Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10209
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    14676
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/31/24 in all areas

  1. தயவு செய்து மன்னிக்கவும்...இந்த போட்டி வினாக்கொத்து கிருபனிடமிருந்து பிரதி பண்ணிவிட்டு ...என்னுடைய சொந்த முயற்சியில் (அம்மாளாத்தையாணை) விடைகளை எழுதுனேன்....என்னுடைய இலங்கை பயணத்தில் கண்ட அனுபவத்தில் ..இதனை எழுதியுள்ளேன்...நான் இந்த படிவத்தை பிரதி பண்ணியது பிழையெனின் ..என்னை போட்டியில் இருந்து நீக்கி விடவும்..நன்றி கிருபன் சாருக்கு...போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த தமிழ்சிறி சாருக்கும் நன்றி
  2. தகவலுக்கு நன்றி ஜி. படம் ரொம்ப பழசு போல இருக்கு, இதை இப்பதானா தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்களா? அண்ணனுக்கு வெட்டுவதை வெட்டி இருந்தா லைக்காவுக்கு கொடுத்த ஆதரவை கொடுப்பாரே?
  3. அப்பழுக்கற்ற செல்லம் திரிஷாவ இங்கே தேவையில்லாமல் உதாரணம் காட்டியமைக்கு என் கண்டனங்கள்🤣
  4. சூம் சந்திப்பில் எல்லாத்தையும் பேசி முடிக்கலாம் என நினைக்கிறார் போல....இவங்கள் பாராளுமன்றம் வந்து என்னத்தை பெரிசா செய்யபோயினம்...சும்மா கையை தூக்குவதற்க்கு ஏன் வீணாக ஒர் கட்டிடம் என நினைக்கிறார் போல் ....அடுத்த முறை தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகையே தேவையில்லை .... சந்தியில் இருக்கும் டீ கடையில் சந்திக்கலாம் என சொன்னாலும் சொல்லுவார்..
  5. கொழும்பில் இருந்து கொண்டு கொழுப்பெடுத்து கஸினோக்களுக்கு செல்லாமல் ........ கிராமத்தில் இருந்து கொண்டு கிரமமாக மக்களுக்கு சேவை செய்யவும் என்று சொல்கின்றார் . .....! 😁
  6. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  7. இலங்கை காசுக்கு மூண்டு கோடி, மூண்டு கோடியில் இலங்கையில் இப்போ மூண்டுபரப்பு காணிகூட வாங்க முடியாது, இதை வைச்சு எப்படி இலங்கை முழுவதும் நிவாரணம் வழங்குறது? எனக்கு தெரிந்து சர்வதேச அளவில் ஒருநாடு இன்னொருநாட்டுக்கு செய்த ஆககுறைந்த நிதி உதவி இதுவாதானிருக்கும். பரவாயில்ல, எதுவா இருந்தாலும் உதவி உதவிதான், ஆனாலும் எது குடுத்தாலும் வாங்குவாங்கள் எண்டு தெரிஞ்சு கொடுப்பது எகத்தாளம்.
  8. அண்ணை அடிக்கடி கனடாவுக்கு போய் ஓட்டலில் சாப்பிட்டனான் என்று சொல்லியபோதே சந்தேகப்பட்டேன். 🤪
  9. இது "நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் செல்வதை தடுக்க சில புலம்பெயர்ஸ் விசமிகளால் பரப்படும் செய்தி ....திட்டமிட்ட சதி ...இந்தியாவின் பின்புலமும் இதில் உண்டு.... ஆனால் நாம்"நல்ல புலம்பெயர்ஸ்" தாயகம் சென்று சிறிலங்காவின் பொருளாதரத்தை நாம் வாழும் புலம் பெயர் நாட்டுக்கு சமனாகவோ அல்லது அதற்கு மேலாகவோ கொண்டு வருவோம் ..இது தோழர் ,அதி உத்தம ஏக்கராஜ்ஜ ஜனாதிபதி அனுரா மீது நாம் எடுக்கும் சத்திய பிரமானம்... இப்படிக்கு "நல்ல புலம்பெயர்ஸ் ஏ.கே.டி தோழர்கள் தேசிய கூட்டமைப்பு" 😅
  10. சரிவிடுங்க பெரிசு, பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று சொன்ன லெனினின் நாட்டுடன் நெருங்கிய பொருளாதார ராணுவ தொடர்பெல்லாம் வைச்சிருந்திருக்கிறீங்க, அடிக்கடி கை குலுக்கி இருக்கிறீங்க அந்த பன்றி தொழுவத்தில் ஜனாதிபதி பிரதமர், அமைச்சர் என்றெல்லாம் பதவி வகிச்சிருக்கீங்க, அப்போ வராத அசிங்கமா இப்போ வந்துட போகுது?
