Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19638
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1838
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88790
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    39306
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/27/25 in Posts

  1. சமாதான காலத்தில் தினமும் 1 டாலர், என்ற மாதிரி ஒரு திட்டத்தைப் புலிகள் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் கொண்டு வந்தார்கள். அதற்கே பெரும் பிரச்சனை பண்ணி, அந்தந்த நாட்டு அரசுகளிடம் போட்டுக் கொடுத்துப் புலிகளுக்கு தடைகள் விழவும் சிலர் சிறை செல்லவும் காரணங்களை உருவாக்கியவர்கள், சீமானுக்கு ஏதோ புலம்பெயர் நாடுகளில் இருந்து கோடிகளாகப் பணம் போவதாக உருட்டுவது எல்லாம் நகைச்சுவை. ஐயா. பொன் தியாகத்தின் செலவுகளுக்குக் கூட நாம் தமிழர் தான் செய்து கொண்டிருக்கின்றது. இங்கே சீமான் பொய் பேசுகின்றார், புரணி பேசுகின்றார் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் 15 வருடங்களாக ஈழத்தையே பேசுகின்றார். வைகோ, கௌத்தூர் மணி எல்லாம் 15 வருடங்களாக எங்கே சென்றுவிட்டார்கள். புலிகள் அழிந்து விட்டார்கள் என்று அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வேளை சீமான் இல்லை என்றால் இவர்கள் அங்கே ஒரு போராட்டம் நடந்தது என்பதையே தமிழக மக்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லவா? சீமான் ஈழப் போராட்டத்தில் மற்றவர்கள் போல விளக்கம் உள்ளவர் அல்ல. என்ன, எவற்றை எப்போது பேச வேண்டும் என்ற தெளிவின்மை அவரது குறைபாடு தான். புலிகளின் விருந்துபுசாரத்தை விட, அங்கே நடந்த போரக்குற்றங்களை முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அவர் பேசிய ஆமைக்கறி விடயம் இப்படி. எதிராக மாற்றப்படும் என்பதை அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார். ஆனால் அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. தலைவர் தமிழகத்தில் ஏற்படுத்த நினைத்த மாற்றத்தை சரியாகவே உருவாக்கினார். புதுவை இரத்தினதுரையின் குரலில் தமிழக ஆதரவை வேண்டி வெளியிடப்பட்ட 2 ஒளிப்பதிவுகளை வன்னியரசு சரியாகத் தமிழக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அதைச் சீமான் கிட்ட கொடுத்துவிட்டிருக்கலாம். கருணா, டக்ளஸ் பற்றிப் பேசதா வாய்கள், எதற்காகச் சீமானை விழுத்தத் துடிக்கின்றார்கள்
  2. 2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது. ஓ ரசிக்கும் சீமானே… widevisionstudio2025-01-26T21:34:06+00:00 தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார். புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார். வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது. ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான். எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.) தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது. சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை. வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார். அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான். நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று.. எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது. ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை. தமிழ் நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான். சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல.. பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை. தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது. ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை. தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு அரசியற் சக்தியாகத் தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டும் அரசியல் நிலைப்பாடுகளைத் திருத்தியமைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் மேற்கொள்ள முன்வருவாரா? சீமானின் இப்போதைய அதிகபட்ச இலக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது. அதனால், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் புதுவித நன்மைகள் நடக்குமென்றால் அது வரவேற்கப்படலாம். இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? 2015-01-25 அமரதாஸ் இவை, ‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள். https://widevisionstudio.com/archives/3812?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0isTEPYSOPsx80PY_CUOgdyqft-okNG13REK0hbGfwJnt77nIVS4wy5vw_aem_Niv3yqN7HZJetZhNUOIRig
  3. கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்: சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே. இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா?
  4. வாசகர் இலகு கருதி இதை திருத்தங்களுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழே உள்ள லிஸ்டில் தாம் இருப்பதாக கருதுவோர் முறையிட்டால் - லிஸ்ட் மீள் பரிசீலனை செய்யப்படும். ———— வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்.
  5. @goshan_che @Justin இநு தான் உலக ஜதார்ததம். பல தலைமுறைகளாக மலையகத்தில் வாழ்ந்த மலையக மக்களை நாடற்றவர்களாக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ எந்த விதமான வாழ்வாதார கட்டமைப்பும் இன்றி அவர்கள் நாடு கடந்தப்படும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதோ ஈழத்தமிழர்கள் பொங்கி வீதிக்கு வந்தார்களா? உலக ஜதார்த்தத்தை புரிந்து அதை அனுசரித்து போராட்டத்தை கொண்டு செல்லாமல. அழிந்துவிட்டு இப்படி தமிழ்நாட்டு தமிழர் உதவ வில்லை என்று மூக்கால்்அழுவதில் பயன் இல்லை. தமிழ் நாட்டில் எத்தனை இயற்கை அழிவுகள் நடந்தன எந்த ஒரு ஈழத்தமிழர் அமைப்பாவது நிதி சேர்தது அவர்களுக்கு உதவினார்களா?
  6. இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லி கட்டு இவை இரெண்டும் மட்டுமே எனக்கு நினைவில் வருகிறன. ஆனால் இங்கே சிலர் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலோனோர் சுயநலமற்ற தமிழ் உணர்வாளர்கள் என ஒரு மாயை தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைக்கிறார்கள். அப்படி அல்ல…அவர்களுக்கு தமிழ் உணர்வு, இன உணர்வு உள்ளது, ஆனால் அது தமது வாழிடத்தில் தமக்கு இன்னல் எனும் போதுதான் வெளிகிளம்ப்பும். அதுவும் மேலே சொன்ன இரு உதாரணங்கள் போல. 1983 இல் எமக்கு பாரிய ஆதரவு அலை இருந்தது - ஆனால் த.நா வில் அது பாரிய போராட்டமகவில்லை. 80 களின் மத்தியில் பம்பாயில், 1991 இல் - பக்கதில் இருந்த கர்நாடகா தமிழர் அடித்து துரத்தபட்ட போது கூட தமிழ் நாடு கொதிக்கவில்லை. நாடளாவிய பந்த் - ஒரு நாள். இதுதான் தாம் சம்பந்த படதா விடயங்களில் தமிழ் நாட்டு மக்களின் போராட்ட எல்லை. முன்பே எழுதியுள்ளேன். கருணாநிதி பதவி விலகினால், மத்திய ஆதரவை விலக்கி இருந்தாலும், போர் நின்றிராது - ஆனால் அவர் விலகி இருக்க வேண்டும். ஈழத்தமிழரை போலவே தமிழ்நாட்டு தமிழரும் சுயநலமிகள். அத்தோடு அவர்கள் எதையும் முதலில் இந்தியன் என்ற கோணத்தில்தான் அணுகுவார்கள், ஆகவே ஒரு அளவுக்கு மேல் அவர்கள் எமக்காக இறங்க மாட்டார்கள்.
  7. ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன். ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள். நீங்கள் சொல்வது சரிதான். யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣. அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை.
