Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19121
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    34973
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7048
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/16/25 in all areas

  1. சுக்ரோசு (sucrose) என்பது நாம் கரும்பில் இருந்து எடுக்கும் சீனியில் (sugar) இருப்பது. இந்த சுக்ரோசில் ஒரு குளுக்கோஸும் (glucose) ஒரு பிரக்ரோசும் (fructose) இருக்கும். உணவுக் கால்வாயில் சுக்ரோசு குளுக்கோசாகவும், பிரக்ரோசாகவும் உடைத்துத் தான் உடல் உறிஞ்சிக் கொள்ளும். குளூக்கோசை உடல் கலங்கள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளும். பிரக்ரோசை ஈரல் மட்டும் பயன் படுத்திக் கொள்ளும். ஈரல், பிரக்ரோசைப் பயன்படுத்தி கொழுப்பை உற்பத்தி செய்து தன்னிடம் சேமித்துக் கொள்ளும், சில சந்தர்ப்பங்களில் இரத்தம் வழியாக ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கும். இப்போது இதை யோசித்துப் பாருங்கள்: சீனியை அதிகம் எடுத்துக் கொண்டால், சுகர் வருத்தம் எனப்படும் நீரிழிவு உருவாக சீனியில் இருக்கும் குளூக்கோஸ் முதன்மைக் காரணமாக இருக்கிறது. ஆனால், சீனியில் இருக்கும் பிரக்ரோசு கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவுக்கு துணைக் காரணமாகவும், உடல் பருமன் அதிகரிப்பிற்கு (obesity) முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது. எனவே, பிரக்ரோசு "தீங்கற்றது" என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆனால்: பழங்களில் இருக்கும் பிரக்ரோசை எடுத்துக் கொள்ளும் போது, அது நார்த்தன்மையோடு சேர்ந்து உள்ளெடுக்கப் படுவதால், குடலின் ஊடாக மெதுவாக நகர்ந்து செல்லும். உடலினுள் உறிஞ்சப் படும் வேகமும் குறைவாக இருக்கும். இதனால் பழங்களில் இருந்து கிடைக்கும் பிரக்ரோசு அளவாக எடுக்கப் படும் போது தீங்குகள் குறைவு. அளவாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  2. முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள் 👏💐 ஈழப்பிரியன், வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள்👏 போட்டியை நடத்திய கோஷானுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டானுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்❤️ தென்னாபிரிக்காவின் முதல் வெற்றியை மைதானத்தில் இருந்து பார்த்த கோஷானின் நேரடி ஒலிபரப்பிற்கும் நன்றிகள்! இதற்காகவே பிள்ளைகள் சொன்னபடி அவுஸ்திரேலியாவை தெரிவுசெய்தேன்! அவர்கள் சொன்னபடி எதிர்மறையாகவே நடந்தது! ஏனென்றால் என் ராசி அப்படி!!😜 வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வராததால் உடனே பதிய முடியவில்லை! தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி! ஒரு கறுப்பின தலைவரின்கீழ்தான் வெல்லவேண்டுமென்று இருந்திருக்கிறது போலும்!!
  3. முக்கிய அறிவிப்பு ! எலே மக்கா…. 50% refund… வந்துட்டு லே மக்கா🤣 அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்து.
  4. உள் நாட்டில் புகையிலை சாகுபடிக்கு போடப்பட்டுள்ள தடைக்கான முக்கிய காரணம் மக்களின் சுகாதார நலன் மீதுள்ள கரிசனை மட்டும் தான் என்று கொள்வது தவறு. பணப்பயிராக புகையிலை சாகுபடியில் விவசாய நிலங்களை பயன்படுத்தும்போது அத்தியாவசிய உணவுப்பயிர் உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலங்களுக்கு உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உணவுத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, அன்னிய செலாவணி வீணடிப்பு மற்றும் உணவுக்காக வெளி நாடுகளை தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
  5. மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள்/அரச தலைவர்கள் எல்லோரும் என்ன செய்கின்றார்கள்? அவர்களும் ஆயுதத்தை தானே கையில் எடுக்கின்றார்கள்? அவர்களும் பதவிக்கு வந்த பின் தாம் நினைத்ததை தானே செய்கின்றார்கள். இதில் சர்வாதிகார அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகின்றது? ஜனநாயக நாடுகளான பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி எதை செய்கின்றனவோ அதையே நீங்கள் குறிப்பிட்டவர்களும் செய்கின்றார்கள். ஈரான் பலஸ்தீனத்தை ஆதரித்துத்தான் இஸ்ரேலுடன் போர் தொடுக்கின்றது என்பதை உங்கள் ஆருயிர் பிரான்ஸ் அண்ணனுக்கு தெரிவித்து விடுங்கள்.
