Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் பிள்ளை என்றால்..............

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு விசுகு, நான் பல சகோதரிகளுடன் பழகிய படியால் அவர்களின் வேதனையை புரிந்து கொண்டேன்

நன்றி உடையார்

அதைப்புரிந்து கொண்டோமா என்பதே திரியின் நோக்கம்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் புரிதலுக்கும்.

(இடைக்கிடை யாழையும் எட்டிப்பார்க்கலாமே)

  • Replies 81
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கேட்க வெளிக்கிட்டால் எல்லாரும் அடிப்பீங்கள்..... வயிற்று வலி என்டால் பனடோல் இருக்கே பிறகென்ன கவலை.

போட்டால் ஒரு அரை மணித்தியாலத்தில் எல்லாம் போடும்.

அரை மணி நேரத்தில் எல்லாம் போய்விடும் என்று வைத்தியம் சொல்கிறது

சிறு ஆறுதல் கிடைக்கும் அவ்வளவுதான் என எனது அனுபவம் சொல்கிறது.

இனி வரும் கருத்தைப்பார்க்கலாம்.

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொன்னாலும் தன் பிள்ளை தன் பிள்ளை தான்.

மற்றவை பெற்ற பிள்ளைகளுக்கும் சொந்தப்பிள்ளைகளுக்கும்

இடையில் ஒரு இடைவெளி இருப்பது உண்மை.

மனைவியை மற்றான் பிள்ளை என நினைக்கவே சங்கடமாக இருக்கின்றது.

நான் எப்போதும் சொல்வது மனைவியையும் சேர்த்து எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் என்றுதான்.

விசுகு அண்ணா நீங்கள் தொட்ட விடையம் வரவேற்கத்தக்கது

நன்றி வாத்தியார்

நீங்கள் சொல்வது உண்மைதான்.

எனது வீட்டில் ஒரு செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்று மக்கள் கேட்பார்கள்.

அதற்குத்தான் 5 ஏற்கனவே இருக்கே என்பேன் நான். நீங்கள் குறிப்பிடும் நான்கு கணக்கும் இதுவும் ஒன்றே. சொற்கள் வேறாக இருந்தாலும்.

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும்.

வாழ்த்துக்கள்.

எனக்கு நிறையச் சகோதரிகள் என்றபடியால் அவர்களின் பிரச்சனை புரியும்.

வலிகளும் ஒருவருக்கொருவர் வேறுபடும்.

முன்பு வேலையில், நன்றாகப் பழகும் சக பெண் ஊழியர் சில நாட்கள் மாத்திரம் எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார். பின்புதான் தெரிந்தது, மாதவிலக்குக் காலங்களில் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று.

நன்றி தப்பிலி

அந்த நேரங்களில் வார்த்தைகளை அளந்து தான் போடுவேன்.

அவர் கொஞ்சம் எகிறினாலும் அரவணைத்து போவேன். காரணம் அவரது வலி என்பது தெரியும்.

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும்.

மனந்திறந்த வாழ்த்துக்கள் .

நன்றி தங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும்

(வாழ்த்துக்காக ஆரம்பிக்கவில்லை இதை.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறுகள் செய்வது மனிதன் இயல்பு, உங்கள் மனைவி இந்த பதிவை பார்த்தால் நிச்சயம் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு பெருகும்.

நன்றி kssson

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்கள் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழியில் துடிக்கும்போதும் ஆண்களுக்கு ஒருமுறையேனும் இந்தவலி வரவேண்டும் என எண்ணுவேன். ஆண்களின் எழுத்துக்களில் வலி இருந்தாலும் நேரே அனுபவிக்கும்போதுதான் உண்மையான வழியை உணரமுடியும். இரண்டாவது நாளில் மட்டுமாவது ஒரு வேலையும் செய்யவிடாது நாள் முழுவது ஓய்வு கொடுங்கள் உங்கள் மனைவியருக்கு என் கணவர் எனக்குத் தருவதுபோல.

நன்றி சகோதரி

இது பற்றி எனது மனைவி சொல்வார்

பெண்கள் தாம் பெண்கள் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்துவற்காகவே இந்த 3 நாட்களை கடவுள் ஒதுக்கியதாக.

ஆனாலும் அதன் வலியை நாம் உணர முடியாது(ஆண்கள்).

