Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31986
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8907
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/26/24 in all areas

  1. தரமான செயல். மாணவர்களுக்கும், ஓராயம் அமைப்பினருக்கும் பாராட்டுக்கள். இந்த முன்மாதிரியை மற்றைய பாடசாலை மாணவர்களும் பின்பற்ற வேண்டும். கார்த்திகை, மார்கழி மாதங்கள் நெருங்கும் வேளை... விதைப்பந்து தூவுவதற்கு, சரியான தருணம் இது.
  2. 2024ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வாக நேற்று (25) காலை 8.30 மணியளவில் அக்கராயனில் ஒதுக்கப்பட்ட காட்டினுள் விதைப்பந்துகள் வீசுப்பட்டன. ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளி/ விவேகானந்த வித்தியாலயத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதைப்பந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் எறியப்பட்டன. இன்று உலகம் எதிர்கொள்கின்ற மிக ஆபத்தான பிரச்சினையாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது. காடு அழிப்பு உட்பட எமது சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவாக காலநிலை மாற்றம் நிலவுகிறது. எனவே, எமது சூழலை பாதுகாத்து, அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது. விதைப்பந்து வீசும் செயற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர், கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும் இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதியுமான ம.சசிகரன், ஊடகவியலாளரும் சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/197146
  3. "வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். " ஏன் முழுமையாக ஒப்புக்கொண்டால் இனத்துவேசம் என்ற வலையை பாவித்து வேலைத்தளங்களில் இருந்து பொது இடங்களில் வரை இவர்களின் நடத்தைக்கு உங்களால் காரணம் கட்பிக்க முடியாது என்பதாலா? அல்லது சக இந்தியர்களே இவர்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை முழுக்க புதைக்க இந்த கதையா? இவர்கள் வெள்ளையர்கள் பெருமான்மையான நாடுகளில் மாத்திரமா இப்படி செய்கிறார்கள்? சிங்கப்பூரில் இந்திய உல்லாசப்பயணிகளின் நடத்தை எவ்வாறுள்ளது? பாலி (Bali), இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள்? அந்த நாட்டு மக்களோடு கதையுங்கள். அவர்கள் இந்தியர்கள் தங்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவதை வெறுக்கிறார்கள். வெறுப்பவர்கள் மேலை நாட்டவர்கள் அல்லர். நான் இலங்கையர் என்று அறிந்ததும் உற்ற நண்பன் போல பழகுவார்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களாகள், நான் இந்து என்பதட்காக என்னை வேறுபடத்தவில்லை. மாறாக தங்களது வாகனத்தில் ஏத்தி பல இடங்களுக்கும் கொண்டு போவார்கள். வாகனத்துக்கு பணமும் வேண்டமாட்டார்கள். நாங்கள் உணவு, பொருட்கள் என்று அவர்களுக்கு வேண்டி உபசரிப்போம். அவர்களிடம் இருந்து பலவற்றை அறிந்துளோம். வெட்கப்படுகிறோம் (personally embarrased). "இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். " தவறு. முதலில் உலகில் ஓரி பில்லியனுக்கு மேல் சனத்தொகை உள்ள நாடுகள் 2. இந்த நாடுகளில் இருந்து வந்து குவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதனால் அதிகம். அதேசமயம் அதிக எண்ணிக்கை என்பதனால் அவர்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மிக கூடுதலான அளவு காலத்தை அந்த சமூக பின்னலுக்குள் தான் செலவழிக்கிறார்கள். அந்த வலையை விட்டு பெரும்பான்மை சமூகத்துடன் அவர்கள் தொடபு கொள்வது கூடுதலாக தொழில் மற்றும் பல்கலைக்கழகம் என்று அமைகிறது. பாடசாலைகள் கூட இவர்கள் நிறைந்து வாழும் பகுதி என்றால் அந்த கலாச்சார மாணவர்களையே கூடுதலாக கொண்டுள்ளது அவர்களது சமூக கலாச்சார இணைப்புகளும் அப்படியே. தொழில் இடங்களிலும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதைவிட தொடர் புலம்பெயர்தல் (chain migration) இந்த சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படியில் மிக அதிகம். இதன் விளைவு தாய்நாடு கலாச்சாரம், பண்புகள், நடத்தைகள் மேலும் மேலும் வேரூன்றுகின்ற நிலைமை. எனவே இவர்கள் புலம்பெயர் நாட்டின் நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும் பாதை மிக நீண்டது. இந்தியர்கள் தங்கள் நாட்டை ஒரு வல்லரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு ஏன் இடம்பெயருகிறார்கள்? ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொண்டு எதட்காக பிரஜாவுரிமைக்க 10-20 வருடம் வரிசையில் நிக்கிறார்கள்? எல்லாவற்றிக்கும் காலனித்துவ ஆடசியா காரணம்? காலனித்துவ ஆட்சியில் இருந்து இரண்டாம் உலகமாகயுத்தையும் கண்ட சிங்கப்பூர் எப்படி உயர்ந்தது? அதே ஆட்சியில் இருந்து விடுபட்ட ஸ்ரீலங்கா எப்படி சின்னாபின்னமானது? நாங்கள் எப்பவும் எங்களை பாதிக்கட்டவர்கள் என்ற மனநிலையில் (victim mentality) வைத்துக்கொண்டு எங்களை பின்னோக்கி கொண்டு செல்கிற பழக்க வழக்கங்களையும், அரசியல் சமூக கலாச்சார வழிமுறைகளையும் விடமாட்டோம் என்றால் எங்கள் எதிர்காலம் எப்படி மாறும்? நாங்கள் விட்டு வந்த நாடுகள் எப்படி மாறும்? நாங்கள் வந்து குடியிருக்கிற நாடுகள் எப்படி பயனடையும்? நாங்கள் புலம்பெயர்ந்த நாடும் நாங்கள் விட்டு வந்த நாடுகள் போலாகிவிடுமல்லவா ? அதனால் எங்களது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் என்ன செய்துவிட்டு போகிறோம்
  4. "இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இனம் மாறிய சிங்களவர்கள் காரணமா?" / "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?" தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள் மற்றும் மலையாளிகள் என பல தென்னிந்தியர்களும் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்தனர். உதாரணமாக, கோட்டே இராச்சியத்தை நிறுவி, தமிழ் யாழ்ப்பாண இராச்சியத்தை எதிர்த்துப் போரிட்ட அழகக்கோனார்கள் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஆனால் சிங்களவர்களுடன் இணைந்திருந்தனர். கண்டி இராச்சியத்தின் கடைசி பல மன்னர்கள் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தமிழ் பேசும் நாயக்கர்கள். வெளிப்படையாக அவர்களின் நீதிமன்ற மொழி தமிழ். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில் முதல் முதல் இனக்கலவரத்தைத் தொடங்கியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆகும். 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தை பலவந்தமாக திணித்து இனக்கலவரத்தை ஆரம்பித்தார் என்பது வரலாறு. தெலுங்கு வம்சாவளியை விட, அவரது மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் செட்டி (ஒரு வணிக சாதி) என்பது குறிப்பிடத் தக்கது. எஸ்.டபிள்யூ.