Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/27/25 in Posts
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):3 points
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்3 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’2 points
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதையே பாம்புகள் புணரும்போது ஒரு வெள்ளை சேலை அல்லது வேட்டியால் மூடினால் இப்படி கல்லுவரும் என்பார்கள். 1998 தை மாதம் வீடு வாங்கும்போது 13ம் திகதிதான் இரண்டு வழக்கறிஞர்களுக்கும் ஒன்றுமே இல்லை அந்த நாளில் எழுதுவமா என்றனர். எமக்கு பிரச்சனை இல்லை என்று அந்த நாளிலேயே எழுதினோம். 13ம் திகதியை பலரும் மறுத்தபடியால் நல்லதாக போய்விட்டது. அமெரிக்காவில் பல கட்டட பாரம் தூக்கிகளில் 13ம் இலக்கமே இருக்காது.2 points
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
தலைவர் காலத்தில், களத்தில், டிரம்ப் போன்ற ஒருவர் இருக்கவில்லை, டிரம்ப் புட்டினுக்கு சேவகம் செய்வதை போல இலங்கை/இந்தியாவுக்கு சேவகம் செய்யவில்லை என்பதும், இப்போதும் செலன்ஸ்கி வளைந்து கொடுத்தே போக முனைகிறார், நெகிழ்வுதன்மையை காட்டுகிறார் என்பது இரு பாரிய வேறுபாடுகள் ஆனால் இருவர் மீதான அளுத்தமும் ஒன்றே. 2000-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கை, உக்ரேனின் வளங்களை இப்போ சவுதியின் வளங்களை பாவிப்பது போல் பாவிக்கும் ஒரு திட்டம். டிரம்ப் கேட்பது 100%. இப்போ செலன்ஸ்கி ஒத்து கொள்வதாக சொல்லப்படுவது 50%. எந்த நாடும் தர்மஸ்தாபனம் நடத்துவதில்லை. எல்லாம் உள்நோக்கோடுதான்.2 points
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
2 pointsநீங்கள் சொல்வது மிக சரி. செய்திகளில் நான் கவனமாக அவதானித்தேன். கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் முன்பு இருந்த யேர்மனின் கிழக்கு பகுதி தொகுதிகளில் பேர்லின் தலைநகர தொகுதியை தவிர இனவெறி AFD கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் 43 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது.கம்யுனிச ஆக்கிரமப்பின் கீழ் வாழ்ந்த யேர்மனிய மக்கள் ஏன் இனவெறி சிந்தனை பெற்றார்கள் என்பது விளங்கவில்லை.யேர்மன் மேற்கு பகுதிகளில் இனவெறி AFD கட்சி தோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது 16 -18 வீதம் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் இனவாதிகள் 16 வீதம் பெறுவார்களா தமிழ்நாட்டில் சீமான் இவ்வளவு வாக்குகள் பெற்று கொள்ள முடியாது. ஈரோடு இடை தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிடாததால் பிஜேபி அதிமுக வாக்குகள் அவருக்கு கிடைத்தபடியால் 15 வீதம் வந்தது இனவெறியை நிராகரிக்கும் தமிழ்நாட்டு பிரித்தானிய மக்கள் உயர் மக்கள்👍2 points
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
மனித உரிமைகள் விசாரணையில் இருந்து இலங்கை அரசை காப்பாற்றியுள்ளார். இது ஒன்றே போதாதா?2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல்வர் நேற்றே தனி நாட்டுபிரகடனம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்2 points
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்2 points
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .1 point
-
காற்றாடி
1 pointகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)1 point
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வீடியோ பார்த்தேன், பொலிஸ் அதிகாரி அராஜகமாத்தான் நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தான் முதலில் தாக்கி இருக்கின்றார். சம்மனை கிழித்தது தவறு. ஆனால் அதற்காக இந்த அதிகாரி செய்தது தவறுமட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம்.1 point
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
https://x.com/nellaiselvin87/status/1895113833825403340?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது.காவல்துறை ஆய்வாளர்தான் முதலில் படலையைத்திறந்தவரிடம் என்ன விடயம் என்று விளக்காமல் படலை சற்றுத் திறக்க முன்னரே காவலரைத் தள்ளித் தாக்க முயற்சித்திருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்தக் காவலரின் தாக்குதலால் காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த காவலர்.ஊடகங்கள் சொல்வதற்கும் காணொளியில் இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன.1 point