  8. மாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல்லாகலாம். ஏனெனில்…. பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை புரிதலும் வேண்டும் புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து மகிழ்வோடு வாழலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  9. அண்ணை வழமையாக தரம்தாழ்ந்து பதிவிடும் என்னைப்போல் படிப்பறிவற்றவர்களை விடுங்கள்..ஆனால் இங்கு சீமான் சம்பந்தப்பட்ட திரிகளில் அண்மைக்காலமாக சகட்டு மேனிக்கு தரம் தாழ்ந்து அர்ச்சனைகளை பதிவிடுபவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் மெத்த படித்த நபர்களா தம்மை தாமே சொல்பவர்களாக உள்ளனர்.... அப்படியெனில் ஒரே ஒரு காரணம்தான்... ஒருவன் எவ்வளவு படித்தாலும் பொது ஞானம் என்பது வளரவில்லை என்பதே... அவர்களின் சீமான்மீதான தரம்தாழ்ந்த பதிவுகளை படிக்கும் போது அவர்கள் மீது பரிதாபம் தான் எழுகிறது…
  10. நேற்று நியூஸ் 18 இல் செய்திகளின் ஒரு பகுதியாக அதன் ஆசிரியர் கார்த்திகைச்செல்வனுக்கு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் வழங்கிய நேர்கணலின் சில பகுதிகள் போய்க் கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளை பார்த்த பின், தலைவர் மேல் இன்னும் மரியாதை கூடியது. 'கொன்று போட்டீர்களே...................' என்று உலகத்தின் மேல் உள்ள கோபம் அப்படியே துயரமாக மாறி உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சீமானின் ஏமாற்று வேலைகளுக்கும், போலிப் பாவனைகளுக்கும் இது இன்னுமொரு சாட்சியமாகவும் இருந்தது. எவ்வளவு ஏமாற்று வேலைகள், அது அவ்வளவும் ஒரு தனிமனிதனின் நலனுக்கு மட்டுமே என்னும் போது இன்னும் அருவருப்பாகவும் இருந்தது. இன்று எங்களின் சமூகத்திற்கு, எம்மக்களுக்கு ஒரு மாற்று, ஒரு தலைமை இல்லை என்னும் நிலையில், சீமான் போன்ற ஒருவரை நம்பும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது ஒரு பெரும் ஏமாற்றம் ஆகவும் இருக்கின்றது.
  11. இறுதி போர் காலத்தில் உலக நாடுகள் எப்படி அணுகியது, என்ன எதிர்பார்த்தது என்பதை விக்கிலீக்ஸில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பபட்ட கேபிள்களை படித்தால் சில புதிய விடயங்கள் தெரிய வரும், புது கேள்விகளும் பிறக்கும். நமது எதிர்ப்பார்ப்புக்கும் உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் பாரிய தூரமுண்டு. நான் அறிந்தவரை இதுபோன்ற நாடுகளுக்குயிடையேயான போர்களிலும் சரி, உள்நாட்டு போர்களிலும் சரி இருபக்கத்திற்கும் ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் அது அமெரிக்க- உருஷ்ய ஆதரவு நாடுகளாய் பிரிந்து நிற்கும். இது தற்போதைய சண்டைகளான சிரியா , உக்ரைன், காசா போன்றவற்றில் பார்க்கலாம். ஆனால் ஈழப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் ஒரு பக்கமாய் இருந்தது. ராஜபக்சேவிற்கு ஒருவருக்கு தலையையும் மற்றவருக்கு வாலையும் ஆட்டி தனக்கு வேண்டியதை சாதிக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இந்தியா எப்பவுமே ஈழம் அமைய விரும்பியதில்லை, அவர்களின் தேவை இலங்கை அவர்களின் கீழிருக்க வேண்டும். இதை சாதித்துக் கொள்ள இங்குள்ள இயக்கங்களை பயன்படுத்திக்கொண்டனர். வங்காளதேசம் அமைந்ததை ஒரு உதாரணமாக சொல்வார்கள், அது பாகிஸ்தான் எதிரி நாடாகயிருந்ததால் நடந்தது, இலங்கை அப்படியல்ல. இறுதிப்போரில் கூட இந்தியாவின் எண்ணம் புலிகளின் தலைமை அழிந்தால் போதும் என்பதாய் தான் இருந்திருக்கும், அவர்களுக்கு இசைவாய் ஒரு போராளி குழுயிருந்தால் இலங்கை அரசை கட்டுப்படுத்த ஏதுவாயிருக்கும். ஆனால் ராஜபக்சே தன்னுடை அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்திக்கொள்ள அனைத்து நாடுகளையும் சாட்சியாக வைத்து வெறியாட்டம் ஆடிவிட்டார்கள். இந்த நாடுகளாடும் சதுரங்கத்தில் வீழ்த்தப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.
  12. இறங்க வேணுமா இல்லையா என்ற தார்மீக கேள்விக்கோ…. நாம் இறங்காமல் ஓடி வந்து விட்டு அவர்களை நோகலாமா? என்ற நியாயமான கேள்விக்கோ கூட பதில் தேவையில்லை. இறங்க மாட்டார்கள். நாமும் அவர்களுக்காக இறங்க மாட்டோம். ஜல்லிகட்டு இலண்டன் போராட்டத்துக்கு நான் போனேன் - மருந்துக்கு கூட ஈழதமிழரை காணவில்லை. சில இளையோரை தவிர. இந்தியன் ஹைமிசன் முன் வெளிநாட்டிலோ, இலங்கையிலோ காவிரி, நீட், தூத்துகுடி விடயங்களில் நாம் போராடி உள்ளோமா? இதுதான் எமது தொப்புள்-கொடி உறவின் யதார்த்தம். இரு பக்கத்திலும்.
  13. சரி! ஆனால் என் கேள்வி, தமிழ் நாட்டுத் தமிழர் ஏன் வீதிக்கு இறங்க வேண்டும்? இங்கே தமிழ் நாட்டுத் தமிழரைத் திட்டிக் கொண்டிருக்கும் சீமான் தம்பிகளே இறங்கவில்லை, மாறாக ஏறினார்கள் 😎: கிளாலிப் படகில், உழவு யந்திரத்தில், ட்ரெயினில், விமானத்தில்! இப்ப வந்து "வயசுக்கு வராமையால் ஏறினேன்" என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டுத் தமிழர் எல்லோரும் ஈழவருக்காக தீ குளிக்க வேணுமெண்டு அட்வைஸ் வேற. இன்னொரு தரப்பு : ஆமி ஊருக்குள் நுழைய முன்னரே "ஆமி என்னைத் தேடினது" என்று வந்த ஆட்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து இணையப் போராளிகளாக படம் காட்டும் குழு தான் தமிழ் நாட்டுத் தமிழர் ஏதோ கடமை தவறி விட்டதாகக் காட்டாப்புக் காட்டுகின்றனர்!
  14. தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..