ஆர் டயஸ் பண்டாரநாயக்காவின் வம்சாவளியினர், 16 ஆம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்து கண்டி மன்னர்களின் கீழ் பணியாற்றிய, நீல- பெருமாள் என்ற பெயரைக் கொண்ட இந்தியச் செட்டி சமூகத்தின் வழித்தோன்றலாகும். இந்த நீலப்பெருமாள் பாண்டாரம், சமன் என்ற ஒரு கடவுளின் ஆலயம் ஒன்றின் பூசகராகப், அதன் தலைமைக் குருவாக நியமிக்கப் பட்டார். சமன் (சுமண சமன் தேவன் / சுமண சமன் கடவுள்] என்பது இலங்கையின் உள்ளூர் மற்றும் பூர்வீக நம்பிக்கை மற்றும் வழிபாட்டிற்கு உட்பட்ட ஒரு தெய்வம் ஆகும். சமன் என்ற பெயருக்கு "நல்ல மனம்" என்று பொருள். இவர் கிரீடம் மற்றும் நகைகளால் மூடி அணிந்து, வலது அல்லது இடது கையில் தாமரை மலரைப் பிடித்தபடி, ஒரு வெள்ளை யானையுடன் சித்தரிக்கப்படுகிறார். அதேவேளை 'சமன்' கடவுளின் கோவிலின், தலைமைப் பதிவாளர் என்ற கருத்தில், 1454 இல் 'நாயக்க பண்டாரம்' [‘Nayaka Pandaram’] என்ற பெயரை அவர்கள் எடுத்துக் கொண்டனர். பின் நாளடைவில், "பயன்பாட்டின் வசதிக்காக, 'பண்டார நாயகே' [‘Pandara Nayake’] ஆகி, பின் காலப்போக்கில், P ஆனது உள்ளூர் உச்சரிப்பான சிங்கள வடிவில் B உடன் மாற்றப்பட்டு, இதனால் 'பண்டார நாயகே [‘BandaraNayake’] ஆகி, பின்னர் பண்டாரநாயக்கா [Bandaranaike] வாக மாற்றம் அடைந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் அல்லது தமிழில் பண்டாரங்கள் என்போர் பிராமணர்கள் மற்றும் நீதிமன்றம் மற்றும் குடும்ப பதிவுகளை பராமரிப்பவர்கள் ஆகும். பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டதுடன் அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் தமது பணியை தொடர்ந்தனர். 'பெருமாள்' என்பது விஷ்ணுவின் தமிழ் பெயர். அதேபோல, கண்டிய பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட 'பண்டார' என்ற தலைப்பு தமிழ் வார்த்தையான பண்டாரம் என்பதிலிருந்து வந்தது, இது அகராதி வரையறையின்படி தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள சூத்திரர் சாதி [Shudra caste] பூசாரிகளின் சமூகத்தைக் குறிக்கிறது. கணநாத் ஒபேசேகரேவின் [Gananath Obeyesekere] கூற்றுப்படி, பண்டாரங்கள் பொதுவாக வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு இரண்டு அலைகளில் இடம்பெயர்ந்து சிங்களவர்களுடன் இணைந்த சிவன் மற்றும் ஸ்கந்த [முருகன்] பக்தர்கள் ஆகும். பண்டாரநாயக்காவின் செல்வந்த மூதாதையர்கள் ஒரு சந்தர்ப்பவாதிகளாகவே தொடர்ந்து இருந்துள்ளார்கள். அவர்கள் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு தங்கள் தனிப்பட்ட நன்மைக்காக மாற என்றும் தயாராகவே இருந்துள்ளார்கள். முதலில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும், பௌத்த மதத்திற்கும் வெவ்வேறு ஆளும் சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக மாறினார்கள் என்பது வரலாறு ஆகும். பண்டாரநாயக்கா அவர்களே ஒரு அரசியல் சந்தர்ப்பவாதி ஆகும், அவர் கிறித்துவத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறி சிங்களம் மட்டுமே இயக்கத்தை முன்னின்று சிங்கள-பௌத்த தேசியவாதத்தைத் தூண்டித்தான் தன் வாக்குகளைப்பெற்று அரசு அமைத்தார். இருப்பினும் அவர் ஆங்கிலத்தில் படித்த ஒரு உயரடுக்காகும் [ஒரு குழு அல்லது சமூகம் தனது குணங்களின் அடிப்படையில் உயர்ந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவாக தோற்றம் அளிக்கும் ஒன்று / elite]. அதே நேரம் அவருக்கு சிங்களத்தில் எளிதாகவும் தெளிவாகவும் அல்லது சரளமாக பேசும் திறன் [fluent] அற்றவராகவே இருந்தார். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டு தமிழர் விரோதப் படுகொலைகள், யாழ் பொது நூலகம் எரிப்பு மற்றும் உள்நாட்டுக் கலகம் அல்லது போர் போன்றவற்றினை ஆரம்பிப்பதற்கும் தொடர்வதற்கும் காரணகர்த்தாவாக இருந்து தமிழர்களின் அவலங்களை மோசமாக்குவதற்கு முதன்மையாக இருந்தவர் தான் மற்றொரு சிங்கள அரசியல்வாதியான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஆகும். அவருக்கும் தென்னிந்தியர், குறிப்பாக தமிழ் வம்சாவளியினர் இருந்ததாக தெளிவாகத் தெரிகிறது. ஜெயவர்த்தனாவின் தாத்தா 'தம்பி முதலியார்' [Tambi Mudaliyar] என்று அழைக்கப்பட்டார். தம்பி என்பது இளைய சகோதரனுக்கான தமிழ் வார்த்தை (பிரபாகரனின் புனைப்பெயரும் கூட) மேலும் இது சில தமிழ் முஸ்லிம்களாலும் பயன்படுத்தப்படுகிறது. முதலியார் என்பது ஒரு தமிழ் சாதிப் பட்டமாகும், இது சில சிங்கள உயரடுக்கினருக்கும் பயன்படுத்தப்பட்டது. தம்பி முதலியார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக டச்சுக்காரர்களுக்கு ஒற்றராகவும், பின்னர் டச்சுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்காகவும் காலனித்துவவாதிகளின் விருப்பமுள்ள அவர்களுக்கு பணிவான ஊழியராக இருந்தார். பின்னர் அவர் கண்டி சிங்கள இராச்சியத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்தார் மற்றும் கண்டியை கைப்பற்ற தனது வெள்ளை எஜமானர்களுக்கு உதவினார் என்பதும் குறிப்பிடத் தக்கது, அதிலிருந்து அவர் பெரும் செல்வத்தை குவித்து இலங்கையில் மிகவும் செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக மாறினார். அவரது துரோகத்திற்காக சில சிங்களவர்கள் அவரை ஒரு துரோகி என்று கண்டனம் செய்தனர், அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் அவரது விசுவாசத்திற்காக அவரைப் பாராட்டி அஞ்சலி செலுத்தினர், இது 15 மே 1830 அன்று பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் [official Gazette of the British colonial government on 15 May 1830] இருந்து தெரிய வருகிறது. இந்த வர்த்தமானி தம்பி முதலியாரின் தமிழ் வம்சாவளியையும் வெளிப்படுத்துகிறது. தம்பி முதலியார் (டான் அட்ரியன் விஜேசிங்க ஜயவர்தன / Don Adrian Wijesinghe Jayewardene என்றும் அழைக்கப்படுகிறார்). மேலும் கே.எம். டி சில்வா மற்றும் வில்லியம் ஹோவர்ட் ரிக்கின்ஸ் [K. M. De Silva and William Howard Wriggins] ஆகியோரால் சுருக்கமாக: "He was descended from the Chetty community, a community of traders, which had emigrated from the Coromandel coast in India in the early years of the Dutch rule in the mid-17th century and settled in the vicinity of Colombo. Two or three generations before the birth of Don Adrian a male of his family had married a Sinhalese by the name of Jayewardene from the village of Welgama near Hanvalla some 20 miles from Colombo and from that time took on the name of Jayewardene. Immigration from India to the south-west coastal regions of Sri Lanka had gone on for several centuries before the Dutch arrived and the process continued under their rule. To locate an ancestor with these antecedents is, of course, unusual; it is a distinction the Jayewardenes share with the Bandaranaikes whose first known ancestor also hailed from South India, but in the early 16th century. Don Adrian, then, had one ancestor of recent Indian origin, but by the time he himself appears on the stage of Sri Lanka's history at the tail-end of the 18th century the process of ‘Sinhalisation’ of his family had been completed." என்று தமது J.R. Jayewardene of Sri Lanka: 1906-1956, By K. M. De Silva, William Howard Wriggins என்ற புத்தகத்தில் குறிக்கப்படும் உள்ளது. அதாவது அவர் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டச்சு ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையிலிருந்து குடிபெயர்ந்து கொழும்புக்கு அருகாமையில் குடியேறிய வணிகர்களின் சமூகமான செட்டி சமூகத்திலிருந்து வந்தவர் ஆகும். இங்கு கோரமண்டல் கரை என்பது, இந்தியக் குடாநாட்டின் தென்கிழக்குக் கரையோரத்துக்கு வழங்கப்பட்டுவரும் ஒரு பெயராகும்.