Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார்; மேதானந்த தேரருக்கு விக்கிரமபாகு நேருக்கு நேர் சவால்

Featured Replies

இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும்.

இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு, இதே தொழிலாப் போச்சு!

ஒருவர், பலமாகத் தட்டத் தொடங்குவார்!

மற்றவர், கொஞ்சமும் நோகாமல், சவால் விடுவார்!

ஆக, உலகத்துக்குத் தாங்கள், ஒரு நடுநிலை வாதிகள் போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!

ஆனால், எல்லோரது நோக்கமும் தமிழனை ஓரங்கட்டுவது!

இந்த விடையத்தில், அவர்களுக்குள் இரு கருத்தில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் ஒருவராவது புவியியல் சார்ந்து.. வரலாற்றை அறிந்து.. அதை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் கருத்தை முன் வைக்கிறீங்க பாருங்க.. நீங்கள் சிங்களம் பேசுபவர் என்பதற்கு மேலால்.. நியாயமான மனிதன்.. என்று தான் பார்க்கப்பட வேண்டும்.

நன்றி விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களே..! :icon_idea::)

சிங்களவர்களுக்கு, இதே தொழிலாப் போச்சு!

ஒருவர், பலமாகத் தட்டத் தொடங்குவார்!

மற்றவர், கொஞ்சமும் நோகாமல், சவால் விடுவார்!

ஆக, உலகத்துக்குத் தாங்கள், ஒரு நடுநிலை வாதிகள் போல, ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்!

ஆனால், எல்லோரது நோக்கமும் தமிழனை ஓரங்கட்டுவது!

இந்த விடையத்தில், அவர்களுக்குள் இரு கருத்தில்லை!

பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஓரிரு சிங்களவர்களில் இவரும் ஒருவர். அவர் மகிந்த கூட்டணி.. தேரர்கள் கூட்டணி போன்று.. சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு பயப்படுவதிலும்..பார்க்க... மனச்சாட்சிக்கு அதிகம் பயப்படுறார் போல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களே :icon_idea: :icon_idea:

அது என்னமோ தெரியல இந்த ஆள் மட்டும் எனக்கு நீண்ட காலமாக தமிழ் இன தற்கால தலைவர்களை விட ( பிரபாகரன் மற்றும் வைகோ தவிர்த்து ) மிக உயர்ந்தவராகவே தெரிகிறார் . தவறாக கூட இருக்கலாம் . எனினும் தன் இனத்தின் தவறுகளை சுட்டி காட்ட நெஞ்சில மாஞ்சா வேணும் . அது இந்த ஆள் கிட்ட நிறையவே இருக்கு . இன்னொரு மந்திரி கூட நல்ல ஆள் போலத்தான் தெரிகிறார் . ஆனால் அடிக்கடி நாக்கு பிறழ்கிறது ( வாசுதேவ நாணயக்கர )

டிஸ்கி

தமிழ் ஈழமோ அல்லது சுய உரிமையோடு கூடிய தன்னாட்சியோ அது ராஜபக்ஷே காலத்தில் மட்டுமே முடியும் . ஏனெனில் இவரை போல சிங்கள மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் யாரும் இல்லை . மேலும் இவர்கள் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் தட்டி கேட்க பவரான ஆளுகள் யாருமே இல்லை . தவறோ சரியோ சரியான நெஞ்சழுத்தமும் திமிரும் ஆணவமும் இவர்களிடம் மட்டுமே இருக்கிறது . பேசாம இவர்களையும் நல்லவர்கள் என பட்டம் கொடுத்து விடலாமா .

டோஸ்கி

ராஜபக்ஷே மனித உரிமை ஆர்வலராக இருந்து தான் சிங்கள பேரினவாதியானர் என்பதை நினைவில் கொள்க . எதோ அப்பப்ப சிங்களர்கள் சொல்லுவது உண்மையான வார்த்தைகளாக இருந்தாலும் ஒரு சந்தேக கண் எப்போதும் அவர்கள் மேல் இருப்பது போல அவர்களே பண்ணிவிட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ தெரியல இந்த ஆள் மட்டும் எனக்கு நீண்ட காலமாக தமிழ் இன தற்கால தலைவர்களை விட ( பிரபாகரன் மற்றும் வைகோ தவிர்த்து ) மிக உயர்ந்தவராகவே தெரிகிறார் . தவறாக கூட இருக்கலாம் . எனினும் தன் இனத்தின் தவறுகளை சுட்டி காட்ட நெஞ்சில மாஞ்சா வேணும் . அது இந்த ஆள் கிட்ட நிறையவே இருக்கு . இன்னொரு மந்திரி கூட நல்ல ஆள் போலத்தான் தெரிகிறார் . ஆனால் அடிக்கடி நாக்கு பிறழ்கிறது ( வாசுதேவ நாணயக்கர )

என்ன இருந்தாலும் அவர்கள் சிங்களவர்கள்.