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
இது வழமை போன்றது அல்லாத ஒரு அசாதாரணமான நிலமை. பயணி ஒருவர் பயணத்தின்போது விமானத்தில் இறந்துள்ளார். எனவே, சக பயணிகள் தங்கள் கையில் விடயங்களை எடுக்கக்கூடாது. நிலமையை சரிதாக கையாளவேண்டியது விமானத்தின் கப்டன் தலைமையிலான விமான பணியாளர் குழு ஆகும். இவர்கள் தமது பணியை சரியாக செய்யவில்லை. சக பயணிகள் மேற்கண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் இது விமான நிறுவனத்தின் பொறுப்பு. பணியாளர்கள் பயிற்சி பெற்ற பின்னே பணியில் அமர்கின்றார்கள். அவர்கள் பயிற்சியின்போது இவ்வாறான மரணங்கள் பற்றி நிச்சயம் கற்று இருப்பார்கள். செத்தவரை போர்வையால் போர்த்தி சக பயணிகளுடன் பயணிக்க வைக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது என நான் நினைக்கவில்லை. இப்படி செய்வது தவறு என்பதால்தான் இது செய்தியாக வந்துள்ளது. மற்றும்படி அக்கினி கொக்பிட்டில் இடம் இருந்தால் பணியாளர்களுடன் கதைத்துவிட்டு அங்குபோய் அமரக்கூடியவர் தேவை என்றால் பிளேனையும் ஓட்டக்கூடியவர் என நான் நம்புகின்றேன். ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதுதான் பயர் ஏன் இடம் மாறி உட்கார்ந்தான் என விசாரணை தொடங்கும்.1 point
-
திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் - தமிழக மீனவர்கள் அறிவிப்பு
எல்லை தாண்டி கொள்ளை அடிக்க அனுமதி கேட்டும், கொள்ளையடித்தவர்களை விடுதலை செய்யக் கேட்டும் நிகழும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி போராடுமாறு நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.1 point
-
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. https://akkinikkunchu.com/?p=3140681 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
வயது முதிர்ந்த நாக பாம்புகளின் வாயில் பெறுமதி மிக்க... ஒளி வீசும் இரத்தினக் கற்கள் உள்ளது. அவை இரவில்... இரை தேடும் போது, அதனை கக்கி விட்டு அந்த ஒளி வெளிச்சத்தில் இரை தேடும். அப்போது.... மாட்டு சாணத்தை, அந்த இரத்தினக் கல்லின் மீது போட்டால்... பாம்புக்கு கண் தெரியாமல், இரத்தினைக் கல்லை விட்டுவிட்டு போய் விடும். பாம்பு போன பின்... அந்தக் கல்லை நாம் எடுக்கலாம். 😂 🤣1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
ஆமாம் உண்மை ஆனால் 2020,...2024 கொள்கை ஆனாது என்ன??? மக்கள் இந்த உலகில் சுதந்திரமாக வாழ வேண்டும் அதாவது உக்கிரேன். மக்களும் நாடும் அடிமை படுத்தப்படமால். அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது தான் இவர்களுக்கு கனிமவளங்களில். ஆசை இல்லை விருப்பம் இல்லை என்றால் இதோ உதவிகளை உலகில் விடுதலைக்கு போரடும். மக்களுக்கு இதோ போன்ற உதவிகளை ஏன் செய்யவில்லை ?? ஈராக் குவைத்தை அடித்து பிடிக்கிறான் பிடிக்கட்டும். ஆளட்டும். அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை?? எண்ணை இருந்த . காரணத்தால் கூட்டாளிகளுடன். சேர்ந்து அடித்தார்கள். 2020,...2024. இல். ஒப்பந்தம் செய்யவில்லை கனிமவளங்களை கோரப்படவில்லை ஆகவே அவர்களுக்கு அதில் ஆசையும் இல்லையா?? இருந்தது ஆனால் சொல்லவில்லை ஊரிலேயே அனேகமாக மாணவர்கள் காதலிக்கிறார்கள். திருமணமும் செய்கிறார்கள் ஆனால் நான் படித்த காலத்தில் காதலிப்பார்கள். ஆனால் இறுதிவரை அதை சொல்வது இல்லை 🤣🤪. அதேபோல தான் 2020,....2024. காலப்பகுதியும். 🙏1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
நன்றி சகோ விரிவான நேரத்திற்கு. இந்திய பூதத்தை திருப்தி படுத்தியபடி எமது தேசத்தை மீட்கும் போராட்டத்துக்கும் ரசிய பூதத்தை திருப்தி படுத்தியபடி உக்ரைனை காக்கும் போராட்டமும் கடைசி காலப்பகுதியில் நிகழ்ந்த நிலைப்பாடுகளில் ஒரே வரை கோட்டில் வந்து நிற்பதாக உணர்கிறேன். இந்த காலகட்டத்தில் தலைவர் மீது வைக்கப்பட்ட ஏற்கமுடியாத நிபந்தனைகள் தவிர்க்க முடியாத கட்டளைகள் விட்டு கொடுக்க முடியாத கொள்கைகள் நிலங்கள் நம்பிக்கை துரோகங்கள் முதுகு குத்தல்கள் வெறும் நாக்கு ஜாலங்கள் மிரட்டல்கள் பெரிய இடத்து அதிகார அத்துமீறல்கள் என்று எமக்கு தெரிந்த தெரியாத பல விடயங்கள் இருக்கும். ஆனால் தோல்வி எம்மில் சிலரை தலைவர் மீது இவை சார்ந்து விரல் நீட்ட வைக்கிறது. எனவே அதை நாம் முழுமையாக உணர உக்ரைன் எமக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி.1 point- விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