  6. தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் கள் உற்பத்திக்கு தடை இருக்கின்றதா தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சாராய கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளை ஏன் தடை செய்திருக்கின்றார்கள் என புரியவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் அயலக மாநிலமான கேரளத்தில் கள்ளு என்பது பாரம்பரியமான பானம். இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா? ஜேர்மனியில் மருத்துவ கடைகளில் மட்டும் எதுவுமே கலக்காத புகையிலையை வாங்க முடியும். விலை கொஞ்சம் அதிகம்.
  7. கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா? 15 Jun 2025, 9:17 PM – ரவிக்குமார் ( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ) கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது சாராயத்தையும், பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது என்று தடைபோடுகிறது?’ என்று கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா வளர்க்கும் போராட்டத்தை நடத்துவார்களா? கள்ளுக் கடை திறப்பதை ஆதரித்துப் பேசுகிறவர்கள் இது இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருள் என்று வாதிடுகிறார்கள். ‘‘கஞ்சாவும் கூட இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலிகைதான்‘‘ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கஞ்சா வளர்க்கும் போராட்டத்தையும் நடத்துவார்களா? கள் நல்லது என எந்த மருத்துவர் சொன்னார்? கள் குடித்தால் உடம்புக்கு நல்லது என எந்த மருத்துவரும் சொன்னது இல்லை. மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கள் என்பது சிலர் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காதது அல்ல. ஏனென்றால் அதில் ஐந்து சதவீதம் முதல் பத்து சதவீதம்வரை ஆல்கஹால் இருக்கிறது. நான்கு சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருக்கும் ஒரு பொருளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையைப் பெரிதும் பாதிக்கும். கள் அருந்துவதால் என்சைம்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் நினைவாற்றல் குறைகிறது . இந்த விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையாகும். கள் அருந்துவதால் ஏற்படும் கேடுகள் கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கேரளப் பல்கலைக் கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையைச் சேர்ந்த இந்திரா, விஜயம்மாள், ஜே.ஜே.லால் மற்றும் ஸ்ரீரஞ்சித்குமார் ஆகிய நான்கு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளர் பருவத்தில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அவை குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்குக் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான ‘ஒரிஜினல்‘ கள்ளைக் குடித்தாலே பிரச்சனை என்னும்போது ‘ கலப்பட கள்‘ குடித்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் அவ்வப்போது கலப்படம் கள் குடித்ததால் ஏற்படும் மரணங்களே சாட்சி. கள்ளில் கலப்படம் ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்குத் தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அவற்றைக் கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள். காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் இறக்கப் போதுமான மரங்கள் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் கள்ளுக் கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும். கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம். கள்ளில் உயிருக்கு ஆபத்தான கலப்பட பொருட்கள் ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் என்னும் மாத்திரையும்கூட கள்ளில் கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ‘ செயற்கைக் கள்‘ தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக் கடைகளிலும் உள்ள நடைமுறையாகும்.‘ இருநூறு லிட்டர் கள்ளில் எழுபது லிட்டர் ஸ்பிரிட்டைக் கலந்து அதில் க்ளோரல் ஹைட்ரேட், டயாஸ்பாம் மாத்திரை போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலக்கினால் பத்தாயிரம் லிட்டர் கலப்படக் கள் கிடைக்கும். க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இருதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட்‘ ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை. கள் குடிப்பதற்கு ஆதரவான பேச்சு யாவும் அடிப்படையில் மதுவுக்கு ஆதரவான பேச்சே தவிர வேறில்லை. கள்ளுக் கடைகளால் லாபம் ஈட்டி முதலாளிகள் ஆனவர்கள் வேண்டுமானால் சுயநலத்துக்காக அதை ஆதரிக்கலாம். கள்ளுக் கடைகளால் சுயமரியாதையையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் அதை ஆதரிக்க முடியாது. மது ஆதரவு பிரசாரத்துக்கு தடை மது அருந்துவதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மது அருந்துவதை ஆதரித்து விளம்பரம் செய்வது 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கள் இறக்கினால் 3 மாதங்கள் சிறை கள் இறக்குவதென்பது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றமாகும். Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி ஒருவர் கள் இறக்கினால் 3 மாதங்கள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம் . சனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற போராட்டங்களை எப்படி அனுமதிக்கிறது ? என்பது வியப்பளிக்கிறது. Ref: https://indiankanoon.org/doc/77545447/ கட்டுரையாளர் குறிப்பு: முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். https://minnambalam.com/oes-the-law-permit-protests-supporting-toddy/#google_vignette
  8. 👌 திமுக அதிமுக மற்றய அரசியல் கட்சிகள் மதுவிலக்கு என்று நடைமுறை சாத்தியமற்றதை சொல்லி மக்களை பேய்காட்டுகின்றார்கள். மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இந்த மோசமான மடமையை செய்வது இந்தியாவில் சீமான் மட்டுமே
  9. ரஸ்யா - உக்ரேன் இஸ்ரேல் - பலஸ்தீன் ஈரான் - இஸ்ரேல் (+மேற்கு)
  10. சிகரெட் மட்டும் என்ன காயகல்ப மருந்தா? அதுவும் ஒரு கான்சர் ஊக்கிதானே? ஒரு காலத்தில் 90கள் வரைக்கும் மேற்கில் சிகெரெட் பிடிக்காட்டி ஸ்டைல் இல்லை என்ற நிலை இருந்தது, சிறுவர் பார்க்கும் விளையாட்டுகள் எங்கினும் சிகெரெட் கம்பனிகளின் ஆதிக்கமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். இதே போன்ற விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது. பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும். கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை. எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது. ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது. ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார். மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
  11. உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.
