Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88824
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46977
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39344
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20355
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/03/24 in Posts

  1. போட்டியில் கலந்துகொள்ள பல யாழ்கள அரசியல் ஆர்வலர்கள் பின்னடிப்பது இந்தத் தேர்தல் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த😱 நிலையை உருவாக்கியிருக்கின்றது😜
  2. முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈
  3. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  4. உண்மை கிருபன்ஜீ. போட்டியில் கலந்து கொண்டு யாழ்களத்தைச் சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழசிறியின் அன்பு வேண்டு கோளைப் புறக்கணிக்க முடியாமலும் கை போன போக்கில் பதில்களை எழுதியுள்ளேன்.இந்தத் தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களை நினைத்தால் தலை சுத்துது.
  5. பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக எனக்குக் கிடைத்தது
  6. புலம்பெயர் தமிழர் என்று ஒரு இனம் இல்லாதிருந்தால் சிறிலங்கா கிட்டத்தட்ட எத்தியோப்பியா போன்ற நாடுகள் போல் பஞ்ச நிலைக்கு வந்திருக்கும்.
  7. விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.
  8. சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன் பயங்கர கெட்ட ஆள்.
  9. புலிகள் ஆட்சியில் இருந்த போது காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு.... இப்போது அவர்கள் இருந்தால் நல்லம் என்பது போல் உள்ளது.
  10. டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உலகம் அமைதியாக இருந்ததை மறந்த/மறைத்த வர்ணசித்திரம்.
  11. சுமந்திரனால்... குட்டிச் சுவரான தமிழரசு கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப கனகாலம் எடுக்கும் என்றாலும், சுமந்திரன் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியது காலத்தின் கட்டாயம். 🙂 நீங்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதில்... ஆம். ✔️ 😂
  12. தந்தை செல்வாவுக்கு பக்கத்தில்... சம்பந்தனை கொண்டு வந்து வைத்ததை பார்க்க சகிக்க முடியவில்லை. உந்த மூஞ்சையை பார்த்து, தமிழரசு கட்சிக்கு விழுகிற வாக்கும்... விழாமல் போகப் போகுது. சொந்த செலவிலை.. "சூனியம்" செய்யுறாங்கள்.
  13. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றி வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிபிசி பாரசீக டிஜிட்டல் குழு இந்த சம்பவம் நடந்த இடத்தை உறுதி செய்துள்ளது. டெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் பிளாக் 1 பகுதியில் இது நிகழ்ந்துள்ளது. பிபிசியைப் பொருத்தவரை, இந்த சம்பவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. சமூக ஊடகங்களில் வெளியான சில புகைப்படங்களில் இளம்பெண் உள்ளாடை அணிந்தபடி அலட்சியமாக வளாகத்தில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. வைரலான வீடியோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் இரான் மாணவி குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், உள்ளாடை அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பல்கலைக் கழகத்தின் ஆண் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த உரையாடலின் ஆடியோ வீடியோவில் கேட்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்த வீடியோ எங்கோ தொலைவில் உள்ள வகுப்பறை ஜன்னலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு வீடியோவில், இந்த பெண் பல்கலைக் கழக வளாகத்தின் பிளாக் ஒன்றின் அருகே சாலையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது. அந்தப் பெண் திடீரென தனது ஆடைகளை களைகிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்களின் எதிர்வினையும் இதை உறுதிப்படுத்துகிறது. சிறிது நேரத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் ஒரு கார் சம்பவ இடத்திற்கு வந்தது. காரில் இருந்து இறங்கிய பல அதிகாரிகள் அந்தப் பெண்ணை காருக்குள் ஏற்றிச் செல்வதை வீடியோவை காண முடிகிறது. சமூக ஊடகங்களில் எதிர்வினை இரானுக்கு வெளியே பல ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளில் இதனை, "அந்தப் பெண் தனது ஆடைகளை களைவதன் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறார்” என்று விவரித்தன. ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கும், பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தைக்கும் எதிரான எதிர்வினையாக அந்தப் பெண் இப்படி செய்ததாக விவரிக்கப்படுகிறது. இதுதொடர்பான பல செய்திகள் 'அமிர் கபீர் நியூஸ் லெட்டர்' என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளன. 