வரலாற்று அடிப்படையில் கோரமண்டல் கரை, காவிரி ஆற்றுக் கழிமுகத்துக்கு அருகிலுள்ள கோடிக்கரையில் இருந்து, கிருஷ்ணா ஆற்றுக் கழிமுகம் வரையுள்ள பகுதியைக் குறித்தது. தற்காலத்தில் கோரமண்டல் கரை, தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதியான பாண்டிச்சேரியிலும் உள்ளது. டொன் அட்ரியன் பிறப்பதற்கு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண், கொழும்பில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள ஹன்வல்லைக்கு அருகில் உள்ள வெல்கம என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயவர்த்தனே என்ற சிங்களவரைத் திருமணம் செய்து, அன்றிலிருந்து ஜெயவர்த்தன என்ற பெயரைப் அந்த குடும்பத்தனர் பெற்றனர். இந்தியாவில் இருந்து இலங்கையின் தென்மேற்கு கரையோரப் பகுதிகளுக்கு டச்சுக்காரர்கள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவ்வாறான குடியேற்றம் நடந்து வந்தது. எனவே, இந்த முன்னோடிகளுடன் ஒரு மூதாதையரைக் கண்டறிவது, நிச்சயமாக, அசாதாரணமானது; இதுவே பண்டாரநாயக்காக்களுடனும் ஜெயவர்த்தனாக்களுடனும் காணப்படும் ஒரு வித்தியாசமாகும், என்றாலும் அவருடைய முதல் அறியப்பட்ட மூதாதையர் தென்னிந்தியாவிலிருந்து வந்தவரே ஆகும். ஆனால் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில். டான் அட்ரியனுக்கு, சமீபத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மூதாதையர் இருந்தார், ஆனால் அவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் வரலாற்றின் மேடையில் தோன்றிய நேரத்தில் அவரது குடும்பத்தினர் எல்லோரும் ‘சிங்களமயமாக்கல்’ செய்யப்பட்டுவிட்டனர். இப்போது கொழும்பு பகுதியில் குவிந்துள்ள இலங்கையின் செட்டி சமூகம் பெரும்பாலும் தமிழ் பேசும் சமூகமாக, திருநெல்வேலியில் இருந்து இலங்கைத் தீவில், காலனித்துவ போர்த்துகீசிய ஆட்சியின் போது குடியேறி பின் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. எனவே முதலில் தமிழ் இனமாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இன்று அவர்கள் ஒரு தனி அடையாளத்தை கோருகின்றனர் அல்லது சிங்களவர்களுடன் இணைகிறார்கள். இந்த சமூகத்தின் ஒரு முக்கிய உறுப்பினர் சைமன் கேசி செட்டி, ஒரு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் சட்ட சபையில் தீவின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதியும் ஆவார். ஆனால் இதற்கு நேர்மாறாக, அதே பரம்பரையில் உதித்து, ‘சிங்களமயமாக்கப்பட்ட' 21ஆம் நூற்றாண்டின் செட்டி அரசியல்வாதியான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, 2007ல் கொழும்பில் இருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தியத்துடன் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளரை பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுவது போன்ற தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஹெட்டியராச்சிகே (‘செட்டிகளின் தலைவர்’ என்று பொருள்) என்ற தனிப்பட்ட பெயர்களைக் கொண்ட சிங்களவர்கள் உண்மையில் முன்னைய தமிழ்ச் செட்டிகள் ஆகும். சமீபகாலமாக சிங்களமயமாக்கப்பட்ட தென்னிந்தியர்கள் பலர் இந்த நாட்களில் தமிழ் விரோதிகளாக மாறி, சிங்களவர்களுடன் கலந்துவிட்டார்கள், இன்று இந்த மக்கள் சிங்களவர்களாக மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார்கள், ஒருவேளை அவர்களின் திராவிட வம்சாவளியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம், எனவே இன்றைய பிரச்சினைகளுக்கு அவர்களின் முன்னோர்களின் முன்னோர்களை பலிகடாவாக நாம் கருத முடியாது. சிங்கள மன்னருக்கும் மதுரே நாயக்க இளவரசிக்கும் இடையேயான திருமணத்தின் விளைவாக கண்டியின் மதுரை நாயக்கர்கள் தோன்றினார்கள், கடைசி சிங்கள மன்னர் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சின்ஹா [Sri veera parakrama Narendra Sinha] 1739 இல் தனது ராணியிடமிருந்து சந்ததி இல்லாமல் இறந்தார். இவரது அரசி மதுரை நாயக்க இளவரசி ஆகும். எனவே மதுரை நாயக்க இளவரசியான அவரின் மனைவி, தன் சகோதரரை அரசனாக்கினார். மேலும் அவர் ஸ்ரீ விஜய ராஜ சின்ஹா [Sri Vijaya Raja Sinha] என்ற பட்டத்தின் கீழ் முடிசூட்டப்பட்டார். இவ்வாறு, ஸ்ரீ விஜய இராஜசிங்க அரியணைக்கு பிறகு கண்டி நாயக்கர் வரிசையை நிறுவினர் என்பதும் வரலாறு ஆகும் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem?" Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese. The Alagakkonaras, for example, who founded the Kingdom of Kotte and fought the Tamil Jaffna Kingdom were of Malayali origin but were assimilated with the Sinhalese. The last several kings of the Kingdom of Kandy were the Tamil-speaking Nayaks from Madurai who were of Telugu origin. Apparently the language of their court was Tamil. The man who started the ethnic conflict in the post- independent Sri Lanka was S.W.R.D. Bandaranaike with his imposition of Sinhala Only Act in 1956. Rather than being of Telugu origin, it seems his forefather was a Tamil Chetti (a trading caste) from Tamil Nadu. The ancestry of the Dias Bandaranaikes describe how an Indian officer ‘of high standing’ -a descendant of an Indian Chetty community, who migrated in the 16th century, serving under the Kings of Kandy and bearing the name Neela- Perumal, was made high priest of the Temple of God Saman and commanded to take the name of ‘Nayaka Pandaram’ in 1454, meaning chief record- keeper. Saman (also called Sumana, Sumana Saman, Sinhala: සුමන සමන් දෙවි) is a deity, subject to local and indigenous belief and worship in Sri Lanka. The name Saman means "good minded". His character is of historical significance for the Sinhalese people and veneration especially to all the Buddhists. Maha Sumana Saman Deviraja (Greater Lord of Gods Sumana Saman) is depicted crowned and bejeweled, holding a lotus flower in his right or left hand and accompanied by a white elephant. “For convenience in usage, it became ‘Pandara Nayake’, with time, the P was substituted with the locally palatable B; thus ‘BandaraNayake’, later evolved as Bandaranayake. The Pandarams of India are Brahmins and keepers of Court and family records.” Perumal is a Tamil name of Vishnu. The title Bandara used by the Kandyan nobility comes from the Tamil word pandaram, which according to the dictionary definition refers to a community of Sudra caste priests in South India and Sri Lanka. According to Gananath Obeyesekere, the Pandarams were generally of Vellalar caste origin and were devotees of Siva and Skanda who migrated