Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20014
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15791
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/23/24 in Posts

  1. தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது. இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான். தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்? இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா? இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா? சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன? பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான். இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை? இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை. உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது.. நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும். நன்றி.
  2. தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.
  3. நொச்சி, நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கோ, தேவையில்லாத வாதங்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு பின்னால் என்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட நேரமில்லாமல் அல்லல் படுவதற்கோ நான் இப்பொழுது தயாராக இல்லை. ஆனாலும் நீங்கள் தொடுத்த அம்பு ஒன்று என்னருகில் வீழ்ந்து இருக்கிறது.’கீறும்’ என்ற அம்பு அது. இன்று ஆயுதப் போராட்டமும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஏன் விடுதலைப் புலிகள் என்று கூட எவரும் இல்லை.அந்த அமைப்பில் இருந்தவர்கள் அதுவும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அது எதுவானாலும் நான் அதற்குள் போய் கிளறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நீண்ட பயணத்திலும் சரியான பாதை தெரியாமல் பரிதவிக்கும் நிலையிலேயேதான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். இதற்குள் அவரவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தேவைக்காகவும் போராட்டத்தையும் தியாகங்களையும் பயன் படுத்துவதால் ஒரு பலனும் தமிழர்களுக்கு வந்து விடாது என்ற நிலையில்தான் எதிர்க்கிறேன். இவ்வாறான எனது எதிர்ப்பு இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. நான் கீறும் படங்களை யேர்மனியில் புலிகள் என்று சொல்பவர்கள் பாவிப்பதில்லை. இது விடுதலைப் புலிகள் போராடும் காலத்தில் இருந்தே இருக்கிறது. காரணம் ‘ஏன்?’ என்ற கேள்வி எப்பொழுதும் என்னிடத்தில் இருப்பதால். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பொங்கு தமிழில் நான் எழுதிய பத்தி ஒன்றை கிருபன் முன்னர் பதிந்திருந்தார். https://alpha.yarl.com/forums/topic/152431-தூசு-தட்டியே-காசு-பிழைத்தவர்-மூனா/ நேரமின்மையால் அப்பொழுது அதில் எழுந்த கேள்விகளுக்கு நான் பதில் எழுதவில்லை. பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ‘தமிழர்களுக்கான தீர்வு வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான உங்கள் பாதை வேறு என் பாதை வேறு.
  4. தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை , எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ரணில் திட்டம் போட்டு செய்துள்ளார். சஜித் வர வேண்டும் என்பதற்காக இவரையும் சஜித்தையும் ஒன்றாக்க இந்தியா இறுதி வரைக்கும் முயன்றது. ஆனால் வழக்கம் போல இதிலும் இந்தியா தோற்று விட்டது. தமிழர்களின் நலன்களை அழிப்பதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் இந்தியா, மறு வளமாக சிங்களத்துடன் ஒவ்வொரு முறையும் தோற்று கொண்டே போகின்றது.
  5. அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை.. இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்.. தமிழ் நாட்டிலையே வாழும்போது தமிழ் ஈழத்தில் ஒரு போதும் வீழாது பிரச்சினைகள் தீரும்வரை.. இங்கு பிரச்சினை தங்கள் வயிறு வளர்க்க தமிழ்தேசியத்தை காட்டி பேய்க்காட்டுபவர்கள்தான்.. தமிழ்தேசியம் அல்ல.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்.. நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்..
