Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

//2006 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதிகளும் எந்த இடத்தை தாக்கினால் எதிரிகளை விரட்டலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்த போது- பால்ராஜ் அவர்கள், மணலாற்றின் ஊடாக கிழக்கு மாகாணம் நோக்கி நாம் தாக்குதலை மேற்கொண்டால் அது வெற்றி அளித்தால்- பெருமளவிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவார்கள் என்றார். அப்போது, இல்லை யாழ்ப்பாணம் நோக்கி படை நகர்த்தி- யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டால்- அங்குள்ள மக்களிடம் வரி அறவிடுவதோடு இளைஞர்களும் எமது அமைப்பில் இணைவார்கள் என்றாராம் சு.ப.தமிழ்ச்செல்வன்.//

மேலே நிர்மலன் எழுதிய விடயங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இவரைப் போலவே பொயட் எழுதும் விடயங்களுக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இல்லாத கருத்துக்களை அகற்றும் மட்டுறுதினர்கள் இத்தகைய பதிவுகளை அகற்றாமல் விட்டிருப்பது எதனால்?

யாழ்க் களத்தின் தற்போதைய நிர்வாகம் என்ன பாதையில் செல்கிறது?

சு ப மக்களிடம் வரி விதிக்கலாம் என்று நிர்மலன் எழுதி இருக்கிறார், இதனை இவருக்குச் சொன்னவர் யார்? அவர் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் என்ன.இறந்த மாவீரருக்கு யாழ்க் களமும் சேர்ந்து இவ்வாறான அவதூறுகளைச் செய்ய ஏன் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது? இதனை அகற்றாமல் விடுவதன் மூலம் , இது உண்மையான செய்து என யாழ்க் களம் அங்கீகரிக்கிறதா?

பொயட் முன்னர் ஒரு திரியில் எழுதியதற்கு முரணாக எழுதிய போது அதனை நான் மீழ எழுதிய போது அது ஆதாரம் அற்ற அவதூறு எனச் சொல்லப்பட்டு அகற்றப்பட்டது. ஒருவர் மாவீரரானவர்காஇ சம்பந்தப்படுத்தி தனது அனுபவத்தை எழுதும் போது அதில் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்ட எழுதுபவர் முன்னர் எழுதிய விடய்ங்களை எழுதினால் அது அவதூறு எனச் சொல்லப்பட்டு அகற்றப்படுகிறது.

இதன் மூலம் யாழ்க் களம் அவதூறுகளையும் பொய்களையும் புனையும் சிலரை எந்தவித தடங்கலும் இன்றி பொய்களை வரலாறாக எழுத இடமழிக்கிறது. இதனை தற்போதைய நிர்வாகம் தெளிவாக்க வேண்டும். யாழ்க் களம் தேசிய விடுதலை சார்ந்த களமாக இருந்தது, இனி அவ்வாறு அல்ல என்றால் பரவாயில்லை. எனது நேரத்தை இங்கே வீணாக்க விரும்பவில்லை.

மேலும் நிர்மலன் மேலே எழுதி கருத்து உண்மை என்றாக எடுத்துக்கொண்டால், பால் ராச்சின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்பதற்க்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. புலிகள் அமெரிக்கா இந்தியா முதலாய சக்திகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டார்கள். சமாதான காலத்தில் சிறிலங்கா கடற்படை பலப்படுத்தப்பட்டது ஆயுதங்கள் பயிற்ச்சிகள் வழங்கின. இவை எல்லவற்றியும் செய்து விட்டு எரிக் சொல்கையும் கருணானிதியைப் போல் முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிரார்கள்.

இவர்களை நியாயப்படுத்தும் நிர்மலன், பொயட் போன்றோர் தமிழர்களால் இனம் காணப்பட வேண்டும்.அவர்களின் வரலாற்றுத் திரிபுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான ஒரு தலையங்கத்தில், 3000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட- அதில் என்னால் எத்தனை தடவை என்று தெரியவில்லை, ஒரு திரிக்கு கருத்து எழுதாமல் இருக்க கூடாது.

நேற்று ஒருநாளும் இல்லாமல், ஒரு எழுத்தாளர் ஒருவரின் புத்தக வெளியீடு/ அது பற்றிய கூட்டத்திர்ற்கு போனான். ஆபிரகாம் வாகீஸ், இந்திய மலையாள, பரம்பரை உடைய அமெரிக்கர். அவரது உரை முடிந்தான் பின் ஒருவர் கேட்டார், ஏன் இந்தகைய ஒரு பாத்திரத்தை எடுத்தனீங்கள் என்று. அவர் சொன்னார், அதுக்கென்று சில காரணங்கள் உண்டு, அதையும் சொன்னார், பிறகு மேலும் சொன்னார் அந்த பாத்திரைதை நீங்கள்/ வாசகர்கள் , ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் உருவகப்படுத்துவார்கள், அந்த இராண்டும் சேர்ந்ததே அந்த பார்த்திரம். அத்தகைய பாத்திர அமைப்பை, இன்னுமொருவர் படமாக்கும் பொது, சிலவேளைகளில் அவர் உருவகப்படுத்துவது வேறுபடுவதால் தான் சில / பல சந்தர்பங்களில் மிகவும் பிரசித்தமான நாவல்களும் தோல்வியில் முடிவதாக.