  15. A/L பாஸ்பண்ணினவனுக்கு ரெண்டு கொம்பு முளைச்சிருக்கு மற்றவனுக்கு இல்லையா..? ஊரில 60வீதத்துக்கும் கூடின மக்கள் ஏலெவலில் ஏதோ ஒருபாடம் இல்லா எல்லாம் பெயில்தான்.. ஆனால் அவர்கள்தான் இந்த இனத்தின் பெரும்பான்மை சமூகம்.. என்ர அம்மா அப்பாகூட ஏலெவல் பாஸ்பண்ணேல்லதான்.. அதுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழாமல் விடேல்ல.. என்ர அம்மா அப்பா போல எத்தனையோ அம்மா அப்பாக்கள் ஏலெவல் பாஸ்பண்ணேல்ல ஆனால் அவர்கள் தங்கட பிள்ளையள் நல்லா இருக்கவேணும் எண்டு தம்மை உருக்கி தம்பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள் வளர்க்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணாதவர்கள் சமூகத்தில் நன்றாக உழைத்து தாமும் முன்னேறி தம் குடும்பத்தையும் முன்னேற்றி இந்த சமூகத்தில் நல்ல உதாரணமனிதர்களாக வாழ்கிறார்கள்.. ஏலெவல் பாஸ்பண்ணி படிச்சு பட்டம் எடுத்தும் உழைச்சு திண்ண களவில அப்பன் ஆத்தாவின் சோத்தை முப்பது நாப்பது வயசு ஆனாப்பிறகும் ஓசியில வெக்கமே இல்லாமல் திண்டுகொழுத்துகொண்டு றோட்டில நிண்டு கொண்டு உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களை நக்கலடிக்குமாப்போல வேசம்போட்டு அரசாங்கத்திட்ட வேலைப்பிச்சை கேட்டதுகள் கிழட்டு மூதேவிகள்.. இதுல ஆர் உயர்ந்தவர்கள்..? ஏலெவல் பாசாகாட்டியும் உழைத்து கெளரவமாக வாழும் துப்புரவு தொழிலாளர்களா இல்லாட்டி ஏலெவல் பாசாகியும் ஆறாவது அறிவு விருத்தி அடையாத சோம்பேறிகளா..?
  16. உண்மை. விபத்து ஒன்று நிகழ்ந்து விட்ட அடுத்த கணம், பலர் மிகவும் பதட்டமடைந்து விடுகின்றனர். அடுத்தது என்ன செய்வது என தடுமாறி விடுகின்றனர். அதுவே அவர்களை தவறிழைக்கவும் செய்து விடுகின்றது. முதல் விபத்து இவரால் ஏற்படுத்தப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன், அந்த இடத்தினை விட்டு தப்பி ஓடாமல், நிற்க வேண்டும். ஆனால் இவர் அவ்வாறு நிற்காமல், அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடியிருக்கின்றார். அதுவே இரண்டம் விபத்தை தோற்றுவித்து இருக்கு என நினைக்கின்றேன் அவ்வாறு வேகமாக ஓடியதால் வீதியின் தடுப்பு சிவரில் மோதி இவரது வாகனம், Ditch இற்குள் சென்று இருக்கின்றது. அதில் இருந்து மகளையும் தூக்கிக் கொண்டு வீதியை சடுதியாக கடக்கும் போதுதான் மூன்றாவது விபத்து நிகழ்ந்து இந்த பெருந்துயரம் நடந்து இருக்கின்றது. இதில் இறந்த குழந்தையின் வீடியோக்கள் பல இச் சம்பவத்தின் பின்னர் வெளியாகியுள்ளன. பார்க்கும் போது மனசு பதறுகின்றது. நான் அடிக்கடி பயன்படுத்தும் வீதி இது. பல தமிழர்களின் உயிர்களை விபத்தில் காவு கொண்ட வீதியும் இது. கொஞ்சம் விசாலமாக இருப்பதால், பலர் கடும் வேகத்தில் தான் இதில் பயணிப்பர். பனிக்காலத்தில் சில இடங்கள் மிகவும் இருளாக இருக்கும். இதில் குளிர் காலத்தில் இரவில் அவதானமாக வாகத்தை செலுத்த வேண்டியது அவசியம். முன்னர் 80/KM வேக வீதியாக இருந்து, பின்னர் பல இடங்களில் 70 ஆக்கி இன்னும் சில இடங்களில் 60 ஆக்கியுள்ளனர். ஆனால் பலர் இன்னமும் 80 KM இல் இருந்து 120 வரைக்கும் செல்கின்றனர்.
  17. சீமனே வெல்வார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், உண்மையே சீமான், சீமானே உண்மை.
  18. வேறு அரசு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்.??? இலங்கையில் தான் போர் நடந்தது இந்தியாவில் இல்லை எனவே… எந்த இந்தியா அரசும் போரை நிறுத்தி இருக்காது ஆயுதம் கொடுப்பதை குறைத்து இருக்கலாம் அல்லது கொடுக்காமல் விட்டிருக்கலாம்… இந்தியா கொடுக்கவில்லை என்றால் சீனா கொடுக்கும் அப்படியான நிலையில் எந்தவொரு கட்சி இந்தியாவை ஆட்சி செய்தாலும் இல்லை இல்லை சீனாவில் வேண்டாதீர்கள் நாங்கள் சும்மா இலவசமாக ஆயுதங்களையும் ஆலோசனைகளும் தருகிறோம் என்பார்கள் தமிழ்நாடு இந்தியா அரசு இலவசமாக இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை தடுக்கவில்லை தடுக்க முடியவில்லை ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவை ஆளவில்லை இந்த ஆயுதங்கள் ஏன் கொடுக்கப்பட்டது போர் செய்வதற்கு தமிழ் பகுதிகளில் வடக்கு கிழக்கு இல் தமிழர்களை சுடுவதற்க்கு குண்டுகள் போடுவதற்கு. இதை தடுக்க முடியாதவர்கள் எப்படி போரை நிறுத்த முடியும் ??? இவர்கள் போராடி இருந்தால் ஒரு குண்டு போட சீமான் உள்பட எல்லோரும் வீட்டில் போய் இருந்து விடுவார்கள் மட்டுமல்ல உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருங்கள்’ வெளியில் போக வேண்டாம் என்பார்கள் இவர்கள் போராடி வென்ற ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .......🙏
  19. கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும்
  20. கோவிலில் சிதறுதேங்காய் அடிப்பதையும் தடை செய்த்தால் இன்னும் மிச்சம் வருமே
  21. சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் இது தலைப்பு. இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔
  22. யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ் விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=309587
  23. வரி விதிப்பு போரினால் ஏட்டிக்கு போட்டியாக வரி விதிக்கப்படின் அமெரிகாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமக்கு தேவையான அதிக சனத்தொகை கொண்ட வரி பிரச்சினைகளற்ற நாடுகளினை நோக்கி தமது இடப்பெயர்வினை ஆரம்பித்தால் அதனால் ஏற்படும் ஆபத்தினை பற்றி குறிப்பிட்டிருந்தேன். கிழக்காசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்திற்கு அடிப்படை கட்டுமானம் இல்லாதிருக்கின்றநிலையில் கூட அங்கு குறைந்த உற்பத்தி செலவினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் தமது பார்வையினை திருப்பியுள்ளன. இந்த நாடுகளில் சனத்தொகை நுகர்வோராக இல்லாத போதும் ஆசிய பிராந்தியத்திற்கும் ஏனைய பிராந்தியத்திற்குமிடையே எந்த வித அரசியல் பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கின்றமையால் ஆசியாவினை மையப்படுத்திய சந்தையினை கருத்தில் கொண்டு பெரிய நிறுவனங்கள் நகரக்கூடும். கந்து வட்டிக்காரன் உள்ளே வருகிறான் என்றால் அது நல்ல சகுனம் அல்ல.😁
