Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்21Points88794Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்10Points19643Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points39311Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33798Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/16/25 in Posts
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அரைச் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் வேகமாக அடித்தாடிய அபிஷேக் போரெல், கேஎல் ராஹுல், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், அக்க்ஷர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்புடன் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் காயம் காரணமாக வெளியேறியபோதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா ஆகியோரின் அரைச் சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கிப் முன்னேறியது. எனினும் மிச்சல் ஸ்ராக்கின் இறுக்கமான இறுதி ஓவரில் 9 ஓட்டங்களை எடுக்கவேண்டிய நிலையில் 8 ஓட்டங்களை எடுத்ததால் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்துப் போட்டி சமநிலையில் முடிந்தது. அதன் பின்னர் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. முதலில் ஆடவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 5 பந்துகளின் இரண்டு விக்கெட்டுகளை ரண் அவுட் மூலம் பறிகொடுத்தமையால் 11 ஓட்டங்களுடன் அவர்களின் ஆட்டம் 5 பந்துகளில் முடிந்தது. பதிலுக்கு ஆடவந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலும், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் 4 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்ட உதவினர். முடிவு: போட்டி சமநிலையில் முடிந்திருந்ததால் சுப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் முதல்வர் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் பல நாட்களாக சுமைதாங்கியாக இருந்த @goshan_che இன் வலிக்கு நிவாரணம் வழங்க @சுவைப்பிரியன் இறுதி நிலைக்குச் சென்று எல்லோரையும் தாங்கிப் பிடிக்கின்றார்!3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மாதிரி மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு தண்ணியைக் காட்டி விட்டு படைத்தளபதி நந்தனார் ஆட்சியைக் கைப்பற்றி விட்டாரா ...... 😂 அல்லது மன்னர் தனது பதவியைக் காப்பாற்ற....... பலமுறை படைத் தளபதியை ஒற்றனாக எதிரிகளிடம் அனுப்ப.... எதிரிகள் படைத்தளபதிக்கு ஆசை காட்டி..... மன்னருக்கு மோசம் செய்ய வைத்து விட்டார்களா.... 🤣 என்ற சந்தேகம் படை வீரர்கள்களிடம் காணப்படுகின்றது விரைவில் தனது படையணியைத் திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற மன்னர் கங்கணம் கட்டி ஒற்றைக் காலில் நிற்பதாக ஒரு செய்தி கூறுகின்றது 😅2 points
-
குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!
உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல (சுவி) அண்ணா பின்னால போறதுதான் தொண்டனுக்கு அழகு ❤️2 points
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய உதவிய, துணை நின்ற, பின் கதவால் ஆதரவு கொடுத்த அமெரிக்கா, ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து ஜேவிபி வரைக்கும் ஒரு போதும் நீதியான சர்வதேச விசாரணைக்கு முழுமையான ஆதரவு கொடுக்கப் போவதில்லை. கூட்டுக்களவாணிகள் எவரும் பங்காளிகளை காட்டிக் கொடுத்து தாமும் மாட்டுப்பட மாட்டார்கள். இலங்கையை தன் வழிக்கு கொண்டு வர மட்டுமே அதை வைத்து பூச்சாண்டி காட்டுவார்கள். அத்துடன், இத்தனை பேரழிவுகளை மக்கள் மீது நிகழ்த்தும் இஸ்ரேலின் அட்டூழியங்களை ஆசிர்வதித்துக் கொண்டு, புட்டினை மட்டும் கண்டிக்கும் இந்த உலக நாடுகளின் வெளிப்படையான இரட்டை வேடங்களை கண் முன்னே கண்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்திலும் இப்படியான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா? தக்கண பிழைக்கும். மற்றவை அழிக்கப்படும் என்பதே இன்றைய நீதி.2 points
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சில விசேட சூழ்நிலைகளில் இப்படி அதிகாரிகளால் ஆட்சி செய்யும் முறை நடந்திருக்கிறது. 20 ஆண்டுகள் முன்னர், பெல்ஜியத்தில் ஆட்சி பெரும்பான்மையில்லாமல் கவிழ்ந்து விட்டது. புதிதாக ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் பல மாதங்கள் "காபந்து பிரதமர்- caretaker PM" ஆட்சி செய்தார். அந்த வேளையில், குடிமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகளை அமல் படுத்தி அன்றாட நிர்வாகத்தை அரச அதிகாரிகள் நடத்தினார்கள். "ஏற்கனவே இயற்றப் பட்ட கொள்கைகள்/சட்டங்கள்" - இது தான் முக்கியமான பொயின்ற்: புதிதாக கொள்கைகளைச், சட்டங்களை அதிகாரிகள் இயற்றவில்லை. இருக்கும் சட்டங்களை அமல் படுத்தினர். கடஞ்சா தன் கருத்திற்கு இந்திய யாப்பை சாட்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த யாப்பிலேயே இருப்பதன் படி, நிர்வாக அதிகாரிகள் "கொள்கைகளை அமல்படுத்துவோர்" என்று தான் இருக்கிறது. "கொள்கைகளை இயற்றுவோர் - policy makers" அல்லது அரசியல் தலைமையின் கொள்கைகளை தடம்/வழி மாற்றுவோர் என்று குறிப்பிடவில்லை.2 points