  12. வணங்காமுடி சொன்னது விஞ்ஞான ரீதியில் சரியான தகவல் தான். பொய்யல்ல. புகையிலைப் பயிர் நிலத்தின் பல போசணைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் உறிஞ்சி நிலத்தைச் சக்கையாக்கி விடும் ஒரு பயிர். இதனைப் பணத்திற்காக விரைவில் வளர்க்க, மேலும் களை நீக்கிகளும், அசேதன உரங்களும் போடுவார்கள். இதனால், புகையிலைத் தோட்டத்திற்கு அயல் நிலங்கள் கூட மாசடையும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. கீழே இருக்கும் கட்டுரையில், புகையிலையைப் பணப்பயிராக வளர்க்கும் சிறிய நாடுகளில் உணவுப் பயிர்களுக்கான நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4669730/ ஆரோக்கியமான பயிர்களை விளைவித்து உள்ளூர் மக்களின் பசியை நீக்குவதை விட்டு விட்டு புகையிலையைப் பயிரிட்டு, பெரும் விலைக்கு விற்று, பல ஆயிரம் பேருக்கு புற்று நோயைக் கொடுத்து, பின்னர் வெளிநாட்டில் இருந்து அரிசியும், உணவுகளும் இறக்குவது எவ்வளவு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.
  13. நான் மூன்றாவதாநம்ப முடியவில்லை. போட்டியில் வென்ற கிருபன் அண்ணா, ஈழப்பிரியன் அங்கிளுக்கும் மற்றும் போட்டியைநடாத்திய கோசானுக்கும் வாழ்த்துக்கள். அவுஸ்ரேலியாவைத்தான் தெரிவு செய்தேன் ஆனாலும் தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது. விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன. அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும். சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை. அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது. மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார். அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார். விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. விமானி சல்லன்பெர்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார் அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது. சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார். 1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o
  15. இந்த சம்பவத்தை வைத்து Sully எனும் படம் 2016 இல் வெளியானது. மிகவும் சுவரசியமான படம். Netflix இல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.
  16. அவர் வலு கவனமாக மூன்றடுக்களுக்கு வரிச்சுகட்டிவிட்டு 😜ஏறியதால் உங்கள் கள் எடுத்தல் நடக்காது ராசா...
  17. மதுவோ கள்ளோ .... சாராயக் கடைகளை மூடுங்கள் என்றபடி கள்ளிறக்குவேன் என்பது சரியாகப் படவில்லை. ஆனால் இது கள்ளை தடை செய்வது போல் சாராயத்தையும் தடை செய் என்றால் ஏற்கலாம்.
  18. நியுசிலாந்து அரசிடமிருந்தே 2 மில்லியனை ஆட்டையபோட்டவர்கள்.