  24. தன்னை சமாதானத்தின் தூதராகவும், சந்திரிக்காவை யுத்த விரும்பியாகவும் காட்ட முனைந்த ரணில் 2004, தை 12 தொடர்ந்து பேசிய ரணில், தன்னால் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தமுடியாதென்றும், சந்திரிக்காவே அதனைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், சமாதானத்தை வென்றெடுக்க அயராது உழைத்துவருபவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் சந்திரிக்கா, நோர்வேயின் ஊடாக புலிகளுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்குள் வந்து, தான் முன்னர் எதிர்த்த அதே விடயங்களை புலிகளுடன் பேசி மீளவும் வழங்குவேன் என்று உறுதியளித்து, சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தட்டும் என்று அவர் கூறினார். மேலும் அங்கு பேசிய ரணில், யுத்த நிறுத்தம் செயலற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக எச்சரித்தார். அப்படி நடக்கும் பட்சத்தில் புலிகள் சர்வதேசத்திடம் இலங்கையரசினை நம்பமுடியாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். தனது தீர்மானம் குறித்து மந்திரிசபையிடம் ரணில் விளக்கினார். யுத்தநிறுத்தத்தினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவான காரணிகளில் ஒன்றான இராணுவத்தினதும், புலிகளினதும் போரிடும் அணிகளை தூரத்தே விலத்திவைத்திருப்பதன் ஊடாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதனைச் செயற்படுத்துவதற்கு இராணுவம் மீதான அதிகாரம் தன்னிடம் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த அதிகாரம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படுவஸ்நுவரவில் ரணில் ஆற்றிய பேச்சுக் குறித்து அவரை சில அமைச்சர்கள் எச்சரித்திருந்தனர். அப்பேச்சினூடாக ரணில் சமாதானப் பேச்சுக்களில் இருந்து ஓடி ஒளிந்துகொள்வதாக சர்வதேச நாடுகள் எண்ணச் சாத்தியப்பாடு இருப்பதாகவும், இதனால் அரசுமீதான நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்றும் அவர்கள் கூறினர். ஆனல் இதனை ரணில் மறுத்தார். தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட மூன்று அமைச்சுக்களும் தன்னிடம் மீள கையளிக்கப்படுமாக இருந்தால் பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்திச் செல்ல தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார். ஆனால் சந்திரிக்கா அதனைத் தரமறுத்தால், அவரே சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினையெடுத்து நடத்திச் செல்லட்டும், தேவையானால் எனது ஆதரவையும் வழங்கலாம் என்று அவர் கூறினார். "இந்தச் செய்தி மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். நான் சமாதானத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவே இருக்கிறேன், ஒளிந்து ஓடவில்லை. சந்திரிக்கா பேச்சுக்களை பொறுப்பெடுத்து நடத்த விரும்பினால், எனது முழுமையான ஆதரவு அவருக்கு இருக்கும்" என்று அவர் கூறினார். ரணிலின் புதிய நிலைப்பாடு அவரது தந்திரமான அரசியலைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். முதலாவதாக சந்ந்திரிக்காவினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு, அக்குவேறு ஆணிவேறாக விமர்சிக்கப்பட்டு வந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை அவரே ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது சந்திரிக்காவை சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நோர்வேஜியர்களுடன் பேசவைப்பதன் ஊடாக அவரது புதிய நண்பர்களான ஜே வி பியினருக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே பகைமையினை உருவாக்குவது. மூன்றாவது புலிகளுடன் பேசுவதன் ஊடாக மட்டுமே அரசியல்ச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை சந்திரிக்காவிற்கு புரியவைப்பது. அரசியல் வித்தகரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ரணிலின் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, "ரணிலின் நகர்வுகளை அவதானித்தால் அரசியல்ப் பலப்போட்டியில் தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை, சூழ்நிலையினைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்தி சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்க வைப்பதுதான் என்பது புலனாகிறது. மேலும் சந்திரிக்கா அண்மைய நாட்களில் முயன்றுவரும் மக்கள் விடுதலை முன்னணியினருடனான புதிய அரசியல்க் கூட்டணியைப் பலவீனப்படுத்துவதும் ரணிலின் நோக்கங்களில் இன்னொன்று" என்று கூறினார். புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையோ, நோர்வேஜியர்களின் மத்தியஸ்த்தத்துடன் புலிகளுடன் பேசுவதையோ, அல்லது புலிகளின் கோரிக்கையான இடைக்கால நிர்வாக சபையினை வடக்குக் கிழக்கில் உருவாக்குவதையோ ஜே வி பி யினர் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியின் முதற்படியே இடைக்கால நிர்வாக சபை என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே இடைக்கால நிர்வாக சபை எனும் புலிகளின் கோரிக்கையினை அரசு ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று அவர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே சந்திரிக்கா சமாதானப் பேசுக்கள்;ஐப் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கினால் அரசியல்க் கூட்டணியில் இருந்து தாம் விலகப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் அவரை எச்சரித்து வருகின்றனர். ரணில் விரும்புவதும் இது நடக்க வேண்டும் என்பதைத்தான். சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும் அழுத்தத்தினை உருவாக்கும் ரணிலின் திட்டம் ஏற்கனவே நடந்துவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் ரணில் கூறுவதுபோல சந்திரிக்கா யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவில்லையென்றும், மாறாக புலிகளை தீவிரமான பேச்சுக்களுக்குள் இழுத்துவிட்டு, பிரிக்கப்படாத இலங்கைக்குள் இடைக்கால நிர்வாக சபையினை உருவாக்கும் தமது யோசனைகளை முன்வைக்கும் அழுத்தத்தினை தானே உருவாக்கியதாகவும் சந்திரிக்கா தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிறு அன்று பேசிய ரணில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வினை உருவாக்கும் அடித்தளம் இடப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் யுத்த நிறுத்தத்தினை கலைப்பதன் மூலம் பிரச்சினை மீளவும் திறக்கப்பட்டு நாடு இன்னுமொரு யுத்தத்திற்குள் செல்லும் என்றும் அவர் கூறினார். ஆகவே இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக உருவாகியிருக்கும் அரிதான இச்சந்தர்ப்பத்தினைச் சந்திரிக்கா பாலடித்துவிட்டதன் மூலம், நாட்டின் வளங்களை வீணடித்து, நாடு மீள முடியாத பொருளாதார பின்னடைவிற்குள்ச் செல்ல வழிசமைத்துவிட்டார் என்று அவர் மேலும் கூறினார்.