  11. இதை தானே நாங்களும் சொல்லுறம் ஊர் கட்டமைப்புக்களை பலமாக்கி ஆட்சியை செய்தால் சிறப்பாக இருக்கும்.. தோழர் டக்கிளசும் இதை தானே 30 வருடமா சொல்லுறார் மாகாணத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று உங்கன்ட ஆட்கள் கண்டு கொள்ளவில்லையே
  12. கவனித்தேன்! ”ல” வுக்கு கால் போட்டு குழப்பியிருக்கின்றார் @கந்தப்பு😜 ஆனால் எனது பதில்கள் ஒரு தேர்தல் மாவட்டத்தில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் உள்ளது😁 @alvayan ஐப் போல ஊருக்குப் போகவும் இல்லை! கீழேயுள்ள பதிவை முன்னரே பார்க்கவும் இல்லை! பார்த்திருந்தால் தமிழரசுக் கட்சியை🏠 கீழே இறக்கி திசைகாட்டியை 🧭 மேலே ஏற்றியிருப்பேன்🙃 ——- அரசியல் அப்டேட்! தமிழரசு கட்சியின் நிலமை படு மோசம். பிரச்சாரத்திற்கு போகும் வேட்பாளர்கள் பல இடங்களில் மோசமாக திட்டு வாங்குவது அதிகரித்து வருகிறது. சைக்கிள் ஒரு தளம்பல் நிலையில் உள்ளது. பெரியளவு மக்கள் அலை இல்லாது விட்டாலும் களத்திலே எதிர்ப்பு குறைவான கட்சியாக சைக்கிள் உள்ளது. இன்னும் கணிசமான மக்கள் சைக்கிளா , திசைகாட்டியா என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் எடுக்கப்போகும் முடிவுதான் இறுதி ஆசனங்களை முடிவு செய்யும். சங்கு சித்தார்த்தனுக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவாளர்களோடு மட்டும் தடுமாறுகிறது. புதிய தலைமுறை சங்கு மற்றும் மாம்பழத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மான் : நிலமை கஷ்டமாகி வருகிறது. திசைகாட்டி கணிசமான ஆதரவு பெருகியுள்ளது. தலைமை வேட்பாளரின் பொறுப்பற்ற பதில்கள் , 2k கிட்ஸ் போல் அடிப்படை பிரச்சினையே தெரியாமல் முகநூல் போஸ்டை வைத்து அரசியல் பேசும் குழந்தைப்புள்ள தனம் மான் ஒரு சீட்டும் சைக்கிள் 3 சீட்டும் பெறும் நிலையை உருவாக்கலாம். கணிசமான மக்கள் இன்னும் தளம்பல் நிலையிலேயே உள்ளனர். வீணை பாரம்பரிய வாக்களர்களுடன் ஒரு ஆசனத்துக்கான போடீடியில் இன்னும் உள்ளது. இன்று லீக் ஆன ஓடியோவால் ஊசி கட்சிக்கு பாரிய பின்னடைவு வரலாம். https://www.facebook.com/share/p/qkAvbaGNRnnGhyBd/?mibextid=WC7FNe
  13. கிருபன் ஜீ யும் பருத்தித்துறை, சுமந்திரனும் பருத்தித்துறை. 😍 ஊர்ப் பாசத்தில் சுமந்திரன் வெல்வார் என்று போட்டு வீணாக ஒரு புள்ளியை இழக்கப் போகின்றார். 😂 சுமந்திரன் பாராளுமன்றம் போவார்✔️. ஆனால் மக்கள் வாக்களித்து நேரடியாக பாராளுமன்றம் போக முடியாமல்... சுமந்திரன் பின் கதவால், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகக் கூடிய நிலைமையே தற்போது உள்ளது என கருதுகின்றேன். 🤣 கந்தப்புவின் கேள்வியும்... நேரடியாக பாராளுமன்றம் போகின்றவர்களை பற்றித்தான் அமைந்துள்ளது. அதனை கவனித்தீர்களோ தெரியவில்லை.
