெறும் புராண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது கார்த்திகேயா திரைப்படம் கார்த்திகேயா 2 படமும் அப்படிப்பட்ட கதைதான். துவாரகை என்ற பெரிய நகரம் தண்ணீரில் மூழ்கியதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. “இது உண்மைதான்” என்று தொல்லியல் துறை விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர். மூழ்கிய துவாரகையில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. துவாரகையைச் சுற்றிப் பல கேள்விகள் உள்ளன. அதில் ஒரு கேள்வி… "கிருஷ்ணரின் கால் விரல்கள் குறித்தது." அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் புராணப் புதையலைத் தேடி கதாநாயகர் களம் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்திபடத்தின் கதை. https://www.bbc.com/tamil/articles/cqxj454wrwxo1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
எமனின் வாகனத்தில்… மழை பெய்த மாதிரி. 😂1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
கட்டாயம் ஒலிம்பிக் இந்தியாவில் நடாத்த அனுமதி கொடுக்கணும் . அதன் பின் குடலற "ஜெய் கிந் "சொல்லும் ஒவ்வொரு இந்தியனும் உலக அரங்கில் கூனி குறுகி நிற்பதை நாங்கள் காண வேணும் . கணக்கில் இல்லாத மொழி வாரியங்களை பண்பாடு கலாசார வேறுபாடுகளை கொண்ட நாடுகளை கொண்டு பிரிட்டிஸ் காரன் அவசரமாக போகையில் இந்தியா என்று குறைமாத பிள்ளையாக பிரசவித்தது இந்தியா எனும் தேசம் . உலகில் ஊழல் செய்வதில் முதலாம் இடத்துக்கும் மேலே .1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
சில வருடங்களுக்கு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வட இந்தியாவில் நடந்த போது... விளையாட்டு வீரர்கள் தங்கும் வீட்டில் பாம்பு, இருந்தது. தண்ணீர் ஒழுங்காக வரவில்லை. படுக்கையறையில் பழைய மெத்தைகளை போட்டு, அதற்கு மேல் புது சீலைகளை விரித்து இருந்தார்கள் என்று... பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டது. வழக்கம் போல் ஊழல் செய்தவர்களை கண்டிக்க விசாரணை கமிஷன் அமைத்து, அதன் முடிவு தெரியாமலே.. மக்கள் மறந்து விட்டார்கள். சர்வதேச அளவில்... இந்தியா மீது பலத்த கேலியும், கிண்டலும் நடந்த சம்பவம் அது.1 point- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
இன்னும் 12 வருடம் இருக்கு ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவில் நடத்த முதல் சம்மதிக்கனும் பல கோடி செலவில் பல மைதானங்கள் கட்டனும்...............பல புதிய நீச்சல் குளம் கட்டனும் கைபந்து ஸ்ரேடையம் கூடை பந்து இஸ்ரேடையம் பல கட்டனும்........................... கிரிக்கேட் மைதானங்கள் ஓக்கே கால்பந்து மைதானங்களும் ஓக்கே மற்ற பல விளையாட்டுக்களுக்கு பல மைதானம் புதிசா கட்டனும் இந்தியாவில் ஒலிம்பிக் நடப்பது சந்தேகம் தான்.................... 2028 அமெரிக்காவில்.........2032 அவுஸ்ரேலியாவில் வைக்கினம்........................சின்ன நாடு ஜப்பான் இரண்டு முறை ஒலிம்பிக்கை நடத்தி இருக்கு...................2036 மட்டும் பீஜேப்பி ஆட்சி தொடருமா தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு இந்திய குடி மக்களின் வங்கியில் 15 லச்சம் போடுவேன் என்று சொன்னது போல் இந்த ஒலிம்பிக் அறிவிப்பும் ஏமாற்று அறிவிப்பாய் கூட இருக்கலாம்😁...........................1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
1) கூடவே நின்ற உங்களுக்கு கொடுத்தவனைவிட அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு சரியானதுதானே. 2) போராட்டத்திற்காக நேர்மையுடன் பங்ளிப்புச் செய்தவர்கள் யார் என்று எல்லோரும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தாங்கள் சேவையாளர்களைப் பாதுகாக்கிறேன் என்கிற போர்வையில் திருடர்களைப் பாதுகாக்கிறீர்கள். சாதாரண பொதுமக்களுக்கே யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரிந்து கொள்ளும் அறிவு இருக்கும்போது தாங்கள் கொள்ளையடித்தவர்கள் சார்பாக சப்பைக்கட்டுக் கட்டுவது சிரிப்பை வரவைக்கிறது. 😏1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
