Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னங்கடா நடக்கிது இஞ்சை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரிற்காக சாத்திரி..

அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களிற்கு அதே அரசின் உறுப்பினர் திறந்த மடல் புகழ் ஜெய்சங்கர் முருகய்யா என்பவர் தயாபரன் மீது சில குற்றச் சாட்டுக்களை மன்வைத்து ஒரு திறந்..........த மடல் ஒன்றினை இளையத்தளம் ஒன்றினூடாக எழுதி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். அது சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக மேலும் சில விபரங்களை கேட்டறிந்து பேப்பரில் வெளியிடலாமென நினைத்து ஜெய்சங்கரிற்கு அவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வணக்கம் ஜயா நான் சாத்திரி கதைக்கிறன் கிட்டடியிலை நீங்கள் தயாபரனிற்கு எழுதிய கடிதம் சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக உங்களிட்டை சில விடயங்கள் கேட்டு அதை சனங்களுக்கு பேப்பர் மூலம் சன்ஙகளுக்கு தெரியப்படுத்த விரும்புறள் எண்டதும்தான் மனுசன் பதறியவராய் சாத்திரியா???? ஒரு பேப்பரா??? எப்பிடி உங்களுக்கு என்ரை வீட்டு நம்பர் கிடைச்து எண்டார். ஜயா நம்பர் எடுக்கிறதெல்லாம் சின்ன பிரச்சனை உங்கடை திறந்த மடல் பற்றி அறிந்து கொள்ள விரும்பறம் எண்டதும். அது பற்றி எதுவும் சொல்ல விரும்பேல்லை தயவு செய்து இனி இந்த நம்பருக்கு போன் அடிக்காதையுங்கோ என்றவர் அடிச்சு வைச்சிட்டார்.

என்னடா இது திறந்த மடல் எல்லாம் எழுதிறார் போனடிச்சால் இப்பிடி பூட்டிக்கொண்டு இருக்கிறாரே எண்டு நினைச்சு போட்டு அடுத்தாய் நம்மடை வெளி விவகார அமைச்சர் தயாபரனிற்கு பேனடிச்சன். அவரிட்டை ஜயா அமைச்சரே வணக்கம் உங்களிட்டை ஒரு பேப்பர் சார்பாக சில கேள்விகள் கேக்கலாமா எண்டன் எதைப்பற்றி என்றார்.. ஜெய்சங்ர் எழுதிய கதம் தொடர்பாக எண்டால் no comments எண்டவர் வேறை எதைப்பற்றியெண்டாலும் கேளுங்கோ இப்ப எனக்கு நேரமில்லையெண்டார்.

இப்ப அவசரமில்லை நான் மின்னஞ்சலிலை கேள்விகளை போட்டு விடுறன் நீங்கள் ஆற அமர இருந்து படிச்சு அதற்கான பதில்களை எழுதுங்கோ என்று விட்டு மனிசனை எதுங்கு கரைச்சல் படுத்துவான் எண்டு நினைச்சு

1)- லண்டனில் மகிந்தவிற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக நடாத்திய போராட்டங்கள் பற்றிய உங்களது கருத்து?

2)- போராட்டங்கள் நடைபெறுவது பற்றிய அறிவித்தல்களை வெளியிட சில தமிழ் ஊடகங்கள் தயக்கம் காட்டியதாக அறிகிறோம்..ஜி.ரி.வி உட்பட அதே தொலைக்காட்சியில் நீங்களும் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வுகளை மாற்றி மாற்றி தகவல்களை வழங்கியது ஏன்??

3=- நாடு கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் நீங்கள் ஒரு ஊடகத்தில் பொறுப்பான பதவியிலிருக்கிறீர்கள். இது ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கை என்பது பலரது கருத்து, இதுபற்றி ...