  14. (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன்றத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நூறுவீதம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். நூற்றுக்கு 42வீதம் உள்ளவருக்கு நூற்றுக்கு நூறுவீதம் எவ்வாறு வழங்க முடியும். அநுரகுமார எங்கு கணிதம் கற்றார் என எனக்கு தெரியாது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ் நாடுகள் தேர்தல் நடத்தின. எதிர்க்கட்சியை நீக்கிவிட்டு தங்களின் பங்கை அதிகரித்துக்கொண்டார்கள். அவ்வாறான முறையை எங்களுக்கு செய்ய முடியாது. நூற்றுக்கு 42 வீதம் என்றால் அந்த கணக்குதான் அதனைவிட குறைந்தாலும் அதிகரிக்கப்போவதில்லை. எமது நாட்டின் அரசியலமைப்பின் மூன்றாம் நான்காம் உறுப்புரையின் கீழ் இறையாண்மை இருப்பது மக்களுக்காகும். வாக்கு அதிகாரம் அதில் ஒரு பகுதி. ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குரிமையை பெற்றுக்கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களித்த பின்னர், மூன்று விருப்பு வாக்கு இருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இந்த முறைமை இருக்கிறது. ஆனால் திசைகாட்டி சொலவது என்ன? கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவிக்கிறார்கள். ஆனால் விருப்பு வாக்கு தொடர்பில் எதுவும் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக தெரிவிப்பது, கட்சியை தெரிவு செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம். வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை டில்வின் சில்வாவுக்கும் அரசியல் சபைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள். இது ஜனநாயகமா? வேட்பாளரை தெரிவு செய்யும் மக்கள் ஆணையை டில்வின் சில்வா எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும். பாராளுமன்றத்துக்கு சென்று தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முடியுமான நபர்கள் தொடர்பில் மக்களுக்கே தெரியும். அத்துடன் பாராளுமன்றம் திருடர்களின் குகை என்கிறார்கள். அவ்வாறு தெரிவிப்பதற்கு அநுரகுமாரவுக்கு உரிமை வழங்கியது யார்.? அவர்களின் வீதம் நூற்றுக்கு 42 வீதமாகும். பாராளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாக நூற்றுக்கு 58 வீதமான மக்கள் தெரிவிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கை வைப்பதற்கு திசைகாட்டிக்கு இருக்கும் உரிமை என்ன? ஜனாதிபதியை நிர்வகிப்பது பாராளுமன்றமாகும். அவ்வாறான ஒரு இடத்தை திருடர்களின் குகை என ஜனாதிபதி எவ்வாறு தெரிவிக்க முடியும். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு எதிராக காவிந்த ஜயவர்த்தன பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் ஓகஸ்ட் 31ஆம் திகதி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்தார். இவர் திருடரா இல்லையா? என்பதை வழக்கு மூலம் முடிவு செய்ய வேண்டும். கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் எமக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியும் என்றே நாங்கள் தெரிவித்தோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இந்த விவாதத்தை நடத்தலாம் என்று கூறியிருந்தோம். அது சட்ட ரீதியிலான முறையாகும். ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றால் பாராளுமன்றம் அந்த தீர்ப்புக்கு அமையவே நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு மத்தியில் சட்டமா அதிபர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். யாருக்கு எதிராக வழக்கு தொடுத்தீர்கள் என எனக்கு கேட்டிருக்கலாம். ஆனால் நான் எதுவும் செய்ய முற்படவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளை நீக்குவதாக தெரிவிக்கிறார்கள். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இருப்பது அரச வீட்டில் அல்ல. இவர்கள் தெரிவிப்பது போல் எனது கஜு சாப்பாடு, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கிய 16 குடைகளை வழங்குவதை நிறுத்துவது போன்ற விடயங்களால் 120 கோடி மீதமாகி இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் எதற்காக முற்படுகிறார்கள்? அவரின் கனவரை கொலை செய்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் சிறப்புரிமைகளை அவ்வாறே வழங்குங்கள். எனது விடயங்களை நீக்கிவிடுங்கள். பாராளுமன்றத்துக்கு கை வைப்பதற்கு செல்ல வேண்டாம் என்றே நான் தெரிவிக்கிறேன். அவ்வாறு செயவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே இந்த பாராளுமன்ற முறையை பாதுகாக்க முடியும். எமது முறைமையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பழையவர்களும் இருக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/197604
  15. சீ சீ அவருடன் படித்தனான் என சொல்லி மாட்டுப்பட விருப்பமில்லை 😅ஆனால் ஒன்றாக அனுராபுரத்தில் பிரச்சாரம் செய்தனாங்கள்...அவரின்ட வீட்டில கிளிதட்டு விளையாடின ஞாபகம் இருக்கு 😅
  16. புத்தா எனக்கொரு சந்தேகம். நீங்களும் @ரசோதரன் மாதிரி அனுராவோடு ஒரே வகுப்பில் படித்தீர்களோ?
  17. பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில் இதையும் அந்தாளிடம் சொல்லுங்க..தேசியப் பட்டியல் மூலம் எம்பியாகி ..இனி சனாதிபதியாக் முடியாதென்று...அந்தப் பதவிக்கு நம்ம சும்மு ..வெயிட்டிங் லிஸ்டிலை இருக்காரெண்டு....😛
  18. இங்கு குரங்குகள் விவசாயத்துக்கு எவளவு பாதிப்பை ஏற்ப்படுத்திகிறது என்பதை அறியாதோர் தான் எதிர்ப்பு தெரிவத்தவர்கள். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.
  19. சில காலத்திற்கு முன் சீனாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு வகை குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று வந்தது. சீனர்கள் அந்தக் குரங்குகளை கொல்லப் போகின்றார்கள் என்று எதிர்ப்புகளும் எழுதப்பட்டது........... ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிகச் சிறந்தவற்றை சீனர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் போல................
  20. பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார் பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் ???????
  21. சொல்லிச் செய்வார் சிறியார் சொல்லாமலே செய்வார் பெரியார். தம்பிக்கு விளங்கினால் சரி.
