Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3061
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10720
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/25 in Posts

  1. வ‌ண‌க்க‌ம் பெரிய‌ப்பு இந்த‌ போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நீங்க‌ள் என்னை தான் முத‌ல் கேட்டிங்க‌ள் இந்த‌ போட்டிய‌ ந‌ட‌த்துவோமா என்று நான் ஆம் சொன்னேன் ந‌டுவில் விட்டு சென்றால் அது உங்க‌ளுக்கு நான் செய்யும் துரோக‌ம் மாதிரி ஏதோ ஒரு குற்ற‌ உன‌ர்வு மாதிரி என் ம‌ன‌ம் சொல்லுது இந்த‌ போட்டி முடியும் வ‌ரை உங்க‌ளுட‌ன் இணைந்து இருக்கிறேன் பெரிய‌ப்பு🙏👍................
  2. மூலைக்கு மூலை பெரியார் சிலை வைத்ததால் தமிழகத்தில் சாதி அடியோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது .......... இனி ஈழம் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சாதிகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது பெரியார் சிலைக்கு கம்யூனிசிய காரர்கள் சிவப்பு வர்ணம் தீட்டினால் சிவப்பு வர்ணத்தை கடந்து அதற்குள் ஒழிந்திருக்கும் பெரியாரை பாருங்கள்.
  3. ஆம் 25 MPH இல் கிளியரன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள் பிளேன் ஒடுபாதையை தொடும்போது 35 MPH Crosswind (குறுக்கு) காற்று வீசியிருக்கிறது
  4. டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. .சும்மா சொல்ல கூடாது எல்லோரையும் வரவேற்று (கொஞ்ச ரூம் காசு தந்தவைதான் ) PR (permanent residence ) கிடைச்ச உடனே பறந்திட்டுதுகள். ம் சிறீ : நான் வந்ததென்ன என்றால் ...சினோ வழிச்சு கைவிறைச்சுப்போட்டுது . உங்கட ..snow blower ஐ தாறீங்களோ ? இவள் வேலையால் வரமுன்னம் வழிச்சுப்போட்டு நான் வேலைக்கு இறங்கவேண்டும். சாமி : இன்னும் இரண்டு நாளுக்கு கொட்டுமாம் ...இந்தா வழிச்சுப்போட்டு உடன் கொண்டுவந்து தா...இவன் அமேரிக்கண்ட பிளேன் விழுந்து தலைகீழபோச்சுதாம் .சிறீ : ஓம் ஓம் கேள்விப்படட நான் சாமி : ம் ம் ஊரில் இருந்தா.... இந்த சினோவும் இல்லை வழியல் உம் இல்லை ...ச் சா கை விறைச்சு போச்சு... பெஞ்சன்(pension ) எடுத்தப்புறம் ஊரோடு போய் இருந்திடனும். காலத்துக்கேற்ற உரையாடல். (சாமியாரும் சிறீத்தம்பியும் மன்னிக்கவும். )
  5. 'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்: https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/ இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள். அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால். நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.
  6. ஏது.............................. இனிமேல் பங்குபற்ற முடியாதா.................... இங்கே எழுதவும் மாட்டீர்களா................... பையன் சார், போட்ட contractஐ எடுத்துப் பாருங்கோ...... அதன்படி இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நீங்கள் பங்குபற்ற வேண்டும், எழுத வேண்டும்...... அதற்குப் பிறகும் விடமாட்டோம், புது contract போடுவம்......................❤️.
  7. பையா இங்கே பலருக்கு வீட்டில் வேலை இல்லையென்றால் ஏதாவது சீமானின் திரியை கொண்டுவந்து சொருகிவிட்டு தாமே முன்னால் நின்று விளக்குப்பிடித்து பார்த்தமாதிரி கருத்தெழுதுவதே தொழிலாகிவிட்டது. அதனால் இந்த திரியை கணக்கெடுக்காமல் நகர்வதே உனக்கு நல்லது. அவரவர் தங்கள் ஆத்ம திருப்திக்கு எதையாவது எழுதிவிட்டு போகட்டும்.
  8. வாடிக்கையாளருக்கு ஒரு அரிய அறிவிப்பு!!!!! சேம்பியன்ஸ் டிராபி தள்ளுபடி ஆபர் !!! நாளை முதல் இறுதி போட்டி வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் சீமான் சம்பந்தமாக நான் கருத்தேதும் எழுதமாட்டேன் !!!!!😎 நம்பி வாங்க, சந்தோசமா போங்க 🤣 பிர்ட்ஜில் முட்டை அடுக்கும் தட்டில் ஊறுகாய் போத்தல் பக்கவாட்டாய் கிடக்குது…. எதுக்கும் கிளியர் பண்ணி வைப்பம் 🤣. எப்படியும் தேவைப்படும். முதல் போட்டியிலே கணக்கை ஆரம்பிக்க வேண்டி வரும் போலத்தான் கிடக்கு🤣.
