Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர். யாழ் களத்து வாலிபர்களுக்கு சவால் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர் face.jpg By C.L.Sisil

2012-10-18 11:35:14

மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

old-age%20dad-2.jpg

ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு முன் சகுந்தலாவைச் சந்தித்து தனது வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ்ந்து வருகிறார். அவர்களது இல்லறத்தின் விளைவாக அவர்களுக்கு மேற்படி இரு ஆரோக்கியமான ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. சகுந்தலாவுக்கு தற்போது 54 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.

old-age%20dad4.jpg

தனது இளமையின் இரகசியம் குறித்து ராம்ஜித் விபரிக்கையில், தான் தினசரி வாதுமை, வெண்ணெய் மற்றும் பால் ௭ன்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் தான் தினசரி ஒவ்வொரு இரவும் மூன்று அல்லது 4 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

old-age%20dad.jpg

செய்தி மற்றும் படங்கள்: வீரகேசரி

http://www.virakesari.lk/article/interesting.php?vid=52

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :lol:
  • கருத்துக்கள உறவுகள்

வயது வித்தியாசம்.. கிழவன்... வறுமை.. இந்த வயசில இது தேவையா.. குழந்தைகளின் எதிர்காலம்.. பாழ்.. இப்படியான எந்த பழிப்பு.. விமர்சனங்களுக்கும் செவி மடுக்காமல்.. தான் விரும்பினதை.. பூமிப்பந்தில் தனக்குள்ள சுதந்திரத்திற்கு ஏற்ப பாவிக்கும் செய்யும்.. இவரை முதலில் வாழ்த்த வேண்டும்..! சமூகத்திற்காக வாழ்வதிலும் தனக்காக வாழும் இவர் போற்றுதற்குரியவர்..! :icon_idea::)

தான் அழிந்தாலும் தன் இனம் அழியக்கூடாது என்று வாழும் ஒருவரை பற்றி நாம் விவாதிக்க தகுதியற்றவர்கள்.தலைப்பு எங்கோ உதைக்கின்றது.சவால் விட முன்பு சிறி அண்ணா மற்றும் குமாரசாமி ஏன் நான் போன்றவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.இருந்தாலும் தந்து விட்டு சவால் விடுங்கள் பிழம்பு

தான் அழிந்தாலும் தன் இனம் அழியக்கூடாது என்று வாழும் ஒருவரை பற்றி நாம் விவாதிக்க தகுதியற்றவர்கள்.தலைப்பு எங்கோ உதைக்கின்றது.சவால் விட முன்பு சிறி அண்ணா மற்றும் குமாரசாமி ஏன் நான் போன்றவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.இருந்தாலும் தந்து விட்டு சவால் விடுங்கள் பிழம்பு

என்ன வேணும் உங்களுக்கு? அதுகும் இருக்கு. இதுகும் இருக்கு

பாத்து போட்டு தரலாம். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பற்ற

காட்டுமிராண்டிச்செயல்........... :(

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பற்ற

காட்டுமிராண்டிச்செயல்........... :(

ஒரு உயிரினம் தனது இனப்பெருக்கத் தகவை.. பரம்பரை அலகுப் பரம்பலுக்காக சந்தர்ப்பத்தை.. உச்ச அளவில் பாவிப்பதை.. காட்டுமிராண்டித் தனம் என்றால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டது கூட அதுதானே அண்ணா..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிரினம் தனது இனப்பெருக்கத் தகவை.. பரம்பரை அலகுப் பரம்பலுக்காக சந்தர்ப்பத்தை.. உச்ச அளவில் பாவிப்பதை.. காட்டுமிராண்டித் தனம் என்றால்

நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டது கூட அதுதானே அண்ணா..! :lol::icon_idea:

நான் பிள்ளைப்பிறக்கூடிய ஒழுங்குக்கு வந்தது

எனக்கு ஒரு 14 வயதில் என்று வையுங்கோவன்.

பிள்ளைபெற்றது 27 வயசில்.