  22. அதாவது தமிழர்களுக்கு நடுவிலே வாழ்ந்து வியாபாரம் கல்வி வேலை வாய்ப்பு என்று மீண்டும் தமது இருத்தலை உறுதிபடுத்திக்கொண்டாலும் போர்க்கால நிலைகளில் அனைத்து இனத்திற்கும் கசப்பான அனுபவங்கள் தவிர்க்க முடியாமலே உண்டு, ஆனால் முஸ்லீம்கள் மட்டும் பழசை கிளறி கிளறி தமிழர்களுடன் வன்மம் வளர்க்க சொல்லி தமது அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களாம். நாலாயிரம் ராஜநாகங்களுக்கு இடையிலும் மனிதன் வாழ்க்கை நடத்திட்டு போகலாம் நானூறு இஸ்லாமியர்களுடன் ஒன்று சேர்ந்து பிற இனம் வாழ்வதென்பது கையால விசுக்கி காட்டு தீயை அணைப்பதுபோலத்தான் சாத்தியமே இல்லாதது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றம்பற்றி புத்தளம் மட்டக்களப்பில்தான் கிளறி கிளறி வன்மம் வளர்த்தார்கள், இப்போ அவர்களுக்கு எல்லாமே சுமுகத்திற்கு வந்த பின்னரும், 90%க்கு மேற்பட்ட தமிழர்களுடன் அனைத்துவழியிலும் படிப்படியாக வளர்ச்சியின் உச்சம் தொடும் யாழைப்பார்த்து வயித்தெரிச்சலில் யாழ்ப்பாணத்திலும் வன்மம் ஆரம்பிக்கிறார்கள். வன்மம் வளர்க்க தமது தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதே கூட்டத்தில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து தமிழர்களுடன் எப்படி சகோதரத்துவத்துடன் வாழவேண்டுமென்று தமது இந்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்திருந்தால் நாமும் சேர்ந்து இவர்களுக்கு தலை தடவிவிட தயங்கவே போவதில்லை. என்னமோ தமிழர்பகுதிக்குள் இவர்கள் இனி ஒருகாலமும் உள் நுழையமுடியாதபடி நிலமை இப்போதும் இருக்கு என்பதுபோல் இவர்களுக்காக அனுதாபப்பட்டு அச்சச்சோ முஸ்லிம்களை வெளியேற்றினது தவறு என்று பூனைக்கு தலையை தடவிவிடுவதுபோல் தடவிவிட்டு பரிதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில தமிழ் தலை தடவிவிடல் திலகங்களுக்காக ஆவது சரி சரி பழசை மறந்து சுமுகமா வாழ்வோம் என்று இஸ்லாமியர்கள் நினைக்கலாம் . ஒருபோது அதை செய்ய மாட்டார்கள். கிழக்கில் காத்தான்குடி உட்பட்ட சில பிரதேசங்களில் ஏறக்குறைய தனி இஸ்லாமியநாடுபோல் ஆக்கி வைத்திருப்பதையும் கல்முனை பிரதேசசபை விவகாரத்தில் இவர்கள் வளர்க்கும் தமிழர்களுக்கெதிரான விசமத்துக்கும் காரணம் இவர்கள்மீது தமிழர்கள் மேற்கொண்ட இன சுத்திகரிப்பா? 70% வீத தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் 30% வீத இஸ்லாமியர்கள் சுதந்திரமாக வாழலாம் , 70% இஸ்லாமியர்களுக்கு நடுவில் 30% தமிழர்கள் சுதந்திரமா செயற்பட முடியுமா? முடிந்தவரை 100% முஸ்லிம் பிரதேசமாக்கவே துடிப்பார்கள். இன சுத்திகரிப்பில் முன்னணியில் நிற்பவர்கள் யாரென்ற கேள்வியை இவர்களுக்காக பரிதாப படுகிறவர்களிடமே விட்டுவிடலாம்.
  23. செய்தி வடிவாக. வாசித்தீர்களா.?? அரசாங்கம் இலவசமாக வீடு கொடுக்கமாட்டாது கொழும்பில் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை வாடகைக்கு வீடு எடுத்து கொழும்பில் இருக்க கூடாதா?? அரச தனியார் உத்தியோகத்தர்கள் வாடகைக்கு இருக்கிறார்கள் இல்லையா?? இவர்களுக்கு மட்டும் ஒசி வீடு தேவையா?? இது வரவேற்கப்படுகின்றன… நல்ல முடிவு
  24. சம்பந்தன் குடுத்து வைச்ச மனிசன். எல்லா சுகபோகங்களையும் அனுபவிச்சு போட்டு பரலோகம் போய் சேர்ந்திட்டுது. 😎
  25. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  26. விஜைக்கும் ஸ்டாலின், சீமான் போன்றோருக்கும் உள்ள இன்னொரு வரவேற்க வேண்டிய வேறுபாடு. அரசியல் வாழ்க்கைக்காக குடும்ப உறுப்பினர்களை வைத்து பேஷன் ஷோ நடத்துவதில்லை. அதே போல் பலமாதங்களாக விஜை-சங்கீதா உறவு பற்றி ஊகம் பலவாறு பறந்த போதும் விஜை அலட்டி கொள்ளவில்லை. ஆனால் முரசொலி செல்வம் மரணத்துக்கு தன் சார்பில் அவரை அனுப்பி இருந்தார் என அறிகிறேன். சங்கீதாவோ, திரிசாவோ, எவரோ விஜயலச்சு அண்ணி மாதிரி பொது மேடை ஏறி புகார் கொடுக்காத வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் இப்போ திமுக எதையாவது கிண்டிவிட தலையால் மண் எடுப்பார்கள்🤣.