  9. யுவர் ஆனர் விஜயலட்சுமிக்கு சீமான் முதல் கணவனா என்றும் கேட்க வேண்டுகிறேன்.
  10. சிம்மக்குரலில் ஓசை பெயர்ந்தது, தமிழின் பெருமை உலகம் உலந்தது, எல்லாம் நிசப்தம், அவன் உதிர்ந்து, அழகுதமிழின் குரல் பெருக்கியது. அழகிய மெல்லிய சொற்கள் எங்கும், ஒலிக்கும் பெரும் மகத்துவம் என்றே, புனிதமான இளமையின் கதை, தமிழின் பண்பாட்டை எப்போதும் காத்து . வெளிச்சம் வரும் நேரம் ..., தமிழின் அழகு மென்மேலும் பூத்தது, அழகுதமிழ் இப்போது உயிர் பெறுவது, சிம்மக்குரலில் ஒலித்து!
  11. உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்............... 'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.
  12. நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார். பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை. ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன். தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார். இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!
  13. CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!! அரசியல் , மாநில செய்திகள்February 18, 2025 பாஜக கட்சியின் மாநில தலைவர் மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை தர முடியாது என மத்திய கல்வி மந்திரி கூறிய நிலையில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இரு மொழிக் கொள்கையை மட்டும் தான் தமிழ்நாட்டில் கடைபிடிப்போம் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் மூன்று மொழிகளை படிப்பது கட்டாயம். அதில் தாய் மொழியை முதன்மையான மொழியாகவும் இரண்டாவது ஆங்கிலத்தையும் மூன்றாவது ஹிந்தியையும் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கும் நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மட்டும்தான் இரு மொழிகளை கற்கிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்சு மொழி படிப்பதாக கூறுகிறார் அது நல்ல விஷயம் தான். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் மட்டும் இரு மொழி கொள்கையை படிக்கிறார்கள். திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகளை படித்து விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மட்டும் திமுகவினருக்கு போஸ்டர் ஒட்ட வேண்டுமா.? மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான், விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். எங்கள் கண்முன்னே இளைய சமுதாயம் அழிவதை ஏற்க முடியாது. மேலும் கண்டிப்பாக அரசு பள்ளிகளில் மூன்று மொழிகளை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். https://www.seithisolai.com/cm-ஸ்டாலின்-இபிஎஸ்-சீமான்-வ/ டிஸ்கி தட் கரடியே காறி துப்புன மொமெண்ட்
  14. "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய் சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்! அக்கினி உன்னுடலை மட்டுமே எரிக்கும் அன்போ எம்முள்ளத்தில் என்றும் வாழும் அயராத உழைப்பு அடிமையில்லா வாழ்வு அணையாத தீயாய் எமக்குள் எரியும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. சிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱
  16. அருமை…. இதில் சுவாரசியம் என்னவென்றால் இப்படி தனியார் கல்வியில் ஆங்கிலம்மூலம் கற்போர் அப்பன், தாத்தன் தயவில்தான் மேலே வருகிறார்கள். ஆனால் சிவன்கள் சுயம்புவாக வளர்கிறார்கள்.
  17. பையா வாழ்க்கையில் ஆங்காங்கே தப்புகள் தவறுகள் நடப்பதுதான் . ....... அவற்றையெல்லாம் சீரியஸாக தலைக்குள் ஏற்றக் கூடாது ......... ஈசியாக எடுத்துக் கொண்டு சேர்ந்திருங்கள் . ....... இந்த உலகில் யாரும் 100 % சரியானவர்கள் கிடையாது . ....... அவரவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு . .......... யாழில் எல்லாம் ஒரு பம்பலுக்காக நடப்பதுதான் ....... கவலையை விட்டு வழமைபோல் கலகலப்பாக இருங்கள் ........! 😁
  18. அதற்காக அடிப்பது என்று முடிவெடுத்தால் எதை எடுத்தும் அடிக்கலாம் என்று இருக்க கூடாது அவர்கள் கொண்டுவரும் பொல்லை வாங்கி அதனாலேயே போட வேண்டும் இப்படி
  19. உங்களின் சொந்த இடத்தில், ஊர் ஒத்துக் கொண்டால் பொது இடத்தில் என்று தாராளமாகவே வையுங்கள். அப்படியே அம்பேத்காரையும், பெரியாரையும் வாசியுங்கோ........... உங்களின் மாறாத கருத்துகளோ, அல்லது மாற்றுக் கருத்துகளோ எதுவென்றாலும் அறிந்து தெளிவதில் தான் பூரணம் கிட்டும் எவருக்கும். ஆனால்................ இந்தச் சீண்டல் முற்றிலும் தேவையில்லாதது. எதற்கு இந்த அறைகூவல்........... இது ஒரு அரையின் கூவல் போலவே தோன்றுகின்றது........... உங்களிடமே முதிர்ச்சி இல்லை, இதில் நீங்கள் என்ன வழிகோலிட முடியும்..............🫣.