பயணிகள் எல்லோரும் ஏறிய பின், இருக்கைகள் காலியாக இருந்தால்… மாறி அமர்வது சர்வ சாதாரணமானது. நானே பலமுறை மாறி அமர்ந்து இருக்கின்றேன். இதுவரை… எனக்கு எந்த விமான ஊழியரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இலங்கையில் புதிதாக அரசு வெளியிட்ட பாலர் பாடப்புத்தகத்திலிருந்து.🐕…..👇 நாய் அரிசி காக்கும்.1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராஃபி: ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி, இங்கிலாந்து ஏமாற்றம் - சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அணியின் வெற்றியை கொண்டாடும் ஒமர்ஸாய் 27 பிப்ரவரி 2025, 03:37 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் இங்கிலாந்து அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி. இதனால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 325 ரன்கள் எடுத்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடியது இங்கிலாந்து. ஆனால், 49.5 ஓவர்களில் 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு இந்தியாவிடம் தோல்வி - பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இந்தியா அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் வெளியேற்றம்: நியூசிலாந்து - வங்கதேசம் ஆட்டத்தில் என்ன நடந்தது? சேவாக் சாதனை சமன்: இங்கிலாந்துக்கு எதிராக 352 இலக்கை எட்டிப் பிடித்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து இந்த ஸ்கோரை அடைந்தார் ஜோ ரூட். அவருடைய காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, இறுதியில் 26 பந்துகளுக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் அவுட் ஆனார். ஜோ ரூட் ஆட்டத்தில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தானின் தோல்வி முகம் வெற்றியின் பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மிக விரைவாகவே அவுட் ஆகினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில்ட் சால்ட் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பென் டக்கெட் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித் 9, ஹேரி ப்ரூக் 25, கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியம் லிவிங்ஸ்டோன் 10, ஜேமி ஓவர்டன் 32, ஜோஃப்ரா ஆர்ச்சர் 14, அடில் ரஷித் 5 ரன்களை எடுத்தனர். மேலும், மார்க் வுட் 2 ரன்களை எடுத்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஓவர்டன் 32 ரன்கள் அடித்த நிலையில், வெற்றி நோக்கி வந்த இங்கிலாந்துக்கு மூன்று விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில், 14 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆல் அவுட் ஆனது. தொழிலதிபர் ஷியாம் சுந்தர் பார்டியா மீது பாலியல் வன்கொடுமை புகார் - புகார்களை மறுத்து அறிக்கை3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி கழிப்பறையில் சடலமாக கிடந்த 14 வயது மாணவர் - என்ன நடந்தது? இன்றைய முக்கிய செய்திகள்2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 111 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். இதில், 11 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார் அசத்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்தார். முகமது நபி 2 விக்கெட்டுகளையும் ஃபஸல்ஹக், ரஷித் கான் மற்றும் குல்பதின் நயிப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக வலுவாக பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் அடங்கும். இது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் இதுவரை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த அணி தோற்று விடுமோ என கருதப்பட்டது. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ஹஸ்மத்துல்லா இருவரும் சேர்ந்து 103 ரன்கள் எடுத்து அணி அதிக ஸ்கோர் குவிக்க உதவினர். அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 2020 டெல்லி கலவரம்: ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை எப்போது? பிபிசி கள ஆய்வு25 பிப்ரவரி 2025 தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசிய 5 முக்கிய விஷயங்கள்26 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருதைப் பெற்ற ஸத்ரான் சாதனை படைத்த ஸத்ரான் ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும், உலகக் கோப்பைக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸத்ரானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஸத்ரான் 146 பந்துகளில் 177 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 12 ஃபோர்களும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து அணி போட்டியின் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டத்தோடு ஒப்பிட்டால் போட்டியின் முடிவு மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் நான்கு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே வழங்கினார்கள் வுட் மற்றும் ஆர்ச்சர். அதனைத் தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சேதிக்குல்லா அதால் ஆகியோர் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார்கள். சில நிமிடங்களிலேயே ரஹ்மத் ஷாவும் அவுட்டானார். கடந்த 14 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு, நேற்று பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து வீழ்த்தியது. வுட் அவருடைய நான்காவது ஓவரில் காலில் பிரச்னை ஏற்பட்டு வெளியேற, இப்ராஹிம் தன்னுடைய அணிக்கான ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இப்ராஹிமும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் சேர்ந்து 124 பந்துகளுக்கு 103 ரன்கள் குவித்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்பு ஷாஹிதி ரஷித்தின் பந்தில் அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 30-வது ஓவரில் 140 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போதும் இங்கிலாந்து தான் போட்டியை கட்டுப்பட்டுத்தியது. முகமது நபியும் இப்ராஹிமும் சேர்ந்து 9.1 ஓவர்களுக்கு 111 ரன்களை எடுத்தனர். முகமது நபி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தனர். மீண்டும் களத்துக்கு வந்த வுட் 4.2. ஓவர்களுக்கு 37 ரன்களை வாரி வழங்கினார். 47-வது ஓவரில் பந்து வீசிய ரூட் ஆப்கானிஸ்தானின் 6-வது விக்கெட்டை எடுத்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று ஆடிய இப்ராஹிம் பவுண்டரிகளை விளாசினார். நான்கு நாட்களுக்கு முன்பு டக்கெட் புரிந்த சாதனையை அவர் முறியடித்து புதிய சாதனையை சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் அவர் பதிவு செய்தார். இங்கிலாந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணி டி20 போட்டிகள் போல் விளையாடுவது சரியான அணுகுமுறை இல்லை என்று முன்னாள் வீரர் கருத்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் விக் மார்க்ஸ் இது குறித்து பேசும் போது, "இது பிரபலமற்ற கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் நீங்கள் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் அத்தகைய போட்டி ஆட்டங்களில் சிறப்பான பங்களிப்பை தர இயலாது. ஜோ ரூட்டைப் பாருங்கள். அவர் 50-ஓவர் இன்னிங்க்ஸை சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 விளையாட்டு அனுபவம் மற்றும் அதில் உள்ள திறன்களை மையமாக கொண்டு நீங்கள் அணியை உருவாக்கி இருந்தால், 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீசாதவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்," என்ற விமர்சனத்தை முன்வைத்தார். "இதில் கவனமும் மிக முக்கியம். பில் சால்ட் இந்த குளிர்காலத்தின் துவக்கத்தில் நல்ல ஆரம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் அது டி20க்கு என்று வரும் போது சரியாக இருக்கும். ஒரு நாள் போட்டிகளில் இதே போக்கு இருந்தால் அது விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே வழிவகை செய்யும். அது அடுத்தடுத்து விளையாட வரும் பேட்ஸ்மென்களுக்கும் நெருக்கடியைக் கொடுக்கும். இது டி20-ல் இருந்து முழுமையாக மாறுபட்டது. நீங்கள் இதை வேறொரு விதத்தில் அணுக வேண்டும். இதனை பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் உணர்ந்திருப்பதாக