1) சாமானியன் கூறிய சம்பவம் இலங்கையில் நடந்ததாகத் தெரிகிறது. அங்கே பணத்தைச் சார்த்தவருக்கு உள்ள தெரிவு என்ன? நிலத்தில் இருப்பவர்களை புலத்தில் கொள்ளையடித்தவர்களுடன் ஒப்பிடும் கைங்கரியமே அயோக்கியத்தனமானது. 2) நான் கொடுத்த காசுக்கு என்ன நடந்தது என்று கேட்பவன் தறுதலை,..🤣 நீங்கள் யாரைப் பாதுகாக்க முனைகிறீர்கள்?1 point- நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
உலகநாடுகளை அத்துமீறி பிடித்த வரலாறுகளை பார்த்தால், இரண்டு உலக மகாயுத்தங்களை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால்..... ஐயோ தலை சுத்துது....... ஜேர்மனிக்கு ரஷ்யாவிலிருந்து வந்த இரண்டாவது எரிவாயு குழாயை குண்டுவைத்து தகர்த்தது உக்ரேன் என தெரிந்தும்..... அதைவிட இன்றைய முக்கியமான இன்னுமொரு விடயம் ஜேர்மனி உக்ரேனுக்கான நிதியுதவியை இன்றுடன் நிறுத்துகின்றது.1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அவர்களெல்லாம் அவர்களின் நடிப்பில், பாசாங்கு தனத்தில் நீங்கள் கூறிய தோற்றவர்களே. ஆனால் பின்னணியில் பினாமி பண முதலைகள். கில்லாடிகளிடம் பணம்பெறுவதா? அது முடியவே முடியாது. எனவே அவர்களின் பழைய நாடகங்களை வெளிச்சம் போட்டு காட்டி எதிர்காலத்தில் அவர்களால் ஏமாற்றுபட இருப்பவர்களுக்கு அவதானமாக இருக்குமாறு விழிப்புணர்வு செய்ய மட்டுமே என்னால் முடியும். உங்களை போல் அவர்களை அப்பாவிகளாக சித்தரித்து அவர்களின் ஏமாற்றுவித்தை தொடர இடமளிப்பதை அனுமதிக்க கூடாது. துவாரகா குழுவினின் கூற்றில் உண்மை உள்ளது என்று நீங்கள் எழுதிய பதிவு இன்றும் யாழ் இணையத்தில் உள்ளது.1 point- நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு
தாங்கள் நெருக்கடியை சந்திக்கும் போதெல்லாம் தாம் தப்பிப்பதற்காக உலகப்போரை சொல்லி அச்சுறுத்துவது, மற்றைய நாடுகளை தாம் ஊடுருவும் போது அதற்கு வேறொரு காரணம் கற்பிப்பது சர்வாதிகாரிகளின்குணம். ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஆரம்பியுங்கள்! எல்லாரும் சேர்ந்தே அழிவோம். அதை செய்ய மாட்டீர்கள், நீங்கள் அபகரிக்க வேண்டியது நினைத்தது நிலுவையில் இருக்கே.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
1 point- யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2024 by சமர்வீரன் 68 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர். செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் பல்லின மக்களுக்கு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய சிறிய பதிவுகள் யேர்மன் மொழியில் வாசிக்கப்பட்டது. குறிப்பாக செஞ்சோலை சிறார்கள் இன்று உயிரோடு வாழ்ந்திருந்தாள் அவர்கள் எப்படி தமது வாழ்வில் நிலைத்திருப்பார்கள் என கனவுகளையும் நினைவுகளையும் சுமந்து தமிழ் இளையோர் அமைப்பினர் யேர்மன் மொழியில் வாசித்திருந்தது பல்லின மக்களின் மனங்களை உருக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. Video Player 00:00 18:52 யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – குறியீடு (kuriyeedu.com)1 point- இரண்டு துண்டாகிய கையை பொருத்தி சாதித்த யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார். குறிப்பிட்ட சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/3079801 point- மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