  20. 5 hours ago, வீரப் பையன்26 said: என்ன‌மோ தெரிய‌ல‌ இந்த‌ திரியிம் என‌க்கு வெறுத்து போச்சு இது தான் நான் யாழ்க‌ள‌த்தில் க‌ள‌ந்து கொள்ளும் க‌ட‌சி போட்டி................... இனி இந்த‌ திரிக்குள்ளும் எழுத‌ போவ‌து கிடையாது.............. பையன் ...குழப்பமான நேரத்தில்முடிவெடுக்கக்கூடாது மனதை பக்குவப்படுத்தி தேவையற்றதை விலக்கி, தேவை ஏற்படும்போதுமட்டும் பதில் சொன்னால் வீண் விவாதங்களால் மனச் சோர்வு வராது. Come on ! paiya .. Be strong and Active.
  21. புலம் பெயர்ந்த பலரது வாழ்க்கை இப்படித்தான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத சோகம். அம்மா இல்லை என்பது ஏற்கமுடியாது இன்னும் உங்கள் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம். ஒவ்வொரு தமிழனுக்கும் இழப்பு உண்டு.
  22. ஏராளன் அம்மாவுக்கு பக்க பலமாக இருங்கள். அம்மாவின் கவலையும் நியாயமானதே. காலத்தின் கொடுமை.
  23. எங்கள் அம்மாவும் 2 ஆண் பிள்ளைகள் என்று மகிழ்வாய் இருந்தவ, நாங்கள் தசைபலவீனமாதல்(Muscular Dystrophy) எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் ஆறாத துயரமடைந்துள்ளார். எனினும் நாங்கள் அம்மாவிற்கு ஆறுதலாக இருப்பதோடு அவவின் பொழுதுபோக்க யுரியூப் காணொளிகளை கணனியில் போட்டுக் காட்டுவோம். அண்மையில் வழுக்கி விழுந்து கையில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது மெதுவாக நலமாகி வருகிறார்.
  24. டெல்ரா கொனக்னசும்(Delta Conection0 அமெரிக்கன் ஈகிளும்(American Eagle) கண்ணில காட்டக் கூடாது.
  25. எடுப்பது என்று முடிவெடுத்தால் எதற்குள் எடுத்தால் என்ன? நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.
  26. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பிரித்தானிய நேரப்படி நாளை 19 பெப் 09:00 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை புதன் (19 பெப்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 08 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 16 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ஈழப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் வாதவூரான் பிரபா கிருபன் நியூஸிலாந்து ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  27. கவலையை விடுங்கள் பிரியன் அண்ணா. பெற்றோரின் செத்தவீட்டிக்கு போக முடிந்தும் போகாதவர்கள், பணம் அனுப்பி விட்டு இருந்தவர்கள் பலரை தெரியும். போரின் தாக்கம் பலரை பல முனையில் தாக்கி உள்ளது.
  28. கொஞ்சம் மேலே (20ம் போட்டியாளர்) பாரு கண்ணா (பாட்ஷா பஞ்ச் டயலாக் பாணியில் வாசிக்கவும்) 🤣. யார் என்ன சொன்னாலுல் பெரிய வீடு எனக்குத்தான்….. நம்ம கணிப்பு அப்படி🤣 நாயகன் மீண்டும் வரான்…..தகிட தக்கித்த தக திமி….🤣 இந்த முறை கன பேருக்கு பெரிய வீடு மேல கண் போகுது. அட்வான்ஸ் கொடுத்திட்டியளோ🤣
  29. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏
  30. இல்லை பையா, மூன்றாம் நபர் அல்ல. வாசகர். நீங்கள் வாசகர் பேயர், மொக்கர் என்ற ரீதியில் எழுதியாதால் வந்த எதிர்வினை அது. நீங்கள் போட்டிகளில் இருந்து விலகினால் - அது பயம் அல்ல ஆனால் என்னை பொறுத்தவரை குற்ற உணர்ச்சி. தன்நெஞ்சறிய பொய்கற்க கற்றபின் தன்நெஞ்சே தன்னை சுடும். எனக்கு தேவை கீழே உள்ள கேள்விக்கு ஆம் இல்லை என்ற பதில் மட்டுமே. நீங்கள் என் மீது வைத்த குற்றசாட்டு -நான் இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினேன், இலங்கை வென்றதும் தாயக பாடல் பாடினேன் என்பது. இது தவறான குற்றசாட்டு என்பதை ஏற்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல கூடிய கேள்வி இது. நான் இதை இழுத்தடிக்க விரும்பவில்லை. ஆம் இல்லை என பதில் சொல்லிவிடுங்கள். இருவரும் நகரலாம்.