நன்றி சகோதரி

கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும். (முயற்சிக்கின்றேன். நான் 7 நாள் வேலைகாறன்)

நன்றி விசுகர். நல்ல விசயம் ஒண்டை தொட்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் நல்ல விடயத்தை எழுதியதற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதற்கு எப்படி பதில் எழுதுவது என்று தெரியவில்லை. முதலில் விசுவிற்கு நன்றிகள், சமூகத்தில் தொடரும் மூட நம்பிக்கைகளை வெளியில் கொண்டு வந்ததிற்கு. ஆனாலும் உங்கள் பாசத்தை அன்பை மெச்சுகிறேன். ஒரு சாரசரியான அப்பாவிலும் பல படி தாண்டி காரியம் செய்துள்ளீர்கள். பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று நோவை அடையாளம் காணும் கண்டு அதற்கு உங்களால் இயன்றதை, அதையும் உங்கள் வசதிகள் தண்டியும் செய்துள்ளிர்கள். உங்களுக்குரிய பெறுபேறும் நன்றாக இருந்துந்திருக்கும், இருந்திருக்க வேண்டுகிறேன்.

மாதவிடாயின் போது என்ன நடக்கிறது என்று பார்த்தல்; கருத்தரித்தலுக்கு தயாரான பெண் இனப்பெருக்க அங்கங்கள், அதை அழிவடைய செய்கின்றன- கருத்தரிந்தால் நிகழாததால். ஒரு உத்தரனத்திர்ற்கு, ஒரு வீடு கட்ட அத்திபாரம் வெட்டி கல்லு, மண் எல்லாம் குழைக்க தயாராகும் போது தண்ணீர் இல்லை என்று வந்தால். அந்த மண், கல் , வெட்டின அத்திவாரம் எல்லாம் அழிந்து போவது போல. அந்த அழிவு நடப்பது ஒரு பல படி செயல்முறை. அதுவும் ஒரு ஹார்ட் அட்டாக் போன்ற செயன் முறை. அந்த பகுதிக்கு உரிய இரத்த ஓட்டம், போசனை பொருட்கள் குறைந்து அந்த இடம்/ தயார் படுத்தபட்ட இடம் அழிவரையும். பொதுவாக இது பெரியளவில் வலி தருவதில்லை. - அதை உறனருவதர்ற்கு நரம்பு இல்லை- உதரனத்திற்க்கு வழமையாக எங்களுக்கு இதய அடிப்பு கேக்காத மாதிரி, அல்லது சாப்பாடு சமிபாடு அடைவது கேக்காது மாதிரி.

ஆனால் சிலருக்கு அதிகளவில் வலி இருக்கும், அதற்ற்குரிய காரணம் பல இருந்தாலும், அந்த நேரத்தில் சுரக்கும் புரச்டோகிலண்டின் என்னும் பதார்த்தங்களே பெருமலவிர்ற்கு காரணமாய் உள்ளது. ஆளுக்கு ஆள் வேறுபடுகிற "நோ சகிப்பு தன்மையும் " பெரியளவில் பங்கு வகிக்கிறது.

பொதுவாக "மூட்" மாறுதலே பலருக்கே ஏற்படும், அதே நேரத்தில் இந்த வயிற்று வலியும் வருவது உண்டு.

சிகிச்சை என்று பார்த்தால்;

முதலில் அறிகுறிக்குரிய சிகிச்சையே செய்வார்கள்; காச்சலுக்கு வீட்டில் பனடோல் எடுப்பது போல, யாரோ பதிந்தது படி யாழ் அசுப்பதிரில் பனடோல்தான் தருவார்கள் என்றால், அதுதான் முதல் படி. சவூதி அரச வைத்தியசாலையிலும் அதுதான் செய்வார்கள்- அவர்கள் ஒரு வைத்தியராக இருந்ததால்.

தொடர்ந்து இருந்தால் OCP எனப்படும் குளிகைகள் தருவார்கள். அது சிலகாலதிர்ற்கு உடம்பு தானே சுரக்கும் சுரப்புகளை நிறுத்தி ஒரு சீரான அளவில் தேவையான, தேவையான ஓமன்களை தரும். மழை ஒழுங்கில்லை என்றால் வீடுக்க கொண்டுவந்து ஒவ்வொருநாளும் செடிகளுக்கு அளவான தண்ணீர் உத்துவது போல...