விஷ்மியின் சதத்தை வீணடித்தது ப்ரெண்டகாஸ்டின் சதம்; இலங்கையை வீழ்த்தியது அயர்லாந்து Published By: VISHNU 16 AUG, 2024 | 11:11 PM (நெவில் அன்தனி) பெல்ஃபாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அயர்லாந்து வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்தது. ஓலா ப்ரெண்டகாஸ்ட் குவித்த ஆட்டம் இழக்காத கன்னிச் சதம் அயர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது. இதன் காரணமாக விஷ்மி குணரட்னவின் கன்னிச் சதம் வீண் போனது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவி சமரி அத்தபத்து தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம 19 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இந் நிலையில் விஷ்மி குணரட்னவும் ஹசினி பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்து பின்னர் வேகத்தை அதிகரித்த விஷ்மி குணரட்ன, 97 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார். இலங்கை சார்பாக மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்து மாத்திரமே இதற்கு முன்னர் சதம் குவித்திருந்தார். அவர் இதுவரை 9 சதங்களைக் குவித்துள்ளார். விஷ்மி குணரட்னவுக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய ஹசினி பெரேரா 46 ஓட்டங்களைப் பெற்றதுடன் மத்திய வரிசையில் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கையை 260 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் ஓலா ப்ரெண்டகாஸ்ட் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலனா டல்ஸெல் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆலின் கெலி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 260 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஓலா ப்ரெண்டகாஸ்ட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 122 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அவரை விட அமி ஹன்டர் 42 ஓட்டங்களையும் சாரா ஃபோபஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகி: ஓலா ப்ரெண்டகாஸ்ட். அறிமுக வீராங்கனை அயர்லாந்து சார்பாக இன்றைய போட்டியில் அலிஸ் டெக்டர் அறிமுகமானார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இப் போட்டியைக் கண்டுகளித்ததுடன் அலிஸ் ஹெக்டர் தனது அறிமுகப் போட்டியில் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றினார். அவரது மூத்த சகோதரரான ஹெரி டெக்டர் ஆடவர் அணியில் இடம்பெறுவதுடன் மேலும் இரண்டு சகோதரர்கள் அயர்லாந்து கனிஷ்ட அணிகளில் இடம்பெற்றனர். https://www.virakesari.lk/article/1912651 point- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
நடப்பது நல்லதுக்கே பறந்து போய் கோத்தபாயவுக்கு ஒட்டு போட்ட சிங்களவர்கள் இன்று ஆறு பெரும் பிரிவுகளாக பிரிந்து போய் இருக்கிறார்கள் இலங்கை வரலாற்றில் இப்படி சிங்களவர்கள் பிரிந்து நின்று வாக்கு கேட்பது முதன் முறை என்று நினைக்கிறேன் .1 point- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
ஜஸ்டின் ட்ரூடோவின்... பிள்ளைகளின் சாமத்திய சடங்கை, எங்கள் முறைப்படி... உலங்கு வானுர்தியில் வைத்து செய்து, அவரின் மனதை கவர வேண்டும். 😂 🤣1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
எமது நெஞ்சங்களில் வாழும் வீரர்களுக்கு நீதிமன்றங்களில் தடை விதித்து என்ன பயன்? ஏற்கெனவே புலிகள் தோன்றுவதற்கான காரணம் எங்கே எழுந்தது என்று கனடா பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒன்றும் விடுதலைப்புலிகளை மட்டும் குறிவைத்து நீடிக்கப்பட்ட தடையல்ல, இதைப்புரியாமல் சிங்களம் குதிக்கட்டும், வரவேற்கட்டும் மகிழட்டும். அப்பப்போ கூடும் ஐ. நா. சபை போல இதுவும் ஒரு செயற்பாடு, தமது செயற்திறனை வெளிக்காட்டுவதற்கு எடுக்கப்படும் நிகழ்வு. இப்போ யாரும் புலிகளுக்கு நிதி சேகரிக்க வேண்டிய தேவை இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் செயற்பாட்டை இந்த நிரலுக்குள் கொண்டு வருகிறார்களோ தெரியவில்லை. யாருக்கு இதனால் நட்டம் இலாபம் என்பதை விட இலங்கைக்கு பெரும் மகிழ்ச்சி, ஏதோ தான் சரியானதை செய்ததுபோல் அற்ப மகிழ்ச்சி. அவர்கள் பொது மக்களை அழித்தார்கள் என்பதை கனடா சொல்லியும் செய்தும் வருகிறது அது வரவேற்கத்தக்கது. அதனால் எமக்கு ஒரு நட்டமுமில்லை. விடுதலைப்போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வேறுபாடு முன்வைக்கப்படும்போது சிங்களம் தலைகுனிந்து நிற்கும், சர்வதேசத்தால் தடைவிதிக்கும் காலமும் உருவாகும். இதை புரியாமல் ரணில் தீர்வு தருவார் சிங்களத்திடமிருந்துதான் தீர்வு வரும் இந்தியா வாங்கித்தரும் என்று இலவுகாத்த கிளிபோல் ஏமாறாமல், நல்லதை நினைக்கும் நாடுகளோடு கூட்டுச்சேர்ந்தால் மாற்றம் வரும். இந்தியாவுக்கு உற்ற நண்பன் இலங்கை என அப்பப்போ இருவரும் மார்தட்டி மாறி மாறி தழுவிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரின் செயற்பாடுகளும் எப்படிப்பட்டது என்பது சிறுது சிறிதாக உணரப்படுகிறது.1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
