Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    88794
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    39307
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3115
    Posts
  4. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5819
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/01/25 in Posts

  1. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  2. இந்த விடியோவை பார்ததும் எனக்கு கீழ் உள்ள வடிவேலு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது. 😂
  3. பதினோராவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து179 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி, இலகுவான ஓட்ட இலக்கை 29.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 181 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் 14 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 10 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
  4. சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்! 15 ஆண்டுகளாக ஒரு பாலியல் புகார் இழுத்தடிக்கப்பட்டு வருவதே ஒரு அவலம். அதை கறாரான நடவடிக்கை இன்றி, மீண்டும், மீண்டும் சமூகத்தின் பேசு பொருளாக்குவது அதைவிட அவலம். ”நீதிமன்றம், சட்டம், சமூகத்தின் மனசாட்சி எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல..” என ஒரு அரசியல் தலைமை வலம் வருவது ஆட்சிக்கே பேரவலம்! சமூகத்திற்கு பயனற்ற இது போன்ற விவகாரங்களை எழுதுவதையும், பேசுவதையும் முடிந்த அளவு தவிர்த்தே வருகிறேன். அதை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து உண்மையான குற்றவாளியை தண்டிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது? இந்த மாதிரி ஒரு விவகாரம் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு பேசப்படுவதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களின் நேர்மையின்மையும் ஒரு காரணமாகும். ஒரு பெண் நம்ப வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறாள். ஒருவனை தீவிரமாக காதலித்த காரணத்தால், அவன் விருப்பபடி மீண்டும், மீண்டும் கருக் கலைப்பு என்ற அவலத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். பிறகு காதலித்தவளை கைவிட்டு , செல்வாக்கும், செல்வ வளமும் உள்ள அரசியல் குடும்பத்து பெண்ணை மணந்துள்ளார். சீமான் மண்ணும், மரபும் சார்ந்த தமிழ் தேசியம் என்னும் உன்னத அரசியலை பேசுகிறார்! ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்கிறார். அந்த வகையில் கணிசமான இளைஞர்களின் நம்பிக்கையை வென்று எடுத்துள்ளார். எனில், அவர்கள் பின்பற்றத் தக்க முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவது தான் ஒரு தலைவனுக்கு அழகாகும். மற்றொரு கல்யாணம் செய்து கொண்ட பிறகும் காதலித்த பெண்ணை கைவிட முடியாமல் மாதாமாதம் ரூ50,000 தந்து தொடர்பை நீடித்துக் கொண்டே வந்துள்ளார். பிறகு அதையும் தராமல் அந்த பெண்ணை நட்டாற்றில் விடுகிறார். அவள் தெருவிற்கு வருகிறாள்! இவரும் மல்லு கட்டுகிறார். கவியரசர் கண்ணதாசன் மூன்று மனைவியரோடு வாழ்ந்திருக்கிறார். கருணாநிதி அவர்களும் இரு பெண்ணோடு வாழ்ந்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவும் மூன்று மனைவியரையும், ஏராளமான ஆசை நாயகிகளையும் கொண்டிருந்திருக்கிறார்! நிச்சயமாக இவை எதுவும் பின்பற்றத் தகுந்த முன் உதாரணங்கள் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட பெண்களை சமமாக