அதற்க்கு சரிவரவில்லை என்றால் - சில்வளைகளில் அதற்கு முன்னரே இந்த வலி வரதிர்ற்கு வேறு ஏதாவது கரணம் உண்ட என்று பார்ப்பார்கள்

இதில் ஒன்று போன்சன்ட் என்கிற குளிசை, அது ஒரு அண்டி பயோடிக் இல்லை. அட்வில்/ மொத்ரின்/ புருபன் - NSAID - போன்ற NSAID வகையிலான குளிசை, அது உந்த வலிக்கு மற்றதை விட நன்றாக வேலை செய்கிறது

மற்றது இந்தகைய வலி நிவாரநிகளுக்கு கட்டுபடாவிடால், மற்றைய வகை வலி நிவாரணிகளை பாவிக்கலாம்.

இதில், மதுபானம் பாவிப்பது பற்றி; எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இதே மாதிரி ஒரு வழக்கம் கற்பவதிக்கி பிள்ளை பிறந்த பிறகு கொடுக்கிற வழக்கம் உண்டு. அதனால் பல கொடுத்தல்கள் உண்டு,

நான் சொல்லுவேன் உங்கள் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை இருந்தால் வைத்தியரிடம் கூடிச்செல்லுங்கள். வைன், பிராண்டி வாங்கி குடியுங்கள் ஆனால் அது மாதவியால் வருகிற வலிக்கல்ல.

நன்றி வொல்கனோ

நான் வாங்கி வந்த பொருட்களை முழுவதுமாக இங்கு எழுதவில்லை.

(முட்டை முதல் முதலாக சந்தைக்குப்போய் வளர்ப்புக்கோழி முட்டையும் வாங்கினேன்.)

இந்த திரியில் இருபகுதியையும் அந்த தலைப்பு குறிக்கும்.

அதே நேரம் அவரது அந்தக்கேள்வியில்

அந்த வலியை நான் உணர்ந்திருக்கின்றேன் அது தன் பிள்ளையையும் தொடக்கூடாது என்பதை உணர்ந்தே துடிக்கின்றேன் என்பதை அவர் புரிந்துவிட்டார் என்பதும் அடக்கம்.

நன்றி

தங்கள் நீண்டநேரத்திற்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தை மீள பெற்றுக்கொள்கிறேன். :lol:

வாழ்த்தை மீளப்பெறுவது தங்களுக்கு அழகல்ல சாத்திரி.

இந்த சாழ்த்துக்கள் தொடர்ந்து வந்துவிடும்.

அது திரியை திசை திருப்பிவிடும் என்பதால்தான் அதை தவிர்க்க கேட்டேன். உங்களிடம் தானே உரிமையோடு கேட்கமுடியும்.

நன்றி நேரத்திற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் அதை எழுதியதால் எத்தனை பேர் இதுவரை தாம் தெரியாமல் விட்ட பிழைகளை இனி திருத்திக்கொள்ள முயற்சிக்கவிருக்கிறார்கள் என்பதை இந்த திரியிலேயே நீங்கள் பார்க்கலாம்.

விசுகு அண்ணாவின் நோக்கம் நிறைவேறி விட்டது.....

இப்படி பலர் வந்து நக்கலடிப்பார்கள் என்று தெரிந்தும் துணிச்சலுடன் இந்த பதிவைப்போட்ட விசுகு அண்ணாவுக்கு மீண்டும் பாராட்டுகள்....

நிச்சயமாக

100 வீதம்

நன்றி.

விசுகண்ணா நன்றாக எழுதியுள்ளார்.

அலைமகள் கூறுவது போல் திரி அளவுக்கதிகமான கவனத்தைப்பெற்றுவிட்டது என்பது உண்மை. அதில் யாழின் "காஞ்ச மாடு கம்பிலை விழும் குணம்" என்பதிலும் பார்க்க விசுகண்ணாவின் கவர்ச்சிகரமான எழுத்து மீதுவிழும் பழிதான் கூட. அதுதான் நோக்கம் என்று விசுகண்ணையும் சிலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதை நிச்சயமாக நொய்த இடத்தை ஊதிப்பெருப்பித்து பெயர் வாங்க எழுதியதாக வர்ணிக்க முடியாது.

இரண்டு கரையில் விடையத்தை விசுகண்ணா பரவிட்டிருக்கிறார். நோ சம்பந்தாமான மருத்துவதேவை. மற்றயது வீட்டிலே அன்புக்கான தேவை.