'அமிர் கபீர் நியூஸ்' கூற்றின்படி, “ஹிஜாப் அணியாததால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினரால் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. அதனால் கோபமடைந்த அந்தப் பெண் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்” என்று கூறப்பட்டுள்ளது. பிபிசி பாரசீகத்திற்கு பதிலளித்த `அமீர் கபீர் நியூஸ்’, தகவலறிந்த சிலரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்த செய்திகளை வெளியிட்டதாகக் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் நேரில் பார்த்தவர்களின் கருத்து என்ன? இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பேர் பிபிசி பாரசீகத்திடம் அது குறித்து விவரித்தனர். பிபிசி பாரசீகத்திடம் அவர்கள் கூறுகையில், "அந்தப் பெண் தனது கையில் மொபைல் போனுடன் பல வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்களை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்” என்றனர். அவர்கள் கூற்றுபடி, அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்ததால் கோபமடைந்த பேராசிரியர் ஒருவர், அவர் என்ன செய்கிறார் என்பதை கேட்க ஒரு மாணவியை அவருக்குப் பின்னே அனுப்பினார். அதன் பின்னர் அந்தப் பெண் சத்தம் போட ஆரம்பித்தார். பல்கலைக் கழக வளாகத்தின் சாலையில் அந்தப் பெண் தனது ஆடைகளைக் களைந்திருப்பதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சாட்சிகளின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. அதேசமயம் பிபிசியிடம் பேசிய இரு சாட்சிகளும் அந்தப் பெண் வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த பின்னர் தான் கவனித்துள்ளனர். அவர் வகுப்பறைக்குள் வருவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். அந்தப் பெண், வகுப்பறை இருந்த கட்டடத்தை விட்டு வெளியேறி ஆடைகளை களைவதற்கு முன்பு என்ன நடந்தது என்பது சாட்சிகளுக்கு தெரியாதா? அந்தப் பெண் தன் ஆடைகளை களைந்த பிறகே இந்த இரண்டு சாட்சிகளும் அங்கு சென்றுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம், "உங்களை காப்பாற்ற வந்தேன்" என்று கூறியுள்ளார். இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒரு சமூக ஊடகப் பயனர், எக்ஸ் பக்கத்தில், "நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்" என்று இந்தப் பெண் கூறியதாகப் பதிவிட்டிருக்கிறார். பல்கலைக் கழகம் கூறுவது என்ன? இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அமீர் மஹ்ஜூப், ஒரு சமூக ஊடகப் பதிவில், அந்தப் பெண்ணை ஒரு பல்கலைக்கழக மாணவி என்று குறிப்பிட்டார். அவருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்று அவர் கூறினார். "மனம் சார்ந்த பிரச்னை காரணமாக, அந்தப் பெண் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்களை வீடியோ எடுக்கத் தொடங்கினார், அதற்காக அவர் கண்டிக்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது." என்பது அமீர் மஹ்ஜூப்பின் கூற்று. "மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் சாலையை நோக்கி ஓடிவந்து, இவ்வாறு செய்தார்” என்று அவர் கூறினார். இந்தப் ‘பெண்’ மாணவர்களை வீடியோ எடுத்த போது, அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு பதிலடியாக அவர் தனது ஆடைகளை கழற்றி வீசியதாகவும் ISNA உள்ளிட்ட இரானிய ஊடகங்கள் கூறியுள்ளன. "மாணவி கடுமையான மன உளைச்சல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்" என பல்கலைக் கழகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் மாணவியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை இந்த மாணவி கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்வினை ஆற்றியுள்ளது. "இஸ்லாமிய ஆசாத் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் ஹிஜாப் அணியாததற்காக தவறாக நடத்தப்பட்டு, நவம்பர் 2-ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட மாணவியை நிபந்தனையின்றி இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ட்வீட் செய்துள்ளது. "பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சித்திரவதை செய்வதோ மோசமாக நடத்துவதோ கூடாது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழக்கறிஞரை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் காவலில் இருக்கும் சமயத்தில் அவருக்கு எதிராக வன்முறையோ அல்லது பாலியல் தொந்தரவோ நடந்தால் அந்த குற்றச்சாட்டுகள் சுயாதீனமாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும்" என்று அம்னெஸ்டி இரான் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் இரானுக்கான சிறப்பு அறிக்கையாளராக ஆகஸ்ட் மாதம் தனது பணியைத் தொடங்கிய மை சடோ தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இந்த சம்பவத்தையும், அதிகாரிகளின் பதிலையும் உன்னிப்பாகக் கவனிப்பேன்." என்று குறிப்பிட்டார். ஹிஜாபிற்கு எதிரான போராட்டமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பல்கலைக் கழக மாணவி என்ன செய்தார் என்பது பற்றி பல்வேறு