வேறொன்றும் ஞாபகம் வருகிறது. திருகோணமலையில் பேச்சுவார்த்தை நடந்தகாலகட்டம் . அவர்கள் நிதி சேகரிப்பிற்காக டிக்கெட் அடித்து , அலுவலகங்களில் கொடுத்திருந்தார்கள் . அலுவலக சிற் ஊழியரிடம் கொடுத்து விருப்பமானவர்களிடம் கொடுத்து பணத்தை சேர்த்து வைக்கச் சொல்லியிருந்தேன் ( பொடியங்கள் என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும்படி அரச மேலிடத்து உத்தரவு அமுலில் இருந்த நேரம் அது ) . அடுத்த கிழமை பேச்சுவார்த்தை முறிந்து , பொடியங்களும் பெருவாரியான தமிழ் மக்களும் ஊரை காலி செய்து வடக்கு நோக்கி நகர , நம்மை போல போக இயலாத எஞ்சிய சிலர் தங்கியிருந்து , அரச படையின் அடடூழியத்திற்கு ஆளாகி பலர் அழிந்து சிதைந்து போக எஞ்சியோர் பல மாதங்களின் பின்னர் அலுவலக வேலைகளை ஆரம்பித்தனர் . ஊரைக் காலி செய்து போன அந்த சிற்றூழியர் சிலகாலம் கழித்து திரும்பி வந்து, என்னிடம் தயங்கி தயங்கி வந்து , " ஐயா , அந்த டிக்கெட் அடிக்கட்டைகளும் சேர்த்த பணமும் பத்திரமாக , வீட்டு கூரையில் செருகி வைத்தபடியே இருக்கு , என்ன செய்ய " என்று கேட்டார் . பணம் கொடுத்திருந்த ஆகக்குறைந்தது ஒரு சக ஊழியரை மிக்க கொடுமையான முறையில் ஆமிக்காரர் கொன்று போட்டதை நானறிவேன். நான் சொன்னேன் , கொடுத்தவர்களிடம் தேடி திரும்பக் கொடுப்பது பிரச்சினையான விடயம் , யார் யார் என்ன மனநிலையில் இருக்கினம் என்று தெரியாது , தொகைகளும் பெரிதில்லை . அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்று ,,,1 point- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது. அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. இங்கே கவனிக்கப்படவேண்டியது கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது. புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன? ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது. இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும். அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை. புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை, புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான். கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்: Currently listed entities in XML format Abdallah Azzam Brigades (AAB) Abu Nidal Organization (ANO) Abu Sayyaf Group (ASG) Al-Aqsa Martyrs' Brigade (AAMB) Al-Ashtar Brigades (AAB) Al-Murabitoun Al-Muwaqi'un Bil Dima Al Qaida Al Qaida in the Arabian Peninsula (AQAP) Al Qaida in the Indian Subcontinent (AQIS) Al Qaida in the Islamic Maghreb (AQIM) Al Shabaab Al-Gama'a al-Islamiyya (AGAI) Ansar al-Islam (AI) Ansar Dine Aryan Strikeforce Asbat Al-Ansar (AAA) (The League of Partisans) Atomwaffen Division Aum Shinrikyo Babbar Khalsa International (BKI) Blood & Honour (B&H) Boko Haram Caucasus Emirate Combat 18 (C18) Ejército de Liberación Nacional (ELN) Euskadi Ta Askatasuna (ETA) Fatemiyoun Division (FD) Front de Libération du Macina Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) Gulbuddin Hekmatyar Gulbuddin Hekmatyar's Faction of the Hezb-e Islami, Hezb-e Islami Gulbuddin (HIG) Hamas (Harakat Al-Muqawama Al-Islamiya) (Islamic Resistance Movement) Haqqani Network Harakat al-Sabireen (HaS) Harakat ul-Mudjahidin (HuM) HASAM (Harakat Sawa'd Misr) Hay'at Tahrir al-Sham Hizballah