  31. கொஞ்சம் பொறுங்கோ , இப்பதானே AI ரெக்னிக் வந்திருக்கு பேஸ்பால் மட்டையை கிரிக்கட் மட்டையாய் மாத்தினால் போச்சு . ......... ஆனால் என்ன அந்தக் கறுமத்தைச் செய்ய எனக்குத் தெரியாதே . .......! 😂
  32. பாண் விலை 10 ரூபாவினால் குறைப்பு! கோதுமை மா விலை குறைப்புக்கு அமைவாக பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1421891
  33. அட... பாவிங்களா.... அப்பாவி குரங்குகளை, மாட்டி விடப் பார்த்திங்களேடா...... 😂 அனுமாரின் சாபம்... உங்களை சும்மா விடாது. 🤣
  34. சரி, இதைத் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறேன், மன்னியுங்கள்! ஆனால், இப்படி இருக்கும் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட என்ன காரணங்கள் என்று பார்த்தால்: 1. இலக்கு மாறியமை. 2. இலக்கு மாறாமல், அதை அடையும் வழிகள் மாறியமை. 3. சொத்து/வருமானம் பற்றிய பிரச்சினைகள். 4. யார் தலை எனும் ஈகோ இவற்றுள், 1 இனை தனித்தனியாக துரோகமா அல்லது இலக்கு குறுக்கப் பட்டதா என்று ஆராய்ந்து தான் தீர்ப்பெழுத முடியும். எடுத்த வாக்கில் "துரோகி" என்று சொல்ல முடியாது. 2 வது காரணம், என் பார்வையில் துரோகம் அல்ல. சாத்தியமான வழிகள் வெளிச்சூழலுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். இதனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. சிறந்த உதாரணம், தாயகத்தில் தமிழரசுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையேயான வேறு பாடு. 3, 4: இது எங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டிய களைகள். இக்காரணங்களால் அமைப்புகளைப் பிரிப்போரை (இவர்களைத் தான் சாந்தி தன் பதிவில் சுட்டியிருந்தார் என நினைக்கிறேன்) ஒற்றுமை வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்திருப்பது, மட்டத்தேள், கொடுக்கான், பாம்பு ஆகியவற்றை "இயற்கையை நேசிக்கிறோம்" என்ற பெயரில் வீட்டினுள் வைத்திருப்பது போல ஆகும். மேற்கூறிய காரணங்கள் தான் ஒருவரை தமிழ் தேசிய அமைப்புகளில் ஒற்றுமை கருதி வைத்திருப்பதா அல்லது அகற்றுவதா என்று தீர்மானிக்க வேண்டுமென நினைக்கிறேன்.
  35. பெய‌ருக்கு தான் இந்தியா அகிம்சை பார‌த‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ஊழ‌லில் ஊறிப் போன‌ பிக்காலி நாடு...............எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ம் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூக்க‌ போகின‌ம் என‌ இந்திய‌ தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்யின‌ம் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உன‌வு கொடுக்க‌ சிறு ப‌ங்க‌ளிப்பு செய்ய‌ சொல்லி...........................
  36. விதைத்திருக்கும் விஷம் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகின்ற சீமான் வெற்றி பெற்றது வெளிநாட்டு ஈழதமிழர்களிடம்
  37. இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது. இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே
  38. போட்டி துவங்க முதலே கடைசிக்கு முதல். கிருபனுக்கும், எனக்கும் தான் இந்த முறை போட்டி போல !!
  39. இடை தழுவி தனிமைநாடி தனியிடம் தேடினவர்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டு வாழும் வரை போராடுவதில் என்ன இருக்கப் போகிறது? கதை சொன்ன விதம் அருமை. உங்களுக்கு ‘ஜ’வில் ஒருவித மயக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் காதல் ஜோடி. பிறகு ஜவுளி. வடமராட்சிப் பக்கம் புடவை அல்லது சாரிதான்.
  40. நுணாவிலான் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐
  41. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.