கதைகள் மற்றும் கூற்றுகள் பரவி வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் பற்றி தெரியவில்லை என்றாலும், கிடைக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பல பயனர்கள் இந்த பெண்ணைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். பல பயனர்கள் பெண்ணின் இந்த செயலை ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதற்கான எதிர்ப்பு மற்றும் பல்கலைக் கழக பாதுகாப்புப் படையினரின் கடுமையான அணுகுமுறைக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய கூற்றுகளை முன்வைப்பவர்களில் மரியம் கியானார்த்தி என்ற வழக்கறிஞரும் ஒருவர், "இந்த மாணவர்களின் கிளர்ச்சி, மாணவியர் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கடுமையான மற்றும் நியாயமற்ற அழுத்தத்தின் எதிர்ப்பு" என்று அவர் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்காக கட்டணம் வாங்காமல் வழக்கை நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். ஹிஜாப் அணிய வேண்டிய அழுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடத்தை காரணமாக மாணவி தனது ஆடைகளை களைந்ததாக நம்பும் சமூக ஊடகப் பயனர்கள் அவரின் செயலை "துணிச்சல்" என்று அழைக்கின்றனர். அந்தப் பெண் பீதி மற்றும் அழுத்தத்தால் மட்டுமே இதைச் செய்ததாகவும், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட போராட்டம் அல்ல என்றும் சிலர் கூறியுள்ளனர். இருப்பினும், இரானிய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் "பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்" (Women, Life, Freedom) இயக்கத்தின் எதிர்ப்பாளர்கள் பலரும், அந்த இயக்கத்தினர் ஆடைகள் இன்றி போராடவும் தயாராக உள்ளனர் என்ற அவர்களின் கூற்றை இந்தப் பெண்ணின் செயல் உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக சமூக ஊடகங்களில் பல பயனர்கள் கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்கவும் சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவளிக்கவும் முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czxv1r9k4ndo
  14. இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan
  15. நால்வரா .........நீங்கள் உங்களை மறந்து விட்டீர்களே .......அந்தத் தன்னடக்கம் எனக்குப் பிடித்திருக்கிறது . .....! 😂
  16. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 3 28) வன்னி தமிழரசு கட்சி 3 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 2 30)திருமலை தமிழரசு கட்சி 1 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 5 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? அருச்சுனா இராமநாதன் ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 2 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 4 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 8 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 15 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 100 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  17. இது மூன்றாம் நாள் முழு க‌ட்லையிட் காணொளி கிடையாது...................த‌மிழ‌க‌ வீர‌ர் வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் ம‌ற்றும் ரிக்ஸ்ச‌ ப‌ண்ட் இருவ‌ரும் சேர்ந்து ந‌ல்ல‌ பாட்ன‌ சிப் போட்ட‌வை அது இந்தில் இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..............................
  18. சீமான் கருத்துத் தெரிவிக்க முதலே கருத்துத் தெரிவித்து விட்டேன். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்று 2 தோணிகளில் கால்வைப்பது பிழை என்று. சீமானுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது. நாளை சீமான் தடம்மாறினால் அவரும் விமர்சிக்கப் படுவார்.
  19. நேற்று சந்தையில் ஒரு வேட்பாளர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு விழுப்புண்ணடைந்த ஒரு முன்னாள் போராளிமுன் போய் நின்று பேசபோய் ஒரே அசிங்கமா போய்ச்சு குமாரு ரேஞ்சுக்கு ஆயிட்டார், போதாக்குறைக்கு ஒரு முன்னாள் போராளி முன் தானும் ஒரு போராளி என்று சொல்லபோக, அவர் கவுண்டமணி பாணியில ஓட்றா எந்திரிச்சு ஓடிர்றா எண்டு கலைச்சுவிட்டார் அப்படியே ஓடி போயிட்டார் அவர்.
  20. சரியாகச் சொன்னீர்கள். நடக்கிற காரியத்தை கெடுப்பதில், சுமந்திரன் பயங்கர கெட்ட ஆள். தமிழர்களின் திட்டங்களை மட்டுமே கெடுப்பார். சிங்களவர்களுக்காக உழைப்பார்.
  21. 26 தீர்மானங்களும் தீர்மானங்களாகவே இருப்பது ஆறுதலான ஒரு விடயம். இதில் எதுவுமே போராட்டமாக இல்லாதது தவெக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அவரவர் சொந்த வேலையை முடிக்க உதவியாக இருக்கும்.............. இன்று 69வது படத்தின் ஷீட்டிங் ஆரம்பிக்கின்றது.......... மீனவர் பிரச்சனை அவ்வளவு கஷ்டமான ஒரு கேள்வியா........ இவர்கள் எல்லோருமே நூறுக்கு சைபர் வாங்குகின்றார்களே.........
