Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88739
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19590
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3032
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33745
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/28/26 in Posts

  1. அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂
  2. மிகவும் சாதரணமான ஒரு இலச்சினையாக இருந்தால் நன்று.எதையும் அடையாளப்படுத்துவதாக இல்லாதிருந்தால் மிகவும் நல்லது..காரணம்..வேறு குறியீடுகளை சேர்க்கும் போது மக்கள் எல்லா விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பார்கள், கேட்பார்கள்.எல்லாவற்றையும் செய்யும் சூழ் நிலை இப்போ இல்லை என்று நினைக்கிறேன்.இலச்சினை கூட இன்னும் கொஞ்சக் காலம் போன பின் செய்தால் நன்று என்றே எனக்கு தோணுது..ஆரம்பமே பனர் அது, இது என்று தொடங்கினால் உண்மையான தேகைளுக்கு பணம் போதிமானதாக இருக்காது..எல்லாவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.விளம்பரப்படுதல்கள் கூடுதல் பழுக்களை ஏற்படுத்திக் கொள்ளப் போறீர்கள் போல் தெரிகிறது..எனக்கு மனதில் தோன்றியதை சொல்கிறேன்.இதற்கு மேல் உங்கள் விருப்பம்.நன்றி.
  3. உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
  4. நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது. பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம். கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.
  5. மதுபானத்தை போலிசாருக்கு இலவசமாக அல்லாமல் காசுக்கு கொடுக்கக்கூடாது தானே.
  6. சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.
  7. "புலிகள் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி நாடாக தமிழீழம் கேட்டார்கள் அதை அவர்கள் தமிழ் தேசியம் என்றால் அது மிகச் சரியானது" - இங்கே ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் கருத்து இது. அதற்கான எனது எதிர்வினை தவறான அல்லது பகுதியளவில் மட்டுமே பார்க்கப்படுகின்ற ஆனால் இன்று பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தின் ஒருபகுதி மட்டுமே இது. ஐந்து குருடர்கள் யானையினை எப்படி விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். யானையின் தும்பிக்கையினை மட்டுமே பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் தும்பிக்கை மட்டுமே. அவ்வாறு யானையின் வாலைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் அதன் வால் மட்டுமே, அவ்வாறே யானையின் காதினைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் காது மட்டுமே. யானையின் கால்களில் ஒன்றைப் பிடித்துப் பார்த்த குருடனுக்கு யானை என்றால் மொத்தமான கால் மட்டுமே. யானையின் வயிற்றைப் பிடித்துப் பார்த்தவனுக்கு யானை என்றால் வெறும் வயிறு மட்டும்தான். அவ்வாறே இதுவும், தமிழ்த்தேசியம் என்றால்ப் புலி, புலி என்றால் தமிழ்த்தேசியம் - ஏன், புலிகளின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ்த்தேசியம் என்று ஒன்று இருக்கவில்லையோ??? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. இது புரியாமையினால் கூறப்படுகின்றதா அல்லது வேண்டுமென்றே சொருகப்படுகின்றதா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது. ஈழத்தமிழர்களின் தேசியம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள உண்மையாகவே விழைகின்றவர்களுக்கு சிறு உதவி, இலங்கை தமிழ்த் தேசியவாதத்தின் ஐந்து முக்கிய கூறுகள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கென தனித்துவமான மொழி (தமிழ்), பண்பாடு, மத மரபுகள் மற்றும் சமூக வழக்கங்கள் கொண்ட ஒரு சமூகமாக இருப்பதாக வலியுறுத்துவது. வரலாற்றுப் பாரம்பரிய தாயகம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன என்ற கோட்பாடு. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் கொள்கைகளுக்கு எதிரான எதிர்வினை சிங்களம் மட்டுமே அரச மொழியாக்கம், கல்வி மற்றும் அரசுப் பணிகளில் பாகுபாடு போன்ற சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுக் கொள்கைகளால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்ற உணர்விலிருந்து உருவான இயக்கம். அரசியல் தன்னாட்சி / சுயநிர்ணய உரிமை தமிழர்கள் தங்களுடைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் தாங்களே தீர்மானிக்கும் உரிமை பெற வேண்டும் என்ற கோரிக்கை (மத்தியிலான கூட்டாட்சியிலிருந்து தனி அரசியல் அதிகாரம் வரை). பல்வேறு வெளிப்பாடுகள் மற்றும் பாதைகள் தமிழ்த் தேசியவாதம் ஒரே வடிவில் இல்லாமல், அமைதியான அரசியல் இயக்கங்களிலிருந்து ஆயுதப் போராட்டங்கள் வரை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை. இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தமிழ்த்தேசியம். வெறுமனே புலிகள் கோரிய தமிழரின் தாயகம் மட்டும் அல்ல. உங்களின் தவறான திரிபுகளைத் திருத்துங்கள்.