நடத்தி, சந்தோசமாக வைத்துக் கொள்ளும் பக்குவப்பட்டவர்களாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். சீமானால் அது முடியவில்லை. மாதம் வெறும் 50,000 அனுப்பி போனில் பேசக் கூட பயந்து வாழ்ந்த காலமும் முடிவுக்கு வந்து, முதல் மனைவியால் அவர் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நிராதரவாக விட்டு விடுகிறார், விஜயலட்சுமியை! இந்தச் சூழலில் அந்தப் பெண் பல முறை ஆண்டுக்கணக்கில் போலீசில் புகார் தந்தும் எந்தப் பயனுமற்று தான் சில காலம் கிணற்றில் போட்ட கல்லானது, விவகாரம்! சீமான் குறைந்தபட்ச மனசாட்சி உள்ளவராக இருந்திருந்தால், இந்த பிரச்சினைக்கு என்றோ முற்றுபுள்ளி வைத்திருக்கலாம். பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு கெளரமான ஒரு நஷ்ட ஈட்டை தந்து, புதியதொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள உதவி இருக்கலாம். ஆனால், அவர் எப்போதும் எளியவர்களோடு சமரசமாகமாட்டார். கட்சிக்காக உழைத்த எத்தனை பேரை அலட்சியப்படுத்தி வெளியே அனுப்பி உள்ளார்! அவரது அகங்கார மனோபாவமே இந்த பிரச்சினை நீடிப்பதற்கு முழு முதற் காரணம். இதற்கு தோதாக இவரது மனைவி கயல்விழியும் அமைந்துவிட்டார். முதன் முதலாக இது வெளியே தெரிய வந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் இந்த காரணத்தால், தன்னை தண்டித்துவிடக் கூடாதே என ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’’ என அரசியல் ஸ்டண்ட் அடித்தார் சீமான். அதன் பிறகும் அதிமுகவுடனும், பாஜகவுடனும் நல்லுறவு வைத்துக் கொண்ட நிலையில், தொடர்ந்து விஜயலட்சுமி புகார் தூங்கிக் கிடந்தது. பாஜகவினர் அன்று சீமானுக்கு ஆதரவாகத் தன்னை மிரட்டியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது புகார் கவனிக்கபடுமென்று நம்பிய விஜயலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது…! கடந்த நான்காண்டுகளில் பல முறை விஜயலட்சுமி புகார் தந்து, பல முறை போலீசால் விசாரிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு முறை காவல்துறையினர் சீமானை அழைத்து விசாரித்ததோடு விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அந்த அளவுக்கு அரசியல் அழுத்தம் இருந்த காரணத்தால் சீமான் ஒருபோதும் தண்டிக்கப்பட முடிந்தவரல்ல… என்ற முடிவுக்கு தான் வந்ததை விஜயலட்சுமி வெளிப்படையாக அழுகையோடு அறிவித்து விட்டுத் தான் பெங்களூர் சென்றார். இந்தச் சூழலில் தான் வழக்கை நீதிமன்றம் விசாரித்ததில் விஜயலட்சுமியின் குற்றச்சாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும், இந்த புகார் தொடர்ந்து அலட்சியப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டு சீமானை விசாரித்து அறிக்கை தர நீதிபதி உத்தரவிடுகிறார். நீதிபதி விசாரிக்கத் தான் கூறியுள்ளார். தன் மீது தவறு இல்லாத பட்சத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்றல்லவா சீமான் சொல்லி இருக்க வேண்டும். ஏற்கனவே 15 ஆண்டுகள் இழுத்தடித்தது போதாது என்று, தற்போது மீண்டும் வாய்தா கேட்பதும், விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக நினைப்பதும் கோழைத்தனமின்றி வேறென்ன? வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது என்பது ஒரு நடைமுறை தானே. அதை நான் தான் படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன் என்கிறார் சீமான் மனைவி. ஆனால், வாயிற்காவலர் அதை அக்குவேறு ஆணிவேராக கிழித்து போட்டாரே தவிர, படிக்கத் தோதாக கிழிக்கவில்லை என்பதே நிஜம். அதை செல்போனில் போட்டோ எடுத்து வரச் சொல்லி