to Sri Lanka from South India in two waves in 13th and 14th century and assimilated with the Sinhalese. Bandaranaike’s wealthy forefathers were opportunists who jumped from one religion to another, from Hinduism to Buddhism to various sects of Christianity, in order to curry favours with the different ruling powers. Bandaranaike himself was a political opportunist who converted to Buddhism from Christianity and whipped up Sinhalese-Buddhist nationalism by spearheading the Sinhala Only Movement, although as an English educated elite he wasn’t fluent in Sinhala himself. J.R. Jayewardene, also a Christian convert to Buddhism, was another Sinhalese politician who was responsible for aggravating Tamil grievances as his rule saw the anti-Tamil pogroms of 1977, 1981 and 1983, the burning of the Jaffna public Library and the start of the civil war. It appears he too had a South Indian, more specifically Tamil ancestry. Jayewardene’s great-grandfather was called Tambi Mudaliyar. Tambi or Thambi is a Tamil word for younger brother (also Prabhakaran’s nickname) and it’s also used as names by some Tamil Muslims. Mudaliyar is a Tamil caste title which was also applied to some Sinhalese elite. Tambi Mudaliyar was a willing servant of the colonialists, working as a spy for the Dutch against the British and then for the British against the Dutch. He then became spy for the British against the Sinhalese Kingdom of Kandy and assisted his white masters in their conquest of the Kandy, from which he amassed a great fortune and established one of the most wealthiest and influential families in Ceylon. For his treachery some Sinhalese denounce him as a traitor while the British eulogised him for his loyalty, which appeared in a tribute after his death in the official Gazette of the British colonial government on 15 May 1830. This Gazette also reveals the Tamil ancestry of Tambi Mudaliyar (also known as Don Adrian Wijesinghe Jayewardene), as summarised by K. M. De Silva and William Howard Wriggins: "He was descended from the Chetty community, a community of traders, which had emigrated from the Coromandel coast in India in the early years of the Dutch rule in the mid-17th century and settled in the vicinity of Colombo. Two or three generations before the birth of Don Adrian a male of his family had married a Sinhalese by the name of Jayewardene from the village of Welgama near Hanvalla some 20 miles from Colombo and from that time took on the name of Jayewardene. Immigration from India to the south-west coastal regions of Sri Lanka had gone on for several centuries before the Dutch arrived and the process continued under their rule. To locate an ancestor with these antecedents is, of course, unusual; it is a distinction the Jayewardenes share with the Bandaranaikes whose first known ancestor also hailed from South India, but in the early 16th century. Don Adrian, then, had one ancestor of recent Indian origin, but by the time he himself appears on the stage of Sri Lanka's history at the tail-end of the 18th century the process of ‘Sinhalisation’ of his family had been completed." It’s interesting to note that not too long ago the Chetti community of Sri Lanka, now concentrated in Colombo area, were for the most part a Tamil-speaking community who were identified as a Tamil caste as their ancestors had settled in the island from Tirunelveli in Tamil Nadu during the colonial Portuguese rule and converted to Christianity; but today they claim a separate identity or are assimilated with the Sinhalese. A prominent member of this community was Simon Casie Chetty, a distinguished Tamil scholar and a politician who represented the island’s Tamils at the Legislative Council of Ceylon in the 19th century. In contrast, 21st century Chetti politician Jeyaraj Fernandopulle took an anti-Tamil position, such as justifying the forced eviction of Tamils from Colombo in 2007 and accusing the United Nation’s Under-Secretary-General for Humanitarian Affairs of being a terrorist . Sinhalese with personal names Hettiarachige (meaning ‘chief of the Chettis’) are assimilated Tamil Chettis. Many recently Sinhalized South Indians have become so anti-Tamil these days and claim a fake 2000+ years old Aryan ancestry. They had mixed with the Sinhalese and today these people identify as Sinhalese only, possibly with no awareness of their Dravidian origins, hence it’s wrong to scapegoat the ancestries of their forefathers for today’s problems. The Madurai nayaks of kandy is a result of marriage between sinhalese king and madurei nayak princess, Last sinhalese king sri veera parakrama Narendra Sinha, died in 1739 without an offspring from his queen. His queen was a Madurai Nayak princess. Narendra Sinha's had nominated a brother of his Madura queen to succeed him. And he was crowned under the assumed title of Sri Vijaya Raja Sinha. Thus, Sri Vijaya Rajasinha succeeded the throne and established the Kandy Nayak line. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  5. வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By. Karunya
  6. இணைப்புக்கு நன்றி பகிடி. சந்திரிகா காலத்தில் உருவாகிய தீர்வு திட்டத்துடன் கூடிய அரசியலமைப்பு மாற்றம் பாலாளுமன்றத்துக்கு வந்த போது 2/3 பெரும்பான்மைக்கு 7 வாக்குகளே தேவையான நிலையில் அந்த ஏழு வாக்குகள் இருந்தும் உயிர்ப்பயத்தில் தமிழர் விடுதலை கூட்டணி அதற்கு ஆதரவு கொடுக்காமல் விட்டது மாபெரும் தவறு. அந்த தீர்வை உருவாக்கிய நீலன் திருச்செல்வத்தையும் படுகொலை செய்து இன்று ஒன்று மில்லாமல் நிற்கிறது மோட்டு தமிழினம். வந்து மைனஸ் புள்ளியை இட்டு செல்ல விசுகுவை அன்பாக அழைக்கிறேன். வருக வருக.
  7. நல்ல கண். வைத்தியரைப். கூடிய விரைவில் பாருங்கள் 🤣🤣 அதுவரை கருத்துகள் பதிய வேண்டாம் குறிப்பு,....வைத்தியரிடம் பெற்றுக் கொண்ட சான்றிதழ்களை யாழில் இணைக்கவும். 🙏
  8. நான் நேற்று சொன்னேன் தானே இன்றுட‌ன் விளையாட்டு முடிந்து விடும் என்று விளையாட்டு 3 நாள் தான் எடுத்த‌து 5 நாள் விளையாட்டை 113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய‌ வெற்றி😁.............................