சிங்களத்தில் அவரது எல்லையை அவர் நிர்ணயிப்பதில்லை .

இதில் நாம் தெளிவடைய வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட தமிழ்த்தலைவர்கள் பிரபாகரனுக்கும் வை.கோவுக்கும் இது தான் முதல்தெளிவு.

தமிழ் ஈழம் என்பது சிங்கள மக்கள் ஆதரவோடு வாங்கினால் இன்னும் நல்லா இருக்கும் .

சிங்கவர்தான் தமிழரை எதிரியாக நினைக்கின்றனர் . தமிழர் சிங்களவரை எதிரியாக நினைக்கவில்லை என்பதையும்,

இன பிரச்சினையில் பாதிக்க பட்டது தமிழன் மட்டும்தான் என்பதையும்,

இதுவரை இனவாதத்தால் வீணான வளங்களையும் மனித சக்தி மற்றும் நாடு முன்னேற்றம் போன்றவற்றையும்,

ஓட்டுக்காக தமிழனை கொலை செய்து ஆட்சிக்கு வரும் அரசுகள் சிங்கள மக்களுக்கும் எதுவும் செய்வதில்லை என்ற உண்மையையும்

இன்னும் சில பல நிதர்சனங்களையும் புரிய வைத்தால் சமூக நல்லிணக்கம் வளர வாய்ப்புண்டு .

மேலும் சிங்களருக்கு தமிழர்கள் நம்முடன் இருந்தால் பிரச்சினை ஓயாது முன்னேற்றம் வராது என்பதை தெளிவாக புரியவைக்க வேண்டும் .

ஏனெனில் நாம் கதைப்பது வட மற்றும் கிழக்கை மட்டும் மனதில் வைத்து . ஆனால் பலர் மத்திய மாகாண சமபான்மை தமிழர்களையும் பிற மாகாண சிறுபான்மை தமிழர்களையும் மறந்து விடுகிறோம் . ஈழம் ஒன்று பிறக்கும் பொது அவர்கள் கூட பாதிக்க பட கூடும் . அந்த பாதிப்பு இல்லாமல் ஈழம் வெல்வது தான் நல்லது .ஈழம் அடைத்த பின்னர் கூட தமிழருக்கும் சிங்கவர்களுக்கும் அவரவர் தேசத்தை மீட்டெடுக்க முன்னேற்ற நாள் பிடிக்கும் . புரிந்து பிரியாவிட்டால் அப்புறம் நாளைக்கு ரெண்டு பெரும் அடிசிகிட்டே சாக வேண்டியது தான் .முன்னேற்றம் எல்லாம் இருக்காது .இப்ப ஒரே நாட்டுல சண்ட அப்ப ரெண்டு நாடுகளுக்கிடையே சண்டை . அவ்வளவுதான் வேறுபாடு இருக்கும் .

முன்னெல்லாம் விடுதலை புலிகளின் வானொலியில் இணையங்களில் சிங்களமும் இருக்கும் ஆங்கிலமும் இருக்கும் . இப்ப மூனும் மூணு திசையில இருக்கு .புலிகளின் பாதையில் என பீற்றுவோர் பலர் இப்போது சிங்களரோடு துளி கூட தொடர்பின்றி இருக்கின்றனர் . சிங்களனை பொறுத்தவரை நன் மதிப்பு புலிகளின் மேல் மட்டுமே இருக்கிறது . அவர்கள் பேணி வந்த தொடர்புகள் மற்றும் புலிகளிடமே பல சிங்களவர்கள் வேலை பார்த்ததாக கூட செய்திகள் உண்டு . புலிகளின் நீண்ட வெற்றி பயணத்திற்கு இதுவும் ஒரு காரணம் .

என்னத்த சொல்லி என்னத்த பண்ண . யார் இதையெல்லாம் செய்வது ???

பூனைக்கு யார் மணி கட்டுவது ??? பூனையா இருந்தா பரவாயில்லை . அங்க பதிக்கு மேல நாயும் நரியும் பன்னியுமாவே இருக்குதுக .

என் நண்பர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைதான் ஞாபகம் வருது .

காந்தியம் காந்தியால் மட்டுமே முடிந்த விஷயம் . பிறரால் முடியாத விஷயம் . பேச மட்டுமே லாயக்கு

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னமோ தெரியல இந்த ஆள் மட்டும் எனக்கு நீண்ட காலமாக தமிழ் இன தற்கால தலைவர்களை விட ( பிரபாகரன் மற்றும் வைகோ தவிர்த்து ) மிக உயர்ந்தவராகவே தெரிகிறார் . தவறாக கூட இருக்கலாம் . எனினும் தன் இனத்தின் தவறுகளை சுட்டி காட்ட நெஞ்சில மாஞ்சா வேணும் . அது இந்த ஆள் கிட்ட நிறையவே இருக்கு . இன்னொரு மந்திரி கூட நல்ல ஆள் போலத்தான் தெரிகிறார் . ஆனால் அடிக்கடி நாக்கு பிறழ்கிறது ( வாசுதேவ நாணயக்கர )

நீங்கள் சொல்வது, அத்தனையும் உண்மையே தமிழ்ப் பைத்தியம்!