-
கருத்து படங்கள்
2 pointsகருத்துப் படங்களை, ஆவலுடன் பார்த்து ரசிக்கும் நல் உள்ளங்களே... தமிழ் சிங்கள புத்தாண்டு, ஈஸ்ரர் விடுமுறை என்று இலங்கையில் இந்தக் கிழமை முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருப்பதால்... கருத்து ஓவியம் வரைபவர்கள், நீண்ட விடுமுறையில் சென்று விட்டார்கள் போலுள்ளது. அதனால்... நான் வழமையாக கருத்து ஓவியம் எடுக்கும் இணையத்தில் புதிய கருத்து ஓவியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் புரிதலுக்கு நன்றி. 🙂2 points
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரஹானே கட்டாயமாக அவுட்டை ரிவியூ செய்திருக்கவேண்டும்! ரசல்ஐ எதுக்காக விளையாடுகிறார்களோ தெரியவில்லை! பந்தும் போடுவதில்லை. ஐந்து ஒவர்கள் இன்னமும் இருக்கும்போது முதல் பந்துக்கே இப்படியா அடிப்பது! மொயீன்அலியை கட்டாயமாக விளையாடும் அணியில் சேர்க்க வேண்டும். அவர்தான் KKR இற்கு லக்கி சாம்!! குய்ந்தோன் டீகோக்க்கும் கலைக்கப்பட வேண்டிய ஒருவர்! ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாசை விளையாடலாம்!2 points
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும் April 15, 2025 ஷோபாசக்தி என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன். கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம். அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது. அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள். குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது. கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது. ‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள். ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை. சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன். கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார். அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது. சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது. சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. 2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை. முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன். ”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.” எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே. பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது. இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன். கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். ‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை. குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை. பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல். கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே. அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது. எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது. கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன். ‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்? என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள். இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது. கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது: “ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை. என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை. -ஷோபாசக்தி 15.04.2025 https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA2 points
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஓணாண்டியை யாராவது டாக் பண்ணி விடவும். அவரின் சங்கத்துக்கு ஒரு கேஸ் வந்துள்ளது 🤣2 points
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
2 pointsபிள்ளையானுக்கு சட்டத்தரணியாக... உதய கம்மன்பில. தமிழ் மக்களுக்கு எவ்வளவோ எதிர்ப்பான ஒரு இனவாதி உதய கம்மன்பில, பிள்ளையானுக்காக வாதாட வருகின்றார் என்றால்... பிள்ளையான் எவ்வளவு சீரழிவை தமிழனுக்கு ஏற்படுத்தி இருப்பார் என்று ஊகிக்கலாம்.2 points
-
விதியற்றவர்
1 pointஅவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