  9. சுமந்தரனின் இந்தக் காணொளிக்கு... வாசகர் கொடுத்த பின்னூட்டங்கள். ஒரு பானை சோற்றுக்கு... ஒரு சோறு பதம் என்பார்கள். ஆனபடியால்.... மேலதிகமாக சுமந்திரனைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை. பிரித்தது சுமந்திரனேதான்.எனிமேல் உள்ள காலங்களில் சுமந்திரனை வெளியேற்றி நல்ல ஒரு கட்சியாக வலம் வரும் என நினைக்கிறேன். @varansinna807 கரு நாகத்தை விட அதிகம் நஞ்சு கொண்டவன் இந்த சுமந்திரன். @airportlimo3582 யாழ்மாவட்டமக்கள் இம்முறை தக்கபாடம் கற்பிப்பார்கள் @ponniahsanthakumar9428 நேரத்தை வீணாக்கும் பேட்டி @lfcmanwearemighty1495 வணக்கம் நெறியாளர் அவர்களே முதற்கண் சமந்திரனிடம் பேட்டி எடுத்தற்கு நன்றி 1 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சுமந்திரன் சொல்லாமல் வேறுவிதமாக பதில் சொல்லி தன்னை நல்ல வராக காட்ட முயல்கின்றார். 2 நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சு -ம வழங்காது விட்டால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும் . அதைவிட அவரை தொடர்ந்து பேச அனுமதிக்க விட கூடாது. 3 இந்த பேட்டியை பார்க்கும் புதிய கேள்விகள் கேட்கப்பட்ட இல்லை 4 இன்னும் நிறைய காத்திரமான கேள்விகளை கேட்டு இருகலாம் 5.இந்த பேட்டியை பார்க்கும் போது சு -ம தெரிவு செய்த கேள்விகளை தான் உங்களுடைய கேள்விகளாக கேட்டது போல இருந்தது . 6 ஒரு நெறியாளர் என்றால் பேட்டியளித்தவரிடம் எந்தவிதமான சமரசம் இல்லாமல் உங்களுக்கு சரி நினைத்ததை கேட்ட வேண்டும்.🎉🎉🎉🎉 @umepathyvalu926 இவர்களின் தூரநோக்கு அரசியல் சிந்தனை இல்லாமல் போனதால் இன்று திரிகோணமலை அம்பாறை போன்ற இடங்களில் பிரதிநிதித்துவம் பறிபோகும் நிலையில் உள்ளது. @abicreations2130 இவ்வளவு காலமும் கிழித்தது கானும் நடையை கட்டு ராசா.. @thambysiva1217 புடுங்கின ஆணி எல்லாம் காணும் ,யாருக்கு கம்பு சுத்துறிங்க. @louiesbasti4606 தம்பி பூவன் நீர் பெரிய வீராப்பு கதைச்சிட்டு சுமந்திரனை நேரில் கண்டதும் பம்மிற மாதிரி இருக்கே? ஏன் மக்களின் கேள்விகளை நாகரீகமான முறையில் கேட்க என்ன தயக்கம் இதைப்பார்த்தால் நேர்காணல் நேர்காணல்மாதிரி தெரியவில்லை சுமந்திரனுக்கு விளம்பரம் செய்தமாதிரி இருக்கு!! @selliahsooriyapragasam3325 சுமந்திரன் ஐயா அவர்களே ஏதோ உங்களின் முகத்தில் பயம் தெரிகிறது.. எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசியலில் நன்றாக கதைக்கக் கூடியவர் தான் ...ஆனால் இந்தத் தேர்தலில் வெல்லக் கூடியவர் அல்ல... @Thegodisbes அது என்ன திருகோணமலையில் சேர்ந்து போட்டியிட முடியும் மற்ற மாவட்டம் மட்டும் முடியாது எல்லாம் பதவியை தக்க வைப்பது தான் திட்டம் இவர்களை எல்லாம் நம்பவே கூடாது என்பதே உண்மை 💯💯💯💯 @Piratheep1985 கேள்வியும் பதிலும் இழுவையாக இருக்கு இருவரின் வீராப்பும் எங்கே போனது என்று மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். @keethanchalijegarajah5278 அண்ணா மன்னிக்கவும் உங்கள் கேள்வியில் தலம்பல் தெரிகிறது அவரை நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். அவரல்ல இவர் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை.இது நேரத்தை வீணடித்த பேட்டி @thiyathiya4435 தம்பி பூவன், ஏன் பதுங்கி பதுங்கி பயந்து கேள்விகளை கேட்கின்றீர்கள்? கெட்டவனிடம் பேசும் போது இன்னும் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். இல்லாது போனால் ஊடக துறையும் ஒரு நாள் அழிந்து போகும். இவ்வளவுதான் உங்கள் வீராப்பு? @sutharsundar2192 கூட்டாச்சியில் ஒன்றும் கிழிக்க முடியல இனிப்போய் கிழிப்பிகள் என்பது உருட்டு. நீர் ஆர் தலைவருக்கு கட்டளை இட உமது கட்சிப் பதவி என்ன ??? த. கட்சியில் பொதுக்குழு கூடி முடிவு எடுக்க எடுக்க முடியாத???? எல்லா தீர்மானங்களையும் மத்திய குழுவும் நீரும் தான் எடுப்பீர்கள்??? @sivakumaranutharsan2301
  10. அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂
  11. கவனம் இவர்களின் நோக்கம் தமிழர்களை மேலும் மேலும் பிரித்து சிதைப்பது. இன்னொன்றையும் கவனித்தீர்களோ தெரியவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றும் அவர்களுக்கு துரோகி தான். யார் மன்னித்தாலும்......
  12. வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். - Karunya -
  13. அடுத்ததொரு ஆட்சி கவிழ்ப்பு வந்தால் திருப்பியும் சிங்கன் ரணில்தான் ஜனாதிபதி. 🤣
  14. ஆசானின் தளத்தில் மீண்டும் எனது பதிவு வந்துள்ளது! குருதியெழும் பொழுது https://www.jeyamohan.in/203918/ “செந்நா வேங்கை” நாவல் படிக்க மூன்று மாதம் எடுத்தது. இது குருஷேத்திரம் நோக்கி படைகள் ஒருங்குவதும் முதல்நாள் போரைப் பற்றியும் சித்தரிக்கும் நாவல். அடுத்த நாவலான “திசைதேர் வெள்ளம்” பதினொரு நாட்களில், விடுமுறை எடுக்காமலேயே, படித்துமுடித்தேன்! பத்தாவது நாள் போருடன் இந்நாவல் நிறைவடைகின்றது. போர்களற்ற உலகை விரும்பும் எனக்குப் போர்களிலும் விதம்விதமாகக் கொல்வதிலும் உள்ள ஆர்வம் பயத்தை உருவாக்கியது. அதனால் ஒரு மாதத்திற்கு மேலாக அடுத்த நாவல்களைப் படிக்காமல் இருக்கின்றேன்! படித்து முடித்த “செந்நா வேங்கை”, “திசைதேர் வெள்ளம்” பற்றி நயப்புரை எழுதவேண்டும்!