  27. ரணில்.... நைசாக, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் "மூமென்ட்". 😂
  28. உங்கள் பதில்கள் சைக்கிள் 🚲 சவாரியில் விருப்பமுள்ளவர் என்று காட்டுகின்றது! போட்டியில் பங்குபற்றியமைக்கு நன்றி பல! ஆனால் வெற்றி எனக்குத்தான்😄
  29. பெரும் அரசியல் சாணக்கியர்கள் எல்லாரும் ஜேர்மனியில்தான் வசிக்கின்றார்கள். 😂 இன்னும்... கலந்து கொள்வார்கள். 🤣
  30. அந்த வரலாற்றுத் தெளிவின்மை மூலம் தானே இந்த கோடிக்கணக்கான பணத்தை மற்றப்பக்கமாக நீவிர் வைத்திருக்கிறீர் ..? // கஜேந்திரகுமார் எவ்வளவு பங்கு LOLC இல் வைத்துள்ளார்கள் என்பதை ஒரு கூகிள் தேடுதல் மூலம் எடுக்கலாம். கீழே போட்டுள்ளேன். அவருக்கும் அவரது அம்மாவுக்கும் சேர்த்து 2 மில்லியன் பங்குகள் உள்ளன. ஒரு பங்கு Rs500. ஆகவே இவர்களுக்கு மாத்திரம் Rs 1 பில்லியன் (100 கோடி) பெறுமதியான பங்குகள் உள்ளன. https://stock.ideabeam.com/company/LOLC/shareholder-other?page=2et Outlook for Android // தெளிவிருந்திருந்தால் , வடகிழக்கில் மாத்திரம் முதலீடு செய்திருப்பீரே அண்ணாத்தை ..???
  31. பொல்லு கொடுத்ததே நீங்க தானே. மலட்டு சொத்துக்கு தான் எப்போதும் ஆசை.
  32. கஷ்டப்பட்டுத் தேடியும், மூளையைக் கசக்கிப் பிழிந்தும் பதில்களைக் கணித்திருக்கின்றேன்!😁 தேர்தலைப் பற்றிய எனது சொந்த அலசலை எழுதக்கூட நிறைய நேரம் எடுக்கவில்லை! கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் சேர் இம்முறையும் பாராளுமன்றம் செல்வார் எனக் கணித்தமையால் (எப்படி எனக் கேட்கக்கூடாது!) இந்தப் போட்டியில் எனக்குத்தான் வெற்றி😎 ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசுக் கட்சி இரண்டு இடங்கள் 28) வன்னி ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) இரண்டு இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி இரண்டு இடங்கள் 30)திருமலை தேசிய மக்கள் சக்தி இரண்டு இடங்கள் 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்கள் 32)நுவரெலியா புதிய ஜனநாயக முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி) மூன்று இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி நான்கு இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) ஒன்று 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) பூச்சியம் 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 40) ஊர்காவற்றுறை தமிழரசுக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னார் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை தமிழரசுக் கட்சி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) மூன்று 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) ஆறு 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்று 54)தமிழரசு கட்சி ஏழு 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) ஒன்று 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) ஐந்து 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 65 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 15
  33. இடைவெளியில் துபாயில் வைத்து எவ்வாறு கடத்தினார்கள்? இவர் துபாய் வரும் செய்தி எப்படி கிடைத்தது? அரச புலனாய்வு அமைப்புக்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல போலும்.