  6. தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! September 23, 2024 — அழகு குணசீலன் — அ: அகிம்சை. ஆ: ஆயுதம். இ: இராஜதந்திரம். அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும், தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது. ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும் அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அனுரகுமார திசாநாயக்கா இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள். மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன. இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில் வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா? அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி சங்கூதிய தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள் காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால் சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது. சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார். இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும் பொதுவேட்பாளர் அரசியல் கோமாளித்தனம். ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன? * வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள். * இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. *வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர். *ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர். * மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் . * சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள். இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……! https://arangamnews.com/?p=11267
  7. அப்படித்தான் நான் கருதுகிறேன் ...தமிழரசு கட்சி சொன்ன ஆளுக்கு தானே வாக்கு போட்டிருக்கின்றனர்...ஏன் ரணிலுக்கு போடவில்லை ....டக்கிளஸ் அங்கஜன் போன்றோர் ரணிலுக்கு பிரச்சாரம் செய்த் பொதும்
  8. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
  9. "இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க" பெரும்பாலான இலங்கை வாழ் மக்கள் சனிக்கிழமை 21 / 09 / 2024 அன்று தமக்குப்பிடித்த ஒரு தலைவரை ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கின்றனர். கூட்டாச்சி இல்லாமல், தனியாட்சி அதிகாரமிக்க வராய்த் இலங்கை நாட்டுக்குப் பல சிறப்பு அதிகாரங் களுடன் அநுர குமார திசாநாயக்க தலைவரா கியுள்ளார். சிவப்புச் சித்தாந்த சிந்தனையில் ஊறியவர் சிறப்பாய்ப் படிப்பிலே பட்டம் பெற்றவர் இளவயது மற்றும் ஆழுமை ஆற்றல் கொண்டவர். படிப்படியாகப் பதவிகளில் அங்கம் வகித்து சிகரமாய் அதிபர் பதவியில் 23 / 09 / 2024 அன்று ஏறி அமர்ந்துள்ளார். இலங்கையின் ஒரு மூத்த குடிகளான தமிழரின் உள்ளத்தில் இன்று எழும் கேள்வியும் எதிர்பார்ப்பும் ஒன்று இரண்டு அல்ல, அவை எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக இதயத்தை வாட்டும் கவலைகளே? தமிழ் சிறைக்கைதிகளுக்கு விடுதலை விடிவு வருமா? குற்றக் கறை படிந்தவர்கள் சிறையுள்ளே செல்வாரோ? காணாமல் போனோர் கண் முன்னே வருவாரோ? தமிழர் நிலங்களின் அபகரிப்பு முடிவுக்கு வருமோ? லஞ்சம் ஊழல்கள் குறையுமோ? பாதாளக் குழுக்கள் மற்றும் ஆவா குழுக்கள் அடங்குமோ? வாள் வெட்டுகள், துப்பாக்கி சூடு மற்றும் பாலியல் வன்செயல் குறையுமோ? கஞ்சாப் போதைப் பாவனை தடுக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு இளைஞர்கள் ஒழுங்கு படுத்தப்படுமோ ? தமிழர் பாரம்பரிய நிலங்களில் அல்லது முற்றும் முழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலங்களில் அத்துமீறும் அல்லது அடாவடித்தனம் புரியும் புத்தர் சிலைகள் நிறுவுதல் நிறைவு காணுமோ? தமிழ் பேசும் மக்களின் இந்த முக்கிய பிரச்சனைகளைத் தவிர , தாமும் ஒரு இலங்கையன், மூத்த குடியோன் என்ற ரீதியில் அவனின் பொதுவான ஏக்கம் தேய்பிறையான இலங்கை தேசத்தின் பொருளாதாரம் வளர்பிறை காணுமோ? ரூபாய் நாணயம் பெறுமதி ஏறுமோ? ராக்கெட் போல் ஏறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்குமோ? உள்ளூர் விவசாயங்கள் உச்சம் தொடுமோ? அச்சமின்றிய வாழ்வு வாய்க்குமோ? பஞ்சம் பசி மாறுமோ? வருங்கால சந்ததிகள் வாழ வளமான நாடாய் மாறுமோ? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பழைய வரலாறு கூறும் செய்தி அவை சிங்கள மக்களோ சிறப்பாய்த் தமக்கு நல்லது என்ன செய்வாரென்ற ஆர்வத்தோடும் தமிழ் மக்களோ தமக்கு ஏதாவது கெடுதல் செய்வாரோ என்ற அச்சத்தோடும், பழைய அல்லது இன்றைய நினைவில் இருக்கின்றார்கள்! அது மாறுமோ? அநுர குமார திசாநாயக்க பதவியை அணுகும் முறையைக் காணப் பல கண்கள் காத்திருக்க அவரோ ஐந்து விரல்களை ஆதவனாய் விரித்துக் காட்டி உங்கள் எல்லோரினதும் வாழ்க்கையை இன, மத பேதமின்றி உதயவனாய் ஒளிமயமானதாக்குவேன் என்கிறார். அநுர குமார திசாநாயக்காவிற்க்கும் பல எதிர்பார்ப்புகளுடன் வாழும் இலங்கை முழு மக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! சிறப்பான மற்றும் பாரபட்சம் அற்ற நேர்மையான ஆட்சியை, இனங்களை மொழி, சமயம், சாதி அடிப்படையில் பிரிக்காமல், வெறுக்காமல் எல்லோரும் இலங்கையர் என்பதை ஏற்று, சரிசமமாக ஊழல் அற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு! சுருக்கமாக நாம் எதிர்பார்ப்பது அநுர குமார திசாநாயக்கவும் அவரது NPPயும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் அவர்கள் உறுதியளித்தபடி இலங்கையில் எதிர்காலத்தில் உடனடி மாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே! 1. Paye Tax from 36% to 24%. 2. VAT will be exempt for Food items, Health sector services & educational books. 3. One vehicle per minister/MP. 4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians. 5. Cut down on unnecessary government expenditure. 6. No family / Friends will be accommodated on overseas tours. 7. All tours are on assigned targets. 8. Only 25 ministries. 9. Cut down prices on electricity & fuel. 10. Low interest rates 11. Development bank for the start of new small & medium scale industries. 12. A 3 bench special court to hear fraud cases. 13. Presidents budget cut down by 50%. 14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians. 15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences. 16. New laws to prevent MP's from switching the party they were elected to. 17. New Investments (local & overseas Srilankans may ready to invest). 18. No additional benefits for politicians over citizens. 19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 22. Restoring the oil refinery. 23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned. 24. New technology for the fisheries industry to enhance the yield (Fishermen to receive directions for fishing areas) 25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs. 26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a minimum cost. 27. Facilitate for Eco based tourism. 28. Plans to capture IT market. 29. Changes in the education policies to facilitate the economy. 30. Secure Food, Heath & Education as fundamentals for the citizens through adequate funding. இதற்கெல்லாம் நிதி எங்கே என்று பொதுவாக மக்கள் கேட்கலாம்? தேவையற்ற செலவுகள் மற்றும் விரயங்களை நிறுத்துவதன் மூலமும் எந்த வேறுபாடும் இன்றி எல்லா வரி செலுத்த தகுதியானவர்களிடம் வரிகளை வசூலிப்பதும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடும் மற்றும் அவர்களை வேறுபாடு காட்டாமல் ஊக்கிவிப்பது மூலமும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலமும், அவர்களை இங்கு வர ஊக்குவிப்பது மூலமும் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியை ஊக்கிவிப்பது மூலமும் இவை சாத்தியமாகலாம்? இவை எல்லாவற்றிற்கும் நீதியான சரிசமமான வலுவான ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்! யார் இந்த அநுர குமார திசாநாயக்க? அவர் கடந்து வந்த பாதை என்ன? முழுப் பெயர் – திஸ்ஸநாயக முடியான்செலகே அநுர குமார திசாநாயக்க [Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka]. பிறப்பு – 1968.11.24. பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். அரசியல் வாழ்க்கை! 1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். 2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார். 2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும். 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநர் றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார். 2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. ஜேவிபி கட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி தேசிய மக்கள் கட்சியை நிறுவி இன்று அக்கட்சியினூடாக இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவானார்.
  10. இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி. அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,, WhatsApp
  11. கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?
