Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3052
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  3. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    13683
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5417
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/25 in all areas

  1. இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ
  2. நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார். பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை. ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன். தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார். இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!
  3. ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.
  4. பையன்.. இங்கை இவை குத்தி முறிய, அங்கே இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிட்டார் 😁
  5. இந்த விடையத்தில் யேர்மானியரைப் போற்றவேண்டும். ஒருமுறை நான்வந்த புதுதில் என் பெயரிட்டு யேர்மனி என்ற முகவரிமட்டும் இட்ட என் நண்பர் ஒருவரின் கடிதம் என்னை வந்தடைந்தது.😁
  6. இந்தியாவில் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும், இலங்கையில் தெற்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும் இருக்கின்றது. சிங்களவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள், அதனால் வட இந்தியருக்கு உள்ள அதே பிரச்சினை சிங்களவர்களுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை. இந்தியாவில் ஒரு நண்பர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, எந்த இடம் என கேட்டார் வைத்தியசாலை ஊழியர், அதற்கு இலங்கை என கூற, இலங்கை கிரிக்கட் அணியினர் போல அனைத்து இலங்கையர்களும் அரக்கர்கள் போல் இருப்பார்கள் என நினைத்தேன் என கூறினார் (இது நடந்தது 90 களின் பிற்பகுதி) இந்தியர்களுக்கு இதிகாச புராணங்கள், இலங்கையர்களுக்கு மகாவம்சம், நிறைய ஒற்றுமைகள் இருக்கு.😁 ஆனால் இந்த வெளிநாட்டு பயணங்கள் இந்திய, இலங்கையில் இருந்த அடிமட்ட மக்களின் சமூக வாழ்க்கை தரத்தினை உயர்த்தியுள்ளது, இது சமூக ரீதியான நல்ல மாற்றம்.
  7. விஜய்க்கு வை பிரிவு பாதுகாப்பு தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஷாருக், சல்மான், கங்கணா இவர்களுக்கு வை பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு இந்தியா முழுவதும் இது கொடுக்கப்பட்டிருக்கின்றது. விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டுமே. ஷாருக்குக்கு அடுத்ததாக ஒழுங்காக வரி கட்டும் பிரபலம் விஜய், அவருக்கும் ஒரு வை பிளஸ் கொடுத்திருக்கலாம் தானே............. தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு ஒரு இளக்கம் தான்....................🤣. சீமானிடம் இந்த வை பிரிவுப் பாதுகாப்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: எனக்கு எதற்கு பாதுகாப்பு...................... நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு..................😜. விடிந்தால் பொழுது சாயும் வரை உலகம் முழுக்க தனித்தனியே சிரிக்க வைக்கின்றனர் பலர்.....
  8. எனது அயல் நண்பர் ஒருவர் ஊருக்கு போய் விட்டு சென்றகிழமை திரும்பி வந்தார். அவரிடம் என்ன ஊர்ப்புதினம் என விசாரித்தேன். பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு..... இங்கிருந்து தன் பாவனைக்காக கொண்டு சென்ற கைத்தொலைபேசியை வெளியில் எடுக்கவே தனக்கு வெட்கமாக இருந்தது என கூறினார். அவ்வளவுக்கு அங்கை வேற லவல்.😎
  9. ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!
  10. ஒரு பதாகையில் "சாராய யாவாரியை துரத்துவோம்" என்று இருக்கிறது. தமிழ்வின் "யாவாரி" யைக் காப்பாற்ற சுமந்திரன், சாணக்கியன் மீது செய்தியைத் திருப்பி விட்டிருக்கிறது. தமிழ்வின் வாய்க்கால் வெட்ட ரண்டு பேர் "மம்பட்டியோட" றெடியா நிப்பீனம் யாழில்😎!