  19. மொசாட் ஈரானின் ராடார் செயற்பாட்டினை முற்றாக அழித்த பின்னர் இஸ்ரேல் தற்போது இஸ்ரேல் வான் மேலாதிக்கத்தினை கொண்டுள்ள நிலையில் சீனா ஈரானிற்கு ராடர் சாதனங்களை வழங்குவதாக தமிழ் பொக்கிசம் விக்கி ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இந்தியாவிற்கு கார்கில் போரில் ஆயுத அழித்ததாகவும் அந்த காணொளியில் குறிப்பிடுகிறார், இந்த போரில் இந்தியா இஸ்ரேலும் ஈரானும் சமாதானமாக பேச்சு மூலம் தீர்க்க வலியுறுத்துவதாக கூறுகிறார் ஆனால் இந்த போரில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுப்பதற்கே வாய்ப்புண்டு அண்மைய இந்திய பாகிஸ்தான் போரில் சீன ஆயுத உதவி இந்தியாவிற்கெதிராக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இந்தியா தோற்கடிக்கப்பட்ட நிலையில் இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலை எடுக்க அதிக வாய்ப்புண்டு. இந்த போர் ஏற்கன்வே பொருளாதார நெருக்கடியில் உள்ள உலக நாடுகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இந்த போர் ஒரு அவசியமான ஒன்றாக இருப்பதால் இந்த போர் மேலும் தீவிரமாகலாம்.
  20. தெம்பா பவுமாவும் ரிசர்வேசனும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது. அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா பெறும் போது உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம். காரணம் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் - கேப்டனாக இருந்து கோப்பையை வெல்வார் என்று சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால் இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது. எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட இனத்தில் இருந்து தலைவன் தோன்றி இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை. ஆம்... தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ரிசர்வேசன் எனும் கோட்டா முறை உண்டு. ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில் ஐந்து பேர் - வெள்ளையரும் மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது??? என்னங்க இது விளையாட்டுல எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... அப்போது நான் மூன்று பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன் முதல் பதம் சமூக நீதி (SOCIAL EQUITY) இரண்டாவது பதம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS) மூன்றாவது பதம் முறையான/சமமான/ சரியான பிரதிநிதித்துவம் ( EQUAL REPRESENTATION) தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். கல்வி பொருளாதாரம் கலை / இலக்கியம்/ விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். இதனால் அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை. இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் அணியில் இடம்பெற்றாலும் அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர் இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றை அறிந்தால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும். அதன் நியாயங்களும் விளங்கும். அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் "வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார். என்னைப் பொருத்தவரை மனிதன் ஒரு சமூக விலங்கு சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். இதில் சா*தி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும் தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். மேற்கூறிய விசயங்களால் வாய்ப்புகள் கிடைப்பதிலும் வாய்ப்புகளை ஒடுக்குவதிலும் பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்" இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். இது இயற்கை. உலகின் பெரும் புரட்சிகளும் போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்தவரை சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி.. மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால் அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. அதற்குக் காரணம் கருப்பு நிற வீரர்கள் அல்லர் அவர்களை வெளிக்கொணராத அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால் நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இதை உணர்ந்தால் நமக்கு நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி மெய்யான வெற்றியே தூய்மையான மகிழ்ச்சி அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும் பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும் கிடைத்த இந்த கோப்பை உண்மையில் மிகவும் வலிமையானது. இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்... தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன். டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம். ஏலேய் மக்கா எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம் "டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. " இங்க தெம்பா என்றால் வலிமை / strength மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது . ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார் அதையே நானும் வழிமொழிகிறேன்.. நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா E-mail
  21. விலாசத்தை சொல்லவும். 😎 உக்ரேன் திரியா? 🤣 சோனியா திரியா? 😂 ஈரான் அன்ட் இஸ்ரேல் திரியா? 😁 சீமான் பனைமரம் ஏறின திரி எண்டாலும் ஓகே..😜
  22. என்றாலும்..... காந்தி எனும் மந்திர பெயரை வைத்து அறுவடை செய்பவர்கள்... காந்திக்கும் அவர் பெயருக்கும் சம்பந்தமே இல்லாத சோனியா பிரியங்கா ராகுல் இவர்கள் மட்டுமே. துன்பியல்கள் ஏன் என அரசியல் அனுபவஸ்தர்களுக்கு இன்னும் நிறைய நிறைய விளங்கும்.