  12. இது தான் இலக்கு👆! இதை பொது வேட்பாளர் மூலம் செய்ய இயலாமல் போய் விட்ட கோபத்தில் தான் இனி பொதுத் தேர்தலை எதிர் கொள்வர்😂! இதைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்: தீவிர தேசியவாத தமிழர் அரசியலில் - குறைந்த பட்சம் இந்த வட்சப் பதிவை எழுதுவோர் போன்றோரின் பார்வையில்- ஒரு சில குறிப்பிட்ட கருத்துகளை உரத்துச் சொல்வோர் மாத்திரமே கை தட்டி வரவேற்கப் பட வேண்டும், ஏனையோர் மக்கள் தேர்வு செய்தாலும் விரட்டப் பட வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பை மதிக்காத ஜனநாயக மறுப்பை ஆதரிக்கும் ஆட்களோ தேடிப் போய் அடைக்கலம் தேடுவது ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளில்! அங்க இருந்து தான் ஊரில் ரௌடிகளும், ஒத்த ரூட் தீவிர போக்காளர்களும் உருவாக ஆசிர்வாதம் வழங்குவர்😂! இவர்கள் எத்தனை தரம் வாக்காளர்கள் வாக்குகள் மூலம் சொன்னாலும் திருந்தப் போவதில்லை! விளக்குமாறால் தான் இந்த தீவிர தேசிய ரௌடிகளை அடித்து விரட்டுவர் மக்கள்!
  13. இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம். இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும் ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.
  14. எந்த முட்டாள் தனமான முயற்சிகளுக்கும் தமிழ் தேசிய முலாமை பூசி விட்டால் அதை ஆதரிக்க என ஒரு கூட்டம் உள்ளது என்பதை அந்த முட்டாள்தனமான முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தம் இருப்பை பேண முயலும் கூட்டத்துக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள் இப்படியானவற்றை தொடர்ந்து முன்னெடுப்பர். ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் தமக்கு எது தேவையென புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றனர் என்பதை இம்முறையும் நிரூபித்து உள்ளனர்.
  15. "ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை! எனவே, ஒற்றுமை என்பதன் முதல் படி "என்னோடு ஒத்துப் போகாதவன் எல்லாம் எதிரி!" என்ற கட்டுப் பெட்டித் தனத்தைக் கைவிடுவது தான். பொது வேட்பாளர் தமிழ் பகுதிகளில் கூட மூன்றில் இரண்டு வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்ட பின்னும் உங்களுக்கு இது உறைக்கவில்லையானால், எதுவுமே உங்களுக்கு உறைக்காது!
  16. தகவல் மூலங்களை சரிபார்க்காமல் வெட்டி ஒட்டியவர் அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேற்றரில் போட அது "பொரியலுக்குத் தடை" என்று மொழிமாற்றம் செய்திருக்கிறது😂!
  17. இன்று சிறிலங்கா ஆதரவுத் தேசியவாதிகளுக்குத் தேவைப்படுவது தமிழ்த் தேசியம் அடக்கப்படுவதன் ஊடாக மீண்டும் யாழ் மையவாத உயர்குடி மைந்தர்களின் கைகளில் ஆட்சியும், அவர்களிடம் கைகட்டி சேவகம் செய்யும் நிலையும் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்பதே. அதற்காகவே சிறிலங்காத் தேசியம் தேவைப்படுகிறது. புலிகளை திட்டித் தீர்த்து முடிந்து இப்போது தமிழ்தேசியத்தை, அதற்காக உழைப்போரை நக்கல், நையாண்டி செய்வதிலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது அது மட்டுமே. இங்கே தமிழ் மக்களால் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறும், கூவும், கீறும் இவர்கள் சிறிலங்காவுக்குப் போய் மக்களாதரவைத் திரட்டித் தலைமையேற்று சிறிலங்காவிலிருந்து தமிழருக்கு சகவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாமே. இதிலென்ன வேடிக்கையென்றால் புலிகள் உயிர்போடிருந்த காலத்தில் முன்னணியிலே நின்று செயற்பட்டவர்களது நளினங்களைப் பார்க்கிறபோது புலிகள் வீழ்த்தப்பட்டது தனியே எதிரிகாளாலும், துரோகிளாலும் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறதோ அந்த வட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. நாங்கள் தனி ஆவரத்தனம் வாசிக்கிற ஆக்கள் ஆச்சே.அப்படி இருக்க எப்படி எதிர் பாக்க முடியும்.