  8. துரத்தப் பட்ட இராணுவம் எதிர்காலத்தில் திரும்பவும் வந்து குந்தி விடக் கூடாதென்ற பாதுகாப்புக் காரணம் தான் கோட்டை மிகக் கஷ்டப் பட்டு பகுதி பகுதியாக உடைக்கப் படக் காரணம். கோட்டைக்கு அண்மையில் இருந்த பாரிய யாழ் பிரதான தபாலகக் கட்டிடம், தளபாடங்கள் எல்லாம் புலிகளால் அகற்றப் பட்ட பின்னர் எரியூட்டப் பட்டும், உடைக்கப் பட்டும் யாரும் பயன்படுத்த இயலாத நிலையில் கைவிடப் பட்டதும் இதே பாதுகாப்புக் காரணமாகத் தான். அடிமைச் சின்னம் தான் கோட்டை என்றால், அதைப் பார்வையாளர்களுக்கு சுட்டிக் காட்டும் படியான தகவல் பலகைகள் வைத்து எங்கள் வரலாற்றை பிறர் அறியச் செய்த படியே சுற்றுலாப் பயணிகளிடம் பணமும் வசூலிக்கலாம். அல்லது, எங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு உதவக் கூடிய சுற்றுலாத் துறை வருமானத்தை விட "உணர்ச்சி பூர்வமான சாகசங்கள்" தான் முக்கியம் என்றால் பகுதி பகுதியாக உடைத்து அகற்றி விட்டு, அதை சிங்களவர் வந்து விகாரை கட்ட அனுமதிக்கலாம்😇!
  9. குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி பட மூலாதாரம்,AARADYAA STUDIOS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'பிரேமம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் 'எக்கோ'. "சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்", "சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்", "நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்", என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின. மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படக்குறிப்பு,இயக்குநர் தின்ஜித் அய்யதன் 'எக்கோ' கதை உருவானது எப்படி? இத்திரைப்படத்திற்கு 'எக்கோ' (Eko) என பெயரிட்டது ஏன்? இதை நிறைய பேர், ஈக்கோ என சொல்கிறார்கள். இது எக்கோ (Echo) தான். அதாவது எதிரொலி அல்லது 'கர்மா', 'பூமராங்', என்பதைக் குறிப்பது போல. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது, அது நம்மை என்றாவது ஒருநாள் பின்தொடர்ந்து வரும் அல்லது அது வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்ற அர்த்தத்தில் தான் 'எக்கோ' என வைத்தோம். இதில் குரியாச்சன் கதாபாத்திரம் (நடிகர் சௌரப் சச்தேவா) தான் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளால் தான் தலைமறைவு வாழ்க்கைக்குள் செல்வார். அவரை பிற கதாபாத்திரங்கள் தேடி வருவதும் அதற்காக தான். மற்றபடி, 'Echo' என வைக்காமல் 'Eko' என தலைப்பு வைத்தது, வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக தான். இந்தக் கதை உருவானது எப்படி? பஹுல் ரமேஷ் (எக்கோ திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர்) வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒரு மலேசியப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கேரளாவிற்கு அழைத்து வந்து, வாழ்ந்து கொண்டிருந்தவர். அதிலிருந்து தான், ரமேஷுக்கு 'எக்கோ' கதை தோன்றியது. இந்தக் கதையை ரமேஷ் சொன்னபிறகு, நாய்கள் வளர்ப்பவர்கள் குறித்தும், புதிய நாய் இனங்களை தேடிச் செல்பவர்கள் குறித்தும் படித்தோம். பல நாய் இனங்கள் குறித்தும் அவற்றின் நடத்தைகள் குறித்தும் படித்தோம். அது கதை மேலும் விரிவதற்கு உதவியது. கோம்பை நாய்கள் பட மூலாதாரம்,AARADYAA STUDIOS திரைப்படத்தில் 'மலேசியாவைச் சேர்ந்த நாய்கள்' என ஒரு இனத்தைக் காட்டியிருப்பீர்கள், அவை உண்மையில் எந்த இனம்? அவை தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த கோம்பை நாய்கள். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களே நாய்கள் தான். மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று கதையில் சொல்லப்படுவதால், எந்த இனத்தை காட்டுவது என்ற குழப்பம் இருந்தது. நாய்களை திரையில் பார்க்கும்போது நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும், அதேசமயம் அவை வழக்கமான வெளிநாட்டு நாய்களைப் போலவும் இருக்கக்கூடாது. மற்றொரு பிரச்னை கன்டினியூட்டி (Continuity). எனவே நாய்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கமாகவும் தோன்ற வேண்டும். எனது நண்பரும் துணை இயக்குநருமான துரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் கோம்பை நாய்கள் பற்றிச் சொன்னார். தேனிக்குச் சென்று, கோம்பை நாய் வளர்ப்பவர்களை சந்தித்து பேசி, புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அப்போதே முடிவு செய்துவிட்டோம், கோம்பை நாய்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று. ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. ஒரு நாய்க்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கேட்டார்கள். எங்கள் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 8 கோடி தான். எனவே நாய்களுக்கு மட்டும் எங்களால் பல லட்சங்களை செலவழிக்க முடியாது. ஒருவழியாக 2 மாதங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாய்க்கு வாடகை 5000 ரூபாய் எனப் பேசி, 10 நாய்களை கொண்டு வந்தோம். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படப்பிடிப்பில் எவ்வாறு அவற்றை சமாளித்தீர்கள்? அதற்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து சொல்ல முடியுமா? நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர் ஒருவர் எங்களிடம் சொன்னது, 'நாட்டு நாய்கள் எனும்போது ஒன்றரை வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு சொல் பேச்சு கேட்டு நடக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடியும்.' எனவே 1 முதல் ஒன்றரை வயதிற்குள் இருக்கும் கோம்பை நாய்களையே தேர்ந்தெடுத்து 1 மாதம் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டது. திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய், மலாத்தி சேட்டத்தி கதாபாத்திரத்தை எட்டி உதைப்பது போல இருக்கும். அதற்கு நாங்கள் இரண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்திருந்தோம். ஒருவேளை ஒரு நாய், அதைச் சரியாக செய்யவில்லை என்றால் மற்றொரு நாய் செய்யவேண்டும் என்பதற்காக. இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சில சமயங்களில் அவை தங்களுக்குளே சண்டையிட்டுக் கொள்ளும். அவை சமாதானமடையும் வரை காத்திருந்து, பின்னர் காட்சிகளை எடுப்போம். இதெல்லாம் சவாலாகவே இருந்தது. இருப்பினும், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். பட மூலாதாரம்,Dinjith Ayyathan/Facebook 45 நாட்களில் முழு திரைப்படத்தையும் முடித்துவிட்டீர்களா? ஆமாம், அதற்கு காரணம் பட்ஜெட் தான். படத்தின் நாயகன் சந்தீப், மலையாள சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. 3 முதல் 5 கோடி பட்ஜெட் திரைப்படம் என்பது அவருக்கான அதிகபட்ச மார்கெட் (Market). ஆனால், இது 8 கோடி பட்ஜெட் திரைப்படம். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, செலவுகளில் மிகவும் கவனமாக இருந்தோம். அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்தோம். உங்களது முந்தைய திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம், இப்போது எக்கோ, இரண்டிலும் கதை நடக்கும் பகுதிகள் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், கதை சொல்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்பட்டிற்கும் அல்லவா? உதாரணத்திற்கு எக்கோ-வின் இறுதிக் காட்சியில் சேட்டத்தியும் பீயூஸும் அமர்ந்து பேசும் ஒரு பாறை. ஆம், குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகள் ஒரு கதைக்கு பெரும் பலமாக இருக்கும். உதாரணத்திற்கு, எக்கோ திரைப்படத்திற்காக நான் தேடியது காய்ந்த புல்வெளிகள் கொண்ட ஒரு மலை. அதன் உச்சியில் குரியாச்சன்- சேட்டத்தி வீடு இருக்கும் என்பது போல. அதற்காக இடுக்கியில் ஒரு பகுதியை முடிவு செய்து, படப்பிடிப்புக்கு அங்கு சென்றபோது, மழை காரணமாக அந்த காய்ந்த புற்கள் பசுமையாக