GMT நேரப்படி நாளை வியாழன் 17 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 22 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் கந்தப்பு இப்போட்டியில் போட்டியில் 22 பேருக்கு முட்டைகளா அல்லது @கந்தப்பு க்கு மாத்திரம் முட்டைகளா?1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சூப்பர் ஓவர்வரை விறுவிறுப்பான போட்டி ......... இப்படி விளையாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ......... ! 👍 நந்தனாருக்கு வாழ்த்துக்கள் . ....... நான் நந்திபோல் குறுக்கே நிக்காமல் வழி விட்டாயிற்று .......... ! 😂1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி இதை நசுக்கி அமுக்கிடலாம் எண்டு பார்த்தா சுமந்திரன் குறுக்கமறுக்க ஓடி காரியத்தை கெடுத்திட்டாராம் எண்டு ஊரில பேசிக்கொள்கிறார்கள்..1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
அந்தக் கள்ப்றிட்டிண்ட தோஸ்துதானாம் பார் சிறி! அப்ப மாமா உறக்கத்திலதானே இருக்கோணும்!👀1 point
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
ஏன் எண்டால் சுமந்திரன் தன்ர ஆட்களுக்கு கவர் எடுக்கும் பச்சை கள்ளன். நிற்க… இதெல்லாம் நடந்த போது மிக்சர் மாமா பார் சிறி அதே கட்சியில் பதவியில் இருந்தார். இப்போ தலைவர்? அவர்தான் யோகியன் ஆச்சே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஐயகோ… மிக்சர் மாமா பார் சிறியும் பச்சை கள்ளனா!!! ஓட்டுமடம்.com1 point
-
கருத்து படங்கள்
1 pointஇதுக்கெல்லாம் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம் . ........ விரும்பினால் வெளிநாட்டுக் கருத்தோவியம் கூட போடலாம் தப்பில்லை .......! 😂1 point
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
1 point
- கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
சுமந்திரன் நடவடிக்கையாவது எடுத்துள்ளார்… மிக்சர் மாமா பார் சிறி…. ஆழ்ந்த உறக்கத்தில் 🤣1 point- கருத்து படங்கள்
1 pointநன்றி ...இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது அவர்களுக்கு விடுமுறை அதனால் கருத்துப்படம் பகிர முடியவில்லை. நீங்களும் பதிப்பதில் இருந்து சிறு விடுமுறை அவ்வளவே தான்.1 point- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
1 pointதான் வாழ்ந்த மண்ணின் முன்னேற்றத்துக்காக போராடி 93 வயதில் இறந்த கிழவனால், இறந்து 52 வருடங்கள் ஆன பின்பும் வெற்றிகளை குவிக்க முடிகிறது. தமது மண்ணில் வரலாற்று மண் மீட்பு யுத்தம் நடக்கும் போது வெளிநாடு ஓடி வந்து பிள்ளைகளை டாக்டர் ஆக்கியோர், அவர்கள் பூட்ட பிள்ளைகளால் கூட நினைவு கூரப்படமாட்டார்கள் 🤣. # சூரியனை பார்த்து பூனை உறுமியது போல உங்களைத்தான், சம்பவம் நடக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத்தான், ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்🤣1 point- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
1 pointஇது... பெரியாருக்கு கிடைத்த வெற்றி.1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
என்னதான் நீட்டி முழக்கினாலும்… சோபா…. சகதி… சகதி தான்🤣🤣🤣1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன் நம்முடைய ஆள் என்பதை பொதுஜனம் மறக்கக் கூடாது . .......... ! 😂1 point- நானும் ஊர்க் காணியும்
1 pointமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃 இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .1 point- "மே 2009 கொடூரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்" - பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன்
1 point"மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது"- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் Published By: RAJEEBAN 16 APR, 2025 | 10:24 AM முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - இது புதிய ஆரம்பங்கள் பிரதிபலிப்புகள் மற்றும் நம்பிக்கைகளிற்கான தருணம்.மேலும் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள தமிழ் சமூகத்திற்காக பரப்புரை செய்வதற்கான எனது அர்ப்பணிப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கான ஒரு தருணம். தமிழ் பாரம்பரியத்தின் முதல் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்,தமிழ் புத்தாண்டு தனிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது. எங்களது சமூகம் ஒரு பெருமை மிக்க சமூகம்,வலிமை மற்றும் மீள் எழுச்சியின் கதை. பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி இலங்கையிலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை,பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும். இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மாக்னி;ட்ஸ்கி பாணி தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன். அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை. 15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது.இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம். ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும்,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன். மாவீரர் தினத்தன்று வெளிவிவகார குழுவின் அமர்வில் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுசென்றேன்.நீதி உண்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நான் உறுதியாக நம்புவதனால் நான் இதனை செய்தேன். இவை அருவமான கொள்கைகள் இல்லை,தமிழ் குடும்பங்களை பொறுத்தவரை இவை ஆழமானவை தனிப்பட்டவை. மே 2009 கொடுரங்களை நாங்கள் நினைவில் கொள்கின்றோம்,மருத்துவமனைகள் மீது எறிகணை தாக்குதல்கள்,'பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டவைகள் . காணமல்போன ஆயிரக்கணக்கானோர். மனித குலத்தின் மிகமோசமானவற்றை எதிர்கொண்டு தப்பிய தலைமுறை இன்னமும் சுமக்கும் அதிர்ச்சிகள் காயங்கள். நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது. பிரிட்டனில் நான், ஆயிரம்நாட்களிற்கு மேல் டியாகோ கார்சியாவில் சிக்குண்டிருந்த தமிழர்கள் உட்பட தமிழ் அகதிகளிற்காக குரல்கொடுத்துள்ளேன். முன்னைய கென்சவேர்ட்டிவ் அரசாங்கத்தின் கீழ் அவர்கள் முட்டுக்கட்டை நிலையில் விடப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான பரப்புரைகளின் பின்னர் அவர்களிற்கு பிரிட்டனில் பாதுகாப்பான புகலிடம்வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/2120941 point- ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன் லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
இது எந்த நாட்டிலும் இருக்கக் கூடிய சாதாரண நிலை, ஓரளவு செய்தி வாசிக்கும் எவருக்கும் புரியக் கூடிய உண்மை. ஆனால், "திராவிட மொடல் காரணமாக பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை" என்று நிறுவ "சீரமைப்பு" , "போக்கு" என்பன இரு வேறு விடயங்கள் என குத்தி முறியும் நிலைக்கு வந்திருக்கிறார் கடஞ்சா! அவரது தியரியின் மிகப்பெரிய ஓட்டை, இதே IAS அதிகாரிகள் செயலில் இருக்கும் பீகாரில் ஏன் தமிழகம் போல வளர்ச்சி இல்லை? என்பதற்கான பதிலில் இருக்கிறது. இதையெல்லாம் சீரியசாக அணுகுவது நேர விரயம்😂!1 point- ட்றம்பரின் ஊழித்தாண்டவம்
1 pointஅமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, மேற்கு நாடுகளில் பிறந்து வாழும் மக்களுக்கும், வந்தேறி வாழும் மக்களுக்கும் கூட அறியாமை தான் பெரும் பிரச்சினை. அந்த அறியாமையில், "வரலாறு அறியாமை" என்ற பகுதி தான் ட்ரம்ப் மீண்டும் வரக் காரணம். ஆனால், கோசான் ஒரு தடவை சொன்னது போன்ற "பெரும் சேதமுடனான வெற்றி-pyrrhic victory" ட்ரம்ப் விடயத்தில் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்: வாக்குப் போட்ட முஸ்லிம் அமெரிக்கர்களின் பலஸ்தீன கூட்டாளிகளுக்கு ஏற்கனவே இந்த "வெற்றிக் கனி" கிடைத்து விட்டது. அதே போல, பச்சை மட்டையில் காத்திருக்கும் இந்தியர்களுக்கும் வெற்றிக் கனி நெருங்கி வருகிறது. சிறிலங்கன் அமெரிக்கன் ட்ரம்ப் விசிறிகளுக்கும் நிச்சயம் சில விடயங்கள் நடக்கும், ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்😎!1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
சுத்த பைத்தியக்காரத்தனமான கதை இது. அணிசேராமை என்பது நேரு உருவாக்கிய கொள்கை. திறந்த பொருளாதாரம் என்பது ராவும், மன்மோகனும் சேர்ந்து உருவாக்கியது. கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - மோடியும் அமித்ஷாவும். பாகிஸ்தானை கையாளும் விதம் - மோடி வந்த பின், முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி மாறுபாடாக உள்ளது. ஆனால் இரெண்டு ஆட்சியிலும் அதிகாரிகள் ஒரே ஆட்கள்தான். இந்தியா தன் அண்டை நாடுகள் மீதான போக்கை 1990 களின் மத்தியில் குஜ்ரால் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மாற்றியது. அதன் பெயரே Gujral doctrine. நிலமை இதுதான். ஒரு ஜனநாயக நாட்டில், அதிகாரிகள்தான் எல்லாம் என்றால் ஆட்சியில் அரசியல்வாதிகள் எதுக்கு.1 point- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
எனக்கு நீங்கள் வெல்வதோ தோற்பதோ இலக்கல்ல. கருணாநிதி தெலுங்கன் என்பது அவர் “சின்னமேளம்” என்ற வசைசொல்லால் அறியப்படும் இசைவேளார் சாதி என்பதால். அதே போல் “கிறிஸ்தவ நாடார்” சீமானும் மலையாளி என சாதிய உட்பிரிவை கொண்டுதான் வகைபடுத்தபடுகிறார். இங்கே இவர்கள் இனத்தூய்மை பற்றி சிறுநீரக மாதிரி மூலம் நிறுவிய ஆதாரம் உங்களிடமும் இல்லை, என்னிடமும் இல்லை. ஆனால் நான் தமிழராய் உணர்வோர் எல்லோரும் தமிழரே என ஏற்பதால் - கருணாநிதி, சீமானின் சாதியை ஆராயாமல் இருவரையும் தமிழராக ஏற்கிறேன். இதில் ஒருவரை ஏற்கமுடியாது என நீங்கள் சொன்னால், மற்றவரையும் ஏற்க முடியாது என்கிறேன். அவ்வளவுதான்.1 point- கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!