இங்கே பிரபாகரன், விடுதலை புலிகள் பற்றி பலரும் பல விதமாக உருவாகித்துள்ளர்கள்-அந்த உருவாக்கம், சில உண்மைகளை வெளிவர தடையாக இருக்குமானால், அவர்கள் அந்த உருவகத்தில் இருந்து வெளிவர வேண்டும் சரி பிழைக்கு மேல். அந்த உருவத்தில் இருந்து மீளுவது என்பது கடினானான காரியமே. ஆனால் அதற்காக இன்னுமொருவர் சொல்லும் செய்திகளை, தகவல்களை தவறு என்று சொல்லுவது சரியல்ல.

சொல்கேம் அக இருந்தால் என்ன போயட் ஆக இருத்தல் என்ன, சொல்லும் சேதிகள் உண்மை/பொய் என்பதர்ற்கு மேல், அதை விளங்கிக்கொள்ளவது எங்கள் வேலை. ஆனால் பேர் குற்ற விசாரணை வேண்டும், என்று சொல்லும் நாங்கள், அதற்கு முன் இருந்த கள நிலவரத்தை, அன்றைய நேரத்தில் பல தரப்பினருடரும் தொடர்பில் இருந்தவர்கள் சொல்லும் போது, உரிய வகையில் உறவுகளை பேணிக்கொண்டு, மேலதிக தகவல்களை பெறுவது அவர்கள் உடன் முரண்பட்டு உறவுகளை முறிப்பதிலும் நன்மையானது.

3 வருடங்கள் கடந்த பின்பும், என்ன நடத்து என்று தெரியாமல் இருப்பது இனத்தின் மீள முடியாத தோல்விக்கே வழி வகுக்கும்.

இறுதியாக பொயட், நீங்கள் இத்தகைய இராஜீக உறவு வைத்திருந்த ஒருவர் என்று தெரியாமல், சில நேரங்களில் சில நாகரீகமற்ற கேள்விகளையும்/மேற்கோள்களையும் கேட்டுள்ளேன். அதற்காக- சக உறவாக மன்னித்து, உங்களுக்கு தெரிந்த சேதிகளை சொல்லுங்கள். உங்களை போல் இணைந்து செயற்படவர்களினதும் செய்திகளையும்/ அவர்களினது தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடிப்படையிலே மற்றவர்களை குறை காணுகிற, தன் இனத்தை சபிக்கிற குணம் படைத்த இனம் இன்னும் நாலொரு பக்கமாக அழிந்து பிரிந்து செல்லுகிறது. ஆனால் இதில் இருந்து மீளாது என்று எண்ணாமல், உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். அதிகமாக யாரும் உங்களை காயபடுத்தினால்- விலகி சென்று, மற்றவர்களுக்காக வாருங்கள்.

அர்ஜுன், உங்களுக்கு வித்தியாதரனுடன், தொடர்பு கொள்ளகூடிய வழி இருந்தால் தொடர்பு கொண்டு, அவரின் அனுமதி உடன் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். அதே போல, யாரும் திருமதி அடேல் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டு அதன் மூலமும் வெளிவரும் செய்திகை சொல்லுங்கள். உருத்திரகுமார் அவர்களும் நடத்தை, தனக்கு தெரிந்ததை சொல்ல வேண்டும்.

-நாங்கள் போராடுகிறோம் அல்லது போராட வேண்டும் என்று நினைத்தால், புலத்தில் தன்னும் ஒரு சரியான திசை நோக்கி செல்ல வேண்டும்.

இறுதியாக, இவர்கள் பிழை என்று சொல்லுபவர்கள், உங்கள் கருத்துக்களையும் வையுங்கள். நடந்த உண்மை, நடக்க இருக்கிற நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும் என்றோ, நாங்கள் நினைக்க போகிறமாதிறியே வரும் என்று யாருக்கும் தெரியாததால், இதை ஒரு காலத்தில் தேவையாக எடுத்து செயற்படுவோம்.

மேலும் நிர்மலன் மேலே எழுதி கருத்து உண்மை என்றாக எடுத்துக்கொண்டால், பால் ராச்சின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்பதற்க்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. புலிகள் அமெரிக்கா இந்தியா முதலாய சக்திகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டார்கள். சமாதான காலத்தில் சிறிலங்கா கடற்படை பலப்படுத்தப்பட்டது ஆயுதங்கள் பயிற்ச்சிகள் வழங்கின. இவை எல்லவற்றியும் செய்து விட்டு எரிக் சொல்கையும் கருணானிதியைப் போல் முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிரார்கள்.

நிர்மலனோ அல்லது வேறு யாருமே வீரச்சாவடைந்தவர்கள் மீதான குற்றச்சாடை வைத்து ஒருவிவாதம் நடத்த விரும்பவில்லை இருந்தாலும் தமிழ்ச்ச்செல்வன் அண்ணை முன்பு இராணுவத்துறையில் இருந்து( யாழ்மாவட்ட தளபதி தினேஷ்) இருந்து நாகர்கோவில் கடல் இறக்கத்தில் ஆர்மியை இறங்க விட்டு அடிப்பம் என்ற தவறான முடிவில் ஆணையிரவை இழந்து இராணுவத்துறையில் இருந்து அரசியல்துறைக்கு வந்தவர். ஆனால் பால்ராஜ் அண்ணையின் இராணுவ ஓர்மம் வேற அதற்க்காக இருவரையும் ஓப்பிட்டு மேற்கொண்டு விவதம் நடத்த வ்இரும்பவில்லை. சில ஏரம் பால்ராஜ் அண்ணையால் செய்ய முடியாததை தமிழ்ச் செல்வன் அண்ணை செய்லாம் அதே போல் தமிழ்செல்வன் அண்ணை செய்ய முடியாததை பால்ராஜ் அண்ணையால் செய்ய முடியும்.