Hizbul Mujahideen Indian Mujahideen (IM) International Relief Fund for the Afflicted and Needy - Canada (IRFAN – CANADA) International Sikh Youth Federation (ISYF) Islamic Movement of Uzbekistan (IMU) Islamic Revolutionary Guard Corps Islamic Revolutionary Guard Corps' Qods Force Islamic State Islamic State – Bangladesh Islamic State – Democratic Republic of the Congo Islamic State East Asia Islamic State in the Greater Sahara Islamic State – Khorasan Province (ISKP) Islamic State in Libya Islamic State – Sinai Province (ISSP) Islamic State West Africa Province Jaish-e-Mohammed (JeM) Jama’at Nusrat Al-Islam Wal-Muslimin James Mason Jaysh Al-Muhajirin Wal-Ansar (JMA) Jemaah Islamiyyah (JI) Kahane Chai (Kach) Kurdistan Workers Party (PKK) Lashkar-e-Jhangvi (LJ) Lashkar-e-Tayyiba (LeT) Liberation Tigers of Tamil Eelam (LTTE) Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) Palestine Liberation Front (PLF) Palestinian Islamic Jihad (PIJ) Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP-GC) Popular Front for the Liberation of Palestine (PFLP) Proud Boys Russian Imperial Movement Sendero Luminoso (SL) Taliban Tehrik-e-Taliban Pakistan (TTP) The Base Three Percenters World Tamil Movement (WTM) https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx1 point- தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
1 point1 point- காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
Lower deck ₹5000 | Top deck ₹7500 | Nagai - Sri Lanka ship service started | Passengers happy1 point- தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
சகல நாடுகளிலும் குடும்ப வாரிசுளா? இருந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது. அப்பன் மகன் பேரன் பூட்டன் என்று போய்க் கொண்டே இருக்கும்.1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
கடைசி ஆறு மாதங்களும் இன்னும் சிறிது காலங்கள் தான் உள்ளது அதற்குள் சுருட்டுவதை சுருட்டிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தான் நிதி திரட்டல் வேகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு திட்டமிட்டு உணர்சசி உருவேற்றி பல நாடகங்களை நடத்தி மின்னல் வேகத்தில் பணதிரட்டல் நடந்தது. கடைசி நேரத்தில் பணம் திரட்டிய முக்கியமான நபர்கள் பலருக்கு இனி அங்கு எல்லாம் முடியபோகிறது என்பது தெளிவாக தெரிந்தே இருந்தது. அதனால் ஏற்பட்ட மனஸ்தாபங்களே இன்றைய குழப்பத்திற்கு அத்திவாரம்.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும்? தெரியாமல் போவதற்கு நியாயம் இல்லையே?1 point- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
உதவிபுரிந்தவர்கள் நிறைகுடமாக இருப்பார்கள். தளம்பமாட்டார்கள்.😌1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் ஒரு தேர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன். அநேகமாக பெரிய கொண்டாட்டங்கள் கோவில்களில் நடந்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களுக்கு போவதில்லை. காரணம் அங்கே ஆன்மீகம் இருக்காது. மாறாக ஒருவகை பந்தா கொண்டாட்டமாக இருப்பதால்.... இருந்தாலும் நீண்டகாலம் செல்லவில்லை என்றாலும் விடுமுறையில் இருக்கின்றேன் என்பதால் சென்றேன். அதே பல்லவிதான்.... நகையலங்காரம் உடையலங்காரம் கார் பந்தாங்கள் பழைய காய் என்ற பந்தாக்கள் பண பந்தாக்கள் உபயம் எனும் பேரில் தண்ணீர்பந்தல்களில் அட்டகாசம் அன்னதானம் பெயரில் சண்டித்தனங்கள் அன்னதானத்திற்கு வரிசையிலில் நின்றால் இடையில் புகுந்து விளையாடும் தர்மகர்த்தாக்கள் உபயகாரர்கள். கிட்டத்தட்ட கோவில்களை தங்கள் பந்தா காட்டும் இடமாக மாற்றி விட்டார்கள் புலன் பெயர்ந்த தமிழர்கள்.1 point - தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.