கூட சீமான் மனைவி கயல்விழி அம்மையார் படித்திருக்க வாய்ப்புள்ளது. கிழித்துப் போட்ட விவகாரத்தை அவமதிப்பாக கருதி காவல்துறை வருகின்றனர். கேட்டை திறந்து அவர்களை பார்த்தவுடன், சட்டென்று கேட்டை மீண்டும் சாத்த முயற்சிக்கிறார் அந்த செக்யூரிட்டி மனிதர். வந்த காவல்துறையினரிடம் இயல்பாக பேசி, விசாரணைக்கு தானே ஒத்துழைத்து அவர் சென்று இருக்க முடியும் தானே! இத்தனைக்கு பிறகும் சீமானும், அவர் மனைவியும் எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசம் காட்டுகின்றனர் என்றால், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக இவர்கள் தங்களை கருதுகிறார்கள் என்றே பொருளாகும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்று விசாரிக்கவே தடை கேட்கிறார் சீமான் என்றால், இது தப்பிக்கும் முயற்சி தானே! எதிர்கொள்வதில் இருக்கும் கோழைத்தனம் தானே! ஒரு பாலியல் குற்றச் செயல் செய்தவர் 15 ஆண்டுகளாக வருங்கால முதல்வரை போல வலம் வருவதும், அரசியல் நியாயங்கள் பேசி அரசியல் நட்சத்திரமாக வலம் வருவதும் அவரது செல்வாக்கை மட்டும் காட்டவில்லை. தற்போதுள்ள ஆட்சியாளர்களின் ஆளுமை பற்றாகுறையையும் சேர்த்தே காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினால், சீமானை நியாயப்படி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி தண்டிக்க முடியாவிட்டால், அது அவரது திறமையின்மையை – உறுதிபாடற்ற நிர்வாக ஆளுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே அமைந்துவிடும். இத்தனைக்கு பிறகும் சீமானை தண்டிக்கவியலாமல் போனால் அது – சட்டம், நீதிமன்றம், காவல்துறை, ஆட்சி நிர்வாகம், சமூகம் போன்ற சகலத்தின் தோல்வியாக – வரலாற்றில் கரும்புள்ளியாகிவிடும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…! லட்சிய நோக்கும், அர்ப்பணிப்பும் கொண்ட நாம் தமிழர் இயக்கத்தின் தம்பி, தங்கைகள் சீமானை புறக்கணித்து, தங்களில் இருந்து ஒரு புதிய தலைமையை கண்டடைய வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20907/seeman-vijayalaxmi-stalin/
  5. ”சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை Mani Singh SUpdated: Saturday, March 1, 2025, 19:36 [IST] நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய சீமான், தன்னை ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே, அந்த புகாரை நடிகை வாபஸ் பெற்றார். எனினும், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் போலீசார் வைத்து இருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமானின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், அவர் மீதான வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், என்ன பாலியல் குற்ற வழக்கு.. நிரூபிக்கப்பட்டு இருக்கா.. சேட்டை பண்ணக்கூடாது.. திருமணம் என்ற ஒப்பந்தத்திற்குள்ளேயே போகல.. 6,7 மாதங்கள் தான் பழகியிருப்போம்.. அதன்பிறகு, 2008, 2009, 2010 கால கட்டங்களில் நான் தொடர்ச்சியாக சிறையில் தான் இருந்தேன். 2009 க்கு பிறகு தொடர்பு இல்லை" என்று காட்டமாக பேசினார். சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- என்னதான் அவளோட பிரச்சினை என்று பிரஸ்காரங்க கேள்வி கேக்கனுமாம்.. சீமான், 2023 ல் எதுக்கு நீ 50 ஆயிரம் போட்ட.. நீ என்னமோ பிள்ளைங்க வளர்ந்துடுச்சு.. அது வளர்ந்துடுச்சு.. இது வளர்ந்துடுச்சு.. அப்புறம் எதுக்குடா என்கிட்ட வீடியோஸ் வாங்குனீங்க.. எதுக்கு வீடியோஸ் வாங்குனீங்க.. நீ வாங்கி வைப்ப.. அப்புறம் நான் வாயை மூடிட்டு இருப்பேன். அப்புறம் உங்க ஆட்களே வந்து டெலிகாஸ்ட் பண்ணுவேனு மிரட்டுவாங்க.. இதுக்குள்ளயே நான் வந்து சாகணுமா? நீ ஆம்பளயா இருந்தா அநாகரீகமாக பேசாத சீமான்.. 