Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் ஒரு தேவதை.. கனவாகிப் போனவள்..!

Featured Replies

...

எங்களைப் புரிஞ்சு கொள்ளுறதும் சரி... இந்தப் பூமியை புரிந்து கொள்வதும் சரி. அந்தளவு கஸ்டம்...! ஆனால் எங்களுக்கு மற்றவையை வெகு விரைவாகப் புரிந்து கொள்ள முடிகிறது..!

....

ஏன் அப்படி யோசிக்கிறீங்கள் என்று எனக்குப் புரியவில்லை! :blink:

சரி.. உங்களால் மற்றவர்களை எப்படி வெகு விரைவில் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கவாவது முயற்சிக்கலாமே? :):icon_idea:

அப்படியாவது மற்றவர்கள்/ சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படி யோசிக்கிறீங்கள் என்று எனக்குப் புரியவில்லை! :blink:

சரி.. உங்களால் மற்றவர்களை எப்படி வெகு விரைவில் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கவாவது முயற்சிக்கலாமே? :):icon_idea:

அப்படியாவது மற்றவர்கள்/ சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரை நான் மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பேன். மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ளச் செய்வதில்... நான் மிணக்கடுவதில்லை...! அவர்களாகப் புரிந்து கொண்ட அளவில் பழகிக் கொள்வார்கள்.. அவ்வளவும் தான் குட்டி..! இந்தப் புரிந்து கொள்வதிலேயே மிணக்கட்டுக் கொண்டிருந்தால்.. எம் வாழ்வை எவர் தான் கவனிப்பது..! நாம் தாம் எம் வாழ்வை தீர்மானிக்கனும். அடுத்தவர்களாக இருக்கக் கூடாது.. என்பது என் கொள்கை..! :):icon_idea:

உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா. இப்ப கொஞ்ச நாளா ஒரே கனவாக் கிடக்கு, அதுவும் பொம்பிளப் பிள்ளையள் வாற கனவு :wub: . ஒருவேளை இந்த வருஷம் உலகம் அழியத்தான் போகுது போல :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அண்ணா. இப்ப கொஞ்ச நாளா ஒரே கனவாக் கிடக்கு, அதுவும் பொம்பிளப் பிள்ளையள் வாற கனவு :wub: . ஒருவேளை இந்த வருஷம் உலகம் அழியத்தான் போகுது போல :icon_mrgreen:

கனவு கூட காணக்கூடாதாப்பா. நாங்க கனவு கண்டா உலகமே அழியுமுன்னு அர்த்தம் வேறையா..??! கொடுமை சரவணா...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு இப்ப ஒரே கனவும் காய்ச்சலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் சரியான மருந்து தேவை. மருந்து என்னவென்று தெரிந்தும் குடிக்கமாட்டேன் என்று ஏன்தான் இன்னும் அடம்பிடிக்கின்றார்? :icon_mrgreen:

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு இப்ப ஒரே கனவும் காய்ச்சலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் சரியான மருந்து தேவை. மருந்து என்னவென்று தெரிந்தும் குடிக்கமாட்டேன் என்று ஏன்தான் இன்னும் அடம்பிடிக்கின்றார்? :icon_mrgreen:

நீங்களா.. இப்படி எழுதிறது..??! கிருபனண்ணா.. கனவு.. காய்ச்சல்.. சில பல காரணங்களுக்காக வர முடியும். அதற்காக கண்ட மருந்தை எல்லாம் குடிச்சிட்டு.. அப்புறம் பக்க விளைவால அவதிப்பட்டு.. அது பிறகு நிலைமையை மோசமாக்கிட்டா.. ???! அதனால.. இப்படியான வியாதிகளுக்கு சரியான பகுப்பாய்வோட.. அவதானத்தோட தான்.. மருந்து செய்ய வேணும். இல்ல.. அதை இயற்கையாகவே குணமாக விட்டிடனும்.. இமியுன் (நிர்ப்பீடனமாவது) ஆவது கூடும்.. :lol::D

எல்லாம் கனவு.. கற்பனை என்று தான் இருக்குது... கவிதை..! அந்தளவில அது மகிழ்ச்சிக்குரியதா இருக்குது. எதையும் எட்டப் பார்ப்பது அழகு.. கிட்டப் பார்த்தால் தானே தெரியும்.. அதன் அசிங்கம்..! :lol::D

வீட்டில கண்ணாடி இருக்குது தானே அப்பு! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில கண்ணாடி இருக்குது தானே அப்பு! :lol:

கண்ணாடில நாங்க.. ஒன்றும் அசிங்கமா தோன்றல்லையே..! :):lol:

யாருமே தமக்கு அசிங்கமாகத் தோன்றுவதில்லை. :lol:

நீங்கள் அசிங்கம் என்று சொல்ல வரவில்லை எனப் புரியும் என நினைக்கிறேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமே தமக்கு அசிங்கமாகத் தோன்றுவதில்லை. :lol:

நீங்கள் அசிங்கம் என்று சொல்ல வரவில்லை எனப் புரியும் என நினைக்கிறேன். :lol:

ஏதோ மற்றவனை வைச்சே காமடி பண்ணி தங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளும்.. எங்கட இழிவான தமிழனிடம்.. இதனை விட எதனை எதிர்பார்க்க முடியும்..! :lol::icon_idea:

நன்று. எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. கதைக்கு தேவையில்லாமல் பெண்ணை அமோகமாக வர்ணிப்பதை தவிர்த்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்று. எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. கதைக்கு தேவையில்லாமல் பெண்ணை அமோகமாக வர்ணிப்பதை தவிர்த்திருக்கலாம்.

எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டினால் திருத்த வசதியா இருக்கும். நான் கூடிய அளவு எழுத்துப் பிழைகள் அமையாமல் இருக்கவே அதிகம் திருத்தங்களையும் என் பதிவுகளில் செய்கின்றவன் என்ற வகையில்.. இனங்காணப்படாது தப்பி இருக்கும் எழுத்துப் பிழைகளை வாசகர்களான கள உறவுகள் சுட்டிக்காட்டினால் திருத்த வசதியாக இருக்கும்.

மேலும்.. கனவில் கண்டதை தானே வர்ணிச்சிருக்கிறம். எதுவும் மிகையாகப் போகவில்லை.. என்ற வகையில் தான் என் உணர்வு இருக்கிறது..! வாசகர்கள் அதில் மாறுபட்டு சிந்திப்பது தவறல்ல.. அது அவர்களின் சுதந்திரம்.

கருத்துக்கு நன்றி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிஞருக்கும்.. நம்மள மாதிரியே கனவு வந்திருக்குமோ...???!

http://youtu.be/bOpfDxz7pDc

நல்ல அழகான பாடல்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு சுமராக இருக்கும் ஆண்கள் கல்யாணம் கட்டும் போது தங்களை விட அழகான அல்லது சீதனம் அதிகம் கொண்டு வரும் பொண்ணாய் அல்லது தங்களது தகுதிக்கு ஏற்ற மாதிரி படித்திருக்க கூடிய பெண்ணாய் இருக்க வேண்டும் ஆனால் கல்யாணம் கட்டின பிறகு அந்த படித்த பெண்ணை 75% மானோர் வேலைக்கும் போக விடுவதில்லை பிறகு எதற்கு திருமணம் பேசும் போது படித்த பெண்ணைத் தேடுகிறார்களோ தெரியவில்லை.

அதே மாதிரி காதலிக்கும் போது தங்களுக்கு ஏற்ற பொண்ணாய் பார்த்து காதலிக்க மாட்டார்கள் தங்களை விட அழகான பெட்டையைத் தான் காதலிப்பார்கள் அந்த பெட்டையளில் சிலர் இவர்களை கழட்டி விட்டுட்டு வேற வடிவான பெடியங்களை தேடிப் போறது வேற விசயம் :D [உடனே யாழில் வந்து கவிதை,கட்டுரை எழுதத் தொடங்கிடுவார்கள் :lol: ].

நான் நெடுக்ஸ்சுக்கு மாத்திரம் எழுதவில்லை யாழில் காதல் தோல்வியால் அவதிப்படுகின்ற அனைத்து ஆண்களுக்கும் தான் சேர்த்து எழுதினேன்...கவிதையின்/சுபேசுசின்/குட்டியின் திரியின் எழுதுவோம் என்டு பார்த்திட்டு கடைசியில் வேண்டாம் நெடுக்கரின் திரியில் ஈஸ் இந்த அழகைப் :rolleyes: பற்றி எழுதியதால் இதில் வந்து எழுதினேன்.

காதலில் தோல்வியுற்ற ஆண்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களை விட அழகில் குறைந்த பெண்ணைக் காதலித்து அவள் உங்கள் காதலை ஏற்காமல் விட்டுருக்காளா?...ஆணோ/பெண்ணோ மனசைப் பார்த்து காதலித்து அந்தக் காதல் அதற்குப் பிறகு அந்த ஆணாலோ/பெண்ணாலோ பிரிந்திருக்கா?

ரதி,

உங்கள் கருத்துடன் பொதுவாக உடன்பட்டாலும், இரண்டு விடயங்களில் முரண்படுகிறேன். ஒன்று இப்பவுள்ள அதிகமான பொடியன்கள் எதிர்கால வாழ்க்கையில் கவனமாக இருக்கிறார்கள். படித்த பெண்களை வீட்டில் வைத்திருக்காமல் வேலைக்கு அனுப்பி வசதியான வாழ்வு வாழ்வதையே விரும்புகிறார்கள். மற்றது, திருமணத்தின் பின் சேர்ந்து வாழ்வது அழகில் மாத்திரம் தங்கியில்லை.