மாறியிருந்தன. வேறு வழியில்லை என படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் திரைப்படத்தில் பார்க்கும்போது அந்தப் பசுமை கதைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதுபோல சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்கிறோம், சிலவற்றை இயற்கை முடிவு செய்கிறது. குரியாச்சனுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,AARADYAA STUDIOS எக்கோ திரைப்படத்தில் பல விஷயங்களை நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. உதாரணத்திற்கு நரேன் கதாபாத்திரம் ஏன் குரியாச்சனை தேடுகிறது? அதேபோல பல விஷயங்கள் வசனங்களாக அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும், அல்லவா? ஆம், அதற்கு காரணம் இது குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி பற்றிய கதை மட்டுமே. அதனால் தான் அவர்கள் தொடர்பான 'பிளாஷ்பேக்' மட்டும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும். நரேன், வினீத், அல்லது சந்தீப் கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னால் அது அவர்களுடைய கதையாகிவிடும். அவர்கள் குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி கதையின் ஒரு அங்கம் மட்டுமே. எல்லா கதாபத்திரங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கும், ஆனால் அதை சொல்லி திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்க வேண்டாம் என நினைத்தேன். அதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி-களின் வரவு காரணமாக மக்கள் உலகத் திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் குறித்த ரசனையும், எதிர்பார்ப்பும் மாறிவிட்டது. எனவே எதையும் நேரடியாக சொல்லவேண்டாம் என நினைத்தோம். 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என திரைப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளை பார்த்தீர்களா? ஆமாம், பார்த்தேன். ஏஐ (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை மிகவும் ரசித்தேன். திரைப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம் என எனக்கு முன்பே தோன்றியது. அதாவது, மலாத்தி சேட்டத்தி அந்தப் பாறையில் அமர்ந்து பைனாகுலர் மூலம், தொலைவில் உள்ள ஒரு பாறை இடுக்கைப் பார்க்கிறார். அந்த பாறை இடுக்கின் வாசலில் சில நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அது குரியாச்சன் அங்கு தான் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்திவிடும், எனவே இதை காட்சியாக வைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், என் குழு வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை, அந்தக் காட்சியை வைத்திருந்தால், மக்கள் இன்னும் திருப்தியாக உணர்ந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என்பதை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருந்தால், இந்தத் திரைப்படம் இன்னும் அதிகமாக மக்களால் கொண்டாடப்பட்டிருக்குமோ என்றும் தோன்றியது. மலையாள சினிமா அதன் யதார்த்தமான திரைப்படங்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அத்தகைய திரைப்படங்கள் இங்கு அதிகம் உருவாக முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தான். ஒரு கதையைச் சொல்லும்போது, அதில் பாடல்களை சேருங்கள், இந்தக் காட்சிகளைச் சேருங்கள், இவரை வைத்து எடுக்கவேண்டாம் என்றெல்லாம் இங்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் விதிப்பதில்லை. மக்களும் வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேசமயம், எல்லா திரைப்படங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை தான். இருப்பினும், பிற மொழி திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடும்போது, 'வணிக அம்சங்கள்' தொடர்பான அழுத்தம் இங்கு குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS தமிழ் சினிமாவிலிருந்து வந்த