2008 ல இருந்து வெறும் 6 மாதம் தான் பழகினேனாம். அப்புறம் எதுக்குடா நான் 2011 ல் வந்து புகார் கொடுப்பேன். 2011-ல் நீங்க கொடுத்த டார்ச்சருக்குதான் நான் போட்ட துணியோட வந்து கமிஷனர் ஆபிசில் புகார் கொடுத்தேன். அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே.. நீ பேசினால் உன்னை விட கேவலமாக பேசுறதுக்கு எனக்கு தெரியும். சும்மா டிராமா போடாத.. நேற்று வரைக்கு என்ன சொல்லிட்டு இருந்த.. நடிகை யாருன்னே தெரியாது... திமுக கூட்டிட்டு வந்தாங்கன்னுதான சொல்லிட்டு இருந்த.. நேற்று தான சொல்லுற.. ஆமா நான் 50 ஆயிரம் கொடுத்துட்டு இருந்தேன்னு.. எதுக்கு மதுரை செல்வம் என் கிட்ட வீடியோ வாங்கிட்டு இருந்தான். எதுக்கு 50 ஆயிரம் என் அக்கவுண்டில் போட்டீங்க.. மீடியா முன்னாடி சீன் போட்டுட்டு இருக்காத.. கேவலம் பிடிச்ச பொம்பளயாம்.. உன்னை மாதிரி துப்பு கெட்டவன் கூட வாழ்ந்தேன் பாரு.. எனக்கு தான் கேவலம்.. பெரிய ஆள் மாதிரி பேசாத" இவ்வாறு அவர் நடிகை பேசினார். நடிகை பேசிய வார்த்தைகள் அப்படியே இங்கே எழுதப்பட்டுள்ளன. https://tamil.oneindia.com/news/chennai/actress-release-new-video-and-replies-to-ntk-chief-seeman-allegations-684125.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
  6. ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?
  7. நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது. இதனை எப்படி சுமூகநிலைக்கு கொண்டு வருவது என்று கலந்துரையாடுவதும் அதனைச் செயற்படுத்துவதுந்தான் காலத்தின் தேவை.
  8. எல்லாம் இந்த கடவுள் வருகிறார் என்பதை பொறுத்தது.அதிக நோபல் பரிசுகளை வென்ற இஸ்ரேலியர்கள் என்ன கூறுவார்கள் என நினைக்க தோன்றுகிறது.🙂 எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது நான் ஒரு வேளை பூமி சுற்றவில்லையோ என நினைத்தேன். 🙃
  9. அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல. நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது. தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள். யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும். திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது. இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................
  10. நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
  11. தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.
  12. ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின! முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபாயினையும் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவ...முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியி...
  13. கொகேயின் பாவனையாளர்கள் திருந்த வாய்புகள் அதிகம். வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழதமிழ் சீமான் ஆதரவாளர்களின் உண்மை நிலை அது தான். சீமான் கத்திகொண்டு கேட்பாராம் கருணாநிதியின் மகனா ( ஸ்ராலின் ) அல்லது பிரபாகரனின் மகனா ( அது இவர் தானாம் ) பார்ப்போமா பார்ப்போமா உடனே ஈழதமிழர்கள் ஒரு டோஸ் ஏத்திய நிலைக்கு சென்றுவிடுவார்களாம் Island சொன்ன மாதிரி இவர் ஒரு போதுமே ஆட்சி அதிகாரத்துக்கு வரப்போவது இல்லை நஞ்சை விதைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றார்.