  34. அநுரவை வைச்சு செய்வீர்கள் என்று நினைத்தால், எல்லாரும் என்னை வைச்சு செய்யிறங்களே, இது நியாயமா................🤣. மார்க்கிஸிஸம், மரவள்ளிக் கிழங்கு தோட்டம் என்று போகாமல், அநுரவின் ஆட்சி நல்லாத்தானே ஆரம்பித்திருக்குது...........😜. ரணில் தான் 'நானும் ரௌடிதான் ..............' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். உனக்கு சட்டம் தெரியுமா, உனக்கு அரசியலமைப்பு தெரியுமா ............. இப்படியே இவர் கேட்டுக்கேட்டு ஒரு நாள் பக்கத்தில் நிற்கிற ஒரு ஆளை பாய்ந்து கடித்து விடப்போகின்றார்.............. இந்த நிலாம்டீன் தான் அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி இருக்குது, அதால தான் சனம் கூட்டமாக அள்ளுப்படுகின்றது என்று ஜனாதிபதி தேர்தலில் சொன்னவர்.......... இதைக் கேள்விப்பட்ட உண்மையான விஜய், அநுர வென்றவுடன், உடனே தனது கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தினார் என்பது வரலாறு..............😜.
  35. நானும் அப்படித்தான் நினைத்தேன் ...இந்த தகுதி போதும் தமிழ் தேசியராக இருப்பதற்கு 😅வாழ்க தமிழ் தேசியம் .. அவர் வ‌ட‌ மாகாண தேசியவாதி.😅...அவருடைய கட்சி பெயரில் மட்டுமே இன்னும் ஈழம் இருக்கின்றது ...என்ன வன்முறை அவருக்கு பிடிக்காது ஒர் ஜனநாயக வட மாகாண தேசியவாதி...
  36. சம்பந்தனும் மாவையும் இல்லையெண்டால்.... அந்த இடத்தை நிரப்ப அவையள் இரண்டு பேரும்.... டக்களஸ் அண்ணன் எப்ப தமிழர் பக்கம் நிண்டு கதைச்சிருக்கார்? 😁
  37. ஒற்றையாட்சிக்கு வாக்களித்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை ...இரு தேசத்திற்கு வாக்களித்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை.... , நாட்டின் மக்கள் எந்த ஜனாதியின் கீழ் எப்படி வாழ வேணும் என தீர்மாணிப்பது .. தேசிய இனங்கள் தேசிய அடையாளங்களுடன் வாழ்வது போன்ற விடயங்களை தீர்மானிப்பது வெளி நாட்டு சக்தி....
  38. புட்டினின் கருத்து என்னவென்றால்.....👇 நேட்டோ எனும் அமைப்பு உக்ரேன் எனும் பெயரில் ரஷ்யாவுடன் மோதுகின்றது. அதில் நூறு வீதம் உண்மையுள்ளது. ரஷ்யாவிற்கு ஐரோப்பாவை கையகப்படுத்தும் அவசியம் இல்லை.ரஷ்யா தன்னை உலகமயமாக்குதலுக்கும் முயற்சிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அதாவது பிரித்தானிய வம்சங்களுக்கு அவசியம் என்றால் அது எக்கச்சக்கம். கொள்ளையை கொள்கையாக கொண்ட நாடுகள்.👆 ரஷ்யா அப்படியில்லை. 🤝
  39. தோழர் அனுரவுக்கு எனது நட்பின் அடையாளமக உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பென்பதற்கிணங்க ஒரு இடுப்பு பட்டி எனது உபயம், 135 ஆசனங்கல் கிடைக்குமாம் என தேசிய புலனாய்வு கூறியிருக்காம் சுமோ, கஜேக்கு மொத்தமாக 15 கிடைக்குமாம், கூட்டணி அமைச்சால் 150 வருமாம், அதனால நான் உங்கள் நண்பர் (யாழ்கள உறவுகள் அனைவரும் நண்பர்களே) உங்கள் நண்பர் எனக்கும் நண்பர்தானே? அனுரவுக்கு மட்டும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சும்மும், கஜேயும் அந்த அணியில் இருப்பதால் ஒரு பாதுகாப்பிற்கு அந்த இடுப்பு பட்டி.