தோன்றவில்லை," என்றும் அவர் கூறினார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் இது குறித்து பேசும் போது, "தொடரில் இருந்து வெளியேறியது வருத்தமே அளிக்கிறது. எங்களுக்கான வாய்ப்புகள் இருந்தது. இது சிறப்பான விளையாட்டு. ஆனால் போட்டி முடிவுகள் எங்களுக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது," என்று கூறினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, "ஒரு அணியாக இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் மொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று எனக்கு தெரியும். நாங்கள் அடுத்த ஆட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் முதல்முறையாக இங்கிலாந்தை 2023 உலக கோப்பைப் போட்டியின் போது தோற்கடித்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு அணியாக நாம் முன்னேறி வருகிறோம் என்று நான் அடிக்கடி கூறுவது உண்டு. போட்டி முடிவுகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkmm1l0jlxo1 point- கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
சுமந்திரன் தமிழரின் பிரதி என்று சொல்கிறார், மக்களுக்காக அவர் செய்த சேவை என்ன? கடந்த காலத்தில் மக்களே அவரை தெரிவு செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். புலம்பெயர் தமிழரல்லர். அப்படியிருக்கும்போது புலம்பெயர்ந்தோருக்கும் சுமந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? அவர் எதுவும் மக்களுக்கு செய்யாததினால் மட்டுமல்ல விரோதமான செயலில் ஈடுபட்டதினாலேயே மக்கள் சுமந்திரனை நிராகரித்தனர். அதிலிருந்து அவர் திருந்தவேயில்லை, இன்னும் இன்னும் மோசமான செயலிலேயே ஈடுபடுகின்றார். அதை மறைக்க புலம்பெயர்ந்தோர் அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார். ஏன் அந்தபுலம்பெயர்ந்தோருக்கு அல்லது அந்தப்பணியை செய்ய காத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புலனாய்வாளரால் முடியவில்லை?அவருக்குரிய சன்மானத்தை மக்கள் கொடுத்துவிட்டனர். இதற்குள் புலம்பெயர் வரக்காரணம் என்ன? ஏன் அவர்களை இவர் சந்தேகிக்கிறார்? அவர் அரசியல் செய்யலாம், ஆனால் மக்கள் தங்களுக்கு இவர் வேண்டாமென்கின்றனர், முடிந்தால் முயற்சித்து பார்க்கட்டும். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பகிரங்கமாக திரிகிறார், கூட்டங்களில் கலந்து கொள்கிறார், கொலைசெய்ய நினைத்தால் முடியாதா என்ன? இவரை கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? அவரை தெரிந்தனுப்பியவர்களே நிராகரித்து விட்டனர். அது அவரது செயலுக்கு கிடைத்த சன்மானம். அதை மறைக்க கதையை திசை திருப்பினால் நாங்கள் இல்லாத ஒன்றுக்கு யாரை கண்டிப்பது? சிறிதரனுக்கு அல்லது வேறு பிரதிநிதிகளுக்கு இல்லாத அச்சுறுத்தல் இவருக்கு ஏன் வந்தது?1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
சஞ்சய் இராமசாமி யார் என்று எனக்கு தெரியவில்லை மேலே உள்ள கருத்தை படித்துவிட்டு நானும் விழுத்து விழுந்து சிரித்தேன் சீமான் தான் இப்படியான நிலைக்கு கொண்டு வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
ஓட விட்டுத்தான் சொல்ல முடியும். என் கருத்து: டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல. மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம். டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும். செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது. மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு… போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம். பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என. நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும். ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம். புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம். ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது. டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