  25. ரணிலும் சந்திரிக்காவும் ஆடும் அரசியல்ச் சதுரங்கம் 2004, தை 12 இவ்வருடத்தின் முதலாவது மந்திரிசபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை மந்திரிசபை அறையில் நடைபெற்றது. ஜனாதிபதி சந்திரிக்கா இதில் கலந்துகொள்ளவில்லை. அரசியலமைப்பின்படி மந்திரிசபையின் தலைவரே அவர்தான். இவ்வாறான கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குவது வழமை. ஆனால் கார்த்திகை 4 ஆம் திகதி மூன்று முக்கிய அமைச்சுக்களை பலவந்தமாக பிடுங்கிக்கொண்டபின்னர் அவர் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்தே வருகிறார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு வருகைதந்த அமைச்சர்களுக்கு பால்ச்சோறும் இன்னும் சில இனிப்புப் பலகாரங்களையும் ரணில் வழங்கி உபசரித்தார். அப்போது அங்கு பேசிய காணியமைச்சர் ராஜித்த சேனாரத்ன, "சந்திரிக்கா கடந்த வருடம் புதுவருட தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் வழங்கிய உணவைக் காட்டிலும் இது எவ்வளவோ மேலானது" என்று நகைச்சுவையுடன் கூறினார். சந்திரிக்காவினால் தனது வீட்டில் நடத்தப்பட்ட சிற்றுண்டி விருந்து உண்மையாகவே அமைச்சர்களை ஏமாற்றும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே அவர்கள் உணர்கின்றனர். மீண்டும் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அமைச்சர்களை தேநீர் விருந்திற்கு சந்திரிக்கா அழைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆகவேதான் சந்திரிக்காவிடம் பேசிய அமைச்சர்கள், "மந்திரிசபைக் கூட்டத்தை வழமையாக அது நடக்கும் மந்திரிசபை அறையிலேயே வைத்துக்கொள்ளலாம், ஆனால் உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் வந்து உங்களின் வீட்டில் தேநீர் அருந்தி சிற்றுண்டிகளையும் உட்கொள்ளலாம்" என்று கூறினர். அமைச்சர்கள் த‌மது முடிவினை அறிவித்தபோது சந்திரிக்கா சினமடைந்தார். "அவர்களுக்கு இங்கு வர விருப்பமில்லையென்றால், எனக்கும் அங்கு செல்ல விருப்பமில்லை. அவர்களுக்கு எனது வீட்டிற்ட்கு வர விருப்பமில்லையென்றால், அவர்களுக்குப் பாற்சோறு இல்லை" என்று கடுப்புடன் கூறினார். இச்சம்பவம் சந்திரிக்காவிற்கும் ரணிலுக்கும் இடையே இருக்கும் பகைமையினைக் காட்டப் போதுமானது. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட பகைமையே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சில அவதானிகள் கூறுகின்றனர். ரணிலும், சந்திரிக்காவின் இளைய சகோதரரான அநுரவும் ரோயல் கல்லூரியில் ஒன்றாகக் கற்றவர்கள். நண்பர்கள். ஒருவரோடு ஒருவர் நேரத்தைச் செலவிட்டுள்ளதுடன், சிறுவயதில் ஒன்றாக விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சந்திரிக்காவும் இவ்விளையாட்டுக்களில் அவப்போது பங்குபற்றியிருக்கிறார். வேறு சில அவதானிகளோ இவர்கள் இருவருக்கும் இடையிலான பகைமை தத்தமது அரசியல் நோக்கங்களினால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். சந்திரிகாவைப் பொறுத்தவரை தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபின்னரும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதைச் செய்வதற்கு நடப்பில் இருக்கும் அரசியலமைப்பினை மாற்றவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. இதனை 1997 இல் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு ஏதுவாக "அரசியலமைப்பிற்குள் சர்வ வல்லமை பெற்ற ஜனாதிபதிப் பதவியை இல்லாமலாக்குவது" எனும் சரத்தினை உருவாக்குவேன் என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர் செய்ய எத்தனித்து வருகிறார். அதற்காகவே 2000 இல் புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். ஆனால் சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு வரைபினை ரணில் கடுமையாக எதிர்த்தார். இந்த உத்தேச அரசியமைப்பு வரைபு அதிகாரப் பரவலாக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. மாறாக சர்வ வல்லமை பொறுந்திய ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து, பிரதமர் எனும் பதவியின் மூலம் தொடர்ந்தும் பதவியில் இருக்கவே சந்திரிக்கா முயல்கிறார் என்பதற்காகவே இதனை ரணில் எதிர்த்தார். சந்திரிக்காவை அரசியலில் இருந்து முற்றாகவே ஓரங்கட்டுவதன் ஊடாக நாட்டின் அதிகாரத்திற்கு வரும் தனது கனவினை ஈடேற்றவே ரணில் இதனைச் செய்தார். "தமது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காகவே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள், நாட்டைப்பற்றிய அக்கறையென்பது அவர்களுக்குக் கிடடையாது" என்று இவர்களின் அரசியப் பலப் போட்டியை அவதானித்துவரும் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கூறுகிறார். இவர்களின் அரசியல்ப் போட்டியென்பது தனிப்பட்ட காரணங்களினாலேயே நடத்தப்பட்டு வருகிறதென்பதை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் மத்தியில் பேசிய ரணிலின் கூற்று மெய்ப்படுத்தியது. படுவஸ்நுவரவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணிலின் இப்பேச்சு சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும்படி அழுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்கூட்டத்தில் பேசிய ரணில், "சமாதானப் பேச்சுக்கள் நடதுகொண்டிருக்கும் நிலையில், மூன்று முக்கிய அமைச்சுக்களையும் தன்வசமே வைத்துக்கொள்ள சந்திரிக்கா விரும்புவாராக இருந்தால் அவர் புலிகளுடன் பேசி புதிய உடன்பாடு ஒன்றிற்கு வரட்டும். பேச்சுவார்த்தைகள் யுத்தநிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. யுத்த நிறுத்தத்தில் நாம் மேற்கொள்ளவேண்டியவற்றை ஒழுங்காகச் செய்வோம் என்கிற உறுதிப்பாட்டுடனேயே புலிகளுடன் பேச்சுக்களை நாம் அரம்பித்தோம், ஆனால் இன்றோ அதனைக் குழப்பியடிக்கும் நோக்கில் எம்மிடமிருந்து முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்திருக்கிறார். ஆகவே, இன்றிலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நாம் செய்வதாக உறுதியளித்த பல விடயங்கள் வழக்கொழிந்து போகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுதலித்துக்கொண்டு நாம் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தமுடியாது" என்று அவர் கூறினார்.
  26. இதுக்கே சலிச்சுகிட்டா எப்படி… அடுத்து விஜி அண்ணி, திகதிகள் சம்பந்தமா சில fact-findings கேட்பேன் - சும்மா ஆடிப்போய்டுவியள், ஆடி 🤣.
  27. மிகவும் துயரமான இந்த செய்தியில் என்ன எழுதுவது என்று கடந்து போய்க் கொண்டிருந்தேன், நிழலியின் கருத்தைப் பார்த்ததும் எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். முதலில், ஏன் நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக ஓட வேண்டிய தேவை எழுகிறதென எனக்குப் புரிவதில்லை. விஞ்ஞான முறைப்படி, இன்ன வேகத்தில் போகும் வாகனம், பிறேக் போட்டால் இவ்வளவு தூரத்தில் ஓய்வுக்கு வரும் என்று கணக்கிட்டுத் தான் வேகக் கட்டுப் பாடுகளை நிர்ணயிக்கிறார்கள். பொலிசைக் கண்டு பிடிக்கும் றேடாரை அமேசனில் வாங்கிப் பொருத்திக் கொண்டு, பொலிஸ் இல்லாத இடங்களில் மிகவேகமாக ஓடும் சாரதிகள் புத்திசாலிகள் என்று தான் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களைப் போன்ற மூளை கெட்ட முட்டாள்கள் இல்லையென்று நான் நினைத்துக் கொள்வேன். இரண்டாவது, இறந்த ஒருவரின் உடலின் படத்தை, காணொளியை இணையத்தில் பரப்புவது அவமரியாதையான செயல். எதிர்காலத்தில், அந்தக் குடும்பத்தின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடிய ஒரு இழி செயல். யார் இதைச் செய்கிறார்கள்?