  23. அட நாசமறுப்பு இதுவே விசயம்.🤣 ஒரு சில பொது இணைய வெளிகளுக்கு போனால் வில்லங்கம் வில்லங்கமாக எழுதி தள்ளீனம்...ஏன்,என்னடா எண்டு யோசிச்சன்? 😂 எனக்குள் உறைந்த இரத்தம் உயிர்க்கின்றது. 😱
  24. அது கனடாவிலும் இலங்கையிலும் யேர்மனியில்மே 29 "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள் - Kavi arunasalam அவுஸ்ரேலியாவில் செப்ரெம்பர் முதல் கிழமை
  25. எந்த வண்டி ? தொப்பை அல்லது வயிறு (வயிற்றுப்பகுதி கொழுப்பு )😃😃😃
  26. காந்தி என்று மார்க் இன்றும் பல தலைமுறைகளுக்கு சோறு போட்டு வருகிறது
  27. பண்டிதர் பரந்தாமன் எனது அண்ணன் நித்தியகீர்த்தியின் நண்பர். அறுபதுகளில், என் அண்ணன் நடத்திய மக்கள் நாடகக் குழுவில் அவர் முக்கியமான வேடங்களில் நடித் திருந்தார். தமிழகத்தில் "பால பண்டிதர்" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டு, அவர் நாடு திரும்பிய பின்னர் எந்த வேலைகளும் கிடைக்காமல் இருந்தபோது பொழுதுபோக்குக்காக நாடக மேடையில் நுழைந்தார். பரந்தாமன் நாடகங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். அவருடைய பாடல்களில் ஒரு வரி எனது மனதில் இன்றும் பதிந்துள்ளது: “தொட்டால் சுடுவது நெருப்பல்லவா? தொடாமல் சுடுவது அழகல்லவா?” என்று அந்தப் பாடல் தொடங்கும். புலோலி தமிழறிஞர் கந்தமுருகேசனாரின் மாணவனான வீரகத்தி பரந்தாமன், எனது அண்ணனுடன் கந்தமுருகேசனார் பற்றி உரையாடும்போது, அடுத்த அறையில் இருந்து நான் கேட்ட சில சுவாரஸ்யமான விடயங்கள் எனக்குள் பதிந்து விட்டன. அதில் இரு முக்கியமான விடயங்கள்,“கந்தமுருகேசனார் ஒரு விஷயத்தை வேகமாகச் சொல்லும்போது, வேறு விதமான அர்த்தம் பிறக்குமென்று கூறுவார். ‘அக்காளைக்கு மேல் ஏறும் அந்நஞ்சு உண்ணியை எக்காளமும் காண்பது அரிது’ என்று ஒன்று. மற்றையது, புலவர் சண்முகநாதன் ஒரு விருந்துக்குப் போன போது உணவு பரிமாறுவதற்கு அவருக்கு முன்னால் வாழை இலை வைத்தார்கள். அந்த இலையைப் பார்த்த புலவர் சண்முகநாதன், “புண்ட இலை” என்று சொன்னார். அதன் பின்னர் அண்ட இலை போட அதுவும் புண்ட இலை என்றார்” இந்த இரண்டும் நான் நண்பர்களுடன் அன்று பகிர்ந்து கொண்டவை. 60களில் பண்டிதர் பரந்தாமன், சத்தியசாயிபாபாவுக்கு எதிராக"புட்டர் புரத்துப் புரட்டன்" என்று தொடராக பல கட்டுரைகளை எழுதிவந்தார். பின்னர் அவற்றைத் தனது பணத்திலேயே அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவர் தனது ஆசிரியர் வேலையில் இணைந்து திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது அண்ணனும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுப் போக அவருடனான எனது தொடர்புகள் நின்றுவிட்டன. நான் புலம் பெயர்ந்த பிறகு, பண்டிதர் பரந்தாமன் விடுதலைப் புலிகளுக்காக புரட்சிப் பாடல்களை எழுதியிருந்தார் என அறிந்தேன். அதில் குறிப்பிட்ட பாடலாக, “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வந்தார் புலி வீரர்” என்ற பாடலைச் சொல்வேன்.
  28. நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள். அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!
  29. இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠
  30. பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டுமே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொண்டு.
  31. இதோ உங்கள் வெற்றியாளர்கள். உலக டெஸ்ட் கிண்ணம் வென்ற தென்னாபிரிக்கா. அவர்களின் முதலாவது பெரிய கோப்பை. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது நடந்து விட்டது. வாழ்த்துகள் பசங்களா.
  32. கண்டு கொண்டேன். மகிழ்ச்சி.😷
  33. இலையான் கில்லர் எங்கோ ஊர் சுற்ற சென்றுவிட்டார் போல. @தமிழ் சிறி
  34. மேலே உள்ள படத்தில் இடது பக்கம் நீல ரவுசருடன் காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு முகம் வராமல் மறைத்து கொண்டு கடைசியாக இருப்பவர் தான் நீங்கள் தேடும் யாழ்கள உறவாக இருக்க வேண்டும்
  35. @தமிழ் சிறி யரை கொஞ்ச நாட்களாக காணவில்லை. ஜனாதிபதியை வருவது தெரிஞ்சதும் இவர் ஒளிந்துவிட்டாரோ. சிறியர் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என நான் எதிர்பார்க்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.