யாராலுமே செய்ய முடியாததை இவர்கள் இணைந்து செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலனோ அல்லது வேறு யாருமே வீரச்சாவடைந்தவர்கள் மீதான குற்றச்சாடை வைத்து ஒருவிவாதம் நடத்த விரும்பவில்லை இருந்தாலும் தமிழ்ச்ச்செல்வன் அண்ணை முன்பு இராணுவத்துறையில் இருந்து( யாழ்மாவட்ட தளபதி தினேஷ்) இருந்து நாகர்கோவில் கடல் இறக்கத்தில் ஆர்மியை இறங்க விட்டு அடிப்பம் என்ற தவறான முடிவில் ஆணையிரவை இழந்து இராணுவத்துறையில் இருந்து அரசியல்துறைக்கு வந்தவர். ஆனால் பால்ராஜ் அண்ணையின் இராணுவ ஓர்மம் வேற அதற்க்காக இருவரையும் ஓப்பிட்டு மேற்கொண்டு விவதம் நடத்த வ்இரும்பவில்லை. சில ஏரம் பால்ராஜ் அண்ணையால் செய்ய முடியாததை தமிழ்ச் செல்வன் அண்ணை செய்லாம் அதே போல் தமிழ்செல்வன் அண்ணை செய்ய முடியாததை பால்ராஜ் அண்ணையால் செய்ய முடியும்.

யாராலுமே செய்ய முடியாததை இவர்கள் இணைந்து செய்தார்கள்.

சிறு திருத்தம் நாகர்கோவில் அல்ல வெற்றிலைக்கேணி

சிறு திருத்தம் நாகர்கோவில் அல்ல வெற்றிலைக்கேணி

நன்றி.

சிறு திருத்தமில்லை நீங்கள் செய்தது பெரும் உதவி.

வரலாற்றை திரிவுபடுத்தக்க் கூடியதாக கருத்து எழுதினால் அது பெரும் தவறு தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஆழமான கருத்து எரிமலை அண்ணா ஒரு பச்சை :D

//இறுதியாக, இவர்கள் பிழை என்று சொல்லுபவர்கள், உங்கள் கருத்துக்களையும் வையுங்கள். //

நல்லது, பொயட்டின் பாத்திரம் பற்றி நான் அறித்தவற்றை எழுதுகிறேன் , அதனை யாழ் நிர்வாகம் அகற்றுகிறாதா இல்லையா எனப் பார்ப்போம். யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அதற்க்குப் பதில் எழுதினால் அது ஆதாரம் அற்ற தகவலென அகற்றப்படுகிறது என்பதே நான் சொன்ன விடயம்.இது பற்றிக் கருத்துக் கூறாமால் வேறு எதையோ வொல்கனோ எழுதி இருக்கிறார்.

பொயட் சமாதான காலத்தில் நோர்வேயின் குறிப்பாக சோல்கமால் அடையாளாம் காணப்பட்டு வன்னியில் இறக்கப்பட்டவர்.இவர் புலிகளுக்கும் நோர்வேக்கும் இடைத் தரகராகச் செயற்பட்டவர்.இதனாலயே புலிகளுக்கும் இவருக்கும் முரண்பாடுகள் எழுந்தன.இவர் உண்மையில் நோர்வேயின் உளவுப் பிரிவுக்கு வேலை செய்தாரா அல்லது தமிழருக்காக வேலை செய்தாரா என்பது பற்றிய சந்தேகம் பலருக்கு இருக்கிறது.இவர் தற்போது நிர்வாணம் ஆக்கப்பட்டுள்ள நோர்வேயின் சமாதானத் தூதுவன் என்னும் பாத்திரத்திற்க்கு வெள்ளை அடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் அதன் மூலம் தனது உண்மையான பாத்திரத்துக்கும் வெள்ளை அடிக்கிறார் இது தான் பொயட் பற்றிய எனது பார்வை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துக்கு நன்றி, இபொழுது நான் உட்பட எல்லோரும் விவாத நாகரீகம் தொடர்பாக சரியாக அறிவுறுத்தப் ப்ட்டிருக்கிறோம். கருத்துக்கள் ஆதாரங்கள் மறுப்புக்கள் கொள்ளுதல் தள்ளுதல் என ஒளியை நோக்கி நகரக்கூடிய வகையில் விவாதங்கள் நெறிப்படுத்தப் படுகிறது.

