Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய

Featured Replies

தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய

ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.

1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.

'ஆனால் அவர் அங்கு வீடொன்றை அமைத்தார். சில வருடங்களின் பின்னர், சமய நடவடிக்கைகளுக்காக பிரிதொரு அறையை அமைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1982 ஆம் ஆண்டு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவேளை, அவர் 300 ஏக்கர் பகுதியை புனித பூமியாக முன்மொழிந்தபோது அக்காணி பெறப்பட்டது. அப்போது அது ஒரு மத நிலையமாக குறிப்பிடப்படவில்லை.

இக்காணியில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் அமைக்கப்படுவதாக தம்புள்ளை விகாராதிபதி வண. இனாமுலுவ சுமங்கல தேரர் அதிகாரிகளுக்கு அறிவித்தார். ஆனால் அதிகாரிகள் எவரும் அதை கவனிக்கத் தவறிய நிலையில், அதற்கு எதிராக அப்பகுதியிலுள்ள பிக்குகள் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வீதிக்கு வந்தனர்.

அக்குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான காணியில் தேவாலயமொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அவர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமோ, மாவட்ட செயலாளரிடமோ, தம்புள்ளை மாநரசபையிடமோ இதற்கு அனுமதி பெறவில்லை' என அவர் கூறினார்.

இதேவேளை, பௌத்தர்கள் சுதந்திரத்தையும் எந்த சமயத்தையும் பின்பற்றுவதற்கான உரிமையையும் மதிப்பதால் இலங்கையில் சமய சுதந்திரம் உள்ளது' என மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

'நாம் அனைவரும் ஒரே சட்டத்தின்கீழ் உள்ளோம். அதற்கு சமயம் ஒரு தடையாக அமையக்கூடாது' என அவர் கூறினார்.

Edited by akootha

என்னமோ பௌத்தத்தைத் தவிர அங்கு எதுவும் இருக்கக் கூடாது. இருப்பின் அது சட்டவிரோதமானது.

  • கருத்துக்கள உறவுகள்

"தம்புள்ளையில் முஸ்லிம்களே இருக்கவில்லை"

என்ற இனிய செய்திக்காக காத்திருக்கிறோம். (இருந்தால்தானே கலவரத்தில் இறந்திருக்க முடியும்?)

"தம்புள்ளையில் முஸ்லிம்களே இருக்கவில்லை"

என்ற இனிய செய்திக்காக காத்திருக்கிறோம். (இருந்தால்தானே கலவரத்தில் இறந்திருக்க முடியும்?)

  • கருத்துக்கள உறவுகள்

லங்கவே சிங்கள காட்டேரிகளின் புனித இரத்த பூமி, அதில தம்புள்ள தனியவா - அப்ப அது பக்கிரிகளின் இடமாக இருக்கும்

பள்ளிவாசலுக்காக நான் இதை பேச வரவில்லை.

உந்த பிக்கு சொன்னதுபோல.. அந்தப் பள்ளிவாசல் அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருந்ததாக இருந்தால், அதோடு சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு பிரேமதாச முன்மொழிந்த புனிதபூமிச் சட்டம் ஏற்கனவே முஸ்லிம்களின் உரிமையை மீறியுள்ளது.

இப்பொது இருக்கும் பிக்குகளும் அரசும் இதை இப்ப இதை தூக்கிப் பிடித்தாலும்.. அஸ்ரப் இருக்கும் காலத்திலேயே ஆப்பு வைக்கப்பட்டிருக்கு.

  • தொடங்கியவர்

மகிந்தரின் மௌனமும் பிரதமரின் அறிக்கையும் இவை திட்டமிடப்பட்டு மக்களின் பொருளாதார சுமைகள் சமபந்தபபட்ட கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கைகள் போலுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

18497578431147867284janaka.jpg

சிங்களவர்களை தூண்டிவிட்டு தம்புள்ளையில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது - ஜனக்க பண்டார தென்னகோன்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை குறித்து அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"தம்புள்ளை ரஜமஹா விகாரை பூமி குறித்து தேரர்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் சிலருக்கு சட்ட ரீதியான அதிகாரம் உண்டு. பள்ளிவாசல் குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

எனினும் பௌத்தர்களை தூண்டிவிட்டு அநாவசிய பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்காவிட்டால் பாரிய அழிவு ஏற்படும்.