  28. உண்மை முழுக்க முழுக்க உண்மை ஒவ்வொரு தமிழ்நாடு தமிழனும் அடிமை தான் உங்கள் தலைவர் சீமான் இதை இன்னும் புரியவில்லை ...பெரியார் அறிவை சீமான் பெற்றுக் கொள்ள 100 ஆண்டுகள் போதாது ...படிக்கட்டும். தொடர்ந்து 2009 இல் இலங்கையில் போரை நிறுத்த. முடியாமைக்கு காரணம் பெரியார் சொன்னது தான்
  29. பெரியார்-செல்வா காலம் அல்ல, இன்று வரைக்கும் இதுதான் உண்மை. யதார்த்தம். பாகிஸ்தானின் நதிகள் பல ஆரம்பமாவது இந்தியாவில் - ஆனால் அவற்றை மறித்து இந்தியா அணை கட்ட முடியாது. காரணம் சர்வதேச ஒப்பந்தங்கள். ஆனால் - கர்நாடகா, ஆந்திரா, கேரளா தமிழ் நாட்டுக்குள் பாயும் நதியை மறிக்கலாம். உச்ச நீதி மன்றம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தமிழக தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே போலத்தான் நீட்…. வடநாட்டுக்காரர் குடியேற்றம்…. இந்திய ஒன்றியத்தில் அங்கமாக தமிழ் நாடு இருக்கும் வரை, சீமான் அல்ல, தலைவர் பிரபாகரனே தமிழ் நாட்டின் முதல்வர் ஆனாலும் இதுதான் யதார்த்தம். இதைத்தான் பெரியார் தமது அடிமை நிலை என்றார்.
  30. ச‌ரி மோதிப் பாப்போம் ஆனால் அவ‌தூற‌ கையில் எடுக்க‌ கூடாது👍....................
  31. சீமான் இந்தளவுக்கு மனிதத்தன்மை அற்று பேசியதில்லை. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு மற்றும் பிரிவுகள் சார்ந்த சிந்தனை உடைய உங்களை போன்றவர்கள் ஆபத்தான பேர்வழிகள். இதுக்கு ஒரு லைக் வேற.
  32. தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314877
  33. நான் ஒருபோதும் சீமானின் தனிப்பட்ட வாழ்வு பற்றி பேசியதில்லை. ஆனால் கேள்வி என்னவென்றால் சீமான் சமூகத்துக்கு என்ன செய்து இருக்கின்றார் என்பது தான். வை கோபலசாமி போன்றோர் தமிழர்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் செய்த உதவிகளில், காட்டிய பாசத்தில் ஒரு துளி கூட சீமான் செய்தது கிடையாது. செய்த உதவி எல்லாம் பிரபாகரனையும் புலிகளையும் எமது போராட்டத்தையும் நாறடித்து, ஈழத்தமிழர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்து, எங்கள் மேல் அளவுகடந்த பாசத்தை காட்டிய, எங்களுக்காக சிறை சென்ற, அடி வாங்கிய, எமக்கு உதவப் போய் தன் குடும்பத்தை கரை சேர்க்க முடியாமல்ப் போன, திராவிட இயக்க, பெரியாரிய இயக்க தோழர்களை எமக்கு எதிரிகளாக்கி ரசித்தது மட்டுமல்லாமல் வீட்டில் பெற்ற தாயையே தூசணத்தில் திட்டும் மூதேசிகளை, தெருச்சந்தியில் நின்று தண்ணி அடித்த கூட்டத்தை, Al பாஸ் பண்ணாத கூட்டத்தை,ஊரில் ஒன்றுக்கும் உதவாததுகள் என்பதாலும், காதல் தோல்வியாலும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டத்தை, சுடர் ஒளி, உதயன் போன்ற தரத்தில் தாழ்ந்த பத்திரிகை செய்திகளைக் கூட வாசிக்காத கூட்டத்தை, இவர்களுடன் எல்லாம் சேரக்கூடாது என்று பெற்றோர் சொல்வார்கள் அல்லவா அந்தக் கழுசறைகளை ஈழத்தின் முகவரி ஆக்கிவிட்டது தான்
  34. அதுதான் சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. அதை நிறைவேற்றால் அவர் அயர மாட்டார். போலி அரசியல் வாதிகள், போலி சாமியார்கள், போலிப்பத்திரிகையாளர் சமுதாயத்தை அழிக்கின்றனர்.
  35. இல்லை சார்...நான் அப்படி சொல்வேனா...அல்வாய் சாத்த்ரிமார் பகிடி கனக்க இருக்கு...எழுதினால் என்னுடைய முகமூடி கிழிஞ்சுது...ஊர் பக்கம் நினைக்கேலாது
  36. 1996ம் ஆண்டு சிங்க‌ள‌ இரானும் சாவகச்சேரிய‌ பிடிச்சு மீசாலையை பிடிக்கும் முனைப்புட‌ன் ப‌ய‌ங்க‌ர‌ செல் தாக்குத‌லோட‌ முன்னேறி கொண்டு வ‌ந்தாங்க‌ள் மீசாலை அருகில் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு குண்டு ம‌ழை அந்த‌ குண்டு ம‌ழைக்கு அருகில் த‌னிய‌ போய் சொன்னான் மாமாவுக்கு நாங்க‌ள் வ‌ன்னிக்கு போக‌ போகிறோம் அத்தை உங்க‌ளையும் வ‌ர‌ சொல்லுகிறா என்று சிங்க‌ள‌ இராணுவ‌ம் அடிச்ச‌ செல்க‌ள் நில‌ ந‌டுக்க‌ம் போல் எல்லா ப‌க்க‌மும் அதிருது அந்த‌ சிறு வ‌ய‌தில் நினைத்தேன் திரும்ப‌ அத்தை வீட்டை உயிருட‌ன் போவேனா என‌ ஏதோ த‌ப்பிச்சு கிளாலி க‌ட‌லில் ஒரு இர‌வு த‌ங்கி அடுத்த‌ நாள் பின்னேர‌ம் தான் ப‌ர‌ந்த‌ன் வ‌ந்து சேர்ந்தோம் அப்ப‌வும் ஜெட் விமான‌ம் வானால் ப‌ற‌ந்த‌ ப‌டி..................இப்ப‌டி ப‌ல‌ துய‌ர‌ங்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அனுப‌வித்து விட்டு தான் புலம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தேன்................இதே துய‌ரம் நீங்க‌ளும் ப‌ட்டு இருக்க‌லாம்😞...................
  37. குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. The president announced ‘emergency 25% tariffs’ after planes of undocumented migrants were not allowed to land in the country ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார். ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.