  15. சவூதி அரேபியா, இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
  16. நல்ல பயனுள்ள செய்திகளை தருவதற்கு மாறாக சரி தவறு என்பதை தாண்டி ஒருவர் தனிப்பட்ட இவ்வாறான விடயங்களை பொது வெளியில் செய்தியாக்குவது விரும்பத்தக்கது அல்ல. தலைப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
  17. கோபம் வராமல் இருக்குமா...சுரேஸ் பிரேமச்சத்திரன் தொடர்ந்து சிறிலங்கா தேசியம் பேசாமல் த்மிழ்தேசியம் பேசிக்கொண்டிருந்தால்கோபம் வராமல் இருக்குமா
  18. கதிர்காமர் குடும்பம் பிரித்தானியா ஆட்சி காலத்திலிருந்து அரச சார்பாக வேலை செய்பவர்கள்...இவரது ச்கோதரர்கள் மற்றும் உறவினர்கள் கடற்படையில் உயர் அதிகாரிகளாக கடைமை புரிந்துள்ளார்கள் .. அமைச்சர் என்ற வகையில் தனது கடமையை செய்தார் ..அதை பாராட்ட வேண்டும் இனமத பேத‌மின்றி நாட்டுக்காக செயல் பட்டார்...மகிந்தா,பிள்ளையான் போன்றவர்கலுடன் ஒப்பிடும் பொழுது கதிர் உச்சத்தில் இருக்கின்றார்... நீங்கள் கூறுவது போல புலிக்காச்சல் பிடித்து இன்னும் மாறாமல் உச்சத்தில் இருப்பவர்களை விட கதிர்காமர் போன்ற நேரடி கடமை வீரர்கள் திறம்
  19. ஜனநாயக கூட்டணி எப்படியும் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஈழதமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காணும் கால கட்டம் நெருங்கி வருகிறது என்பதை நன்கறிந்த பக்கத்து வீட்டுக்காரியின் இந்த அட்டாக் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது. உள்நோக்கம் கொண்டது. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். வன்மையாக கண்டிக்கிறோம்.
  20. கட்டளை தளபதி @ரஞ்சித் 160 விமானங்கள் அணிவகுத்து சென்று ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சென்றுள்ளதாக அறிவித்துள்ளார். நானும் எங்கே அந்த 160 விமானங்கள் என தேடித் தேடிப்பார்த்தேன். கடைசியில் @ஏராளன் இணைத்துள்ள ஒரு படத்தில் எட்டு விமானங்கள் அணிவகுத்து செல்வதை பார்த்தேன். மிகுதி 152 இஸ்ரேலிய விமானங்கள் படம் எடுக்க முன்னரே ஈரான் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டன என நினைக்கின்றேன்.
  21. 👍.......... கோலியும், ரோகித்தும் 8, 17 என்று கூட்டுத்தொகை 8 ஆக வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அடித்து இருக்கின்றார்கள் போல.............🤣 அந்த நாட்களில் ஒரு புரளி இருந்தது. ஈராக் உதைபந்தாட்ட அணி போட்டிகளில் தோற்றால், சதாமின் மகன் உதய் அந்த அணி வீரர்களை இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடுவாராம் என்று.......... இப்ப ஜெய் ஷா அந்தச் சங்கிலிகளை தேடிக் கொண்டிருப்பார் போல........
  22. 👍.......... இந்த தோல்விக்கு பின்னால் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒரு சில உலக நாடுகளின் சதி இருக்கின்றது என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் இப்போது சொல்வதற்கில்லை.......... இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள்....... எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்கின்றேன். வேண்டும் என்றால் அந்த சில உலக நாடுகள் இங்கு வந்து இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுக்கட்டும்...........🤣........(உபயம்: உதய கம்மன்பில).
  23. ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர வீரர்கள் தான்....
  24. முடிந்தால்; தமிழ்தேசியக்கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று சவால் விட்டு விக்கினேஸ்வரனை விரட்டியது யார்? அவர் பதவி விலகவேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது யார்? அவர் சாராயக்கடைக்கு அனுமதி பெற்ற போது ரணிலுக்கு பின்னால சுற்றிய தனிமையில் பேசிய இவர் ஏன் அதை தடுக்கவில்லை? சிறீதரனை பதவியை ஏற்கச்சொல்ல இவர் யார்? கட்சியின் தலைவரா இவர்? அப்போ ஏன் தமிழரசுக்கட்சி நீதிமன்றத்திற்கு போனது? இவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தால் வீடு அமைதியாக இருந்திருக்கும். எல்லோரையும் விரட்டி விட்டு தான் ஆட்சி செய்கிறார். வடக்கின் வசந்தம், தனது சிபாரிசில் எடுத்த திட்டம், ஆரம்பிக்கப்பட்ட திட்டம், என்று சொல்லிக்கொண்டு போனார். இவரோ, நான் அரசியல் திட்ட வரைபை செய்தவன், ஆகவே நான் பாராளுமன்றம் போக வேண்டுமாம். திட்ட வரைபை செய்தேன் என்று இவர் சொல்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லவில்லை. அதோடு முன்னைய அரசாங்கம் செய்ததோ இல்லையோ அதற்கு அனுரா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதை தமது கட்சியுடன் பேசி ஏனைய சிங்கள கட்சிகளும் அனுமதித்தால் மாத்திரமே நடைபெறும். இவர் அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமும் ஒட்டியிருந்த அரசாங்கங்களால் செய்விக்க முடியவில்லை, இனி அனுராவை கொண்டு செய்விக்கப்போறாராம். அதற்கு இவர் பாராளுமன்றம் போக வேண்டுமே? அப்படித்தான் போனாலும் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. முயல் பிடிக்கிறதின் மூஞ்சியை பாத்தாலே புரியுமாம். இவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது, வலிந்து சிரிக்க முயற்சிக்கிறார், அத்தனை வஞ்சகம். "அகத்தின் அழகு முகத்திற் தெரியுது."
  25. அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ 16 போர் விமான‌ங்க‌ள் இத் தாக்குத‌லுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கின‌ம் ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இந்த‌ விமான‌ தாக்குத‌ல் இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல் இவ‌ர்க‌ளின் குண்டுக‌ளை வானில் வைத்தே ஈரான் த‌க‌ர்த்து விட்ட‌து ஈரானுக்கு பெரிய‌ இழ‌ப்பு என்றால் ச‌ட்லையிட் மூல‌ம் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை வெளியிட‌லாமே................... ப‌கையாளிய‌ கூட‌ ந‌ம்ப‌லாம் அமெரிக்காவை ந‌ம்ப‌ முடியாது நெத்தனியாகு போர் குற்ற‌வாளி என்று தெரிந்தும் நெத்த‌னியாகுவை அமெரிக்கா தொட‌ர்ந்து காப்பாற்றுது நெத்த‌னியாகு க‌ழிவ‌றைக்கு போனால் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌தே அமெரிக்கா தான் தாத்தா😁.......................................
  26. மிகவும் பாராட்டத்தக்க செயல். இது எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கட்டும்.