தம்புள்ளை விகாரை அமைப்புப் பணிகள் 6 மாதத்திலும் அநாவசிய கட்டடங்களை அகற்றும் பணிகள் 3 மாதங்களிலும் செய்து முடிக்கப்படும் என பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இப்படியிருக்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்.

தம்புள்ளை ரஜமஹா விகாராதிபதிக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடு காணப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளர் ஒருவர் தோல்வியுற்று நான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார். இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்".

இவ்வாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24794

தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய

ஆகவே எந்தப்பள்ளி வாசலையும் யாரும் இடிக்கவில்லை . இந்த உண்மையை சர்வதேசம் புரிந்துகொள்ளும் என நாம் எதிர்பார்க்கிறோம்...... :rolleyes::lol::D:icon_idea:

EDIT ............காரணம் சிறிய எழுத்துருவை பெரிதாக மாற்றுவதற்காக........நன்றி

Edited by tamilsooriyan

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசலுக்காக நான் இதை பேச வரவில்லை.

உந்த பிக்கு சொன்னதுபோல.. அந்தப் பள்ளிவாசல் அறுபது ஆண்டுகளுக்கு மேல் இருந்ததாக இருந்தால், அதோடு சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு பிரேமதாச முன்மொழிந்த புனிதபூமிச் சட்டம் ஏற்கனவே முஸ்லிம்களின் உரிமையை மீறியுள்ளது.

இப்பொது இருக்கும் பிக்குகளும் அரசும் இதை இப்ப இதை தூக்கிப் பிடித்தாலும்.. அஸ்ரப் இருக்கும் காலத்திலேயே ஆப்பு வைக்கப்பட்டிருக்கு.

சூறாவளி,

புனித பூமி, புனித பூமி என்று சிங்களவன் சொல்லுகின்றான். அதற்குள்... அரபு நாட்டிலிருந்து வியாபாரத்துக்கு வந்த முஸ்லீம் மசூதி கட்டுறான்.

1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, 63 நாயன்மாரில் முதலாவதாக போற்றப்படும், இராவணன் காலத்து திருக்கோணேஸ்வரத்தின் மகிமையை கெடுக்கும் முகமாக... பெரிய விகாரை கட்டியும், திரிக்கேதீஸ்வரத்தை அதன் வழி சிறுமையாக்கவும் முயற்சிக்கும் போது... சிங்களவனுக்கு, சைவ சமயத்தவரின் புனிதபூமி ஞாபகம் வருவதில்லையோ. இந்த விசயத்திலை... சிங்களவனும், முஸ்லீமும் அடிபட்டு சாக வேண்டும். அதுவரை... நாம் பொப் கோன் சாப்பிட்டபடி ரசிக்க வேண்டியது தான்.popcorm1.gif

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை எனும் இடம் தமிழர்களின் பாரம்பரிய பூமி.

ஆனால் சிங்களவனும் முஸ்லீம்களும் உரிமைகோரிப் போராட்டம் நடாத்துகின்றனர்.

இதுதான் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள உலகம், ஒரு உலகம் அல்ல எனவும் அங்கு உலகம் அமைப்பதற்கு சிங்கள அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.

962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த கடவுள் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார்.

இவனுங்க இந்த மாறி பீதிய கிளப்புறதுக்குள்ள உலகத்தை விட்டு கிளம்புறது நல்லது..!

தம்புள்ளை எனும் இடம் தமிழர்களின் பாரம்பரிய பூமி.

ஆனால் சிங்களவனும் முஸ்லீம்களும் உரிமைகோரிப் போராட்டம் நடாத்துகின்றனர்.

இதுதான் வேடிக்கை.

தம்புள்ளை, குருநாகல், மாத்தளை போன்ற இடங்கள் பாரம்பரிய தமிழர் பிரதேசங்கள்.

தம்புள்ளை குகை சிற்பங்கள் தமிழ் மன்னனால் கட்டப்பட்டது.

அங்கு இந்து சமய சிற்பங்களே அதிகம் இருந்தன. அதனை கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள பௌத்த ஆகிரமிப்பாளார்கள் மாத்திவிட்டார்கள். அங்கு பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. தற்போதும் அதனுள் போய்ப் பார்த்தால் ஓரளவு உண்மைகள் விளங்கும்!

1960 களில் எடுக்கப்பட்ட சில படங்கள் தம்புள்ளை குகை சிற்பங்களின் உண்மை நிலையை கூறுகின்றன.

அக்காலத்தில் குகையின் முகடுகளில், சுவர்களில் திராவிட பாரம்பரிய ஓவியங்களே இருந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.