இப்பவும் பெறலாம்

ஆனால் உங்கள் வைத்தியம்தான் சொல்லுது

பிள்ளைக்கு குறைபாடுகள் வரலாம் என்று.... :icon_idea:

மனிதனின் உடல் ரீதியான கூர்ப்பு பின்னோக்கித்தான் செல்கிறது. செயற்கையாக மனிதன் தேடிக்கொண்டு விட்ட வீடுவாசல், மருந்துகள், கட்டுப்பாடுகள் போன்றவறை எடுத்துவிட்டு காட்டில் விட்டால் ஒருகிழமை கூட இனிமேலைய காலங்களில் அவனால் வாழமுடியாது. அதாவது இயற்கையான வாழ்தகவுகளை இழந்துகொண்டு போகிறான். அடிப்படை இல்லாமல் வெறுமனே முன்னேற்றிக்கொண்டு போகும் மூளை வளர்ச்சி எதில் போய் முடிக்கும் என்று தெரியாது.

நிச்சயமாக காட்டில் வசிக்கும் போது இனப்பரம்பல் வயதோடு போகாமல் தான் நடை பெற்றிருக்கும். இதனால் பிறந்த சந்ததிகள் பல வாழ் தகவுகளை கொண்டிருந்தார்கள் என்றுதான் எடுக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

வயது கூடிய நேரத்தில் குழந்தை பெறுவது சாதனை மற்றும் வைராக்கியம் தான். ஆனால் பாதிக்கப்படப்போவது அந்த குழந்தை. எம் சமூகத்தில் பிறந்து விட்டு நாளைக்கு பெற்றோருக்கு எத்தனை வயது என்று சமுதாயத்தில் பல இடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயக்கத்தில் பிள்ளை ஒதுங்கி வாழ நினைக்கும்.

குழந்தையை பெற்று சில காலத்தில் இவர்கள் உயிர் பிரிந்து விட்டால் குழந்தையின் நிலை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தனது இளமையின் இரகசியம் குறித்து ராம்ஜித் விபரிக்கையில், தான் தினசரி வாதுமை, வெண்ணெய் மற்றும் பால் ௭ன்பவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் தான் தினசரி ஒவ்வொரு இரவும் மூன்று அல்லது 4 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

கிழவன் இரவிலை, நித்திரை கொள்ளுறதே... இல்லையா? பாவம் ஆச்சி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருத்தரும் இது அவருக்கதான் பிறந்ததோ என்டு கேக்க வில்லை.சில வேளை கிழவி இளம் கிழவியாய் இருந்தால் கேட்டிருப்பினமோ என்னவோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை காட்டுகிறது.

இரண்டு விடயங்கள் உள்ளன.

1. குழந்தைக்கு தந்தையாதல்

2. ஆரோக்கியமான குழந்தைக்கு தந்தையாகுதல்

அண்மைய ஆராய்ச்சி தகவல்களின்படி குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பதற்கு தாயிற்கு வயது சென்று பெறுவதை விட தந்தை வயது சென்று பெறுவதே காரணம் என்று கூறப்படுகின்றது (குறைபாடு என்றால் நேரடியாக வெளியில் தெரிவது மட்டுமே என்று நினைக்கக்கூடாது). ஏனைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட ஒரு குழந்தைக்கு கற்றல் கடினமாயின் (நினைவாற்றல் குறைவு, ஒருங்கிணைப்பு குறைவு போன்றவை காரணமாக) அதுவும் ஓர் குறைபாடே.

ஒரு கட்டுப்பாட்டு நிலமையில் (ஏனைய விடயங்கள் மாறாதபோது) 25 வயது ஆண் தந்தையாகும் போது அவருக்கு குறைபாடுள்ள குழந்தை தோன்றுவதற்கான சாத்தியம் அதே ஆண் 50 வயது ஆகும்போது அவருக்கு குறைபாடுள்ள குழந்தை தோன்றுவதற்கான சாத்தியத்தைவிட ஏரளத்தாள 35% குறைவு என்று கூறப்படுகின்றது. அதாவது வயது செல்லச்செல்ல விகாரம் (Mutation) ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. அதேவேளை குழந்தை குறைபாடு உள்ளதாக பிறப்பதில் பெண்களின் வயது காரணம் செலுத்துவது இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஏன் என்றால் பெண்களின் முட்டை அவர்கள் தாயின் வயிற்றில் உள்ளபோதே உருவாகிவிடுகின்றது. ஆனால், ஆண்களின் விந்துக்கள் ஆண்கள் பூப்படைந்தபின்னரே தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. குறிப்பாக ஆட்டிசம் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதற்கு ஆண் வயது நன்கு சென்றபின் தந்தையாகுதலே காரணம் என்றும் கூறப்படுகின்றது.