4=- நாடுகடந்த அரசாங்கத்தில் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், சபாநாயகர் பொன் பாலராஜன் பதவி துறக்க முற்பட்டமை. போன்றவற்றின் பின்னணியில் நீங்கள் இருப்பதாகவும், ஒரு குழுநிலைவாதியாக உங்களை சிலர் கருதுவதுபற்றியும் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்

5)- நாடு கடந்த அரசாங்கம் கனடாவில் உருத்திரா மகா யாகம் என்கிற பெயரில் யாகம் செய்தது பற்றி

6=நாடு கடந்த அரசு தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருக்கன்றது உருப்படியாக எவ்வித நடவடிக்கைகள் எதையும் ஆக்கபூர்வமாக செய்யவில்லையென்கிற ஒரு ஆதங்கள் அனைவரிடமும் உள்ளது எந்த செயற்பாடுகளும் இல்லாது முடங்கிப் போயிருப்பதற்கு காரணம் என்ன

எண்டு குத்து மதிப்பாய் சில கேள்வியளை அனுப்பிப் போட்டு இரண்டு நாளாய் பதில் ஏதாவது வந்திருக்கா எண்டு மின்னஞ்சல் பெட்டியை திறந்து பாத்தபடி இருந்தன் ஒண்டையும் காணேல்லை அதுக்கு பிறகு அவருக்கு போனடிச்சு ஜயா உங்கடை பதில் ஒண்டையும் காணேல்லை உங்களுக்கு தட்டச்சு செய்ய கயிற்ரமாயிருந்தால் போனிலை பதிலை சொல்லுங்கோ நான் தட்டுறன் எண்டதும். அவர் சொன்னார் உங்கடை கேள்வியள் இரண்டு விதமா நான் பிரிச்சு பாக்கிறன் ஒண்டு நான் வேலை செய்யிற G.T.V பற்றியது. அதற்கு நான் நினைச்சபடி பதில் சொல்லமுடியாது அதற்கு பதில் தாறதுக்குG.T.V நிருவாகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறன் அவையளின்ரை அனுமதி கிடைச்சதும் பதில் தரலாமெண்டார்.. நானும் விடேல்லை அப்ப அடுத்த கேள்வியள்.எண்டதும் மற்றது நாடு கடந்த அரசு பற்றிய கேள்விகளிற்கு எங்கடை அரசாங்கத்திட்டை அனுமதி கேட்டிருக்கிறன் அவர்கள் அனுமதி தந்ததும் அதற்கான பதிலை தரலாமெண்டார். நல்லவேளை நான் அவரிட்டை உங்கடை பெயர்தானே தயாபரன் எண்டு கேக்கேல்லை கேட்டிருந்தால் அந்த பெயரை எனது தந்தையார் தணிகாசம்தான் எனக்கு வைத்தார் எனவே அவரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன் அவரின் அனுமதி கடைத்தும் பதில் தருகிறேன் எண்டு சொல்லியிருப்பாரோ?? என்னமோ. அரசியல் வாதியானமே எப்பியெல்லாம் யொசிக்கிறங்கள் எண்டுதான் தெரியேல்லை..

ஆனால் ஒரு பேப்பர் சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளிற்கு பதில் வராததால் வெறும் கேள்விகளை மட்டுமே பிரசுரிக்கிறோம். ஒருத்தரிட்டை பேட்டியெடுக்கப்போய் வெறும் கேள்வியனை மட்டுமே பிரசுரிக்கும் கேணைப்பயலுகள் எண்டு நீங்கள் ஒரு பேப்பர் காரரை நினைக்கலாம் என்ன செய்ய ஆனால் மாண்பு மிகு அமைச்சர் தயாபரன் அவர்கள் தனக்கான அனுமதி கிடைத்ததும் இவற்றிக்கான பதில்களை ஒரு பேப்பர் மின்னஞ்சலிற்கு அல்லது தட்டச்சு செய்ய முடியாவிட்டால் கையால் எழுதி கடித உறையிலிட்டு மறக்காமல் முத்திரை ஒட்டி ஒரு பேப்பர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.ரெண்டுக்கும் பஞ்சியெண்டால் ஒரு பேப்பர் அலுவலகத்திற்கு ஒரு கலோ .. நாங்களே தட்டச்சு செய்து பதில்களை போட்டு விடுறம். இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாடு கடந்த தமிழீழ‌ அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை. எண்டு ஒரு மின்னஞ்சல் வேறை வந்து கிடக்கிது இனி அவங்களை தேடி போனடிச்சு பாப்பம்.

மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைக்கப் பட்ட கடிதம்

[size=4]நாடு கடந்த தமிழீழ‌ அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.[/size]

[size=2]வணக்கம்![/size]

[size=2]கௌரவ சபாநாயகர் அவர்கட்கு![/size]

[size=2]நாடு கடந்த தமிழீழ‌[/size][size=2]அரசின் வெளிவிவகார கெளரவ அமைச்சர் தயாபரன் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை.[/size]

[size=2]நாடு கடந்த[/size][size=2]தமிழீழ‌ அரசின் வெளிவிவகார அமைச்சராக திரு தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அரசாங்கத்தின் ஓர் சக்கிவாய்ந்த நபராக வலம் வருகின்றார். வெளிவிவகார அமைச்சு மிகவும் முக்கியமானது. உலக அரங்கில் வெளிவிவகார அமைச்சர்கள் ஆற்றும்[/size][size=2]பணிகளை நாம்[/size][size=2]கண்ணூடு காண்கின்றோம். ஏன் சிறி லங்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்க அயராது பாடு படுவதையும் நாம் காண்கின்றோம். [/size]

[size=2]அவ்வாறான ஒரு பதவியில் தாம் வீற்றிருப்பது பொருத்தம் அற்றது என்ப‌தனை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களே ஏற்றுக் கொள்வார் என்ற அடிப்படையில் பொருத்தமற்ற ஒருவர் அப்பதவியில் நீடிப்பது தமிழீழத்துக்கு சாபக் கேடாக அமையும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரனையை நான் இந்த மாமன்றின் முன் சமர்ப்பிக்கின்றேன். [/size]

[size=2]நான் கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது கொரவ பிரதமர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளேன். பிரதமர் அவர்கள்: இவ்விடயத்தில் வாழாதிருக்கின்றார் என்ற காரணத்தினால் நான் இந்த மன்றிடம் நீதி கேட்டு இந்த மனுவை சமர்ப்பிக்கின்றேன். [/size]

[size=2]அவர்மீது நான் அதிருப்தி கொள்ள பின்வருவன காரணமாக அமைகின்றன‌[/size]

[size=2]பிரித்தானிய தமிழர் இடையே பிளவுகளுக்கு காரணமாகிரார். [/size]

[size=2]நாடு கடந்த[/size][size=2]தமிழீழ‌ அரசு ஓர் மத்திய அரசு போல செயற்பட வேண்டும் . தமிழீழத்தவர் பரந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வரும் அந்த தேச அமைப்புக்களை நாடு கடந்த அரசாங்கம் முழுமையாக அங்கிகரிக்க வேண்டும் . எமது இலக்கு நாம் வாழும் அந்தந்த தேசங்களின் அரசுகளின் மனங்களை வென்று எமது அரசினை அங்கிகரிக்க வைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழீழத்தில் தனியரசு அமைக்க வேண்டும் [/size]

[size=2]அதை விடுத்து ஏலவே இயங்கி வரும் தேச அமைப்புக்களுக்கு ஓர் போட்டிக் கட்சியாக நாடு கடந்த அரசு அமையக் கூடாது. [/size]

[size=2]ஆனால் பிரித்தானியாவில் நடப்பது இதுதான். இங்கு நாடு கடந்த அரசு ஓர் போட்டிக் கட்சி மட்டுமே . மற்ற அமைப்புகளோடு இனைந்து பணியாற்ற எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கிய பெருமை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களையே சாரும். தம்மை ஓர் பேரரசின் வெளிவிவகார அமைச்சராக நினைக்கும் இவர் உண்மையில் நாடு கடந்த அரசை ஓர் பெட்டிக்கடைக் கட்சி ஆக்குகின்றார்.[/size]