  22. தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! christopherNov 03, 2024 14:07PM விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தவெக கட்சியின் முதல் மாநாட்டை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை பின் வருமாறு :- 1. தமிழக வெற்றிக்‌ கழகத்தின் கொள்கைகள்‌, கொள்கைத்‌ தலைவர்களை உறுதியாகப்‌ பின்பற்றும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 2. கொள்கைத்‌ திருவிழா மாநாட்டை மாபெரும்‌ வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும்‌, பந்தல்‌ வடிவமைப்பாளர்‌ ஜே.பி.விஸ்வநாதனுக்கும்‌, மாநில மாநாடு நடத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும்‌, பொதுமக்களுக்கும்‌ நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 3. தமிழ்நாட்டில்‌ இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும்‌ சகோதரத்துவத்தையும்‌ நல்லிணக்கத்தையும்‌ பாதுகாப்பையும்‌ எப்போதும்‌ போற்றிப்‌ பாதுகாக்கும்‌ வகையில் மதச்சார்பற்ற சமூக நீதிக்‌ கொள்கைகள்‌ பற்றிய விளக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 4. ஒரே நாடு; ஒரே தேர்தல்‌ என்ற அறிவிப்பும்‌, அதைச்‌ சட்டமாக்குதலுக்கும்‌ முனையும் பாஜக அரசிற்கு எதிராக ஐனநாயகக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 5. பெண்கள்‌, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களில்‌ ஈடுபடுவோருக்குத்‌ உச்சபட்ச தண்டனை வழங்க ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பெண்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 6. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட, தமிழக அரசு முதலில்‌ உடனடியாகச்‌ சாதிவாரிக்‌ கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும்‌ ஆய்வைக்‌ காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி சமூக நீதிக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 7. மருத்துவம்‌ போலவே கல்வியும்‌ மாநிலப்‌ பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள்‌ உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்‌. அப்படி வழங்கினால்‌ நீட்‌ தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள்‌ மாணவர்களின்‌ மருத்துவக்‌ கனவை நிறைவேற்ற இயலும்‌ என்பதை வலியுறுத்தி மாநிலத்‌ தன்னாட்சி உரிமைக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 8. விவசாயம்‌ மற்றும்‌ விவசாய நிலங்களின்‌ பாதுகாப்பை, ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌, தன்‌ மண்ணுக்காகவும்‌ மக்களுக்காகவும்‌ சட்டரீதியாகப்‌ போராடவும்‌ தயங்காது என்பதை வலியுறுத்தி விவசாய நிலங்கள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 9. தொழில்‌ நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின்‌ எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் கோவை மெட்ரோ ரயில்‌ திட்டப்‌ பணிகளை விரைந்து தொடங்கக்‌ கோரும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 10. ஈழத்‌ தமிழருக்கான நிரந்தரத்‌ தீர்வைக்‌ கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், ஈழத்‌ தமிழர்கள்‌ மற்றும்‌ இலங்கை அரசால் சிறைப்படிக்கப்பட்டு, தாக்கப்படும் தமிழக மீனவர்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாக்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 11. மொழி உரிமையே எங்கள்‌ தமிழ்த்‌ திருநாட்டின்‌ முதல்‌ உரிமை என்ற எங்கள்‌ கொள்கைப்படி, எங்கள்‌ தாய்மொழி காக்கும்‌ எல்லா முயற்சிகளிலும்‌ தமிழக வெற்றிக்‌ கழகம்‌ சமரசமின்றிச்‌ செயல்படும்‌. தமிழ்நாட்டின்‌ இருமொழிக்‌ கொள்கைக்கு எதிராக, மூன்றாவது மொழியைத்‌ திணிக்க முயலும்‌ ஒன்றிய அரசுக்கு எதிராக மொழிக் கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 12. அரசின்‌ வருவாயைப்‌ பெருக்க எந்த ஓர்‌ அறிவார்ந்த திட்டத்தையும்‌ செயல்படுத்தாமல்‌, மின்‌ கட்டண உயர்வு, பால்‌ கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள்‌ மீது மேலும்‌ மேலும்‌ வரிச்‌ சுமையை மட்டுமே அதிகமாக விதித்து வரும் திமுக அரசுக்கு எதிராக மக்கள்‌ மீது நிதிச்‌ சுமைத்‌ திணிப்பு சார்ந்த தீர்மானம் நிறைவேற்றம். 13. அமைதிப்‌ பூங்காவான தமிழ்நாட்டில்‌, தொடரும்‌ கள்ளச்‌ சாராய விற்பனை, போதைப்‌ பொருட்களின்‌ பழக்கம்‌ போன்ற நிர்வாகச்‌ சீர்கேடுகளைச்‌ சரிசெய்யாமல்‌, ஆளும்‌ திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து சட்டம்‌ – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்‌ நிறைவேற்றம். 14. தேர்தல்‌ வாக்குறுதியை வழக்கம்போலக்‌ காற்றில்‌ பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால்‌ தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத்‌ திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின்‌ கணக்கீடு செய்யும்‌ முறையைக்‌ கைவிட்டு, மாதந்தோறும்‌ மின்‌ கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மின்சாரக்‌ கட்டணத்தை மாற்றியமைக்கத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 15. மகளிர்‌ உரிமைத்‌ தொகை, பரிசுத்‌ தொகுப்பு என்று ஒரு புறம்‌ அறிவித்துவிட்டு, மறுபுறம்‌ மதுக்கடைகளைத்‌ திறந்து, அதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாயைப்‌ பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக்‌ குற்றங்கள்‌, சமூகப்‌ பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக்‌ காரணமாக விளங்கும்‌ மதுக்கடைகளைக்‌ கால நிர்ணயம்‌ செய்து மூட வலியுறுத்தும்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 16. தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம்‌ வழங்குகின்ற வகையில்‌, உச்ச நீதிமன்றக்‌ கிளையைச்‌ சென்னையில்‌ அமைக்கவும், தமிழைத்‌ தாய்மொழியாகக்‌ கொண்ட நீதிபதி ஒருவரை நியமித்து சட்டரீதியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்‌ என்று வலியுறுத்தும்‌ உச்ச நீதிமன்றக்‌ கிளையை அமைக்க தீர்மானம்‌ நிறைவேற்றம். 