பாராட்டுகள் தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் வந்தனவா? ஆம், நடிகர் ரவி மோகன் அழைத்துப் பேசினார். தனுஷ் 'எக்கோ' திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். சில இயக்குநர்களும் பேசினார்கள். கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் எக்கோ திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. அது நிறைவேறும் என நம்புகிறேன். என் முதல் திரைப்படம் தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. நான் 20 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். படித்தது எல்லாம் இங்கே தான். 'கிஷ்கிந்தா காண்டம்- குரங்குகள்', 'எக்கோ- நாய்கள்', உங்கள் அடுத்த திரைப்படம்? விலங்குகளை வைத்து தான் எடுப்பேன் என்று இல்லை. கதைகள் அவ்வாறு அமைந்தன. அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ep7g7244o
  10. செஞ்சிலுவை கவி ஐயாவின் இலச்சினையில் வலது கை கீழே நீளும் இடத்தை ஒரு சிலுவையாக மாற்ற முடியும் என எண்ணுகிறேன். ஆனால் இது செஞ்சிலுவையாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த நிறத்தில் சிலுவை அமைந்தாலும் அது ஒரு மதத்தை குறிப்பதாக பார்க்கப்படும். செஞ்சிலுவை என்பது பொதுவான குறியீடு. அதை செ.சி.ச உரிமை கோரமுடியாது. கோராது. கோரினால் அதை எமக்கான மார்கெட்டிங்க்கு பாவிக்கலாம்😂. யாழ் நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் நிலைப்பாட்டை முற்றிலும் ஏற்கிறேன். ஆனால் இதை யாழ் நிர்வாகம் அல்லது யாழ்.கொம் நடத்தவில்லை எனபதை நாம் தெளிவுபடுத்தி “யாழ்.கொம் வாசகர்கள் முன்னெடுக்கும் அடிப்படை சுகாதார வசதி திட்டம்” என எம்மை அழைத்து கொள்வதிலும், இந்த திரியை பரப்புவதிலும் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா? வேணும் எண்டால் இந்த திரியிலும், பேனரிலும் “இது ஒரு வாசகர்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி மட்டுமே, இதில் யாழ்.கொம் எந்த பொறுப்புகூறலுக்கும் உரியவர்கள் அல்ல” என்ற disclaimer, பொறுப்புதுறப்பையும் போடலாம். வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்🙏
  11. இன்னமும் கொஞ்சம் யோசித்ததில். பேனர் ஏராளன் சொல்வது போல் பேனர் வைத்து - காணொளி, படம் எடுத்து பரப்புவது - நமபகதன்மை, மேலும் நிதி உதவி வருவதை உறுதி செய்யும். பேனருக்கான செலவுடன் ஒப்பிடும் போது அதனால் வரும் நன்மை பல மடங்காக இருக்க கூடும். ஆகவே இதை செய்யலாம் என எண்ணுகிறேன். இலச்சினை கவி ஐயாவின் இலச்சினை எனக்கு நன்றாக பிடித்துள்ளது. பேனர் வைத்தால் பேர் இலச்சினையும் தேவை என எண்ணுகிறேன். ஏராளன் பேனர் செலவு தோராயமாக எவ்வளவு?
  12. ஆழ்ந்த இரங்கல்கள் ........! ஆறுதல் கூறிட வார்த்தைகள் இல்லை ......ஆயினும் காலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தேற்றட்டும் .......!
  13. நானா, கேட்ட கேள்விக்கு இது பதிலில்லையே! கேள்வி திரிக்கு சம்பந்தமில்லாததை ஏன் எழுதுகிறீர்கள் என்பது!! தாங்கள் என்ன அரசியலில் PHD பட்டம் எடுத்தவரோ? எடுப்பதெல்லாம் புலியெதிர்ப்பு வாந்தி இதில தம்பட்டம் வேற!!🤣
  14. எனது எண்ணமும் இதுவே. இப்போது எமது கட்டமைப்பை மிக எளியதாக வைத்து கொண்டு - கவனம்/ நிதி முழுவதையும் மலசல கூடம் கட்டுவதில் செலவிடலாம் என்பதே என் கருத்தும். எதிர்காலத்தில் கூட - ஒரு அமைப்பாக பதிய வேண்டுமா என்பது என்மனதில் கேள்விக்குறியே. ஏலவே புலர் அமைப்பு உள்ளது. இதை ஒரு பதியபட்ட அமைப்பூடாக நடத்த வேண்டும் எனில் - முன்னோடி - புலரை நாட்டில் நடைமுறைபடுத்தும் முகவராக (implementing agent) நியமித்து கொள்ளலாம் (இதை குசா அண்ணா ஏலவே பிரேரித்துள்ளார்). முனோடியின் வேலை நிதி சேகரிப்பு நிதி வினைதிறனாக திட்ட அமலாக்கத்துக்கு பயன்படுவதை உறுதி செய்வது 2வதை நாம் இப்போ ஏராளன் என்ற தனிமனிதர் மூலம் செய்கிறோம். எதிர்காலாத்தில் தேவைப்படின் இதை புலர் என்ற அமைப்பினூடும் செய்யலாம். இணையவன் சொன்னதை புரிந்து கொள்கிறேன்.