  19. பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம். ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...? அல்லது எண்ணையை மிச்சம் பிடிக்க... கத்தரிக்காய், மீன் போன்றவை பொரிக்க முடியாதா? 😂
  20. "நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்." என் அப்பா அரச ஊழியர்... அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்... எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை.விரைவாக, வந்த ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர். மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி எங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை. பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்று, மகாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது மகாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்டி,அப்போது, இருபது ரூபாய் ஒரு வடிகால் வெட்ட. நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம். அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது. எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர். கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால். வறுமையின் காரணமாக சிலர் குடிபோதையில் பழகி அகால மரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் வயது வரவில்லை. சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன. இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. வறுமையை ஃபேஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள் அல்ல நாம்.. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள் தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த. கொழும்பை மையமாகக் கொண்ட, இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில், தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன். என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர். வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக அரசியல் செய்கிறோம். ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்... - அனுரகுமார திஸாநாயக்க - உண்மை உரைகல்
  21. அரியம் மற்றும் பொதுக்கட்டமைப்பின் பின் நின்று செயற்படும் போலிகள் தமிழ்த்தேசியத்தை சிதக்கும் நயவஞ்சகர்கள்!
  22. தேவையில்லாத ஆணி 2.25 இலட்சம் வாக்குகளை பிரிச்சுக்கிட்டு போயிட்டு. ரணில் நரியாரின் பிரித்தாளும் தந்திரமே அவரின் தோல்விக்கும் காரணமாகி விட்டது. அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம். ராஜபக்ச செல்வாக்கு அடியோடு காணாமல் போய் விட்டது. சரத்தின் குண்டு துளைத்த கார்.. செல்லாக் காசாகி விட்டது.
  23. இவர்களுக்கு தமிழ்தேசியம் பற்றி எள்ளளவும் கவலையில்லை. சுமந்திரன் இவர்களின் பேச்சுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிப்பதில்லை எனவே சுமந்திரனுக்கெதிராக தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல பல வடிவங்களில் பலிக்கடாக்களை அனுப்புகின்றார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபடுவதுதான் மிச்சம். ஆனால் சுமந்திரனோ அந்த வேதாளம் போல இந்த விக்கிரமன்களை எள்ளி நகையாடுவதும் வழக்கம். தமிழ்த் தேசியம் என்பது இந்த விக்கிரமன்களுக்கும் வேதாளத்துக்கும் இடையில் பிணம்போல் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது! இனி அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது விக்கிரமன்கள் புதிய அவதாரம் எடுத்துவிடுவார்கள் ஆனால் அந்த வேதாளமோ ஒன்றுதான்!👀
  24. தமிழர்களான குமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது இல்லாத வன்மம் அரியேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும்போது ஏன் வந்தது? 😎 நிற்க.... வீபூதி புகழ் செல்லக் கள்ளன் விக்னேஸ்வரனை சில தினங்களாக காணவில்லை. கண்டால் வரச்சொல்லுங்கோ
  25. இப்படியானவர்களுக்கு பதவி கொடுத்தால் மீண்டும் சிறிலங்காவை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றார் அனுரா என்பது தான் அர்த்தம்..
  26. அரசியல் ரீதியாக மூல முளைகளை களையெடுக்க வேண்டும்.