17. தமிழ்‌ மண்ணின்‌ மூவேந்தர்களான சேரர்‌, சோழர்‌, பாண்டியர்‌ ஆட்சியின்‌ வரலாற்றுப்‌ பெருமைகளை உலகுக்குப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌, பிரமாண்டமான அருங்காட்சியகத்தை தமிழத அரசு சென்னையில்‌ கட்ட வேண்டும்‌ என்று தமிழ்நாட்டின்‌ தொன்மப்‌ பெருமைப்‌ பாதுகாப்புத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 18. தமிழ்நாட்டு மக்களின்‌ முன்னேற்றத்திற்குப்‌ பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச்‌ சமரசமும்‌ இன்றிப்‌ போற்றுவதைக்‌ கடமையாகக்‌ கொள்ள வேண்டும் என்று கோரி விடுதலைப்‌ போராட்டத்‌ தியாகிகளுக்குப்‌ பெருமை சேர்க்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 19. இஸ்லாமிய சகோதரிகளின்‌ தமிழ்த்‌ தொண்டை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஆண்டுதோறும்‌ இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில்‌ விருதும்‌ பணமுடிப்பும்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்று தெரிவித்து கண்ணியமிகு காயிதே மில்லத்‌ பெயரில்‌ அரசு விருது வழங்க வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 20. தமிழ்நாட்டில்‌ முதியோர்‌ நலனை உறுதி செய்யும்‌ கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத்‌ திட்டத்தைச்‌ செயல்படுத்த வேண்டும்‌ என்று கோரி முதியோர்‌ நல்வாழ்வை உறுதி செய்யத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 21. இயற்கைத்‌ தாயின்‌ செல்லப்‌ பிள்ளையான கன்னியாகுமரிப்‌ பகுதியில்‌ அணுக்‌ கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்‌ சுரங்கத்‌ திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென்‌ தமிழகத்தைப்‌ பாழ்படுத்தும்‌ இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக்‌ கைவிடவேண்டும்‌ என்று இயற்கை வளப்‌ பாதுகாப்புக்‌ கொள்கை தீர்மானம்‌ நிறைவேற்றம். 22. நாடாளுமன்றத்தில்‌ ஒன்றிய அரசால்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதா இஸ்லாமிய சமூகத்தின்‌ உரிமைகளைப்‌ பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள்‌ எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்‌ஃப்‌ சட்டத்‌ திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்று வலியுறுத்தி இஸ்லாமியர்‌ உரிமைத்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 23. நீட்‌ தேர்வால்‌ தமிழ்நாட்டில்‌ இருக்கும்‌ மாணவ மாணவிகள்‌, குறிப்பாக, கிராமப்புறங்களில்‌ இருக்கும்‌ ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட மற்றும்‌ பட்டியலின வகுப்பினைச்‌ சேர்ந்த மாணவ – மாணவிகள்‌ அனைவருமே மிகவும்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. நீட்‌ தேர்வு விலக்குப்‌ பிரச்சினைக்கு நிரந்தரத்‌ தீர்வு காண, கல்வியைப்‌ பொதுப்‌ பட்டியலில்‌ இருந்து மாநிலப்‌ பட்டியலுக்குக்‌ கொண்டு வர வேண்டும்‌ என்று கோரி நீட்‌ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 24. ஆளும்‌ அரசுகள்‌ மேற்கொள்ளும்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும்‌ ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக்‌ கருதுகிறோம்‌. தமிழ்நாட்டிற்கும்‌ தமிழினத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ மாபெரும்‌ பங்காற்றியவர்களைப்‌ பெருமைப்படுத்திடும்‌ வகையில்‌ தமிழக அரசு ஆண்டுதோறும்‌ ‘தகைசால்‌ தமிழர்‌ விருது’ வழங்குகிறது. இதனை பாராட்டும் வகையில் தகைசால்‌ தமிழர்‌ விருது வழங்கும்‌ அரசை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 25. தமிழகத்தில்‌ தூத்துக்குடி மாவட்டம்‌ குலசேகர பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட்‌ ஏவுதளம்‌ சுமார்‌ 2,376 எக்கர்‌ நிலப்‌ பரப்பளவில்‌ அமைக்க உள்ளது. பெரும்‌ வேலை வாய்ப்புகளை வழங்கும்‌ வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ராக்கெட்‌ ஏவுதளம்‌ அமைக்கும்‌ திட்டத்தை வரவேற்கும்‌ தீர்மானம்‌ நிறைவேற்றம். 26. நமது தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ மீது தீராப்‌ பற்றுடன்‌, கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள்‌ சிலர்‌ அண்மையில்‌ மறைந்த நிகழ்வுகள்‌, அதிர்ச்சியும்‌ வேதனையும்‌ அளிக்கின்றன. இயக்கத்திற்காகவும்‌ கழகத்திற்காகவும்‌ நீண்ட காலமாகப்‌ பணியாற்றி, உடல்நலக்‌ குறைவால்‌ திடீரெனக்‌ காலமான புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன்‌ மற்றும்‌ மாநாட்டில்‌ பங்கேற்க வரும்‌ போது, எதிர்பாராமல்‌ நிகழ்ந்த சாலை விபத்துகளில்‌ உயிரிழந்த சீனிவாசன்‌, விஜய்கலை, வசந்தகுமார்‌, ரியாஸ்‌, உதயகுமார்‌ மற்றும்‌ சார்லஸ்‌ ஆகியோர்‌ மறைவை கட்சி வரலாற்றில்‌ என்றென்றும்‌ நிலைத்திருக்கும்‌ வகையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். https://minnambalam.com/political-news/26-resolutions-passed-by-the-tvk-executive-committee/
  23. சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன்..................