  27. இன்றைய சூழலில் நாட்டுக்கு மிகவும் அவசியமான செயல் . .........பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ...........! 🙏
  28. இவருக்கு மஸ்க் என்று வைத்ததற்கு பதில் மக்கு என்று வைத்திருக்கலாம்
  29. நல்ல விடயம். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி காலையில் ஒரு நல்ல செய்தி.நல்ல விடயம். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி
  30. 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)3 28) வன்னி தேசிய மக்கள் சக்தி 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி 4 30)திருமலை தேசிய மக்கள் சக்தி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 1 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 2 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 2 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
  31. நான் வாசித்த செய்திகளின் படி, தாக்கப்படக்கூடிய இலக்குகள் பற்றிய விபரங்கள் கசியவில்லை. எந்த வகையான ஆயுதங்கள்/ தூர இருந்தே தாக்க கூடிய Air-launched Ballistic Missile (ALBM) systems ஏவுகணைகள் பற்றிய high-level தகவல்கள் மாத்திரமே கசிய விடப்பட்டன. இத் தகவல்களும் இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அல்ல. அமெரிக்க புலநாய்வு பிரிவுகளால் இஸ்ரேல் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள் என நினைக்கிறேன். எவ்வளவு தான் இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக இருப்பினும், இஸ்ரேலை கூட வேவு பார்க்கின்றது அமெரிக்கா. https://www.bbc.com/news/articles/cz6w6p8x7p8o
  32. காட்டுக்குள் ஓடி ஒளிந்த அரசியல் வாதியை பிடித்தார்களா இல்லையா ? அவர்களை இவர்களால் பிடிக்கவே முடியாது 😄 வெல்லும் வரையில் தான் வலது இடது வென்றால் இடதுமில்லை வளதுமில்லை காரணம் ஏற்கனவே உள்ள அரசியல் வாதிகள் இந்த தீவை பல நாடுகளிடம் அடகு வைத்து விட்டார்கள் தங்களின் சுய லாபங்களுக்கு இந்த உண்மையை அங்குள்ள மக்கள் உணரனும் இன துவேசம் அற்று ஆனால் அது நடக்குற காரியமா ?
  33. முன்னரும் ஒன்று கொடுத்ததாகக் கேள்வி..அதை விற்று ..கடன் கட்டினவையோ....அல்ல்து காயலான் கடைக்கு போட்டு விட்டினமோ..
  34. "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை. இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.
  35. தமிழர்களுக்கெதிரான யுத்தத்தின் புலநாய்வு வலையமைப்பை உருவாக்கிக் கொடுத்த இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள் அன்றிரவு கொழும்பில் தன்னிடம் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்து வேர்னன் வோல்ட்டர்ஸ் தப்பிக்க எத்தனித்தார். ஜெயாருடனான தனது பேச்சுக்கள் குறித்த இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளைச் சற்றும் கணக்கில் எடுக்காத வோல்ட்டர்ஸ், தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பார்த்தசராதியின் முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இலங்கை ஜனாதிபதி இனப்பிரச்சினையினை தீர்த்துக்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் கைவசம் கொண்டிருந்தார் என்றும் காட்டமாகக் கூறினார். திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுக்கப்போகிறீர்களா? என்கிற கேள்விக்கும், நான் திருகோணமலைப் பக்கமே போகப்போவதில்லை, ஆனால் இலங்கை மக்களின் சரித்திரம் பற்றி அறிந்துகொள்ள கண்டிக்குச் சென்றிருந்தேன் என்று கூறினார். ஆனால் திருகோணமலை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயாருடன் பேசியிருந்தார். அத்துடன் அமெரிக்காவின் வானொலி நிலையத்திற்கான ஜெயாரின் சம்மதத்தையும் கையொப்பத்துடன் அவர் பெற்றுக்கொண்டார். இதற்கான பத்திரங்களை அவர் அமெரிக்காவிலிருந்து தயாரித்த்துக் கொண்டு வந்திருந்தார். மூன்றாவதாக வோல்ட்டர்ஸ் ஒரு விடயத்தையும் நிறைவேற்றிக்கொண்டார். அதுதான் இலங்கையில் இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவது. அதற்கும் ஜெயார் சம்மதம் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான தனது யுத்தத்திற்கு அமெரிக்காவின் சாதகமான நிலைப்பாட்டு மாற்றத்தினால் மிகுந்த உற்சாகமடைந்த ஜெயார் தனது இராணுவ ரீதியிலான தீர்வினை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலானார். தனது இராணுவத்தினருக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேலிய மொசாட் அதிகாரிகளை ஐரோப்பாவில் சந்திக்க தனது மந்திரிசபைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்கவை ஜெயார் அனுப்பி வைத்தார். அம்மாத இறுதியில் இஸ்ரேலிற்கும், இலங்கைக்குமான இராணுவ உதவிகளுக்கான ஒப்பந்தம் ஐ நா சபை அமர்வுகளுக்காக ஜெயாரின் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்டது. இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தைமாதத்தில் இஸ்ரேலுடன் தமது அரசாங்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திவருவதாக ஜெயார் சபையில் அறிவித்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான மொகம்மட்டும், ஹமீதும் அதற்கு தமது ஆட்சேபணையினை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தை இலங்கை வழங்குவது குறித்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு தாம் வழங்கிவந்த நிதியுதவியினை சவுதி அரேபியாவும் குவைத்தும் நிறுத்திக்கொண்டன. உள்நாட்டில் முஸ்லீம்களால் ஏற்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மிக இலகுவாக ஜெயாரினால் நசுக்க முடிந்தபோதும், இந்தியாவையும், ஏனைய முஸ்லீம் நாடுகளையும் அவரால் உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆகவே வேறு வழியின்றி இஸ்ரேலுக்கான முழுத் தூதரக அந்தஸ்த்தினை வழங்குவதென்ற தனது உடன்பாட்டில் இருந்து பின்வாங்கிய ஜெயார், கொழும்பில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்திற்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு எனும் அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதியளித்தார். இஸ்ரேலிய நலன் காக்கும் அலுவலகம் வைகாசி 1984 இல் உருவாக்கப்பட்டது. அதனது முதலவாது அதிகாரியாக டேவிட் மட்நாய் நியமிக்கப்பட்டார். ஆவணி 1984 இல் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் ஆறு அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்களின் வழிநடத்துதலில் தமிழர்களுக்கெதிரான உளவு வலையமைப்பை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொண்டது.
  36. அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.
  37. ஐந்து கண்கள் தீயா வேலை செய்கின்றன இலங்கையில் .....இதில இடதுசாரிகள் ஆட்சியில் ...
  38. கண்ணீரின் கதைகள்.... புனைவென்றெண்ணினும் எங்கேனும் நடந்திருக்கக்கூடும்!