  40. விடியலுக்கில்லை தூரம்
  41. 72 பேர் வேணும் என்றால், நோவை பார்க்க ஏலாதுதானே. 😃 நோவுக்கு... Pain relief குளிசைகள் போட்டு சமாளிக்க ஏலாதா. 😂 பத்து நாள் தானே... பக்கெண்டு போயிடும். 🤣
  42. முன்னரெல்லாம் ஜேர்மனியில் அரசியல் முதிர்ச்சியும்,உலக அனுபவமும் உள்ளவர்கள் தான் அரசியல்வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். அவர்கள் பல உலக குழப்ப நிலைகளிலும் சகல நாடுகளுடனும் நல்ல உறவையே வைத்திருந்தார்கள்.வியாபார ரீதியிலும் எல்லா நாடுகளுடனும் சுமுக நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அரசியல்வாதிகள் சொந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் திணறுகின்றார்கள்.பல நாடுகளுடன் நல்லுறவும் இல்லை. அன்னலேனா பேர்பொக் சொல்லி வேலையில்லை.ஒரு முட்டாள்த்தனமான வெளிவிவகார அமைச்சர்.😂
  43. theeya, உண்மைதான். இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் இந்தியாவில் திரையிடப்படுவதில்லை என்ற உங்கள் கருத்து சரியானதுதான். உள்குத்தாகவும் இருக்கலாம். உள் நோக்கமாகவும் இருக்கலாம். சிறீமா காலத்தில் (எழுபதுகளில்) இந்தியத் திரைப்படங்கள் மட்டுப் படுத்தப்பட்டன. அப்பொழுது இலங்கைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் ஊடாகத்தான் இந்தியத் திரைப்படங்கள் வாங்கப்பட்டன. அவர்கள் தெரிவு செய்து வாங்கும் படங்களை மட்டுமே திரையிட முடியும். திரைப்படங்களின் தரங்கள், விலைகள் எல்லாம் கவனிக்கப்பட்டன. அதேநேரம் இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் இலங்கையில், நிர்மலா, குத்துவிளக்கு, கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன்… என்று பல தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவற்றுக்கு ஆதரவும் இருந்தன. ‘இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது’ என்று இந்தியா இலங்கையுடன் சேர்ந்து கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டது. பைலற் பிரேம்நாத், தீ, இரத்தத்தின் இரத்தம், நங்கூரம், மாமியார் வீடு….. என பல படங்கள் தயாராகின. பின்னர் போராட்டச் சூழலிலானாலும் ஜேஆரின் ஆட்சியில் இருந்த தாராளக் கொள்கையினாலும் நிலமை மாறி ‘பழைய குருடி’ கதையானது. இப்பொழுது இலங்கையில் வந்துள்ள ஆட்சி மாற்றத்தினால் ‘உள் நோக்கம்’ கூட இருக்கலாம். புலிகளை, போராட்டத்தை கொச்சைப் படுத்தி படம் இருப்பதால் ‘உள்குத்து’ ஆகவும் இருக்கலாம். அல்லது வடக்குப்பகுதி இந்தியாவுக்குள் வந்து விட்டது என்ற எண்ணமாகவும் கூட இருக்கலாம். ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் திரைப்படம் தமிழகத் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  44. மறுபடியும் வேதாளம் முருக்கம் மரம் ஏறுகிறது 😀 வாய்ப்பே இல்லை ராஜா . இனி அங்கு சுற்றுலா போவபவர்களுக்கு எச்சரிக்கை காலவதியான மருந்தும் காலவதியான உணவு பொருளுமே அங்கு இருக்கும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.