  27. தமிழ் தேசியம் தோல்வி என வாக்கு எண்ணிக்கையை வைத்து தானே இன்று கருத்து சொல்லுகின்றனர்.. புலம் பெயர்ஸ் எல்லாம் புத்திசாலிகள் என நான் எங்கும் கூறவில்லை...ஆனால் இந்த குற்றசாட்டு அன்று (ஆயுத போராட்டம் முதல்)தொடக்கம் இன்று வரை வைக்க ப்படும் ஒர் குற்றசாட்டு ...தமிழ் தேசியத்திற்கு எதிர் தரப்பால் வைக்கப்படும் பொது குற்றசாட்டு ...அது அவர்கள் கருத்து .... இந்தியா,சீனா,அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்க எவ்வளவோ குத்திமுறிகின்றான்ர்..ஏன் நாங்கள் தமிழ் தேசியத்தை பாதுகாக்க கருத்து சொல்ல முடியாது... மக்கள் தெளிவாக உள்ளனர் என்பதில் மாற்று கருத்து இல்லை ... தாயகத்தில் 40 வருடங்களுக்கு மேலாக இணக்க அரசியல் செய்யும் டக்கிளஸினால் கூட தமிழ் மக்களை சிறிலங்கா தேசியத்தினுள் இழுத்து செல்ல முடியவில்லை .. . புலம்பெயர்ஸ் இருக்கும் நாடுகளில் அந்தந்த நாடுகள் தங்கள் நலன் கருதி சில அழுதங்களை சிறிலங்கா தேசியத்திற்கு கொடுக்கின்றது ...இதை தடுக்க சில புலம்பெயர்ஸ் மீது சிறிலங்கா தேசியம் குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்து கொண்டேஇருக்கின்றது ...தொடர்ந்து வைக்கும்.... அஜித் டோவாலை(இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரை) அமெரிக்கா நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது ....ஒர் காளிஸ்தான் போராளியினை கொலை செய்ய முயற்சித்தமைக்காக.... அதாவது இந்தியாவிக்கே சிம்ம சொப்பனமாக தேசிய இனங்களின் பிரச்சனை இந்திய‌புலம்பெயர்ஸ்சினால் கொடுக்கப்படுகின்றது...அதற்காக இந்தியா புலனாய்வாளர்கள் வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் இடுபடுகின்றனர் ... தேசிய இனங்களின் தேசிய உணர்வை குழப்ப பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்டதேசிய‌வாதிகள் கடும் முயற்சி செய்கின்றனர்...பிரித்தானியாவினால் அழிக்கப்பட்ட தேசிய இனங்கள் இனறும் புலம் பெயர்ந்து அதேநாட்டிலிருந்து குரல் கொடுப்பது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று
  28. இதைவிட தெளிவாக எழுத முடியாது. உங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதியதற்கு நன்றி.
  29. பொதுவேட்பாளர் தேவையற்ற ஆணி என்ற எவராவது எங்கே அந்த ஆணியைக்குத்துவது என்று கூறினார்களா?அல்லது புலம்பெயர்ஸ்ஸைக் கைகாட்டும் யாராவது போட்டியிட்ட சிங்கள முன்னணித் தலைகளோடு ஏதாவது ஒப்பந்தகள் செய்திருப்பின் அதை வெளிப்படுத்தி இன்னாரை ஆதரியுங்கள் என்று ஏன் கூறவில்லை. தமிரசுக்கட்சி அணிபிரிந்து நின்று கூவியதை இங்கு கவனத்திலெடுக்க வேண்டிய தேவையில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  30. "அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  31. பார் பேமிற் ஒனருங்களா அண்ணா..? எப்போ கடைய திறப்பீங்கள்..?
  32. அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக புதியவர்களையே தெரிவுசெய்து அநுரவுக்கு பெரும்பான்மையை கொடுப்பார்கள். அநுர முன்னிறுத்தப் போகும் கல்வியாளர்களே அடுத்த பாராளுமன்றில் பெரும்பான்மையாக இருக்கப் போகிறார்கள். அதேபோல் தமிழர்களும் மாற வேண்டும். இப்போதுள்ள அனைத்து (கவனிக்க :அனைத்து) எம்பிக்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய எம்பிக்களை தெரிவு செய்ய தமிழ் மக்கள் முன்வர வேண்டும். படித்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பிரதேசவாதத்தை மறந்து அடுத்த கட்ட தமிழ் அரசியல் நகர்வை நடத்த வேண்டும். ஆகக்குறைந்தது, பிரதேசவாதம் பேசி மக்களைத் தூண்டிய பிள்ளையான், அமல், ஒட்டுக்குழுக்களான டக்ளஸ், சித்தார்த்தன், அடைக்கலநாதன்...etc , வேலைதாறன் அபிவிருத்தி அரசியல் என்று சனத்தை பேய்க்காட்டிய அங்கஜன், பேரினவாதம் திட்டமிட்டு தமிழ் அரசியலை அழிக்க அனுப்பிய சுத்து மாத்து போன்றோரையாவது நிரந்தரமாக அரசியலை விட்டு நீக்க வேண்டும். இவர்களில் ஒருவராவது மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் தமிழர் விடும் இறுதி வரலாற்றுத் தவறாக அது மாறும். அதற்குப்பிறகு தவறுவிட தமிழர் என்றொரு இனம் இருக்காது. தமிழர்களிடம் இந்த மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பகிருங்கள். தமிழர்களிடமும் புதிய அரசியல் கலாச்சாரம் வரட்டும்! வட்சப்பில் வந்தது.