[size=2]நான் நேரடியாகவே சொல்வது பிரித்தானிய தமிழர் பேரவைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசை இட்டுச் சென்றவர் திரு . தயாபரன் அவர்கள் [/size][size=2], [/size][size=2]நானும் [/size][size=2], [/size][size=2]துனைப் பிரதமர் திரு . சேகர் மற்றும் பலர் எடுத்த சமரச முயற்சிகளை தயாபரன் அவர்கள் தடுத்தார். [/size]

[size=2]அதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையினரின் செயற்பாடுகளை நான் வரிக்கு வரி ஆதரிக்கவில்லை . ஆனால் தயாபரன் அவர்களின் குள்ளநரித்தன்மையான அரசியலும் அவரின் அகங்காரமும் ஓர் சுமுக உறவுக்கு பெரும் தடையாகவே இருக்கின்றது. [/size]

[size=2]பிரித்தானிய தமிழர் பேரவை [/size][size=2], [/size][size=2]பல பிரித்தானிய பாராளுமன்ற உருப்பினர்களின் மனங்களை வென்று வருகின்றது. அவர்கள் பிரித்தானிய அரசின் போக்கில் மாற்றத்தினை ஏர்படுத்த முயல்கிறார்கள் . இவ்வாறிருக்க இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு கடந்த அரசு ஏன் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தெரியாமல் பின் கதவின் மூலம் சந்தித்து ஓர் கேவலமான அரசியலை நடாத்த வேண்டும் . அதனை செய்வதில் கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் மிகவும் பெயர் போனவர்.[/size]

[size=2]புதிய நண்பர்களை அணி சேர்த்தால் நானும் அவரை போற்ற தயார் ஆனால் மற்றைய அமைப்பினரால் தமிழீழ நண்பர்களாக ஆக்கப்படும் பிரமுகர்களை தம் பக்கம் இழுக்க இவர் நடாத்தும் நாடகம் அசிங்கமானது அருவருப்பானது.[/size]

[size=2]மே [/size][size=2]18[/size]

[size=2]பிரித்தானியாவில் மே [/size][size=2]18[/size][size=2]ம் திகதி நடைபெறும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை பிரித்தானியா தமிழர் பேரவையினர் நடாத்தி வருகின்றனர். அந்த நிகழ்வை இம்முறை குழப்புவதற்காக ஒரு கும்பல் முயற்சித்தது. அதன் விளைவாக லண்டன் மேயரின் அழுவலகம் அந்த நிகழ்வை மே [/size][size=2]19[/size][size=2]ல் நடக்க அனுமதித்தனர்.[/size]

[size=2]இவ்வாறு குழப்பத்தினை ஏற்படுத்தும் கும்பலோடு சேர்ந்து நின்று ஓர் வங்குரோத்து அரசியல் நடாத்தி வருகின்றது.[/size]

[size=2]தமது நிகழ்வுக்கு மக்களை வரத்தூண்டுவதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை துண்டுப்பிரசுரத்தினை ஒத்த துன்டுப் பிரசுரத்தை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களின் ஆதரவோடு இயங்கும் கும்பல் வெளியிட்டது. அதில் வேடிக்கை என்ன என்றால் அந்த போலி துன்டுப்பிரசுரசுரத்தினை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்களின் ஆதரவுடன் இயங்கும் கும்பல் என்னிடமே தந்தது. [/size]

[size=2]இவ்வாறு கீழ் மட்ட அரசியல் செய்து [/size][size=2], [/size][size=2]பின்னர் அந்த மேடையில் ஓர் கூச்சமும் இல்லாமல் எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் ஏறி நின்றதை அறிந்து வெட்கித்தலை குனிகின்றேன்.[/size]

[size=2]ஆபிரிக்க காங்கிரஸ் மாநாடு.[/size]

