Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇 யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉 @மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?
  2. போன வருஷம் பருத்தித்துறையில் இருந்து திரும்பும்போது அம்மாச்சி உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன். தரமும் நன்றாக இருந்தது. விலையும் மலிவு. போன வருடம் இருந்த எரிபொருள் நெருக்கடிக்குள்ளும் கொழும்பில் பம்பலப்பிட்டியில் இருந்து சுதந்திர சதுக்கம் போக நாலு தடியன்களுக்கு 1000 ரூபாதான் கொடுத்தோம்! ஊரில் பேரம் பேசமுடியாத நிலை போலிருக்கு! குடையின் பழைய விலையை கிழிக்க மறந்த கடைக்காரரின் பேச்சை நம்பும் அளவுக்கு அப்பாவியா நீங்கள்?😂🤣
  3. புருஷன்மார் இந்த வயதிலும் கண்டிசன் போட்டுத்தான் வைச்சிருக்கினம்! நானும் வாசிக்கின்றேன்! சிறிலங்காவில் ஏலக்காயும் இல்லையோ!😉
  4. செங்கோட்டைசிங்கம் படத்தில், KV மகாதேவன் இசையில், TMS, ஜிக்கி இனிமையாக பாடிய, மருதகாசியின் வரிகள்.
  5. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பரணி. யாழ் இணையம் வாழ்க்கைத்துணையை கண்டடைய உதவியது என்பது புதிய தகவல்.!
  6. இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை - கட்டண விபரங்கள் ! Published By: Digital Desk 5 27 Mar, 2023 | 10:59 AM இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 144 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படையினரால் முனையத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ஏப்ரல் மாதம் 02ஆவது வாரத்துக்குள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எந்தவொரு வியாபாரிக்கும் இந்த சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இச்சேவைக்கு மேலதிகமாக காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக தற்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை போதுமானதாக இல்லை என்பதால் இன்னும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை இந்திய எக்சிம் வங்கியிடமிருந்து கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பயணிகள் படகு உரிமையாளர்கள் ஒரு பயண வழிக்கு பிரயாணி ஒருவரிடம் 50டொலர்கள் அறவிடுவதுடன் 100கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டனர். கப்பல் சேவையினூடாக ஒரு தடவைக்கு 150 பயணிகளை கொண்டு செல்ல முடியும் என்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிப்பதற்கு 04 மணித்தியாலங்கள் எடுப்பதுடன், முதலில் பகல் வேளையில் மட்டுமே பயணச் செயற்பாடுகளை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/151465
  7. இன்றுதான் இந்தத் திரியைப் படிக்க நேரம் வந்தது. @தமிழ் சிறி ஐயா மீண்டும் வேலைக்குப் போவது சந்தோஷம்! வீட்டில் அடைந்து கிடைக்காமல் வேலைக்குப் போனால் உடம்பும் குறையும். மனதும் இலகுவாகும். தவறு செய்தவன் குற்ற உணர்வில் வந்து கதைக்காமல் இருக்கலாம். அது அவனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டு இருக்கும். இப்போதுவரை அவனுடன் கதைக்கவில்லை என்றால் உறுத்தல் பெருகும். ஒரு சாதாரண தருணத்தில் ஒரு சில வார்த்தைகளை சினேகபூர்வமாகச் சொன்னால் பெரிய மாற்றம் வரும்.
  8. கவிதை அருமை. 👏 எப்போதும் முன்னைய காலங்களின் அனுபவங்கள் நனவிடை தோய்தலாக வந்து ஏங்கவைக்கும். ஆனால் மாற்றங்கள் ஒன்றே மாறாமல் இருக்கும். கனவுகள் கனவுகளாக இருக்க கழியும் நாட்களே வாழ்க்கை!
  9. நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! KaviMar 16, 2023 07:06AM நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. https://minnambalam.com/political-news/evks-elangovan-hospitalized-in-chennai-porur/
  10. கதையை பாகம் IV இல்லாமல் பாகம் V ஆகவே முடித்திருக்கலாம். இதுதான் கதையாகப் பிரகாசிக்கின்றது🤩 நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றது😀
  11. நாங்களும் வேர்க் புரொம் ஹோம். ஆனால் இந்த ரூட்டின் எல்லாம் கிடையாது. கடுமையான உழைப்பில் சுகம் கண்டவர்கள்! கிடைக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற குற்றவுணர்வு உள்ளவர்கள்! ஆனால் கொஞ்சமாக வேலை செய்வதால் அலுவலகத்திற்கு வாங்கோ என்று உருட்டத் தொடங்கிவிட்டார்கள். கதை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.. வாசிக்க தூண்டும் எழுத்து👏👏
  12. இன்றுதான் இந்த ஆக்கத்தை வாசிக்க நேரம் அமைந்தது @விசுகு ஐயா. தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் பலர் மன அழுத்தங்கள், மனச் சோர்வுகள் இருந்தும் மற்றையவர்கள் அறிந்தால் மரியாதைக் குறைவு என்று தகுந்த மனநல ஆலோசகர்களை நாடுவது குறைவு. ஆனாலும் கவுன்சிலிங்கில் ஈடுபடும் நண்பர் கோவிட் காலத்துடன் மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களும் அவரிடம் ஆலோசனை பெறுகின்றார்கள். எனினும் அகதி விண்ணப்பம் கோரி வருபவர்கள்தான் மன நல ஆலோசனைக்கு அதிகம் அனுப்பப்படுகின்றார்களாம்! எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தம், உளச்சோர்வு, மனப்பிறழ்வு என ஏதாவது ஒன்று வரலாம். மற்றவர்களுக்காக வாழாமல் தங்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் தகுந்த ஆலோகர்களைப் பார்க்கவேண்டும்.
  13. அமோனியாவை உற்பத்தி செய்யும் Haber process பள்ளிப் புத்தகங்களில் உள்ளன. அதில் ஓரிரு வரிகளில் Haber நாஜி ஜேர்மனியின் யுத்தத்திற்கு உதவியது பற்றிய சர்ச்சையும் தொட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
  14. இந்த நவீன உலகிலும் இது நடக்கின்றது. வரலாற்றில் இருந்து மனித குலம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. தொடர்ந்து முழுமையாக வாசிக்கின்றேன்.
  15. மடகாஸ்கர் படங்களைப் பகிர்வதற்கு நன்றி @nilmini அக்கா. விசித்திரமான விலங்குகள், பறவைகள் வாழும் இந்தத் தீவுக்குப் போகச் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!😊
  16. கவிதை நன்று. இந்தப் பூமியின் ஓட்டில் எறும்புகள் போல ஊரும் மனிதர்கள் நிலத்துக்கு கீழும் வசிக்கமுடியாது. 8 km உயர மலையிலும் வசிக்கமுடியாது. இவற்றை அறியாமல் ஆடும் ஆட்டம் இருக்கே! அதை எப்படி பிரபஞ்சம் தாங்குகின்றது!
  17. தமிழ் சிறி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  18. அஹஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  19. ஆங்கிலத்தில் ChatGPT ஓரளவு பரவாயில்லாத ஆக்கங்களைத் தருகின்றது! ஆனால் தமிழில் அந்தத் தரத்திற்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.