யாழ்கள உறவுகளுக்கு short term memory loss என நினைக்கிறேன். சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள். கீழே உள்ளதை உங்கள் உடம்பில் பச்சை குத்தி வைத்து கொள்ளவும். கருத்து எழுதமுன் இதை படித்து விட்டு எழுதவும். 2024 டிசம்பரில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றார் அவர் இதுவரை கடைபிடித்து வந்த அமெரிக்காவின் உக்ரேன்/ரஸ்யா கொள்கையை 180 பாகையால் திருப்பி, கனிம கொள்ளையிலும் ஈடுபட முனைகிறார். டிரம்ப் இப்போ வைக்கும் கனிம கொள்ளை கோரிக்கையை பைடனோ, வேறு எந்த மேற்கு நாடோ வைக்கவில்லை. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு Bயில் அவுஸ்திரேலியா நிலைமை தான் கவலைக்கிடம். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றாக வேண்டும். அந்தப் போட்டி ஒரு கால் இறுதிப் போட்டி போல் அமையப்போகின்றது. அல்லது மழை வந்து தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக, படுமோசமாக தோக்காவிடில், அவர்கள் அடுத்த சுற்றுக்கு இலகுவாக சென்றுவிடுவர். அவர்களிடம் கனதியான ஓட்ட விகிதம் உள்ளது. இந்த முறை மழையோ ஓட்ட விகிதமோ அவர்களை தடுக்க முடியாது.1 point- அதிசயக்குதிரை
1 pointடாக்டர் என்ன பிரச்சினை உங்களுக்கு...? எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்... அப்படியா...!? ஆமா டாக்டர்... இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும்... சின்ன வயசுல அப்பா, அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... இப்ப என்ன உங்க வயசு அவ்ளோதானே...? ஆமா டாக்டர்... ஆமா...? சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... உங்க பேரென்ன... ராமநாதன்... என்ன தொழில் பண்றீங்க... பைனான்ஸ்... நைட்டு நல்லா தூங்குவீங்களா...? கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா... நெறய டாக்டர்.... அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? ஆமா டாக்டர்.. எந்த மாதிரி நடிகைங்க... ரேவதி, அமலா மாதிரியான நடிகைங்க.... சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...!!?? சிலசமயம் அம்பிகா, ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? ஷகிலா... ஊஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்... அதவெச் செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியாக்கூட வருவாங்க... ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்... அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன், நயன்ஸ் வருவாங்க... சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... 45, 48, 54, 41... நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47... மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...!! என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா...? தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன்... அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க... திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல... பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்...! அடேய்... இந்தாடா... அடப்பாவி... போய்ட்டானே!!1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
அப்ப மனிதாபிமானம் >இறைமை என்பதல்லாம். இந்த வளங்களைக் கொள்ளையடிப்பதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும் உக்கிரைனுக்கு விழுந்து விழுந்து உதவி செய்தது இதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும்உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக உக்கிரைனுக்கு உதவுகிகன்றனர். ரஷ்யாவுக்கு உக்கிரைனின் வளங்கள் மட்டுமல்ல தனது எல்லைகளுக்கு அருகில் தனது எதிரிகளின் தளங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கும் ஆபத்து ரஷ்யா இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் என்ன தவறு?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜோ ரூட் உங்களுக்காகத்தான் தனி ஒருவனாக இன்று விளையாடினார். தனி ஒருவன்! அது அடைக்கோழியாக்கும். முட்டை போடாது. 🥚1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள். @alvayan க்கு கம்பத்துக்கு கிறீஸ் பூசி கீழே இறக்கிவிட்டார்கள். கோசானும் அருகில் போய்விட்டார். என்னா @கிருபன் மூச்சுவிட முடியுதா?1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் பாகிஸ்தான் தனது பெருமையை கொஞ்சம் காத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா அல்லது முட்டைகளை உடைத்து எறியுமா?