  11. சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அருமைதம்பி…இங்கு தலை குனிந்தது..தமிழினம்தான்.. உன்னுடைய யூடுயூபின்பெயரோ ஈழம் ஸ் ரீட் வு லக் நிச்சயம் உனக்கு சுதந்திரம் விளையாடு… வார்த்தைக்கு வார்த்தை அனுர புகழ்பாடும் தம்பி.. மகிந்தவின் வீடு கிழப்பலுக்கு வார்த்தையாலம்தான் செய்வார் மகிந்தவுக்கு வடிவாக கடிதம் எழுத மாட்டார் ஏன் தெரியுமா தம்பி…. தென்பகுதி அரசியல்வேறு.. வடபகுதி அரசியல் வேறு… வார்த்தை ஜாலத்தால் வெட்டிவிழுத்தலாம் வடபகுதியை. ஏனெனில் எழுத்து மூலத்தில் எதையும் நீங்கள் கேட்கமாட்டியள் தலைவர்கள் முதல் தம்பிவரை பூம் பூம் மாடுகள்…இதுதான் அவருடைய சுதந்திரம் படம் கிளியர் இல்லை உடனடியாக போனுக்கு காசனுப்பு அண்ணன் உயிருக்கு பயந்தோ உழைப்புக்காகவோ வெளிநாட்டில் அசைலம் அடிக்க உதவினதும் ஈழப்போராட்டம்தான் தம்பி அந்த நன்றிக் கடனாவது உனக்கிருந்தால் உப்பிடியெல்லாம் தலைப்புப்போட்டு உசுப்பேத்த மாட்டாய் தம்பி உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது தம்பி.. அனுபவி ராசா அனுபவி.. பிரியாணிக்கடை பரோட்டக்கடை போயே மில்லியனில் உழைப்பவன் காசு வாங்கிவிட்டு கடை திறக்க வந்தவரை… கோயில் கட்டி கும்பிடாத குறையாக முன்னாலும் பின்னாலும் வழிந்து திரிந்தியளே அப்பவே அவன் நினைத்திருப்பான் இவங்களா ஈழத்துக்கு போராடின சனம்.. இந்த ஜன்மங்களா அவ்வளவுக்கு வழிகின்றீர்களே உங்கடை சுதந்திரதாகம் ஓசிப் பிரியாணிக்கும் ஓடி ஒடி படப்பிடிப்புக்கும்தான் சரி அவன் முன்னொரு தடவை சொன்னது சரியென நினைத்திருப்பான்... போதும்..போதும் போன் கிடைத்தால் போறடமெல்லாம் போகஸ் பண்ணி படமெடுத்து போடுவது உங்கள் சுதந்திரம் தம்பி இப்பவும் போரில் தொலைத்தவர்களை தேடும் உறவுகளை யோசியுங்கள் நிலமிழந்து அலைபவரை பாருங்கள் உறவினரை இழந்த அனாதைகளை யோசியுங்கள் அப்ப தெரியும் உங்கள் சுதந்திரத்தின் வலி அனுபவியுங்கள்...உங்கள் சுதந்திர தினத்தை
  12. றோ.. ஓணாண்டி றோ. சீமான் றோ.. கபொஇத்தன் றோ.. உங்கட வீட்ட புள்ளகுட்டியையும் றோ எண்டுவியள் இன்னும் கொஞ்சநாள் போக.. 🤣🤣 இந்தாளுக்கு றோ விசர் புடிச்சிருக்கு..🤣🤣 இரவும் பகலும் கம்பியூட்டர்ல இதையே எழுதிக்கொண்டிருந்தா அடுத்தது வீட்டில மனுசியயும் நீ றோ ஆள்தான எண்டு கேக்குற நாள் கனதூரம் இல்ல..🤣🤣 புல்லா மேல்வளம் தட்டப்போகுது துலைவார் றோவால..🤣🤣
  13. அவ‌ர் பெரிய‌ விஸ்னேஸ் ஆளை இருந்தால் ஊதிய‌ம் வேறு மாதிரி கூட‌ இருக்க‌லாம் சாதார‌ன‌ கூலி தொழில் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு பென்ச‌ன் காசு மிக‌ குறைவு அண்ணா............... பெரிய‌ ஜ‌பிஎஸ் மார் கூட‌ 3000 அவுஸ் டொல‌ர் எடுக்க‌ மாட்டின‌ம் பென்ச‌ன் போன‌ பிற‌க்கு................. இந்தியாவில் ப‌ண‌க்கார‌ர்க‌ளை விட‌ பிச்சை கார‌ர்க‌ள் தான் அதிக‌ம் டென்மார்க்கில் இள‌ம் பென்ச‌ன் ஆட்க‌ளுக்கு 3024 அவுஸ் டொட‌லர்..............சில‌ருக்கு 4000 அவுஸ் டொல‌ரும் கொடுக்கின‌ம் 66வ‌ய‌துக்கு பிற‌க்கு இந்த‌ நாட்டு பென்ச‌ன் காசு மிக‌ மிக‌ குறைவு......................