  14. நாளையிலிருந்து வாத்திக்கு குரு சந்திர யோகமாம் 😂 இது நல்ல குறுப் .....❤️ நியூஸிலாந்து ஈழப்பிரியன் ஏராளன் வசீ வாத்தியார்
  15. இவர்கள் கோபப்படுகிறார்கள் என்றாலே தமிழ்த்தேசியம் வளர்வது தெரிகிறது என்று அர்த்தம். அதற்கு சான்றாக இவர்கள் பாவிக்கும் சொற்களே சான்று. அதை நேரடியாக குறிப்பிட்டு எழுத முடியாமல் தமக்கு பிடிக்காதவைகளுக்காகவும் ஆடு நனைகின்றது என்று அழுவது இவர் போன்றவர்களின் வழக்கம். இவர்கள் என்ன தான் ஓலமிட்டாலும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தை மட்டும் அல்ல யாழ் தளத்தையும் கதற விட்டிருப்பது தான் நிஜம். நாம் தமிழர் கட்சி சம்பந்தமான திரிகள் மட்டுமே இங்கே எரிகின்றன.
  16. நாளைக்கு யார் வென்றாலும் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. மழையே, மழையே என் செய்ய நினைத்தாய் கோஷானை 🤣.
  17. கிருபனும் சழைக்காம ஒரே கேள்வியைத்தானே கேற்கிறார். யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்
  18. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (02 மார்ச்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND நான்கு பேர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனவும் மற்றைய 20 பேரும் இந்திய அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நியூஸிலாந்து ஈழப்பிரியன் ஏராளன் வசீ வாத்தியார் இந்தியா வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  19. நீங்கள் சொல்வது மிகச் சரி நுணா. நாங்களும் அதே மாதிரி, சிங்கள பெளத்த இனவாத அரசுக்கு எதிராக போராடாமல், மாவட்ட சபையே போதும் என்று அன்றே காலில் வீழ்ந்து சரணாகதியாகி இருந்தால், அதாவது டீல் பேசி இருந்திருந்தால் பெருமளவான உயிரிழப்புகள், நிலப்பறிப்புகள், பொருளாதார இழப்புகளை தவிர்த்து இன்றைய நிலையினை அன்றே நாம் அடைந்து இருக்கலாம். தலைவர் தன்னையும் தன் மக்களையும் நம்பி ஏமாந்து போனார். செலன்ஸ்கி அமெரிக்காவையும், மேற்குலகையும் நம்பி ஏமாந்து போனார். பேசாமல் அன்றே காலில் வீழ்ந்து பாதங்களை நக்கிப் பிழைத்து இருக்கலாம்
  20. சம்மனை இங்க ஒட்டி செல்லவும்..
  21. வீதியில் வாகனங்களின் வேகத்தை படம் பிடிக்கும், ஒளிப்பட கருவியை... குப்பைவாளி மூடியால் மறைத்து.. பல வாகன ஓட்டிகளை காப்பாற்றிய உள்ளுர்வாசி ஒருவர். 😂
  22. காலத்தின் பதிவாக வந்த கவிதை பாராட்டுக்கள் .......! tom & jerry மாதிரி போச்சுது பேச்சுவார்த்தை, அரசியலில் எப்ப யாரோடு யார் சேருவார்கள் , யார் காலை யார் வருவார்கள் என்று தெரியாது . ....! 😁
  23. டிரம்ப்... செலென்ஸ்கியை, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றினார்.
  24. ஏழு வருடங்களுக்கு முன்பே என்னுடைய ஆணித்தரமான கருத்தை இப்பகுதியில் வைத்துவிட்டேன் இது கருத்துக்கள உறுப்பிர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நாற்சந்தியில் அமைந்திருக்கிறது. யாழ் கருத்துக்களத்தின் நிலவரம் இதுவரையும் மாற்றமடையவில்லை கருத்தாடல்கள் தனிமனிதத் தாக்குதல்களாக மாறுவது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று செவ்வியன். கருத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பார்வை என்பது அவர்களுக்குள் இருக்கக்கூடிய எண்ணங்கள் நம்பிக்கையின் பால் ஏற்படுவது. எண்ணங்கள் நம்பிக்கைகளை தூரநோக்கில் பார்க்கப் பழக்கப்படாதவர்களிடம் எதையும் கலந்தாலோசிக்கமுடியாது அவ்வளவுதான்.