  15. யாழ் மக்களிடம் அதனை வரலாற்றின் அடையாளமாக பார்க்கும் நிலை இருந்த்தநிலையில் பாதுகாப்பு காரணங்களிற்காக உடைக்கப்பட்ட போது அதற்கு கூறப்பட்ட காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
  16. மல்லாகம் கோர்ட் என்றால் விரைவில் பிணையில் வரலாம் ..மீண்டும் அமோகமாய் தொழில் செய்யலாம் ...பயமே இராது
  17. சிறியருக்கு தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பை பெறுவதற்கு ஆதரவு தருவதாக ஆசை காட்டினார்.தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏற்கத்தயார் என்று சிறியர் அறிக்கையும் விட்டார். அந்தத்தேர்தலில் சுமத்தரனோடு சேர்ந்து கட்சித்தலைவர் மாவைக்கு எதிராக வேலை செய்து மாவை தோற்கடிக்கப்பட்டார்.. தேர்தலில் வென்றதும் கட்சித்தலைவர் மாவைக்குத் தெரியாமல் சிறிதரனும் சுமத்திரனும் கலையரசனை தேசிய பட்டியல் எம்பியாகத் தெரிவு செய்தனர். கட்சித் தலைமைக்குத் தெரியாமல் அறிவிக்காமல் செயற்பட்ட சுமத்தரன் இன்று கட்சி யாப்பு பற்றியும் ஒழுங்கு நடவடிக்கை பற்றியும் பெரிதாக அலட்டுகிறார். உண்மையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்நபர் சுமத்தனும் சம்பந்தருமே. கட்சியில் அவர்களின் அதிகாரத்துக்குப் பயந்து எல்லோரும் வாயை கூடிக்கொண்டு இருந்ததன் விளைவு இன்று சிறியருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. வேடிக்கை என்ன வென்றால் கலையரசனும் சிறயருக்கு எதிராக திரம்பியிரக்கிறார். சிறியரின் நழுவல்தனமான மதில்மேல் பூனை போன்ற அரசியளுக்கு இந்த நிலமை தேவை. வினை விதைத்தவர் வினை அறுக்கிறார்.
  18. இணையவன் கூறுவதும் ஏற்கத்தக்கதே உதவி செய்யும் நோக்குடன் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளினால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வரக்கூடாது .அது எங்கள் நோக்கமும் அல்ல . ஏராளன்.... நாங்கள் இந்த முன்னோடி என்ற அமைப்பை எங்கள் முயற்சி முடிவடையும் வரை பதியப்படாத ஒரு அமைப்பாக வே இயக்கப்போகின்றோம் . இல்லையா . ஆகவே இப்போதைக்கு இந்த பேனர் செய்யும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் . எங்கள் இலக்கு எட்டப்பட்ட பின்னர் தொடர்ந்தும் ஆர்வம் உள்ளவர்கள் ஆதரவு தருபவர்கள் என எல்லோரும் இணைந்து இந்த முன்னோடியை இலங்கையிலோ அல்லது இன்னுமொரு புலம்பெயர்ந்த நாட்டிலோ பதிவு செய்வதைப்பற்றி ஆராய்வோம். எல்லோரும் ஆதரவு தரும் சமயத்தில் ஒரு முடிவெடுத்து பதிவு செய்வோம் . அதன் பின்னர் யாருக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு இலச்சினையை தேர்ந்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் இப்போதைய அதி முக்கியமான இலக்காக 10 இடங்களில் அடிப்படை வசதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான சுகாதார வசதிகளை புதிய கழிவறைகள் அமைப்பதன் மூலம் தீர்த்து வைப்போம் . அதற்கான நிதியை நாங்களே சொந்தமாகவோ அல்லது எங்களது முயற்சியினால் மற்றவர்களூடாகவோ சேர்த்துக் கொள்ளலாம் மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது. மக்களுக்கான சேவையில் ஈடுபடுகின்றோம் என்பதை விட மக்களுக்கு இத்தனை உதவிகளை நடைமுறையில் செய்து காட்டியுள்ளோம் என்று கூறும் போதே எங்களுக்கான ஆதரவும் எங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து கோஷான் உங்கள் தேடலுக்கும் முயற்சிக்கும் நன்றிகள்🙏 இப்படியே படிப்படியாக முன்னேறலாம் இந்த வருடத்திற்குள் எங்கள் இலக்கை அடைந்து விடலாம் 👍
  19. பிச்சை எடுத்து பழகியவன்... ஒரு நாளும் சமைத்து சாப்பிட மாட்டான். 😂
  20. மூஞ்சுத்துக்கு போக வழியில்லையாம் அடுப்புக்குள்ள விழுந்த கதையா போயிட்டுது . அங்கை இருக்கிற சனத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க இந்த கோடாலி காம்பால் முடியலை ஆய்வு செய்கிரராம் விட்டால் செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்வார் .