நோ ஏற்கனவே அறியப்பட்டதென்பதும், சித்த வைத்தியங்கள் கூட இதை கையாள முயன்றிருப்பதும், கீழைத்தேசங்களில் அத்தகைய அறிவு வழமையில் பிள்ளைக்கு தாய் வழி அறிவாக கையளிக்கப்பட்டு வந்திருப்பதால் கீழை நாடுகளின் ஆண்கள் அதிகம் அக்கறை காட்டாமல் வளர்ந்திருக்கலாம் என்பதும் உண்மை. தெரிய வர குறைகள் தீர்ந்துவிடும்.

மருத்துவக் கண்ணுடன், நோவை பற்றி வொல்கனோ எழுதியிருந்தார். வழமையில் மருத்துவ தலைப்புகளை விரிவாக விவாதிக்க விரும்பும் நெடுக்கர் ஒதுங்கி இருந்துவிட்டார். ஏமாற்றம். :(

அன்பின் தேவையை நாம் எழுத்தில் கவர்ச்சியை இணைத்து கண்மூடிதனங்களுக்கூடாக நடத்தி செல்கிறோமா என்பது பகுத்தறிவு. "அன்பு" "பாசம்" என்று இரண்டு தமிழ் சொற்களுக்கு புது அகாராதி எழுதி மனைவிமீது பாசமும் பிள்ளை மீது அன்பும் வைக்கத் தேவையில்லை என்று தத்துவ விசாரணை செய்கிறோம். பேசி செய்யும் திருமணங்களில் வீடுவரும் பெண் தோடையில் ஒட்டிவிட்ட நாரத்தையாக இருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அன்பின் தேவையையும் செல்லத்தின் (too much petting) தேவையாக படியிறக்கம் ஏற்படாமல் தவிர்க்கப்படவேண்டும். இதனால் பிள்ளைக்கும் தாயிற்கும் இடையில் செயற்கையாக போட்டி ஒன்று பற்ற வைக்கப்படுகிறது. தான் புல்லு மேய சோம்பேறியாக இருந்த பசுமாடு கட்டிவைக்கப்பட்டிருந்த கன்றீன்ற மாட்டில் பால் குடித்ததுண்டு. அதற்கு தான் யார் என்ற விளக்கம் இருக்கவில்லை.

கன்று அழும்போது பசுவின் மடியில் பால் சுரக்கிறது. இது இறைவனின் படைப்பின் அதிசயமாயினும், பரிணாம வளர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட கூர்ப்பாயினும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு. இயற்கையின் மற்றைய தனித்துவங்கள் போலவே இதுவும் தனித்துவமானது. இதை இன்னொன்றுடன் " வண்டில் சவாரி போட்டிக்கு" நுகத்தில் இழுத்து மாட்டுவது மற்றைய இயற்கை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சமமானது. அதைவிட தீயை வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி ஆகாதா திருமணத்தில் வந்த உறவாயினும் இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளவது மனதின் முதிர்ச்சியே. வெறும் விலாசமாக கருதப்பட்டு கருத்தெழுதப்படும் அரிச்சுன்னின் "வெளிப்படை (transparency)"யில் இதுவும் ஒரு பாகமே.

விசுகண்ணா தனது மாமாவை குறைந்தது ஒருமுறையாவது இதன் பின்னரும் சந்திப்பது நல்லது. மாமா தனது மகளுக்கு சில குறைகள் விட்டு வைத்திருந்திருக்கலாம். ("உங்கடை மாமாவும் உப்பிடித்தான் அந்தரப்படுகிறவர்" என்ற வசனத்தை படிப்பிக்க மறந்திருந்திருக்கலாம்) திறந்த மனத்துடனான கருத்துப் பரிமாற்றத்தால் குடும்பத்தில் இருக்கும் அன்புக்கும் பாசத்திற்குமிடயிலான மனப் போட்டி, போராக வெடிக்க முன்னர் தடுத்துவிடலாம். :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணா நன்றாக எழுதியுள்ளார்.

இரண்டு கரையில் விடையத்தை விசுகண்ணா பரவிட்டிருக்கிறார். நோ சம்பந்தாமான மருத்துவதேவை. மற்றயது வீட்டிலே அன்புக்கான தேவை.