  14. விளையாட்டுச் சாமானுகள் வைக்கவும் இடம் தேவைதானே? காருக்குள்ள இருக்கிறதெல்லாத்தையும் வீட்டுக்குள் கொண்டுவந்து வைக்கப் போகிறேன் என்று சொல்லிப் பாருங்கள். விளையாட்டுச் சாமானுகளுடன் சேர்ந்து தூங்க வேண்டியும் வரலாம். காரை வெளியே கொண்டுபோய் விட்டு பெரியதொரு Everything Free என்று விளம்பரம் போட்டுப் பாருங்கள்.
  15. உண்மை அண்ணா இவ‌ரின் க‌ட‌ந்த‌ கால‌ க‌ணிப்புக‌ள் பிழைச்ச‌து கிடையாது................ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்🙏🥰👍.....................................
  16. அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய அணி இந்திய அணியே.............😜. 80ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டை மிக அதிகமாக பின்பற்றியிருக்கின்றேன் (ஆனால் கிரிக்கெட் விளையாடினது மிகக் குறைவு, உதைபந்தாட்டம் தான் அப்போது எப்போதும் விளையாடுவது....). இந்திய வீரர்களைத் தான் பிடிக்கும். பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்புமே இருந்ததில்லை............... கடந்த டி - 20 உலகக் கோப்பை களப் போட்டி வரை. இந்திய அணி மீது இன்னமும் அதே அபிமானம் இருக்கின்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லக் கூடும் என்ற ஒரு நினைப்பிலும் (எந்த விதமான ஆராய்வுகளும் இல்லாமலேயே), களப் போட்டி கலகலப்பாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இருக்கின்றேன். அதிலும் என்னுடைய தெரிவு இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்................🤣.
  17. பையன் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், உணர்ச்சி வசப்படாமல் கருத்தாடுங்கள், அனைவருக்கும் அவர்களது கருத்துரிமை உள்ளது.
  18. பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுப்பதற்க்கு புண் தேவைதான். அம்மண்ணின் மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வட்டுவாகல் பாலம் எவ்வளவு முக்கியமானது என்று.
  19. விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் RANI KARTHIC2 Min Read இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். Published:Today at 2 PMUpdated:Today at 2 PM சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சீமான் அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். சென்னை உயர் நீதிமன்றம் மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣. ஆனால் நீதிபதி விடுவாரா? வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா? அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா? அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.
  20. 🤣................. நூறு F-35 யுத்த விமானத்தை விற்றாலும், எட்டு பில்லியன் டாலர்கள் தான் வரும். அதில் செலவு போக இலாபம் இன்னும் குறைவாகவே இருக்கும். ஒரு வருடத்தில் ஆயிரம் பில்லியன் டாலர்களை எப்படிக் குறைக்கலாம் என்று யோசிக்கின்றார்கள், அண்ணா..............
  21. டிஸ்கி மேற்கு நாடுகளில் கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் தண்டணையில் முடிவது மிக குறைவான சதவீதமே. அப்படி இருக்க - ரோவின் ஏஜெண்டான, மோடிக்கு இஸ்டமான (அவரே சொன்னது) சீமான் அதிமுக, திமுக இரு அரசுகளோடும் டீல் பேசி வழக்கை இரு தடவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயன்றுள்ளார். விஜயலட்சுமிக்கு மனதளம்பல் இருக்கலாம். அதனால் மட்டுமே அவர் சொல்வது பொய் என்றாகாது. தூசண திருமுருகன், பாக்கியராசன் போன்ற புரோக்கர்களிடம் பேசி, அண்ணன் இனியும் உங்களை திருமணம் செய்வார், மாதாந்த ஜீவனாம்சம் தருவார் என்ற பொய்களை நம்பாமல் - வழக்கை தைரியமாக நடத்தி, சட்டப்படி தகுந்த நட்ட ஈட்டை பெற முயல வேண்டும் விஜி அண்ணி. அண்ணன் நீலாங்கரையில் எட்டு கோடிக்கு வீடு கட்டுகிறார். அதில் பாதி பெறுமதியை விஜி அண்ணி கேட்கலாம். இங்கே நான் பலதடவை இதை எழுதிய போதும் தம்பிகள் இதை கடைசிவரை விளங்கிகொள்ளவே இல்லை. அதுசரி சீமான் மேனியாவில் - சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கூட, இருவர் மனமொத்த உறவு என முட்டு கொடுக்க தயாரான ஜெண்டில்மேன்களும், குஞ்சுமோன்களும், இதையயா ஏற்றுகொள்ளப்போகிறார்கள்.