  24. மாற்றி மாற்றிப் பேசும் பக்கா அயோக்கிய அரசியல்வாதிகள் உள்ள நாடு அது ஆகவே அவர்கள் கூறுவதை ஆதாரமாக எடுத்துவராமல் அறிவியல் ஆய்வுகளை நம்புங்கள் வீரப்பையன். நான் நக்கி பிழைப்பது இருக்கட்டும், நீங்கள் தமிழை ஒழுங்காக வாசிக்க முதலில் கற்றுக்கொள்ளுங்கள். திரும்ப சென்று எழுத்துக்கூட்டியாவது அல்லது கற்றவர்களது உதவியுடனாவது நான் எழுதி இருப்பதை வாசிக்க முயற்சி செய்யவும்.😂 “எப்போதும் தமிழன்”, என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது தமிழை ஒழுங்காக வாசித்து அதன் பொருள் அறியும் அறிவும் திறனும் வேண்டும்.
  25. த‌மிழ் சிறி அண்ணாவின் அன்பு வேண்டுகேலுக்கு இன‌ங்க‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்டேன் மற்ற‌ம் ப‌டி என‌க்கு 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லில் பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது👍..........................
  26. பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் | இரா மயூதரன்
  27. சுமந்திரன் ஒரு பொய்யன். தன் அரசியல் நலனுக்காக சிங்கள இனவாதிகளுடன் கூட்டு வைத்திருப்பவர்/வைத்திருக்கக்கூடியவர்.
  28. நடிகர் விஜய் அரசியல் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அவர் தன் பிரமாண்டமான மாநாட்டில் ஈழத் தமிழர் இருவருக்கு வாய்ப்பளித்தமை உண்மையில் பாராட்டுக்குரியது. ஒருமுறை சன் டிவியில் நடந்த போட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஈழத் தமிழ் அகதி இளைஞன் ஒருவன் பங்குபற்றியிருந்தான். சில வாரங்கள் கடந்த பின்னர் அவ் இளைஞன் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பது சன் டிவி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனே அந்த அகதி இளைஞன் எவ்வித காரணமும் கூறாமல் நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டான். இந்நிலையில் ஏற்கனவே தன் படம் ஒன்றில் ஈழத் தமிழ் பெண் ஒருவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார் விஜய். இப்போது தன் அரசியல் மாநாட்டில் தமிழ்த்தாய் பாடவும் தமது கட்சி பாடல் ஒன்றை எழுதவும் என இரு ஈழத் தமிழருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இவர் இவ்வாறு வாய்ப்பளிப்பது இனி மற்றவர்களும் ஈழத் தமிழருக்கு வாய்ப்பளிக்க வழி செய்கிறது. விஜய் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். தோழர் பாலன்
  29. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் பல பிரச்சினை இருக்லாம் அ தற்காக அந்நியன் எம்மை ஆள நினைக்கக் கூடாது. ஆயிரம் உண்டுங்கு சாதி -எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது.
  30. உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்த்த‌து கிடையாது த‌லைவ‌ரால் அறிமுக‌ம் செய்து வைக்க‌ப் ப‌ட்ட‌ சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை தெரியும் ம‌ற்ற‌ம் ப‌டி பெரிதாக‌ தெரியாது...........................உற‌வுக‌ளின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொண்டேன் அதே போல் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சி............................ த‌லைவ‌ரே ஜ‌க்க‌ம்மா என்று சும்மா காமெடிக்கு எழுதினேன் உங்க‌ளை போன்ர‌வ‌ர்க‌ளை சிரிக்க‌ வைக்க‌........... இல‌ங்கை கிரிக்கேட்டை தெரிந்த‌ அள‌வுக்கு என‌க்கு அர‌சிய‌லை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது.................2009க்கு முத‌ல் ஈழ‌ அர‌சிய‌லை தொட‌ர்ந்து க‌வ‌ணித்து வ‌ந்தேன் 2009 ம‌ன‌ உளைச்ச‌லோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை எட்டி பார்ப்ப‌தை த‌விர்த்து விட்டேன் ஏதும் இல‌ங்கை அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌னும் என்றால் என்னோடு சுறு வ‌ய‌தில் ப‌டித்த‌ ந‌ண்ப‌னிட‌ம் கேட்டு தெரிந்து கொள்வேன்............ந‌ண்ப‌ன் இல‌ங்கை அர‌சிய‌லை அந்த‌க் கால‌ம் தொட்டு பின் ப‌ற்றி வ‌ருகிறார்..................ம‌ற்ற‌ம் ப‌டி இந்த‌ போட்டியில் உங்க‌ளுக்கு கீழ‌ நான் வ‌ந்தாலும் ம‌கிழ்ச்சி தான் என‌க்கு த‌லைவ‌ரே😁🥰...........................