[size=2]ஆபிரிக்க காங்கிரஸ் மாநாடுக்கு நாம் செல்ல வேண்டும் அங்கு சென்று எமக்கு சர்வதேச அரங்கில் அங்கிகாரம் கிடைக்க வழிவகைகளை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கோடு உலகத்தமிழர் பேரவையினரால் அங்கு செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவமோ அறிவோ அற்ற ஒருவர் எமது வெளிவிவகார அமைச்சராக இருப்பது பெரிதும் வேதனைக்குரியது.[/size]

[size=2]உண்மையில் திரு தயாபரன் அவர்கள்தான் இப்படியான நிகழ்வுகளுக்கு தாமே முன்னின்று செல்ல வேண்டும் [/size][size=2], [/size][size=2]அனால் மற்றவர்கள் ஏற்படுத்தி தரும் வாய்ப்புக்களைக்கூட பயன்படுத்த தெரியாத ஓர் அரசியல் கத்துக்குட்டி நமது வெளிவிவகார அமைச்சராக இருப்பது எண்ணி ஆற்றொணாத் துயரும் துன்பமும் அடைகின்றேன் .[/size]

[size=2]உலகத்தமிழர் பேரவையினர் ஏறக்குறை மாதம் ஒருமுறை வெளிநாட்டு அமைப்புக்களை சந்திக்கின்றார்கள். [/size]

[size=2]இதில் எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் எங்கே இருக்கின்றார் [/size][size=2], [/size][size=2]அவரது அமைச்சு எங்கே இருக்கின்றது.கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் அந்த அமைச்சின் பணிகள் எவற்றை எல்லாம் செய்தார். எந்த எந்த வெளிவிவகார அமைச்சர்களோடு உறவை வளர்த்தார் என்ற விபரத்தை கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் இந்த மாமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒரு பிரமுகரைத்தானும் சந்தித்தால் உடனே ஊடகங்களுக்கு புகைப்படத்துடன் அறிக்கை விடும் அமைச்சர் இராசதந்திரக் காரணங்களுக்காக தமது பணி விடயத்தை வெளியிடமுடியாது என்று அவர் சொல்வாரானால் அதனை அவை நம்புமென நான் கருதவில்லை.[/size]

[size=2]GTV [/size][size=2]இலும் குழப்பம் [/size]

[size=2]நாடு கடந்த அரசுக்கு அவர் என்ன செய்தாரோ இல்லையோ அவருக்கு ஓர் முழு நேர வேலை இன்று கிடைத்து விட்டது. [/size]

[size=2]எமது போராட்டங்களுக்கு ஓர் ஊடகவியளாளராக துணை நின்றவர் திரு . தினேஸ் [/size][size=2], [/size][size=2]கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் ஜீரிவியில் இணைந்த பின்னர் அனைவரையும் அனைத்துச் செல்ல நினைத்த திரு . தினேஸ் அவர்களுக்கும் தலை வலி தொடங்கியது. பின்னர் அவரும் [/size][size=2]GTV [/size][size=2]ல் இருந்து துரத்தப்பட்டு விட்டார் [/size]

[size=2]நாடு கடந்த அரசு முதல் மற்றைய அமைப்புக்களின் பணிகளுக்கு ஓர் ஊடக முகம் கொடுத்தவர் திரு தினேஸ் அவர்கள் [/size][size=2], [/size][size=2]அவர் ஆற்றுய பணியை நாம் நன்றியோடு பார்கின்றோம் . அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்தவர்கள் கூட அவரின் திறமையையும் நேர்மையையும் புகழ்வார்கள். அப்படி இருக்க அவர் நடாத்திய செளிச்சம் நிகழ்சியில் இன்று எமது கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள். அதற்கு அவர் இருட்டு என பெயரிடலாம். [/size]