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குடுத்து வச்ச மனிசன் ஜி நீங்கள் ஆப்கானிஸ்தான் 300 தாண்டியவிடனேயே இங்கிலாந்து கிட்டப்போய் தோற்கும் என நினைத்தேன். ஆனால் ஒவர்டன் நிண்டு ஆடியபோது மாற்றியும் யோசித்தேன். வாழ்த்துக்கள் முதல்வர்💐💐💐. இவ்வண், மாண்பு மிகு துணை-முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர்🤣1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்தபோதும், ஜோ ரூட்டின் 120 ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் இலக்கை எட்டமுடியாமல் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 317 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 16 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point- விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
இறந்த பயணி பருமனானவர் என்ற படியால், அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர வைக்கப் பட்டு இருக்கின்றார். வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே. அதைச் செய்யாமல்…. பிணத்துக்கு அருகில் இருந்து பயணம் செய்து விட்டு, பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் மர்மம் என்ன? தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம் மாறி இருந்து, அனுசரித்து போவதுதானே முறையான செயல்.1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
1 point- அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
இவர்களின் மொழி அதாவது தாய்மொழி. ஒன்றா ??? முஸ்லிம்கள். ஒரு இனம் என்பது பிரச்சனையில்லை ஆனால் அது உலகம் முழுவதும் ஏன் கடைப்பிடிக்கவில்லை இலங்கையில் மட்டுமே தனி இனம் என்கிறார்கள் ....இது தேர்தலுக்காகவா. ?? வாக்கு சேகரிக்கவா ?? என்பது தான் என கேள்வி1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointபசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா? 3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு... 1.யாருக்கு கல்யாணம்? (25 மார்க்) 2.கல்யாணம் எங்கே நடந்துச்சு? (25 மார்க்) 3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்). கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.... (😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...1 point- மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா?
மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . .......... 04. காலங்கள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அவை தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இரு வருடங்களில் இராகவன் சந்துரு வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன.....ஒரே இடத்தில் வசித்தும் வேலைப்பளுவால் அவர்கள் சந்திப்பதும் அரிதாகவே போய்விட்டிருந்தது. இராகவன் ஸ்ரீ காந்துடன் சேர்ந்து ஜவுளி வியாபாரமும் அதனூடே சிறிதாகவும் பெரிதாகவும் கடத்தல்களும் செய்து பெரும் முதலாளியாக வந்திருந்தான். யாழ்ப்பாணம் பெரியகடை வீதியில் ஒரு பெரிய ஜவுளிக்கடையும் வாங்கி விட்டிருந்தான் . அத்துடன் இரண்டு புதிய இசுசு லொறிகளும் யாழ்ப்பாணம்--- கொழும்பு என்று ஓடுகின்றன. சராசரி பதினைந்துபேர்கள் அவன் கடையிலும் லொறியிலுமாக வேலை செய்கின்றார்கள். அவனும் ஸ்ரீகாந்தும் தங்களது ஒரு ஜீப்பிலோ காரிலோ திரிந்து திரிந்து இடையில் வரும் தடைகளை விலக்கி சுழன்று சுழன்று வேலை செய்கின்றார்கள். சந்துருவும் இந்த இரு வருடங்களில் மாணிக்கம் ஜூவலரியில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து நகைத்தொழிலையும் அதன் நுணுக்கங்களையும் நன்றாகக் கற்றுக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இரு மகன்களுடனும் சேர்ந்து அவர்களுக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்வதும், அன்றன்றைய வரவு செலவுகளைக் கணக்கெடுத்து வங்கிகளில் பணம் வைப்பிடுவது என்று மிகவும் நேர்மையாக அவர்களுக்கு உதவியாக இருந்தான். மற்ற நேரங்களில் கடையின் உள்ளே பட்டறையில் மோதிரம், காதணிகள்,வளையல்கள், சங்கிலிகள் என்று எல்லாம் துப்பரவாகவும் அழகாகவும் செய்யக் கற்றிருந்தான். கல்யாண நாட்களில் தாலிக்கொடி பின்னும் வேலைகள் அதிகம் வருவதால் அவர்களின் அனுமதியுடன் கடையில் இருந்து தங்கக் கம்பிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தந்தை தம்பிகளுக்கும் அதை இழுத்துப் பின்னுவதற்கு பழக்கி விட்டிருந்தான். பாய், பெட்டி இழைப்பதில் வரும் வருமானத்தைவிட இதில் அதிக வருமானம் வருவதால் அவர்களும் இதை ஆர்வமுடன் பழகிச் செய்துகொண்டு வருகின்றார்கள் . அதனால் மாணிக்கம் ஜுவல்லரியில் வாடிக்கையாளர்கள் குடுக்கும் வேலைகள் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.