எனவே, பெண்களைவிட ஆண்களே ஆரோக்கியமான குழந்தை பெறுவதாயின் வயதை அதிக கவனத்தில் எடுத்து சீக்கிரமாக திருமணம் செய்யவேண்டும். Just a baby ஆரோக்கியமானதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றால் ஆண்களுக்கு வயது ஒரு பொருட்டு இல்லை.

குழந்தை உருவாகும்போது கலங்கள் பிளவடைந்து விகாரம் ஏற்படுதல் எழுந்தமானமாக நடைபெறும் செய்முறை. இங்கு வயது முதிர்ந்த ஆண்கள் தந்தையாகினால் அவர்களுக்கு எப்போதும் குறைபாடுள்ள குழந்தையே தோன்றும் என்று இல்லை. அதேபோல் இளம் ஆண்கள் தந்தையாகினால் அவர்களுக்கு எப்போதும் ஆரோக்கியமான குழந்தையே தோன்றும் என்றும் இல்லை. ஒப்பீட்டு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆண்களுக்கு குறைபாடுள்ள குழந்தைகள் தோன்றுவதற்கான சாத்தியம் இளம் ஆண்களைவிட அதிகம். இதுவே ஆராய்ச்சிகளின் முடிவு.

எனது தந்தையின் தந்தை (எனது தந்தையின் தாய் மிக இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவர் இறந்து சுமார் பன்னிரண்டு வருடங்களின் பின் தந்தையின் தந்தை மீண்டும் இரண்டாம் திருமணம் செய்தார்) கடைசிப்பிள்ளையை பெற்றபோது (அவர் இப்போது யூகேயில் நல்ல வாழ்க்கையில் உள்ளார்) அவருக்கு வயது 58. எனது தந்தையின் தந்தை 58வயதில் ஆரோக்கியமான ஒரு குழந்தையை பெற்றார் என்பதை அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டாம் தாரம் மூலம் அவர் ஒன்பது பிள்ளைகளைப்பெற்றார். எனது அப்பா முதல் தாரத்தில் இரண்டாவது பிள்ளையாகத்தோன்றினார்.

தற்போதைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆண்கள் (விந்தணுக்களை சேமிப்பில் வைக்காமலே) அறுபது வயதிலும் குழந்தைகளைப்பெற்றுக்கொள்வது சாத்தியமாக காணப்படலாம். ஆனால், அவை குறைபாடு ஒன்றும் இல்லாமல் பூரண ஆரோக்கியத்துடன் தோன்றுமா என்பதே பிரச்சனைக்குரிய கேள்வி.

[size=5]ஆளைப் பார்த்தா 96 வயது மாதிரித் தெரியவில்லை முதலாவது படத்தில பல் எல்லாம் இருக்கு, செயற்கைப் பல் கட்டுவதற்கு வசதியான ஆள் மாதிரித் தாத்தா [/size][size=5]தெரியல[/size][size=5]. என்ன நாடகம் என்று விளங்கேலை!![/size]

[size=5]Keep it up தாத்தா[/size]!

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தெரியல.ஆளைப் பார்த்தா 96 வயது மாதிரித் தெரியவில்லை முதலாவது படத்தில பல் எல்லாம் இருக்கு, செயற்கைப் பல் கட்டுவதற்கு வசதியான ஆள் மாதிரித் தாத்தா. என்ன நாடகம் என்று விளங்கேலை!![/size]

[size=5]Keep it up தாத்தா[/size]!

நன்றி

[size=5]Keep it up தாத்தா[/size]!

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.