Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    12678
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7045
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/12/25 in all areas

  1. அடப்பாவிகளா அது நீங்கள்தானா . ...... நீங்கள் பிடித்துக் குடுத்த என்ர மாடுகளை விதானைக்கு காசும் குடுத்து போத்திலும் குடுத்து அவிழ்த்துக் கொண்டுவந்த அப்பாவி நான்தான் ..........! 😂
  2. "சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை: பெண்கள் "பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்" "குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்" அமெரிக்காவின் பல்லினத்தன்மை The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை" நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். பரப்பிய பொய்த்தகவல்கள் "அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன" தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார். 2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார். எப்படி உருவானார் கேர்க்? 2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார். இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம். இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை. இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க். தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்! அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!
  3. 1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் 5) ஆரம்ப சுற்று போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் நடைபெறாவிட்டால் அப்போட்டிகளுக்கான புள்ளிகள் எல்லோருக்கும் வழங்கப்படும் 6) அதிக ஒட்டங்கள், குறைந்த ஓட்டங்கள் பெறும் அணிகள், வீராங்கனை தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள், வீராங்கனைகள் சமமான ஓட்டங்கள் பெற்று இருந்தால் அவ்வணிகள், வீராங்கனைகளில் எதாவது சரியான பதிலை எழுதியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். ( ஓட்ட விகிதப்படி புள்ளிகள் வழங்கப் படவில்லை). இதே போல பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். உ+ம் பாகிஸ்தான் வீராங்கனை ஒரு போட்டியில் 28 ஓட்டங்கள் வழங்கி 5 விக்கேற்றுகளை பெற்றார். அவுஸ்திரேலியா வீராங்கனை 30 ஒட்டங்களை வழங்கி 5 விக்கேற்றுக்களை பெற்றார். ஏதாவது ஒரு போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிக விக்கேற்றுக்கள் 5 எனில் 45 வது கேள்விக்கு பாகிஸ்தான் அல்லது அவுஸ்திரேலியா அணியை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்
  4. ஜெய்சங்கர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய முதல் படம் இது. கதாநாயகனாக முதற்படமே அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்தப் படம், எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படத்துடன் வெளியாகி, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜெய்சங்கரின் குரல்தோணியை நன்கு உணர, ரி.எம்.எஸ் அவரை நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே இந்தப் பாடல் பாடலைப் பாடினார். சமீபத்தில் மறைந்த ஆலங்குடி சோமுவின் வரிகளில், நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடிய ஒரு பிரபல்யமான தத்துவப் பாடலும் இரவும் பகலும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடல், “இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி..” இறந்தவனே சுமந்தவனும் இறந்திட்டான் - அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்…”
  5. முன்பு சிலர் என்னை மகளிர் உலகக் கிண்ண போட்டியை நடாத்தும் படி கேட்டிருந்தார்கள். சிலர் பங்கு பற்றுவதாக சொன்னார்கள். சொன்னவர்கள் இப்பொழுதும் பங்கேற்க விருப்பம் என்றால் நான் நடாத்துகிறேன்
  6. ஆம் இன வாதம் நியாயமானதுதான். கறுப்பினத்தவர் மீதுள்ள வெள்ளையின இனவாதம் நியாயமானது. பலதீனர்மேல் இஸ்ரேலியர்களின் இனவாதம் இயல்பானது. உலக நாடுகளின் அமோக ஆதரவுள்ள சிங்களவரின் இனவாதம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலக அரசியல் வரலாறு தெரியாதவர்களால் இதனை உணர முடியாது. அரை நூறாண்டுகளாக மிகப் பெரும் விலை கொடுத்துப் போராடி எல்லாவற்றையும் இழந்து இன்று எங்கு வந்து நிற்கிறோம் பார்த்தீர்களா ?
  7. ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன். அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂 எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣
  8. சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் விஜயலட்சுமி வழக்கு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது. கைது செய்ய தடை இல்லை அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். தவறாக பேச கூடாது எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள். அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால் மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.
  9. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619
  10. லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராகக்ளில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Uduppiddy News
  11. பார்த்தேன் ஈழப்பிரியன். அழகிய காட்சி. 🙂
  12. A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .
  13. அதுவும் நான் மீண்டும் ஊருக்கு போகமுன்னர்.... யுவர் ஆனர்
  14. The HinduWomen’s World Cup 2025: Bengaluru venue dropped after sta...ICC announced revised Women’s World Cup 2025 schedule, with Navi Mumbai replacing Bengaluru’s Chinnaswamy after the stampede incident.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது. https://www.maalaimalar.com/news/sports/cricket/womens-world-cup-matches-moved-out-of-bengalurus-chinnaswamy-stadium-navi-mumbai-to-host-semi-final-final-785233
  15. @தமிழ் சிறி இந்தப்படம் உங்களுக்காகவே இணைக்கப்பட்டுள்ளது.