  33. அந்த….இரண்டு கோஷ்டியும் ஒன்றாக நின்று கூப்பாடு போடும் போதே… இவர்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று புரிந்து விட்டது. போலிகளை அம்பலப்படுத்திய… நியாயமான கேள்விகள் ரஞ்சித். 👍🏽
  34. தங்கள் நேரத்துக்கும் மிகத் தீர்க்கமான தெளிவான வினவுதலுக்கும் மிக்க நன்றி, நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  35. ஏன் ராசா ஏன்?? நேற்று உங்கள் பள்ளித் தோழன் என்று எம் வயிற்றில் பால் வார்த்து விட்டு இன்று பால் ஊத்தல் தகுமோ???🤣
  36. இதைத் தான் தொடக்கம் முதல் நான் எழுதி வருகிறேன். ஆனால் எதையுமே முளையிலேயே கவிட்டு கொட்டி விட்டு ஐயோ குய்யோ என்று ஒப்பாரி வைப்பது எம் இனத்திற்கு புதிதல்ல என்பதால்..,....?
  37. 🤣........ அவர் பெயர் தானே இப்ப எல்லா இடமும் இருக்குது, கபிதன்...... நேற்று இது வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் அநுரவின் பெயரை கீழே போட மறந்துவிட்டார்கள்....... தமிழ் மொழிமாற்றம் வேறு தப்பும் தவறுமாக இருக்கின்றது.......... ------------------------------------ Immediate Changes in a future NPP government . 1. Paye Taxes from 36% to 24%. 2. VAT will be exempt for Food items, Health sector services & educational books. 3. One vehicle per minister/MP. 4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians. 5. Cut down on unnecessary government expenditure. 6. No familly/Frieds will be accommodated on overseas tours. 7. All tours are on assigned targets. 8. Only 25 ministries. 9. Cut down prices on electricity & fuel. 10. Low interest rates 11. Development bank for the start of new small & medium scale industries. 12. A 3 bench special court to hear fraud cases. 13. Presidents budget cut down by 50%. 14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians. 15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences. 16. New laws to prevent MP's from switching the party they were elected to. 17. New Invesments (local & overseas Srilankans already ready to invest). 18. No additional benefits for politicians over citizens. 19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 22. Restoring the oil refinery. 23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned. 24. New technology for the fisheries industry to enhance the yeild (Fishermen to receive directions for fishing areas) 25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs. 26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a mnimum cost. 27. Facilitate for Eco based tourism. 28. Plans to capture IT market. 29. Changes in the education policies to facilitate the economy. 30. Secure Food, Heath & and education as fundamentals for the citizens through adequate funds.
  38. அப்ப கட்டுப்பணமும் காலியா?😂
  39. குஞ்சுகள் என்று அர்த்தப்படுத்தி பிள்ளைகள் என கருதலாம் என நினைக்கிறேன்.
  40. அப்படியே தொழில் அடிப்படையில் சாதிகளையும் இணைத்து விடுங்கள். உங்கள் பணிகள் இலகுவாகும்.
  41. ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே? நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.