[size=4]”3 வருடங்கள் கடந்த பின்பும், என்ன நடத்து என்று தெரியாமல் இருப்பது இனத்தின் மீள முடியாத தோல்விக்கே வழி வகுக்கும்.[/size]

[size=4]இறுதியாக பொயட், ---------- உங்களுக்கு தெரிந்த சேதிகளை சொல்லுங்கள். உங்களை போல் இணைந்து செயற்படவர்களினதும் செய்திகளையும்/ அவர்களினது தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.- volcano[/size]

நட்பார்ந்த Volcano, எனக்கு தெரிந்த விடயங்களை முழுமையாக்க அவசியமான நேர்காணல்கலையும் வாசிப்பையும் செய்யும் வசதி வாய்ப்பு இன்னும் எனக்கு இல்லை. எனினும் முயன்று வருகிறேன். உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

என் அனுபவங்களை எழுதவே நமது விடுதலை வரலாறு தொடர்பான ஒரு விரிவான நம்பகமான 1 கால நிகழ்வு chronology அட்டவணை 2, Bibliography நூல் ஆவண பட்டியல் அவசியமாக இருக்கு.

இன்று கிடைக்கும் அட்டவணைகளை யாராவது தொகுத்து இணைக்க வேண்டும். பின் நாமெல்லோரும் சேர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும்.

எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு யாழ்க் கள அன்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு முழுமையான Chronology ஒன்றை தயாரித்துத் தர முடியுமா? யாழ்க்களத்தின் ஆய்வுப் பிரிவு இதற்கென இடம் நெறிப்படுத்தும் குழு என்பவற்றை நியம்க்கலாம். இப்பணியில் உதவக்கூடிய துறைஇசார் நிபுணர்கள் சிலரை நாம் அடையாளம் காண்பதும் முக்கியம்.

இப்ப கிடைக்கும் அட்டவணைகளை தழுவி யாராவது ஒரு அட்டவனையை பிரசுரித்தால் நாங்கள் எல்லோரும் நிபுணர்களின் வழ்காட்டுதலில் அந்த அட்டவணையை வளர்த்துச் செல்லலாம்.

இது ஆய்வாலர்களுக்கு காலம் காலமாக அவசியப்படும் பணியாகும். அட்டவணையாகும்

Edited by poet

//புலிகளுடன் வேறுவேறு துறைகளில் தொடர்புபட்ட பொதுமக்களில் பல்வேறு தரப்பினரும் இதற்கொப்பான எண்ணங்களுடனிருந்ததை கண்டிருக்கிறேன். தங்கள் தங்கள் துறைகளில் தொடர்புபட்ட பகுதியை விடுதலைப்புலிகளின் முகமாக உருவகிப்பது. உண்மை அதுவல்ல. பெருங்கடலின் சிறு துளி நீரது.//

இது கருணாகரனின் காலச்சுவடு பற்றிய கட்டுரைக்கு கர்ணன் எழுதியது, இங்கும் பொருந்தும். தம்மைச் சுற்றியே எல்லாம் சுழன்றது என்று நினைப்பதுவும், தமது பாத்திரம் பற்றிய அதீத கதையாடலும் உருவகிப்பும் , உண்மை எது என்பதைப் பற்றிய தெளிவின்மையும் , வரலாறு எது என்பதை மறைக்கும். பல சுய புராணங்களின் தொகுப்பைத் தான் வரலாறு என எடுக்க முடியும்.இதில் பலரின் சுயங்கள் அழிக்கப்பட்டு உள்ளன அல்லது சிலர் இன்னும் பேசவில்லை. வரலாறு பற்றிய கரிசனையுடன் இருந்த புலிகள் இவ்வாறு `தப்பிப் பிழைக்க வைக்கப்பட்டவர்களின் வழித் தான் தமது வரலாறு எழுதப்படப் போகிறது என்று நினைத்தால் அது ஒரு வரலாற்றுத் துயரம்.

ஆகவே என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையான அறிதலுக்கு பலரின் வரலாறுகள் வெளிப்படும் வரை காத்திருக்க வேண்டும்.ஆனால் அது வரை நாங்கள் போராடாமல் இருக்க முடியாது. பொதுவில் அறியப்பட்ட குறிப்பாக விகிலீக்சின் மூலம் கசிந்த தரவுகளின் அடிப்படையீல் பார்த்தால் போராட்டம் தோற்றதற்கான் காரணிகள் , போராட்டத்திற்கு வெளியில் இருந்தே செயற்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் பல பழைய கோப தாபங்களை சரிக்கட்ட சிலர் போராட்டாத்தின் தோல்விக்கு சில தனிப்பட்டவர்கள் மேல் பிழையை ப் போட்டு தமது பழைய கோப தாபங்களுக்கு வடிகால் தேடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியமற்ரது என்றுகிடப்பவர்கள்கிடக்கலாம்..அது தவறில்லை..அவரவர்களின் நிலையில் அவரவர்கள் பாதுகாப்பாக இருக்கும்வரை தீர்வை பற்றி யோசிக்க வேண்டிய தேவை அவர்க்கிருக்காது..ஆனால் ஒவ்வொரு நாளும் வலிக்குள் வாழும் மக்களுக்கு அது குறித்த தேவை முன்னரிலும் அதிகமாக தற்போது இருக்கும்...எந்த தேவைக்காக தமிழீழ போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட்தோ அந்தக் காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன...அந்தமக்கள் தீர்வை,சுதந்திரத்தை நோக்கி சிந்திப்பதையும்..அந்த மக்களுக்கும் தமக்கும் விடியல் வேணும் என்று புலம்பெயர்ந்த உறவுகள் சிந்திப்பதும் ஒடிந்துபோன எம்போராட்டத்தில் விடியல் நோக்கிய ஏதாவது ஓரு முதல் படியாக இருக்கும்..அதைவிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அந்த உன்னதமான போராளித்தலைவன் தான் வரவேண்டும் போராடவேண்டும் எல்லா சிலுவைகளையும் அவன் தான் சுமக்கவேண்டும் அதுவரைக்கும் யாரும் எதைசெய்தாலும் சாத்தியமில்லை என்று சொல்லி சிந்திப்பவர்களையும் முடங்கவைக்கும் வகையில் கருத்தெழுவதும் பேசித்திரிவதும் கூட ஒரு விதத்தில் சிங்கள எதிரியின் பிரச்சார உத்திதான்...அந்த வகையில் எம்மவர்களும் எழுதுவது தவறு..அப்படி உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்..நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றினைந்து பயணிப்போம்..சிந்திப்போம்...