  38. வடக்கு அபிவிருத்தி..தேசிய ஒற்றுமை ...மாகாண சபையை பற்றியும் சொல்லுங்கோ... நீங்கள் என்னத்தைசெய்தாலும் சீனாவின் நண்பர்கள் அவர்கள்
  39. நாங்கள் திராவிட தமிழர்கள் அல்ல என்றால் நீங்கள் சீமான் ஆதரவாளர் என்பது என் கருத்தை நீ ஆமோதிக்கும்வரை நீ நசுக்கப்படுவாய் என்பது போன்ற ஏகாதிபத்தியவாத மனநிலை தான். இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே. எனவே எது நடிப்பு என்பது யாழ் களம் அறியும். எனது கருத்து மற்றும் கணிப்பு தமிழக மக்கள் மற்றும் வாக்காளர்கள் சார்ந்தது மட்டுமே. ஈழத் தமிழர்கள் சார்ந்தது அல்ல. ஈரோடு தேர்தலில் பின் பேசுவோம். நன்றி..
  40. நம் முன்னோர்கள் கலிகாலம் என இதைத்தான் அறிவுறித்தினரோ? கவிதை ஆணித்தரம்.
  41. @செவ்வியன் @வைரவன் இருவர் எழுதும் சாயலும் கோஷான் போல உள்ளது….. தூப்பறியும் சிங்கம் சாம்பு அவர் அல்லக்கை சோம்பு இருவரும் இதை கூர்ந்து கவனிக்க வேண்டும் 🤣 @Nathamuni @வீரப் பையன்26
  42. என்ன அல்வாயன் நீங்க மட்டும் தான் சாத்திரியாரா? பணம் கிடைத்ததோ?கிடைக்கும் கிடைக்கும்.
  43. சரி…சரி… பழைய ஆட்களை எல்லாம் கூட்டி வந்து, புதிய ஐடிக்களை உருவாக்கி, சீமான் ஆதரவு அலை 2 ஐ யாழில் உருவாக்கும் ஒரு திட்டம் கைவருவது போல தெரிகிறது🤣. எத்தனை பேரையும் கூட்டீட்டு வாங்க, ஒத்த ஐடியில் நிண்டு ஓட, ஓட விரட்டுவோம்🤣
  44. பையா பல தடவை சொல்லி விட்டேன் எங்கே இந்த முட்டாள் சுமத்திரன் திரிகளில் அடிவான்குகிராரோ உடனே சீமானின் திரியை காரண காரியமற்று தொடங்குவார்கள் அப்படி தொடங்கி சிலரை வெளியேற்றுவதே ஒரே நோக்கம் அமைதியாக இருங்கள் தேவையற்ற சீண்டல்களில் மாட்டு பட வேண்டாம் . போட்டோ பிழை என்றால் எத்தனை ஒன் லைன் தளம்கள் பக்ட் செக் இருக்கு அங்கு போட்டு பார்க்கலாமே இவ்வளவு கொள்ளுபடுகிற கூட்டம் ரிவேர்ஸ் செக் பண்ணலாமே அவர்களுக்கு அதெல்லாம் தெரியும் ஆனாலும் வம்பிழுத்து உங்களை போன்றவர்களை டென்சன் ஆக்கி சுமத்திரன் திரிகளில் வாங்கிய அடிகளை சமபடுத்துவதே அவர்களின் நோக்கம் .
  45. கவிஞரே, உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகின்றது...............🤣. மணடைதீவுச் சாத்திரியார் சொன்னது போல வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை............ அதுவும் யாழ் களத்தில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் வாழ்வு நல்லாகவே இருக்கின்றது என்று தான் சொல்ல வந்தேன்............😜.
  46. சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திகள், விடயங்கள் அலசப் படுவது தவிர்க்க முடியாதது! வைரவன் போலித் துவாரகா விடயத்தையும் இங்கே இணைத்து வாசகர்களுக்குத் தெளிவூட்டிய ஒருவர் என்பதை மறக்கக் கூடாது: Don't shoot the messenger!
  47. சந்திரிக்காவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் ஓடிய ரணிலும், தனது பதவிக்காலத்தை நீட்டிக்க சூழ்ச்சியில் இறங்கிய சந்திரிக்காவும் அரசியல் சிக்கலில் முக்கிய பங்கொன்றினையாற்றி, ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்வதற்கு மகாசங்கத்தினரை டெயிலி மிரர் அழைத்துக்கொண்டிருந்த அதே தருணத்தில், இச்சிக்கல் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. கார்த்திகை 4 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா தன்வசப்படுத்திக் கொண்டபோதே இச்சிக்கல் ஆரம்பமாகியிருந்தது. புலிகளுடன் தான் அரம்பித்திருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு இம்மூன்று அமைச்சுக்களும் தனக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தார். ஆனால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினையும் ஊடகத்துறையினையும் ரணிலிடம் கையளிக்க இணங்கிய சந்திரிக்கா, பாதுகாப்புத்துறையினை மட்டும் தன்னுடனேயே வைத்திருக்கப்போவதாகக் கூறிவிட்டார். சந்திரிக்கா தற்போது பாதுகாப்புத்துறை ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புக் கூறுவதாக வாதாடுகிறார். தனது பலத்தினை உறுதிப்படுத்த பாதுகாப்புத்துறை தன்னிடமே இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பொன்றினையும் அவர் கைவசம் எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அரசாங்கமும், சட்ட வால்லுனர்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து கேள்வியெழுப்பி வருகின்றனர். உச்சநீதிமன்றத்திடம் பாதுகாப்புத்துறையினை தன்னிடம் வைத்திருப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதியளிக்கின்றதா என்று ஆராயுமாறு கோருவதற்குப் பதிலாக , அதனிடமிருந்து தீர்ப்பொன்றினை தனக்குச் சார்பாகப் பெற்று வைத்திருக்கிறார் என்று அவர்கள் சந்திரிக்கா மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பாதுகாப்புத்துறையினை தன்னிடம் பத்திரமாக வைத்திருப்பதற்கு உச்சநீதிமன்றத்தினைப் பாவித்திருக்கும் சந்திரிக்கா, இதற்கு மேலதிகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்த இன்னும் சில பொறுப்புக்களையும் தன்னிடம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் தற்போது பாதுகாப்புத்துறையின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கு அவசியாமானது என்று கருதப்படும் கைதிகளின் விவகாரம் தற்போது சிக்கலில் மாட்டுப்பாட்டிருப்பதாக சட்டவாளர் டெஸ்மண்ட் பெர்ணான்டோ கூறுகிறார். ரணில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இராணுவமும், பொலீஸாரும் அவரின் கீழ் கொண்டுவரப்படுவது இன்றியமையாதது என்று அவர் கூறுகிறார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி செய்வதாக ஒத்துக்கொள்ளப்பட்ட பல விடயங்களைச் செய்வதற்கு ரணில் அரசாங்கத்தின் கீழ் இராணுவம், கடற்படை, பொலீஸ் மற்றும் சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் இருப்பது அத்தியாவசியமானது என்றும் அவர் கூறுகிறார். கடந்த வாரம் இடம்பெற்ற வானொலி உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிருப்பதற்கான காரணத்தினை ரணிலின் மீது சுமத்தியிருந்தார். ரணில் பேசிவரும் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் என்பது அவரது கற்பனை மட்டுமே என்றும் ரணிலை அவர் விமர்சித்தார். பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை தான் ரணிலுக்குக் கொடுக்க விரும்பியபோதும், அவர் பிடிவாதமாக பாதுகாப்புத்துறை உட்பட அனைத்து அமைச்சுக்களையும் தன்னிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பது என்கிற புலிகளின் முடிவினாலேயே அவை தடைப்பட்டு நிற்பதாகவும், ஆனால் பேச்சுக்கள் தடைப்பட்டதற்கான பழியினை ரணில் தன்மீது சுமத்திவருவதாகவும் சந்திரிக்கா மேலும் கூறினார். தன்மீது சந்திரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுக்களையடுத்து ரணில் ஆத்திரமடைந்து காணப்பட்டார். தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்திய