மருத்துவக் கண்ணுடன், நோவை பற்றி வொல்கனோ எழுதியிருந்தார். வழமையில் மருத்துவ தலைப்புகளை விரிவாக விவாதிக்க விரும்பும் நெடுக்கர் ஒதுங்கி இருந்துவிட்டார். ஏமாற்றம். :(

அன்பின் தேவையை நாம் எழுத்தில் கவர்ச்சியை இணைத்து கண்மூடிதனங்களுக்கூடாக நடத்தி செல்கிறோமா என்பது பகுத்தறிவு. "அன்பு" "பாசம்" என்று இரண்டு தமிழ் சொற்களுக்கு புது அகாராதி எழுதி மனைவிமீது பாசமும் பிள்ளை மீது அன்பும் வைக்கத் தேவையில்லை என்று தத்துவ விசாரணை செய்கிறோம்.

சமமானது. அதைவிட தீயை வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி ஆகாதா திருமணத்தில் வந்த உறவாயினும் இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளவது மனதின் முதிர்ச்சியே.

விசுகண்ணா தனது மாமாவை குறைந்தது ஒருமுறையாவது இதன் பின்னரும் சந்திப்பது நல்லது. மாமா தனது மகளுக்கு சில குறைகள் விட்டு வைத்திருந்திருக்கலாம். ("உங்கடை மாமாவும் உப்பிடித்தான் அந்தரப்படுகிறவர்" என்ற வசனத்தை படிப்பிக்க மறந்திருந்திருக்கலாம்) திறந்த மனத்துடனான கருத்துப் பரிமாற்றத்தால் குடும்பத்தில் இருக்கும் அன்புக்கும் பாசத்திற்குமிடயிலான மனப் போட்டி, போராக வெடிக்க முன்னர் தடுத்துவிடலாம். :D

ஆழமாக யோசித்துள்ளீர்கள்

நான் இதை ஒரு கதையாகத்தான் எழுதத்தொடங்கினேன். ஆனால் ஒரு 3 நிமிடம் எழுதிய பின் வாசித்தப்பார்த்ததில் சொல்ல வேண்டிய அனைத்தும் வந்திருந்தது தெரிந்தது. உடனேயே அனுப்பிவிட்டேன். சிறு குறிப்பாக இருந்து நான் விபரிக்காமல் விட்ட அனைத்தையும் படிப்படியாக விபரித்துள்ளீர்கள்.

மருத்துவதேவை

அன்பு

ஆண்களின்கவலையீனம்

புகுந்தவீடு

இவையே நான் எடுத்துக்கொண்டவை.

அதனால்தான் இத்திரி எல்லோராலும் கவரப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரையும் தட்டி எதையோ அது உணர்த்தியுள்ளது. அதுவே இத்திரியின் வெற்றி.

நன்றி தங்கள் ஆழமான கருத்துக்கும் நேரத்திற்கும்...

(மனைவி சொன்னார் தனது தகப்பனார் தன் மீது கொஞ்சம் அதிக பாசமாக இருப்பாராம். காரணம் தனக்கே வீட்டில் <4 பெண் பிள்ளைகளில்> இந்த வலி வருவதனால்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகர். நல்ல விசயம் ஒண்டை தொட்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் நல்ல விடயத்தை எழுதியதற்கு.

நன்றி

தங்களது நேரத்திற்கும் கருத்துக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகர்....நல்ல ஒரு பதிவை தந்தமைக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

மற்றும்படி.. இதை ஒரு சென்ரிமெண்ட் விசயமா பார்க்கிறது.. எங்கட சமூகத்தில.. ஆண்களுக்கு இயற்கையும் உயிரியலும் பற்றி புரிதல் குறைவா இருப்பது காரணமோ தெரியல்ல.

மேலும்.. மனைவிக்கு மட்டுமென்றில்ல.. எந்த ஒரு மனிதனுக்கும் உதவியோ.. அரவணைப்பபோ தேவைன்னா அதை வழங்கிற மனிதாபிமான உணர்வு.. இருப்பது.. அவசியம். அது எங்கட சமூகத்தில குறைவு..! உதவி செய்யப் போனாலும்.. இவன் ஏன் வலிய வந்து உதவிறான்.. ஏதும் உள் நோக்கம் இருக்குமோ என்று சதா சந்தேகத்தை முன்னிலைப்படுத்தும் நம்மவர் முன் மனிதாபிமானம் கூட சாகடிக்கவே செய்யப்படுகிறது..!

நம்மவர்கள் திருந்தனும்.. நிறையவே..!