ஆம் கடந்த போராட்ட காலத்திலும் இப்படியான முழக்கங்களுக்கு குறைவிருக்கவில்லை. ஆனால் இவற்றால் மக்கள் தெளிவு பெற்று போராட்டம் பற்றிய தேவை உணர்ந்து செயற்பட்டனர் என்பது எதிர்பார்க்கப்பட்ட அளவில் இருக்கவில்லை.

மேலும்.. தலைமைத்துவமற்ற போராட்டம் என்பது திசையறியா பயணம் போன்றது..! அந்த வகையில்.. எழுதுவது சுலபம். எவரும் அதைச் செய்யலாம். ஆனால்.. போராட்டம் ஒன்றை மக்களை ஒருங்கிணைத்து நடத்துவது என்பது ஒரு சிலரால் தான் முடியும். இலட்சிய உறுதியுள்ள சரியான வழிகாட்டல் வழங்கும் தலைமை என்ற ஒன்று அதற்கு அவசியம். அது இன்றி.. புலம்பெயர் தமிழர்கள்.. ஒன்றும் பெரிசா புடுங்கப் போறதில்ல. களத்தில் செல்வாக்குச் செய்ய முடியாத புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளால்.. போராட்டத்தை நகர்த்துவது ஒரு எல்லைக்கு மேல் முடியாது..!

சும்மா அலங்காரமாக ஆக்குரோசமாக எழுதுவது எல்லாம் நடைமுறைக்குச் சாத்தியம் என்றால் தமிழீழம் எப்பவோ அமைஞ்சிருக்கும்..! இந்த எழுத்துக்களுக்கு அவசியமே இருக்காது.

இப்பவும் தேசிய தலைவரின் வழிகாட்டல் தான் தமிழ் தேசிய உணர்வேந்தலைக் கூட செய்யச் செய்கிறது. அவரின் சிந்தனை தான் தாயகம் தன்னாட்சி உரிமை என்றும் கேட்க வைக்கிறது..! அந்த வகையில் அவர் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது அவசியம். அவரை விட்டு ஒரு போராட்டம் என்பது எவ்வளவு சாத்தியம்..???! யதார்த்தத்தை நோக்காமல்.. சும்மா பதில் எழுதிப் பயனில்லை..!

கடந்த 3 வருடத்தில் போராட்டம் பல்வேறு சக்திகளாலும் ஊடுருவப்பட்டு சீரழிக்கப்பட்டு சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியானது இன்னும் 30 வருடத்தினை அதனை சீர்செய்யக் கேட்கும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது. காரணம்.. சரியான தலைமைத்துவமின்மை. விட்ட இடத்தில் இருந்து போராட்டத்தை உளப்பூர்வமாக ஏற்று அதனை கால தேவைக்கு ஏற்ப தொடர்ந்து நகர்த்திச் செல்ல ஒரு சரியான தலைமையைக் கூட இனங்காண முடியாது இருக்கும் புலம்பெயர் தமிழர்களால் எப்படி ஒரு போராட்ட இலட்சியத்தை வெல்ல முடியும்..???! வெறும் வார்த்தை அளவில் தான் அது சாத்தியம்..!

எங்களுக்குள் ஒற்றுமை என்பது வராது..! அதனை எதிர்பார்த்தால்.. இந்த ஜென்மத்திற்கு அல்ல.. எந்த ஜென்மத்திற்கும் தமிழீழம் சாத்தியமில்லை. ஒன்றுபடக் கூடியவர்களை வைச்சு ஒரு சரியான தலைமையின் கீழ் போராடி வென்றால் ஒழிய.. தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்த்து காத்திருந்தால்.. அது இலவு காத்த கிளி கதையாகத் தான் முடியும்..! :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்களின் பின் பிரபாகரனைப் புரிந்து கொண்டார் எரிக் - கெஹெலிய

11 அக்டோபர் 2012

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் மரணத்துக்கு பிரபாகரன்தான் காரணம் என்பதை எரிக் சோல்ஹெயிம் 30 வருடங்கள் கடந்தே உணர்ந்துள்ளார். ஆனால் எமது இராணுவத்தினரும் இராணுவத் தளபதியூம் இவரைப் பற்றி ஏற்கெனவே நன்கு உணர்ந்திருந்தனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது பி.பி.சி. உலக சேவைக்கு எரிக்சோல்ஹெயிம் வழங்கிய பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதல் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது நாடு தொடர்பான கரிசணை எமது இலங்கை மக்களை விட எரிக் சொல்ஹெயிமுக்கு இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனவே சொல்ஹெயிமின் கூற்று அர்த்தமற்றது.