  31. வரும் தேர்தல் முடிந்த பின்னரே பல சுயரூபங்கள் வெளிவரும். அதுவரை காத்திருப்போம். 🙂
  32. “இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. கொழுந்து விட்டு எரியட்டும்,.🤣
  33. அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் கமலா அக்காவுக்கு வாக்கு போட்டு முடியத்தான் வருவேன், அதுவரை விரதம்🤣 உந்த அடிக்கடி கட்சி மாறுற ஆக்களையெல்லாம் என்னால கணிக்க முடியாது ராசா 😃
  34. அமரன் படம் பார்த்தேன், யூடியூப் விமர்சனங்கள் , படம் பார்த்தவர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, படம் பார்க்க போகும்போது ரிசு பேப்பர் பலரும் கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் இருந்தது. அப்படியெல்லாம் இல்லை இது ஏற்கனவே வந்த படம்தான் அதன் பெயர் குருதிபுனல்! கமலஹாசன்தான் அமரன் தயாரிப்பாளர் என்பதால் தனது படத்தையே கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்கிறார் போலும். ராணுவத்தின் தியாகத்தை எண்ணி பேப்பர் துண்டுகளுடன் திரையரங்குக்கு போகும் மக்கள் மறுபக்கம் ராணுவத்த்தால் பேப்பர்போல கசக்கி கொளுத்தப்படும் மக்கள் பக்கமும் நின்று யோசிக்கவேண்டும், அதை செய்ய அவர்களின் அரசும் அரசியலும் அனுமதிக்க போவதில்லை. படம் பார்த்தவர்கள் எல்லாம் வசூலில் இது சாதனை படைக்கும், சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஆஸ்கார் விருதுகூட கொடுக்கலாம் என்கிறார்கள், அழுகிறார்கள், ஆனால் குருதிபுனலில் கமல் நடிப்பில் 10 வீதம்கூட சிவகார்த்திகேயனிடம் இல்லை. ஆனால் உண்மையாகவே இந்த கதையில் வந்து இறந்துபோன முகுந்த் குடும்பத்துக்கு யாரும் உதவி செய்யவேண்டுமென்றோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ இல்லை. இவர்கள் உண்மையாகவே ராணுவ தியாகத்துக்கு அழுகிறார்களா அல்லது ராணுவம்போல் நடித்த கூத்தாடிகளுக்காக அழுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். சொந்தநாட்டு ராணுவ தியாகங்களை பார்த்து சிவாஜிகணேசன் அழுகிறமாதிரி அழுகிறார்கள் அது அவர்கள் கடமை , ஆனால் அந்நியநாட்டுக்குள் வந்து எம்மை கொன்றுவிட்டுபோன அவர்கள் ராணுவத்தின் தியாகங்களை நினைத்து ஜனகராஜ் சிரிக்க்கிறமாதிரித்தான் நம்மால் சிரிக்க முடியும்.
  35. மேலே ரசோ எழுதியதையே நானும் சொல்கிறேன். திராவிட இனம் = 5 மொழிவாரி இனங்களின் கூட்டுப் பொதுப்பெயர். திராவிட அரசியல் சித்தாந்தம் = தமிழ் நாட்டில் ஆரிய சித்தாந்ததுக்கு எதிராக நீதி கட்சி, பின் பெரியாரால் எழுப்பபட்டது. நீங்கள் இனப் பகுப்பை, சித்தாந்தத் தோடு போட்டு குழப்பி கொள்கிறீர்கள். மெட்ராஸ் மாநிலமாக இருந்த போதே மற்றைய 3 தென் மானிலங்களாக பிரிந்த பகுதிகளில் திராவிட சித்தாந்தம் பரவவில்லை. அவர்கள் ஒன்றில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ் அல்லது ஜனதா கட்சி (பின்னாளில்)தான். தமிழர் பகுதியில்தான் அநேகம் பிராமண எதிர்ப்பு அரசியல் நிலை கொண்டது. இதன் ஆரம்பகால பெயர் பிராமணர் அல்லாதோர் சங்கம். அப்போ 5 மொழி பேசுவோரும் ஒன்றாக இருந்தமையால், பிராமண எதிர்ப்பு அரசியல் என்ற தத்துவத்தை பிராமணர் அல்லாதோருக்கு பொதுவாக திராவிடம் என்ற சொல் உள்ளே வருகிறது. ஆனால் இதன் இனவழி அடையாளப்பொருள் மொழி வாரி மாநில பிரிப்போடு செத்து விடுகிறது. இப்போ திராவிடம் என்றால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான அரசியல் தத்துவம் மட்டும்தான். இதை திராவிட சித்தாந்தம் என சொல்லுவது கசக்கிறது என்ரால் பெரியாரிசம் என சொல்லி விட்டு நகருங்கள். சுருங்க சொல்லின், ஆரியத்தை இரு வகையில் எதிர்க்கலாம். தமிழ் தேசியம் அல்லது திராவிடம். மூன்றாவதாக இரெண்டு வழியையும் சேர்த்து, தமிழனாய் உணர்பவன் எல்லாம் தமிழன் என்ற அடிப்படையில் இன்னும் சிறப்பாகவும் எதிர்க்கலாம். முந்தி சைவமா, வைணமவா என நம் மன்னர்கள் அடிபட்டார்கள், அதே போல் மூவேந்தர் அடிபட்டார்கள். கடைசியில் தஞ்சையை மராட்டியனிடமும், மதுரையை நவாப்பிடம் கொடுத்ததுதான் மிச்சம். இதை ஒத்த ஒரு வீண் வேலைதான் இந்த திராவிடம் vs தமிழ் தேசிய போலி விவாதமும். இதை தூண்டி விடுவதில் முன் நிற்பவர்கள் “ஒற்றுமை கிலோ என்ன விலை” என கேட்கும் ஈழத்தமிழர்கள் என்பது வியப்பில்லை. கொள்கை மோதல், பிரதேச மோதல், இயக்க மோதல், இயக்க-உள் மோதல் என தமது தலையில் மண்ணை அள்ளி கொட்டி கொண்ட ஒரு இனம், இப்போ தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு நிலையை உருவாக்கி விட உழைக்கிறது.