  25. படத்திற்கு நன்றி சுவியர். இதனை பல இடங்களில் தேடினேன், எனது கண்ணில் அம்பிடவிலை.
  26. இதை முதல் தரம் அமெரிக்க செய்தது போல் ஆச்சரியப்படுகிறீர்கள். வரலாறே காலை வாரியது தான். சேகுவாரா வரலாறை பாருங்கள். முழு நேற்றோ நாடுகளும் பொருளாதார தடையிலிருந்து அதி நவீன ஆயுதங்கள் பணம் என வழங்கியும் முடிவு??? இப்போ ரஸ்யாவுடன் டீலை பண்ண முதல் போர் தொடங்க முதல் ரஸ்யாவுடன் டீலை பண்ணுமாறு இதே யாழ்களத்தில் கூறியவர்கள் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் தான். அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி யூக்ரேனிடம் கொடுத்தவர்கள் நேட்டோ நாடுகள். துருக்கியை நம்புவதை விட ரஸ்யாவையே நம்பி விடலாம்.😁
  27. கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி தேடித்தேடி பார்த்த..வீடியோ செய்திகளை ஒரு கவிதைமூலம் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்... அருமை தொடருங்கள்...
  28. செத்தகிளி ஒருக்காலும் சிறகடித்துப் பறக்காது. கிளி செத்தது செத்ததுதான். ட்ரம்புக்கு இரானைக் கண்ணிலையும் காட்டக்கூடாது. ஆனால் செத்தகிளிக்கு இரான்: எப்படி அமெரிக்காவுக்கு இஸ்ரேல் இருக்கின்றதோ அப்படி. இஸ்ரேல் முல்லாக்களின் முட்டாள் தேசத்துக்கு ட்ரம்பின் துணையுடன் ஒரு போடுபோடேக்க செத்தகிளி வேற வழியில்லாமலுக்கு இரானுக்காக சிறகடித்துப் பறக்க முற்படும். அப்ப செத்தகிளிக்கு சடங்கை வச்சு செஞ்சிடலாம். செத்தகிளிக்கு எம்பாம் பண்ணுற மருந்தும் ஆக்களும் இஸ்ரேலிலதான் இருக்கிறார்கள். 😂
  29. இங்கு எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் சீமான் காவற்துறை குறிப்பிட்ட காலத்தில் தான் வரமுடியாமைக்கான காரணத்தை நேரடியாகவும், தனது சட்டத்தரணிகள் மூலமாகவும் அறிவித்திருக்கிறார். அதற்கு மதிப்பளித்து உடன்பட்டிருக்கவேண்டும். சரி, சட்ட அடிப்படையில் ஒட்டினார்கள், சாட்சியாக ஒளிப்பதிவு செய்தார்கள் அவர்களது கடமை நிறைவேறியது. அவர்கள் கிழிக்கிறார்களா, வாசிக்கிறார்களா என்பதை ஏன் ஒட்டுப்பார்க்கவேண்டும்? சரி கிழித்தது தவறென்றால் அதற்கு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் போலீசார், இராணுவத்தினர் ஆட்சியாளரின் கூலிகளாக செயற்படுகின்றனர். பின்னர் தாக்கப்படுவதும் தண்டிக்கப்படுவதும் அவர்களே. இங்கே அமலராஜ், பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை தாக்க முயன்றார் போலீசார் உடனடியாக செயற்பட்டு அவரை சுட்டுக்கொன்றார் அல்லது சிறையில் தற்கொலை செய்து கொண்டாரென செய்தி வராமலிருந்தால் சரி. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை அனுபவித்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் அல்லர் என்று தெரிந்தும், அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த கொடிய பாவிகள், அவர்கள் தங்கள் இறுதிக்காலத்தை கூட வெளியில் அனுபவிக்க விடாமல் அவர்களின் விடுதலையை எதிர்த்து கூப்பாடு போட்டவர்கள், தமிழருக்கு ஆதரவாக கதைக்கும் சீமானை பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருப்பார் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என கடந்து போக முடியாது. வற்புறுத்தி செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைத்து தண்டனையளிப்பதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை கைது செய்வதும் கொலை செய்வதும் ஒன்றும் இவர்களுக்கு புதிதில்லை. நாட்டில் அமைதி சமாதானம் நிலவவேண்டுமானால்; அரசியல் அடாவடிகள், துணைபோகும் நீதிமன்றம், காவற்துறை, ஊடகத்துறை