மேலும்.. வயிற்று வலி வந்தா... பெயின் கில்லரைப் போட்டிட்டு.. வைத்தியரை நாடுங்கள். கணவரோ.. அப்பாவே பக்கத்தில குந்தி இருந்தாப் போல வயிற்று வலி போகாது..! அதற்காக பொதுவான கவனிப்பையும் அரவணைப்பையும் ஆண்கள் வழங்கக் கூடாது என்பதல்ல அர்த்தம்..! அது மனைவி.. பிள்ளை என்று பார்க்காது..சக நெருங்கிய மனிதன் என்ற வகையில் அமைவது இயல்பு..! அமையனும்..! இல்லைன்னா நீங்க மனிதன் இல்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

(மனைவி சொன்னார் தனது தகப்பனார் தன் மீது கொஞ்சம் அதிக பாசமாக இருப்பாராம். காரணம் தனக்கே வீட்டில் <4 பெண் பிள்ளைகளில்> இந்த வலி வருவதனால்)

எதிர்பார்த்த பதில். அதனால்த்தான் அப்படி கிண்டல் பண்ணியிருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

மற்றும்படி.. இதை ஒரு சென்ரிமெண்ட் விசயமா பார்க்கிறது.. எங்கட சமூகத்தில.. ஆண்களுக்கு இயற்கையும் உயிரியலும் பற்றி புரிதல் குறைவா இருப்பது காரணமோ தெரியல்ல.

மேலும்.. மனைவிக்கு மட்டுமென்றில்ல.. எந்த ஒரு மனிதனுக்கும் உதவியோ.. அரவணைப்பபோ தேவைன்னா அதை வழங்கிற மனிதாபிமான உணர்வு.. இருப்பது.. அவசியம். அது எங்கட சமூகத்தில குறைவு..! உதவி செய்யப் போனாலும்.. இவன் ஏன் வலிய வந்து உதவிறான்.. ஏதும் உள் நோக்கம் இருக்குமோ என்று சதா சந்தேகத்தை முன்னிலைப்படுத்தும் நம்மவர் முன் மனிதாபிமானம் கூட சாகடிக்கவே செய்யப்படுகிறது..!

நம்மவர்கள் திருந்தனும்.. நிறையவே..!

மேலும்.. வயிற்று வலி வந்தா... பெயின் கில்லரைப் போட்டிட்டு.. வைத்தியரை நாடுங்கள். கணவரோ.. அப்பாவே பக்கத்தில குந்தி இருந்தாப் போல வயிற்று வலி போகாது..! அதற்காக பொதுவான கவனிப்பையும் அரவணைப்பையும் ஆண்கள் வழங்கக் கூடாது என்பதல்ல அர்த்தம்..! அது மனைவி.. பிள்ளை என்று பார்க்காது..சக நெருங்கிய மனிதன் என்ற வகையில் அமைவது இயல்பு..! அமையனும்..! இல்லைன்னா நீங்க மனிதன் இல்லை..! :):icon_idea:

இந்த மனிதாபிமானம் அடுத்த தலைமுறையினரிடம் ஒரளவு வந்துகொண்டிருக்கிறது...எங்கட தலைமுறை கொஞ்சம் கஸ்டம்தான் ..

  • கருத்துக்கள உறவுகள்

புருஷன்: இஞ்சாரும் பசிக்குது என்ன சாப்பாடு ?

மனைவி:பான் இருக்கு பிரிட்ஜில் பழைய கறியும் இருக்கு போட்டு சாப்பிடுங்கோ ....

புருஷன்:என்னப்பா ஒவ்வொருநாளும் பானே?

மனைவி: எனக்கு பஞ்சியாக இருக்கு ...எதாவது பார்த்து சாப்பிடுங்கோ....

மகன் :அம்மா பசிக்குது என்ன சாப்பாடு?

அம்மா: 2நிமிசம் இருடா புட்டு அவிச்சு முட்டை பொறிச்சு சம்பலும் செய்து தாரன்....

புருஷன்: என்ட அம்மா எனக்கும் இப்படி செய்தவ!!!!!!பெடிப்பயளும் இப்ப அம்மாவிட்ட நல்ல சாப்பிடட்டும் கலியாணத்திற்க்கு பின்பு உனக்கு பான் தான்டா ராசா!!!!!

விசுகர் உங்களின் பதிவில் இதை இடுவதற்க்கு மன்னிக்கவும் ...சும்மா எழுதியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

புருஷன்: இஞ்சாரும் பசிக்குது என்ன சாப்பாடு ?

மனைவி:பான் இருக்கு பிரிட்ஜில் பழைய கறியும் இருக்கு போட்டு சாப்பிடுங்கோ ....