[size=2]அமைச்சர் அவர்கள் தாம் ஆற்றும் பணிகள் மூலம் பிரபல்யமாக வேன்டுமே தவிர [/size][size=2], [/size][size=2]ஊடகத்தை கையகப்படுத்தி இன்னொருவரால் பிரபல்லமாக நிகழ்வுகளில் அமர்ந்துகொண்டு எமது மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதன் மூலம் பிரபல்யமாக முடியாதென்பது எனது முடிந்த முடிவு. இதுவே யதார்த்தமும் கூட. [/size]

[size=2]நாம் ஆயிரமாயிரம் தமிழரிரின் ஆன்மாவின் மீது பணியாற்று கின்றோம் . ஆயிரமாயிரம் தமிழரின் அவலத்திலும் கண்னீரிலும் பனியாற்றுகின்றோம் [/size]

[size=2]உண்மையில் எம‌து மனதில் தமிழீழம் இருக்கும் என்றால் [/size][size=2], [/size][size=2]எமது நிகழ்ச்சி நிரலிம் தமிழீழ மீட்பு இருக்கும் என்றால் நாம் அனைவரையும் நேர்மையான வழியில் அணி சேர்த்து இந்த நாடு கடந்த அரசை பலப்படுத்த வேண்டும்.[/size]

[size=2]மாறாக ஊடகமேறி மாவீரர் புகழ் பாடி [/size][size=2], [/size][size=2]போராளிகள் தியாகம் பாடி [/size][size=2], [/size][size=2]மக்களின் சோகம் பாடி எமது அரசியல் இருப்பை தக்க வைப்பது வரலாற்றுதுரோகம். இது ஒரு ஈன‌ப்பிழைப்பு.[/size]

[size=2]இதில் என்ன சோகம் என்றால் [/size][size=2], [/size][size=2]என்ன விலை கொடுத்தாவது தயாபரன் அவர்களை நாடு கடந்த அரசில் அமர்த்தி இருக்க வேண்டுமென எமது கெளரவ பிரதமர் அவர்கள் நினைக்கிறார் போலும். நடப்பு வழிக்கில் ஒப்பிடுவது என்றால் நித்தியானந்தாவின் பிடியில் சிக்கிய மதுரை ஆதீனம் போல் எமது பிரதமர் தவிக்கும் சோகத்தை நான் உணர்கின்றேன். [/size]

[size=2]கெளரவ அமைச்சர் தயாபரன் அவர்கள் இந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதும் அவரினால் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தொடர்ச்சியாக அவப்பெயரே ஏற்பட்டு வருகின்றது என்பதனையும் கருத்தில் கொண்டு அவ‌ரின் மீது நான் கொண்டு வரும் இந்த நம்பிக்கை இல்லா பிரேரனைக்கு அனைவரும் ஏக மனதாக ஆதரனைத் தெரிவித்து இந்த பிரேரனையை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.[/size]

நன்றி

ச.கவிராச்

வடகிழக்கு இலண்டன்

Edited by sathiri

என்ன கோதாரியப்பா.............. புலத்திலையும் பினாட்டு குடுக்கிறது வலு சிம்பிள் எண்டுறியள் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஆராம்பகாலத்தில் மிகவும் வரவேற்றுக் கருத்தெழுதியவர்களில் நானும்மொருவன். ஆனால் அதனது அண்மையகால நடவடிக்கைகள் சந்தேகங்களை உருவாக்கிவிட்டுள்ளது. மற்றது அதன் உறுப்பினர்களது விபரங்கள் மிகவும் சங்கடத்துக்குள்ளாக்குகிறது. உதாரணம், கடந்தகாலத்தில் சுவிசில் தரங்கெட்ட வேலைகளைச் செய்து தமிழர் விடுதலைக்கு எதிரியாக இப்போதும் இருப்பவரும் மகிந்தவுடன் தற்போதும் விசுவாசமாகவிருப்பவருமாகிய புலிக்குட்டி ரஞ்சனின் ஒரு சகோதரர் நாடுகடந்த தமிழீழ அரசின் இங்கிலாந்த்துக்கான பிரதிநிதி.