ஏனெனில் இலங்கை மக்களுக்கு பிரபாகரன் பற்றியும் சமாதான ஒப்பந்தம் பற்றியும் சமாதான காலப்பிரில் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் பற்றியும் நல்ல அனுபவம் உண்டு. எனவே இதுபற்றி மேலும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84092/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு இதைச்சொல்ல மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கு ........... இவர் ஏன் இப்போது இப்படியான அறிக்கை விடவேண்டும் ? யார் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதே பில்லியன் ரூபா கேள்வி :rolleyes:

ரம்புக்க புடிச்சான் என்டால் சொலெயும் ஓட ஒட கலைச்சு மொட்டை தட்டி போடுவான். இலங்கை அரசியலில் பூச்சிய அறிவுள்ள சொலெயும் சர்வதேச அரசியலில் பாண்டியத்தியம் பெற்ற்றிருப்பதாக பீத்துகிறார் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

மேலும் இலங்கை மக்களுக்கு இலங்கை அரசியலில் அறிவு கூட என்று கூறுவதை, பிரபாகரனுக்கு கடைசி இலங்கை அரசியலில் அறிவு இருக்கிறது என்று கூறுகிறார் என்றும் வைத்து கொள்ளலாம். ஆனால் சொலெயுமுக்கு நோர்வே அரசியலில் அது இல்லாத்தால்தான் இப்போது மன உடைந்து போய் இவ்வாறான மனம் சலித்தவர்களின் கதைகளை பேசுகிறார். இதைதான் ரம்புக்க சொல்கிறார்.

Edited by மல்லையூரான்

தீபம் தொலைக்காட்சியில் சோல்கையுமின் கருத்துப் பற்றி சேனன் சொன்னவை முக்கியமானவை.

பொயட் போல பல இடைத் தரகர்கள் புலம் பெயர் நாட்டில் இருக்குறார்கள். இவர்கள் தான் எல்லோரையும் பிழையா வழி நடத்தி போராட்டத்தை அழித்தவர்கள். தலைவரை இப்ப பிழை சொல்பவர்கள் இவர்கள் வழி வந்தவர்கள் . எந்த கொம்பன் தலைவரை பிழை என்றாலும் தமிழினம் இருக்கும் வரை தலைவன் நாமம் உச்சரிக்கப் படும் .

பூனை இளைச்சால் எலி ஏறி விளையாடுமாம் நடக்கட்டும் நம் மேதைகளின் கருத்துகள்

//2006 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதிகளும் எந்த இடத்தை தாக்கினால் எதிரிகளை விரட்டலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்த போது- பால்ராஜ் அவர்கள், மணலாற்றின் ஊடாக கிழக்கு மாகாணம் நோக்கி நாம் தாக்குதலை மேற்கொண்டால் அது வெற்றி அளித்தால்- பெருமளவிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவார்கள் என்றார். அப்போது, இல்லை யாழ்ப்பாணம் நோக்கி படை நகர்த்தி- யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டால்- அங்குள்ள மக்களிடம் வரி அறவிடுவதோடு இளைஞர்களும் எமது அமைப்பில் இணைவார்கள் என்றாராம் சு.ப.தமிழ்ச்செல்வன்.//

மேலே நிர்மலன் எழுதிய விடயங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இவரைப் போலவே பொயட் எழுதும் விடயங்களுக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது. ஆதாரம் இல்லாத கருத்துக்களை அகற்றும் மட்டுறுதினர்கள் இத்தகைய பதிவுகளை அகற்றாமல் விட்டிருப்பது எதனால்?

யாழ்க் களத்தின் தற்போதைய நிர்வாகம் என்ன பாதையில் செல்கிறது?

சு ப மக்களிடம் வரி விதிக்கலாம் என்று நிர்மலன் எழுதி இருக்கிறார், இதனை இவருக்குச் சொன்னவர் யார்? அவர் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் என்ன.இறந்த மாவீரருக்கு யாழ்க் களமும் சேர்ந்து இவ்வாறான அவதூறுகளைச் செய்ய ஏன் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது? இதனை அகற்றாமல் விடுவதன் மூலம் , இது உண்மையான செய்து என யாழ்க் களம் அங்கீகரிக்கிறதா?

பொயட் முன்னர் ஒரு திரியில் எழுதியதற்கு முரணாக எழுதிய போது அதனை நான் மீழ எழுதிய போது அது ஆதாரம் அற்ற அவதூறு எனச் சொல்லப்பட்டு அகற்றப்பட்டது. ஒருவர் மாவீரரானவர்காஇ சம்பந்தப்படுத்தி தனது அனுபவத்தை எழுதும் போது அதில் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்ட எழுதுபவர் முன்னர் எழுதிய விடய்ங்களை எழுதினால் அது அவதூறு எனச் சொல்லப்பட்டு அகற்றப்படுகிறது.

இதன் மூலம் யாழ்க் களம் அவதூறுகளையும் பொய்களையும் புனையும் சிலரை எந்தவித தடங்கலும் இன்றி பொய்களை வரலாறாக எழுத இடமழிக்கிறது. இதனை தற்போதைய நிர்வாகம் தெளிவாக்க வேண்டும். யாழ்க் களம் தேசிய விடுதலை சார்ந்த களமாக இருந்தது, இனி அவ்வாறு அல்ல என்றால் பரவாயில்லை. எனது நேரத்தை இங்கே வீணாக்க விரும்பவில்லை.