புருஷன்:என்னப்பா ஒவ்வொருநாளும் பானே?

மனைவி: எனக்கு பஞ்சியாக இருக்கு ...எதாவது பார்த்து சாப்பிடுங்கோ....

மகன் :அம்மா பசிக்குது என்ன சாப்பாடு?

அம்மா: 2நிமிசம் இருடா புட்டு அவிச்சு முட்டை பொறிச்சு சம்பலும் செய்து தாரன்....

புருஷன்: என்ட அம்மா எனக்கும் இப்படி செய்தவ!!!!!!பெடிப்பயளும் இப்ப அம்மாவிட்ட நல்ல சாப்பிடட்டும் கலியாணத்திற்க்கு பின்பு உனக்கு பான் தான்டா ராசா!!!!!

விசுகர் உங்களின் பதிவில் இதை இடுவதற்க்கு மன்னிக்கவும் ...சும்மா எழுதியுள்ளேன்

புத்து இதுவும் இன்றைய தலைமுறை கணவன்மாருக்குத் தான் பொருந்தும். புதிய தலைமுறை பெரும்பாலும் பெண்களில் உணவுக்கோ.. பிற அத்தியாவசிய தேவைகளுக்கோ தங்கி இருப்பதில்லை.

இன்றைய தலைமுறை.. காய் டாலிங்.. என்று ஒரு கிஸ் அடிச்சிட்டு.. கிச்சினில.. போய்.. தாங்களே தங்களுக்கு விரும்பினதை சமைச்சு சாப்பிட்டு.. (கூடிய அளவு ஓவன் தான்... அவர்களுக்கு உதவி..) மீண்டும் அறைக்குள்ள போற வழில.. அடுத்த கிஸ் அடிச்சிட்டு.. தங்க வேலையை கவனிக்க போயிடுவாங்க..!

அதேபோல்.. பெண்களையும் தங்களில் தங்கி இருக்க அனுமதிப்பதில்லை..! இந்த தங்கி இருப்பு ஆண்களை சோம்பேறி ஆக்குவதோடு.. பெண்கள் அதிக செல்வாக்குச் செய்யவும் தூண்டுகிறது..! ஆண்களின் சுய வாழ்வுக்கான சுதந்திரத்தையும் பறித்துப் போடுகிறது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

மற்றும்படி.. இதை ஒரு சென்ரிமெண்ட் விசயமா பார்க்கிறது.. எங்கட சமூகத்தில.. ஆண்களுக்கு இயற்கையும் உயிரியலும் பற்றி புரிதல் குறைவா இருப்பது காரணமோ தெரியல்ல.

மேலும்.. மனைவிக்கு மட்டுமென்றில்ல.. எந்த ஒரு மனிதனுக்கும் உதவியோ.. அரவணைப்பபோ தேவைன்னா அதை வழங்கிற மனிதாபிமான உணர்வு.. இருப்பது.. அவசியம். அது எங்கட சமூகத்தில குறைவு..! உதவி செய்யப் போனாலும்.. இவன் ஏன் வலிய வந்து உதவிறான்.. ஏதும் உள் நோக்கம் இருக்குமோ என்று சதா சந்தேகத்தை முன்னிலைப்படுத்தும் நம்மவர் முன் மனிதாபிமானம் கூட சாகடிக்கவே செய்யப்படுகிறது..!

நம்மவர்கள் திருந்தனும்.. நிறையவே..!

மேலும்.. வயிற்று வலி வந்தா... பெயின் கில்லரைப் போட்டிட்டு.. வைத்தியரை நாடுங்கள். கணவரோ.. அப்பாவே பக்கத்தில குந்தி இருந்தாப் போல வயிற்று வலி போகாது..! அதற்காக பொதுவான கவனிப்பையும் அரவணைப்பையும் ஆண்கள் வழங்கக் கூடாது என்பதல்ல அர்த்தம்..! அது மனைவி.. பிள்ளை என்று பார்க்காது..சக நெருங்கிய மனிதன் என்ற வகையில் அமைவது இயல்பு..! அமையனும்..! இல்லைன்னா நீங்க மனிதன் இல்லை..! :):icon_idea:

இந்த விடயத்தில் நாமிருவரும் இரு துருவங்கள் ராசா

விரிவாக எழுதணும்

நாளை எழுதுகின்றேன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நாமிருவரும் இரு துருவங்கள் ராசா

விரிவாக எழுதணும்

நாளை எழுதுகின்றேன் :icon_idea:

உங்கள் விரிவான கருத்தை இது விடயத்தில்.. வரவேற்க காத்திருக்கிறேன். ஆனால் அதனை ஏற்றுக் கொள்வது அது கொண்டுள்ள சாரம்சத்தில் தான் உள்ளது..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

புத்து இதுவும் இன்றைய தலைமுறை கணவன்மாருக்குத் தான் பொருந்தும். புதிய தலைமுறை பெரும்பாலும் பெண்களில் உணவுக்கோ.. பிற அத்தியாவசிய தேவைகளுக்கோ தங்கி இருப்பதில்லை.