  16. தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும். மோடேன் தியோட்டஸ் எடுத்த படங்களில் அருமையாக நடித்திருப்பார். மோடேன் தியேட்டேஸ் படங்களில் எழுத்தோட்டமே ஒரு திறில். இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
  17. போட்டி விதி 1 இல் குறிப்பிட்டு இருக்கிறேன். பார்க்கவில்லையா? சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.
  18. உண்மையான (முதல்) மனைவியிடம் மன்னிப்புக் கேட்க என்ன வெட்கம்.? கமோன் கமோன் செண்ட் டமிழன் சீமான் அண்ணா! ஒரு மன்னிபோடு விஜி அண்ணியையும் வீட்ட கூட்டீட்டு வந்திடுங்க! பேபி அய் டோண்ட் நீட் டொலர் பில்ஸ் டு ஹவ் பfன் டுநைட்
  19. ராஜபக்சர்கள் மட்டுமல்ல, மைத்திரி, ரணில், சந்திரிக்கா எல்லாரும் அனுர அரசின் நடவடிக்கையால் கடும் சினத்துக்குள்ளாகியுள்ளனர். மகிந்தவை தங்காலையில் வைத்து பலிகொடுத்தாவது (பின் புலம்பெயர் தமிழர்களை காரணம் சொல்லி) தம் பக்கம் காற்று வீச வைக்க முயல்வார்கள்.
  20. சுற்றியிருக்கும் முஸ்லிம் நாடுகள் எல்லாரும் சேர்ந்து ஒரு முறை ஜோராக கைதட்டவும்!
  21. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·oensrdptSoicu6tc1919um111m5a3l03u3h0 c0704i000485ggghm4ct908 · ஒரு இந்தியன் விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான். அவன் அருகே சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் இந்தியனை எப்படியும் ஏமாற்றி பணம் பறித்து விடவேண்டும் என எண்ணினான். இந்தியனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.. சீனன்: ”அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது. நமக்குள் போட்டி வைத்து நேரத்தை கடத்துவோமா..?” இந்தியன்: “வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை.. எனக்கு தூக்கம் வருகிறது...” சீனன்: “அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய் நீங்கள் எனக்கு தரவேண்டும்.. போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்: “நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னேனே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்.. சீனன்: (விடுவதாக இல்லை) “சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று நான் தோற்றால் 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..? இந்தியன்: “சரி..சம்மதம்...” சீனன்: ” போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்.. நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..? இந்தியன்: ”தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..” சீனன்: “மகிழ்ச்சி நண்பரே..” இந்தியன்: “நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?” சீனன்: “கேளுங்கள்..” இந்தியன்: “ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும். அது என்ன விலங்கு..? சீனன்: ( அதிர்ச்சியானான், நீண்ட நேரம் யோசித்து விட்டு ) “தெரியவில்லை.. 500 ரூபாயை பிடியுங்கள்..” இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்.. சீனன்: “ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்: எனக்கும் தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்.. யாருகிட்ட இந்தியன்டா.......! Voir la traduction
  22. ஒரு நாளில் இங்கே ........விதிவிலக்காக இந்தக் கலர்ப்பாடலை இணைக்கிறேன் .......அருமையான பாடல் .......! 😘
  23. உங்க காலத்தில் கட்டுபடியாகி இருக்கிறது இப்ப அதிவிசேடம் குவாட்டர் 9௦௦ ஆயிரமாம் 6௦௦வெகுமதி கட்டுபடியாகதாம் என்று போனுக்குள்ளால் அழுகிறார்கள் . முக்கிய குறிப்பு அந்த குவாட்டரையும் தண்ணி கலக்காமல் வெறுமனே வயித்துக்குள் விடுவதை நேரில் பார்த்து சித்தம் கலங்கியது வேறு கதை . நாயின் காது பக்கமாய் அடையாளம் போட்டு விடுகிறார்கள் என்கிறார்கள் நான் சரியாக கவனிக்கவில்லை .