  42. 🤣......... சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அங்கு இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே சண்டை என்றே பூட்டப்பட்டது. ஒரு பிரிவு ஜேவிபி, அடுத்த பிரிவு இன்னொரு சோஷலிஸ்ட் முன்னணி.........! பழைய சோஷலிஸ்டுகள் இப்பொழுது ஆட்சிக்கு வர, புதிதாக இன்னொரு முன்னணி உருவாகி, தேவையென்றால் இன்னொரு 'அரகலிய' ஆரம்பித்து, சிங்கள மக்களை காப்பாற்ற ஏற்கனவே தயாராகிவிட்டார்கள் போல........... சிங்கள மக்கள் வாழ்வோ, தாழ்வோ ஒரு அலையாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் நாலு பக்கங்களாக பிரிந்து, நண்டுகள் போல போய்க் கொண்டிருக்கின்றது எங்களின் தெரிவுகள். ஜேவிபியினர் ஜாதிக ஹெல உருமய, பூமி புத்ர, பொதுஜன பெரமுன போன்ற இனவாதிகள். இதை நான் மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றேன். உதய கம்மன்பில கூட இவர்களில் ஒருவர் தான். அநுர, ரில்வின், உதய, விமல்,..... என்று இந்த வரிசை இப்பொழுது பல கட்சிகளாகப் பிரிந்து இருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு துரும்பைக் கூட தமிழர்களுக்காக இவர்கள் அசைக்கப் போவதில்லை. உண்மையில் எந்த பெரும்பான்மை அரசியல்வாதியும் அசைக்கப் போவதில்லை, சஜித், ரணில் உட்பட. ஒன்பது அல்ல, இன்னும் 90 இலங்கை ஜனாதிபதிகள் வந்தாலும் இதுவே தான் நிலைமை. சர்வதேசமும் எங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. எங்களை விட பாலஸ்தீனர்கள் இன்று பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கேட்போர் எவருமில்லை. இத்தனைக்கும் எங்களின் குரலை விட அவர்களின் குரல் கேட்க உலகில் நாடுகளும், மனிதர்களும் இருக்கின்றனர். ரணில் வெல்லாதது இல்லை, இவ்வளவு குறைவாக வாக்குகள் ஏன் எடுத்தார் என்பதே ஆச்சரியம். மகிந்த குடும்பத்தை காப்பாற்றினார் என்பது மட்டும் அதற்கான காரணம் இல்லை. இதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ரணிலே அந்தப் பாராளுமன்ற தேர்தலில் தோற்றார். அதுவும் ஒரு படுதோல்வி. வெளியில் என்னதான் வெற்றிகரமான அரசியல்வாதி போன்ற தோற்றம் இவருக்கு இருந்தாலும், இவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி. இவர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பெரும்பானமை மக்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போல என்றும் நினைத்திருந்தேன். ஆனால் நாட்டு மக்கள் வேறு ஏதோ நினைத்து இருக்கின்றார்கள். இனிமேல் என்ன செய்ய.............. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..............🤣.
  43. அதுசரி, அரியத்தை நிற்பாட்டியிராவிட்டால் பின்கதவு சுமந்திரன் தயவுடன் சஜித் ஜனாதிபதியாக வந்திருப்பார் அப்படித்தானே. அனுராவிற்கு, அரியத்திற்கு ஆதரவு கொடுத்தோரிடம் அவ்வளவு கோபம் இருக்காது. ஆனால் சஜித்துக்கும் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தோரை வச்சு செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது.
  44. அப்படியானால் சாத்தியம் அற்ற ஒன்றை என் பிள்ளையிடம் எப்படி நான் கடத்த முடியும்,?? சாத்தியமே அற்ற ஒன்றை சாத்தியமற்றது என்று அரியம் நிரூபித்து விட்டார் என்பதற்காக நீங்கள் ஏன் பொங்க வேண்டும்?? அப்படியானால் பொய்யர் நீங்கள் தானே????
  45. சீனா என்ற குதிரை லாயத்தில் தான் இவர் பதுங்கி யிருக்கிறார் என்பது கூட தெரியாத நம்ம இந்தியாவை நினைக்க பாவமாக இருக்கின்றது
  46. அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.