இன்றைய தலைமுறை.. காய் டாலிங்.. என்று ஒரு கிஸ் அடிச்சிட்டு.. கிச்சினில.. போய்.. தாங்களே தங்களுக்கு விரும்பினதை சமைச்சு சாப்பிட்டு.. (கூடிய அளவு ஓவன் தான்... அவர்களுக்கு உதவி..) மீண்டும் அறைக்குள்ள போற வழில.. அடுத்த கிஸ் அடிச்சிட்டு.. தங்க வேலையை கவனிக்க போயிடுவாங்க..!

அதேபோல்.. பெண்களையும் தங்களில் தங்கி இருக்க அனுமதிப்பதில்லை..! இந்த தங்கி இருப்பு ஆண்களை சோம்பேறி ஆக்குவதோடு.. பெண்கள் அதிக செல்வாக்குச் செய்யவும் தூண்டுகிறது..! ஆண்களின் சுய வாழ்வுக்கான சுதந்திரத்தையும் பறித்துப் போடுகிறது..! :icon_idea::)

உடன்படுகிறேன்...ஆனாலும் இந்த தலைமுறையினரின் செல்வாக்கு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் இரண்டு தலைமுறை போனபின்பு சில வேளை நடக்கலாம்!!!!நடக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தனியாட்களுக்கு இயற்கையா வாற பிரச்சனைகளுக்கு அவை அவை தான் முகம் கொடுக்கனும். உங்களுக்கு காய்ச்சலின்னா.. உங்க மனைவியா மருந்து குடிக்கிறாங்க..! இல்லையே..!

:icon_idea:

உங்களுக்கு தலைவலி வந்தால் நீங்கள் மருந்து குடிக்கலாம்.

இடுப்புக்கு கிழே வலி வந்தால் யார் மருந்து குடிக்கிறது?

என்ன மாப்ளே எல்லாம் மறந்துட்டு பேசுறீகள்? கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா என்னவாகி போகபோகுது?

எல்லாம் ஒரு முதலீடுதானே மாப்ளே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் நாமிருவரும் இரு துருவங்கள் ராசா

விரிவாக எழுதணும்

நாளை எழுதுகின்றேன் :icon_idea:

எழுதுங்கள் விசுகர்! வரவேற்கின்றேன். :)

உங்களுக்கு தலைவலி வந்தால் நீங்கள் மருந்து குடிக்கலாம்.

இடுப்புக்கு கிழே வலி வந்தால் யார் மருந்து குடிக்கிறது?

என்ன மாப்ளே எல்லாம் மறந்துட்டு பேசுறீகள்? கொஞ்சம் ஒத்தாசையா இருந்தா என்னவாகி போகபோகுது?

எல்லாம் ஒரு முதலீடுதானே மாப்ளே?

நெடுக்கர் தன்ரை காச்சலை பற்றி கதைக்கவில்லை. வேறு யாராருக்காவது வாற வருத்தத்திற்கு தான் மருந்து குடிக்க தயாராக இல்லை. நேருக்கு நேராய் சொல்லிவிட்டார் தானே :lol: !

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனிசியை கலியாணம் கட்ட முதலே நான் சொல்லி விட்டேன், உனது அம்மா அப்பா வேறு, நான் வேறு எண்டு. அது மட்டுமல்ல உனது அம்மா அப்பா போல என்னால் உன்னை கவனிக்க முடியாது என்றும் கூறியிருந்தேன். பெற்றோரின் அன்பை, கவனிப்பை யாராலும் எவளவு செய்தாலும் பிரதியீடு செய்ய முடியாது. நவீன உலகத்தில் இருவரும் தமது துறைகளில் வேலை செய்யும் போது, வேலை சம்பந்தமான மேட்படிப்புக்கள் இருக்கும் போது இவ்வாறாக இருத்தி வச்சு கவனிப்பது கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.