  24. எங்கடதுகள் கல்யாணம் நாலைஞ்சு தலைமுறையை தோண்டி எடுத்து அங்க ஆர் ஆரை இழுத்துட்டு ஓடினது சாதி மாறி கட்டினது அந்த குடும்பத்தில என்ன பிரச்சினை நடந்த என்று நோண்டுரத்தில கல்யாணம் கட்டி குடும்பம் நடத்துன மாதிரிதான் ஆனால் எங்க ஊரும் விதி விலக்கல்ல கல்யாணம் பேச்சு வரும் போது இது மாறுமா என்று தெரியாது ஆனால் மாறாது இருக்கும் வருடக்கணக்கில் 😒😒 பள்ளிக்க இருந்து தட்டச்சு செய்வதால் ஐ யம் எஸ் கேப் சிறி அண்ணை 😊😊😊 அநேகமாக மனிசி பார்க்காது யாழ் இணையம் என்றதால தப்பிச்சுருவன் தல ஆனால் இந்த முக நூல்ல யாரும் போட்டு ரக் பண்ணி விட்டாங்கள் நமக்கு திண்ணையும் பழங்கஞ்சியும் தான் தனிக்காட்டு ராஜா என்றா மனிசிக்கு தெரியும் முதலில் யாழ் கள நண்பர்களை முகநூலில் விலத்து தோழிகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும் 😎😎😎 ம்ம் இப்படித்தான் இருக்கணும் மைண் வாய்ஸ் சோத்துக்கு சிங்கியடிக்க வைக்கப்போறாங்கள் சைக் 😜😜😜 hahahahaha நேரம் கிடைக்கும் போது வந்து எட்டிப்பார்ப்பேன் அண்ணா😃😃😃
  25. வேறொரு கோணத்தில் அரசியல் செய்து பாராளுமன்றம் சென்றவர். ஜெனீவாவையும் பார்த்து வரட்டும். என்ன செய்கின்றார் என பொறுத்திருந்து பார்க்கலாம். எத்தனையோ மொள்ளமாரி முடிச்சவிக்கிகள் ஜெனிவா போய் கொக்கரித்து விட்டார்கள். இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
  26. அவர் தனது நகர்வுகளை நன்றாகவே செய்கின்றார் போல் உள்ளது.
  27. இருந்திருந்தால் ரம் இளைப்பாறிய பின் அவரது இடத்தைப் பிடித்திருப்பார். ரம் 8 அடி பாய்ந்தால் இவர் 16 அடி பாயந்திருப்பார். ஒரு காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடியவர்.
  28. இவர்தான் அண்மையில் நாமலை புகழ்ந்து, அடுத்த ஜனாதிபதி அவர் என்றும் முன்புபோல் தமிழருக்கு நடவாதென்றும், தனது அப்பாவை காணாமல் ஆக்கியதை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார். தேர்தல் காலத்திலேயே மாறி மாறி கதைத்தவர், இவரும் தேர்தலை முன்னிட்டே அப்பப்போ கதையை மாற்றுகிறார். தையிட்டி விகாரை உடைக்கப்படாதென்றும் அதற்காக வேறொரு காணி கொடுக்கப்படலாம் என்றும் கருத்துரைத்தவர், ஆனால் தன் காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், அது யாராகவும் இருக்கலாமென சொன்னவர், நாளைக்கு இன்றைய கருத்தையும் மாற்றிச்சொல்வார். ஒரு கொள்கை இல்லாதவர்கள். இவர்கள் பின்னால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அலைகிறார்கள்.
  29. சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்.... இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்... ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.
  30. ஒழிக்கப்படமுடியாது. ஒழிக்கப்படவிடார்கள். புலம்பெயர் தேசங்களில் வேண்டுமென்றால் 3 , 4 சந்ததிகள் கடந்த பிறகு சாத்தியப்படலாம். ஆனால் தாயகத்தில் அது சாத்தியமில்லை.
  31. ஸ்க்றீன் ஷொட் எடுத்து வைக்கப் போகிறோம் என்பதை @தனிக்காட்டு ராஜா கேள்விப்பட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார். 😂
  32. என்ர பெடியன் சைனிஸ் காரியை கட்டியிருக்கிறான், என்ர பிள்ளை டொமினிகன்காரனை கட்டியிருக்கிறாள் என்று சொன்னால் அதுக்குமேல் கேள்வியில்லை. ஆனால் சிறிலங்காவில கட்டியிருக்கிறார் என்றால்தான் அடிமடியில கைவைக்கும் ஆயிரம் கேள்வி. எந்த இடம், என்னசாதி, ஏன் அந்தச்சாதி, ஏன் இந்தச்சாதி ?வடக்கா ? கிழக்கா? வேற இடம் கிடைக்கலியா ? ஐயையோ . “தமிழர் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு “
  33. என்னதான் நடக்குது இங்கை. போன மதம் தானே US இக்கு ஒரு Air Force 1 குடுத்து நல்லுறவு வளர்த்தங்கள். இப்ப அவனே கை விட்டுடான? அவனை தான் நம்பி உக்கிரேன் பக்கத்துவீட்டோடை மல்லு கட்டினான்.
  34. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  35. ஏனில்லை. சலுகையை யார்தான் இலகுவாக விட்டுக்கொடுப்பார்கள். எனக்கொரு சந்தேகம் 12 சமயல்காரரை வைத்து அப்பிடி என்னதான் சமைப்பார்கள். இப்பதான் எல்லாருடைய வருத்தங்களும் வெளியாலை தெரியுது
  36. Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 12:46 PM கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார். முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/224617

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.