... ஐயகோ யாரை சொல்லி அழுவது!... பதில் சொல்ல வல்ல அதிகாரி அகரனை மேடைக்கு அழைக்கின்றோம் :icon_mrgreen:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஆராம்பகாலத்தில் மிகவும் வரவேற்றுக் கருத்தெழுதியவர்களில் நானும்மொருவன். ஆனால் அதனது அண்மையகால நடவடிக்கைகள் சந்தேகங்களை உருவாக்கிவிட்டுள்ளது.

... யாழில் கேபியின் அரைகுறை ஆங்கிலீசு நாகதஅ இற்கு வந்தவுடனேயே விசிலடிக்க தொடங்கிய முதல்வன் நான் என நினைக்கிறேன்! .. ஆனால் எப்ப நம்ம நாகதஅ பிரதமர் IBC தமிழில் அறிக்கையொன்றை வாசித்து, விளாச முற்பட்டாரோ ... அன்றே முழுக்கு போடத்தொடங்கியது ... வெறுத்து விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பு வழிக்கில் ஒப்பிடுவது என்றால் நித்தியானந்தாவின் பிடியில் சிக்கிய மதுரை ஆதீனம் போல் எமது பிரதமர் தவிக்கும் சோகத்தை நான் உணர்கின்றேன்.

உந்த அமைப்புக்களை விட்டுப்போட்டு இனிமேல் எங்கன்ட மனசாட்சிபடி நடக்கவேண்டும்....கெளரவம்,பிரபலம் இதுகளை அடையத்தான் உந்த அமைப்புக்கள் இருக்கு போல

உந்த அமைப்புக்களை விட்டுப்போட்டு இனிமேல் எங்கன்ட மனசாட்சிபடி நடக்கவேண்டும்....கெளரவம்,பிரபலம் இதுகளை அடையத்தான் உந்த அமைப்புக்கள் இருக்கு போல

புத்தன் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது.ஆனால் துரதிஸ்டவசமாக அந்தக் கோஸ்டிகளும் இதற்குள் உள்ளட்டு விட்டது, நல்லவர்கள் எமக்கேன் அரசியல் என்று ஒதுங்கிக் கொண்டதும் ஒரு காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது.ஆனால் துரதிஸ்டவசமாக அந்தக் கோஸ்டிகளும் இதற்குள் உள்ளட்டு விட்டது, நல்லவர்கள் எமக்கேன் அரசியல் என்று ஒதுங்கிக் கொண்டதும் ஒரு காரணம்..

mm...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது.ஆனால் துரதிஸ்டவசமாக அந்தக் கோஸ்டிகளும் இதற்குள் உள்ளட்டு விட்டது, நல்லவர்கள் எமக்கேன் அரசியல் என்று ஒதுங்கிக் கொண்டதும் ஒரு காரணம்..

அந்த உத்தமர்களை நல்லவர்களை கண்டு பிடிக்கவே நாம் போராட வேண்டும் போலகிடக்கு... நல்லவர்களை இனம்காண்பதுவே சங்கடமாய்யிருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியப்பா.............. புலத்திலையும் பினாட்டு குடுக்கிறது வலு சிம்பிள் எண்டுறியள் .

வாய்கை வைச்சு தண்ணியும் ஊத்தி விடுகினமாம் விழுங்கிறதுக்கு இலகுவாக :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமைப்புக்களை விட்டுப்போட்டு இனிமேல் எங்கன்ட மனசாட்சிபடி நடக்கவேண்டும்....கெளரவம்,பிரபலம் இதுகளை அடையத்தான் உந்த அமைப்புக்கள் இருக்கு போல

அதுதான் உண்மை

நாடு கடந்த அரசுக்கு காசு போட்டு எமது பகுதியில் தேர்தல் நடாத்தினோம். மக்கள் தேர்ந்தெடுக்காத யரோ ஒருவர் பின்னர் எமது பகுதியின் பிரதினிதியாக நியமிக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டோம்.