ரணில், "சந்திரிக்கா தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டே போகிறார். பேச்சுவார்த்தைகள் தடைப்பாட்டு நிற்பதற்கான பழியினை அவர் என்மீது சுமத்துகிறார். மக்களை மடையர்களாக்கும் அவரது கைங்கரியத்தை நாம் இனிமேலும் அனுமதித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் திருப்பித் தாக்க ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். சந்திரிக்காவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை ரணில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆரம்பிக்கலானார். சர்வதேசத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் சந்திரிக்கா மீது சர்வதேசம் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இதற்காக தனது அமைச்சரான மிலிந்த மொரகொடவை வோஷிங்டன், ஒஸ்லோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸ்ஸள்ஸ் ஆகிய இடங்களுக்கு பிரச்சாரப் பணிக்காக அனுப்பி வைத்தார். வோஷிங்டனில் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சேர்ட் ஆர்மிட்டேஜைச் சந்தித்த மிலிந்த மொறகொட, ரணிலினால் வழங்கப்பட்ட செய்தியொன்றை அவரிடம் கையளித்தார். இதனையடுத்து ஆர்மிட்டேஜ் உடனடியாகச் செயலில் இறங்கினார். சந்திரிக்காவிற்கு அவர் அனுப்பிய செய்தியில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். தற்போது ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியும், அரசியலமைப்புச் சிக்கலும் சமாதான முயற்சிகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக பிரதமருக்கு இருக்கவேண்டிய அதிகாரங்களை தெளிவாக வரையறை செய்து , கையளிப்பது அவசியமானது என்றும் அவர் கூறினார். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா, பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாது இழுத்தடிக்கப்படுமானால் ஏனைய உதவி வழங்கும் நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை மீள ஆர‌ம்பிப்பதற்கான வழிமுறைகள் ஆராய்ந்து அதன்படி தாம் நடக்கவேண்டியிருக்கும் என்றும் சந்திரிக்காவை மறைமுகமாக எச்சரித்திருந்தார். ஆனால் சந்திரிக்காவிற்கு தாம் அனுப்பிய மிரட்டல்ச் செய்தியுடன் மட்டுமே அமெரிக்கர்கள் நின்றுவிடவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கொலின் பவல் ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் தனித்தனியாக எழுதிய கடிதங்களில் தமக்கிடையே இருக்கும் அரசியல்ச் சிக்கலினை உடனடியாகத் தீர்த்துக்கொண்டு பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது அவசியம் என்று கேட்டிருந்தார். மேலும் சந்திரிக்காவிற்கு கொலின் பவல் அனுப்பிய கடிதத்தில் ரணிலிடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பலவந்தமாக கையகப்படுத்திக் கொண்டமைக்கான தனது கண்டனத்தையும் பதிவுசெய்திருந்தார். ரணிலுக்குச் சார்பான அமெரிக்கர்களின் நிலைப்பாட்டு சந்திரிக்காவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பேச்சுக்களை எப்படியாவது நிறுத்தி, மீளவும் யுத்தத்தினை ஆரம்பிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் சந்திரிக்காவின் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைனைக் கைச்சாத்திடுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சிங்கள மார்க்ஸிஸ்ட் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர், அமெரிக்காவின் நிலைப்பாட்டினையடுத்து கலவரமடைந்ததுடன், உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்காவை ரணில் அநாவசியமாக இழுத்துவிட்டிருக்கிறார் என்றும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர். மேலும் அமெரிக்காவின் உளவாளியாக ரணில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ரணிலுடன் அரசியப் பலப்போட்டியில் ஈடுபட்டிருந்த அதேவேளை சந்திரிக்கா இன்னொரு அரசியல் சிக்கலையும் திட்டமிட்டே கட்டவிழ்த்துவிட்டார். அதுதான் தான் இரண்டாவது தடவையாகவும் 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த விடயம். 1994 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சந்திரிக்கா முதன்முதலாக ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார். அதன்படி அவரது 6 வருட கால ஆட்சி 2000 ஆம் ஆண்டு மார்கழியில் முடிவிற்கு வரவேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு மார்கழியில் ஜனாதிபதித் தேர்தலினை நடத்துவதற்கு அவர் முடிவெடுத்தார். தேர்தல் நடந்து, அவர் வெற்றிபெற்றதனையடுத்து உடனடியாகவே அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி 2005 ஆம் ஆண்டு மார்கழியில் அவரது பதவிக்காலம் முடிவிற்கு வருதல் வேண்டும். ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்திகளின்படி சந்திரிக்கா தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் மார்கழி 2000 இலேயே இரகசியமாகச் செய்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அக்காலப்பகுதியில் விவசாய அமைச்சராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த எஸ்.பி.திசாநாயக்கா கூறுகையில் இவ்வாறான இரண்டாவது இரகசிய பதவிப்பிரமாணம் ஒன்று நடந்ததுபற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சந்திரிக்காவின் பதவிக்காலத்தை இன்னும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பதற்காகவே இவ்வாறான சூழ்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். இச்செய்திகளினையடுத்து கருத்துத் தெரிவித்த ரணில் அரசாங்கம், தம்மைப் பொறுத்தவரை சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 உடன் நிறைவிற்கு வருகிறது என்றும், அதன்பின்னர் ஒரு நாளைக்கேனும் அவர் பதவியில் தொடர்ந்து இருப்பதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தது. தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் மார்கழி 1999 இலேயே இடம்பெற்றிருப்பதனால், சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 இல் முடிவிற்கு வருவதாகத் தெரிவித்தார். "2005 மார்கழியில் நான் தேர்தலினை நடத்துவேன்" என்று அவர் மேலும் கூறினார். தன்னால் கசியவிடப்பட்ட இரண்டாவது பதவிப்பிரமாணச் சூழ்ச்சிபற்றிய தெளிவுபடுத்தலினை இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் உசிமாநாட்டின் பின்னர் நாடுவந்து செய்யவிருப்பதாக சந்திரிக்கா கூறினார். ஆகவே இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதனை அரசாங்கம் அப்போதைக்கு கிடப்பில் போட்டு, சந்திரிக்கா நாடுதிரும்பும்வரை காத்திருக்க முடிவெடுத்தது. எதிர்வரும் வாரங்கள் சுவாரசியம் மிக்கவையாக இருக்கப்போகின்றன. சந்திரிக்கா என்ன செய்யப்போகிறார்? ரணிலுடன் சமரசத்திற்கு வருவாரா? போன்ற கேள்விகள் அனைவர் மனதிலும் தற்போது எழுந்திருக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.