பொறுப்போடு செயற்படவேண்டும். விஜய லட்சுமி பாதிக்கப்பட்டிருந்தால்; சீமானின் கலியாணத்தை நிறுத்தி அப்போதே பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம், சட்டத்துறையை நாடியிருக்கலாம், நட்ட ஈட்டை பெற்றிருக்கலாம், இல்லை அவரையே திருமணம் செய்திருக்கலாம் விரும்பினால். இதுவெல்லாம் நடக்காத காரியமா இந்தியாவில்? வேறென்ன செய்ய எதிர்பார்க்க முடியும் இச்சந்தர்ப்பத்தில்? அதை விட்டு காலம் காலமாக இந்த விடயத்தை நீட்டுவது ஏதோ பின்னணியில் என்பது தெளிவாக தெரிகிறது.
  30. எனது சதிக்கோட்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சதி யை இழந்து, கோட்பாடு ஆகிறது🤣. It’s all part of Putin’s plan. செலன்ஸ்கி கொடுக்க முடியாததை டிரம்ப் கேட்பது, பின்னர் அமெரிக்காவுக்கு கூப்பிட்டு இப்படி சண்டை பிடிப்பது. அதை சாட்டி டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது. இப்போ அமெரிக்காவில் டிரம்ப் ரஸ்ய சார்பு நிலை எடுக்க தேவையான political cover ஐ இந்த சந்திப்பு மூலம் ஏற்படுத்தி கொண்டார் டிரெம்ப். வான்ஸ் சண்டையை கிளப்பியது வேணும் எண்டேதான். டிரம்பும் வான்சும் சொல்லி வைத்து செய்தது அது (coordinated attack ).
  31. அடுத்த 4 வருடங்களுக்குள், ஒரு கட்டத்தில் புரின் ஓவல் அலுவலகம் வரக் கூடும். அப்போது எப்படி இந்த இருவரும் குனிந்து நின்று வழிவார்கள் என்பதையும் ஊடகங்கள் பதிவு செய்யும். அது தான் இன்னும் அருவருப்பான காட்சியாக இருக்குமென நினைக்கிறேன்.
  32. காணொளி நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
  33. தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.
  34. இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂. கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது. அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன். கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.
  35. பிரித்தானிய நேரப்படி நாளை சனி (01 மார்ச்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 14 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் 10 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி ரசோதரன் நுணாவிலான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இங்கிலாந்து ஏராளன் சுவி அல்வாயன் தமிழ் சிறி வசீ வாத்தியார் நந்தன் செம்பாட்டான் சுவைப்பிரியன் கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  36. தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @Eppothum Thamizhan க்கு வாழ்த்துக்கள்.
  37. பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):
  38. ஆழமான அருமையாக கவிதை. ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. பாராட்டுக்கள் தில்லை.
  39. இறந்த பயணி பருமனானவர் என்ற படியால், அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர வைக்கப் பட்டு இருக்கின்றார். வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே. அதைச் செய்யாமல்…. பிணத்துக்கு அருகில் இருந்து பயணம் செய்து விட்டு, பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் மர்மம் என்ன? தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம் மாறி இருந்து, அனுசரித்து போவதுதானே முறையான செயல்.
  40. இவரின் தனித்துமான குரலுக்கு மயங்காதவர்கள் கிடையாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.