  22. சேதமடைந்த வட்டுவாகல் பாலத்தை புதிதாக அமைக்க அரசாங்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது, வட்டுவாகல் பாலத்தை மீள அமைக்க வேண்டியது என்பது மிகவும் தேவையான ஒன்று, ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம், எமது வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை அழிக்கும் அபாயமும் உள்ளது என்ற கவலை தோன்றியுள்ளது . பழைய வட்டுவாகல் பாலம் தமிழ் மக்களின் மீள்தன்மை மற்றும் துயரத்தின் கதையைச் சொல்கிறது ( resilience and misery ) - இது தமிழர் போராட்டத்தின் சின்னம் மற்றும் நாம் தாங்கிய துயரத்தின் சாட்சி . ஜெர்மனியின் பெர்லின் சுவரின் எச்சங்கள் ஜெர்மனியின் கடந்த காலத்தையும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சக்திவாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுவது போல, வட்டுவாகல் பாலம் தமிழர்களின் கூட்டுப் பயணத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. குறைந்தபட்சம் புதிய பாலத்தை அமைக்கும் போது பழைய பாலத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பெயர்தெடுத்து பாதுகாக்கலாம். இது தொடர்பில் எமது மக்கள் பிரதிநிதிகள் கவனம் எடுத்து அரசோடு பேச வேண்டும்.முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . போரின் நினைவு எச்சமாகவும் மிச்சமாகவும் ( War memorial )போர் சார்ந்த சுற்றுலாவில் எமது முக்கிய அடையாளமாகிய (War tourism ) இந்த வரலாற்று அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும். Monisha Kokul சிங்களம் எரித்த நூலகத்தையே... அதன் சுவடு தெரியாமல் புதிதாக மாற்றியவர்கள் நாம். அதன் அருகில்... புதிதாக வேறு ஒரு நூலகத்தை கட்டி, பழையதை நினைவுச் சின்னமாக வைத்திருந்து இருக்கலாம். Baskaran Gopalakrishnan
  23. அது மானஸ்தர்களுக்குத்தான் பொருந்தும். அது இருக்க, மக்கள் விரும்பாத இடத்து தான் பாராளுமன்றம் போகப்போவதில்லை என்று சொன்ன சத்தியவான், வெகுவிரைவில் பாராளுமன்றம் போகப்போகிறார். எதற்கு? அனுராவிற்கு ஆலோசனை வழங்க. ஆனால் யார் இவரை மதிக்கப்போகிறார்கள்? ஏற்கெனவே அனுராவோடு சேர்ந்துபடம் எடுத்தால் பதவி கிடைக்காது என்று அடித்துக்கூறிவிட்டார்கள். இப்போ தந்திரமாக பூந்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? நேரடியாகவே சொல்வார்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அவர்களுக்கு பின்னால் திரிந்தீர்கள் என்று. அப்போதும் இந்த மனிதனுக்கு ரோசம் வராது கண்டியளோ. இவர்களும் இவர்களின் கொள்கைகளும் பதவிகளும். நாங்கள் எப்பவோ சொன்னது யாரும் காதில வாங்கவில்லை. இப்போ அப்படியே நிறைவேறுகிறது.
  24. பிள்ளை கணணியை விட்டு நாயோடு விளையாட நாய் வாங்கிக் குடுத்தால் அது நாயையும் கெடுத்து வைத்திருக்கு . ...........! 😪
  25. இந்தியணியினை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பல பிரச்சினைகள் உள்ளது (இந்தியணியே சிறந்த அணி) ஆனாலும் இந்தியணி வெல்லாது என நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம். என்னுடன் வேலையில் இருந்த இந்தியரின் அயலவர்கள் இலங்கையர்கள், இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்தினை பார்க்க அவர்களை வீட்டிற்கு அழைத்த இலங்கையர்கள் அவர்கள் 2-3 குடும்பங்கள் என பெரும் எண்ணிக்கையில் வீட்டில் கூடி அவுஸ்ரேலியாவினை ஆதரித்து இந்த இந்திய பெண்மணியினையும் அவரது கணவர் மட்டும் இந்தியர்கல் என்பதனால் தம்மை திட்டமிட்டே நோகடித்தார்கள் என்பதாகவும் அதன் பின்னர் அவர்களுடன் கதைப்பதில்லை என கூறினார். ஆனால் நீ அப்படியான ஆள் இல்லை என எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.😁 ஒருவரை வீட்டிற்கு கூப்பிட்டு அவரகளது மனதை நோகடிக்கும் நிலையில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன், ஆனால் அவர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை.