1 pointஇதுவும் அப்படி தான் இருக்கும். முன்பு ஒரு நம்பிக்கையான செய்திக்கு உறவு வீரபையன் சாட்டை துரைமுருகனின் காணொளியை தான் தந்தவர்1 point- யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
1 pointஆசை தோசை அப்பளம் வடை...... இப்ப இந்த மொடேர்ண் வாழ்க்கையில 95தான் வயோதிப வயசாம். ஆகவே 👈👉👆👇 🙂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் @suvy சுவிக்கு வாழ்த்துக்கள்.1 point- தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்
சிங்கள இனவாதத்தின் அடிமடியில் கனம் அதிகம்.இன்றல்ல நாளை அல்ல என்றோ ஒரு நாள் இவர்களை எதிர்த்து நிற்க முடியாது என்ற அச்சம் சிங்களத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். ஈழத்தமிழினத்தின் வலிமையை பார்த்து நன்றாகவே பயப்பிடுகின்றார்கள். அதெல்லாவற்றையும் விட..... ஈழத்தமிழருக்கு தெரியாத உண்மை ஒன்று சிங்கள உள்ளக இராஜதந்திரிகளுக்கு தெரிந்திருக்கலாம். யார் கண்டார்?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்து போர்க்களத்தில் தனது போர்வாளுடன் முன்னணியில் எதிரிகளின் சிம்மசொப்பனமாக😅 வலம் வரும் எங்கள் மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கருக்கு எங்கள் வாழ்த்துக்கள்😂1 point- "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]"
Copilot Answer The causes of Attention Deficit Hyperactivity Disorder (ADHD) are not fully understood, but several factors may contribute to its development: Psychiatry.org+4 Genetics: There is growing evidence that genetics play a role, although no specific gene or gene combination has been identified as the cause. 3 Neurological Origins: ADHD is believed to have neurological origins, and a reduction in dopamine is considered a factor. 1 Environmental Factors: Brain injuries, prenatal exposures (such as alcohol or nicotine), and toxins in the environment may also contribute. 2 Gender: ADHD is more common in males than females. இது சம்பந்தமாக விளங்கி கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் பதிக்கிறேன். கவனம்-பற்றாக்குறை/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) என்பது பல்வேறு வயதினரைப் பாதிக்கும் ஒரு பரவலான நரம்பியல் … படித்ததில் பிடித்தது1 point- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?1 point- தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
தமிழர் படுகொலைகளை விசாரிக்க, வெளிநாட்டு விசாரணை தேவையில்லை, உள்ளூரிலையே விசாரிக்கலாம் என்று ஐ.நா. வில் சொல்லிவிட்டு வந்த சுமந்திரன் எங்கே? இப்படிப் பட்ட லூசு அரசியல்வாதிகளால்... தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் கிடைக்காமல் போகின்றது. இவர்களை அரசியலை விட்டே அடித்துத் துரத்த வேண்டும்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு பெண் : ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் கலைகளிலே அவன் மறைந்திருந்தான் கை விரலில் அவன் பிறந்து வந்தான் பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான் பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி ஒரு முகம் அவனை உணர்ந்ததடி இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி அறிமுகம் சுவையாய் முடிந்ததடி அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி ......... ! --- தேவியர் இருவர் முருகனுக்கு ---1 point- கருத்து படங்கள்
1 point1 point- நம்ம பரிமளம்
1 pointஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂1 point- 10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
Data Sources RBI State Finances Reports Ministry of Statistics & Programme Implementation (MoSPI) Economic Surveys of States --https://viduthalai.in/110383/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/ வாசித்து விளங்க தெரியாவிட்டாலும் தற்குறிதனம் தான். கூகிளில் தேடினாலும் ஏ ஐ தான் தரவிகளை தேடி தருகிறது. நீங்கள் உங்களுக்கு சார்பான தகவலை தரும் போது ஏனையவர்கள் தரக்கூடாதா? வாசகர்கள் வாசித்து சரி பிழையை சொல்லட்டும். அது சரி நீங்கள் தரவு எடுத்த இடம் தெய்வீக தளமோ?1 point- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இனமொன்றின் குரல்8h · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்1 point - கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.