பார்ப்பதற்கு சுமராக இருக்கும் ஆண்கள் கல்யாணம் கட்டும் போது தங்களை விட அழகான அல்லது சீதனம் அதிகம் கொண்டு வரும் பொண்ணாய் அல்லது தங்களது தகுதிக்கு ஏற்ற மாதிரி படித்திருக்க கூடிய பெண்ணாய் இருக்க வேண்டும் ஆனால் கல்யாணம் கட்டின பிறகு அந்த படித்த பெண்ணை 75% மானோர் வேலைக்கும் போக விடுவதில்லை பிறகு எதற்கு திருமணம் பேசும் போது படித்த பெண்ணைத் தேடுகிறார்களோ தெரியவில்லை.

நீங்கள் எந்த உலகத்தில இருக்கிறீங்கள்? கலியாணம் கட்டினாப் பிறகு பெண்களை ஆண்கள் வேலைக்குப் போக விடுவதில்லை என்று சொல்லுவதற்கு? இன்றைய பொருளாதார நிலையை முகம் கொடுக்க திருமணமாகியிருந்தால் இருவரும் தான் வேலைக்குச் செல்லவேண்டிய அவசியம் உள்ளது... பிள்ளைகள் உள்ளவர்கள் ஒரு வேளை இதற்கு விதி விலக்காக இருக்கலாம்...

அதே மாதிரி காதலிக்கும் போது தங்களுக்கு ஏற்ற பொண்ணாய் பார்த்து காதலிக்க மாட்டார்கள் தங்களை விட அழகான பெட்டையைத் தான் காதலிப்பார்கள் அந்த பெட்டையளில் சிலர் இவர்களை கழட்டி விட்டுட்டு வேற வடிவான பெடியங்களை தேடிப் போறது வேற விசயம் :D [உடனே யாழில் வந்து கவிதை,கட்டுரை எழுதத் தொடங்கிடுவார்கள் :lol: ].

பொதுவாக ஒரு உறவில் முறிவு ஏற்பட ஒருவரைக் குறை சொல்ல முடியாது... அலைபாயும் மனம்/ திருப்பதி இல்லாத மனம் கொண்ட ஆண்களும் உள்ளார்கள் அதே போல் பெண்களும் உள்ளார்கள்...

கவிதை கட்டுரை கதை ஒருவரின் சந்தோசத்தின்/ வலியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என நினைக்கிறன்.. ஒரு மனுஷ பிறப்பு தனது சந்தோசத்தின்/ வலியின் உணர்வுகளை ஆபாசமில்லாது வெளிப்படுத்துவதில் தவறேதும் உண்டா?

நான் நெடுக்ஸ்சுக்கு மாத்திரம் எழுதவில்லை யாழில் காதல் தோல்வியால் அவதிப்படுகின்ற அனைத்து ஆண்களுக்கும் தான் சேர்த்து எழுதினேன்...கவிதையின்/சுபேசுசின்/குட்டியின் திரியின் எழுதுவோம் என்டு பார்த்திட்டு கடைசியில் வேண்டாம் நெடுக்கரின் திரியில் ஈஸ் இந்த அழகைப் :rolleyes: பற்றி எழுதியதால் இதில் வந்து எழுதினேன்.

ஏற்கெனவே ஒரு பதிவில் 'யாழில் உள்ள ஆண்கள் எல்லாரும் காதலில் தோற்றவர்கள்' என்ற வகையில் ஒரு கருத்துப் பதிந்து தானே இருக்கிறீர்கள்? :rolleyes: (சிலருக்கு வெளிப்படையா எழுதினால்/ கதைத்தால் அவர்களின் வலி குறையக் கூடும், சிலருக்கு மனதிலையே வைத்து புழுங்கி மனநோயாளிகளாக ஆவதும் உண்டு... இதை எல்லாத்தையும் விட இன்னும் சிலர் எல்லாத்தையும் மறைத்து நல்லபிள்ளையாக வலம் வருவார்கள்... (quiet ones are the worst என்று சொல்லுவார்கள், அப்படிப் பார்க்கும் போது தங்கள் மன வலிகளை/ சோகங்களை இப்படி வெளிப்படுத்துவது பிழை இல்லை என்பது எனது கருத்து)

காதலில் தோல்வியுற்ற ஆண்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களை விட அழகில் குறைந்த பெண்ணைக் காதலித்து அவள் உங்கள் காதலை ஏற்காமல் விட்டுருக்காளா?...ஆணோ/பெண்ணோ மனசைப் பார்த்து காதலித்து அந்தக் காதல் அதற்குப் பிறகு அந்த ஆணாலோ/பெண்ணாலோ பிரிந்திருக்கா?