  36. என்னையும் போட்டியில் கலந்து கொள்ள தேடி அழைத்த சிறியருக்கு நன்றி!. ஆனால் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.. மன்னிக்கவும் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு.
  37. ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி , ’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, ‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது” புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்? பதவியிருக்கும்போது சிங்களவர்கள் கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது. மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று. இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.
  38. இப்போது உள்ள தமிழ் தவைர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தமிழ் இளைஞர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் தமிழினத்துக்கு விடிவை கொண்டு வருவார்கள் என்ற குரல் யாழ்களத்தில் ஒலித்ததே 😄 இதில் கவுசலியாவின் பேச்சை கேட்டிருந்தேன் அர்ச்சுனாவினுடையது போன்று இல்லாமல் தெளிவாக இருந்தது
  39. ச‌ரி புத்த‌ன் மாமா 12 நாள் இருக்கும் போது 5நாள் மிக‌ குறைய‌ க‌ட‌சிக்கு முத‌ல் நாள் கூட‌ எல்லா க‌ட்சி குறைக‌ள் ச‌ரி பார்த்த‌ பின் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுங்கோ........................................
  40. தமிழக மக்களை போல தாயக மக்களையும் மாற்ற வேணும் என தீயாக வேலை செய்கின்றார் போல
  41. சிறி நானும் இதை எழுத வேண்டும் என எண்ணினேன்.பதிவுக்கு நன்றி. நடுச்சாமத்தில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் என்ன வேலை? தமிழ் கைதிகளை சுடுவேன் என்றதுமல்லாமல் தனது சப்பாத்தைநக்கச் சொன்னதாகவும் சொன்னார்கள். முதுகெலும்பில்லாத எமது அரசியல்வாதிகளும் சாட்டுக்கு ஒருநாள் குரலெழுப்பினார்கள் அதோடு சரி. தூரகங்களும் சரி மனிதஉரிமை அமைப்புகளும் சரி பெரிதுபடுத்தவே இல்லை. காயாலாகாத நாங்கள் என்ன தான் செய்யலாம்? இப்போ எங்கோ ஓர் மூலையில் சந்தோசமாக உள்ளது.
  42. கெதியா கெதியா அப்பதான் எங்களுக்கும் வசதி. எள்ளை காயவைத்துவிட்டு எலிப்புழுக்கையை பொறுக்கு என்பது பேுhலல்லவா இருக்கு.
  43. சிறி இது போட்டியில் கலந்து கொள்ள அழைப்பது போல தெரியலையே? வாக்குப்போட அழைப்பது போலல்லவா இருக்கிறது.
  44. இந்த முறை... முல்லைத்தீவு தொகுதி தமிழ் கட்சிகளிடம் இருந்து பறி போகப் போகின்றது போலுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலேயே... பெருமளவான வாக்குகள் அனுரவுக்குத்தான் கிடைத்தது. இப்போ... பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அம் மக்களை குறி வைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளளார். தமிழரசு கட்சி... போன பஸ்ஸுக்கு, கை காட்டிக் கொண்டு நிற்கத்தான் லாயக்கு. 😂
  45. காதுக்குள் தண்ணி போனால் ஒரு காதுக்குள் தண்ணியை விட்டு மறுபக்கம் தலையை சரிக்கும் போது காதுக்குள் சென்ற தண்ணீர் வெளியில் வந்து விடும். இது மூக்குக்கும் பொருந்துமா தெரியவில்லை. சாதாரணமாக blow பண்ணினால் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.
  46. அது தானாகவே வாய் மூலம் வெளி வரும் தானே ..அல்லது சீறி (blow your nose ) விடலாம்.
  47. எண்ணிக்கையில் முன்னணியில் நிற்பவர்களை கடைசி நிமிடத்தில் வெல்வேன், சும் ஸ்டைல்😂🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.