  26. நல்ல படிப்பினைக் கதை அண்ணை, பொதுவா சீனர்களிடையில் எதையும் மலிவா வாங்கினாத் தான் பெருமை, ஆனா அந்த அழகி வேற மாதிரிப் போல😁.
  27. அண்ணன் மைன்ட்வாய்ஸ்: அவனுக்கு சுவிஸ் பாங்க் கணக்குத்தான் இருக்கு. நான் ஒரு லெட்டர் குடுத்தா சுவிஸ் அரசே வீசா கொடுக்கும் தெரியுமா🤣
  28. கவனமாக இருங்கள்’ ஈழப்பிரியன். மாறி கிறி. உங்களையும். இந்தியன் என்று பிடித்து அனுப்பி விடுவார்கள் 🤣😂 எங்கே யாசோதரனை காணவில்லையே???
  29. தமாசு தான் உறவு வீரபையன் மற்றவர்கள் சீமானை புகழ்ந்து சொல்லும் காணொளிகளை தருவார். இவரோ தற்பெருமை புழுகி திரியும் சீமான் பேசும் காணொளியையே தருகின்றார்🤣
  30. 25 பேருக்கு மேல் எனது ஷீற் தாங்காது! ஒருவர் வந்தால் பிரச்சினையில்லை! இந்தப் சம்பியன்ஷிப்பில் அதிக மட்சுகள் இல்லாததால் புள்ளிகள் கடைசிநாள் அன்றுதான் அதிகம் மாறும். யாழ்களப் போட்டியில் இதுவரை கலந்துகொண்டோர் 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் 17 சுவைப்பிரியன் 18 எப்போதும் தமிழன் 19 புலவர் 20 கோஷான் சே 21 நீர்வேலியான் 22 கந்தப்பு 23 பிரபா 24 கிருபன்
  31. @புலவர் புல‌வ‌ர் அண்ணா த‌ய‌வு செய்து ர‌சோத‌ர‌ன் அண்ணாவின் க‌ருத்துக்கு சிவ‌ப்பு புள்ளி குத்தின‌த‌ , நீக்கி விடுங்கோ................யாழில் ந‌ட‌ந்த‌ அனைத்து போட்டிக‌ளிலும் ஒரு சிவ‌ப்பு புள்ளி கூட‌ இருந்த‌தில்லை...............இந்த‌ திரியிம் க‌ட‌ந்த‌ கால‌ திரிக‌ள் போல் ஜாலியா ப‌ம்ப‌லா இருப்ப‌தையே உற‌வுக‌ள் விரும்புவின‌ம் நானும் அதையே விரும்புகிறேன், நீங்க‌ளும் அதையே விரும்பிவிங்க‌ள் என‌ ந‌ம்புகிறேன் அண்ணா🙏🥰....................................
  32. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணா.
  33. நுணாவிலானுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🥰 வாழ்க வளமுடன். 🙏
  34. எனது வாழ்த்துக்களும் நுணா…!
  35. சைனா காரரிடம் சொல்லி வைத்தால் "திருடர்களுக்கு" நல்ல படம் படிப்பிப்பார்கள்.
  36. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.
  37. நானும் போட்டியில் குதித்துவிட்டேன்.. # Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ Select BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) PAK #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) ENG #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) ENG 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி PAK சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Harry Brook 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adil Rashid 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adam Zampa 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK
  38. சுமந்திரனை.... போற, வாற இடம் எல்லாம், மக்கள் விரட்டி அடித்துக் கொண்டு திரிகிறார்கள். 😂 மற்றவர்கள் என்றால்... தூக்கில் தொங்கி இருப்பார்கள். 🤣
  39. போட்டி விதிகளின் படி, இப்படி எல்லாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. வேறு அணிகள் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்தால், மைனஸ் புள்ளி..............😜. நீங்கள் தெரிவு செய்த அணி வெற்றி பெற்றால், உபிசி (உருண்டு பிரண்டு சிரிக்கவேண்டும். தாங்க்ஸ் செம்பாட்டான்......) நீங்கள் தெரிவு செய்த அணி தோற்றால், உபிஅ (உருண்டு பிரண்டு அழவேண்டும்............)