அதனால் தான், இவருக்குத் தேசிய மட்டத்தில், ஐந்து வீத வாக்குகள் கூடக் கிடைபதில்லை!

அந்த ஐந்து வீதத்திலும், அநேகமானவை தமிழ் வாக்குகள்!

இப்போது, உங்களுக்கு, இலங்கை அரசியல் கொஞ்சம் விளங்கும் என எண்ணுகின்றேன்!

சிங்களவர்களின் வாக்குகள் என்பதற்கப்பால் இவருக்கு தமிழர்களே வாக்களிப்பதில்லை என்பது துரதிஸ்டம். (கோழும்பில் ரணிலுக்கு வாக்களிக்க முண்டியடிக்கும் தமிழர்கள் இவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இவரோடு சேர்ந்து அரசியல் நடத்த தமிழ் அரசியல் கட்சிகள் கூடத் தயாராயிருக்கவில்லை.

இறுதியில் மனோ கணேசன் மட்டுமே இவரையுமு;இணைத்துக் கொண்டு அரசியல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளால் தான் நாடு இந்த நிலைக்கு சென்றது என்பதை உணர்ந்த சிங்கள தலைவர் விக்கிரபாகு கருணாரத்ன.ஒரு காலத்தில் வாசுதேவ நாணயக்காரவும் இப்படி பேசியவர்.இன்று இனவாதிகளின் காலடிக்கு சேவகம் செய்கிறார்.

சிங்களவர்கள் யார் முதலில் சிறிலங்காவுக்கு வந்தார்கள் என்று குமார் பொன்னம்பலத்துடன் விவாதத்தில் சில சிங்கள இனவாதிகள் ஈடுபட்டனர்.ஆனால் குமார் பொன்னம்பலத்தால் போதிய ஆதாரங்களை வைக்க முடியாமல் போய் விட்டது.சிங்களவர் விக்கிரமபாகுவிடமே வெட்கத்தை விட்டு அந்த ஆதாரத்தையும் கேட்டு விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்கள இனத்தவராக இருந்த போதிலும் உண்மையை ஒப்புக்கொண்டதற்காக ....

நன்றிகள் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களே :icon_idea::)

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த விசயத்தில் சில தமிழ் அரசியல் தலைகளுக்கே கருத்து கூற திராணி அற்று இருப்பதுதான் <_<

இனவாதிகளால் தான் நாடு இந்த நிலைக்கு சென்றது என்பதை உணர்ந்த சிங்கள தலைவர் விக்கிரபாகு கருணாரத்ன.ஒரு காலத்தில் வாசுதேவ நாணயக்காரவும் இப்படி பேசியவர்.இன்று இனவாதிகளின் காலடிக்கு சேவகம் செய்கிறார்.

சிங்களவர்கள் யார் முதலில் சிறிலங்காவுக்கு வந்தார்கள் என்று குமார் பொன்னம்பலத்துடன் விவாதத்தில் சில சிங்கள இனவாதிகள் ஈடுபட்டனர்.ஆனால் குமார் பொன்னம்பலத்தால் போதிய ஆதாரங்களை வைக்க முடியாமல் போய் விட்டது.சிங்களவர் விக்கிரமபாகுவிடமே வெட்கத்தை விட்டு அந்த ஆதாரத்தையும் கேட்டு விடலாம்.

யுத்த நிறுத்த காலத்தில் தமிழர் தரப்பு நியாயத்தை வெளிஉலகிற்குச் செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது. அந்தப் பயணங்களின் போது இணைந்து தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல விக்கிரமபாகு தயாராக இருந்தார். ஆனாலும் அவரை இணைத்துக் கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராயிருக்கவில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் நான் தமிழ் தேரசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர்கள் சிறுபிள்ளைத் தனமான பதிரைலத் தந்து நழுவிக் கொண்டார்கள்.அன்று முதல் இன்று வரை எமக்காக எம் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களை விட அதிகமாகக் குரல் கொடுக்கும் விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை உள்வாங்கி அரசியல் செய்வதற்கு நாம் எப்போது தயாராகப் போகிறோம்.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இவர் மானஸ்தன்.

யால்ரா சுமந்திரன் கோஸ்டிகளை..

அண்ணன் எப்போ போவான் ...

திண்ணை எப்போ காலியாகும் ..

என திரியும் கோஸ்டிகளை...

(அடுத்த தலைவர் பதவிக்காக அமுக்கி வாசிக்கும் கோஸ்டிகள்)

டிஸ்மிஸ் செய்து ..

இவரை ஏதாவது ஒரு போஸ்டிங்க் குடுத்து நாடளுமன்றம் அனுப்ப வேணும். :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.