மேலும் நிர்மலன் மேலே எழுதி கருத்து உண்மை என்றாக எடுத்துக்கொண்டால், பால் ராச்சின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்பதற்க்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. புலிகள் அமெரிக்கா இந்தியா முதலாய சக்திகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டார்கள். சமாதான காலத்தில் சிறிலங்கா கடற்படை பலப்படுத்தப்பட்டது ஆயுதங்கள் பயிற்ச்சிகள் வழங்கின. இவை எல்லவற்றியும் செய்து விட்டு எரிக் சொல்கையும் கருணானிதியைப் போல் முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்க்கிரார்கள்.

இவர்களை நியாயப்படுத்தும் நிர்மலன், பொயட் போன்றோர் தமிழர்களால் இனம் காணப்பட வேண்டும்.அவர்களின் வரலாற்றுத் திரிபுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

மோகன் அண்ணாவின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் மக்கள் உரிமைப் பிரச்சினைகளின் அடிப்படையிலான நேர்மை, நடுநிலைமை தற்போது தளம்புவது தெளிவாக தெரிகிறது.

வருங்காலத்தில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையை தற்போதைய மட்டுறுதினர்கள் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படைக் கடமை.

பாலசிங்கத்தின் கடைசி மூன்று வாரங்களும் வித்தியுடன் தான் கழிந்தது .அதை விட ரணில்,ராஜபக்சா இருவருமே வன்னியுடனான தமது தொடர்புகளை வித்தி ஊடாகத்தான் மேற்கொண்டார்கள் .

ராஜபக்சா பதவிக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வித்தியை கூப்பிட்டுத்தான் பாலசிங்கத்தை வரப்பண்ணினார்,விமானநிலையத்தில் வரவேற்று கூட்டிக்கொண்டு போனது வித்திதான் .

அடேல் உயிருடன் தான் இருக்கின்றார் கேட்டால் தெரியும் .

[size=5]இதில் ஓரளவு உண்மை உள்ளது.

ஆனால் இடைத் தரகர் வித்தியூடாக மட்டுமல்ல.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இன்னும் சாகவில்லையா அவன்" என்று வினவியவன் அவன் செத்துவிட்டான் என்ற தகவல் கிடைத்து அழுகின்றான் என்றால் அது பொருத்தமில்லாத வேசம்! இதே வகையாக இங்கு சிலரின் நீள் கட்டுரைகளின் பலனும் பொருத்தமில்லா வைகைக்குரியன ஆகின்றது!

முதலாவதாக, நிர்மலன் கருத்தியல் பின்னணி என்பது தனிமனிதத்தாக்குதலின் தன்மையைவிட மிக மோசமானது. இனத்துவத் தூசிப்பு என்பதையும் தாண்டி மானிடத்துவ தூசிப்பு என்ற எல்லையைத் தொட்டது.

பழைய தலைப்புக்களின் விவாதத்தின் போது பிரபாகரனின் உடலத்தின் நிலையை வைத்து பரிகாசம் செய்த கருத்தியல் நடைக்கு சொந்தக்காரரே இந்த நிர்மலன். எதிரியே ஆனாலும் பிணத்தின் நிலையை வைத்து பரிகாசம் செய்யும் போது அதை செய்பவரின் மனிதப் பண்பும், அவர் அறிவும் தான் பரிகாசத்திற்கு உள்ளாகும் என்பது அவர் அறியா பாவமாகும்! எனவே இந்தப் பின்னணிக்குரியவர் பிரபாரனின் மீது குற்றம் தேடுதல் எனபது அவர் ஆட்பட்டிருக்கும் நோயின் பாதிப்பு அன்றி வேறு என்ன இருக்க முடியும்?

அடுத்து அர்யுன்!

ஒரு சிங்கள இனவாதியிடம் இருக்கும் புலிவெறுப்பைக் காட்டிலும் பலமடங்கு வெறுப்பைக் கட்டிக் கொண்டு திரிபவர் இவர். இவர் எழுத்தாலேயே இங்கு பலரும் அறியச் செய்திருக்கின்றார் அதை.

புலி என்ற பேர் சூடிய குழந்தையோ, இல்லை கிழவியோ ஆர் படுகொலை செய்யப்பட்டாலும் குரூரமாக தன் மகிழ்ச்சியை இந்தக் களத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர். எனவே இப்படி இடங்களில் இவர் தன் பங்கைக் காட்ட வில்லை என்றால்த்தான் அதிசயமாகின்றது!

அடுத்து ஜெயபாலன்! இவர் எழுத்தோட்டத்தூடு நாம் ஆராயக்கூடிய இயல்பு என்பது இவர் கையால் பிடிக்கப்படுவது குரங்காய் முடிவு பெற்றால் அதை பிள்ளையார் என்று நம்பச் செய்வதே இவரின் எழுத்தியல் கௌரவம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்! இந்த வேளையில் அர்யுனன் போன்றோர் வந்து ஐயா இதுதான் உண்மையான பிள்ளையார் என்றால் அர்யுனா! இங்கே உள்ளவர்களில் உம்முடைய கண்தான் குறை அற்றது, மற்றவை எல்லாம் குறைபாடுகள் என்ற வகையில் விமர்சனம் செய்பவர்!