  21. சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து துரத்தப்படவேண்டியவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதற்குள் வலிந்து மதத்தை இழுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழரசுக்கட்சியை இழுத்து மூடவேண்டுமென அடம்பிடிக்கிறார் அவர். இவரோ பகிடி விடுகிறார்.
  22. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  23. சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
  24. தலைவருடைய மறைவின் பின் த.வி.பு என்ற அமைப்பு இல்லாதுவிடினும் கூட்டமைப்பு எனும் அரசியல் ஒற்றுமைக் கூட்டை கலைத்ததின் பெரும்பழி தமிழரசுக் கட்சியைச் சாரும். ஆனால் தமிழ்த்தேசிய உணர்வென்பது தமிழ் மக்களிடம் ஊறிப்போனது, அவ்வளவு இலகுவில் மறையாது. உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக்காட்டு.
  25. தமிழ்த்தேசியம் என்றாலே புலிகளின் மீளுருவாக்கம், புலிகளுக்கான ஆதரவு என்று தட்டிக் கழித்துவிடுகின்ற மனநிலை ஒன்றினை மிகவும் திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள். தமிழர்களிடையே தேசியம் பேசுவோர் சமூக விரோதிகளாக, பழ‌மைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது புலிகளைத் தாண்டியதென்பதும், அது தமிழரின் அடையாளம், தாயகம், கலாசாரம் உட்பட்ட ஒட்டுமொத்த இருப்பிற்கான தேவையென்பதை தெரிந்தும் இச்சூட்சுமத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை முன்னின்று செய்வதுகூட தமிழர்களில் ஒரு பகுதியினர்தான். இத்தளத்திலேயே தமிழ்த் தேசியத்திற்குப் புலி முலாம் பூசுவதன் மூலம் அதனை நீர்த்துப்போகச் செய்ய எத்தனிப்போர் இருக்கின்றனர். சிலர் மிகவும் வெளிப்படையாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் இதனைச் செய்கின்றனர். புலிகளை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக இவர்களது கருத்துக்கள் வெளியில் தோற்றம்பெரினும், அவர்கள் உண்மையாகவே எதிர்ப்பது தமிழ்த் தேசியம் எனும் அடையாளத்தைத்தான் என்பது வெளிப்படை.
  26. தலைமையகம் இப்பவும் ஸ்ரீதர் தியேட்டரில் தானா? 😂 கட்சிக்கு என தனி அலுவலகம் வாங்கிற பிளான் இன்னும் இல்லை போல....😎
  27. மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.
  28. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  29. குருநகர் ஜெற்றி தாக்குதல் பற்றிய ஆவணங்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.. இந்திய இராணுவம் முரசொலி, ஈழநாடு பத்திரிகைகளை குண்டுவைத்து தகர்த்து ஒபரேசன் பவான் யுத்தத்தை புலிகள் மீது ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஊரடங்கு வேறு அமுலில் இருந்தது. அப்போது வடமராட்சியில் வீட்டில் இருந்த எங்களுக்கு தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களின் சத்தம்தான் போரை அறிவித்துக்கொண்டிருந்தது. வெரித்தாஸ், பிபிசி வானொலிகளில் வரும் செய்திகள்தான் 15 மைல் தூரத்தில் என்ன நடக்கின்றது என்பதை சொல்லியது. ஆனால் பல செய்திகள் வந்தே சேரவில்லை. ஒபரேசன் பவான் பற்றிய குறிப்பு திசை வாரசஞ்சிகையில் உள்ளது. ஆனால் மேலோட்டமாகவே இருக்கின்றது. https://noolaham.net/project/247/24657/24657.pdf
  30. எனக்கு இப்படியான பொறுக்கி நண்பர்கள் இல்லை என்பதால் வீடியோ ஒன்றும் வரவில்லை! மேலும் பிரித்தானியா age verification ஐ கட்டாயம் என ஆக்கியுள்ளதால் சில பிரபலமான/பிரபலமற்ற பலான தளங்கள் எல்லாம் பார்க்கமுடியாது!🙁 👆🏿

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.