அதற்குள் இவர்களின் `அமைச்சர்` அமைச்சு என்று காகித அறிக்கைகள். நடக்கும் போராட்டங்களைக் குழப்புவது, ஊடகங்களில் குழப்பம் விழைவிப்பது. எந்த வித போராட்டங்களையோ வேலைத் திட்டங்களையோ செய்யாது, பிறர் செய்யும் வேலைத் திட்டங்களில் தலையைக் காட்டி விட்டு ஊடக அறிக்கை விடுவது. இது தான் நா க அரசின் நிலை இங்கிலாந்தில்.

மற்றைய நாடுகளிலும் இதே நிலமை தான் போல் உள்ளது.

இனி நா க அரசு என்று யாரவது எங்கள் பகுதிக்கு வந்தால் துடைப்பம் கட்டை யால் தான் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி கோபப்படதையுங்கோ அவைகள் முக்கிய அலுவல்களை பார்பதனான்லேயே வந்து பதில் சொல்ல இயலாமல் இருக்கு. வந்து சொல்லுவினம் விரைவில்

நாடு கடந்த அரசு கேபியினுடையதல்ல:இது உண்மையாக எமது தலைவர் மேதகு பிரபாகரனுடைய கனவு.கேபீக்கு கூட தனது நிலை தெரிந்தபடியால் தான் திரு உருத்திரகுமாரிடம் கையளித்துள்ளார்.ஏனெனில் வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டியிருக்கும்.இது கே பிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான் பொருந்தும்.உண்மையாகச்சொல்கிறேன் கேபி என்ன சதி செய்தாலும் நாடுகடந்த அரசு என்று ஒன்றை அறிவித்தபடியால் இன்று எவ்வளவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.அது போல கரி ஆனந்தசங்கரி அவருடன் பல சட்ட மாணவர்கள் கூட விடுப்பு எடுத்துவிட்டு தற்போது ஜெனிவாவில் தொண்டர்களாகவே பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.ஊடகம் என்பது பொது எந்த ஊடகம் செவ்வி கேட்டாலும் யாரும் செவ்வி கொடுக்கத்தான் வேண்டும்.அதற்காக அவர்கள் மீது வேறு சாயங்களை பூசாதீர்கள்.ஒருவர் தவறு செய்தால் பெயரை குறிப்பிட்டு கருத்து சொல்லி அவர் எந்த நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறாரோ அவர்களிடம் உங்கள் மனுவை சமர்பியுங்கள் (இங்கு சாத்திரி ஊடகத் தர்மத்துடன் நடந்துகொள்கிறார்)அவர்கூறிய விடயம் இருக்க மொத்தமாக நாடுகடந்த அரசு மீது சேறு பூசாதீர்கள்.ஆரம்பத்தில் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் போது சொந்த செலவில் தான் சேவையாற்ற வேண்டும் என்று கூறினார்கள்.சந்தர்பத்தை பல தரப்பும் பயன்படுத்தி கொண்டார்கள் முக்கியமான சிலரை உடனடியாக களை எடுத்தார்கள்.அதை பூதாகரமாக்கி வேறு ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.இப்போ எல்லாரையும் ஒன்றிணைக்கும் நேரத்தை வேறு வழியில் செலவழிக்காமல் நிலைமையை சமாளிப்போம்.இந்த நேரம் பொன்னானது.ஆகவே சிறு விடயங்களை பெரிதாக்காமல் ஒத்துழைப்புடன் செல்வோம் என்பது எனது கருத்து

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103815

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104164

[size=5]ஒரே கதை ஏன் பல்வேறு தலைப்புகளில் வெளிவருகிறது?

யாராவது பதிலளிக்கின்றீர்களா?[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயாபரன் அவர்கள் ஜி.ரி.வி யில் இருந்து விலகி விட்டதாக அறிந்தேன் அந்த தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அல்லது விபரம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

புல்லுருவிகளை இனம் காண்பதும் களை எடுப்பதும் மக்களின் கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.