விமர்சங்களில் நாம் பார்க்கப் போகின்ற உண்மை என்பது உங்களிடம் இருக்கின்ற கருத்தியல் பின்னணியே நம்பிக்கையை வெல்லும் ஆதாரமாக இருக்க போவது!

.மன்னிக்கவும் தேவன் பச்சை முடிந்து விட்டது . சரிகா சொன்னீர்கள் கருத்தை நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.

அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதுவரை காலமும் நினைத்துக்கொண்டு இருந்தேன் அளவுக்கதிகமான ஆயுத பாவனைகளால் தான் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்என்று.ரசாயன ஆயுதங்கள் கொத்துக் குண்டுகள் இடைவிடாத விமானக் குண்டு வீச்சுகள் கருணாவின் துரோகம் உலக வல்லரசுகளின் உதவி நள்ளிரவில் கூட வீதியில் நகரும் மிகச்சிறிய அசைவைக் கூட காட்டிக் கொடுத்த இந்திய செய்மதிகள் என கண்ணுக்கு தெரிந்த தெரியாத எதிரிகளுடன் தங்களின் அளவுக்கதிகமான நம்பிக்கைஎனும் ஆயுதம் கொண்டு மோதிய புலிகளின் தோல்வி ?

இங்கே நிறையப்பேர் எழுதிய கருத்துகளை படித்த போதுதான் சா முட்டாளாக இருந்திட்டமோ ..

  • கருத்துக்கள உறவுகள்

யசிர் அரபாத் இறக்கும் தருணத்தில் கூறியது "நோர்வே எமக்கு துரோகம் செய்து விட்டது" என்பது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிரபாகரன் 2009 ஆண்டு வரலாற்று தவறை செய்தார்.[/size][size=1]

[size=4]அதுவரையில் தவறை மட்டுமே செய்துகொண்டிருந்த சிங்கள பேரின வாதத்திற்கு. 2009 அம ஆண்டிற்கு முன்பு ....[/size][/size][size=1]

[size=4]அதாவது பிரபாகரன் வரலாற்று தவறை செய்யுமுன்பு. ஏறிக் சொறிகைம் என்ன செய்தார்????[/size][/size]

[size=1]

[size=4]பொயட் அவர்கள் அதை விளக்கமாக எழுதுவார் என்று எண்ணுகிறேன்.[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி எனது கருத்தை வழி மொழிந்தவர்களுக்கு.. இந்த தலையங்கம் ஒருசாராரை பிழை பிடிப்பது போல் தோன்றினால், இதில் இருந்து விலகி ஒரு புதிய தலையங்கத்தின் கீழ் என்ன நடந்தது என்று யாரவது எழுதினால், அது பற்றி தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது. நேற்று தமிழ்நெட் இல் வந்த போட்டி பார்த்தேன், அந்த இளைஞன், எவ்வளவு தூரம் திருப்ப திருப்ப அந்த பெண்மணி சொல்லியும் இல்லாத ஒன்றை கேட்டபது போல இருந்தது. சில இடங்களில் அவர் சொன்ன வசனம் " I'm not here to white wash LTTE" . சர்தேச பார்வை எங்களுக்கு எதிராக இருந்ததன் காரணத்தை அறியாமல், சர்வதேசத்தை நம்புவது அல்லது வெறுப்பது என்பது ஒரு "போலி நாடகம்" . எங்களுக்கு சர்தேசம் வேண்டும் என்றால் அவர்கள் சொல்லவதையும் வேண்டும். எவ்வளவு திறமை இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாவிட்டால் விளைவு நாங்கள் விரும்புவது போல் வராது. இங்கே யாழில் அர்ஜுன் உம், பொயட் உம் கருத்து எழுதினால் எங்களது "இலட்சியம்" எல்லாம் தகர்ந்து போடும என்றால் என் அந்த இலட்சியம். சொல்கேயமை அவமதிபாதால் எங்களுக்கு என்ன நன்மை என்று விளங்கவில்லை. முகப்பு புத்தத்தில் யாரோ பதிந்துள்ளார்கள் "சொல்கேமை கூப்பிட்டு இளையராவின் நிகழ்ச்சியை நடத்துபவர்களையும் புறக்கணிபவர்களையும் சாமதானம் படுத்தது சொல்லி, அதே போல இன்னுமொன்று இலங்கை கிரிகெட் அணிக்கு அதரவளிபவர்களையும் புறக்கணிப்பவர்களையும் சமாதனப்படுத்த சொல்லி" இது சிலவேளைகளில் சொல்கேமை அவமானபடுத்துவதாக தெரிந்தாலும், அதில் இன்னுமொரு பக்கம் இருக்கிறது, அது நாங்கள் எத்தனை விதமாக பிளவு பட்டுக்கொண்டு போகிறோம் என்பதாகும். உண்மைகளை அறியாமல் விடுவதால், அல்லது அதை தேடி செல்லுவதால் தவறேதும் இல்லை. பொயட் உங்களுக்கு தெரிந்தை சொல்லுங்கள், அது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.

நன்றி வணக்கம் .

மீண்டும் ஆட்டைப் பற்றி எழுதினால் மாட்டைப்ப பற்றி எழுதுவதில் பயன் இல்லை.

சர்வதேசம் என்றால் என்ன அது என்ன செய்தது இப்போது என்ன செய்கிறது என்னும் விளக்கம் எமக்கு வேண்டும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.