  40. எல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் வந்து தான் போகும் போல, உடையார்? நீங்களும் கன்னி ராசிக்காரன் போல…!😔
  41. வாழும்வரை போராடு . ........ 09. அடுத்தநாள் காலையில் பீற்றரின் அண்ணருடைய வீட்டில் இருந்து மினிபஸ்சும் லொறியுமாக இரு வாகனங்களும் கிளம்பி புத்தளம் போகாமல் குருநாகல் வீதியைப் பிடித்துச் சென்று தொடர்ந்து கொழும்பு செல்கிறார்கள். வழியில் அவ்வளவு பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆங்காங்கே பயணிகளையும் இறக்கி விடுகிறார்கள். லொறியை அவர்களது விலாசத்தில் கொண்டுபோய் சேர்ப்பித்து விட்டு அங்கிருந்து சந்துரு போன்மூலம் இராகவனின் தந்தை தாமோதரத்துக்கும், மாணிக்கம் முதலாளிக்கும் தங்கள் நலமாக வந்து சேர்ந்த தகவல் சொல்லிவிட்டு அவரின் மூத்தமகனுடைய கடைக்குச் சென்று எல்லாப்பொருட்களையும் ஒப்படைத்து கணக்கு வழக்கெல்லாம் முடித்துக் கொண்டு ஒரு லொட்ஜுக்குச் சென்று பீற்றரும் சந்துருவும் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். இரண்டு நாட்களின் பின் அவர்கள் யாழ்ப்பாணம் வந்ததும் அவர்களை மாணிக்கம், தாமோதரம் எல்லோரும் பாராட்டிக் கொண்டாடி விட்டார்கள். அவர்களுடைய கொழும்பில் இருந்து கொண்டுவந்த பொருட்கள் கணக்குகள் எல்லாம் முடித்து விட்டு இராகவன் எங்கே என்று கேட்கிறான். அப்போது தாமோதரம் அவனிடம் கலவரம் நடந்த அன்று ஸ்ரீ காந்திடம் இருந்து அவனுக்கு போன் வந்ததும் அவன் பெட்டியில் தனது உடுப்புகள் எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்பி வர சில நாளாகும் என்று சொல்லிப் போனவன்தான் இன்னும் ஆளைக் காணவில்லை. எங்களுக்கும் எங்கேயென்று தெரியவில்லை என்ன நடக்குது என்று ஒன்றும் புரியவில்லை என்று சொல்கிறார். சரியப்பா நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் நான்போய் விசாரித்து வந்து சொல்கிறேன் என்று சொல்லிப் போகிறான். அவர் வீட்டில் இருந்து கிளம்பியதும் அவர்கள் பஸ்ஸை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்து முன்னால் வந்து மறிக்கின்றது. அதில் இருந்து ஸ்ரீ காந் இறங்கி வந்து சந்துருவிடம், டே சந்துரு இவன் இராகவனைக் கண்டனியோ அவனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. --- நீ என்னடா சொல்கிறாய் அன்று நீ போன் பண்ணித்தான் அவன் வெளியே போனவனாம்.அவர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சந்துரு சொல்ல.... --- ஓமடா நான் அன்று சொன்னதுதான் ஆனால் இப்ப பிரச்சனையெல்லாம் சரிப்பண்ணிப் போட்டன் அதுதான் அதை சொல்ல அவனைத் தேடுகிறேன் கிடைக்கிறான் இல்லை. --- சரி....சரி.....முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் முகத்தைக் காட்டிவிட்டு அவனைப் போய்த் தேடலாம் என்று ஸ்ரீகாந் திடம் சொல்லிவிட்டு பீற்றரிடம் அண்ணை நீங்கள் போய் வண்டியைக் கழுவிக்கொண்டு வீட்டுக்கு வாங்கோ என்று அனுப்பிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சந்துருவின் வீட்டுக்குப் போகின்றனர்.வீட்டுக்கு வெளியே சைக்கிளை விட்டுட்டு உள்ளே போனால் அங்கு விறாந்தையில் சந்துருவின் தந்தையுடன் இராகவன் செஸ் விளையாடியபடி தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறான். --- அந்தக் காட்சியைக் கண்ட ஸ்ரீகாந், டே இராகவ் நீ ஒழிக்கிறதுக்கு இதைவிட சிறந்த இடம் ஒன்று கிடையாதுடா என்று சொல்ல எல்லோரும் துன்பங்களை மறந்து சிரிக்கிறார்கள்.......! யாவும் கற்பனை. யாழ் இணையம் அகவை 27 க்காக ……… ! ஆக்கம் சுவி ..........! 💚 💚
  42. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #A1 - IND #A2 - NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? AUS SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #B1 - AUS #B2 - SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? AFG 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? AUS 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? RavindraJadeja 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? RavindraJadeja 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? RavindraJadeja 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? IND
  43. வாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.