ஒருவருக்கு இன்னொருவர் மீது காதல் உணர்வு வர வெளிப்புறத் தோற்றமும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வருவதல...

இதனை முழுமையாக அறிவதற்கு ரதிக்கு வாழ்க்கை அனுபவம் இன்னும் வேணும் என்று நினைக்கிறன்! :)

* எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மொத்தம் ஜீவாவின் புலநாய்வு :unsure:<_< தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.. :rolleyes::D:lol:

நன்றி நெடுக்ஸ் அண்ணா. சொல்லியனுப்புங்கோ வாறேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது அழகைப்பார்த்தோ அந்தஸ்த்தைப் பார்த்தோ

பணக்காரன் ஏழை என்பதைப் பார்த்தோ வருவதில்லை.

அது வரும்போது தானாக வரும்.

ஏன் எதற்கு அப்படி வருகின்றது என்பதற்கு உண்மையான

காதலர்களிடம் கூட விளக்கம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது அழகைப்பார்த்தோ அந்தஸ்த்தைப் பார்த்தோ

பணக்காரன் ஏழை என்பதைப் பார்த்தோ வருவதில்லை.

அது வரும்போது தானாக வரும்.

ஏன் எதற்கு அப்படி வருகின்றது என்பதற்கு உண்மையான

காதலர்களிடம் கூட விளக்கம் இல்லை.

ஈஸ்ட்ரொஜன், ரெஸ்ரோஸ்ரிரொன் வர ஆரம்பிக்க காதலும் வரும்..! :D

காதல் என்பது அழகைப்பார்த்தோ அந்தஸ்த்தைப் பார்த்தோ

பணக்காரன் ஏழை என்பதைப் பார்த்தோ வருவதில்லை.

அது வரும்போது தானாக வரும்.

ஏன் எதற்கு அப்படி வருகின்றது என்பதற்கு உண்மையான

காதலர்களிடம் கூட விளக்கம் இல்லை.

வாத்தியார் ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்ன மாதிரி.

காதலும் பல முறை வருகிறதே! ஏன் வாத்தியார்? :lol:

Edited by தப்பிலி

வாத்தியார் ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்ன மாதிரி.

காதலும் பல முறை வருகிறதே! ஏன் வாத்தியார்? :lol:

"காதல் எத்தனை முறையும் வரலாம், ஆனால் கலியாணம் ஒரு முறை தான் இருக்கவேண்டும்." இது நான் சொல்ல இல்லை தப்பிலி நடிகர் R. பார்த்தீபன் சொன்னது... :lol::D

"காதல் எத்தனை முறையும் வரலாம், ஆனால் கலியாணம் ஒரு முறை தான் இருக்கவேண்டும்." இது நான் சொல்ல இல்லை தப்பிலி நடிகர் R. பார்த்தீபன் சொன்னது... :lol::D

tung ஸிலீப் குட்டி. :lol:

ஒரே ஆளில் காதல் பலமுறை வருகுதே என்று சொல்ல வந்தேன். :D

tung ஸிலீப் குட்டி. :lol:

ஒரே ஆளில் காதல் பலமுறை வருகுதே என்று சொல்ல வந்தேன். :D

வேற வழி இல்லை என்று அர்த்தம்... :lol::D எனக்கு keyboard சிலிப்பாச்சு தப்பிலி...

அது நல்ல புரிந்துணர்வாக இருக்கலாம்... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் ஜீவாவின் புலநாய்வு :unsure:<_< தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.. :rolleyes::D:lol:

நன்றி நெடுக்ஸ் அண்ணா. சொல்லியனுப்புங்கோ வாறேன் :)

மெய்யே ஜீவா, பிள்ளை பிரிடிஸ் காறியாம், உண்மையே :wub: இந்தக் காலத்தில ஒரு பெடியன கரை சேக்கிறதுக்கே இந்தப் பாடு பட வேண்டிக் கிடக்குதப்பா :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் ஜீவாவின் புலநாய்வு :unsure:<_< தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.. :rolleyes::D:lol:

நன்றி நெடுக்ஸ் அண்ணா. சொல்லியனுப்புங்கோ வாறேன் :)

கனவு நனவானால் சொல்லி அனுப்பிறன்.. ஜீவா..! :)

உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா.. நான் பாழாங் கிணற்றுக்குள் விழும்.. தருணம் பார்த்துக் காத்திருக்கும் உங்களை எல்லாம் ஏமாற்றுவனா என்ன..??! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.