  39. சுமந்திரன்... சிங்களத்துக்கு ஆற்றும் சேவையை வைத்து, ஊரில் உள்ளவர்களும், யாழ் களத்தில் உள்ளவர்களும் 10 வருடத்துக்கு முன்பே.. அவரை.. சின்னக் கதிர்காமர் என்று கணித்த கணிப்பு... 100 வீதம் பலிக்கப் போகுது. 🤣
  40. முதலில்... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேணுமே. 😎 கட்டுக்காசு கூட... சுமந்திரனுக்கு கிடைக்குமோ என்ற திரிசங்கு நிலையில்.. அமைச்சர் பதவி எல்லாம்... எட்டாக் கனியே. அப்படி சுமந்திரன்... பின் கதவால் வந்து பாராளுமன்றம் போனால் மட்டுமே, சின்னக் கதிர்காமர்... சுமந்திரனின் வாழ் நாள் கனவு நிறைவேறும். 😂
  41. அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்
  42. முதல்நாள் சமாதானம் பற்றியும், இரண்டாம் நாள் போரின் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளில் ஈடுபட்ட ஜெயவர்த்தன‌ மலையக மக்களை சட்டத்திற்குப் புறம்பாக எல்லையோரங்களில் தமிழர்கள் குடியேற்றிபவருகிறார்கள் என்கிற விசமத்தனமான அறிக்கையினை அரசாங்க‌த்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் எதிர்த்தார்கள். இதற்கெதிராக தொண்டைமான் காட்டமான அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், அமைச்சர் தேவநாயகம் மறுநாளான 18, ஐப்பசி 1983 இல் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினையும் கூட்டியிருந்தார். தொண்டைமானின் அறிக்கை தொடர்பாகவும், தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் மாநாடு தொடர்பாகவும் டெயிலி நியூஸிற்காக நான் செய்திகளை தயாரித்திருந்தேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களும் பலநூற்றுக்கணக்கான நாடற்ற மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றிவருவதாக அறிக்கைகள் வெளிவந்ததை தொண்டைமான் கடுமையாகச் சாடியிருந்தார். சிங்களப்பகுதிகளில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்கள் மீது 1977 ஆம் ஆண்டு சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக் கிழக்கிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவருவதாக அவர் கூறினார். மேலும், அக்காலப்பகுதியில் தான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்த தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எக்கட்டத்திலும் மலையகத் தமிழர்களை வடக்குக் கிழக்கில் குடியேற்றுவதில் பங்கெடுத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தமிழ் அகதிகளை அரசு சாரா அமைப்புக்களே பராமரித்து வருவதனால் அவர்களுக்கு தனது நன்றியையும் தொண்டைமான் தெரிவித்தார். அண்மையில் காந்தியம் பண்ணைகளில் இருந்து மலையகத் தமிழர்களை அடாத்தாக அரசாங்கம் விரட்டியடித்தமை மனித நேயத்திற்குப் புறம்பான செயல் என்றும் கண்டித்தார். அரசாங்கத்தின் கொள்கைக்குப் புறம்பாகச் சென்று மக்களைக் குடியேற்றுவதில் அதிகாரிகள் கடைப்பிடித்துவரும் போக்கு தவறானது என்றும் அவர் கண்டித்தார். மலையகத் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்குப் பதிலாக அவர்களை வேண்டப்படதாகவர்களைப் போன்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகள் நடத்திவருவதாக அவர் விமர்சித்தார். மேலும் காந்தியம் பண்ணைகளில் இருந்த மலையகத் தமிழர்களை இராணுவத்தினரும், பொலீஸாரும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே விரட்டியடித்தார்கள் என்றும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார். தேவநாயகம் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழரின் தாயகத்தில் எந்தப் பகுதியிலும் மலையக மக்களை மனிதக் காப்புச் சுவர்களாக தமிழர்களோ அரசியட் கட்சிகளோ குடியேற்றவில்லை என்று, இதுகுறித்து வந்தபத்திரிக்கை அறிக்கைகளைத் திட்டவட்டமாக மறுத்தார். சண் பத்திரிக்கையில் விசமத்தனமாக வெளியிடப்பட்ட அறிக்கையினை பொறுப்பற்ற ஊடக தர்மம் என்று கடிந்துகொண்ட அவர், சர்வதேசத்தில் மதிப்பிற்குரிய அமைப்பாக இயங்கும் அரசு சாரா அமைப்பொன்றின்மீது வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுவென்றும் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் மலையகத் தமிழர்கள் குடியேறுவதை சட்டத்திற்கு முரணான குடியேற்றம் என்று கூப்பாடு போடும் தெற்கின் பத்திரிக்கைகள், கிழக்கின் மாதுரு ஓயாப் பகுதியில் தமிழரின் நிலங்களில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவதை, அங்கு நடைபெற்றுவரும் நில அபகரிப்பை ஒருபோதும் கண்டிப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது தொகுதியான கல்க்குடாவில் நிகழ்த்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து அதனைக் காப்பற்ற தனது ச‌க அமைச்சர்களோடு முரண்படும் போக்கினை தேவநாயகம் கொண்டிருந்தார். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் தேவநாயகத்தின் கல்க்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. காமிணி திசாநாயக்க தமிழ் அமைச்சர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுகுறித்து மோதுவதென்று முடிவெடுத்தார். தனது தொகுதியான நுவரெலியாவில் இருந்தே தொண்டைமானும் தெரிவுசெய்யப்பட்டு வருவதால், அவரை தனது அரசியல் எதிரியாகக் கணித்தே காமிணி தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆகவே, தொண்டைமான் தனது மலையக மக்களின் நலன்கள் குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக் குறித்து தொண்டைமானுக்கு அக்கறையில்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களாக மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமைச்சர் தேவநாயகத்தின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க தனது ஊடக நண்பர்களான சண் பத்திரிக்கையை காமிணி நாடினார். மறுநாள் (19/10/1983) வெளிவந்த சண் பத்திரிக்கைச் செய்தியில் மாதுரு ஓயா குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பிரஜைகளான மக்கள் அரசாங்கத்திற்கு முறைப்படி வரிகட்டும் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வவுனியாவில் குடியேற்றப்பட்டு வரும் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் என்றும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது. மாதுரு ஓயாவில் குடியேறும் சிங்களவர்களை இலங்கையின் பிரஜைகள் என்று குறிப்பிட்டதன் ஊடாக சிங்களவர்கள் இந்த நாட்டில் எப்பகுதியிலும் குடியேறும் உரிமையினைக் கொண்டிருப்பதாக காமிணி திசாநாயக்கவினால் சண் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி கூறியிருந்தது. தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களின் கவலைகளை ஜெயவர்த்தன உதாசீனம் செய்தார். மலையகத் தமிழர்களை காந்தியம் பண்ணைகளில் இருந்து அடித்துவிரட்டுவது எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அவர் உறுதிபூண்டார். அமெரிக்க அதிபர் ரீகனின் தொடர்பாடலதிகாரியான வேர்னன் வோல்ட்டார்ஸ் ஊடாக இஸ்ரேலியர்களுடனான தொடர்பினை தனது மகன் ரவியின் மூலம் ஜெயவர்த்தன ஏற்படுத்திக்கொண்டார். கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த வேர்னன் வோல்ட்டர்ஸ் மறுநாள் 8 ஆம் திகதி ஜெயவர்த்தனவுடன் நீண்டநேரம் பேச்சுக்களில் ஈடுபட்டார். பேச்சு முழுதும் இஸ்ரேலினூடாக இராணுவ உதவிகளை இலங்கைக்கு எப்படிப் பெற்றுக்கொடுப்பது என்பதாகவே இருந்தது. இப்பேச்சுக்களில் லலித் அதுலத் முதலியும், ரவி ஜெயவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்தனர். அதேவேளை ஜெயாரின் அழைப்பின்பேரில் கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பு வந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பார்த்தசாரதி ஜெயாருடன் சமாதான முயற்சிகள் குறித்து நீண்ட பேச்சுக்களில் ஈடுபட்டார். அதேவேளை இஸ்ரேலியர்களின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி முற்றாக அழித்துவிடுவது என்பதுபற்றிய பேச்சுக்களிலும் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்று தான் முன்வைத்த தீர்வினை எப்படி மெருகூட்டுவது என்று பார்த்தசாரதியிடம் விளக்கிய ஜெயார், இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைக்கலாம் என்றும் பேசினார். முதல்நாளில் சமாதானம் குறித்தும், அடுத்த நாளில் போரில் தமிழர்களை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது குறித்தும் பேசுமொரு ஜனாதிபதியை நம்பி தமிழர்கள் எப்படிப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான பாலக்குமார் சென்னையில் கார்த்திகை 9 ஆம் திகதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கேள்வியெழுப்பியிருந்தார்.
  43. பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
  44. பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று வேண்டுகின்றேன்!
  45. பாஞ்ச் அண்ணையின். துணைவியார். விரைவில் பூரணமாக சுகமடைந்து வீட்டை வந்து பழையபடி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் 🙏🙏🙏
  46. பாஞ்ச் ஐயா அவர்களின் துணைவியார் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.