வியாபாரமும் அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் அவர்களது வாழ்வும் மேம்பட்டிருந்தது. சென்ற சில மாதங்களுக்கு முன் மாணிக்கம் மூப்பின் காரணமாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.அதனால் அவர் தனது இரு மகன்களையும் குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அவர்களோடு அவர்களது குடும்ப வக்கீலும் வந்திருந்தார். அவரது மூத்த மகன் கொழும்பில் பெரிய ஷோரூமுடன் கூடிய நகைக்கடை வைத்திருக்கின்றார். அவருடைய கடைக்கும் இங்கிருந்தே நகைகள் எல்லாம் போய் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரும்பாலும் சந்துருவே கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அவர்களுடைய ஒரு வானில் பொருட்களை ஏற்றி இறக்கிக் கொண்டு வருகின்றான். மாணிக்கத்தின் இளையமகன் தந்தையுடன் இருந்து இந்தக் கடையை நடத்தி வருகின்றான். மேலும் கடையில் ஆரம்பகாலத்தில் இருந்து அவருடன் கூடவே வேலைசெய்து வந்த தொழிலாளர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம் அவ்வப்போது யாழ்பாணத்திலேயே ஆங்காங்கே வீடுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய வீட்டு வைபவங்கள் மற்றும் பெரிய செலவுகள் யாவையும் மாணிக்கமே மனங்கோணாது செய்துகொண்டு வந்திருந்தார் . அதனால் அவர்கள் எல்லோருடைய கணக்குகள் எல்லாம் அதிக சிரமமின்றி முடித்து தேவையான பணம் எல்லாம் குடுத்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள். இக்காலகட்டத்தில் மாணிக்கத்தின் கடையில் அவரது சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் என்று பலர் வந்து வேலை செய்கிறார்கள். அதனால் உறவினர்களுக்குள்ளே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவது வாடிக்கையாகி இருந்தது. அது சிலசமயங்களில் சந்துருவையும் பாதித்து வருகின்றது. அதனால் அவனும் இப்பொழுது ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறான். வாருங்கள் போராடலாம் . ........ 🐐 🐐 🐐 🐐.1 point- காற்றாடி
1 pointநான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . ........ 03. பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல. ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது. --- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க, இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான். --- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது. --- அப்ப என்ன செய்யப் போகிறாய். --- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான். --- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான். ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது. --- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். --- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார். --- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார். அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு. --- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார். --- ஓம் ஐயா. அத்துடன் உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன். --- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா...... --- ஓம் ஐயா..... --- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன். --- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான். --- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய். --- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும். --- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின், ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....! சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........! வாருங்கள் போராடலாம் ............ 🐇 🐇 🐇.1 point - சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.